என் மலர்
நீங்கள் தேடியது "உள்ளிருப்பு போராட்டம்"
- 2020-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான பில் தொகை இதுவரை வழங்கப்படவில்லை.
- 23-ந் தேதிக்குள் நிலுவை தொகை படிப்படியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
வால்பாறை,
வால்பாறை நகராட்சியில் பதிவு செய்து வேலை செய்யும் ஒப்பந்ததாரர்களுக்கு, கடந்த, 2020-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான பில் தொகை இதுவரை வழங்கப்படவில்லை.
2 ஆண்டுகளுக்கு மேலாகியும் தொகை வழங்கப்படா ததால் , அதிருப்தி அடைந்த ஒப்பந்ததாரர்கள் நேற்று நகராட்சி அலுவலக வளாகத்தில் திடீர் என்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் நகராட்சி தலைவர் அழகு சுந்தரவள்ளி, கமிஷனர் பாலு, பொறியாளர் வெங்கடாசலம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வரும் 23-ந் தேதிக்குள் நிலுவை தொகை படிப்படியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் மனோகரன் தலைமையில் உள்ளிருப்பு போராட்டம் செய்தனர்.
- அந்தியூர் சப்- இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் மற்றும் தொடக்க வேளாண்மை அலுவலக அதிகாரிகளிடத்தில் பேச்சுவார்த்தை செய்ததில் உடன்பாடு ஏற்பட்டது.
அந்தியூர்:
அந்தியூர் அருகே உள்ள பருவாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் இதுவரை கொடுத்துள்ள 300-க்கும் மேற்பட்ட உறுப்பினர் விண்ணப்பத்தில் ஒருசிலரை மட்டும் சேர்த்துவிட்டு ரசீது போடப்பட்டது.
மேலும் ரசீது போடாத மீதமுள்ள உறுப்பினர் சேர்க்கையை முழுவதும் முடிக்காமல் காலம் தாழ்த்துவது கண்டித்து கூட்டுறவு சங்க செயலாளர், முன்னாள் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் மனோகரன் தலைமையில் உள்ளிருப்பு போராட்டம் செய்தனர்.
பின்னர் பேச்சு வார்த்தையில் அந்தியூர் சப்- இன்ஸ்பெக்டர் கார்த்தி தலைமையிலான போலீசார் மற்றும் தொடக்க வேளாண்மை அலுவலக அதிகாரிகளிடத்தில் பேச்சுவார்த்தை செய்ததில் உடன்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து உள்ளிருப்பு போராட்டம் கைவி டப்பட்டது.
இதில் மாநிலத் துணைத் தலைவர் பரமசிவம், மாநில செயற்குழு உறுப்பினர் கோபால், சம்பத், ஒன்றிய செயலாளர் நடராஜ், மாவட்ட துணைச்செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய பொருளாளர் ராஜி, மாவட்ட துணைச்செ யலாளர் செங்கோட்டையன், மாவட்ட இளைஞர் சங்க துணை தலைவர் சரவணன், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- போலீசார் பேச்சுவார்த்தை
- அமைதி கமிட்டி கூட்டம் அமைப்பதாக உறுதி
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் முகுந்தராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட காஞ்சனகிரி மலையில் சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சிவன் கோயில் உள்ளது.
இந்த கோவிலில் லாலாப்பேட்டையை சேர்ந்தவர்கள் நிர்வாகம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் முகுந்தராயபுரம் ஊராட்சிமன்ற தலைவர் காஞ்சனகிரி மலைக்கோயில் எங்கள் பஞ்சாயத்திற்கு உட்பட்டது எனவும் இனி நாங்கள் தான் நிர்வாக செய்வோம் என தெரிவித்தாக லாலாப்பேட்டை பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதனை கண்டித்து நேற்று லாலாப்பேட்டை ஊராட்சி பொது மக்கள் அனைத்து கட்சி பிரமுகர்கள், வியாபாரிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் அனைவரும் முகுந்தராயபுரம் ஊராட்சிமன்ற தலைவரை கண்டித்து ஆர்பாட்டம் மற்றும் கடையடைப்பு செய்தனர்.
இதனையடுத்து காஞ்சனகிரி மலையடிவாரத்தில் லாலாப்பேட்டை பொதுமக்கள் ஒன்றுகூடி இன்று கலெக்டரிடம் மனு கொடுப்பதாக முடிவு செய்து பின்னர் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் 2-வது நாளாக லாலாப்பேட்டை கிராம பொதுமக்கள் லாலாப்பேட்டையில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
இது குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை கோட்டாட்சியர் வினோத்குமார், தாசில்தார் நடராஜன், டி.எஸ்.பிக்கள் பிரபு, ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் ஆகியோர் லாலாப்பேட்டை பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்துனர்.
இதனை அனைத்தும் கேட்ட கோட்டாட்சியர் வினோத் குமார் பேசியதாவது:-நீங்கள் அனைவரும் தெரிவித்த குற்றச்சாடுகளுக்கு அனைத்து துறை அதிகாரிகள் முன்னிலையில் பீஸ் கமிட்டி கூட்டம் அமைத்து இதற்கு தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.
மேலும் லாலாப்பேட்டை ஊராட்சியை மறுவரையறை செய்ய பொதுமக்கள் நீங்கள் மனுக்களாக கொடுங்கள் அது அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
- பூதலூர் ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் நடைபெற்றது.
- தீர்மான புத்தகத்தை காண்பிக்க வேண்டும் எனகூறி உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பூதலூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஊராட்சி ஒன்றியக்கு ழுவின் சாதாரண கூட்டம் பூதலூர் ஊராட்சி ஒன்றிய அரங்கில் ஒன்றியக்குழு தலைவர் அரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொற்செல்வி, ராஜா மற்றும் உறுப்பினர்கள், அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் உறுப்பினர்கள் கலந்துெகாண்டு பேசினர்.
கேசவமூர்த்தி (தி.மு.க.):
அகரப்பேட்டையில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு குடிநீர் மின்விளக்கு வசதி வேண்டும்.
மயில்சாமி (தி.மு.க.):
வேப்பங்குடி ஆனந்த காவேரி வாய்க்காலில் மயானத்திற்கு செல்ல சாலை அமைத்து தர வேண்டும். மனையேரிப்பட்டி கடம்பன்குடி சாலையை சீரமைத்து தர வேண்டும்.
சுப்பிரமணியன் (அ.ம.மு.க.):
சானூரப்பட்டியில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிவறை பயன்பாடு இல்லாமல் காட்சி பொருளாக உள்ளது. ஒன்றிய நிர்வாகத்தில் வெளிப்ப டைத்தன்மை இல்லாத சூழ்நிலை உள்ளது.
தீர்மான புத்தகத்தை எப்போதும் காண்பிப்பதில்லை. தீர்மான புத்தகத்தை உறுப்பினர்களுக்கு வெளிப்படையாக காண்பிக்க வேண்டும்.
வெங்கடேசன் (பா.ஜ.க.):
சோளகம்பட்டி ெரயில் நிலைய இணைப்பு பாதை குறித்து தீர்மானம் நிறைவேற்றி தாருங்கள்.
கென்னடி (பா.ஜ.க.):
திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் ெரயிலை பூதலூரில் நிறுத்த வேண்டும்.
மதுபாலா (அ.தி.மு.க.): சுரக்குடிபட்டியில் பல மின்கம்பங்கள் பழுதடைந்துள்ளன. அவற்றை சீர்செய் தர வேண்டும்.
ரம்யா (தி.மு.க):
இளங்காடு கிராமத்தில் கால்நடை ஆஸ்பத்திரி அமைத்து தர வேண்டும்.
தலைவர்:
வேப்பங்குடி ஆனந்த காவேரி பாலம் கட்ட அனுமதி பெறப்பட்டுள்ளது.
பூதலூர் ஒன்றியத்தில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மான புத்தகத்தை அதிகாரிகள் படிக்கலாம் காண்பிக்க வேண்டியதில்லை.
இவ்வாறு கூறி கூட்டத்தை முடித்து விட்டு தனது அறைக்கு சென்றார்.
அப்போது தீர்மான புத்தகத்தை காண்பிக்க வேண்டும் எனக்கோரி பா.ஜ.க. மற்றும் அ.ம.மு.க. உறுப்பினர்கள் அவைக்கூடத்தில் அமர்ந்து கோஷங்களை எழுப்பி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் போராட்டம் நடத்திவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- சிதம்பரத்தில் நடந்த போராட்டத்தில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டார்.
- உள்ளிருப்பு போராட்டம் தொடர்பாக சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப் பெருந்தகை பதிவிட்டுள்ளார்.
சென்னை:
அவதூறு வழக்கில் 2 ஆண்டு தண்டனை பெற்ற ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டன. டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. சிதம்பரத்தில் நடந்த போராட்டத்தில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டார்.
இப்போராட்டத்தின் தொடர்ச்சியாக தமிழ்நாடு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சட்டமன்றத்தில் நாளை இரவு உள்ளிருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப் பெருந்தகை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், "ராகுல் காந்தி தகுதிநீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கருப்பு உடை அணிந்து நாளை சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்க வேண்டும். ராகுல் காந்திக்கு ஆதரவாக சட்டமன்றத்தின் வேலை நேரத்தில் பேசவேண்டும். சட்டமன்றத்தை விட்டு வெளியே வராமல், இரவு உள்ளிருப்பு போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
- கொரோனா பாதிப்பு, தொழில் நஷ்டம் உள்ளிட்ட காரணங்களால், பாக்கி தொகையை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.
- 7 நாட்களுக்கு கால அவகாசம் வழங்குவதாக அறிவித்தனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள மகாலட்சுமி நகரில் வசிக்கும் ஒருவர், அவரது வீட்டை விரிவாக்கம் செய்வதற்காக,தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 2019 ம் ஆண்டு ரூ.28லட்சம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இதில் ரூ.13 லட்சம் திருப்பி செலுத்தியுள்ளார். இதற்கிடையே கொரோனா பாதிப்பு, தொழில் நஷ்டம் உள்ளிட்ட காரணங்களால், பாக்கி தொகையை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் கடனை திருப்பி செலுத்த அவர் நிதி நிறுவனத்தில் கால அவகாசம் கேட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மார்ச் 31 வரை அவருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டதாகவும், கெடு தேதி முடிந்ததால் நிதி நிறுவனத்தினர், நீதிமன்ற உத்தரவு பெற்று அவரது வீட்டை ஜப்தி செய்வதற்காக சம்பவத்தன்று போலீசார் உடன் சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டிற்குள் அமர்ந்து கொண்டு உள்பக்கமாக கதவுகளை பூட்டிக்கொண்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிதி நிறுவனத்தார், மேலும் 7 நாட்களுக்கு கால அவகாசம் வழங்குவதாக அறிவித்தனர். இதையடுத்து உள்ளிருப்புப் போராட்டம் முடிவுக்கு வந்தது.
- சமயநல்லூர் மின் கோட்ட அலுவலகத்தில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.
- 10 கிளை அலுவலகங்களில் வசூல் மற்றும் களப்பணி மற்றும் அவசரப்பணிகள் செய்வதில்லை.
வாடிப்பட்டி
சமயநல்லூர் மின் கோட்ட செயற்பொறியாளர் அலுவலக வளாகத்தில் அலங்காநல்லூர் மின்பாதை ஆய்வாளர் ராமநாதன், கேங்மேன் சுரேஷ் ஆகியோரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு. மாநில பொறுப்பாளர் அறிவழகன் தலைமையில் தாங்கினார். சி.ஐ.டி.யு. தொழிலாளர் முன்னேற்ற சங்கம், தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம், தொழிலாளர் சம்மேளன சங்கம், அனைத்து பணியாளர்கள் கூட்டமைப்புச் சங்கம், அட்டைப்பெட்டி பிரிவு அலுவலர்கள் சங்கம் அ.தி.மு.க. தொழிற்சங்கம் ஆகிய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதன் காரணமாக அலங்காநல்லூர் துணை மின் நிலையத்திற்கு மதியம் 1 மணிக்கு செல்ல வேண்டிய அலுவலர்கள் செல்ல மாட்டார்கள் என்றும், மாலை 5 மணிக்கு அலங்காநல்லூர் துணை மின் நிலையம் பூட்டப்படும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். சமயநல்லூர் கோட்ட அலுவலகத்திற்கு உட்பட்ட வாடிப்பட்டி, சோழவந்தான், அய்யங்கோட்டை, அலங்காநல்லூர் உள்ளிட்ட 10 கிளை அலுவலகங்களில் வசூல் மற்றும் களப்பணி மற்றும் அவசரப் பணிகள் செய்வதில்லை என்றும் தெரிவித்தனர்.
- மாநகராட்சி 51 வார்டுகளிலும் தரமான முறையில் சாலைகள் போடப்பட்டு வருகின்றன.
- ஆட்டோக்களில் கியூ ஆர் கோடு மூலம் சரியான கட்டணம் நிர்ணயம் செய்ய முடியும்
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகராட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. மேயர் சண். ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மேயர் சண். ராமநாதன் பேசும்போது, மாநகராட்சி 51 வார்டுகளிலும் தரமான முறையில் சாலைகள் போடப்பட்டு வருகின்றன. பல இடங்களில் சாலைகள் அகலப்படுத்தப்பட்டு வருகிறது.
இன்னும் மூன்று மாதத்தில் ரூ.50 கோடி மதிப்பில் புதிதாக தார் சாலைகள் அமைக்கப்படும். இந்த பணிகளும் விரைவில் முடிவடையும்.
ஆட்டோக்களில் கியூ ஆர் கோடு மூலம் சரியான கட்டணம் நிர்ணயம் செய்ய முடியும் என்றார்.
ஆணையர் சரவணகுமார் பேசும்போது, பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் வரும் 1-ந் தேதி நடைபெறுகிறது.
சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் தேரோட்டத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்த முறை தேரோட்டம் அனைவரும் போற்றும் வகையில் நடைபெறும்.
தேரோட்டத்தை சிறப்பாக நடத்தஜ மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
கவுன்சிலர் கண்ணுக்கி னியாள் :
தஞ்சை கீழ வாசலில் கட்டி முடிக்கப்பட்ட சில நாட்களில் பாலம் இடிந்து விழுந்தது. இது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன. சரியான முறையில் பாலம் கட்டப்பட்டதா? என்றார்.
இதே பிரச்சினையை எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன் பேசும்போது மைக் ஆப் செய்யப்பட்டது.
கோரிக்கை குறித்து பதில் அளித்த
மேயர் சண். ராமநாதன் :
கீழவாசல் பாலத்தில் போக்குவரத்திற்கு அனுமதிக்காத நிலையில் தடையை மீறி லாரி டிரைவர் அதிக லோடு மணல் ஏற்றி சென்றதால் விபத்து ஏற்பட்டது. லாரி டிரைவர், உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டுமான பணிக்கு தேவையான பணத்தை லாரி உரிமையாளர் தருவதாக கூறியுள்ளார். பாலம் தரமான முறையில் தான் கட்டப்பட்டது.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட சாந்த பிள்ளை பாலம் தரமான முறையில் கட்டவில்லை என்றார்.
அப்போது தி.மு.க. கவுன்சிலர்கள் சாந்த பிள்ளை கேட் பாலம் சேதம் குறித்த புகைப்படத்துடன் கூடிய பேனரை காண்பித்து கோஷம் எழுப்பினர். இதனால் அ.தி.மு.க, அ.ம.மு.க. பா.ஜ.க. கவுன்சிலர்கள் பதிலுக்கு கோஷம் எழுப்பினர்.
இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் அமளி ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் மாறி மாறி கடும் வார்த்தைகளால் பேசிக்கொண்டனர். தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இதையடுத்து அனைத்து தீர்மானங்களும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக மேயர் சண். ராமநாதன் கூறி சென்றார்.
அப்போது கூட்ட அரங்கில் மைக், விளக்கு அமைக்கப்பட்டது.
இதனை கண்டித்தும் கூட்டத்தில் தங்களது கருத்துகளை தெரிவிக்க சுதந்திரமான முறையில் பேச அனுமதிக்க வேண்டும், பேசும்போது மைக்கை ஆப் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி அ.தி.மு.க, அ.ம.மு.க, பா.ஜ.க. கவுன்சிலர்களான மணிகண்டன், கோபால், கேசவன், தட்சிணாமூர்த்தி, சரவணன், காந்திமதி ,கலை வாணி, கண்ணுக்கினியாள், ஜெய்சதீஷ் ஆகிய 9 பேரும் மாநகராட்சி கூட்ட அரங்கில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பால பிரச்சனை குறித்து பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் பேசும்போது மைக், லைட் ஆப் செய்ததை கண்டித்தும், கவுன்சிலர் கேசவனை தள்ளி விட்ட சம்பவத்தை கண்டித்தும் கோஷமிட்டனர்.
தகவல் அறிந்து ஆணையர் சரவணகுமார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். நீங்கள் கருத்துகளை கூற சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் கூட்ட அரங்கில் இருந்து போராட்டம் நடத்துவது முறையல்ல. எனது அறைக்கு வாருங்கள். அங்கு பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்றார்.
இதனை ஏற்றுக் கொண்டு போராட்டத்தில் ஏற்பட்ட கவுன்சிலர்கள் அனைவரும் மாநகராட்சி ஆணையர் அறைக்கு சென்று பேசினர்.
இந்த சம்பவம் மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கல் குவாரியை தடை செய்ய வலியுறுத்தி நடத்தினர்
- நள்ளிரவு 1 மணி வரை இந்த போராட்டம் நடந்ததால் பதட்டம் ஏற்பட்டது.
கன்னியாகுமரி :
கப்பியறை பேரூ ராட்சிக்குட்பட்ட ஓலவிளை பகுதியில் அரசு அனுமதியுடன் ஒரு கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இதனை சுற்றி உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கல்குவாரி செயல்படுவதால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக புகார் கூறி வருகின்றனர். மேலும் குவாரியை தடைசெய்யவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், பிரின்ஸ் எம்.எல்.ஏ. முன்னிலையில் மறியல் போராட்டம் உட்பட பல போராட்டங்களும் நடைபெற்றன. மேலும் கப்பியறை பேரூராட்சி மன்றத்திலும் குவாரியை தடை செய்ய கேட்டு தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி உள்ளனர்.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கப்பியறை பேரூராட்சி தலைவர் அனிஷா கிளாடிஸ் தலைமையில் கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவு 1 மணி வரை இந்த போராட்டம் நடந்ததால் பதட்டம் ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் செயல் அலுவலர் ராஜேந்திரன், கருங்கல் போலீஸ சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து நகராட்சி அலுவ லகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- இன்று மாலைக்குள் சம்பளம் வழங்குவதாக உறுதி அளித்ததன் பெயரில் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலந்து சென்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என்று கூறி இன்று தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து நகராட்சி அலுவ லகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து நகர மன்ற தலைவர் ஊதியத்தை உடனடி யாக வழங்குவதாக கூறிய நிலையில் துப்புரவு அலுவலர் செந்தில்குமார் தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் நல சங்க சட்ட ஆலோசகர் ஜெயராஜ் அதிகாரி களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை முடிவில் இன்று மாலைக்குள் சம்பளம் வழங்குவதாக உறுதி அளித்ததன் பெயரில் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலந்து சென்றனர்.
- ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு பாடப் பிரிவுகளில் பயின்று வருகின்றனர்.
- கல்லூரி மாணவர்களிடம் கல்லூரி முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
விழுப்புரம்:
திண்டிவனத்தில் கோவிந்தசாமி அரசுக் கலைக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு பாடப் பிரிவுகளில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி மாணவர்கள் வழக்கம்போல இன்று கல்லூரிக்கு வந்தனர். காலை 10 மணியளவில் கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவர்களும் ஒன்று கூடினர். மணிப்பூரில் பெண்கள் மீதான கூட்டு பலாத்கார வன்கொடுமை செய்தவர்களை கண்டித்தும், இதற்கு காரணமாக இருந்த மணிப்பூர் அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். கல்லூரி மாணவர்களிடம் கல்லூரி முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தினார். இருந்தபோதும் மாணவர்கள் வகுப்பிற்கு செல்லாமல் அங்கேயே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பெண் கவுன்சிலர்கள் 3 பேர் தங்கள் குழந்தைகளுடன் விடிய விடிய உள்ளிருப்பில் கலந்து கொண்டனர்.
- ஆழ்துளை கிணறு அமைத்தததற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
குளச்சல் :
குளச்சல் அருகே உள்ளது ரீத்தாபுரம் பேரூராட்சி. இங்கு 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் கடந்த சில மாதங்களாக சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.
வார்டு கவுன்சிலர்களும் சீரான குடிநீர் வழங்க பேரூராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில் நேற்று கவுன்சிலர்கள் பிராங்கி ளின், ஷோபா, சுசீலா, சிந்து, ஜெகதீஸ்வரி, ஜெயசேகர், ஜெயக்குமார், மரிய செல்வி, அனிதா, சோமன், ஆஸ்வால்டர் ஆகியோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.அவர்களிடம் செயல் அலுவலர் சங்கர் கணேஷ் பேச்சு வார்த்தை நடத்தினார். இரவு ஆகியும் தீர்வு ஏற்பட வில்லை.
இதனால் கவுன்சிலர்கள் நேற்றிரவு முழுவதும் உள்ளிருப்பில் ஈடுப்பட்டனர். பெண் கவுன்சிலர்கள் 3 பேர் தங்கள் குழந்தைகளுடன் விடிய விடிய உள்ளி ருப்பில் கலந்து கொண்டனர்.
இன்று காலையும் தீர்வு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்தது.இவர்களுடன் பேரூராட்சி தலைவர் எட்வின்ஜோஸ், துணைத்தலைவர் விஜூமோன், 14-வது வார்டு கவுன்சிலர் ஷீலா ஆகியோரும் உள்ளிருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இவர்கள் வார்டுகளில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்வதை உறுதிப்படுத்தும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.2- வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதற்கிடையில் ஆழ்துளை கிணறு அமைத்தததற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் பேரூராட்சி குழாயை சேதப்படுத்தி சிலர் திருடி சென்றதாக, செயல் அலுவலர் சங்கர் கணேஷ், குளச்சல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.