என் மலர்
நீங்கள் தேடியது "ஒற்றை யானை"
- பொதுமக்கள் யாரும் யானையை தொந்தரவு செய்யக்கூடாது.
- வனப்பகுதிக்குள் யானையை விரட்டும் வரை பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ளது உக்கிரம் கிராமம். இன்று அதிகாலை இந்த ஊருக்குள் ஒற்றை யானை ஒன்று திடீரென நுழைந்தது. இதையடுத்து தெரு நாய்கள் யானையை பார்த்து குரைத்தது. இதையடுத்து சத்தம் கேட்டு பொதுமக்கள் வெளியே வந்து பார்த்தனர்.
அப்போது யானை வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டிற்குள் சென்று பதுங்கி கொண்டனர். பின்னர் அந்தயானை அங்கிருந்து வெளியேறி வயல், கரும்பு தோட்டங்கள் வழியாக நம்பியூர் அடுத்த காராப்பாடி பகுதிக்கு வந்தது.
இதைப்பார்த்த விவசாயிகள், மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் சத்தம் போட்டு யானையை விரட்டினர். யானை சாலை ஓரமாக வயல் வெளியில் ஓடியது. சிலர் மோட்டார் சைக்கிளில் யானையை விரட்டி சென்றனர்.
பின்னர் அந்த யானை கோபி செட்டிபாளையம் அருகே உள்ள ஒடையாகவுண்டன்பாளையம் வெள்ளிமலை கரடு என்ற பகுதியில் உள்ள மனோகரன் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் சுற்றியது. இதைப்பார்த்த வெங்கிடு என்பவர் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார்.
இதையடுத்து அந்த ஒற்யை யானை கரும்பு தோட்டத்துக்குள் சென்று மறைந்து விட்டது. பின்னர் அவர்கள் இது குறித்து டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் யானையையும் விரட்டினர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானை இருக்கும் இடத்தை தேடினர். அப்போது யானை கோபி செட்டிபாளையம் காசிபாளையம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே நிற்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர்.
மேலும் அவர்கள் யானையை வனப்பகுதிக்கு விரட்டியடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
பவானிசாகர் அடுத்து விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து இந்த ஒற்றை யானை வழிதவறி வந்து இருக்கிறது. வழி தெரியாததால் இது உக்கரம், காராப்பாடி வழியாக கோபி செட்டிபாளையம் பகுதிக்கு வந்து இருக்கிறது.
எனவே பொதுமக்கள் யாரும் யானையை தொந்தரவு செய்யக்கூடாது. வனப்பகுதிக்குள் யானையை விரட்டும் வரை பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஊருக்குள் யானை புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் ஒற்றையானை வழி தவறி ஊருக்குள் நுழைந்தது.
- சத்தியமங்கலம் மைசூர் சாலையில் போக்குவரத்து குறைந்ததும் வனத்துறையினர் யானையை விரட்டினர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் ஒற்றையானை வழி தவறி ஊருக்குள் நுழைந்தது.
சத்தியமங்கலம் அடுத்த உக்கரம் கிராமத்தின் வழியாக வந்த யானை வயல்வெளிகளை கடந்து நம்பியூர் காராப்பட்டு, கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒடைய க்குளம், காசிப்பாளையம் பகுதியில் சுற்றியது.
இதுப்பற்றி தெரிய வந்ததும் டி.என்.பாளையம் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் யானையை விரட்டும் பணியிலும் ஈடுபட்டனர். இதற்காக வனத்துறை சார்பில் 50 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டனர்.
பகல் நேரம் என்பதால் யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபடவில்லை. பின்னர் மாலை நேரம் ஆனதும் டிரோன் கேமரா மூலம் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து அது வந்த திசையிலேயே மீண்டும் விரட்ட ஆரம்பித்தனர்.
அப்போது யானை கீழ்பவானி வாய்க்கால் மற்றும் பவானி ஆற்றைக் கடந்து சென்றது. யானையை வனத்துறையினர் நேற்று மதியம் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக பண்ணாரி வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுத்தனர்.
ஆனால் யானை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மாறி மாறி சென்று வனத்துறையி னருக்கு போக்கு காட்டியது. இந்நிலையில் நேற்று மாலை 6 மணி முதல் யானையை விரட்டும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
சத்தியமங்கலம் மைசூர் சாலையில் போக்குவரத்து குறைந்ததும் வனத்துறையினர் யானையை விரட்டினர். ஒரு வழியாக இரவு 9 மணி அளவில் பண்ணாரி வனப்பகுதிக்குள் யானை சென்றது.
தொடர்ந்து அந்த யானை மீண்டும் ஊருக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
- பாட்டவயல் பகுதியில் சாலையின் நடுவே காட்டு யானை ஒன்று நின்றது.
- வாகன ஓட்டிகள் நிதானமாக செல்லவேண்டும் என காவல் துறை எச்சரித்துள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், கூடலூரில் இருந்து கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், சுல்தான் பத்தேரி செல்லும் சாலையில் இரவு நேரத்தில் பாட்டவயல் பகுதியில் சாலையின் நடுவே காட்டு யானை ஒன்று வாகனங்களை வழிமறித்து நின்றது. நீண்ட நேரம் யானை அங்கிருந்து நகரவில்லை. இதனால் ஆம்புலன்ஸ் உள்பட அனைத்து வாகனங்களும் சாலையின் இருபுறமும் அணிவகுத்து காத்து கிடந்தன. யானை நீண்ட நேரத்துக்கு பிறகு யானை அருகே உள்ள வனப்பகுதிக்குள் சென்றது. இதைத் தொடா்ந்து வாகனங்கள் அங்கிருந்து சென்றன. காட்டு யானைகள் சாலையில் நிற்பதால் வாகன ஓட்டிகள் நிதானமாக செல்லவேண்டும் என காவல் துறை எச்சரித்துள்ளது.
- நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
- வனப்பகுதிக்குள் விரட்ட ஏற்பாடு
குடியாத்தம்:
குடியாத்தம் வனப்பகுதி, ஆந்திர மாநில எல்லைப் பகுதியை ஒட்டியபடி உள்ளது.ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் கவுண்டன்யா யானைகள் சரணாலயம் உள்ளது. அந்த சரணாலயத்தில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளது.
ஒற்றை யானை
அந்த யானைகள் பல குழுக்களாகப் பிரிந்து தமிழக வனப்பகுதியை ஒட்டியபடி உள்ள கிராமப்புறங்களில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தன.
வனத்துறையினர் கடும் சிரமத்திற்கு இடையே கிராம மக்கள் உதவியுடன் பட்டாசுகள் வெடித்தும் மேளங்கள் அடித்தும் ஆந்திர மாநில வனப்பகுதிக்கு பல கிலோ மீட்டர் தொலைவுக்கு விரட்டிவிட்டனர்.
இந்த நிலையில் ஆந்திர மாநில வனப்பகுதியில் இருந்த சில நாட்களுக்கு முன்பு 20 யானைகள் கொண்ட கூட்டத்தை ஆந்திர மாநில வனப்பகுதியிலிருந்து ஆந்திர வன ஊழியர்கள் தமிழக வனப் பகுதியை நோக்கி சில நாட்களுக்கு முன் விரட்டியுள்ளனர்.
யானை கூட்டம் கடந்த 15 நாட்களாக சைனகுண்டா, மோர்தானா, தனகொண்டபல்லி குடிமிப்பட்டி, பரதராமி அடுத்த டி.பி.பாளையம், வி.டி.பாளையம் பகுதியில் விளை நிலங்களுக்கு புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் கடந்த சில வருடங்களாக மோர்தானா காட்டுப்பகுதியில் ஒற்றை யானை ஒன்று சுற்றி வருகிறது இந்த யானை கடந்த சில நாட்களாக சைனகுண்டாவிலிருந்து மோர்தானா செல்லும் வனப்பகுதியில் அமைந்துள்ள சாலையில் மாலை நேரங்களில் நின்று கொண்டு அவ்வழியாக செல்பவர்களை விரட்டி வருகிறது.நேற்று முன்தினம் மாலையும் மோர்தானா செல்லும் சாலையில் மூங்கில் புதார் என்ற பகுதியில் சாலையில் நின்று கொண்டு அந்த வழியாக பள்ளி மற்றும் வேலை முடித்துவிட்டு சொந்த மோர்தானா கிராமத்திற்கு மோட்டார் சைக்கிள் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் சென்ற கிராம மக்களை விரட்டி உள்ளது. யானை பொதுமக்களை விரட்டும் தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து சென்று பல மணி நேரம் போராடி அந்த ஒற்றை யானையை அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விரட்டி விட்டனர்.
நிலையில் நேற்று மோர்தானா சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைக்க வருகை தந்த வேலூர் எம்.பி. கதிர்ஆனந்த், குடியாத்தம் எம்.எல்.ஏ. அமலுவிஜயன், ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் ஆகியோரிடம் அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் யானைகளால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து தெரிவித்தனர். இதனையடுத்து கதிர்ஆனந்த் எம்பி வனச்சரக அலுவலர் வினோபாவிடம் ஒற்றை யானை மற்றும் யானை கூட்டத்தை அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விரட்டி அடிக்க நடவடிக்கை எடுக்குமாறும், தொடர்ந்து அச்சுறுத்தும் யானைகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
- மாரண்டஅள்ளி பகுதியில் ஐந்து யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து மாந்தோப்பில் தஞ்சம் அடைந்தன.
- இன்று காலை அந்த ஒற்றை யானை தருமபுரி சவுளூர் அருகே உள்ள தனியார் பள்ளி பின்புறம் கரும்பு தோட்டத்தில் புகுந்து நாசம் செய்தது.
தருமபுரி,
கடந்த 5 மாதங்களாக பாப்பாரப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் யானைகள் பயிர்களை சேதப்படுத்தி மனிதர்களுக்கு அச்சுறு த்தலை ஏற்படுத்தி வருகின்றன.
கடந்த இரண்டு நாட்களாக மாரண்டஅள்ளி பகுதியில் ஐந்து யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து மாந்தோப்பில் தஞ்சம் அடைந்தன.
இந்நிலையில் யானைகள் நேற்று அருகே உள்ள ஏரிகளில் ஆனந்த குளியல் போட்டு வந்தது.
இதையடுத்து இன்று காலை அந்த ஒற்றை யானை தருமபுரி சவுளூர் அருகே உள்ள தனியார் பள்ளி பின்புறம் கரும்பு தோட்டத்தில் புகுந்து நாசம் செய்தது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், யானையை விரட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்ற னர்.
- யானை நடமாட்டத்தால் பஸ் நிறுத்தத்திற்கு வர பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.
- அணைகளில் தண்ணீர் வற்றி விட்டதால் யானைகள் கூட்டம் கூட்டமாக அமராவதி அணைக்கு படையெடுத்து வருகின்றன.
உடுமலை:
உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் வழியில் ஒன்பதாறு செக் போஸ்ட் முதல் சின்னாறு வரை இருபுறமும் உடுமலை அமராவதி வனச்சரகபகுதிகள் உள்ளன.இங்கு ஏராளமான யானைகள், மான்கள், காட்டெருமைகள், சிறுத்தைகள், காட்டுபன்றிகள்உள்ளன. கோடை காலங்களில் காட்டுயானைகள் மூணாறு சாலையை கடந்து அமராவதி அணைக்கு தண்ணீர் குடிக்க செல்வது வழக்கம். பனிக்காலம் முடிந்து கோடை ஆரம்பித்துள்ளது.
இதனால் வனப்பகுதியில் உள்ள அணைகளில் தண்ணீர் வற்றி விட்டதால் யானைகள் கூட்டம் கூட்டமாக அமராவதி அணைக்கு படையெடுத்து வருகின்றன.இந்நிலையில் தனது கூட்டத்திலிருந்து வழி தவறிய ஒற்றை யானை அமராவதி நகர் முருகன் கோவில்பகுதியில் சுற்றி திரிகிறது. அதன் அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. யானை நடமாட்டத்தால் பஸ் நிறுத்தத்திற்கு வர பொதுமக்கள் அஞ்சுகின்றனர். மீண்டும் மீண்டும் அந்த யானை பஸ் நிறுத்தம் பகுதியில் சுற்றி வருகிறது. இதனால் அப்பகுதியில் ரோந்து செல்லும் போலீசாரும் தயங்குகின்றனர். கிராம மக்களும் அச்சத்தில் உள்ளனர். யானையை பாதுகாப்பாக வனத்துக்குள் விரட்டி விட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானைகளை சானமாவு வனப்பகுதிக்குள் விரட்டினர்.
- யானை சானமாவு வனப்பகுதியையொட்டி விவசாய விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் 3 காட்டு யானைகள் சுற்றித்திரிந்தன. இந்த யானைகள் அப்பகுதியில் உள்ள விவசாய விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளது.
இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானைகளை சானமாவு வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இதில் ஒரு யானை மட்டும் காட்டுக்குள் செல்லாமல் மீண்டும் வெளியே வந்தது. அந்த யானை சானமாவு வனப்பகுதியையொட்டி விவசாய விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது.
இதனால் வனத்துறையினர் இன்று காலை அந்த ஒற்றை காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- குப்பேபாளையம் ஆதிநாராயணன் கோவில் அருகே உள்ள கணுவாய் சவுந்தர்ராஜன் என்பவரது தோட்டத்தில் யானை ஒன்று புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.
- ஒற்றை யானை குப்போபாளையம் பகுதியில் சுற்றி வருவதால் அப்பகுதி விவசாயிகள், ஊர் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
வடவள்ளி:
கோவை தொண்டாமுத்தூர் அடுத்த குப்பேபாளையம், தேவராயபுரம், புள்ளாக்கவுண்டன்புதூர், வெள்ளருக்கம்பாளையம், விராளியூர், நரசீபுரம் உள்ளிட்ட பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது.
பெரும்பாலான விளைநிலங்கள் மலையடி வாரப்பகுதிக்கு அருகில் உள்ளது. இதனால் மலைப்பகுதியில் இருந்து யானைகள் அடிக்கடி விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்தநிலையில் குப்பேபாளையம் ஆதிநாராயணன் கோவில் அருகே உள்ள கணுவாய் சவுந்தர்ராஜன் என்பவரது தோட்டத்தில் யானை ஒன்று புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இரவு நேரத்தில் தோட்டத்துக்கு வரும் யானை அங்கு பயிரிடப்பட்டு உள்ள தென்னங்கன்றுகளையும், மரங்களையும் பிடுங்கி எறிந்து நாசம் செய்தது. மேலும் 200 வாழை மரங்களையும் மிதித்து துவம்சம் செய்தது.
தோட்டத்தை சுற்றியும் சோலார் மின் இணைப்பு செய்து பாதுகாப்பு செய்து உள்ளனர். அதையும் மீறி யானை தோட்டத்தில் தொடர்ந்து புகுந்து சேதப்படுத்தி வருகிறது.
இதே யானை இளங்கோ, ராமச்சந்திரன் உள்ளிட்ட விவசாயிகளின் தோட்டங்களிலும் புகுந்து தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்துள்ளது. தொடர்ந்து இந்த ஒற்றை யானை குப்போபாளையம் பகுதியில் சுற்றி வருவதால் அப்பகுதி விவசாயிகள், ஊர் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
யானை வருவது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் தகவல் தெரிவித்து, சம்பவ இடத்திற்கு வந்து யானையை வனத்துறையினர் விரட்டினாலும், அவர்களுக்கு போக்குகாட்டி தொடர்ந்து அதே பகுதியில் முகாமிட்டு உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் ஊர் பொதுமக்கள் கூறு கையில் கும்கி யானை உதவியுடன் அட்டகாசம் செய்து வரும் ஒற்றை காட்டு யானையை பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் மட்டுமே இப்பகுதி விவசாயிகள், ஊர் மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள் என்று வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பட்டாசு வெடித்தும் தாரை தப்பட்டை அடித்தும் ஒற்றையானையை விரட்டினர்.
- ஆக்ரோஷமாக ஓடிய காளை ஒன்று, வேட்டை தடுப்பு காவலர் சுனில் (25) என்பவரை முட்டி தள்ளியது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட் டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஜவளகிரி வனப்பகுதி, சாவரப்பத்தம் பகுதியில், 10-க்கும் மேற்பட்ட யானைகள் சுற்றித் திரிந்தன. அதனை வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் கண்காணித்து, பட்டாசு வெடித்து வனப்பகுதிக்கு விரட்டும் பணிகளில் ஈடுபட்டனர்.
அப்போது, காட்டு யானைகள் கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றை யானை, அருகே உள்ள கிராமத்திற்குள் புகுந்து. அங்கிருந்த பட்டிக்குள் புகுந்து மாடுகளை ஆக்ரோஷமாக தாக்கியது. இதில் 3 மாடுகளுக்கு கால் முறிந்து பலத்த காயமடைந்தன.
இது குறித்த தகவலின் பேரில், வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அப்பகுதிக்கு சென்று பட்டாசு வெடித்தும் தாரை தப்பட்டை அடித்தும் ஒற்றையானையை விரட்டினர்.
அப்போது, பட்டிக்குள் இருந்த காளைகள், பட்டாசு சத்தம் கேட்டு மிரண்டு ஓட்டம் பிடித்தன. இதில், ஆக்ரோஷமாக ஓடிய காளை ஒன்று, வேட்டை தடுப்பு காவலர் சுனில் (25) என்பவரை முட்டி தள்ளியது.
இதில், அவருக்கு வலது மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்ட வனத்துறையினர், தளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச் சைக்காக சேர்த்தனர். இது குறித்து அறிந்த ஜவளகிரி வனச்சரகர் சுகுமார் மற்றும் தளி இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று, அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
- அந்தியூர் அடுத்த பர்கூர் சாலையில் ஒற்றை யானை வனப்பகுதியை விட்டு வெளியேறி ரோட்டுக்கு வந்தது.
- யானை தொடர்ந்து ரோட்டிலேயே நீண்ட நேரமாக நின்று கொண்டு இருந்தது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதியில் மான், கரடி, சிறுத்தை, யானைகள், செந்நாய் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளது. மேலும் வனப்பகுதி சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
கடந்த சில நாட்களாக கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பர்கூர் வனப்பகுதிகளுக்குள் குட்டைகள் வறண்டு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் வன விலங்குகள் தண்ணீரை தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வருவதும், குடியிருப்பு பகுதிக்குள் செல்வதும் அடிக்கடி நடந்து வருகிறது
இந்த நிலையில் அந்தியூர் அடுத்த பர்கூர் சாலையில் ஒற்றை யானை வனப்பகுதியை விட்டு வெளியேறி ரோட்டுக்கு வந்தது. அந்த யானை தொடர்ந்து ரோட்டிலேயே நீண்ட நேரமாக நின்று கொண்டு இருந்தது.
இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மற்ற வாகன ஓட்டிகளும் யானை ரோட்டில் நிற்பதை கண்டு மிகுந்த அச்சத்தோடு செல்ல முடியாமல் அங்கேயே நின்றனர். இதனால் வாகனங்கள் ரோட்டோரம் அணி வகுத்து நின்றன.
நீண்ட நேரம் அங்கேயே நின்ற யானை அதன் பிறகு அங்கு இருந்து வனப்பகுதிகளுக்குள் சென்றது. அதன் பின்பு வாகன ஓட்டிகள் புறப்பட்டு சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- ஒற்றை யானை ஒன்று சாலையில் சுற்றி திரிந்தது.
- வாகன ஓட்டிகள் அச்சத்தோடு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலை பாதையில் மைசூருக்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது.
இன்று காலை 9 மணி அளவில் வரட்டுபள்ளம் அணை அருகே ஒற்றை யானை ஒன்று சாலையில் அங்கும் இங்குமாய் சுற்றி திரிந்தது.
இதனால் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட நேரம் நின்று செல்லும் நிலை ஏற்பட்டது.தற்போது கோடை காலம் தொடங்கி இருப்பதனால் வனப்பகுதிகளுக்குள் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சத்தோடு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த ஒற்றை யானை கடந்த 2 நாட்களுக்கு முன்பு வட்டக்காடு பகுதிகளில் இரவு நேரத்தில் ஊருக்குள் உலா வந்து பொதுமக்களை வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையை உருவாக்கி வந்தது.
எனவே இந்த ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் செல்ல வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட்டக்காடு பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வனப்பகுதியில் இருந்து உணவு தேடி ஒற்றை காட்டு யானை வெளியே வந்தது.
- இந்த யானையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வன சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை, கரடி, சிறுத்தை, மான், புலி, காட்டு பன்றிகள் உள்பட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.
அடர்ந்த வனப்பகுதியான இந்த பகுதியில் திண்டுக்கல்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக தினமும், கார், பஸ், வேன், இரு சக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நிலையில் வனப்பகுதிகளில் இருந்து யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி வெளியேறி வருகிறது. அப்படி வரும் யானைகள் ரோட்டில் உலா வருவதும்,
அந்த வழியாக லாரிகளில் கொண்டு செல்லும் கரும்புகளை ருசித்து செல்வதும் அடிக்கடி நடந்து வருகிறது. மேலும் அந்த வழியாக வரும் வாகனங்களை யானைகள் வழி மறிக்கும் சம்பவங்களும் நடக்கிறது.
இந்நிலையில் இரவு சத்தியமங்கத்தில் இருந்து கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து உணவு தேடி ஒற்றை காட்டு யானை வெளியே வந்தது. இந்த யானையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சத்தியமங்கலத்தில் இருந்து கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலை அதிக வாகனங்கள் செல்லும் சாலையாகும். இந்த ரோட்டில் ஒற்றை யானை வந்ததால் இதை கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து வாகனங்களை ரோட்டோரம் நிறுத்தினர்.
இது குறித்து வாகன ஓட்டிகள் உடனடியாக விளாமுண்டி வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து வனச்சரகர் செங்கோட்டையன் தலைமையில் வனக்குழு சம்பவ இடத்திற்கு வந்து பட்டாசு வெடித்தும் மற்றும் அவர்கள் வந்த வாகனங்கள் மூலம் அதிக ஒலி எழுப்பியும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.