search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுப்பணித்துறை"

    • பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 42 அடியை எட்டுகிறது
    • பெருஞ்சாணி அணை மேலும் 2 அடி உயர்ந்தது

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழு வதும் கடந்த 5 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வந்த நிலையில் தற்போது மழை சற்று குறைந்துள்ளது.

    மாவட்டம் முழுவதும் சாரல் மழை நீடித்து வருகிறது. நாகர்கோவிலில் இன்று காலையில் சாரல் மழை பெய்தது. கருங்கல், குளச்சல், இரணியல், கோழிப்போர்விளை, பூதப்பாண்டி, சுருளோடு, அடையாமடை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் சாரல் மழை நீடித்து வரு கிறது.

    திற்பரப்பு அருவி பகுதி யில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருவதையடுத்து அங்கு குளு குளு சீசன் நிலவுகிறது. அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டி வருவதால் இன்று 5-வது நாளாக திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி சார்பில் அதற்கான அறிவிப்பு பலகை அங்கு வைக்கப்பட்டுள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளிலும் மலையோரப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதையடுத்து அணை களின் நீர்மட்டம் கிடு கிடு வென உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று ஒரு அடியும், பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 2 அடியும் உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 41.45 அடியாக உள்ளது. அணைக்கு 1783 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 256 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணை நீர்மட்டம் இன்று மதியம் 42 அடியை எட்டு மென்று எதிர்பார்க்கப் படுகிறது.

    இதையடுத்து பொதுப்ப ணித்துறை அதிகாரி கள் அணையின் நீர்மட் டத்தை கண்காணித்து வரு கிறார்கள். அணை நீர்மட்டம் 42 அடியை எட்டியதும் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுப்பதற்கும் ஏற்பாடு கள் செய்யப்பட்டு உள் ளது. ஏற்கனவே சிற்றாறு-1, சிற்றாறு-2 அணை களின் நீர்மட்டம் 12 அடியை கடந்ததையடுத்து குழித்துறை ஆற்றின் கரை யோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    பெருஞ்சாணி அணை யின் நீர்மட்டம் 67.85 அடியாக உள்ளது. அணைக்கு 1869 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பொய்கை அணை நீர்மட்டம் 17 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 35.52 அடியாகவும் உள்ளது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப் படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. அணை யின் நீர்மட்டம் இன்று காலை 12.10 அடியாக உள்ளது. மாவட்டம் முழுவதும் சாரல் மழை நீடித்து வருவ தால் சூறைக்காற்றும் வீசி வருகிறது. சூறை காற்றிற்கு மரங்கள் ஆங்காங்கே முறிந்து விழுந்துள்ளது. நாகர்கோவில் பாறையடி பகுதியில் பழமை வாய்ந்த ராட்சத மரம் முறிந்து விழும் நிலையில் இருந்தது.

    இதை தீயணைப்பு துறையினர் வெட்டி அப்புறப்படுத்தி னார்கள். தோவாளை ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் வீடு ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இதில் யாரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினார்கள்.

    தச்சமலை, தோட்டமலை, மோதிர மலை பகுதிகளில் மழை நீடித்து வருகிறது. இதனால் கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வள்ளியாறு, குழித்துறையாறு, பரளி யாறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை-11.4, பெருஞ்சாணி-3.2, சிற்றார்-1-6.2 சிற்றார்-2-2, பூதப்பாண்டி-5.2, கன்னிமார்-8.8, நாகர் கோவில்-2.4, சுருளோடு- 1.4, தக்கலை-3.4, குளச்சல்-8.6, இரணி யல்-6.2, பாலமோர்- 6.2, மாம்பழத்துறையாறு- 2.2, திற்பரப்பு-7.6, கோழிப்போர் விளை- 5.2, அடையாமடை-2.6, முள்ளங்கினாவிளை- 4.2, ஆணைக் கிடங்கு-3.4, முக்கடல்-3.2.

    • நீர்மட்டம் 42 அடியை எட்டியது வீராணம் ஏரியில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது எப்போது? என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
    • வீராணம் ஏரி நீர்பிடிப்பு பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் நீர்மட்டம் 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் 44,856 ஏக்கர் நிலம் பாசனவசதி பெறுகிறது. அதோடு சென்னை மாநகரின் குடிநீருக்கு முக்கிய ஆதராமாக உள்ளது. இந்த ஏரிக்கு பருவகாலங்களில் பெய்யும் மழை மேட்டூர் அணை மூலம் தண்ணீர் வரத்து இருக்கும். இந்த ஆண்டு மேட்டூர் அணை முன்னதாக திறக்கப்பட்டது. எனவே காவிரி தண்ணீர் ஒரு மாதத்துக்கு பின் கடைமடை பகுதியான நாகூர்வரை சென்றது. வீராணம் ஏரிக்கு கொள்ளிடம் வழியாக கீழணைக்கு காவிரிநீர்வந்து சேரும். அங்கிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து இருக்கும்.

    இந்த ஆண்டு திறக்கப்பட்ட காவிரிநீர் கடந்த மாதம் வீராணம் ஏரிக்கு வந்து சேர்ந்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் படிபடியாக உயர்ந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 42 அடியாக உள்ளது. வடவாறு வழியாக 146 கனஅடிநீர் ஏரிக்கு வருகிறது. சென்னை மாநகர் குடிநீருக்காக 57 கனஅடி நீர் அனுப்பப்படுகிறது. தொடர்ந்து ஏரியின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் வீராணம் ஏரி எப்போது பாசனத்துக்கு திறக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

    இது குறித்து பொது பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், வீராணம் ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது குறித்த விவசாய பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். அப்போது தண்ணீர் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றனர். இதனிடையே வீராணம் ஏரி நீர்பிடிப்பு பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதுதவிர காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, சோழத்தரம் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது வீராணம் ஏரி விரைவில் திறக்கப்பட உள்ளதால் விவசாயிகள் தங்களது நிலங்களை உழும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ×