என் மலர்
நீங்கள் தேடியது "ஆடி திருவிழா"
- சேலம் பழைய பஸ் நிலையம் அருகே பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
- இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு 22 நாட்கள் ஆடி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
சேலம்:
சேலம் பழைய பஸ் நிலையம் அருகே பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு 22 நாட்கள் ஆடி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இந்த திருவிழாவின்போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலில் பொங்கல் வைத்து, மாவிளக்கு ஏற்றி அம்மனை வழிபடுவார்கள். இது தவிர கோவிலில் உருளுதண்டம், அக்னி கரகம், அலகு குத்தி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். கோவி லில் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக திருப்பணிகள் மேற்கொ ள்ளப்பட்டு வருவதால் கோவிலில் பொங்கல் வைபவம் நிகழ்ச்சி மட்டுமே நடைபெற்று வருகிறது.
தற்போது கோவிலில் 85 சதவீத திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன. ஆவணி மாதம் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடப்பாண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு கோவிலில் வருகிற 25-ந் தேதி இரவு பூச்சட்டுதல் விழா நடக்கிறது. இதையொட்டி இன்று காலை கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் சபர்மதி, உதவி கமிஷனர் ராஜா, கோவில் செயல் அலுவலர் அமுதசுரபி, விழா குழு உறுப்பினர்கள் சாந்தமூர்த்தி, ஜெய், ரமேஷ் பாபு, சுரேஷ்குமார், வினிதா மற்றும் ஏராளமான பக்தர் களும் கலந்து கொண்டு முகூர்த்தக்கால் நட்டனர்.
தொடர்ந்து மாரியம்ம னுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம் மனை வழிபட்டனர். இதைத்தொடர்ந்து அடுத்த மாதம் 7-ந் தேதி சக்தி அழைப்பும், 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை பொங்கல் மாவிளக்கு பிரார்த்தனை நிகழ்ச்சி நடக்கிறது.
15-ந் தேதி காலை 10 மணிக்கு பால்குட விழா, மகா அபிஷேகம், உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது. இதேபோல சேலம் மாநகரத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் ஆடி திருவிழா முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
- தாய்மையின் வடிவமாக முண்டகக்கண்ணியம்மன் அருள் பாலிப்பதாக பெண்கள் நம்புகிறார்கள்.
- முண்டகக்கண்ணி அம்மன் அந்த பெண்ணின் மாங்கல்ய தோஷத்தை தீர்ப்பதாக ஐதீகம்.
1. முண்டகக்கண்ணியம்மன் அவதாரம் நடந்த போது முதலில் அதை மயிலை கிராம மக்கள் எல்லை காவல் தெய்வமாகவே பார்த்தனர்.
2. முண்டகக் கண்ணி அம்மன் முதலில் சென்னை கடலோரத்தில் தோன்றியதாகவும், அவள் சுயம்புவாக தோன்றிய இடத்தில் இருந்து கடல் உள்வாங்கி சென்று விட்டதாகவும் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
3. ஐப்பசி பவுர்ணமி தினத்தன்று எல்லா சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறும். அதே தினத்தன்று முண்டகக்கண்ணி அம்மனுக்கும் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு அன்னத்திலும் அம்மன் இருந்து அருள்புரிவதாக கருதப்படுகிறது.
4. இத்தலத்தின் தல மரம் ஆலமரமாகும். தற்போது கல் மரம் ஒன்றும் தல விருட்சம் போல வளர்ந்து வருகிறது.
5. முண்டகக்கண்ணி அம்மன் என்ற பெயரில் சென்னையில் வேறு எங்கும் ஆலயங்கள் இல்லை. முண்டகக்கண்ணி அம்மன் என்றாலே அது மயிலை முண்டகக்கண்ணியைத்தான் குறிக்கும்.
6. முண்டகக்கண்ணி அம்மனை ரோட்டில் போகும் போதே மிக எளிதாக தரிசிக்க முடியும். அதற்கு ஏற்ப கோவில் அமைப்பு உள்ளது.
7. முண்டகக் கண்ணி அம்மன் ஆலயத்துக்கு வரும் பக்தர்களில் 80 சதவீதம் பேர் பெண்கள் தான்.
8. பெரியபாளையம் தலத்தில் செய்வது போல சில சமயம் இங்கும் பெண்கள் வேப்பஞ்சேலை அணிந்து, கோவிலை வலம் வந்து பிரார்த்தனை செய்வதுண்டு.
9. அம்மை நோய், கண் நோய், ராகு-கேதுவால் ஏற்படும் திருமண தோஷ நிவர்த்தி ஆகிய மூன்றுக்கும் இத்தலம் மிகச் சிறந்த பரிகார தலமாக உள்ளது.
10. முண்டகக் கண்ணியம்மனிடம் வைக்கப்படும் பிரார்த்தனை நிறைவேறியதும், பக்தர்கள் இத்தலத்துக்கு வந்து அபிகேஷகம், அங்க பிரதட்சனம் செய்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள்.
11. முண்டகக்கண்ணி அம்மன் கோவில் அருகில் கபாலிஸ்வரர் கோவில், மாதவப் பெருமாள் கோவில் உள்ளன. அம்மனை வழிபட செல்லும் போது இத்தலங்களுக்கும் சென்று வரலாம்.
12. முண்டகக்கண்ணி அம்மன் இப்போதும் ஓலைக் குடிசையிலேயே இருப்பதால், அவள் இதன் மூலம் எளிமையை தன் பக்தர்களுக்கு உணர்த்துவதாக ஐதீகம்.
13. தாய்மையின் வடிவமாக முண்டகக்கண்ணியம்மன் அருள் பாலிப்பதாக பெண்கள் நம்புகிறார்கள்.
14. மயிலை பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் வீட்டில் நடக்கும் எல்லா நல்ல நிகழ்ச்சிகளுக்கும் முன்பு முதல் பிரார்த்தனையை ஸ்ரீ முண்டகக் கண்ணி அம்மனுக்கு நடத்துவதையே வழக்கமாக வைத்துள்ளனர்.
15. அருள்மிகு முண்டகக்கண்ணி அம்மன் கோவில் அருகில் உள்ள தெருக்களில் வசிக்கும் பெண்கள் காலை 5.45 மணிக்கெல்லாம் வந்து நடை திறந்ததும் அம்மனை கண்டு தரிசனம் செய்த பிறகே வேறு வேலை செய்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.
16. அருள்மிகு முண்டக்கண்ணி அம்மனை மகா மாரியம்மன் என்றும் அழைக்கிறார்கள்.
17. ஆடி மாதத்தில் அம்மனுக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அபிஷேகம் நடத்த பலரும் விரும்புவார்கள். அந்த வகையில் தினமும் இத்தலத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கட்டணம் செலுத்தி அபிஷேகம் நடத்தி மன ஆறுதல் பெறுகிறார்கள்.
18. முண்டகக்கண்ணி அம்மனுக்கு தினமும் காலை அபிகேஷம் நடத்தும் போது பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், எலுமிச்சை என்று அம்மன் மனம் குளிரும் வகையில் அபிஷேகம் செய்வார்கள்.
19. மாலையில் தினமும் அம்மனை வெள்ளி அல்லது தங்க கலசத்தால் அலங்கரிப்பார்கள். இதனால் முண்டகக்கண்ணி அம்மனை காலையில் அபிஷேகப் பிரியை, மாலையில் அலங்காரப் பிரியை என்று மயிலைப் பகுதி மக்கள் சொல்கிறார்கள்.
20. ஆடிப்பூரத்தை முன்னிட்டு சுமார் 5 ஆயிரம் பெண்கள் முண்டகக்கண்ணி அம்மனுக்கு வளையல் சார்த்தி வழிபாடு செய்வதாக தெரிய வந்துள்ளது.
21. முண்டகக்கண்ணி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2003ம் ஆண்டு நடந்தது. 12 ஆண்டுகள் கடந்து விட்டதால் வரும் தை மாதம் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
22. இத்தலத்தில் ஆடித் திருவிழா மிகவும் விமரிசையாக நடக்கும்.
23. முண்டகக்கண்ணி அம்மனை வழிபட வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவது குறிப்பிடத்தக்கது.
24. தினமும் இத்தலத்தில் அன்னதானம் போடப்படுகிறது. நீங்கள் ரூ.2 ஆயிரம் செலுத்தினால் 100 பேருக்கு அன்னதானம் அளிக்கலாம்.
25. 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் முண்டகக்கண்ணி அம்மனை தொடர்ந்து வழிபட்டால் நினைத்தது நடக்கும்.
26. இத்தலத்தில் ரூ.1500 கட்டணம் செலுத்தி தங்க ரதம் இழுக்கலாம்.
27. முண்டகக்கண்ணி அம்மன் தோன்றிய சுயம்புவின் முகப்புத் தோற்றத்தில் நடுப்பகுதியில் திரிசூலம் பதிக்கப்பட்டுள்ளது. அபிஷேகம் நடக்கும் போது உன்னிப்பாக கவனித்தால் இதை காணலாம்.
28. வெப்பத்தை தான் தாங்கிக் கொண்டு, மக்களுக்கு குளிர்ச்சியை அளிக்கவே முண்டகக்கண்ணி அம்மன் ஓலைக்குடிசையில் வீற்றிருப்பதாக முன்னோர்கள் சொல்லியுள்ளனர்.
29. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முண்டகக்கண்ணி அம்மனிடம் வேண்டிக் கொண்டு, நோய் நிவர்த்தியானதும், அந்த உடல் உறுப்பு போன்ற வெள்ளி கவசங்களை வாங்கி உண்டியலில் போடுகிறார்கள்.
30. சில பெண்களுக்கு மாங்கல்ய தோஷம் ஏற்படலாம். அந்த தோஷ நிவர்த்திக்கு மாங்கல்யத்தை கழற்றி உண்டியலில் போட்டு வருகிறார்கள். இதன் மூலம் முண்டகக்கண்ணி அம்மன் அந்த பெண்ணின் மாங்கல்ய தோஷத்தை தீர்ப்பதாக ஐதீகம்.
31. முண்டகக்கண்ணி அம்மன் ஆலயம் மிகச் சிறந்த பரிகாரத்தலமாக மட்டுமல்ல, சிறந்த பிரார்த்தனைத் தலமாகவும் உள்ளது.
32. இத்தலத்தில் உள்ள தங்கரதம் முழுக்க-முழுக்க பக்தர்கள் கொடுத்த உண்டியல் பணம் மூலம் செய்யப்பட்டதாகும். அம்மன் தங்க ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள்.
33. முண்டகக்கண்ணி அம்மன் ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் மாவிளக்கு, ஆடு, கோழி சுற்றி விடுதல், பாவாடை சாத்துதல், முடி காணிக்கை கொடுத்தல், வேப்பிலை சாத்துதல், தொட்டில் பிள்ளை, மஞ்சள் காப்பு, பூங்கரகம் எடுத்தல் போன்ற நேர்ச்சை கடன்களை நிறைவேற்றுவது உண்டு.
34. இத்தலத்தில் கூழ்கஞ்சி வார்த்தல் செய்ய வேண்டுமானால் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.
35. பக்தர்கள் விரும்பினால் கோடி தீபம் விளக்கு ஏற்றலாம். ஒரு விளக்குக்கு ரூ.2 தான் கட்டணம் வசூலிக்கிறார்கள்.
36. இத்தலத்தில் கருவறையை நெருங்கியதும் மஞ்சள், இளநீர், பால், பூக்கள், எலுமிச்சம்பழம் ஆகியவற்றின் கதம்பமான வாசனையை பக்தர்கள் உணர முடியும்.
37. இத்தலத்தில் உள்ள நாகர் சிலைக்கு பெண்கள் தங்கள் கைப்பட மஞ்சள் தெளித்து குங்குமம் வைத்து வழிபட அனுமதிக்கிறார்கள்.
38. முண்டகக்கண்ணி அம்மன் பார்வைபட்டால் போதும் நம் வாழ்வில் சுபீட்சம் ஏற்படும் என்று வயதான பக்தர்கள் நம்பிக்கையான குரலில் கூறினார்கள்.
39. இத்தலத்துக்கு வாடிக்கையாக வரும் பக்தர்கள் முண்டகக்கண்ணி அம்மனை வணங்கும் போது, ஏதோ தங்கள் வீட்டில் உள்ள ஒருவரிடம் சகஜமாக பேசுவது போல பேசி வழிபடுவதை காணலாம்.
40. இத்தலம் தொடர்பான விவரங்களை (044) 24981893 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
- தேவகோட்டை முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா தொடங்கியது.
- 1-ந் தேதி சக்தி கரகம், 2-ந் தேதி பால்குடம் நடைபெறும்.
தேவகோட்டை
தேவகோட்டை அருணகிரிபட்டினத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி விழா தொடங்கியது. இதையொட்டி பக்தர்கள் அம்மனுக்கு காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.
அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் சக்தி கரகம் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது. அப்போது அம்மனுக்கு மஞ்சள் தண்ணீர் ஊற்றி பெண்கள் வரவேற்றனர்.
வருகிற 31-ந் தேதி பூச்சொரிதல் விழாவும், 1-ந் தேதி சக்தி கரகம், 2-ந் தேதி பால்குடம் நடைபெறும்.
- கண்ணன் தன் சகோதரியான அன்னைக்கு சங்கையும், சக்கரத்தையும் தந்துள்ளார்.
- அன்னை பவானி அனைத்து சக்திகளையும் தன் உருவில் கொண்டு காட்சிய ளிக்கிறாள்.
சுயம்பு மூர்த்தி யான பவானி அம்மன் கவசம் பெற்று முன்புறம் அமர்ந் திருக்கிறாள். பின்புறம் சிலை வடிவில் சுதையில் அவள் அழகான உருவம் வடிவமைக் கப்பட்டதைக் காணலாம்.
ஐந்து தலைநாகம் திருக்குடை கவிழ்க்க அன்னை சந்நிதி கொண்டிருப்பது கண்கொள்ளா காட்சி.
பட்டுப்புடவை பளபளக்கும் மேனி, பரந்தமுக அழகில் எடுப்பான மூக்கு, அதில் மின்னித் துடிக்கும் மூக்குத்தி, எழிலார்ந்த சிரிப்பு நம் இதயத்தை அப்படியே கொள்ளை கொள்ளும். நம்மையெல்லாம் காக்கும் கருணைக் கடலாகிய அவளுக்கு நான்கு கரங்கள்.
வலது முன்புற கையில் சக்தி ஆயுதம். பின் புறக்கரத்தில் சக்கராயுதம். இடது பின் கையில் சங்கு முன்புறக் கையில் கபாலம். இந்த கபாலத்தில் கலையரசி, அலையரசி, மலையரசி மூவரும் இருப்பதாக ஐதீகம்.
பெரியபாளையத்தமன் உருவம் அமைந்திருக்கும் விதம் மிகவும் அலாதியானது. அரை உருவுடன் சங்கு சக்கர தாரிணியாக அமர்ந்து ஒரு கையில் வாளும், மறுகையில் அருள் பாலிக்கும் அமுத கலசமும் கொண்டு தோற்றமளிக்கும் அன்னையின் திருக்கோலத்தை வேறு எந்தக் கோவிலிலும் காண்பது அரிது.
கண்ணன் தன் சகோதரியான அன்னைக்கு சங்கையும், சக்கரத்தையும் தந்துள்ளார். அன்னையின் மடியருகே அமைந்து நாளரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வரும் சுயம்புவின் தோற்றம் காலத்தில் மிகமிகத் தொன்மை வாய்ந்ததாகும்.
அன்னை பவானி அனைத்து சக்திகளையும் தன் உருவில் கொண்டு காட்சிய ளிக்கிறாள். வேத சக்தியாகவும், ஞான சக்தியாகவும், கால சக்தியாகவும், போக சக்தியாகவும், கோல சக்தியாகவும், கவி சக்தியாகவும், கருணா சக்தியாகவும், பஞ்ச சக்தியாகவும், அருள் சக்தியாகவும் நின்று பெரிய பாளையத்தில் அருளாட்சி செய்து வருகிறாள் பவானி என்னும் இந்த பெரிய பாளையத்தமன். இந்த சக்தியின் சக்தியை சக்தியால் உணர்ந்து சக்தியும் பெற்றோர் பலர்.
கவி காளிதாசனுக்கு அருட்கவி பாடிட அருளிய வளும், அலையும் மனத்தால் அமைதி இழந்து நின்ற ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும், காளிதாசருக்கும் அமைதி வழிகாட்டி ஞானம் தந்தவளும் அன்னை பவானியே!
ஓங்கார வடிவம் கொண்ட அன்னை பவானி ஆங்காரம் கொண்டோரையும், முறை தவறி அறநெறி பிறழ்வோரையும் வதம் செய்து அடக்கி மோன நிலையில் இருக்கிறாள்.
நோயுற்று அல்லலுறுபவர்கள் வேப்பிலை ஆடை அணிந்து ஆலயத்தை சுற்றி வலம் வந்தால் அவர்கள் நோயும், பாவமும் நிச்சயம் அகலும். தீமையைப் போக்கி நன்மையை நிலைநாட்டும் அன்னை தன் அருட்பார்வையாலும், தான் அணிந் திருக்கும் மஞ்சளாலும், தன்மேல் பட்ட தண்ணீராலும், தீர்க்க முடியாத பல நோய்களை எல்லாம் தீர்த்து அருள்கிறாள்.
கோழி சுற்றி விடும் பிரார்த்தனை
பெரியபாளையத்தம்மன் கோவிலில் பக்தர்கள் மேற்கொள்ளும் பிரார்த்தனைகளில் "கோழி சுற்றி விடும் பிரார்த்தனை முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அதாவது "இது உயிருக்கு உயிர் கொடுக்கும்'' பிரார்த்தனை ஆகும்.
வீட்டில் யாருக்காவது உடல்நலம் சரியில்லை என்றால், அல்லது விபத்து போன்றவற்றில் சிக்கி உயிருக்குப் போராடும் சூழ்நிலை ஏற்பட்டால் உயிர் கொடுப்பதாக பெரியபாளையத்தம்மனிடம் பக்தர்கள் வேண்டிக் கொள்வார்கள். உடல்நலம் சரியானதும் மாடு, ஆடு, கோழி போன்ற ஏதாவது ஒன்றை கோவிலில் விட்டு விடுவார்கள்.
கோழி என்றால் தாயே இந்த உயிரை ஏற்றுக் கொள் என்று சுற்றி விடுவார் கள். ஆடு, கோழிகளை சுற்றி விடும் பிரார்த்தனையை நிறைவேற்றுவதற்கு என்றே பரசுராமர் சன்னதி அருகில் தனி இடம் உள்ளது. அங்கு விடப்படும் ஆடு, கோழிகள் பவானி அம்மனுக்கு சொந்தமானதாக மாறி விடும்.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரியபாளையம் கோவிலில் உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கம் இருந்தது. ரத்தம் ஆறாக ஓடும் வகையில் கூட ஆடு, கோழிகள் பலியிடப்பட்டன. உயிர்ப்பலி தடுப்பு நடவடிக்கை மூலம் இந்த வழக்கம் நிறுத்தப்பட்டது.
அதற்கு பரிகாரமாக கோவில் சார்பில் ஒரு கோழியை உயிருடன் சுற்றி விட்டனர். அதைப் பார்த்து பக்தர்களும் ஆடு, கோழிகளை சுற்றி விடத் தொடங்கி விட்டனர். ஆடி மாத சிறப்பு நாட்களில் இங்கு ஏராளமானவர்கள் கோழி சுற்றி விடுவதை காணலாம்.
- தேவி மிகவும் சக்திவாய்ந்தவளாக இருக்கின்றாள்.
- சிவனுக்கு சாம்பிராணத்தைலம் பூசப்படுகிறது.
வட தமிழ் நாட்டின் கடலோரத்தில் வாழும் மீனவ சமுதாய மக்கள் ஆண்டுக்கு ஒரு தடவை ஆடி மாத விழாவின் போது பெரிய பாளையம் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்துவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.
ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்லும் போது எந்தவித ஆபத்தும் ஏற்பட கூடாது என்பதற்காகவும், நிறைய மீன் கிடைக்க வேண்டும் என்பதற் காகவும் இந்த சிறப்பு வழிபாட்டை மீனவர்கள் நடத்து கிறார்கள்.
இந்த வழிபாட்டுக்கு காசிமேடு உள்பட கடலோரப்பகுதி மீனவர்கள் குடும்பம், குடும்பமாக பெரியபாளையம் தலத்துக்கு செல்வார்கள் மற்ற பக்தர்கள் போல அவர்கள் ஒரு நேரம் மட்டும் தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்து விட மாட்டார்கள்.
4 நாட்கள் பெரியபாளையத்தில் தங்கிருந்து,பவானி அம்மனின் அருள் பார்வை தங்கள் மீது படும் வகையில் வழிபாடுகளை செய்த பிறகே வீடு திரும்பி வருவார்கள்.
வீட்டில் இருந்து வியாழக்கிழமை புறப்பட்டு செல்லும் மீனவர்கள் வெள்ளி, சனி,ஞாயிறு, திங்கள் ஆகிய 4 நாட்கள் பெரியபாளையம் ஆரணி ஆற்றில் குடில்கள் அமைத்து தங்குவார்கள். அங்கிருந்த படி பொங்கல் வைத்து சாப்பிட்டு பவானியம்மனை வணங்கி செல்வார்கள்.
மீனவ குடும்பத்து பெண்கள் தங்கள் தாலி சரடை கழற்றி உண்டியலில் போட்டு பிரார்த்தனைகளை நிறைவேற்றுவார்கள். 4 நாள் மனம் குளிர வழிபட்ட பிறகு செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் பவானி அம்மனை வணங்கி விடைபெற்று செல்வார்கள்.
பரசுராமர் பாவம் தீர வழிபட்ட தலம்
முனிவர் ஜமத்கனி உத்தரவை ஏற்று தன் தாய் ரேணுகாதேவியை பரசுராமர் வெட்டி கொன்ற தகவலை முன்பக்கங்களில் படித்து இருப்பீர்கள். தாயை கொன்றதால் பரசுராமருக்கு தோஷமும், பாவமும் ஏற்பட்டது. அந்த தோஷத்தை நிவர்த்தி செய்ய பரசுராமர் பல்வேறு தலங்களுக்கு சென்றார்.
இறுதியில் அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் உள்ள அருள்மிகு ஆலந் துறையார் (வடமூலநாதர்) என்ற தலத்தில் தான் பரசுராமரின் தோஷம் நீங்கியது. இத்தல சிவனுக்கு சாம்பிராணத்தைலம் பூசப்படுகிறது. லிங்கம் மிகச்சிறியது என்பதால் அடையாளம் காட்ட, அதன் மீது ஒரு குவளை கவிழ்த்தப்பட்டிருக்கிறது. இந்த குவளைக்கே அபிஷேகம் நடக்கும்.
பரசுராமர் தன் தாய் ரேணுகா தேவியை கொன்ற பாவம் நீங்க வழிபட்ட தலமாக இது கருதப்படுகிறது. அங்கு நீராட அவர் உருவாக்கிய குளம் `பரசுராம தீர்த்தம்' எனப்படுகிறது.
சில சிவன் கோவில்களில் மூலவர் சன்னதியின் நுழைவு வாயிலின் மேற்பகுதியில் கஜலட்சுமி சிற்பகம் அமைத்திருப்பார்கள். ஆனால் இத்தலத்தில் பரசுராமர் சயனத்தில் இருப்பதை காணலாம்.
இங்குள்ள பரசுராம தீர்த்தத்தில் நீராடி, சிவனுக்கு திருமுழுக்காட்டு செய்து வணங்கினால் பிரம்மகக்தி தோஷம் நீங்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேரவும் இங்கு வழிபாடு செய்யப்படுகிறது.
தோஷம் போக்கும் சென்னை ரேணுகா பரமேஸ்வரி ஆலயம்
சென்னையில் பல புராதான ஆலயங்கள் உள்ளன. முக்கியமாக மாரியம்மன் ஆலயங்கள் ஆங்காங்கே உள்ளன.அதில் ஒன்று சின்னக்கடை மாரியம்மன் அல்லது ரேணுகாதேவி ஆலயம், மின்ட் சாலையும் என்.எஸ்.ஜி. போஸ் சாலையும் இணைக்கும் இடத்தின் அருகில் உள்ள அந்த ஆலயம் 250 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது.
அந்த ஆலயத்தின் தேவி மிகவும் சக்திவாய்ந்தவளாக இருக்கின்றாள். அதற்கு காரணம் ஆலயத்தின் கர்ப்பக்கிரகத்தில் சீதளாதேவி என்ற பெயரில் முழு உருவை கொண்டும் ரேணுகாதேவி என்ற பெயரில் தன்னுடைய தலையை மட்டுமே பூமிக்கு மேல் வைத்துள்ள நிலையிலும் அம்மன் காட்சி தருகிறார்.
அந்த ஆலயத்தில் சென்று எலுமிச்சை பழ மாலையுடன் மிளகாயை சேர்த்துக் கட்டி தேவிகளை பூஜிக்க பூர்வ ஜென்ம வினை, தோஷங்கள் மற்றும் தீய ஆவிகள் இருந்தால் அவை அனைத்தும் ஓடி ஓளியும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதுபோல படைவீடு தலத்தில் உள்ள ரேணுகாதேவி ஆலயமும் மிகவும் புகழ் பெற்றதாகும்.
- ஆடித்திருவிழா மொத்தம் 14 வாரங்கள் நடைபெறுகிறது.
- பவானிதாய், நமக்கு ஜோதி வடிவில் காட்சி கொடுப்பதாக ஐதீகம்.
தமிழ்நாட்டில் எந்த கோவிலிலும் இல்லாத வகையில், பெரியபாளையத்தம்மன் கோவிலில் ஆடித் திருவிழா மொத்தம் 14 வாரங்கள் நடைபெறுகிறது.
இந்த 3 மாத காலக்கட்டத்தில் 15 ஞாயிற்றுக்கிழமைகள் வருகிறது. இந்த கிழமைகளில் ஒவ்வொரு வகை வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெறும்.
இது தவிர பெரியபாளையம் கோவிலில் 15 ஞாயிற்றுக்கிழமையும் அம்மனின் ஜோதி தரிசனம் மிகச் சிறப்பாக நடந்து வருகிறது. இது பெரியபாளையம் கோவிலில் மட்டுமே நடைபெறும் பிரத்தியேக ஆடி சிறப்பு வழிபாடாகும்.
பாளையத்தம்மனை ஜோதி ஒளியில் வழிபடுவதே இதன் முக்கிய அம்சமாகும். அந்த சமயங்களில் பவானிதாய், நமக்கு ஜோதி வடிவில் காட்சிக் கொடுப்பதாக ஐதீகம்.
ஆடித் திருவிழாவின் சனிக்கிழமைகளில் இரவு 12 மணிக்கு இந்த ஜோதி தரிசன நிகழ்ச்சித் தொடங்கும். முதலில் பாளையத்தம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படும்.
அதன்பிறகு திரையிடப்பட்டு அம்மனை அலங்கரிப்பார்கள். வித, விதமான பூக்களால் புஷ்ப அலங்காரம் செய்வார்கள்.
இதைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு நைவேத்தியம் படைக்கப்படும். இவை அனைத்தும் முடிந்ததும் ஜோதி தரிசனம் தொடங்கும்.
அம்மனுக்கு மொத்தம் 16 வகை தீபாரதனைகள் காட்டப்படும். ஒவ்வொரு தீபராதனையின் போதும் பாளையத்தம்மன் ஒவ்வொரு விதமாக ஜொலித்து நமக்குக் காட்சி கொடுப்பாள். அந்த திருக்காட்சியைக் காண கண்கோடி வேண்டும்.
16 வகை தீபாரதனை முடிந்ததும் சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்படும். அதைத் தொடர்ந்து அம்மனுக்கு மீண்டும் நைவேத்தியம் படைக்கப்படும்.
அத்துடன் ஜோதி தரிசன நிகழ்ச்சிகள் நிறைவு பெறும். இறுதியில் வந்துள்ள பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்படும். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி வரை இவை நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஜோதி தரிசனத்தின் சிறப்பு என்னவென்றால் இது பெரியபாளையம் கோவிலில் ஆடி பெருவிழா நடக்கும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே நடைபெறும். மற்ற மாதங்களில் இத்தகைய தரிசனம் கிடையாது.
எனவே இந்த ஆண்டு ஜோதி தரிசனத்தை தவற விட்டு விட்டால், இனி அடுத்த ஆண்டு வரும் ஆடிப் பெருவிழாவில்தான் பாளையத்தம்மனை ஜோதியாக தரிசனம் செய்ய முடியும்.
சனிக்கிழமை இரவு 12 மணிக்கு தொடங்கி ஞாயிற்றுக்கியமை அதிகாலை 3 மணி வரை ஜோதி தரிசன பூஜைகள் நடக்கும் என்பதால் வெளியூர்களில் இருந்து பெரியபாளையத்துக்கு வரும் பக்தர்கள் அதற்கு ஏற்ப வசதிகளை செய்து கொண்டு வருவது நல்லது.
கோவில் நிர்வாகம் சார்பில் இந்த ஜோதி தரிசன வழிபாட்டுக்கு ரூ.250 கட்டணம் நிர்ணயித்துள்ளனர். இது தொடர்பான மேலும் தகவல்களை கோவில் அலுவலகத்தை 044-27927177 மற்றும் 9444487487 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
- தீர்த்தத்தை 3 நாள் குடித்தால் அம்மை உடனே இறங்கி விடும்
- பிரகாரத்தில் உற்சவரைத் தவிர வேறு எந்த சன்னதியும் இல்லை.
1. பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் கோவில் சென்னையில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தொலைவில் திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகாவில் அமைந்துள்ளது.
2. ஆரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்திருப்பதால் கோவிலில் எப்போதும் நன்கு காற்றோட்டமாக உள்ளது.
3. பாவனி அம்மன் இத்தலத்தில் அகண்ட பரிபூரண ஆனந்த ஜோதியாய், வழிபடும் அடியார்களின் வல்வினை போக்கும் வண்டார் குழலியாய், 7 அவதாரங்களில் ஒன்றாகிய சங்கு, சக்கர பேருருவாய் கோவில் கொண்டு எழுந்துருளியுள்ளாள்.
4. ஆடி திரவிழா அம்மன் தலங்களில் 4 அல்லது 5 வாரம்தான் நடைபெறும். ஆனால் பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் மட்டும் 14 வாரங்கள் ஆடிப்பெருவிழா நடைபெறும்.
5. பெரியபாளையம் தலத்தில் பவானி அம்மன் சுயம்புவாக தோன்றியுள்ளாள்.
6. அபிஷேக நேரம் தவிர மற்ற நேரங்களில் சுயம்பு உருவை அம்மன் தலை கவசத்தால் மூடி விடுவார்க்ள.
7. பஸ்சில் வரும் பக்தர்கள்தான் கோவில் நுழைவாயிலுக்கு எளிதாக வர முடியும். கார், பைக்கில் செல்பவர்கள் ஆலயத்தின் பின் பகுதி வழியாகத்தான் உள்ளே வர முடியும்.
8. ஆலயத்தின் இடது பக்கத்தில் சித்புத் விநாயகர் மற்றும் மாதங்கி சன்னதிகள் உள்ளன. அந்த இரு சன்னதிகளிலும் வழிபட்ட பிறகே பவானி அம்மனை சென்று வணங்க வேண்டும்.
9. மூலவரை சுற்றியுள்ள பிரகாரத்தில் உற்சவரைத் தவிர வேறு எந்த சன்னதியும் இல்லை.
10. இத்தலம் அருகிலேயே மிகப்பெரிய புற்றுக்கோவில் உள்ளது. தகர கூரை வரை உயர்ந்து அந்த புற்று வளர்ந்துள்ளது.
11. இத்தலத்தில் ஆங்காங்கே பாம்பு நடமாடுவது சகஜமான ஒன்று. ஆனால் அந்த சர்ப்பங்கள் யாரையும் தீண்டியதே இல்லை.
12. புற்று கோவிலில் இருந்து தினமும் இரவு பவானியம்மன் கருவறைக்குள் சுமார் 5 அடி நீளமுள்ள பாம்பு வந்து செல்வதாக சொல்கிறார்கள்.
13. தினமும் காலை பூஜைக்காக கருவறை கதவை திறக்கும் முன்பு 4, 5 தடவை கதவை தட்டி விட்டு சிறிது நேரம் கழித்தே அர்ச்சகர்கள் நடையைத் திறப்பார்கள். சர்ப்பம் உள்ளே இருந்தால் சென்று விடும் என்பதற்காக இந்த ஏற்பாடாம்.
14. பவானி ஆலய நாகவழிபாட்டை வலியுறுத்தும் வகையில் கோவில் பிரகாரங்களில் சர்ப்பம் சிலைகளும் நாகதேவதை சிலைகளும் செதுக்கப்பட் டுள்ளன.
15. பெரியபாளையம் ஆலய வழிபாடுகளில் மிக முக்கியமானது வேப்பஞ்சேலை பிரார்த்தனை வழிபாடுதான். நூற்றுக்கு 50 பக்தர்கள் வேப்பஞ்சேலை பிரார்த்தனை செய்கிறார்கள்.
16. செவ்வாய், வெள்ளி என்ற கணக்கு இல்லாமல் தினமும் இங்கு வேப்பஞ்சேலை வழிபாடு நடப்பது குறிப்பிடத்தக்கது.
17. பெரியபாளையம் தலத்தின் விருட்சம் வேப்பமரமாகும். கோவில் உட்பிரகாரத்தில் இத்தல விருட்சம் உள்ளது.
18. பெரியபாளையம் கோவிலில் கொடி மரம் கிடையாது. அதற்கு பதில் சக்தி மண்டபம் உள்ளது.
19. மற்ற கோவில்களில் விழா தொடங்கி விட்டால் அதன் அடையாளமாக கொடியேற்றம் நடைபெறும். இந்த தலத்தில் சக்தி மண்டபத்தில் பந்தகால் நாட்டுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.
20. பவானி அம்மன் நேர் பார்வையில் நுழைவாயில் அருகே சக்தி மண்டபம் உள்ளது.
21. சக்தி மண்டபம் அருகில்தான் திருஷ்டி பரிகார பூஜைகள் அனைத்தும் நடைபெறுகின்றன.
22. சக்தி மண்டபம் அருகில் உள்ள மரத்தில் மஞ்சள் கயிறு வாங்கி கட்டினால் திருமணம் கை கூடும். தொட்டில் வாங்கி கட்டினால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
23. இத்தலத்தில் சுயம்புக்கு காலை 8 மணி, பகல் 11 மணி, மாலை 5 மணி ஆகிய 3 தடவை அபிஷேகம் செய்யப்படுகிறது.
24. கோவில் கருவறை முகப்பில் சங்கு, சக்கரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெருமாளின் தங்கையே இங்கு தெய்வம்சமாக இருப்பதால் அப்படி செதுக்கப்பட்டுள்ளது.
25. இத்தலத்தில் சுயம்பு மீது பூசப்பட்டு எடுத்துத் தரப்படும் மஞ்சளுக்கு அதிக மகிமை உண்டு.
26. அந்த மஞ்சளை தண்ணீரில் கலந்து தீர்த்தமாக அருந்தினால் எந்த நோயாக இருந்தாலும் குணமாகி விடும்.
27. அந்த மஞ்சளை கொஞ்சம் வாங்கி வீட்டில் வைத்துக் கொண்டு, வெளியில் செல்லும் போது பூசிச் சென்றால் நினைத்த காரியம் வெற்றி பெறும்.
28. பெரியபாளையம் அம்மனுக்கு நிறைய மஞ்சள் பூசி பெரிய குங்குமப் பொட்டு வைத்துக் கொள்வது என்றால் பிரியம் அதிகம். எனவே அர்ச்சகர் தினமும் அன்னைக்கு நிறைய சந்தனம் பயன்படுத்தி அலங்காரம் செய்கிறார்.
29. பவானி அம்மன் சுயம்பு மஞ்சளை இந்துக்கள் மட்டுமின்றி இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்களும் வந்து பெற்று சென்று பயன் அடைகிறார்கள்.
30. பவானி அம்மனுக்கு தினமும் 3 தடவை அபிஷேகம் முடிந்ததும் மஞ்சள் பிரசாதத்தை பக்தர்களுக்கு கொடுக்கிறார்கள்.
31. ஆடி விழாவில் 10-வது வாரம் ஞாயிற்றுக்கிழமை சுயம்பு மீது சூரிய ஒளிபடும். அந்த சமயத்தில் மின் விளக்குகளை அனைத்து விட்டு சூரிய ஒளி வழிபாட்டை பக்தர்களை காண செய்கிறார்கள்.
32. கோவில் வளாகத்தில் துலாபாரம் கொடுக்கும் வசதி உள்ளது.
33. ஆடி விழாவின் 6-வது, 7-வது ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை கடலோரப் பகுதி மீனவர்கள் திரண்டு வந்து பவானி அம்மனை வழிபட்டு செல்வார்கள்.
34. பெரியபாளையம் கோவிலுக்கு தினமும் சுமார் 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் பக்தர்கள் வரை வந்து செல்கிறார்கள்.
35. விழா நாட்களில் பவானி அம்மனை தரிசிக்க வரும் பக்தர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் வரை இருக்கும்.
36. உண்டியலில் பணம் மட்டுமின்றி தாலியையும் பெண்கள் கழற்றி போடுகிறார்கள். கை, கால் போன்ற வெள்ளி உறுப்புகளையும் வாங்கி செலுத்து கிறார்கள்.
37. முகூர்த்த நாட்களில் இத்தலத்தில் ஏராளமான திருமணங்கள் நடக்கின்றன. அதற்கு வசதியாக கோவில் வளாகத்துக்குள்ளேயே திருமண மண்டபம் உள்ளது.
38. இத்தல தீர்த்தம் சக்தி வாய்ந்தது. எனவே வர முடியாத நோயாளிகளுக்காக இத்தல தீர்த்தத்தை பாட்டில்களில் வாங்கி செல்கிறார்கள்.
39. இத்தல தீர்த்தத்தை 3 நாள் குடித்தால் அம்மை உடனே இறங்கி விடும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
40. இத்தலம் தினமும் அதிகாலை 5.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும் பிறகு மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்து இருக்கும்.
41. ஞாயிற்றுக்கிழமைகளில் இத்தலம் அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்து இருக்கும். அன்று எப்போது வேண்டுமானாலும் சென்று வழிபடலாம்.
42. ஆடி மாதம் விழாவின் 14-வது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணி முதல் இரவு 10 மணி வரை நடை திறந்து இருக்கும்.
43.பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் மிகச் சிறந்த பிரார்த்தனை தலம் மட்டுமின்றி பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது.
44. ஆடி விழாவில் பங்கேற்க மாட்டு வண்டி கட்டி, தொலை தூரங்களில் இருந்து குடும்பம், குடும்பமாக வரும் வழக்கம் இப்போதும் தொடர்கிறது.
45. பவானி அம்மனை குலதெய்வமாக வழிபடுபவர்கள் பெரியபாளையத்தில் குறைந்த பட்சம் 3 நாட்கள் தங்கி இருந்து வழிபாடு செய்கிறார்கள்.
46. ஆரணியாற்றில் குடில் அமைத்து தங்கும் பக்தர்கள் ஆடு, கோழிகளை படையலிட்டு சாப்பிட்டு செல்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.
47. ஒரு குடும்பத்தில் உள்ள சகோதர- சகோதரிகள் அனைவரும் ஒன்றாக பெரியபாளையத்தம்மனை வணங்க வருவதால் இங்கு குடும்ப ஒற்றுமையை வளர்க்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.
48. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே திருப்பதி கோவிலுக்கு செல்லும் வழிபாதை தலங்களில் ஒன்றாக பெரியபாளையம் இருந்துள்ளது.
49. கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ந்தேதி இந்த கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
50. தைப்பூசம் தினத்தன்று ஆரணியாற்றில் இருந்து புனித நீர் எடுத்து வந்து அன்னைக்கு அபிஷேகம் செய்வார்கள்.
- பெரியபாளையத்தம்மன் கோவிலில் மஞ்சள் தீர்த்தம் வழங்கப்படுகிறது.
- அங்க பிரதட்சணம்போல தேங்காயை உருட்டி விடுகிறார்கள்.
தேங்காய் உருட்டும் பிரார்த்தனை
அங்க பிரதட்சணம் செய்வதை நீங்கள் எல்லா கோவில் களிலும் பார்த்து இருப்பீர்கள். அந்த பிரார்த்தனையை பெரிய பாளையம் பவானி அம்மன் கோவிலில் சற்று மாறுபட்டு செய்கிறார்கள்.
அதாவது தாங்கள் அங்கபிரதட்சணம் செய்வதற்கு பதில் கோவிலை சுற்றி அங்க பிரதட்சணம்போல தேங்காயை உருட்டி விடுகிறார்கள். இந்த பிரார்த்தனையில் ஈடுபடுபவர்கள் ஈரத்துணியுடன் பவானி அம்மனை வணங்கி விட்டு தேங்காயை உருட்டி விடுவார்கள். அந்த தேங்காய் உருண்டு செல்லும்.
எந்த இடத்தில் அந்த தேங்காய் நிற்கிறதோ, அந்த இடத்தில் பவானி அம்மனை நோக்கி தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிடுவார்கள். இப்படி தேங்காயை உருட்டியபடி கோவிலைச் சுற்றி வருவார்கள். இந்த பிரார்த்தனையை `அடிதண்டம்' என்றும் பக்தர்கள் சொல்கிறார்கள்.
கரகம் பிரார்த்தனை
நீண்ட நாட்களாக திருமணம் ஆகாத ஆண்கள் பவானி அம்மனிடம் கரகம் எடுத்து வருவதாக வேண்டிக் கொள்வார்கள். திருமணம் நிச்சயம் ஆனதும் மணமகன் கரகம் பிரார்த்தனையை நிறைவேற்றுவார்.
கரகத்தை நன்றாக அலங்காரம் செய்து பட்டுச்சேலை சுற்றி, பூ வைத்து, தலையில் ஏந்தி கோவிலை சுற்றி வருவார்கள். திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களும், பெரியபாளையத்தம்மனை குல தெய்வமாக கருதுபவர்களும் இந்த பிரார்த்தனையை அதிகமாக செய்கிறாரக்ள்.
திருமணத்துக்காக இந்த பிரார்த்தனை செய்யப்படுவதால், இதை `குடை கல்யாணம்' என்றும் அழைக்கிறார்கள்.
மஞ்சள் தீர்த்தத்தில் மருந்து
பெருமாள் கோவில்களில் துளசி தீர்த்தம் கொடுக்கப்படுவது போல பெரியபாளையத்தம்மன் கோவிலில் மஞ்சள் தீர்த்தம் வழங்கப்படுகிறது.
இந்த மஞ்சள் தீர்த்தம் மிகவும் பிரசித்தமானது. பவானி அம்மனின் அருள்பட்ட இந்த மஞ்சள் தீர்த்தம் பிணி தீர்க்கும் மாமருந்து என்றே சொல்லலாம். கோவிலில் அர்ச்சகர் வழங்கும் மஞ்சள் தீர்த்தத்தை பருகினால் நோய்கள் பறந்தோடி விடும் என்று பக்தர்கள் முழுமையாக நம்புகிறார்கள்.
அம்மை போட்டவர்கள் இந்த மஞ்சள் தீர்த்தத்தை குடித்தால் மூன்றே நாளில் அம்மை இறங்கி விடும் என்பது கண்கூடு.
தற்போது பெரியபாளையத்தம்மன் கோவில் கருவறை அமைந்திருக்கும் பகுதியில்தான் பெரியபுற்று இருந்தது என்பதையும், அந்த புற்றை அகற்றும்போது கம்பி பட்டு சுயம்பு காயம் அடைந்து ரத்தம் பீறிட்டு வந்ததையும் ஏற்கனவே நீங்கள் படித்து இருப்பீர்கள்.
அப்படி ரத்தம் வந்தபோது மஞ்சள்தான் வைத்தனர். அதை பக்தர்களுக்கு உணர்த்தவே மஞ்சள் தீர்த்தம் வழங்கப்படுகிறது.
சுயம்பில் வைத்து எடுத்துத் தரப்படும் மஞ்சளை நாள்பட்ட காயம், புண்களில் வைத்தால், விரைவில் அவை ஆறி குணமாகி விடும். எனவே இந்த மஞ்சள் தீர்த்தத்தை பக்தர்கள் போட்டி போட்டு வாங்கிச் செல்வதை காணலாம். சென்னையில் இருப்பவருக்கு அம்மை போட்டிருந்தால், இந்த தலத்துக்கு வந்து மஞ்சள் தீர்த்தம் வாங்கி சென்று பயன்பெறுவது மரபாக உள்ளது.
தாலி தரும் பிரார்த்தனை
பெரியபாளையத்தம்மன் ஏழைகளின் வீட்டு தெய்வமாவாள். குறிப்பாக மீனவ சமுதாய மக்களின் குலதெய்வமாக திகழ்ந்து, அம்மக்கள் அனைவரையும் பாதுகாத்து வருகிறாள்.
பொதுவாக கடலுக்குள் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கடும் அலை, சூறைக்காற்று போன்றவைகளை எதிர்கொண்டு சமாளித்து மீன்பிடித்து வரவேண்டும். மீன்வளம் உள்ள ஆழ்கடல் பகுதிக்கு செல்லும் மீனவர்கள் சில நாட்கள் கழித்தே கரை திரும்புவார்கள்.
இப்படி கடலுக்குள் தொழில் செய்யும் தங்கள் கணவருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்பட கூடாது என்று மீனவப் பெண்கள் பவானி அம்மனை நினைத்து மனதார வேண்டிக் கொள்வார்கள். அதற்கு நன்றி காணிக்கையாக தங்களது தாலிக்கொடியையே அப்படியே பெரியபாளையத்தம்மன் கோவில் உண்டியலில் போட்டு விடுவார்கள்.
ஆடி மாத விழா காலத்தில்தான் மீனவப் பெண்கள், இந்த பிரார்த்தனையை நிறைவேற்றுவார்கள். குறிப்பாக 3-வது வாரம், 5-வது வாரம், 7-வது வாரம் அல்லது 9-வது வாரம் ஞாயிற்றுக்கிழமை மீனவப் பெண்கள் இந்த பிரார்த்தனையை செய்வதுண்டு.
இதன் காரணமாக ஆடி மாதம் முழுவதும் உண்டியலில் தாலி காணிக்கை மிகுதியாக இருக்கும். வேப்பஞ்சேலை பிரார்த்தனை போலவே இந்த பிரார்த்தனையும் இந்த ஆலயத்துக்குரிய ஒன்றாக தனித்துவத்துடன் உள்ளது.
சென்னையில் காசிமேடு பகுதி மீனவர்கள் ஏராளமானோர் பெரியபாளையத்துக்கு வந்து இந்த பிரார்த்தனையை செய்கிறார்கள். வட தமிழ்நாட்டின் கடலோர பகுதி மீனவர்கள் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் பெரியபாளையத்தம்மனை குலதெய்வமாகவே ஏற்றுக் கொண்டுள்ளனர்.
- பிரசாதமாக மஞ்சள், குங்குமம். தீருநீறு ஆகியவை வழங்கப்படுகிறது.
- அன்னை கிழக்கு பார்த்த நிலையில் கழுத்தளவு வடிவமாக காட்சி அளிக்கிறாள்.
பக்தர்களின் குறைகளை களைந்து, வேண்டும் வரம்களை உடனுக்குடன் வழங்கும் அருள்மிகு பெரியபாளையத்தம்மன் ரேணுகா தேவியின் அம்சமாக கருதப்படுகிறார். இது தொடர்பான புராண கதை வருமாறு:-
முன்னொரு காலத்தில் இப்பிரதேசத்தில் ஜமதக்கினி என்ற முனிவர் தவம் இருந்து வந்தார். அவரது மனைவியே ரேணுகாம்மாள். அவர்கள் ஹரிதத்தன், உச்சாங்கன், விஸ்வாசு, பரசுராமர் என்ற நான்கு ஆண் குழந்தைகளை பெற்றனர். அவர்களுள் இளையவர் பரசுராமர்.
ஒருநாள் பூஜைக்கு வேண்டிய மலர்களையும், நீரையும் கொண்டு வரச் சென்ற ரேணுகாதேவி, மண்குடத்தில் தண்ணீர் எடுக்கும் போது, வானத்தில் பவனிசென்ற ஒரு கந்தர்வனின் உருவ நிழலை நீரில் கண்டாள். அவனது பேரழகைக் கண்டு சிறிது நேரம் ரசித்தாள். அவ்வளவுதான். மண்குடம் கரைந்து போனது இதனால் செய்வதறியாது தவித்தாள்.
இதை அறிந்த ஜமத்கனி முனிவர் வெகுண்டெழுந்தார். தன் மகன்களை அழைத்தார் உம் தந்தையின் தவ வலிமையே அழிவுறும் வண்ணம் செய்ய முனைந்த உங்கள் தாயை தலை வேறு உடல் வேறாக வெட்டி எறியுங்கள் என்று கட்டளையிட்டார்.
மூத்த மகன்கள் 3 பேரும் முடியாது என்று ஒதுங்கினார்கள். அதைக் கண்ட முனிவர் மேலும் கோபம் கொண்டு அவர்களை போதராஜன், காட்டண்ணன், கருப்பண்ணசாமி என்ற தேவதைகளாக உருமாற்றி சாபமிட்டார்.
பிறகு பரசுராமனை அழைத்தார். நான் சொல்வதை செய்! உன் வாளால் உன் தாயின் கழுத்தை வெட்டிச் சாய்க்க வேண்டும்' என்றார் முனிவர்.
நிலைதடுமாறிய பரசுராமர், தந்தையின் கட்டளையை ஏற்று தாயின் தலையை துண்டித்தார்! மகிழ்வுற்றார் முனிவர். பரசுராமரை பாராட்டியதோடு இரண்டு வரங்களையும் அவனுக்கு அளிப்பதாக கூறினார்.
பரசுராமர் அந்த வரத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்தார்.
முதலாவதாக எனது தாயை கண்டு வணங்கி அவளிடம் மன்னிப்பு கோர வேண்டும். அதற்கு என் தாய் வேண்டும்'' என்றார்.
உடனே ஜமதக்கினி முனிவர் மகனிடம் கமண்டல நீரைக் கொடுத்து, வெட்டுண்ட உன் தாயின் தலையையும், உடலையும் ஒன்றாக இணைத்து, அத்தீர்த்தத்தை தெளித்தால் அவள் உயிர் பெறுவாள் என்று கூறினார்.
ஆவலுடன் அக்கமண்டலத்தைப் பெற்ற பரசுராமர், அவசரத்தில் அவ்விடத்தில் கிடந்த மற்றொரு பெண்ணின் துண்டிக்கப்பட்ட உடலும், தலையும் கிடந்ததை சரியாக கவனிக்காமல், அப்பெண்ணின் உடலோடு தன் தாயின் தலையை சேர்த்து கமண்டல நீரைத் தெளித்துவிட்டார்.
ரேணுகாதேவி உயிர் பெற்றெழுந்ததும் முன்போன்ற உடல் இல்லாமல் போய் விட்டதே என்பதை உணர்ந்தாள். பரசுராமரும் அப்போது தான் அந்த தவறை அறிந்து வருந்தினார்.
இந்நிலையில் ஒருநாள் நாகலோகத்து அரச குமாரன் கார்த்த வீரியார்ச்சுனன் என்பவன் தம் குமாரர்கள் நூறு பேர்களுடன் புறப்பட்டு வந்து ஜமத்கினி முனிவரிடம் உள்ள காமதேனு பசுவை கொடுக்குமாறு வேண்டினார்கள். முனிவர் மறுத்ததால் அவரைக் கொன்று விட்டு அப்பசுவை இழுத்துச் சென்றார்கள்.
கணவனுக்கு நேர்ந்த கதியை பார்த்த ரேணுகாதேவி கணவனுக்காக மூட்டிய சிதையில் தானும் குதித்தாள். அப்போது பலத்த மழை பெய்தது.
இதனால் தீ அணைந்தது மழைநீர் வெள்ளமாகப் பெருகி ஆற்று நீருடன் கலந்து சென்றதால் ரேணுகாதேவியின் தீப்புண் பட்ட உடலும் மிதந்து சென்று ஒரு இடத்தில் கரை ஒதுங்கியது.
மயக்கம் தெளிந்து பார்த்தாள் ரேணுகாதேவி தீயில் எரிந்து போய், வெற்றுடலில் வெந்த புண்களுடன் தனியே தவித்திருக்கும் அவளது நிலைமையை அளவிட்டுக் கூறிட இயலாது.
அருகில் இருந்த வேப்ப மரத்தின் இலைகளைப் பறித்து ஆடையாக கட்டிக் கொண்டு அந்த வழியே வந்த வயதான முதாட்டியின் தயவால் அவளிடம் அடைக்கலம் புகுந்தாள் தேவி.
மூதாட்டி தேனும், தினைமாவும் அளித்து, வெந்த புண்களுக்கு, மஞ்சள், வேப்பிலையை அரைத்து வைத்து கட்டி குணப்படுத்தினாள். படிப்படியாக புண்கள் எல்லாம் மறைந்தன.
பரமனிடமும் பார்வதியிடத்திலும் மாறாத பக்தி கொண்டிருந்த ரேணுகாதேவி சக்தி அம்சங்களைப் படிப்படியாகப் பெற்று விளங்கத் தொடங்கினாள். அத்தேவியே தெய்வமாக மாறி பெரியபாளையம் தலத்தில் பவானி அம்மனாக பக்தர்களால் போற்றி வணங்கப்படுகின்றாள்.
இத்திருத்தலத்தில் அன்னை கிழக்கு பார்த்த நிலையில் கழுத்தளவு வடிவமாக விளங்குகின்றாள். ஐந்து தலைநாகம் தலைக்குமேல் குடை விரிக்க அகிலம் வியக்கும் வண்ணம் அருளாட்சி புரிந்து வருகின்ற இத்தேவியின் திருக்கோவிலில் அருட்பிரசாதமாக மஞ்சள், குங்குமம். தீருநீறு ஆகியவை வழங்கப்படுகிறது.
உலகச் சூழலில் சிக்குண்டு தவிக்கும் நாம் கொஞ்சமாவது அமைதியும் மகிழ்ச்சியும் பெற வேண்டுமானால், பவானி அம்மன் அன்னை வழிபாட்டை செய்தல் வேண்டும்.
- குண்டலினி சக்தியை எழுப்ப பல சாதனங்கள் உள்ளன.
- தத்துவ ஆராய்ச்சியின் வலிமையாலும் குண்டலினி சக்தி எழும்பும்.
குண்டலினி சக்தியை எழுப்ப பல சாதனங்கள் உள்ளன. பிராணாயாமம் ஒரு வழி. இறைவனிடம் தூய்மையான பக்தி செலுத்துபவர்களுக்கும் குண்டலினி சக்தி எழும்பும். பரிபூரண நிலை அடைந்த முனிவர்கள், ஞானிகள் குருமார்க்கள் தயவினால் எழுப்பப்படும். தத்துவ ஆராய்ச்சியின் வலிமையாலும் குண்டலினி சக்தி எழும்பும்,.
குண்டலம் என்றால் வளையம், நம்மிடம் உள்ள ஓஜஸ் என்ற சக்தி பாம்பு போல சுருண்டு வளையம் போலத் தேங்கிக் கிடப்பதால் அதற்கு குண்டலினி சக்தி என்று பெயர்.
அந்த சக்தி நம் உடம்பில் மூலாதாரம் என்ற மையத்தில் சுருண்டு கிடக்கிறது. மூலாதாரம் என்பது நம் உடம்பில் எருவாய்க்கும் கருவாய்க்கும் இடையில் உள்ள பகுதியாகும்.
ஆதிசங்கரர் இயற்றிய பவானி புஜங்கம் என்ற நூலின் நான்கு வரிகளிலேயே இந்த குண்டலினி சக்தியைப் பற்றி விளக்குகிறார்.
விடாதார பங்கேரு ஹாந்தர் விராஜத்
ஸீஷீம் நாந்தராலேதி
தேஜோல் ல ஸந்தீம்
பிரபந்தம் ஸீரதா மண்டலம் தீராவயந்திம்
ஸீதா மூர்த்தி மீட்ட மஹாநந்த ரூபம்
`ஆறு ஆதாரங்களென்னும் தாமரை மலரின் நடுவே நன்கு ஒலியுடன் இலங்கும் ஸ¨ஷ¨ம்நா நாடியினுடைய நடுவில், மிகுந்த காந்தியுடன் மிளிருகின்றதும், சந்த்ர மண்டலத்தைப் பெருகச் செய்கிறதும், பெருகி வருகின்ற அமுதத்தை பருகுகின்றதும் பரமானந்த வடிவாயுள்ள அமுதவடிவாம் குண்டலினி சக்தியை, பவானியை, அன்னையை துதிக்கிறேன்.
அதாவது மலர்ந்த தாமரை மலரின் வடிவம் கொண்ட மூலாதாரம் முதலிய ஆறு ஆதார சக்கரங்களுக்கு நடுவில் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறதும், ஒளியுடன் விளங்குவதுமான ஸ¨ஷ¨ம்நா நாடியின் நடுவில், அளவு கடந்த ஒளியுடன் இலங்குவதும், சிரசிலுள்ள சந்திரமண்டலத்தை பெருகச் செய்கின்றதும் அவ்விடமிருந்து இழிந்து வருகின்ற அமுதத்தை சுவைத்த வண்ணமிருப்பதும், பரமாநந்த வடிவாயமைந்துள்ளதும் அமுதமயமான வடிவம் கொண் டுள்ளதுமான குண்டலினி சக்தியாம் ஸ்ரீ பவானியை நான் துதிக்கிறேன் என்பது இதன் விளக்கமாகும்.
ஒரு சிறிய சுலோகத்தில் ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதர், இவ்வளவு பெரிய குண்டலினி சக்தியை பற்றிக் கூறியிருப்பது குறித்து ஆராய்ந்து பார்த்தால் விந்தையிலும் விந்தையாக இருப்பதுடன், நமது மனதைக் கவரக் கூடிய வல்லமை பெற்றுள்ளது என்பதும் புலனாகும்.
- இந்த ஆண்டு விழா கடந்த 22-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
- சிறப்பு நிகழ்ச்சியாக 7-வது நாள் திருவீதியுலா புறப்பாடு நடைபெற்றது.
செங்கோட்டை:
செங்கோட்டையில் வீற்றிருக்கும் ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத அழகிய மணவாளப்பெருமாள் கோவில் 11 நாள் பிரம்மோ ற்சவ விழா ஆண்டு தோறும் நடத்தப்படும். இந்நிலையில் இந்த ஆண்டு விழா கடந்த 22-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. இதனை யொட்டி நாள்தோறும் மூல வருக்கு காலை 9 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு உற்சவருக்கு அலங்கார திருமஞ்னமும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் காலையில் பல்ல க்கிலும், இரவில் பல்வேறு வகை யான வாகனத்திலும் வீதி வலம் வந்து பக்தர்களுக்கு பெருமாள் அருள்பாலித்தார். சிறப்பு நிகழ்ச்சியாக 5-வது நாள் வெள்ளி கருட வாகனத்தில் வந்தும், 7-வது நாள் வெள்ளைப்பூ சாத்தி திருவீதியுலா புறப்பாடு நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சியான 10-வது நாளான இன்று (திங்கட்கிழமை) காலை 9.10 மணியளவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்ற னர். முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நாளை 11-வது நாள் தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.
- மீனாட்சி சுந்த ரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடந்தது.
- கோவிலில் அம்மன் திருவீதி உலா தொடங்கியது.
குன்னூர்,
குன்னூர் உழவர் சந்தை, எல்ஐசி காலனி பகுதியில் உள்ள ஸ்ரீ ஜெய் பவானி அம்மன் கோவிலில் 28-ம்ஆண்டு ஆடி திருவிழா வெகு விமர்சையாக நடந்தது. இதனை முன்னிட்டு மகா கணபதி ஹோமம், மிருத்யஞ்சய ஹோமம், சுதர்சன் ஹோமம், கலச ஸ்தாபனம், ஸ்ரீ காமேஸ்வரி பாராயணம், ஸ்ரீ சவுபாக்கிய காமேஸ்வரி ஹோமம் ஆகியவை நடத்தப்பட்டது. அதன்பிறகு மீனாட்சி சுந்த ரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவிலில் அம்மன் திருவீதி உலா தொடங்கியது. அய்யப்பன் கோவில், உழவர் சந்தை, ராக் பி சாலை, காமராஜபுரம், ரேலி காம்பவுண்ட், ப்ளூஹில்ஸ் வழியாக சென்றது. ஆடித்திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.