என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெய்ராம் ரமேஷ்"

    • சமூக நல்லிணக்கத்தை சேதப்படுத்தும் பாஜகவின் தொடர்ச்சியான முயற்சிகளில் இதுவும் ஒன்று.
    • சிறுபான்மையினரை அரக்கர்களாக சித்தரிக்க பாஜக முயற்சி.

    வக்பு வாரிய திருத்த மசோதாவை அரசியலமைப்பின் மீதான தாக்குதல் என்று காங்கிரஸ் கடுமையாக சாட்டியுள்ளது. சிறுபான்மை சமூகங்களை அரக்கர்களாக சித்தரிக்கும் பாஜகவின் முயற்சிகளின் ஒரு பகுதி தான் இது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    இன்று டெல்லியில் காங்கிரஸ் மாநிலங்களவை எம்பியும் தேசிய செய்திதொடர்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது பேசிய அவர், 2024 இல் பாஜக கொண்டு வந்த வக்பு திருத்த மசோதா, தீவிரமான குறைபாடுகளை உடையது. இந்த மசோதா, மதங்களைக் கடந்து அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் அரசியலமைப்பு விதிகளை நீர்த்துப்போகச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    தவறான பிரச்சாரத்தைப் பரப்புவதன் மூலமும், பாரபட்சங்களை உருவாக்குவதன் மூலமும் சிறுபான்மை சமூகங்களை அரக்கத்தனமாக சித்தரிக்க முயற்சிக்கும் பாஜவின் உத்தியின் ஒரு பகுதியாகும்.

    நமது தனித்துவமான பல மத சமூகத்தில் பல நூற்றாண்டுகள் பழமையான சமூக நல்லிணக்கத்தை சேதப்படுத்தும் பாஜகவின் தொடர்ச்சியான முயற்சிகளில் இதுவும் ஒன்று.

    தேர்தல் ஆதாயங்களுக்காக நமது சமூகத்தை நிரந்தர பிளவு நிலையில் வைத்திருக்க சிறுபான்மை சமூகங்களின் மரபுகள் மற்றும் நிறுவனங்களை சீர்குலைக்கும் முயற்சி இது.

    வக்பு சொத்துக்களை நிர்வகிப்பதற்காக முந்தைய சட்டங்களால் உருவாக்கப்பட்ட அனைத்து நிறுவனங்கள், அமைப்பு, அந்தஸ்து மற்றும் அதிகாரம் குறைக்கப்பட்டு, சமூகம் அதன் சொந்த மத மரபுகள் மற்றும் விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை வேண்டுமென்றே இந்த மசோதா மூலம் பறிக்கப்படுகிறது.

    வக்பு நிர்வாகத்தை பலவீனப்படுத்துவதற்காகவே தற்போதுள்ள சட்டத்தில் உள்ள விதிகள் எந்த காரணமும் இல்லாமல் நீக்கப்படுகின்றன. வக்பு நிலங்களை ஆக்கிரமித்தவர்களைப் பாதுகாக்க சட்டத்தில் இப்போது அதிக பாதுகாப்புகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

    அடிப்படையில், வக்பு திருத்த மசோதா இந்திய அரசியலமைப்பின் மீதான தாக்குதல் என்று தெரிவித்துள்ளார். நடப்பு பாரளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு திருத்த மசோதா நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் சூழல் காங்கிரஸ் இந்த விமர்சனத்தை  முன்வைத்துள்ளது.

    • இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு மற்றும் உக்ருல் மாவட்டங்களில் உள்ள முகாம்களை நீதிபதிகள் பார்வையிடுவார்கள்.
    • 60,000 பேர் இடம்பெயர்ந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்,

    நீதிபதிகள் வருகை 

    மணிப்பூரில் இனக் கலவரத்தால் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடியை மதிப்பிடுவதற்காக உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய், ஐந்து மூத்த நீதிபதிகளுடன் இன்று (சனிக்கிழமை) மணிப்பூர் வந்தடைந்தார். 

    தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (NALSA) நீதிபதிகளின் பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது.  இதைத்தொடர்ந்து கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக சட்ட உதவி மையங்கள் மற்றும் மருத்துவ முகாம்கள் திறப்பு விழா நடைபெற உள்ளது.

    இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு மற்றும் உக்ருல் மாவட்டங்களில் உள்ள முகாம்களை நீதிபதிகள் பார்வையிடுவார்கள். அங்கு இடம்பெயர்ந்த மக்களுடன் உரையாடி, அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் விநியோகிப்பதை மேற்பார்வையிடுவார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்ட உதவி வழங்கல் உள்ளிட்ட செயல்பாடுகளையும் நீதிபதிகள் தொடங்கி வைகின்றனர்.

    மணிப்பூர் கலவரம்

    மணிப்பூரில் பெரும்பான்மையான மெய்தேய் சமூகத்தினர் பழங்குடியின அந்தஸ்து கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

    இதை எதிர்த்து மலைப்பிரதேச மாவட்டங்களில் அதிகம் வசிக்கும் குக்கி இன மக்கள் போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து இரு சமூகத்தினருக்கும் இடையிலான பிரச்சனை 2023 இல் வன்முறையாக மாறியது. மே மாதம் பெண் ஒருவர் நிர்வாணமாக ஊர்வலம் நடத்திச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    அதைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை சம்பவங்களும், கொலை வெறியாட்டங்களும் அரங்கேறின. 250க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். கலவரம் தாற்காலிகமாக அடங்கியபோதிலும் ஆயுதமேந்திய குழுக்களால் இன்று வரை மணிப்பூரில் கொந்தளிப்பான சூழல் நிலவி வருகிறது. வீடுகளை இழந்த பல குடும்பங்கள் நிவாரண முகாம்களில் வசித்து வருகின்றன.

     ஜனாதிபதி ஆட்சி

    கடந்த வருட இறுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கடத்தி கொலை செய்யப்பட்டபோது மீண்டும் கலவரம் வெடித்தது. கலவரத்தை தூண்டியதாக மணிப்பூர் பாஜக முதல்வர் பைரன் சிங் தொடர்பாக ஆடியோ பதிவுகள் வெளியாகின.

    இதனால் அவர் கடந்த பிப்ரவரியில் ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது . இதற்கிடையே வெளிநாடுகளுக்கு தொடர்ந்து பயணிக்கும் பிரதமர் மோடி மணிப்பூருக்கு இதுநாள் வரை சென்று பாதிப்புகளை பார்வையிடாதது குறித்து காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வருகிறது. 

    மோடி எப்போ வருவார்?

    இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் மணிப்பூர் பயணத்தை வரவேற்றுள்ள காங்கிரஸ் மோடியை மீண்டும் விமர்சித்துள்ளது.

    காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், மணிப்பூருக்குச் சென்ற ஆறு நீதிபதிகளையும் நாங்கள் வரவேற்கிறோம். கடந்த 22 மாதங்களில், நூற்றுக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர், சுமார் 60,000 பேர் இடம்பெயர்ந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர், இன்றும் கூட, மணிப்பூரில் உள்ள சமூகங்களிடையே அச்சமும் சந்தேகமும் நிறைந்த சூழல் நிலவுகிறது.

    பிப்ரவரி 13 அன்று ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது, ஆனால் ஆகஸ்ட் 1, 2023 அன்று உச்ச நீதிமன்றமே மணிப்பூரில் உள்ள அரசியலமைப்பு முற்றிலுமாக தகர்க்கப்பட்டுவிட்டதாகக் கூறிய பிறகும், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த 18 மாதங்கள் ஏன் ஆனது? உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சென்றது நல்லது, ஆனால் பெரிய கேள்வி என்னவென்றால், பிரதமர் எப்போது அங்கு செல்வார்? என்பதுதான் என்று தெரிவித்துள்ளார்.  

    • எதிர்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.
    • உத்தரபிரதேசம், பிகாா் மாநிலங்கள் 11 தொகுதிகளை கூடுதலாக பெறும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தொகுதி மறு சீரமைப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுதொடா்பாக தமிழக அரசு சாா்பில் சமீபத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது.

    மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் எந்தெந்த மாநிலங்களுக்கு பாதிப்பு, எவையெல்லாம் பலன் பெறும் என்பதை காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் விளக்கியுள்ளாா். இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

    தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் உள்பட 9 மாநிலங்கள் ஒன்று முதல் 8 பாராளுமன்ற தொகுதிகளை இழக்க நேரிடும். அதே நேரம், உத்தரபிரதேசம், பிகாா் உள்ளிட்ட மாநிலங்கள் 10 முதல் 11 பாராளுமன்ற தொகுதிகளைக் கூடுதலாகப் பெற வாய்ப்புள்ளது.

    மத்திய அரசின் குடும்பக் கட்டுப்பாடு மற்றும் கருவுறுதல் விகிதத்தைக் குறைக்கும் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்திய மாநிலங்களே, தொகுதி மறுசீரமைப்பால் பாராளுமன்ற தொகுதிகளை இழக்கும் நிலையை சந்திக்கும்.

    அந்த வகையில், குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தியதற்கான தண்டனையாக இது அமையும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

    தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் தலா 8 தொகுதிகளையும், மேற்கு வங்காளம் 4, ஒடிசா 3, கா்நாடகா 2, இமாசல பிரதேசம் 1, பஞ்சாப் 1, உத்தரகாண்ட் 1 தொகுதியை இழக்க நேரிடும்.

    உத்தரபிரதேசத்தில் 11, பீகாரில் 10, ராஜஸ்தானில் 6, மத்திய பிரதேசத்தில் 4 தொகுதிகள் அதிகரிக்கும். ஜாா்க்கண்ட், அரியானா, குஜராத், டெல்லி, சத்தீஸ்கரில் தலா ஒரு தொகுதி அதிகரிக்கும்.

    அசாம், ஜம்மு-காஷ்மீா், மகாராஷ்டிரா மாநிலஙகளுக்கு தொகுதிகள் எண்ணிக்கையில் இழப்போ அல்லது பலனோ இருக்காது.

    இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளாா்.

    • சஞ்சய் ராவத்தை கைது செய்ய எந்த முகாந்திரமும் இல்லை.
    • பா.ஜனதா கூட்டுறவு துறையை அழிக்க முயற்சி செய்கிறது.

    மும்பை :

    மும்பை பத்ராசால் குடிசை சீரமைப்பு மோசடியில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் நேற்று முன்தினம் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவரை அமலாக்கத்துறை சட்டவிரோதமாக கைது செய்ததாக கோர்ட்டு அதன் உத்தரவில் கூறியது.

    இந்தநிலையில் மராட்டிய மாநிலம் நாந்தெட்டில் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பங்கேற்றுள்ள அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், இதுகுறித்து நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    மும்பை சிறப்பு கோர்ட்டு உத்தரவு மூலம் மத்திய புலனாய்வு முகமை அரசியல் எதிரிகளை பயமுறுத்த, அச்சுறுத்த பயன்படுத்தப்படுவது தெளிவாகிறது. சஞ்சய் ராவத் ஜாமீன் உத்தரவு மூலம் அமலாக்கத்துறை சுதந்திரமான அமைப்பு இல்லை என்பது தெரிகிறது. அது எதிர்க்கட்சிகளை குறிவைக்க மோடி, அமித்ஷாவின் கையில் இருக்கும் அவர்களின் அரசியல் ஆயுதம். சஞ்சய் ராவத்தை கைது செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. பல்வேறு பிரச்சினைகளில் அவர் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக பேசுவார் என நம்புகிறோம்.

    பா.ஜனதா கூட்டுறவு துறையை அழிக்க முயற்சி செய்கிறது. இதன் காரணமாக கூட்டுறவு துறையில் பலமாக உள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்படும்.

    காங்கிரஸ் ஆட்சியில் கூட்டுறவு துறைக்கு எந்த வரியும் விதிக்கப்படவில்லை. ஆனால் அது மோடி ஆட்சியில் மாறிவிட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
    • 6 பேர் விடுதலையை ஏற்றுக்கொள்ள முடியாது என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வரும் நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பளித்துள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், பொதுச் செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்த வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற எஞ்சிய 6 பேரையும் சுப்ரீம் கோர்ட்டு விடுவிப்பதாக அறிவித்துள்ளது.

    காங்கிரஸ் கட்சி இதனை தெளிவாக விமர்சிக்கிறது. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்ற நிலையை எடுக்கிறது.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த செயல்பாடு துரதிர்ஷ்டவசமானது. இந்தியாவின் ஆன்மாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு செயல்பட்டுவிட்டது. 6 பேர் விடுதலை முற்றிலும் தவறானது, துளியும் ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ளார்.

    • வெளிநாடு நிகழ்ச்சிகளில் உள்நாட்டு அரசியலை பிரதமர் பேசி வருவதாக காங்கிரஸ் கண்டனம்.
    • நமது பிரதமர்கள் வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் உள்நாட்டு அரசியல் பேசியதில்லை.

    இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பாலி நகரத்தில் நடைபெற்ற இந்திய சமூகத்தினர் இடையேயான கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் வளர்ச்சியை 2014 ஆண்டுக்கு முந்தையது மற்றும் பிந்தையது என குறிப்பிட்டு பேசினார்.

    2014ம் ஆண்டு தாம் பிரதமராக பதவியேற்றதற்கு பின்னரே இந்தியா வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உள்நாட்டு அரசியலை வெளிநாட்டில் பிரதமர் பேசியதாக கூறி காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுபற்றி அந்த கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இதற்கு முன்னர் நமது பிரதமர்கள் வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் உள்நாட்டு அரசியல், பாரபட்சம், மற்றும் தவறான எண்ணங்களை பேசியதில்லை என்பது நீண்ட கால நமது பாரம்பரியம் ஆகும்.

    இந்த ஆரோக்கியமான பாரம்பரியம், 2014 மே மாதத்துக்கு பிறகு (மோடி ஆட்சிக்கு பிறகு) உடைக்கப்பட்டு விட்டது. இதற்கு சமீபத்திய உதாரணமாக இந்தோனேசியாவில் மீண்டும் அவர் (பிரதமர் மோடி) தனது சுய ஆவேசத்தைக் காட்டி உள்ளார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகிய இருவருமே எங்களுக்கு தேவை.
    • டிசம்பர் 4-ந் தேதி, ராஜஸ்தானில் பாதயாத்திரை நுழைகிறது.

    இந்தூர் :

    ராஜஸ்தானில், அசோக் கெலாட்டை முதல்-மந்திரியாக கொண்ட காங்கிரஸ் அரசு நடந்து வருகிறது. அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்-மந்திரி சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.

    அசோக் கெலாட் சமீபத்தில் அளித்த பேட்டியில், சச்சின் பைலட் ஒரு துரோகி, அவர் முதல்-மந்திரி ஆக முடியாது என்று கடுமையாக விமர்சித்து இருந்தார். அதற்கு சச்சின் பைலட், ''அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளையும், இழிவான சொற்களையும் பயன்படுத்துவது ஒரு மூத்த தலைவருக்கு அழகல்ல'' என்று கூறியிருந்தார்.

    இந்தநிலையில், மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் ராகுல்காந்தி பாதயாத்திரைக்கிடையே காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி அமைப்பு எங்களுக்கு மிகவும் முக்கியம். அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகிய இருவருமே எங்களுக்கு தேவை. அசோக் கெலாட் சில குறிப்பிட்ட வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கக்கூடாது.

    இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண காங்கிரஸ் தலைமை பரிசீலித்து வருகிறது. அதற்கு காலவரையறை நிர்ணயிக்க முடியாது. காங்கிரஸ் தலைமைதான் காலவரையறை நிர்ணயிக்கும்.

    ராஜஸ்தான் பிரச்சினையில், கட்சியை வலுப்படுத்தக்கூடிய முடிவை எடுப்போம். ஒருவேளை கடினமான முடிவு எடுக்க வேண்டி இருந்தால், அதை எடுக்க காங்கிரஸ் தயங்காது. ஒருவேளை இரு அணிகளுக்கு இடையே சமரசம் உருவாக்குவதாக இருந்தால், அதையும் செய்வோம்.

    டிசம்பர் 4-ந் தேதி, ராஜஸ்தானில் பாதயாத்திரை நுழைகிறது. மற்ற மாநிலங்களைப் போல் அங்கும் பாதயாத்திரை வெற்றி பெறும்.

    பொது சிவில் சட்டம் குறித்து நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் விவாதம் நடக்க வேண்டும். ஆனால், குஜராத் தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக, இத்தகைய பிரித்தாளும் பிரச்சினையை பா.ஜனதா எழுப்புகிறது. தேர்தலுக்கு பிறகு அதை மறந்து விடும். குஜராத்தில் பா.ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையில்தான் போட்டி நிலவுகிறது. கீழ்மட்டத்தில் ஆம் ஆத்மி பலமாக இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வெளியேறிய பின்னர் கட்சியை விமர்சித்தவர்களை மீண்டும் வரவேற்கக்கூடாது.
    • கண்ணியத்தைக் காப்பாற்றிய தலைவர்கள் மீண்டும் வரவேற்கப்படுவார்கள்.

    அகர் மால்வா: 

    காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பாத யாத்திரை இன்று மத்திய பிரதேச மாநிலம் அகர் மால்வா பகுதியை அடைந்தது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் மூத்த தலைவரும், ஊடக பிரிவு தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது

    கட்சியை விட்டு வெளியேறிய பிறகு கண்ணியமான மௌனம் காத்த கபில் சிபல் போன்றவர்கள் கட்சிக்கு திரும்ப அனுமதிக்கப்படலாம், ஆனால் ஜோதிராதித்ய சிந்தியா அல்லது ஹிமந்தா பிஸ்வா சர்மா போன்றவர்களை அனுமதிக்க முடியாது. காங்கிரஸை விட்டு வெளியேறியவர்களை மீண்டும் வரவேற்கக் கூடாது என்று நினைக்கிறேன்.

    கட்சியை விட்டு வெளியேறியவர்கள் மற்றும் கட்சியின் பெயரை துஷ்பிரயோகம் செய்தவர்கள் உள்ளனர், எனவே அவர்களை திரும்பப் அழைக்கக் கூடாது. ஆனால் கட்சியில் இருந்து கண்ணியத்துடன் வெளியேறியவர்களும் உள்ளனர், மேலும் காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைமை குறித்து அவர்கள் கண்ணியமான மவுனம் காத்து வருகின்றனர்.

    சில காரணங்களுக்காக கட்சியை விட்டு வெளியேறிய எனது முன்னாள் சகாவும் மிக நல்ல நண்பருமான கபில் சிபலைப் பற்றி என்னால் நினைக்க முடிகிறது அவர், சிந்தியா மற்றும் சர்மாவைப் போல அல்லாமல் மிகவும் கண்ணியமான மௌனம் காத்துள்ளார்.

    எனவே, கண்ணியத்தைக் காப்பாற்றிய அத்தகைய தலைவர்கள் மீண்டும் வரவேற்கப்படுவார்கள் என்று நான் நினைக்கிறேன், ஆனால் கட்சியை விட்டு வெளியேறி பின்னர் கட்சியையும் அதன் தலைமையையும் விமர்சித்தவர்களை மீண்டும் வரவேற்கக்கூடாது. ஜோதிராதித்ய சிந்தியா ஒரு துரோகி, உண்மையான, 24 காரட் துரோகி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ஜெயராம் ரமேஷின் கருத்துக்கு பதிலளித்த மத்தியப் பிரதேச பாஜக செயலாளர் ரஜ்னீஷ் அகர்வால், சிந்தியா வலுவான கலாச்சார வேர்களைக் கொண்ட 24 காரட் தேசபக்தர் என்று குறிப்பிட்டுள்ளார். சிந்தியா மற்றும் சர்மா இருவரும் தங்கள் பணியில் 24 காரட் அர்ப்பணிப்பைக் கொண்டுள்ளனர், ரமேஷின் கருத்துக்கள் பண்பாடு இல்லாதது, முற்றிலும் ஜனநாயகமற்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

    • ஜி20 அமைப்பின் தலைமை பதவி என்பது சுழற்சி முறையில் கிடைக்கக்கூடியது.
    • இந்தியா தலைவர் ஆவது தவிர்க்க இயலாதது.

    புதுடெல்லி :

    ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றதையொட்டி, ஓராண்டுக்கு பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    ஜி20 அமைப்பின் தலைமை பதவி என்பது சுழற்சி முறையில் கிடைக்கக்கூடியது. இந்தியா தலைவர் ஆவது தவிர்க்க இயலாதது. இதற்கு முன்பு, அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட பல நாடுகள் தலைமை பொறுப்பை வகித்துள்ளன. ஆனால், எந்த நாடும் இப்போது மோடி அரசு செய்வதைப் போல் தம்பட்டம் அடித்தது இ்ல்லை.

    கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 5-ந் தேதி அத்வானி கூறியதுதான் நினைவுக்கு வருகிறது. 'மோடி ஒரு புத்திசாலித்தனமான நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்' என்று அவர் கூறினார். ஜி20 தலைமை விஷயத்தில் அதுதான் நடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்தும் ஆலோசனை நடந்தது.
    • சாதிவாரி கணக்கெடுப்புக்கு காங்கிரஸ் சாதகமாக உள்ளது.

    புதுடெல்லி :

    வருகிற 7-ந் தேதி பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது.

    இந்த குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தில் நேற்று காலை உயர்மட்டக்கூட்டம் ஒன்றைக்கூட்டினார்.

    கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை காங்கிரஸ் தலைமை கொறடா ஜெய்ராம் ரமேஷ், மக்களவை காங்கிரஸ் தலைமை கொறடா கே.சுரேஷ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத்தொடர் தொடர்பான காங்கிரஸ் கட்சியின் உத்திகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்தும் ஆலோசனை நடந்தது.

    இதையொட்டி ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 3 முக்கிய பிரச்சினைகளை எழுப்புவோம்.

    இந்திய-சீன எல்லைப் பிரச்சினை, விலைவாசி உயர்வு, நாட்டின் அரசியலமைப்பு நிறுவனங்களின் செயல்பாடுகளில் தலையிடுதல் ஆகிய பிரச்சினைகளை எழுப்புவோம்.

    சாதிவாரி கணக்கெடுப்புக்கு காங்கிரஸ் சாதகமாக உள்ளது. இதைச் செய்து முடிக்க வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான இட ஒதுக்கீடுக்கு ஆதரவாக 3 நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். ஆனால் 2 நீதிபதிகள் இட ஒதுக்கீடக்கு எதிராக கேள்விகள் எழுப்பினர். இந்த இட ஒதுக்கீடு தொடர்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும், பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தன் அரசியல் பிம்பத்தை பாதுகாக்க மோடி அரசு மௌனம் காக்கிறது.
    • நமது ஆயுதப் படைகளின் பதிலடியை கண்டு பெருமிதம் கொள்கிறோம்.

    சீன ராணுவத்தின் அத்துமீறலை தடுக்க கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படைகளை மத்திய அரசு குவித்துள்ளது. இதனால் அந்த பகுதியில் 30 மாதங்களுக்கும் மேலாக பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 9 ந்தேதி அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டாரில் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் மோதிக் கொண்டதாகவும், இரு தரப்பிலும் சில வீரர்கள் காயம் அடைந்ததாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. 


    உடனடியாக இரு தரப்பினரும் அப்பகுதியிலிருந்து வெளியேறியதாகவும், மீண்டும் அமைதி நிலவ, சீன ராணுவ அதிகாரிகளுடன் இந்திய ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் தகவல் தொடர்பு பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

    சீனாவுடனான எல்லைப் பிரச்சினையை மோடி அரசு மூடி மறைக்க முயற்சிக்கிறது. எல்லையில் சீனாவின் நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு விழிப்புடன் செயல்பட கடந்த 2 ஆண்டுகளாக காங்கிரஸ் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் தன் அரசியல் பிம்பத்தை பாதுகாக்க மத்திய அரசு மௌனம் காக்கிறது.

    மோடி அரசு இந்த விஷயத்தை மட்டும் அடக்கி வாசிக்க முயற்சிக்கிறது, இதனால் சீனாவின் அடாவடித்தனம் அதிகரித்து வருகிறது. நமது ஆயுதப் படைகளின் துணிச்சலைக் கண்டு நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், எல்லையில் சீனாவின் நடவடிக்கைகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. நாட்டை விட யாரும் பெரியவர்கள் கிடையாது, ஆனால் மோடி ஜி தனது இமேஜைக் காப்பாற்ற நாட்டை ஆபத்தில் ஆழ்த்துகிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்தில் இருக்கலாம்.
    • காங்கிரஸ் மட்டுமே தேசிய அரசியல் சக்தியாக இருக்கிறது.

    அவந்திபோரா :

    காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், காஷ்மீரில் உள்ள அவந்திபோராவில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து கூறியதாவது:-

    ராகுல் காந்தி, நாடு முழுவதும் இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்தி வருகிற சூழலில், வருகிற பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிக் கூட்டணியின் முக்கிய ஆதார மையமாக காங்கிரஸ் இருக்குமா என்று கேட்டால் நிச்சயமாக அதை நான் நம்புகிறேன். இன்றும் நாங்கள் மட்டுமே தேசிய கட்சியாக இருக்கிறோம். (பா.ஜ.க. தவிர்த்து).

    நாங்கள் ஒவ்வொரு மாநிலமாக ஆட்சியில் இல்லாமல் போய் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு கிராமத்திலும், தாலுகாவிலும், சிறிய நகரத்திலும், நகரத்திலும் காங்கிரஸ் தொண்டர்களை நீங்கள் பார்க்க முடியும். காங்கிரஸ் குடும்பங்களைப் பார்க்க இயலும்.

    பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்தில் இருக்கலாம். ஆனால் காங்கிரஸ் மட்டுமே தேசிய அரசியல் சக்தியாக இருக்கிறது.

    நாங்கள் ஆளுகிற மாநிலங்களின் எண்ணிக்கை அல்லது நாங்கள் பெறும் வாக்குகளின் சதவீதத்தை வைத்து எங்கள் செல்வாக்கை அளவிடுவது மிகவும் குறுகிய கண்ணோட்டம் என்று சொல்வேன். காங்கிரசின் சித்தாந்தம், மையம் ஆகும். இது ஒரு மைய-இடதுசாரி கட்சி. ஒவ்வொரு கட்சியும் காங்கிரசின் கண்ணோட்டத்தை சுற்றி வருகின்றன.

    எனவே நாங்கள் ஆதார மையமாக இருப்போம். பா.ஜ.க.வை எதிர்கொள்ள வேண்டும் என்றால், அது காங்கிரஸ் கூட்டணியால்தான் முடியும்.

    காங்கிரஸ் கட்சி தனித்து நின்று பா.ஜ.க.வை எதிர்கொள்ள வேண்டும் என்பதைத்தான் நான் விரும்புவேன். இதுவே எனது லட்சியம். ஆனால் அது 2024 தேர்தலில் அது யதார்த்தமாக இருக்காது.

    2029-ம் ஆண்டு தேர்தலில், நாங்கள் எங்கள் சொந்தப் பலத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் போட்டியிட தயார் ஆவோம்.

    சில மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி அதன் கூட்டணி கட்சிகளுக்கு மிக அதிக இடம் கொடுத்திருக்கிறது. இது கட்சியின் கட்டமைப்புக்கு பாதிப்பாக அமைந்து விடும்.

    ராகுல் காந்தியின் செய்தி, முதலில் கட்சியை கட்டமையுங்கள். அதிகாரம் தொடர்ந்து வரும் என்பதுதான். ராகுல் காந்தியின் பார்வை சரியானது.

    நீண்ட காலம் ஆட்சிப்பொறுப்பில் இருந்தது. கட்சி அமைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை ஒரு ஊக்க சக்தியாக அமைந்துள்ளது. அது நிலைத்து நிற்க வேண்டும்.

    இந்திய ஒற்றுமை யாத்திரை ஒரு நிகழ்வு அல்ல. இது ஒரு இயக்கம். இதை ஒரு இயக்கமாக பார்க்க வேண்டும் என்றால் அதை நாங்கள் ஒரு இயக்கமாக நடத்தியாக வேண்டும்.

    இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு பிந்தைய காங்கிரஸ் கட்சி முற்றிலும் மாறுபட்ட காங்கிரசாக அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×