search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓணம் பண்டிகை"

    • நேற்று ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
    • ஓணம் நாளில் மட்டும் ரூ.124 கோடிக்கு மது விற்பனை

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் புத்தாண்டு மற்றும் ஓணம் பண்டிகையின் போது மது விற்பனை எப்போதும் அதிகளவில் இருக்கும்.

    இந்த ஆண்டு நேற்று ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. வயநாடு நிலச்சரிவு உயிர்ப்பலி காரணமாக அரசு சார்பில் ஓணம் கொண்டாட்டம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் கேரள மக்கள் ஓணம் பண்டிகைக்கு கடந்த சில நாட்களாக தயாராகி வந்தனர்.

    எனவே வழக்கம் போல் மது விற்பனையும் அதிகமாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு மாநிலத்தில் பார்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. ஆனால் உத்ராடம் வரையிலான 9 நாட்களில் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது மது விற்பனை குறைந்தே உள்ளது.

    கடந்த ஆண்டு இந்த கால கட்டத்தில் ரூ.715 கோடிக்கு மது விற்பனையானது. ஆனால் தற்போது ரூ.701 கோடிக்கு தான் விற்பனை நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டை விட ரூ.14 கோடி குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

    அதே நேரம் ஓணம் நாளில் மட்டும் ரூ.124 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.4 கோடி அதிகமாகும்.

    • ஓணம் பண்டிகையை கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள்.
    • கவர்னர் மாளிகையில் அத்தப்பூ கோலமிட்டு ஒணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.

    கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்புமிக்க திருவிழா ஓணம். சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மலையாளிகளாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள். ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.

    இதையடுத்து புதுச்சேரி கவர்னர் மாளிகையில் அத்தப்பூ கோலமிட்டு ஒணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கவர்னர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டார்.

    • அனைத்து நகர்ப்புற பகுதிகளிலும் பண்டிகை நிகழ்வுகள் களைகட்டின.
    • மலையாளிகள் அத்தப்பூக்கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.

    கோவை:

    கேரள மாநிலத்தின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதன் ஒருபகுதியாக கோவையில் கேரள மக்கள் அதிகம் வசிக்கும் கோவை, மேட்டுப்பாளையம், வால்பாறை, பொள்ளாச்சி மற்றும் நகர்ப்புற பகுதிகளிலும் பண்டிகை நிகழ்வுகள் களைகட்டின.

    ஓணம் பண்டிகை யையொட்டி கோவை சுந்தராபுரம், ஆவாரம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மலையாளிகள் அத்தப்பூக்கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடினர். பின்னர் அவர்கள் பாரம்பரிய உடை அணிந்து கோலத்தை சுற்றிலும் பாடல்கள் பாடியபடி நடனமாடி மகிழ்ந்தனர்.

    ஓணம் தினத்தின் முக்கிய நிகழ்வாக மலையாள மக்கள் இன்று வீடுகளில் காலையில் கனி கண்டு கடவுளை வணங்கி வழிபாடுகள் நடத்தினர்.

    பின்னர் அவர்கள் கோவில்களுக்கு சென்றும் ஒருவருக்கு ஒருவர் வழத்துக்களை பரிமாறியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    கோவை ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையையொட்டி அதிகாலை 5 மணியளவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் மற்றும் நிர்மால்ய பூஜை மற்றும் சீவேலி பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.

    மேலும் 2 ஆயிரம் கிலோ பூக்களால் பிரமாண்டமாக அத்தப்பூ கோலம் போடப்பட்டு இருந்தது. இதனால் கோவில் வளாகத்தில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

    மேலும் மாவட்ட அளவிலான கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளும் இந்த முறை ஓணம் பண்டிகை சிறப்பாக அனுசரிக்கப்பட்டது.

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர், பந்தலூர், சேரம்பாடி உள்ளிட்ட பகுதிகளிலும் ஓணம் பண்டிகை களைகட்டி காணப்பட்டது. அங்கு வசிக்கும் மலையாளிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள அய்யப்பன் கோவில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடுகளை நடத்தினர்.

    தொடர்ந்து அவர்கள் ஓணம் திருவிழாவின் முக்கியமான ஓணம் விருந்து படைக்கும் பணியில் குடும்பத்துடன் ஈடுபட்டனர். மலையாளிகள் படைத்து இருந்த ஓணம் விருந்து சைவ சாப்பாட்டில் ஓலன், காளன், எரிசேரி, உப்பேரி, அன்னாசி பழ பச்சடி, கிச்சடி, புளி இஞ்சி, சிப்ஸ், கூட்டுக்கறி, அவியல், சாம்பார், தக்காளி ரசம், சம்பாரம் உள்பட பல்வேறு உணவு வகைகள் இடம்பெற்றிருந்தன.

    பின்னர் மலையாளிகள் வீடுகளில் விருந்துணவை சுவாமிக்கு படைத்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து அவர்கள் உறவினர்களுடன் ஒன்றாக அமர்ந்து ஓணம் விருந்தை சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

    ஓணம் பண்டிகை யையொட்டி கோவை, நீலகிரி மாவட்டங்களில் உள்ள பூ மார்க்கெட்டுகளில் வியாபாரிகள் ஏராளமான பூக்களை வரவழைத்து இருந்தனர். மேலும் பூக்கள் மலிவான விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இந்தாண்டு வயநாடு நிலச்சரிவு சம்பவத்தால் கோவை, நீலகிரியில் ஓணம் பண்டிகை களையிழந்து காணப்பட்டது.

    அதிலும் குறிப்பாக கோவை பூ மார்க்கெட்டில் பூக்கள் வரத்து அதிகரித்து இருந்தபோதிலும் அவற்றின் விலை குறைத்து தான் விற்பனை செய்யப்பட்டது.

    இருப்பினும் கேரள மக்கள் பெருமளவில் வராததால் பூ மார்க்கெட்டுகள் கூட்ட மின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்த விவசாயி களும், பெருமளவில் விற்ப னையை எதிர்பார்த்து இருந்த வியாபாரிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    • அத்தப்பூக்கோலம், அறுசுவை சத்ய விருந்து, பல்வேறு கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் என மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மகிழும் நாளாகத் திருவோணம் அமைந்துள்ளது.
    • கேரள மக்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிப்பதாக இந்த ஓண நன்னாள் அமையும் என்று நம்புகிறேன்.

    கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்புமிக்க திருவிழா ஓணம். சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மலையாளிகளாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள். ஓணம் பண்டிகை நாளை (செப்.15) கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓணம் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

    கேரள மக்களின் பண்பாட்டுப் பெருவிழாவான ஓணம் திருநாள் உலகெங்கிலும் வாழும் மலையாளிகளால் எழுச்சியுடன் நாளை (15-9-2024) கொண்டாடப்படுகிறது. அத்தப்பூக்கோலம், அறுசுவை சத்ய விருந்து, பல்வேறு கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் என மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மகிழும் நாளாகத் திருவோணம் அமைந்துள்ளது.

    நல்லாட்சி புரிந்த மன்னனை நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாமல் சூழ்ச்சியாலும் வஞ்சகத்தாலும் வீழ்த்தினாலும், அவனை மக்கள் மனங்களில் இருந்து அகற்ற முடியாது என்பதை உணர்த்தும் கொண்டாட்டமாகவே ஓணத்தைக் காணவேண்டும்.

    திராவிட உடன்பிறப்புகளான கேரள மக்களுக்கு ஓர் இடர் என்றால் உடனடியாக உதவிக்கரம் நீட்டத் தமிழ்நாடு என்றுமே சகோதர உணர்வோடு முன்னிற்கும். அந்த வகையில்தான், அண்மையில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது தமிழ்நாடு அரசின் சார்பில்

    5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்ததோடு, மீட்பு, மருத்துவக் குழுக்களையும் அனுப்பி வைத்தோம். பெருமழை விளைவித்த பாதிப்புகளில் இருந்து மலையாளிகளுக்கே உரிய போராட்டக் குணத்துடன் மீண்டு வரும் கேரள மக்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிப்பதாக இந்த ஓண நன்னாள் அமையும் என்று நம்புகிறேன்.

    சமத்துவம், சகோதரத்துவத்தின் வெளிப்பாடாக ஓணத் திருநாளைக் கொண்டாடும் எனது அன்பிற்கினிய மலையாள உடன்பிறப்புகள் அனைவருக்கும் உங்கள் சகோதரன் ஸ்டாலினின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • ஓணம் பண்டிகையை கேரளாவின் அறுவடை திருநாள் என்று அழைக்கிறார்கள்.
    • அன்பு, அமைதி, சகோதரத்துவம் வளர்க்கப்பட வேண்டும்; அகந்தையும், ஆணவமும் அகற்றப்பட வேண்டும்.

    சென்னை:

    கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்புமிக்க திருவிழா ஓணம். சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மலையாளிகளாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள். ஓணம் பண்டிகை நாளை (செப்.15) கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஓணம் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில்,

    அன்பு, அமைதி, சகோதரத்துவம் வளர்க்கப்பட வேண்டும்; அகந்தையும், ஆணவமும் அகற்றப்பட வேண்டும் என்கிற உயரிய கருத்தினை அனைவரும் அறியும் வகையில், மலையாள மொழி பேசும் மக்கள் அனைவராலும் கொண்டாடப்படும் இந்தத் திருஓணத் திருநாளில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், அனைவருக்கும் எனது இதயங்கனிந்த "ஓணம்" திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • வருகிற 15-ந் தேதி திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
    • பக்தர்கள் அனைவருக்கும் ஓணம் விருந்து வழங்கப்படும்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். கேரளாவில் இந்த ஆண்டு வருகிற 15-ந் தேதி திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி நாளை (13-ந் தேதி) மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு, பிரம்மதத்தன் முன்னிலையில் மேல் சாந்தி மகேஸ் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். அன்று பூஜைகள் எதுவும் நடைபெறாது.

    மறுநாள் (14-ந் தேதி) அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெறும். 15-ந் தேதி திருவோண பூஜை நடைபெற உள்ளது. 15 மற்றும் 16-ந் தேதிகளில் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் ஓணம் விருந்து வழங்கப்படும்.

    16-ந் தேதி மாத வழிபாடு தொடங்கும். 21-ந்தேதி வரை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என்றும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

    • முதல் பரிசு ரூ.25 கோடி பாலக்காடு வாளையாரில் விற்பனையான சீட்டுக்கு கிடைத்தது.
    • தமிழகத்தை சேர்ந்தவர் எடுத்துச் சென்ற லாட்டரிக்கு முதல் பரிசு விழுந்த விவரம் மட்டும் தெரிந்திருந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் வாரத்தில் 7 நாட்களும் லாட்டரி குலுக்கல் நடைபெற்று வருகிறது. இவை தவிர பண்டிகை நாட்களையொட்டி சிறப்பு பம்பர் லாட்டரி குலுக்கலும் நடைபெறும். அந்த வகையில் நடப்பாண்டு ஓணம் பண்டிகையையொட்டி ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கலுக்காக 85 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டிருந்தது. இதில் 75 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியிருந்தது. இது கடந்த ஆண்டு ஓணம் பம்பர் விற்பனையை விட 9 லட்சம் அதிகமாகும்.

    ஓணம் பம்பர் முதல் பரிசு ரூ.25 கோடியாகும். 2-ம் பரிசு ரூ.1 கோடி வீதம் 20 பேருக்கும், 3-ம் பரிசு ரூ.50 லட்சம் வீதம் 20 பேருக்கும், இவை தவிர மொத்தம் 5 லட்சத்து 35 ஆயிரம் பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் மொத்த பரிசு தொகை ரூ.125 கோடியே 54 லட்சம் ஆகும். இதில் ஒரு டிக்கெட்டின் விலை ரூ.500 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் லாட்டரி பிரியர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த ஓணம் பம்பர் குலுக்கல் முடிவுகள் நேற்று முன்தினம் பிற்பகல் வெளியிடப்பட்டது.

    இதில் முதல் பரிசு ரூ.25 கோடி பாலக்காடு வாளையாரில் விற்பனையான சீட்டுக்கு கிடைத்தது. அந்த லாட்டரி எண் TE 230662 ஆகும். ஆனால் முதல் பரிசு ரூ.25 கோடி பெற்ற அதிர்ஷ்டசாலி யார்? என்பது தெரியாமல் இருந்தது.

    தமிழகத்தை சேர்ந்தவர் எடுத்துச் சென்ற லாட்டரிக்கு முதல் பரிசு விழுந்த விவரம் மட்டும் தெரிந்திருந்தது. இந்தநிலையில் நேற்று திருப்பூரை சேர்ந்த நடராஜன் உள்பட 4 பேர் ஒன்றாக சேர்ந்து எடுத்த டிக்கெட்டுக்கு ரூ.25 கோடி பரிசு விழுந்த தகவல் தெரிய வந்தது.

    அதாவது அந்த டிக்கெட்டுடன் 4 பேரும் நேற்று திருவனந்தபுரம் லாட்டரி இயக்குனரக அலுவலகத்திற்கு நேரில் வந்து பரிசு வினியோக பிரிவில் ஒப்படைத்தனர். பாலக்காட்டில் சிகிச்சை பெற்று வந்த நபரை சந்தித்து நலம் விசாரித்து விட்டு திருப்பூர் திரும்பும் வழியில் வாளையாரில் எடுத்த 3 டிக்கெட்டில் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.25 கோடி முதல் பரிசு கிடைத்ததாக அவர்கள் லாட்டரி அலுவலகத்தில் தெரிவித்துள்ளனர்.

    • ஓணம் பண்டிகையை முன்னிட்டு பம்பர் லாட்டரி குலுக்கல் நடத்தப்பட்டது.
    • நண்பர்கள் இருவரும் தகராறு நடக்கும்போது குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் அரசு சார்பில் லாட்டரி நடத்தப்பட்டு வருகிறது. ஓணம், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளின்போது பம்பர் லாட்டரி குலுக்கல் நடத்தப்படுவது வழக்கம். அதில் பரிசுகள் கோடிகள் மற்றும் லட்சங்களில் கொடுக்கப்படும் என்பதால் லட்சக்கணக்கானோர் லாட்டரி சீட்டுகளை வாங்குவார்கள்.

    தற்போது ஓணம் பண்டிகையை முன்னிட்டு பம்பர் லாட்டரி குலுக்கல் நடத்தப்பட்டது. விற்பனைக்காக மொத்தம் 85 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டன. அவற்றில் 74.51 லட்சம் லாட்டரி சீட்டுகள் விற்பனையாகின. அவற்றுக்கான குலுக்கல் நேற்று நடந்தது.

    தங்களுக்கு பரிசு விழுமா? என்ற ஆவலில் லாட்டரி சீட்டு வாங்கிய அனைவரும் நேற்று காலை முதலே எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் தேவலக்கரை பகுதியை சேர்ந்த தேவதாஸ்(வயது37) என்பவர் பம்பர் லாட்டரி டிக்கெட்டை வாங்கியிருந்தார்.

    அதனை தனது நண்பரான அஜித் (39)என்பவரிடம் கொடுத்து வைத்திருந்தார். நேற்று குலுக்கல் தினம் என்பதால், தனது லாட்டரி சீட்டை தேவதாஸ கேட்டிருக்கிறார். ஆனால் அஜித் தர மறுத்திருக்கிறார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    அப்போது அஜித், தன்னிடம் இருந்த கத்தியால் தேவதாசை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த தேவதாஸ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே தேவதாஸ் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி அஜித்தை கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட தேவதாஸ் மற்றும் அவரை கொன்ற அஜித் ஆகிய இருவரும் விறகு வெட்டும் தொழிலாளியாக இருந்துள்ளனர்.

    நண்பர்களான இவர்கள் இருவரும் தகராறு நடக்கும்போது குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடிபோதையில் ஆத்திரத்தில் தேவதாசை கத்தியால் குத்தி அஜித் கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

    • ஓணம் பண்டிகை கொண்டாட்டப்பட்டது.
    • மேற்பார்வையாளர் சபியுல்லா ஆகியோர் செய்திருந்தனர்.

    பனைக்குளம்

    ராமநாதபுரம் அருகே உள்ள செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் ஓணம் பண்டி கையை முன்னிட்டு கல்லூரியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    முன்னதாக கல்லூரி வளாகத்தில் உள்ள டாக்டர் இ.எம். அப்துல்லா கலை யரங்கத்தில் மத நல்லிணக்க ஒற்றுமைகளை வெளிப் படுத்தும் அளவில் கல்லூரி மாணவ, மாணவிகள் ஒன்றிணைந்து ஓணம் பண்டிகையை கொண்டாடி னர்.

    முன்னதாக கல்லூரியின் தாளாளர் செல்லதுரை அப்துல்லா மற்றும் ராமநாதபுரம் செய்யது அம்மாள் மெட்ரிக் மேல் தலைப்பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டு ஓணம் பண்டிகை வாழ்த்து தெரிவித்தனர்.தொடர்ந்து கல்லூரி முதல்வர் பாலகி ருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகள் குத்துவிளக்கு ஏற்றி, வண்ண பூக்களால் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்தனர். இதில் சிறந்த கோலங்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழ ங்கப்பட்டன. அதன் பின்னர் மாண விகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன. நிகழ்ச்சியை (ஐ.கி.யூ.ஏ.சி.) பிரிவின் தலைவர் அன்வர் ஷாகின் ஒருங்கி ணைத்தார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது, மேற்பார்வை யாளர் சபியுல்லா ஆகியோர் செய்திருந்தனர். 

    • சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    • கடற்கரைப் பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    கன்னியாகுமரி:

    ஓணப்பண்டிகை தொடர் விடுமுறை முடிய இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருப்பதால் இன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான கேரளா சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதற்கிடையில் கேரளாவில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களின் கூட்டமும் கன்னியாகுமரியில் அலைமோதுகிறது. கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.

    கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். இதற்காக கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் அதிகாலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கடலில் ஆனந்த குளியல் போட்டனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர். ஆனால் கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை. இதனால் அங்கு வெகு நேரமாக சுற்றுலா பயணிகள் காத்து இருந்தனர். பின்னர் காலை 10 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு பிறகு தான் படகு போக்குவரத்து தொடங்கியது. அதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை மட்டும் பார்வையிட்டு வந்தனர். இன்று காலை வழக்கத்தை விட அதிக அளவு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டு வந்தனர். ஆனால் திருவள்ளுவர் சிலையில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் அங்கு படகு போக்குவரத்து நடக்கவில்லை.

    இதனால் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை படகில் நேரில் சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் படடகில் பயணம் செய்யும் போதும் கடற்கரையில் இருந்த படியும் செல்போன் மூலம் திருவள்ளுவர் சிலையை படம் எடுத்து சென்றனர். மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, அரசு பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், விவேகானந்த படத்தில் உள்ள பாரத மாதாகோவில் மற்றும் ராமாயண தரிசன சித்திர கண்காட்சிகூடம், மீன் காட்சிசாலை, வட்டக் கோட்டை பீச், கோவளம் பீச், சொத்தவிளைபீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது. இந்த சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்கரைப் பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்புபணியில் ஈடுபட்டு வந்தனர்.

    • கேரள மாநிலத்தில் அரசு மதுபான கழகம் சார்பில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • ஓணம் திருநாளுக்கு முந்தைய நாளான 28-ந்தேதி ஒரு நாளில் மட்டும் மாநிலம் முழுவதும் ரூ.116 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி இருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. ஜாதி, மத, இன பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடப்படும் இந்த பண்டிகையால் மாநிலம் முழுவதும் விழாக்கோலம் பூண்டு காணப்படும்.

    இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கடந்த 20-ந்தேதி தொடங்கி கொண்டாடப்பட்டு வந்தது. நேற்று முன்தினம்(29-ந்தேதி) ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் மதுபானங்கள் விற்பனை அதிகளவில் நடந்துள்ளது.

    கேரள மாநிலத்தில் அரசு மதுபான கழகம் சார்பில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 320-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை கடைகள், 500-க்கும் மேற்பட்ட ஓட்டல் பார்களில் உள்நாட்டு ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்கள் மற்றும் வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த கடைகள் மற்றும் பார்களில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு மதுபானங்கள் அதிகளவில் விற்பனையாகி இருக்கிறது. ஓணம் பண்டிகை தொடங்கிய கடந்த 20-ந்தேதி முதல் 28-ந்தேதி வரையிலான 8 நாட்களில் மாநிலம் முழுவதும் ரூ.665கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.

    கடந்த ஆண்டு(2022) இதேபோல் 8நாளில் ரூ.624 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ.41 கோடி அதிகமாக மதுபானங்கள் விற்பனையாகி இருக்கிறது.

    ஓணம் திருநாளுக்கு முந்தைய நாளான 28-ந்தேதி ஒரு நாளில் மட்டும் மாநிலம் முழுவதும் ரூ.116 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி இருக்கிறது. அன்றைய தினம் திருச்சூர் மாவட்டம் இரிஞ்ஞாலகுடா பகுதியில் உள்ள ஒரு கடையில் ரூ.1.06 கோடிக்கும், கொல்லம் ஆசிராமம் பகுதியில் உள்ள ஒரு கடையில் ரூ.1.01 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.

    அதேபோன்று சங்கனாச்சேரியில் உள்ள ஒரு கடையில் ரூ.95.78கோடிக்கும், சேர்தலாவில் உள்ள ஒரு கடையில் ரூ.93.76 கோடிக்கும், பையனூரில் உள்ள ஒரு கடையில் ரூ.91.67 கோடிக்கும் , சாலக்குடியில் உள்ள ஒரு கடையில் ரூ.88.59 லட்சத்துக்கும் மதுபானங்கள் விற்பனையாகி இருக்கிறது.

    • அஷ்டாபிஷேகம் நடைபெற்றது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் சபரி நகரில் உள்ள நவசபரி ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவில் குருசாமி ஜெயச்சந்திரன் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    காலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம் நடைபெற்றது. மேலும் அத்தப்பு கோலம் வரையப்பட்டு ஓணம் பூஜைகள் நடைபெற்றது.

    இரவு 7 மணிக்கு மகா தீபாராதனையும், சபரி சாஸ்தா சமிதி குழுவினரின் பஜனையும் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு ஹரிவராசனம் பாடல் பாடி கோவில் நடை சாத்தப்பட்டது. இதில் ராணிப்பேட்டை சிப்காட் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×