என் மலர்
நீங்கள் தேடியது "கொள்ளையன் கைது"
- ரிஷிவந்தியத்தில் மோட்டார் சைக்கிள் கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
- போலீசார் அந்த வாலிபரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன் தலைமையிலான போலீசார் கெடிலம் கூட்டுரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் போலீசாரை பார்த்ததும், திரும்பிச் செல்ல முய ன்றார். இதை பார்த்து சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் முட்டியம் கிராமத்தை சேர்ந்த கூத்தன் மகன் ரகுராமன் (40) என்பதும், இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் இருசக்கர வாகனம் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. மேலும் அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் திருக்கோவிலூர் அடுத்த ஜி.அரியூர் கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு சொந்தமானது என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ரகுராமனை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிள் நிறுத்தி விட்டு மருத்துவமனைக்கு சென்றார்.
- ஆட்டை மட்டும் காணவில்லை என கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் .
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் மகன் ராஜ்குமார் (வயது 32) இவர் நேற்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு தனது மோட்டார் சைக்கிள் நிறுத்தி விட்டு மருத்துவமனைக்கு சென்று மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதேபோல் கள்ளக்கு றிச்சி அருகே தென்கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த மணி மனைவி சந்திரா (51) இவர் நேற்று தனது வீட்டிற்கு முன்பு 2 ஆடுகளை மேச்சலுக்காக கட்டியி ருந்தார். இதில் ஒரு ஆட்டை மட்டும் காணவில்லை என கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் இந்நிலையில் நேற்று மாலை கள்ளக்குறிச்சி போலீசார் நீலமங்கலம் அருகே வாகனத் தணிக்கை ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் ஆடு எடுத்து வந்த வந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் தியாகதுருகம் அருகே முடியனுர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (30) என்பதும், இவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனை முன்பு இருந்த மோட்டார் சைக்கிள் திருடி கொண்டு, தென்கீரனூரில் ஆட்டையும் திருடி வந்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் ஆடுகளை பறிமுதல் செய்த போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.
- திண்டிவனத்தில் கடைகளில் திருட முயன்ற கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
- பூட்டை உடைத்து திருட முயற்சி செய்ததை ஒப்புக்கொண்டார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நல்லி கொண்டான்நகர் பகுதியை சேர்ந்தவர் ஜான் இவர் திண்டிவனம் காந்தி சிலை அருகே கம்ப்யூட்டர் சர்வீஸ் கடை நடத்தி வருகின்றர் இவரது கடையும்,அதன் அருகே பியூட்டி பார்லர் மற்றும்செல்போன் சர்வீஸ் கீழே உள்ள முடி திருத்தகம் ஆகிய கடைகளில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்து உள்ளனர். இந்த சிசிடிவி காட்சி ஆனது தற்போது வெளியாகி உள்ளது சிசிடிவி காட்சியை வைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். திண்டிவனம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்த ராசன் தலைமையிலான போலீசார் திண்டிவனம் மேம்பாலம்.கீழ் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது சந்தேகம் படும்படியான ஒரு நபரை கூப்பிட்டு விசாரணை செய்ததில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார் இதை எடுத்துஅவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சிவகுமார் (வயது 23) என்பதும் அவர் செல்போன் கம்ப்யூட்டர் சர்வீஸ் ஆகிய கடைகளில் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்ததை ஒப்புக் கொண்டார்.மேலும் அவர் கூறுகையில்பாரதியார் தெருவில் உள்ள பர்கர் கடையில் பூட்டை உடைத்து அங்குள்ள பர்கர் மற்றும் தின்பண்டங்களை தின்று அந்த கடையில் இருந்த விலை உயர்ந்த செல்போன் மற்றும் 2000 ரூபாய் பணம் எடுத்ததை ஒப்புக்கொண்டார்.இது எடுத்து போலீசார் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் பர்கர் கடையில் பூட்டை உடைத்து கடையில் தின்பண்ட ங்களை ஆராய்ந்து தின்று சாவகசமாக திருடிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
- சங்கர் திருக்கார்த்திகை முடிந்து கடந்த 7-ந் தேதி அவர் வீடு திரும்பினார்.
- பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
வடவள்ளி,
கோவை சோமையம்பாளையம் மாங்கல்யன் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (46). இவர் கடந்த 2-ந் தேதி தனது குடும்பத்தினருடன் திருவண்ணாமலை சென்றார்.
திருக்கார்த்திகை முடிந்து கடந்த 7-ந் தேதி அவர் வீடு திரும்பினார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது படுக்கையறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
இதுபற்றி சங்கர் வடவள்ளி போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசுார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சங்கர் வீட்டில் கைவரிசை காட்டியது அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ்பாபு (வயது 29) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
தினேஷ்பாபு, கல்வீரம்பாளையம் நிவாசா கார்டன் பகுதியைச் சேர்ந்த தீபா (40) என்பவரது வீட்டிலும் கைவரிசை காட்டியதை ஒப்புக்கொண்டார். அந்த ெகாள்ளை தொடர்பாகவும் தினேஷ்பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்ப ட்டது.
பின்னர் தினேஷ்பாபு கோர்ட்டில் ஆஜர்ப டுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்க ப்பட்டார்.
கோவை ஓனப்பாளையம் அடுத்த உளியம்பாளையம் பகுதியில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் நேற்று முன்தினம் காலை பூஜை செய்வதற்காக கோவிலுக்கு சென்ற பூசாரி, கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து ஊர் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் பொருத்த ப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராயை ஆய்வு செய்தனர்.
அதில் இரவு மர்ம நபர் கோவிலுக்கு புகுந்து கோவில் உண்டியலை உடைத்து பணத்தை எடுத்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
இதுகுறித்த சி.சி.டி.வி. காமிரா காட்சியுடன் தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ‘ஹெல்மெட்’ அணிந்து கோவிலுக்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்ட கொள்ளையன், சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சி மூலம் தற்போது சிக்கினார்.
- சுல்தான் செய்யது இப்ராகிம் அலி மீது வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
சாயல்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள இளஞ்செம்பூரில் முத்து இருளாயி அம்மன் கோவில் இருக்கிறது. சம்பவத்தன்று நள்ளிரவில் 'ஹெல்மெட்' அணிந்து வந்த மர்மநபர் ஒருவர், கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து உண்டியலில் இருந்த பணம் மற்றும் சாமி நகைகளை திருடினார்.
கோவில் உண்டியல் உடைக்கப்படும் சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கோவிலுக்கு திரண்டு வந்தனர். இதையடுத்து அந்த மர்மநபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பொதுமக்கள் வந்து பார்த்தபோது கோவில் உண்டியலில் இருந்த பணமும், சாமிக்கு அணிவித்திருந்த தங்கத்தாலி, வெள்ளி கிரீடம் உள்ளிட்டவைகளும் திருட்டுபோய் இருந்தது.
இதுகுறித்து இளஞ்செம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில் 'ஹெல்மெட்' அணிந்து வந்த ஒரு நபர் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்த காட்சி பதிவாகி இருந்தது. அந்த நபர் யார்? என்று விசாரித்தபோது, அவர் பிரபல கொள்ளையனான பரமக்குடி சுப்பிரமணியன் கோவில் தெருவை சேர்ந்த சுல்தான் செய்யது இப்ராகிம் அலி (வயது 52) என தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து அம்மன் கோவிலில் திருட்டுபோன தங்கத்தாலி, வெள்ளி கிரீடம் மற்றும் உண்டியல் பணம் ரூ.5,750 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் அவர் மதுரை ஐகோர்ட்டு வக்கீல் என்று போலி அடையாள அட்டை வைத்திருந்தார். மனைவியை பிரிந்து வாழ்ந்த சுல்தான் செய்யது இப்ராகிம் அலி, வக்கீல் என போலி அடையாள அட்டையுடன் சுற்றி திரிந்து திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
'ஹெல்மெட்'அணிந்து திரிந்ததால் அவர் வெகுநாட்களாக சிக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் 'ஹெல்மெட்' அணிந்து கோவிலுக்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்ட அவர், சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சி மூலம் தற்போது சிக்கினார்.
சுல்தான் செய்யது இப்ராகிம் அலி மீது வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
- மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
- தப்பி ஓடிய மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை
மதுரையில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களை கட்டுப்படுத்த, அதில் ஈடுபடுபவர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவு பிறப்பித்தார்.
ரவுடி கும்பல்
அதன்பேரில் மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில் தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.அந்த தனிப்படை போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஜெய்ஹிந்த்புரம் முத்து பாலம் பகுதியில் ரெயில்வே தண்டவாளம் அருகே 5 பேர் கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக தகவல் வந்தது. அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் அங்கு சென்று அந்த கும்பலை சுற்றி வளைத்தனர்.
இதையடுத்து கும்பலை சேர்ந்தவர்கள் தப்பி ஓடினர். அவர்களில் 3 பேரை போலீசார் பிடித்தனர். அவர்கள் யார்? என்று விசாரித்த போது மதுரை ஆண்டாள்புரம் பழைய மீனாட்சி காலனியை சேர்ந்த கலையரசன் என்பவரின் மகன் பிரவீன் (வயது22), சுந்தர்ராஜபுரம் வி.வி.கிரி சாலையை சேர்ந்த மகேந்திரன் என்பவரின் மகன் தமிழரசன் (21) மற்றும் 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.
அவர்கள் கத்தி, அரிவாள், உருட்டுக்கட்டை, மிளகாய் பொடி, கயிறு உள்ளிட்டவைகளை வைத்திருந்தனர். அதுபற்றி விசாரித்த போது, அவர்கள் கொள்ளையடிக்கும் நோக்கில் ஆயுதங்களுடன் அங்கு பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து பிடிபட்ட 3 பேரையும் கைது செய்து போலீஸ் நிலை யத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
பிரவீனும், தமிழரசனும் ரவுடிகள் ஆவர். பிரவீன் மீது கொலை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகளும், தமிழரசன் மீது கொள்ளை முயற்சி, தாக்குதல், ஆயுதங்களுடன் திரிந்தது உள்ளிட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளன. அவர்களுடன் சிக்கிய சிறுவன் மீது வீடு புகுந்து கொள்ளையடித்த வழக்கு மட்டும் இருக்கிறது.
தப்பி ஓடிய மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
- காருக்கு பெட்ரோல் போட்டுவிட்டு காரை எடுத்து பண்ருட்டி சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
- 17 பேர் கொண்ட கும்பல் காரை வழிமறித்தனர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே உள்ள கந்தன்பாளையத்தை சேர்ந்த பெருமாள். இவரது மகள் வைஷ்ணவி, மருமகன் மணிவண்ணன், அவரது தம்பி மணிசங்கர் ஆகியோர் பண்ருட்டி சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்றனர். அங்கு காருக்கு பெட்ரோல் போட்டுவிட்டு காரை எடுத்து பண்ருட்டி சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது 17 பேர் கொண்ட கும்பல் காரை வழிமறித்தனர். காரின் கண்ணாடியை உடைத்துவிட்டு காரில் இருந்த 3 பேரையும் தாக்கினர். மேலும், அவர்களிடமிருந்த பணப்பையை பறித்துக் கொண்டு தப்பிவிட்டனர். இதில் காயமடைந்த 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இது தொடர்பான புகாரின் பேரில் பண்ருட்டி நகர இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் 17 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் தலைமறைவாகியிருந்த கொள்ளையர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.
இந்நிலையில் இன்று காலை போலீசார் பண்ருட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த இளைஞர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் கார் கண்ணாடியை உடைத்து பணத்தை திருடிச் சென்ற கும்பலைச் சேர்ந்த ஒருவர் என்பது போலீசாருக்கு தெரிய வந்தது. இவர் பண்ருட்டி பாரதி நகர் ஜெயமூர்த்தி மகன் கவியரசு (38) என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் மீதமுள்ளவர்களை எங்கு ஒளிந்து இருக்கின்றனர் என்பது குறித்து கவியரசுவிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரோந்து சென்ற போது போலீசார் மடக்கி பிடித்தனர்.
- அந்த வழியாக சந்தேகப்படும் படியாக வாலிபர் ஒருவர் நடந்து சென்றார்.
பொள்ளாச்சி,
கோவை மாவட்டம் வடக்கிப்பாளையம் போலீசார் பொள்ளாச்சி ரோட்டில் நள்ளிரவு ரோந்து சென்றனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக வாலிபர் ஒருவர் நடந்து சென்றார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் கையில் வைத்து இருந்த கைப்பையை சோதனை செய்தனர். அதில் ரூ.8,400 ரொக்க பணம், 22 சிகரெட் பாக்கெட்டுகள், ஒரு சுத்தியல்,ஸ்குரு டிரைவர், ஸ்பேனர் ஆகியவை இருந்தது. போலீசார் அந்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த செல்வக்குமார் (வயது 24) என்பது தெரிய வந்தது.
செல்வகுமார் வடக்கிப்பாளையம் சுப்பையா நகரில் உள்ள முத்துக்குமார் (43) என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் பூட்டை உடைத்து பணம், சிகரெட் பாக்கெட் ஆகியவற்றை கொள்ளையடித்தது தெரிய வந்தது.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் செல்வகுமார் மீது சேலம் மாவட்டம் மேச்சேரி போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் 3-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் பதிவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் கடந்த மாதம் 12-ந் தேதி தான் சேலம் ஜெயிலில் இருந்து வெளியே வந்துள்ளார். ஜெயிலில் இருந்து வெளியே வந்த சில நாட்களில் மீண்டும் கொள்ளை வழக்கில் கைதாகி உள்ளார்.
கைது செய்யப்பட்ட கொள்ளையன் செல்வகுமாரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
- 20 இடங்களில் திருடிய கொள்ளையன் கைது.
- மொத்தம் 20இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டு கொள்ளை யடித்தது தெரியவந்தது. ,
க்டலூர்:
பண்ருட்டி அருகே கொங்கராய னூரில்கடந்த 2021-ம் ஆண்டு லாலாப்பேட்டை யை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் என்பவரை தாக்கி வழிபறிகொள்ளை நடந்ததுஇந்த வழக்கில் சம்மந்தபட்டகீழ்பூத்தமங்கலம்விஜயகுமார் என்பவரைடிஎஸ்பி சபிபுல்லா உத்தரவின் பேரில் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்.இன்ஸ்பெக்டர்தங்கவேல், ஏட்டு ஜோதி மற்றும் அன்பரசன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்
இவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.விசாரணையில் கடலூர் மாவட்டத்தில் திருப்பாப்புலியூர்,நெல்லிகுப்பம், நெய்வேலி டவுன்ஷிப், குறிஞ்சிப்பாடி, விருதாச்சலம், பண்ருட்டியில் 9 இடங்களிலும் விழுப்புரம் மாவட்டத்தில் மைலம்,வானூர், திருவெண்ணைநல்லூர், திண்டிவனம் பகுதியில் 7 இடங்களிலும், கள்ளகுறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, திருநாவலூர் பகுதியில் 2 இடங்களிலும் மொத்தம் 20இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டு கொள்ளை யடித்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவனை கைது செய்து அவனிடமிருந்து கொள்ளையடித்த பணம் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
- கடந்த 7-ந்தேதி அலுவலகத்தின் பூட்டை உடைத்து ரூ.75 ஆயிரம் கொள்ளை போனது.
- கடம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் விடையூர் காரணி பகுதியைச் சேர்ந்தவர் வசந்த குமார். இவர் கடம்பத்தூர் ராஜாஜி சாலையில் பணம் பரிமாற்றம் செய்யும் அலுவலகம் நடத்தி வருகிறார்.
கடந்த 7-ந்தேதி இந்த அலுவலகத்தின் பூட்டை உடைத்து ரூ.75 ஆயிரம் கொள்ளை போனது. இது தொடர்பாக கடம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமிரா காட்சியை வைத்து கொள்ளையில் ஈடுபட்ட பரங்கிமலை, மகாலட்சுமி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கவுதமனை (22) கைது செய்தனர்.
- பஸ்சில் இருந்த தாலிப் ராஜா திடீரென பஸ் ஜன்னல் வழியாக ஏறி குதித்து தப்பினார்.
- தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.
கோவை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்த வேல்வார் பேட்டையை சேர்ந்தவர் தாலிப் ராஜா(28).
இவர் கடந்த ஆண்டு திருப்பூர் மாவட்டத்தில் 2 செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டார். இது தொடர்பாக திருப்பூர் தெற்கு, நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட தாலிப் ராஜாவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
இந்நிலையில், கோவை மத்திய ஜெயிலில் உள்ள தாலிப் ராஜாவை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக கடந்த 7-ந் தேதி திருப்பூர் போலீசார் கோவைக்கு வந்தனர். மத்திய ஜெயிலில் இருந்து தாலிப் ராஜா மற்றும் மற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என 4 பேரை திருப்பூருக்கு பஸ்சில் அழைத்து சென்றனர்.
அங்கு கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு 4 பேரையும் மீண்டும் பஸ்சில் கோவைக்கு அழைத்து வந்தனர்.
பஸ் சிங்காநல்லூர் அருகே உள்ள இருகூர் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது பஸ்சில் இருந்த தாலிப் ராஜா திடீரென பஸ் ஜன்னல் வழியாக ஏறி குதித்து தப்பினார்.
போலீசார் உடனடியாக சிங்காநல்லூர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசாரும் அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை கோவை பகுதியில் பதுங்கி இருந்த அவரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
- நல்லசிவம் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றதும் மணிகண்டன் வீட்டின் பூட்டை உடைக்காமல் லாவகமாக திறந்து கைவரிசை காட்டி வந்து உள்ளார்.
- கைதான கொள்ளையன் மணிகண்டன் நல்லசிவம் வீட்டில் 3 முறை கைவரிசை காட்டி பணத்தை சுருட்டியதாக தெரிவித்து உள்ளார்.
போரூர்:
சென்னை ராமாபுரம், அன்னை சத்யா நகர், 4-வது தெருவை சேர்ந்தவர் நல்லசிவம். கார் டிரைவர். இவர் கடந்த 12-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்றார் . பின்னர் இரவு வீடு திரும்பியபோது வீட்டில் இருந்த ரூ.5ஆயிரம் ரொக்கம் மாயமாகி இருந்தது.
இதேபோல் அடுத்தடுத்து 3 முறை வீட்டில் இருந்த பணம் கொள்ளை போனது. ஆனால் வீட்டின் பூட்டு உடைக்கப்படவில்லை. அப்படியே இருந்தது. வீட்டில் இருந்து ஆட்கள் வெளியே சென்றதும் நோட்டமிட்டு மர்மநபர் கைவரிசை காட்டி வருவது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த நல்லசிவம் லாவகமாக கைவரிசை காட்டிவரும் கொள்ளையனை எப்படியாவது மடக்கி பிடித்து விட வேண்டும் என்று எண்ணினார். இதுபற்றி மனைவியிடம் தெரிவித்தார். இதையடுத்து இருவரும் சேர்ந்து கொள்ளையனை எப்படி பிடிக்கலாம் என்று திட்டமிட்டனர்.
இருவரின் யோசனைப்படி சம்பவத்தன்று நல்லசிவம் வீட்டிற்குள் மறைந்து இருந்து கொண்டு மனைவியை வீட்டின் கதவை பூட்டிவிட்டு வெளியே செல்லுமாறு கூறினார்.
அதன்படி வழக்கம்போல் நல்லசிவத்தின் மனைவி வீட்டு கதவை பூட்டிவிட்டு எதுவும் தெரியாதது போல வெளியே சென்றார். சிறிது நேரத்தில் அங்கு வந்த வாலிபர் ஒருவர் வீட்டின் பூட்டை உடைக்காமல் லாவகமாக திறந்து உள்ளே சென்றார்.
அப்போது வீட்டுக்குள் மறைந்து இருந்த நல்லசிவம், கொள்ளையன் வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்கு உரிமையாளர் மறைந்து இருப்பதை கண்ட கொள்ளையன் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றான்.
பல நாள் திருடன் சிக்கியதால் ஆவேசம் அடைந்த நல்லசிவம் பாய்ந்து சென்று கொள்ளையைனை மடக்கி பிடித்தார். பின்னர் அவனுக்கு தர்ம அடி கொடுத்தார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினரும் அங்கு திரண்டனர்.
தொடர்ந்து கைவரிசை காட்டிய வந்த கொள்ளையனுக்கு அவர்களும் தங்கள் பங்குக்கு கவனித்தனர். பின்னர் அவனை ராமாபுரம் போலீசில் ஒப்படைத்தனர்.
இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் நடத்திய விசாரணையில் பிடிபட்ட கொள்ளையன் பக்கத்து வீட்டில் வசித்து வரும் மணிகண்டன் (26) என்பது தெரிந்தது. இளநீர் வியாபாரம் செய்து வந்த அவன் உல்லாசமாக செலவு செய்ய கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது.
நல்லசிவம் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றதும் மணிகண்டன் வீட்டின் பூட்டை உடைக்காமல் லாவகமாக திறந்து கைவரிசை காட்டி வந்து உள்ளார். முதலில் வீட்டில் இருந்த பணம் மாயமானதால் நல்லசிவமும் அவரது மனைவியும் ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் அடைந்தனர்.
இதன் பின்னர் தொடர்ந்து பணம் மாயமானதால் வெளியில் இருந்து வரும் மர்ம நபர்கள் நூதன முறையில் கைவரிசை காட்டி பணத்தை திருடி செல்வது தெரியவந்தது. இதன் பின்னரே கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து திட்டமிட்டு கொள்ளையனை மடக்கி பிடித்து உள்ளனர்.
கைதான கொள்ளையன் மணிகண்டன் நல்லசிவம் வீட்டில் 3 முறை கைவரிசை காட்டி பணத்தை சுருட்டியதாக தெரிவித்து உள்ளார். மேலும் திருடிய பணத்தை வைத்து புதிய செல்போன் வாங்கியதும், உல்லாசமாக செலவு செய்ததாகவும் தெரிவித்து உள்ளான்.
வீட்டுக்குள் நல்லசிவம் மறைந்து இருப்பது தெரியாமல் வழக்கம்போல் மணிகண்டன் உற்சாகமாக பணத்தை சுருட்ட வந்தபோது வசமாக சிக்கிக்கொண்டான்.
இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்த ரூ.2ஆயிரம் ரொக்கம், ஒரு செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.