என் மலர்
நீங்கள் தேடியது "திண்டுக்கல் சீனிவாசன்"
- சினிமா படத்தின் கிளைமாக்ஸ் காட்சி போல் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. இணைந்தது.
- வருகிற சட்டமன்ற தேர்தலில் இந்த கூட்டணி நிச்சயமாக தி.மு.க.வை டெபாசிட் இழக்கச் செய்யும்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகர வடக்கு பகுதி அ.தி.மு.க. சார்பில் 2026 சட்டமன்ற தேர்தல் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு கட்சியின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ராஜ்மோகன், அ.தி.மு.க. மாநில அமைப்பு செயலாளர் மருதராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், "கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தான் 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் 5 ஆயிரம் மாணவ-மாணவிகள் மருத்துவம் படிக்க முடிந்தது. குடிமராமத்து பணிகள் மூலம் விவசாயிகள் இலவசமாக மண் அள்ளிக்கொள்ள அனுமதி கொடுத்ததும் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தான். இன்றைய பரபரப்பான அரசியல் சூழலில், சினிமா படத்தின் கிளைமாக்ஸ் காட்சி போல் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. இணைந்தது. வருகிற சட்டமன்ற தேர்தலில் இந்த கூட்டணி நிச்சயமாக தி.மு.க.வை டெபாசிட் இழக்கச் செய்யும் என்றார்.
இதனிடையே, சைத்தான் கூட்டணியால் தான் தோற்றோம் என்று கூறிவிட்டு மீண்டும் ஏன் சைத்தாவுடன் கூட்டணி வைத்தீர்கள் என பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, திண்டுக்கல் சீனிவாசன், அரசியல்வாதிகள் சூழலுக்கேற்ப மாற்றிமாற்றிதான் பேசுவோம். பழசை எல்லாம் துடைத்துவிடவேண்டும் என்றார்.
- பா.ம.க.வில் நடப்பது உள்கட்சி விவகாரம். அதில் நாங்கள் தலைமையிட முடியாது.
- அமைச்சர் பொன்முடியை போல தி.மு.க.வினர் பல்வேறு இடங்களில் பெண்களை பற்றி அவதூறாக பேசி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகர் வடக்கு பகுதி அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை வகித்து பேசியதாவது,
சட்டமன்றத் தேர்தலுக்கு அ.தி.மு.க. தலைமையிலான சிறப்பான கூட்டணியை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமைத்துள்ளார். அவருக்கு 1½ கோடி அ.தி.மு.க. உறுப்பினர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். பொதுமக்களிடம் விலைவாசி உயர்வு, தி.மு.க. ஆட்சியின் வேதனைகள், கடந்த கால அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகள், தி.மு.க. ஆட்சியில் டாஸ்மாக் ஊழல்களை பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். இந்த ஆட்சி எப்போது முடியும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். வருங்காலம் நமது காலம். நமது பணியை செவ்வனே செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி அமையும். இந்த கூட்டணியில் பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் இடங்களை பிரித்துக் கொடுப்பதை எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார். தேர்தல் நேரத்தில் இதுகுறித்து பேசி முடிவெடுக்கப்படும். வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு தமிழக சட்டப் பேரவையில் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்த போது அதனை ஆதரித்து அ.தி.மு.க. வாக்களித்தது. எனவே நாங்கள் சிறுபான்மையின மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. பா.ம.க.வில் நடப்பது உள்கட்சி விவகாரம். அதில் நாங்கள் தலைமையிட முடியாது.
அமைச்சர் பொன்முடியை போல தி.மு.க.வினர் பல்வேறு இடங்களில் பெண்களை பற்றி அவதூறாக பேசி வருகின்றனர். ஆனால் அவர்கள் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பதில்லை. அவரது கட்சியில் என்ன நடக்கிறது என்றே அவருக்கு தெரியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாமக எம்.எல்.ஏக்களுடன் பேசிக்கொண்டே அதிமுக எம்.எல்.ஏ திண்டுக்கல் சீனிவாசன் சட்டப்பேரவைக்கு வந்தார்.
- கூட்டணி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் முடிவு செய்வார்.
சட்டப்பேரவைக்கு வரும்போது பாமக எம்.எல்.ஏக்கள் ஜி.கே.மணி, அருள் உள்ளிட்டோருடன் அதிமுக எம்.எல்.ஏ திண்டுக்கல் சீனிவாசன் பேசிக்கொண்டே வந்தார்.
அப்போது "பாஜக, நம்ம (அதிமுக), அப்புறம் பாமக" என சிரித்துக்கொண்டே பேசி வந்த திண்டுக்கல் சீனிவாசனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது "நாங்க கூட்டணிங்க" எனச் சொல்லிச் சென்றதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இன்று மதியம் திண்டுக்கல் சீனிவாசனிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், "பாமகவுடன் கூட்டணி என நான் யாரிடமும் கூறவில்லை. கூட்டணி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் முடிவு செய்வார்" என்று கூறிவிட்டு சென்றார்.
- தி.மு.க ஆட்சியில் மாணவர்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர்.
- திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் வாக்காளர் முகவர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது,
தமிழகத்தில் தி.மு.க ஆட்சி எப்படி இருக்கிறது என்பதற்கு தொடர்ந்து உயர்ந்துவரும் விலைவாசி உயர்வை வைத்தே மக்கள் தெரிந்து கொண்டு விட்டனர். ஆவின்பால் விலையை லிட்டருக்கு ரூ.12 வரை உயர்த்திவிட்டனர். மின்சார கட்டணம், வீட்டு வரி, சொத்து வரி போன்ற அனைத்தையும் உயர்த்திவிட்டனர்.
தி.மு.கவுக்கு வாக்களித்த மக்களும், அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் நல்லாட்சி நடக்கிறது என்று தி.மு.கவினர் கூறிவருகின்றனர். மழைநீரே இல்லை என்று அமைச்சர்கள் கூறி வருகின்றனர். ஆனால் சென்னை மழைநீரில் தத்தளிக்கிறது. ஆனால் அ.தி.மு.க. 4ஆக உடைந்துவிட்டது. இவர்கள் ஒன்றுசேர்ந்தால்தான் வெற்றிபெற முடியும் என எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர்.
இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.கவின் 71 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். மாவட்ட செயலாளர்கள் 70 பேர் உள்ளனர். 2500-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர் உள்ளனர். தி.மு.க ஆட்சியின் அவலத்தை மக்கள் தற்போது நன்றாக உணர்ந்து உள்ளனர். எனவே பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அடுத்த முதல்வராக எடப்பாடி பழனிசாமி வருவது உறுதி. இதற்காக அ.தி.மு.க தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்று அவர் தெரித்தார். இந்த கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் அபார வெற்றிபெறும். இந்த கூட்டணியில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோருக்கு இடமில்லை. அவர்கள் வருவதால் அ.தி.மு.கவுக்கு எந்த லாபமும் இல்லை. தி.மு.க ஆட்சியில் மாணவர்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவர்களை கைது செய்யும் போலீசாரை ஆளும்கட்சியினர் மிரட்டி வருகின்றனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது தொடர்பான சிறப்பு முகாம்களில் கட்சி நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அமைப்பு செயலாளர் மருதராஜ், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் ராஜ்மோகன், ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், பகுதி செயலாளர்கள் மோகன், சுப்பிரமணி, சேசு, முரளி, அபிராமி கூட்டுறவு பண்டகசாலை துணைத்தலைவர் ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அ.தி.மு.க.வை எப்படியாவது அழித்து விடலாம் என்று தி.மு.க. தொடர்ந்து பல சூழ்ச்சிகளை செய்து வருகிறது.
- தமிழகத்தில் சிறப்பான முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டார்.
திண்டுக்கல்:
முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திண்டுக்கல் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் என்.ஜி.ஓ. காலனியில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் கட்சியின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசியதாவது:-
அ.தி.மு.க.வை எப்படியாவது அழித்து விடலாம் என்று தி.மு.க. தொடர்ந்து பல சூழ்ச்சிகளை செய்து வருகிறது. ஆனால் இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. தமிழகத்தில் சிறப்பான முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டார்.
அதன்பிறகு இடைக்கால பொதுச் செயலாளராக கட்சியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். இந்த இயக்கத்தை அழிக்க தி.மு.க. மட்டுமின்றி சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோரும் முயன்று வருகின்றனர். ஆனால் இந்த இயக்கம் மீண்டும் வலுவாக உருவாகி வருகிறது. தி.மு.க. ஆட்சி அமைய முக்கிய காரணமாக இருந்தவர்கள் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும்தான். ஆனால் தற்போது அவர்கள் தங்கள் கோரிக்கைக்காக போராட்டம் நடத்தி வருகின்றனர். 20 மாத தி.மு.க. ஆட்சி மக்களுக்கு நன்மை செய்துள்ளதா? இல்லையா என்பதை மக்களே புரிந்து கொள்வார்கள்.
தி.மு.க.வை கருணாநிதியின் குடும்ப சொத்தாக மாற்றி விட்டனர். கோட்டையில் ஸ்டாலின் குடும்பத்தினர் நிழல் முதல்வர்கள் போல வலம் வருகின்றனர். உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கி 10-வது இடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ளார்.
தன்னை யாரும் கேள்வி எழுப்ப முடியாது என்ற தைரியத்தில் சர்வாதிகாரத்தின் உச்சமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு இடைத்தேர்தல் மட்டுமின்றி இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், தலைமை கழக பேச்சாளர்கள் குமுதா பெருமாள், மின்னல் மீனாட்சி சுந்தரம் பேசினர். மாவட்ட அவைத்தலைவர் சங்கரநாராயணன், ஒன்றிய இணைச் செயலாளர் காளியம்மாள், துணைச் செயலாளர் லதா தர்மராஜ், முன்னாள் அரசு வக்கீல் மனோகரன், மாவட்ட பிரதிநிதி சின்னகோபால், எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்கள் முத்துச்சாமி, வேலுச்சாமி, செல்வராஜ், பேரவை பொருளாளர் சிவபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் ராஜமோகன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சின்ராஜ், பேரவை செயலாளர் ராஜா, இளைஞர் அணி செயலாளர் வேல்முருகன், மீனவரணி செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவில் ஒன்றிய அவைத்தலைவர் நந்தகோபால் நன்றி கூறினார்.
- கட்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலை அ.தி.மு.க சந்தித்து ஒருலட்சத்து 62 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வெற்றிபெற்றது.
- பிரதமர் இந்திராகாந்தி, அப்போதயை முதல்-அமைச்சர் கருணாநிதி, காமராஜர் ஆகியோர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டும் எங்கள் வெற்றியை தடுக்க முடியவில்லை.
உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது,
இந்த தீர்ப்பு தொண்டர்களுக்கு கிடைத்த வெற்றியாகும். கடவுள் எங்கள் பக்கம் உள்ளார். மறைந்த முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆன்மா எங்களை வழிநடத்திச்செல்கிறது. தர்மத்தின் பக்கம் தீர்ப்பு கிடைத்துள்ளது. இனி அ.தி.மு.கவுக்கு தொடர் வெற்றிகள்தான் கிடைக்கும். ஓ.பன்னீர்செல்வம் பொய்யாக ஒரு அணியை உருவாக்கி பொம்மை போல் செயல்பட்டு வந்தார். இன்று காலை 10.30 மணியுடன் அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதை கோர்ட்டு உறுதி செய்துள்ளது. அவருடன் கடைசியாக இருந்த 106 பேர்களும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்றுக்கொண்டனர். இதனால் ஓ.பன்னீர்செல்வம் இனி எந்த வழக்கும் தொடர முடியாது. ஈரோடு இடைத்தேர்தலிலும் எங்களுக்கு அமோக வெற்றிகிடைக்கும். குறைந்தபட்சம் 50ஆயிரம் முதல் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தென்னரசு வெற்றிபெறுவார்.
1972-ம்ஆண்டு கட்சியை தொடங்கிய எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து நான் இந்த இயக்கத்தில் உள்ளேன். கட்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலை அ.தி.மு.க சந்தித்து ஒருலட்சத்து 62 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வெற்றிபெற்றது. பிரதமர் இந்திராகாந்தி, அப்போதயை முதல்-அமைச்சர் கருணாநிதி, காமராஜர் ஆகியோர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டும் எங்கள் வெற்றியை தடுக்க முடியவில்லை. அதேபோன்ற வெற்றி ஈரோடு இடைத்தேர்தலிலும் எதிரொலிக்கும் என்றார்.
- தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி.
- தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்து பேசி இறுதி முடிவு எடுக்க கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள்.
திண்டுக்கல்:
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது, வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 25 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபட வேண்டும் என தெரிவித்தார்.
திண்டுக்கல் சீலப்பாடி அருகே ரூ.18.70 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அரசு ஆரம்ப பள்ளி கட்டிடத்தை இன்று முன்னாள் அமைச்சர் சீனிவாசன் திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சென்னையில் மத்திய மந்திரி அமித்ஷா பா.ஜ.க. நிர்வாகிகள் மத்தியில் பேசும்போது, தொண்டர்களை உற்சாகமாக கட்சிப்பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் 25 தொகுதிகளில் வெற்றி பெற உழைக்க வேண்டும் என பேசி உள்ளார்.
ஆனால் அ.தி.மு.க.வை பொறுத்தவரை புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.
அந்த கூட்டணிக்கு இந்தியாவில் பா.ஜ.க. தலைமை வகிக்கிறது. ஆனால் தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி. இதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்து பேசி இறுதி முடிவு எடுக்க கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். அதுவரை எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பதை உறுதியாக சொல்ல முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அருகில் இருந்த கட்சிக்காரர்கள் கவனித்து, அவரிடம் எடுத்துச் சொன்னதும், அய்யய்யோ வார்த்தை தவறிவிட்டது என்றார்.
- ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி திண்டுக்கல் நாகல் நகரில் இன்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது, "தமிழகத்தில் மீண்டும் சட்டமன்ற தேர்தல் நடத்தினால் 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க வைத்து ஸ்டாலினை முதல்வராக்குவோம்" என வாய்தவறி உளறினார்.
இதனை அருகில் இருந்த கட்சிக்காரர்கள் கவனித்து, அவரிடம் எடுத்துச் சொன்னார்கள். இதையடுத்து சுதாரித்த திண்டுக்கல் சீனிவாசன் தவறை திருத்தி பேசினார்.
"அய்யயோ, வார்த்தை தவறாக வந்துவிட்டது. ஸ்டாலினை தோற்கடித்து எடப்பாடியார் அவர்களை முதலமைச்சர் ஆக்கி காட்டுவோம் என நமது தாய்மார்கள் தெரிவித்திருக்கிறார்கள்" என்றார் திண்டுக்கல் சீனிவாசன்.
- கழுத்தில் ஏற்பட்டுள்ள கட்டிக்கு, அறுவை சிகிச்சை பெற வேண்டி சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
- ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசனுக்கு, மருத்துவம் தொடர்பான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
கழுத்தில் ஏற்பட்டுள்ள கட்டிக்கு, அறுவை சிகிச்சை பெற வேண்டி சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
நேற்று இரவு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, மருத்துவம் தொடர்பான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- 1972-ல் அ.தி.மு.கவை உருவாக்கியபோது எம்.ஜி.ஆர் எத்தனை வேகத்தில் செயல்பட்டாரோ அதைவிட 4 மடங்கு வேகத்தில் எடப்பாடி பழனிசாமி செயலாற்றி வருகிறார்.
- எப்போது தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு அளித்தது அ.தி.மு.க ஆட்சியில் மட்டுமே.
திண்டுக்கல்:
அ.தி.மு.க பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
மதுரையில் வருகிற 20-ந்தேதி அ.தி.மு.க சார்பில் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டு நுழைவாயிலில் 51 அடி உயர கொடிமரம் நடப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு வரும் அனைத்து தொண்டர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு உணவு, குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாநாட்டிற்கு 25 லட்சத்திற்கும் அதிகமாக தொண்டர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கிறோம். இந்தியாவிலேயே வேறு ஒரு கட்சியும் இதுபோன்ற ஒரு மாநாட்டை நடத்தியது இல்லை என கூறும் அளவிற்கு வெற்றி மாநாடாக அமையும். கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு பணியும் பார்த்து, பார்த்து செய்யப்படுகிறது. இந்த மாநாட்டிற்கு எப்படியாவது இடையூறு அல்லது தடை செய்ய தி.மு.க முயற்சி மேற்கொண்டு வருகிறது. அது ஒருபோதும் பலிக்காது.
1972-ல் அ.தி.மு.கவை உருவாக்கியபோது எம்.ஜி.ஆர் எத்தனை வேகத்தில் செயல்பட்டாரோ அதைவிட 4 மடங்கு வேகத்தில் எடப்பாடி பழனிசாமி செயலாற்றி வருகிறார். அ.தி.மு.க.வில் 2 கோடியே 25 லட்சம் தொண்டர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இது எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி வருகிறது.
பாராளுமன்றத்தில் மத்திய அரசின் மீது எதிர்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்துள்ளது. இந்த தீர்மானத்தின்போது பங்கேற்று பேசிய தி.மு.க எம்.பி. கனிமொழி தமிழகத்தில் சமூகநீதி காக்கப்பட்டு வருவதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுவதாகவும், மணிப்பூரில் திரவுபதிக்கு நேர்ந்ததைபோல துகில் உரியப்பட்டதாக ஆவேசமாக பேசினார். இதற்கு பதில் அளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 1989-ம் ஆண்டு மார்ச் 25-ந்தேதி தமிழக சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வை குறிப்பிட்டு பேசினார்.
அன்றைய எதிர்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதாவின் துகில் உரியப்பட்ட சம்பவத்தை நினைவுபடுத்தி இதுதான் தி.மு.கவின் சமூகநீதியா என கேள்வி எழுப்பினார். தி.மு.கவின் சமூகநீதி குறித்த கேள்விக்கு பதில் அளித்த மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சிவகங்கையின் வீரமங்கை வேலுநாச்சியாராக நாங்கள் பார்க்கிறோம். அன்றைய சட்டசபை நிகழ்வின்போது உறுதிமொழி எடுத்து கொண்ட ஜெயலலிதா இனிமேல் இந்த சட்டசபைக்குள் முதலமைச்சராகத்தான் நுழைவேன் எனக்கூறி அதன்படியே 2 ஆண்டுகள் கழித்து தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சராக பதவிஏற்றார். வரலாறு இவ்வாறு உள்ள நிலையில் சமூகநீதிக்காக தி.மு.க போராடுவதாக பேசுவதும், மணிப்பூர் பெண்களை திரவுபதியாக சித்தரித்து கனிமொழி பேசியதும் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல.
எப்போது தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு அளித்தது அ.தி.மு.க ஆட்சியில் மட்டுமே. இதனை தமிழக மக்கள் நன்கு உணர்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாரதம் என்ற பெயரை அனைவரும் விரும்புகிறார்கள் என திண்டுக்கல் சீனிவாசன் பேட்டிளித்தார்.
- இந்தியாவுக்கு பாரதம் என்று பெயர் வைத்தால் தப்பு ஒன்றும் இல்லை.
மதுரை
பி.கே.மூக்கையா தேவரின் நினைவு நாளை யொட்டி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் அமைந் திருக்கும் அவரின் நினை விடத்தில், அ.தி.மு.க. சார் பில் மரியாதை செலுத்தப் பட்டது.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற் பாட்டில் முன்னாள் அமைச் சர்கள் திண்டுக்கல் சீனிவா சன்,செல்லூர் ராஜூ, நத்தம் விசுவநாதன், மதுரை புற நகர் கிழக்கு மாவட்ட செய லாளர் ராஜன் செல்லப்பா, ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி னர்.
இந்த நிகழ்ச்சியில் முன் னாள் சட்டமன்ற உறுப்பினர் கள் எஸ்.எஸ்.சரவணன், டாக்டர் சரவணன், மாநில நிர்வாகிகள் வெற்றிவேல், ராமகிருஷ்ணன், சிவசுப்பிர மணியன், மாவட்ட நிர்வாகி கள் தமிழ்ச்செல்வன், திருப் பதி, மதுரை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் திண்டுக்கல் சீனி வாசன் கூறியதாவது:-
மூன்று கல்லூரியை உருவாக்கித் தந்த கல்வித் தந்தை, நாடாளுமன்ற உறுப் பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் மக்களுக்கு சேவை செய்த பி.கே. முக்கையா தேவரின் 44-வது குருபூஜை முன்னி ட்டு கட்சி பொதுச் செயலா ளர், எடப்பாடி பழனிசாமி யின் ஆணைக்கிணங்க, மூக்கையா தேவரின் நினை விடத்தில் அஞ்சலி செலுத் தப்பட்டது.
உசிலம்பட்டியில் பி.கே.மூக்கையா தேவர் சிலை அமைக்க, அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனி சாமி சிறப்பு சட்டத்தை நிறைவேற்றி தந்தார்.
மேலும் பெருங்காம நல்லூரில் கை ரேகைச் சட்டத்தை எதிர்த்து உயிர் நீத்த, 16 தியாகிகளின் நூற் றாண்டு நாளை முன்னிட்டு, ஐந்தரை ஏக்கர் பரப்பளவில் நினைவு மண்டபத்தை உரு வாக்கி தந்தார்.
புரட்சித்தலைவர் வழியி லும், புரட்சி தலைவிஅம்மா வழியிலும் எடப்பாடி பழனி சாமி பல்வேறு திட்டங்களை நாட்டு மக்களுக்கு வழங்கி னார்.
இந்தியாவுக்கு பாரதம் என்று பெயர் வைத்தால் தப்பு ஒன்றும் இல்லை.தி.மு.க. வை சேர்ந்த டி.ஆர். பாலுவே இதனை ஒப்புக் கொண்டுள்ளார். பாரதம் என்ற பெயரை அனைவரும் விரும்புகிறார்கள். இதற்கு கூட எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறி னார்.
- தங்க கவசம் மதுரை அண்ணாநகரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி லாக்கரில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
- கடந்த சில ஆண்டுகளாக அ.தி.மு.க.வின் பொருளாளராக இருந்து வந்த ஓ.பன்னீர்செல்வம் தங்கக் கவசத்தின் காப்பாளராக இருந்தார்.
மதுரை:
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் சீனிவாசன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 30-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் மணிமண்டபத்தில் இருக்கும் திருஉருவ சிலைக்கு தங்க கவசத்தை அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.
குருபூஜையையொட்டி சில நாட்கள் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தங்க கவசம் பொருத்தப்பட்டு, பின்னர் அந்த கவசம் மதுரை அண்ணாநகரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி லாக்கரில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதற்காக அ.தி.மு.க. மற்றும் தேவர் நினைவிட பொறுப்பாளர்கள் சார்பில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு, கட்சியின் பொருளாளர் பொறுப்பில் அந்த தங்க கவசம் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அ.தி.மு.க.வின் பொருளாளராக இருந்து வந்த ஓ.பன்னீர்செல்வம் தங்கக் கவசத்தின் காப்பாளராக இருந்தார். தற்போது அவர் அ.தி.மு.க.வில் இருந்தும், பொருளாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அதனால் தங்க கவசத்திற்கு அவர் எந்த வகையிலும் உரிமை கோர முடியாது.
எனவே வருகிற 30-ந்தேதி முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையையொட்டி வங்கி லாக்கரில் உள்ள தங்க கவசத்தை தற்போதைய அ.தி.மு.க. பொருளாளர் சீனிவாசன் வசம் ஒப்படைக்க வங்கி நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ஏற்கனவே அ.தி.மு.க.வின் சொந்த பொறுப்பில் தங்க கவசம் உள்ளது. அதன்படி அக்கட்சியின் பொருளாளர் சீனிவாசனிடம் தற்போதும் தங்க கவசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.