என் மலர்
நீங்கள் தேடியது "தார்சாலை"
- எங்கள் பகுதி பூஸ்தி ரோட்டில், தார்சாலை அமைக்க அரசு அதிகாரிகள் நட்ட கல்லை, ஆக்கிரமிப்பாளர்கள் பிடுங்கிவிட்டனர்.
- அதிகாரிகள் தலையிட்டு பிரச்னைக்குரிய இடத்தில் தார்சாலை அமைத்து கொடுத்தால் ஓட்டு போடுவோம்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அடுத்த கம்மம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது பழையவூர் கிராமம். இப்பகுதியில், 150 குடும்பங்களை சேர்ந்த, 700க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள், ஒண்டியூர் சாலை முதல், பழையவூர் வரை தார்சாலை அமைக்க கடந்த, 30 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த, 2015-ம் ஆண்டு ஒன்றரை கிலோ மீட்டர் அளவிற்கு தார் சாலை அமைக்க, 29 லட்சம் ரூபாய் ஒதுக்கி சாலைகள் போடப்பட்டது. அப்போது, 200 மீட்டர் தூரத்திற்கு சாலை போடவிடாமல் அப்பகுதியில் சிலர் ஆக்கிரமித்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக போலீசிலும், மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்பட பல இடங்களில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறிய அந்த பகுதி மக்கள் தேர்த லை புறக்கணிக்க போவதாக நேற்று தெரிவித்தனர். இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதி பூஸ்தி ரோட்டில், தார்சாலை அமைக்க அரசு அதிகாரிகள் நட்ட கல்லை, ஆக்கி ரமிப்பாளர்கள் பிடுங்கிவிட்டனர். எங்கள் ஊருக்கு செல்லும் ஒரே பாதையை ஆக்கிரமித்து உள்ளனர். பால்வண்டி, பஸ் வாகனங்களை ஊருக்குள் விடாமல் ஆக்கிரமிப்பாளர்கள் தடுக்கின்றனர்.
இது குறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் எங்கள் கிராமத்தில் உள்ள, 500 வாக்காளர்களும் வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். அதிகாரிகள் தலையிட்டு பிரச்னைக்குரிய இடத்தில் தார்சாலை அமைத்து கொடுத்தால் ஓட்டு போடு வோம். இல்லாவிட்டால் தேர்தலை கண்டிப்பாக புறக்கணிப்போம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- தொழிலாளர்கள் மழை தண்ணீரின் மேலேயே தார் சாலை அமைத்தனர்.
- வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.
திருவள்ளூர்:
திருத்தணி நகரத்தில் சென்னை செல்லும் சாலை, திருப்பதி செல்லும் சாலை, அரசு ஆஸ்பத்திரி செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ரூ.30 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தார் சாலை அமைக்கப்படும் போது திருத்தணி பகுதியில் பலத்த மழை கொட்டி சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆனாலும் கொட்டும் மழையின் போது பணியை நிறுத்தாத தொழிலாளர்கள் மழைதண்ணீரின் மேலேயே தார் சாலை அமைத்தனர்.
இதுபற்றி அங்கிருந்த பொதுமக்கள் சிலர் கேள்வி எழுப்பியபோது எதையும் கண்டு கொள்ளாமல் அந்த தொழிலாளர்கள் மழையை பொருட்படுத்தாமல் கடமையை செய்து கொண்டு இருந்தனர்.
இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது. மழைநீரில் தார்சாலை அமைத்தால் எப்படி தாங்கும் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இது தொடர்பாக ஒப்பந்ததாரரிடம் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
- சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
- புதிய சாலை அமைப்பது தொடர்பாக அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
தஞ்சாவூர்:
தஞ்சை அடுத்த ராமநாதபுரத்தை சேர்ந்தவர் பிரபாகரன் மகன் வசந்த் (வயது 17).
இவர் தஞ்சையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலை பள்ளிக்கு செல்வதற்காக தஞ்சை செல்லும் அரசு பஸ்சில் ஏறினார்.
பஸ்சில் 35-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
இந்த பஸ் வயலூர் பகுதியில் சென்றபோது பஸ்சில் இருந்த மாணவன் வசந்த் திடீரென தவறி கீழே விழுந்தான்.
இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
ஆனால் அந்த பஸ் நிற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் தஞ்சை- கும்பகோணம் சாலையில் ஒன்று திரண்டு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் அடிக்கடி விபத்து நடைபெறுகிறது.
உடனடியாக புதிய தார்சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர்.
மேலும் பஸ் நிற்காமல் சென்றதை கண்டித்தும் கூறினர்.
புதிய சாலை அமைப்பது தொடர்பாக அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர்.
இதையடுத்து பொதுமக்கள் மறியலை கை விட்டு கலைந்து சென்றனர்.
இந்த மறியலால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- கீழக்கரையில் தரமற்ற தார் சாலை போடுவது தொடர்பாக நகராட்சி ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
கீழக்கரை
கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட 19 மற்றும் 20 வார்டு வடக்கு தெரு பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்தது. இந்த பணியை மேற்கொள்ள ஒப்பந்ததாரர் எர்சத்கான் என்பவருக்கு உத்தரவு வழங்கப்பட்டது.
தார்சாலை போடப்பட்ட நிலையில் ஓரத்தில் கிராவல் பரப்பும் பணி, சாலையை சுத்தம் செய்யும் பணி, வெள்ளை கோடு போடும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக நகராட்சி ஆணையாளரிடம் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து ஒப்பந்ததாரருக்கு கீழக்கரை நகராட்சி ஆணையாளர் செல்வராஜ் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். நகராட்சி ஆணையாளர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பணியினை மேற்கொண்டு சரி செய்ய தொடர்ந்து தெரிவிக்கப்பட்டும் எவ்வித பணியும் நடக்கவில்லை.
பணியின் குறைபாடு தொடர்ந்து துரிதமின்மை, அலட்சியத்தினால் பொதுமக்களிடம் அதிருப்தி ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டு அரசுக்கும், நகராட்சிக்கும், அவப்பெயர் ஏற்பட காரணமாக இருப்பதாக நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநர், மதுரை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் ஆகியோருக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
- தற்போது ராஜாஜி சிறை வைத்த இடத்தில் சிறைச்சாலையும் உள்ள பகுதியில் உப்புத்துறை அலுவலகமும் இயங்கி வருகிறது.
- ஸ்தூபிக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்ததால் போக்குவரத்துக்கு லாயக்கற்று காணப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சி அகஸ்தியன்பள்ளி உப்புசத்தியா கிரக நினைவு ஸ்தூபிக்கு செல்லும் சாலை ரூ.2 கோடியே 27 லட்சத்தில் போடும் பணி தீவிரவமாக நடைபெற்று 30 நாளில் புதிய தார்சாலை போடபட்டுள்ளது.
வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளியில் உப்பு சத்தியாக்கிரக நினைவு ஸ்தூபிக்கு செல்லும் பாதை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது அதன்பிறகு முற்றிலுமாக சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளித்தது.
இதனை சரி செய்ய நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்திரவிட்டார். இதையொட்டி நகராட்சியின் சார்பில் 2 கோடியே 27 லட்சம் செலவில் தார் சாலை போடும் பணி தீவிரமாக நடைபெற்றது
நாடு சுதந்திரம் அடைவதற்காக ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து 1931ஆம் ஆண்டு ராஜாஜி சர்தார் வேதரத்தினம் ஆகியோர் தலைமையில் உப்பு சத்யாகிரக போராட்டம் நடைபெற்றது அதன் நினைவாக 1949ம் ஆண்டு அகஸ்தியன்பள்ளியில் சுமார் ஒரு ஏக்கர் இடத்தில் உப்பு சத்யாகிரக நினைவுத்தூபி கட்டப்பட்டது மேலும் உப்பு சத்தியாகிரகம் போராட்டம் நடத்தியதால் ராஜாஜியை அங்கு சிறை வைத்தனர்
தற்போது ராஜாஜி சிறை வைத்த இடத்தில் சிறைச்சாலையும் உள்ள பகுதியில் உப்புத்துறை அலுவலகமும் இயங்கி வருகிறது. இதனருகில் பூந்தோப்பு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
ஸ்தூபிக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்ததால் போக்குவரத்துக்கு லாயக்கற்று காணப்பட்டது. இதனால் உப்பு சத்தியாகிரகம் நினைவு ஸ்தூபி, ராஜாஜி சிறை வைத்த இடம் ஆகிய வரலாற்று நினைவு இடங்களை பார்க்க இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்வோரும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்
இதையடுத்து சாலை யை உடனடியாகசீர் செய்யவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர் இந்தநிலையில் நகராட்சி பொது நிதியிலிருந்து ரூபாய் 2 கோடியே 27லட்சம் செலவில் இரண்டரை கிலோமீட்டர் தூரம் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்றது பணி துவங்கபட்ட 30 நாளில் பணி முடிக்கபட்டு தற்போது பொதுமக்கள் பயன்பட்டிற்கு சாலை திறக்கபட்டுள்ளது
புதிதாக அமைக்கபட்ட சாலையினைநகராட்சி நிர்வாக மண்டலசெயற்பொறியாளர் பார்த்திபன்நக ரமன்ற தலைவர் புகழேந்தி துணைத்தலைவர் மங்களநாயகி நகராட்சி கமிஷனர் ஹேமலதா பொறியாளர் முகமதுஇ ப்ராகிம் ஆகியோர் சாலை பணியினை ஆய்வு செய்து பார்வையிட்டனர்.