search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்மிகம்"

    • சைவத்திற்கு ஆதாரம் பன்னிரு திருமுறைகள்.
    • பன்னிரு திருமுறைகளை உலகறிய செய்தவர் நம்பியாண்டார் நம்பி.

    சைவத்திற்கு ஆதாரம் பன்னிரு திருமுறைகள். அந்த திருமுறைகளை உலகத்தவர் அறியும் வண்ணம் செய்தவர், அதை பன்னிரு தொகுதிகளாக தொகுத்து பிரித்தவர் என்ற பெருமைக்குரியவர், நம்பியாண்டார் நம்பி.

    இவர் பிறந்த ஊரே திருநாரையூர் திருத்தலம். இந்த ஊரில் சவுந்தரநாயகி உடனாய சவுந்தரேசுவரர் கோவில் கொண்டு அருள்பாலிக்கிறார். இது நாரைக்கு முக்தி அளித்த திருத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில், இது 33-வது தலம்.


    தல வரலாறு

    புராண காலத்தில் ஆகாய மார்க்கமாக சில கந்தர்வர்கள் பறந்து சென்று கொண்டிருந்தனர். அவர்களில் தேவதத்தன் என்ற கந்தர்வன், பழங்களை சாப்பிட்டு விட்டு, அதன் கொட்டைகளை கீழே வீசிக் கொண்டே சென்றான்.

    அப்படி வீசப்பட்ட பழத்தின் கொட்டைகளில் சில, பூமியில் ஈசனை வேண்டி தவம் செய்து கொண்டிருந்த துர்வாச முனிவரின் மீது விழுந்தன.

    இதனால் தவம் கலைந்த துர்வாச முனிவர் கோபத்தில், "பறவையைப் போல பழத்தைத் தின்று கொட்டைகளை உதிர்த்த நீ, நாரையாக மாறுவாய்" என்று சாபம் கொடுத்தார்.

    தன் தவற்றை உணர்ந்து வருந்திய தேவதத்தன் மன்னிப்புக் கோரியும் பலன் இல்லை. நாரையாக மாறிய கந்தர்வன், இத்தலத்தில் உள்ள சவுந்தரேசுவரப் பெருமானை வணங்கி, சாப விமோசனம் தருமாறு கேட்டான்.

    இதற்காக அனுதினமும் தன் அலகால் கங்கை நீர் கொண்டு வந்து, இறைவனுக்கு அபிஷேகம் செய்து வந்தான். அவனது பக்தியை சோதிக்க நினைத்த சிவபெருமான், ஒரு நாள் கடும் புயலையும், மழையையும் உண்டாக்கினார்.

    நாரையாக இருந்த கந்தர்வன், அந்த புயல் மழையில் சிக்கி தவித்தான். இருந்தாலும் அலகில் கங்கைநீரை எடுத்துக் கொண்டு ஆலயம் நோக்கி வந்தான்.

    வழியில் கடுமையான புயல் காற்றின் காரணமாக அவனது சிறகுகள் ஒவ்வொன்றாக உதிர்ந்தது. ஆலயத்திற்கு சற்று தொலைவில் அனைத்து சிறகுகளும் விழுந்த நிலையில், தத்தித் தத்தியே ஆலயத்தை அடைந்து, இறைவனுக்கு தான் கொண்டு வந்த கங்கை நீரைக் கொண்டு அபிஷேகம் செய்தான்.

    இதனால் மகிழ்ந்த சிவபெருமான், நாரையாக இருந்த கந்தர்வனுக்கு மோட்சம் அளித்து அருள்புரிந்தார். நாரைக்கு இறைவன் அருள்பாலித்த காரணத்தால், இத்தலம் 'திருநாரையூர்' என்றானது.

    நாரையில் சிறகுகள் முற்றிலுமாக விழுந்த ஊர், சிறகிழந்தநல்லூர் என்ற பெயரில் திருநாரையூருக்கு கிழக்கே 2 மைல் தொலைவில் இருக்கிறது.

    பழமையான இந்த ஆலயம் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. என்றாலும் முழுவதும் கற்றளியாய் காட்சியளிக்கும் இந்த ஆலயம், சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்பதற்கு ஆதாரமாக விளங்குகிறது.

    இந்த ஆலயத்தில் பாக முனிவர், நாராயண முனிவர், அகத்தியர், மாமன்னன் ராஜராஜசோழன், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோர் வழிபட்டு பேறுபெற்றுள்ளனர்.

    இந்த ஆலயத்தில் தினமும் ஐந்து கால பூஜைகள் நடைபெறுகின்றது. மேலும் வழக்கமான பட்ச, மாத, வருடாந்திர உற்சவங்களும், திருவிழாக்களும் நடக்கிறது.

    தவிர நம்பியாண்டார் நம்பி முக்தியடைந்த தினத்தில் குரு பூஜை விழாவும், வைகாசி புனர்பூச நட்சத்திர நாளில் நாரை முக்தி அடைந்த நிகழ்வும் வெகுவிமரிசையாக நடந்தேறுகிறது.

    இத்தலத்தில் பவுர்ணமியில் இருந்து நான்காவது நாள் வரும் சதுர்த்தி தினத்தில் இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு, சங்கடங்கள் விலகும் என்பது நம்பிக்கை. அந்த நாளில் இவ்வாலயத்தில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் செய்யப்படுகிறது.

    சந்திரன் உதயமாகி வரும் நேரம் வரை நடைபெறும் இந்த பூஜையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தங்களின் சங்கடங்கள் தீர பிரார்த்தனை செய்கின்றனர்.


    ஆலய அமைப்பு

    கிழக்கு நோக்கிய இந்த ஆலயத்தின் முன்புறம் தல தீர்த்தமான செங்கழுநீர் தீர்த்தம் உள்ளது. கோவிலின் முன் வாசலைக்கடந்து உள்ளே சென்றால் நந்தி மண்டபம் உள்ளது. அடுத்ததாக உயர்ந்து நிற்கும் மூன்று நிலை ராஜகோபுரம் காணப்படுகிறது.

    அதை அடுத்து மகா மண்டபத்தில் சிவகாமி உடனாய நடராஜர் தென்முகம் நோக்கி அருள்கிறார். இதையடுத்து கருவறையில் கிழக்கு நோக்கி சிவலிங்க ரூபமாக சவுந்தரேசுவரர் வீற்றிருக்கிறார். அர்த்தமண்டபத்தில் செப்புத் திரு மேனிகள் இடம்பெற்றுள்ளன.

    ஆலயத்தின் முதல் பிரகாரத்தில் தென்பகுதியில் தனிச்சன்னிதியில் சமயாச்சாரியார்கள், சந்தனாச்சாரியார்கள், சேக்கிழார், அகத்தியர், பாகமுனிவர், நாராயணமுனிவர் திருவுருவங்கள் உள்ளன. பிரகாரத்தின் மேற்கு பகுதியில் கிழக்கு நோக்கிய தனிச் சன்னிதியில் பொள்ளாப் பிள்ளையார் அருள்பாலிக்கிறார்.


    இவர் உளியை வைத்து செதுக்காத பிள்ளையார் ஆவார். இவரது சன்னிதியின் மகாமண்டபத்துள் ஆறுமுகன் உருவமும், நம்பியாண்டார் நம்பி, ராஜராஜசோழன் ஆகியோரது திருவுருவங்களும் இடம்பெற்றுள்ளன


    வள்ளி - தெய்வானை சமேத சுப்பிரமணியர், கஜலட்சுமி, வடக்கு பிரகாரத்தில் திருமூலநாதர் எனப்படும் சுயம்பிரகாசர், சண்டிகேசுவரர் சன்னிதிகளும் இருக்கின்றன.

    கருவறைக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை வீற்றிருக்க, அடுத்ததாக சனி பகவான், மூன்று பைரவர்கள் மற்றும் சூரியன் ஆகியோர் உள்ளனர்.

    வெளிப்பிரகாரத்தில் கொடிக்கம்பத்தின் அருகில் தென்திசை நோக்கி திரிபுரசுந்தரி அம்பாள் அருள்பாலிக்கிறார். நம்பியாண்டார் நம்பிக்கு ஆலயத்தின் வெளியே முகப்பு வாசலுக்கு தெற்கில் தனிக் கோவில் இருக்கிறது.

    இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரி சனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    சிதம்பரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காட்டுமன்னார்கோவிலில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், சிதம்பரத்தில் இருந்து 17 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது, திருநாரையூர் திருத்தலம்.

    காட்டுமன்னார்கோவிலில் இருந்து அடிக்கடி பேருந்து வசதி உள்ளது. திருநாரையூருக்கு அருகாமையில் உள்ள ரெயில் நிலையம், சிதம்பரம் ஆகும்.

    • மதுரை ஸ்ரீசோமசுந்தரப் பெருமாள் புட்டுத் திருவிழா.
    • திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் கிளி வாகன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆவணி-28 (வெள்ளிக்கிழமை)

    பிறை: வளர்பிறை.

    திதி: தசமி இரவு 8.18 மணி வரை. பிறகு ஏகாதசி.

    நட்சத்திரம்: பூராடம் இரவு 6.27 மணி வரை. பிறகு உத்திராடம்.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். மதுரை ஸ்ரீசோமசுந்தரப் பெருமாள் புட்டுத் திருவிழா. சுவாமி, அம்பாள் விருஷபாருட தரிசனம். ராமேசுவரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தர குசாம்பிகை புறப்பாடு. கரூர் தான்தோன்றி மலை ஸ்ரீகல்யாண வெங்கட்ரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் கிளி வாகன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மேன்மை

    ரிஷபம்-நலம்

    மிதுனம்-உயர்வு

    கடகம்-நன்மை

    சிம்மம்-ஆர்வம்

    கன்னி-களிப்பு

    துலாம்- மாற்றம்

    விருச்சிகம்-சிந்தனை

    தனுசு- பாராட்டு

    மகரம்-நட்பு

    கும்பம்-பணிவு

    மீனம்-பாசம்

    • வைணவ சமயத்தில் 108 திவ்ய தேசங்கள் உண்டு.
    • 106 திவ்ய தேசங்கள் பூமியில் உள்ளன.

    ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவில்களை 'திவ்ய தேசங்கள்' என்று அழைப்பார்கள். அந்த திவ்ய தேசங்களில் ஒன்றுதான், நேபாளத்தில் உள்ள 'முக்திநாத்'.

    உண்மையில் முக்திநாத் என்பது ஒரு சிறிய கிராமம் தான். அங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயத்தை சுற்றி சாலமரங்கள் நிறைந்து காணப்பட்டதால், இந்த ஆலயம் 'சாளக்கிராம ஷேத்திரம்' என்று அழைக்கப்படுகிறது.


    இமயமலைச் சாரலில் மிக அதிகமான உயரத்தில் இருக்கும் ஆலயம் இது. இங்கே அருளும் நாராயணர், சுயம்பு மூர்த்தியாக உருவானவர் ஆவார்.

    நேபாளத்தின் தலைநகரான காட்மாண்டில் இருந்து 250 கிலோமீட்டர் தூரத்தில் முக்திநாத் ஷேத்திரம் அமைந்துள்ளது.

    இந்த திவ்யதேசத்தை திருமங்கையாழ்வாரும், பெரியாழ்வாரும் 12 பாடல்களால், மங்களாசாசனம் செய்துள்ளனர். முக்திநாத் கிராமத்தில் உள்ளவர்கள் இந்த கோவிலை 'முக்தி நாராயண ஷேத்திரம்' என்று அழைக்கிறார்கள்.

    இதற்கு மேல் 105 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது, தாமோதர குண்ட் (நீர்த்தேக்கம்). இதைத்தான் உள்ளூர் மக்கள் 'முக்திநாதர் ஆலயம்' என்கிறார்கள்.

    முக்திநாத் கோவில் பல அற்புதங்கள் நிறைந்தது. இங்கே சிறிய சன்னிதி, நேபாள பாணியில் கட்டப்பட்டுள்ளது. கோவிலில் சிறிய யாகசாலையும் உண்டு. கோவிலின் உட்புறம் முக்தி நாராயணர், ஸ்ரீதேவி - பூதேவியுடன் அமர்ந்த திருக்கோலத்தில் மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார்.

    மிகப்பழமையான நூல்களில், இந்த ஆலய இறைவன் நின்ற கோலத்தில் வடக்கு நோக்கி சேவை சாதிப்பதாகவே சொல்லப்பட்டுள்ளது. திருமங்கை ஆழ்வார் தனது பாசுரத்தில் கூட இதை உறுதி செய்கிறார். கால மாற்றத்தில்தான், இறைவன் அமர்ந்த கோல தோற்றத்திற்கு மாறியிருக்க வேண்டும்.

    தவிர இந்த ஆலயத்தில் கருடன், சந்தோஷமாதா, லலிதா, விநாயகர், சாளக்கிராம ரூபங்கள், பார்வதி பரமேஸ்வரன் ஆகியோரும் சிறிய விக்கிரக வடிவில் காட்சி தருகிறார்கள்.


    இந்த கோவிலில் அர்ச்சனை, சிறப்பு வழிபாடுகள் என்று எதுவும் கிடையாது. சிறு மணியை பிரார்த்தனையாக கட்டும் வழக்கம் மட்டும் உள்ளது. லட்ச தீபம் ஏற்றும் வழிபாடு உண்டு. இங்குள்ள சிறிய யாகசாலையில் எப்பொழுதும் அக்னி எரிந்துகொண்டிருக்கும். அதில் நாமே ஹோமம் செய்துகொள்ளலாம்.

    கருவறையில் உள்ள இறைவனுக்கு நம் ஊரில் நடப்பது போல அபிஷேகம் செய்வது கிடையாது. செப்பு தட்டில் ஐந்து கிண்ணங்கள் இருக்கும். அதில் சந்தனம், குங்குமம், ஜவ்வாது போன்றவை இருக்கும். அவற்றை ஒரு துணியில் தொட்டு, முக்திநாதரை துடைப்பார்கள். அதுதான் அங்கே அபிஷேகம் ஆகும்.

    இந்த ஆலயத்தில் 108 தீர்த்தங்கள் செயற்கையாக அமைக்கப்பட்டுள்ளன. ஒரு தொட்டியில் தனித்தனி குழாய் வைத்து இந்த தீர்த்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது தவிர, பாவ புண்ணிய தீர்த்தங்கள் என்று இரண்டு தீர்த்தங்கள் உள்ளன.


    மேற்கண்ட அனைத்து தீர்த்தங்களிலும் நவம்பர் முதல் மார்ச் வரையான மாதங்களில் கடுமையான குளிர் காரணமாக நீராட சிரமமாக இருக்கும்.

    பனி சூழ்ந்த உயரமான மலையில் அமைந்துள்ள இந்த ஆலயம், அற்புதமான அனுபவங்களை கட்டாயம் கொடுக்கும். வாழ்க்கையில் ஒரு முறை நிச்சயம் தரிசிக்க வேண்டிய ஆலயம் இதுவாகும்.

    இந்த ஆலயத்திற்கு சென்று திரும்புபவர்கள், காட்மாண்டு சென்று அங்கும் பல ஆலயங்களை தரிசிக்கலாம். மேலும் இங்கு சாளக்கிராமம் வாங்கிக்கொண்டு வந்து நம் இல்லத்தில் வைத்து பூஜிப்பது மிகுந்த புண்ணியத்தைத் தரும்.

    சாளக்கிராம அபிஷேக தீர்த்தமானது, கங்கை நீருக்கு சமம் என்பார்கள். மேலும் சாளக்கிராமத்தை துளசி கொண்டு பூஜிப்பவர்களின் இல்லங்களில் நரக பயம் இருக்காது.

    செல்லும் வழி

    சென்னையில் இருந்து ரெயில் மூலம் அல்லது விமானத்தின் மூலம் கோரக்பூர் சென்று, கோரக்பூரில் இருந்து டாக்சி மூலம் சுனோலி எல்லையை அடைய வேண்டும். சுனோலி எல்லையை ஐந்து நிமிடம் நடந்து கடக்கலாம். அந்த இடத்திற்கு 'பைரவா' என்று பெயர்.

    அங்கிருந்து விமானத்தின் மூலம் அல்லது பஸ் அல்லது வேறு வாகனத்தின் மூலமும் போக்ரா என்ற இடத்தை அடையலாம். போக்ராவில் ஒரு நாள் தங்க வேண்டியதிருக்கும். போக்ராவில் இருந்து முக்திநாத் செல்ல அனுமதி வாங்க வேண்டும்.

    போக்ராவில் இருந்து ஜேம்சன் என்ற இடத்திற்குச் சென்று அங்கிருந்து முக்திநாத் செல்ல வேண்டும். முக்திநாத்தில் இருந்து கோவிலை அடைய நடந்து அல்லது குதிரையில் செல்ல வேண்டும்.

    108 திவ்ய தேசங்கள்

    வைணவ சமயத்தில் 108 திவ்ய தேசங்கள் உண்டு. அவற்றில் 106 திவ்ய தேசங்கள் பூமியில் உள்ளன. 'திருப்பாற்கடல்', 'வைகுண்டம்' ஆகிய இரண்டு திவ்ய தேசங்களை தரிசிக்கும் பாக்கியம் வானுலகில்தான் வாய்க்கும்.

    பூமியில் உள்ள 106 திவ்ய தேசங்களில் 105 இந்தியாவிலும், நேபாளத்தில் ஒன்றும் அமைந்துள்ளன. நேபாளத்தில் அமைந்த திவ்ய தேசம்தான் 'முக்திநாத்' ஆகும்.

    ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவில்களின் தொகுப்பே '108 திவ்ய தேசங்கள்'. மங்களாசாசனம் என்பது, திருமாலையும் அவர் இருந்து ஆட்சி செய்யும் தலங்களையும் பாடிய பாடல்களை குறிக்கும்.

    108 திவ்ய தேசங்களையும் தொகுத்துக் காட்டியவர், அழகிய மணவாளதாசர் என்பவர் ஆவார். இவர் திருமலை நாயக்கர் ஆட்சியில், அலுவலராகப் பணியாற்றியவர். 108 ஆலயங்களையும், நாடு வாரியாகப் பிரித்து, ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வெண்பா பாடியுள்ளார். அவை 'நூற்றெட்டு திருப்பதி அந்தாதி' என்று அழைக்கப்படுகிறது.

    • சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆவணி-27 (வியாழக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: நவமி இரவு 7.05 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம்: மூலம் இரவு 6.31 மணி வரை பிறகு பூராடம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். மதுரை சொக்கநாதப் பெருமான் நரிகளை பரிகளாக்கிய திருவிளையாடல். சுவாமி தங்கக் குதிரையில் புறப்பாடு. தென்காசி, கடையம் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் தெப்ப உற்சவம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி காலை சிறப்பு குருவார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சிறப்பு அபிஷேகம், குங்குலியக்கலய நாயனார் குருபூஜை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பாசம்

    ரிஷபம்-லாபம்

    மிதுனம்-பரிசு

    கடகம்-வரவு

    சிம்மம்-செலவு

    கன்னி-ஆதாயம்

    துலாம்- சலனம்

    விருச்சிகம்-வெற்றி

    தனுசு- விருப்பம்

    மகரம்-நிறைவு

    கும்பம்-ஆர்வம்

    மீனம்-பொறுமை

    • மனிதப் பிறவி எடுப்பது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல.
    • மனித பிறவியில் செய்யும் பாவங்கள் கணக்கிடப்பட்டு பிறவிகள் தரப்படுகிறது.

    'போன ஜென்மத்தில் என்னதான் பாவம் செய்தேனோ? இந்த பிறவியில் மனிதனாக பிறந்து இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து கொண்டிருக்கின்றேன்!' இதை கூறாத மனிதர்களே கிடையாது.

    ஆனால் மனிதப் பிறவி எடுப்பது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல. முதலில் தாவரமாக பிறந்து, இரண்டாவதாக நீர்வாழ் உயிரினமாக பிறவி எடுத்து, மூன்றாவதாக ஊர்வன இனத்தில் பிறந்து, நான்காவதாக பறவையாக பிறந்து, ஐந்தாவது ஜென்மத்தில் விலங்காக பிறந்து, இப்படி ஐந்து பிறவிகளை எடுத்து பிறருக்கு உதவி செய்ததன் மூலம் தான் நம்மால் மனிதப் பிறவியை எடுக்க முடியும்.

    மனித பிறவி எடுப்பது எவ்வளவு கஷ்டங்கள் இருக்கின்றது என்பதை இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். இப்பேர்ப்பட்ட பிறவிதான் மனிதப்பிறவி.

    மனிதப் பிறவியில் நாம் செய்யும் பாவங்கள் கணக்கிடப்பட்டு தான், அடுத்த பிறவியானது நமக்கு தரப்படுகிறது என்று கருடபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த பிறவியில் என்னென்ன பாவங்கள் செய்தால், அடுத்த பிறவியில் நாம் எப்படி பிறப்போம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

    * புழுக்கள் நெளியும் அசுத்தமான இடங்களில் வசிப்பவர்கள், போன ஜென்மத்தில் அடுத்தவர்கள் பொருளை திருடியவர்களாக இருந்திருப்பார்கள்.

    * துர்நாற்றம் வீசும் வாய் உடையவர்கள், வாயில் புழுக்கள் உருவாகும் பிரச்சனைகளை கொண்டவர்கள், போன ஜென்மத்தில் மதுபானம் விற்றவர்கள், குடி போதைக்கு அடிமையாக இருந்தவர்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

    * போன ஜென்மத்தில் கொலை செய்தவன், இந்த ஜென்மத்தில் குஷ்டரோகியாக பிறந்திருப்பான். அது மட்டுமல்லாமல் உடலில் கெட்ட நீர் சேர்ந்து துர்நாற்றம் வீசும்.

    * இந்த ஜென்மத்தில், கொலை செய்தால் அடுத்த ஜென்மத்தில் குஷ்டரோகியாக பிறப்பது கட்டாயம் நடக்கும்.

    * பசுவை கஷ்டப்படுத்தியவர்கள், பிறர் வீட்டிற்கு தீ வைத்தவர்கள் இந்த ஜென்மத்தில் ஊமையாகவும், குஷ்டரோகியாகவும் பிறந்திருப்பார்கள்.

    * போன ஜென்மத்தில் அதிகமாக பொய் பேசி அடுத்தவர்களை ஏமாற்றி இருந்தால், இந்த ஜென்மத்தில் ஊமையாக பிறந்து இருப்பார்கள்.

    * போன ஜென்மத்தில் குருவுக்கு துரோகம் செய்திருந்தால், இந்த ஜென்மத்தில் விகாரமான தோற்றத்தோடு பிறவி எடுத்திருப்பார்கள்.

    * ஒருமுறைகூட இறை வழிபாடு செய்யாதவர்கள், புனித தீர்த்தத்தில் நீராடமல் இருப்பவர், இப்படிப்பட்டவர்கள் ஆளில்லா காட்டில் குரங்காக பிறவி எடுப்பார்கள்.

    * பல புரோகிதர்கள் ஒன்றாக இருக்கும் இடத்தில், ஒரு புரோகிதர் மட்டும் தவறு செய்தால் அந்த பாவம் அவரை மட்டும் போய் சேராது. அந்த இடத்தில் இருக்கும் அனைத்து புரோகிதர்களும் அடுத்த ஜென்மத்தில் கழுதையாக பிறவி எடுப்பார்கள்.

    * ஒழுக்கம் இல்லாதவன், வேத சாஸ்திரத்தை நன்கு அறிந்து, புரோகிதராக இருந்தால் அடுத்த ஜென்மத்தில் அவர் கட்டாயம் பன்றி பிறவி எடுப்பார்.

    * இந்த பிறவியில் தரித்திர நிலைமையோடு வாழும் ஒருவர், போன ஜென்மத்தில் கஞ்சனாக இருந்திருப்பார்.

    * தங்கத்தை திருடுபவர்கள் அடுத்த ஜென்மத்தில் புழுக்கள் நிறைந்த நரகத்தில் வேலை செய்வான்.

    * பிறன் மனைவியின் மீது ஆசைப்படுபவன் அடுத்த ஜென்மத்தில் சண்டாளனாக பிறவி எடுப்பான்.

    * பசி என்று வந்தவருக்கு சாப்பாடு இல்லை என்று சொல்லி துரத்தி அடித்தால் அடுத்த ஜென்மத்தில் அவருக்கு புத்திரபாக்கியம் கிடைக்காது.

    * கோவில் சொத்தை அபகரித்நவர்கள், பொய்க்கணக்கு எழுதுபவர்கள் எல்லாம் செவிட்டு மாடாகவும், குருட்டு மாடாகவும் பிறவி எடுப்பார்கள்.

    * அடுத்தவர்களை துன்புறுத்தி பணம் சேர்ப்பவன், அடுத்த பிறவியில் பூனையாக பிறப்பான்.

    * பசுமையாக இருக்கும் மரம், செடி, கொடிகளை வீழ்த்தி எரித்தவன் அடுத்த ஜென்மத்தில் மின்மினிப்பூச்சியாக பிறவி எடுப்பான்.

    * வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தாளியை இழிவாக நடத்தி பழைய சாப்பாடு போட்டு அவமதிப்பவர்கள் அடுத்த ஜென்மத்தில் கருங்குரங்காக பிறவி எடுப்பான்.

    * அடுத்தவர்களுக்கு பயன்தரக்கூடிய பூ காய் கனி பழம் நிறைந்த மரத்தை எவனொருவன் வெட்டுகின்றானோ, அவன் அடுத்த ஜென்மத்தில் எதற்கும் உபயோகம் இல்லாதவனாக பிறவி எடுப்பான்.

    * நீதிக்குப் புறம்பாக நடந்து கொள்பவன், தவறாக தீர்ப்பு சொல்பவன் அடுத்த ஜென்மத்தில் கோட்டான் பிறவி எடுப்பான். கோள் சொல்லுபவர்கள் பல்லியாகவும், தவளையாகவும் பிறவி எடுக்கிறார்கள்.

    * உழைப்புக்குத் தகுந்த ஊதியம் கொடுக்காத முதலாளிகள், அட்டைபூச்சி ஆக அடுத்த ஜென்மத்தில் பிறப்பார்கள்.

    * அதிகப்படியான லஞ்சத்தை வாங்கிக்கொண்டு, அநியாயத்திற்கு துணை போகும் நபர்கள் அடுத்த ஜென்மத்தில் ஈ கொசு மூட்டைப்பூச்சி ஆக பிறவி எடுப்பார்கள். இவையெல்லாம் தவறு செய்பவர்களுக்கு கிடைக்கும் தண்டனைகள் தான்.

    மேற்குறிப்பிட்டுள்ள அனைத்தையும் நாராயணன், கருடனுக்கு கூறியதாக கருட புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

    இந்த ஜென்மத்தில் இந்த தவறை செய்தால், அடுத்த ஜென்மத்தில் மேல் குறிப்பிட்டுள்ள தண்டனைகள் கட்டாயம் நமக்கு கிடைக்கும்.

    இந்த ஜென்மத்தில் கொசு, புழு, பூச்சி, பல்லி, குரங்கு, முதலை, பன்றி இப்படியாக பிறந்திருக்கும் ஒவ்வொரு உயிரினமும் போன ஜென்ம மனிதப் பிறவியில் இப்படிப்பட்ட பாவங்களைச் செய்தவர்கள்தான் என்பதையும் இதன் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.

    இதையெல்லாம் படிக்கும்போது முடிந்தவரை தவறுகள் செய்யாமல் இருப்பது தான் நமக்கு நல்லது. நீங்கள் அறிந்தும், அறியாமலும் தவறுகள் செய்திருந்தால் கூட அதற்கான பிராயச்சித்தத்தை உடனே தேடிக் கொள்ளுங்கள். சில தவறுகளுக்கு பிராயச்சித்தம் கூட தேட முடியாது. தவறு செய்யாமல் வாழ்வதே உத்தமம்.

    அடுத்த ஜென்மத்தில் மேற்குறிப்பிட்டுள்ள இப்படி ஒரு பிறவி எடுக்க யாரும் விரும்பமாட்டார்கள். சொர்க்கம் வேண்டுமா? நரகம் வேண்டுமா? அது உங்கள் கையில் தான் உள்ளது.

    • கல்விதானம் மற்றும் கல்விக்காக உதவியவர்கள், பிரம்மலோகத்தில் வாழ்வர்.
    • பயனுள்ள மரங்களை நட்டு பாதுகாப்பவர், தபோ லோகத்தை அடைவர்.

    திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் மகாவிஷ்ணுவிடம், கருட பகவான் மனித பிறப்பு மற்றும் இறப்புகளைப் பற்றி கேட்டறிந்த விஷயங்கள் அடங்கிய தொகுப்பே 'கருடபுராணம்' என்று அழைக்கப்படுகிறது. அதில் இருந்து சில தகவல்கள் உங்களுக்காக...


    * அன்னதானம் செய்தால், விரும்பிய உலகத்தில் ஒரு வருடம் வீதம் பருக்கைகளின் படி சுகித்திருப்பார்கள்.

    * கோ தானம் செய்தால் பசுக்களின் உலகமான கோலோகத்தில் கிருஷ்ணருடன் வாழ்வர்.

    * கன்றை ஈனும் சமயத்தில், பசுவை கோவிலுக்கு தானம் கொடுத்தவருக்கு கட்டாயம் வைகுண்ட வாசம் உண்டு.

    * குடை தானம் செய்தவர், 1000 ஆண்டுகள் வருணலோகத்தில் சுகம் அனுபவிப்பார்.

    * தாமிரம், நெய், கட்டில், மெத்தை, ஜமுக்காளம், பாய், தலையணை போன்றவற்றில் எதை தானம் செய்தாலும், சந்திரலோகத்து சுகங்களை அனுபவிப்பார்.

    * வஸ்திர தானம் கொடுத்தவருக்கு, வாயு லோகத்தில் வாழும் வாய்ப்பு கிடைக்கும்.

    * வஸ்திரத்தை கடவுளுக்கு சாற்றினால், எந்த கடவுளுக்கு சாற்றுகிறார்களோ, அவர்களின் உலகத்தில் வாழுவர்.

    * ரத்தம், கண், உடல் தானம் கொடுத்தவர்கள், அக்னி லோகத்தில் ஆனந்தமாக இருப்பார்கள்.

    * விஷ்ணு - சிவ ஆலயத்துக்கு யானை தானம் கொடுத்தவர்கள், சொர்க்கத்தில் இந்திரனுக்கு சமமான ஆசனத்தில் அமர்ந்திருப்பார்கள்.

    * குதிரையும், பல்லக்கும் தானம் கொடுத்தவருக்கு, 14 இந்திரர்களின் காலம் வரை வருண லோகத்தில் வாழும் வாய்ப்பு அமையும்.

    * ஆலயங்களில் நந்தவனங்களை அமைத்துக் கொடுப்பவர், வாயு லோகத்தில் ஒரு மன்வந்த்ர காலம் வாழ்வர்.

    * தானியங்களையும், நவரத்தினங்களையும் தானம் செய்தவர், மறு ஜென்மத்தில் அறிவாளியாகவும், தீர்க்காயுள் கொண்டவராகவும் வாழ்வர்.

    * பயன் கருதாது தானம் செய்பவரின் மரணம் உன்னதமாய் அமைவதோடு, அவருக்கு மீண்டும் பிறவிகள் இருக்காது.

    * நற்செயலை விரும்பி செய்கிறவர்கள், சூரியலோகம் செல்வார்கள்.

    * தீர்த்த யாத்திரை செல்பவர்களுக்கு, சத்தியலோகத்தில் இருக்கும் வாய்ப்பு கிட்டும்.

    * ஒரு பெண்ணை ஒழுக்கமாக வளர்த்து விவாகம் செய்து கொடுத்தவருக்கு, 14 இந்திரனின் ஆயுட்காலம் வரை அமராவதியில் இன்பமாய் இருக்கும் வாய்ப்பு அமையும்.

    * நீர் நிலைகளை சீர்திருத்துபவரும், உண்டாக்குபவரும், ஜனலோகத்தில் நீண்டகாலம் வாழ்வார்கள்.

    * பயனுள்ள மரங்களை நட்டு பாதுகாப்பவர், தபோ லோகத்தை அடைவர்.

    * தெய்வம் பவனி வரும் வீதிகளை செம்மைப்படுத்துபவர், 10 ஆயிரம் ஆண்டுகள் இந்திரலோகத்தில் சுகித்திருப்பர்.

    * சுவையான பழங்களை தானம் கொடுத்தவருக்கு, ஒரு கனிக்கு ஒரு ஆண்டு வீதம் கந்தர்வ லோகத்தில் வாழும் பாக்கியம் கிடைக்கும்.

    * ஒரு சொம்பு நல்ல நீரை தானம் செய்தவர்களுக்கு, கயிலாய வாசம் கிடைக்கும்.

    * கல்விதானம் மற்றும் கல்விக்காக உதவியவர்கள், பிரம்மலோகத்தில் வாழ்வர்.

    * பறவைகளை காப்பாற்றியவர்கள், கருடனின் ஆசிபெற்று வைகுண்டம் சென்றடைவர்.

    * விலங்குகளை காப்பாற்றியவர்கள், நந்திதேவரின் ஆசி பெற்று சிவலோகம் அடைவர்.

    • திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
    • திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் ஸ்ரீகாந்திமதியம்மன் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆவணி - 26 (புதன்கிழமை)

    பிறை : வளர்பிறை.

    திதி : அஷ்டமி இரவு 7.22 மணி வரை. பிறகு நவமி.

    நட்சத்திரம் : கேட்டை இரவு 6.07 மணி வரை. பிறகு மூலம்.

    யோகம் : சித்த/மரண யோகம்

    ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமி சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை

    இன்று ஜேஷ்டாஷ்டமி. திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். விருதுநகர் ஸ்ரீசுவாமி ஸ்ரீஅம்பாள் விருஷபாருட தரிசனம். மதுரை ஸ்ரீசோமசுந்தரப் பெருமாள் வளையல் விற்றருளிய காட்சி. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.

    மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் ஸ்ரீகாந்திமதியம்மன் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. திருச்சேறை ஸ்ரீசாரநாதர் அலங்காரம் வழிபாடு.

    இன்றைய ராசி பலன்

    மேஷம் - நம்பிக்கை

    ரிஷபம் - பரிசு

    மிதுனம் - உதவி

    கடகம் - புகழ்

    சிம்மம் - நலம்

    கன்னி - நன்மை

    துலாம் - லாபம்

    விருச்சிகம் - யோகம்

    தனுசு - கீர்த்தி

    மகரம் - வெற்றி

    கும்பம் - இன்பம்

    மீனம் - சலனம்

    • திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
    • திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம்

    10-ந்தேதி (செவ்வாய்)

    • விருதுநகர் சுவாமி குதிரை வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் பவனி.

    • சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட பூமாலை சூடியருளல்.

    • திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    • சமநோக்கு நாள்.

    11-ந்தேதி (புதன்)

    • மதுரை சோமசுந்தரர் வளையல் விற்றருளிய காட்சி, இரவு சுவாமி பட்டாபிஷேகம்.

    • அகோபிலமடம் திருமத் 2-வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திர வைபவம்.

    • திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்ம ருக்கு திருமஞ்சனம்.

    • சமநோக்கு நாள்.

    12-ந்தேதி (வியாழன்)

    • திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூல தீர்த்தம்.

    • சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    • திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    • திருபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு.

    • கீழ்நோக்கு நாள்.

    13-ந்தேதி (வெள்ளி)

    • சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.

    • ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்க பல்லக்கில் புறப்பாடு.

    • திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் புறப்பாடு.

    • திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.

    • கீழ்நோக்கு நாள்.

    14-ந்தேதி (சனி)

    • சர்வ ஏகாதசி.

    • திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் மாடவீதி புறப்பாடு.

    • திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம்

    • திருமாலிருஞ்சோலை கள்ளழகர், மதுரை கூடலழகர் தலங்களில் சுவாமி புறப்பாடு.

    • மேல்நோக்கு நாள்.

    15-ந்தேதி (ஞாயிறு)

    • முகூர்த்த நாள்.

    • ஓணம் பண்டிகை.

    • மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் சட்ட தேரில் பவனி, இரவு சப்தாவர்ணம்.

    • சாத்தூர் வேங்கடேச பெருமாள் தோளுக்கினியானில் பவனி.

    • மேல்நோக்கு நாள்.

    16-ந்தேதி (திங்கள்)

    • முகூர்த்த நாள்.

    • சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

    • திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்.

    • திருத்தணி முருகனுக்கு பால் அபிஷேகம்.

    • மேல்நோக்கு நாள்.

    • விருதுநகர் ஸ்ரீசுவாமி குதிரை வாகனத்திலும், ஸ்ரீஅம்பாள் சிம்ம வாகனத்திலும் பவனி.
    • சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆவணி - 25 (செவ்வாய்க்கிழமை)

    பிறை : வளர்பிறை.

    திதி : சப்தமி இரவு 7.10 மணி வரை. பிறகு அஷ்டமி.

    நட்சத்திரம் : அனுஷம் மாலை 5.13 மணி வரை. பிறகு கேட்டை.

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி, வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம்

    சுவாமி மலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம், ஆராதனை வழிபாடு. விருதுநகர் ஸ்ரீசுவாமி குதிரை வாகனத்திலும், ஸ்ரீஅம்பாள் சிம்ம வாகனத்திலும் பவனி.

    குரங்கணி ஸ்ரீமுத்துமாலையம்மன் பவனி. குலைச் சிறைநாயனார் குருபூஜை. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம் - லாபம்

    ரிஷபம் - ஆர்வம்

    மிதுனம் - செலவு

    கடகம் - உதவி

    சிம்மம் - வரவு

    கன்னி - இன்பம்

    துலாம் - முயற்சி

    விருச்சிகம் - உற்சாகம்

    தனுசு - தனம்

    மகரம் - சிந்தனை

    கும்பம் - பாராட்டு

    மீனம் - நம்பிக்கை

    • ஆவணி திருவிழா 10 நாட்கள் நடப்பது வழக்கம்.
    • ஆவணி திருவிழா மட்டும் திருமாலுக்காக நடத்தப்படுகிறது.

    சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் மார்கழி பெருந்திருவிழா, சித்திரை தெப்பத்திருவிழா, மாசி திருக்கல்யாண விழா மற்றும் ஆவணி திருவிழா ஆகியவை 10 நாட்கள் நடப்பது வழக்கம். இதில் ஆவணி திருவிழா மட்டும் திருமாலுக்காக நடத்தப்படுகிறது.

    அந்த வகையில் இன்று காலை சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி சந்நதியின் அருகிலுள்ள திருவேங்கடவிண்ணவரம் பெருமாள் சந்நதியின் எதிரிலுள்ள கொடி மரத்தில் திருக்கொடியேற்றப்பட்டது. விழா நாட்களில் தினமும் வாகனபவனி, சிறப்பு வழிபாடு நடக்கிறது.

    ஒன்பதாம் நாள் விழா அன்று தேரோட்டம் நடக்கிறது. மறுநாள் காலையில் ஆராட்டு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தேவஸம் போர்டு செய்து வருகிறது.

    • இன்று சஷ்டி விரதம்.
    • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆவணி - 24 (திங்கட்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : சஷ்டி இரவு 6.26 மணி வரை பிறகு சப்தமி

    நட்சத்திரம் : விசாகம் பிற்பகல் 3.49 மணி வரை பிறகு அனுஷம்

    யோகம் : மரண, சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர் சிவன் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம்

    இன்று சஷ்டி விரதம். மதுரை ஸ்ரீ நவநீத கிருஷ்ண சுவாமி வெள்ளி தோளுக்கினியானில் பவனி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    மதுரை ஸ்ரீ சோமசுந்தரப் பெருமான் உலவாய்க் கோட்டையருளிய திருவிளையாடல் நந்தீஸ்வரர்யாளளி வாகனத்தில் புறப்பாடு. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு.

    கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம் - உழைப்பு

    ரிஷபம் - மகிழ்ச்சி

    மிதுனம் - சாந்தம்

    கடகம் - சிந்தனை

    சிம்மம் - மேன்மை

    கன்னி - லாபம்

    துலாம் - இன்பம்

    விருச்சிகம் - பயிற்சி

    தனுசு - லாபம்

    மகரம் - உவகை

    கும்பம் - சிறப்பு

    மீனம் - ஓய்வு

    • விருதுநகர் ஸ்ரீ சொக்கநாதர் உற்சவம் ஆரம்பம்.
    • பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் தேரோட்டம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆவணி-21 (வெள்ளிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: திருதியை நண்பகல் 1.47 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம்: அஸ்தம் காலை 9.18 மணி வரை பிறகு சித்திரை

    யோகம்: அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சுபமுகூர்த்த தினம். விருதுநகர் ஸ்ரீ சொக்கநாதர் உற்சவம் ஆரம்பம். சுவாமி கைலாச வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் திருவீதியுலா. மதுரை ஸ்ரீ நவநீதிகிருஷ்ண சுவாமி மச்சாவாதாரம். உப்பூர் ஸ்ரீ விநாயகப் பெருமான், பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் தேரோட்டம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமிக்கு திருமஞ்சனம். ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. மதுரை ஸ்ரீ சோமசுந்தரம் பெருமான் நாரைக்கு முக்தியருளிய காட்சி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சனம், புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நன்மை

    ரிஷபம்-சுகம்

    மிதுனம்-வரவு

    கடகம்-கடமை

    சிம்மம்-கவனம்

    கன்னி-முயற்சி

    துலாம்- பயிற்சி

    விருச்சிகம்-விருத்தி

    தனுசு- அனுகூலம்

    மகரம்-பயணம்

    கும்பம்-பரிவு

    மீனம்-பரிசு

    ×