என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதைப்பொருட்கள்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போதைப் பொருட்களுக்கு எதிரான போரில் அனைவரும் ஒன்றிணைவோம்.
    • துண்டுப்பிரசுரத்தில் தொடர்புடைய நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன.

    மதுரை:

    தமிழகத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து உள்ளதாகவும், சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

    அதேபோல் இளைஞர்களின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுக்க வேண்டும் என்று அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

    இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தெளிச்சாத்த நல்லூர் கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள 110 அடி உயர கொடிக்கம்பம் திறப்பு விழா மற்றும் கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க் கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகை தந்தார்.

    விமான நிலையத்தில் மதுரை மாநகர், புறநகர் கிழக்கு, புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் முன் னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் தொண்டர்கள் புடை சூழ உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியின் போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகத்தில் விரும்பத்தகாத செயலாக தொடர்ந்து அரங்கேறி வரும் கொலை, கொள்ளை, போதைப் பொருட்கள் குறித்து பிரசாரம் செய்யும் வகையில் துண்டுப் பிரசுரங்களை எடப்பாடி பழனிசாமி தொண்டர்களிடம் வழங்கினார்.

    அந்த துண்டு பிரசுரத்தில் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு போதைப் பொருட்கள் கடத்தப்பட்ட மாதங்கள், அதில் தொடர்புடைய நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன. மேலும் போதைப் பொருட்களுக்கு எதிரான போரில் அனைவரும் ஒன்றிணைவோம் என்றும் அச்சிடப் பட்டு இருந்தது. 

    • டெல்லியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.7,500 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்
    • கொக்கைன் கடத்தி வந்த வந்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபர் லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.

    டெல்லி ரமேஷ் நகர் பகுதியில் அமைந்துள்ள கிடங்கில் இருந்து ரூ.2000 கோடி மதிப்புள்ள சுமார் 200 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருட்களை டெல்லி சிறப்புப் பிரிவு போலீஸ் இன்று பறிமுதல் செய்தனர்.

    கொக்கைன் கடத்த பயன்படுத்தப்பட்ட காரில் ஜிபிஎஸ் பொருத்தி கண்காணித்து போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் சிற்றுண்டி பாக்கெட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர் .

    டெல்லிக்கு கொக்கைன் கடத்தி வந்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபர் லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார் என்று சொல்லப்படுகிறது.

    அக்டோபர் 2 ஆம் தேதி தெற்கு டெல்லியில் உள்ள மஹிபால்பூரில் உள்ள ஒரு குடோனில் இருந்து 5,620 கோடி ரூபாய் மதிப்பிலான 560 கிலோ கோகைன் மற்றும் 40 கிலோ ஹைட்ரோபோனிக் மரிஜுவானா பறிமுதல் செய்யப்பட்டது.

    துஷார் கோயல் (40), ஹிமான்சு குமார் (27), அவுரங்கசீப் சித்திக் (23), பரத் குமார் ஜெயின் (48) ஆகிய நான்கு பேர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டனர், மேலும் 3 பேர் அமிர்தசரஸ், சென்னை மற்றும் உத்தரபிரதேச மாநிலம் ஹாபூரில் இருந்து கைது செய்யப்பட்டனர்.

    5,620 கோடி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துபாய் தொழிலதிபர் வீரேந்தர் பசோயாவுக்கு எதிராக டெல்லி காவல்துறை லுக்அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.

    டெல்லியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.7,500 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது

    • சுமார் 2.3 டன் அளவிலான போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • இந்த விவகாரத்தில் 2 சிறுவர்கள் உட்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஆஸ்திரேலியா நாட்டின் குயின்ஸ்லாந்து கடற்கரையில் பழுதடைந்த படகு ஒன்றில் இருந்து 2.3 டன் அளவிலான போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இந்த விவகாரத்தில் 2 சிறுவர்கள் உட்பட 13 பேரை கைது செய்துள்ள போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு இந்திய ரூபாயில் 4,157 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

    • போதைப்பொருட்களையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் இருப்பு வைத்திருந்தனர்.
    • பல்லடம் போலீஸ் நிலையம் மூலம் ரூ.3.50 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதனை போலீசார் தீ வைத்து அழித்தனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் போதைப்பொருட்கள் புழக்கத்தை தடுக்கும் வகையில் போலீசார் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். கடைகள், குடோன்கள் உள்பட பல்வேறு இடங்களில் அவ்வப்போது சோதனை நடத்தி பதுக்கி வைக்கப்படும் குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    மேலும் வாகன சோதனை நடத்தி வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் போதைப்பொருட்களையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் இருப்பு வைத்திருந்தனர். கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் பல்லடம் போலீஸ் நிலையம் மூலம் ரூ.3.50 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதனை போலீசார் தீ வைத்து அழித்தனர்.

    • பள்ளியில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • போதைப் பொருள்களின் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில் முதல்வா் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா்.

    திருப்பூா் மாவட்டம், தாராபுரம் வட்டம், குண்டடம் மாதிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:- தமிழகத்தில் போதைப் பொருள்களின் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா். மன அழுத்தத்தைப்போக்க போதைப் பொருள்களைப் பயன்படுத்தி விடியல் ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று தவறான எண்ணம் ஏற்பட்டுள்ளது. போதைப் பொருள் பழக்கம் குழந்தைகளை, எதிா்கால சமூகத்தினை, மனித வளத்தை அழிக்கக்கூடியதாகும். ஆகவே, போதைப்பொருள் விற்பனை தொடா்பான தகவல்கள் தெரிந்தால் உடனடியாக 1098, 101 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என்றாா்.முன்னதாக இதில் பங்கேற்றவா்கள் போதைப் பொருள்களுக்கு எதிரான உறுதிமொழியை எடுத்துக் கொண்டனா்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.சஷாங்க் சாய், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் திருவளா்செல்வி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை ஒழிக்கும் வகையில் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர்.
    • புகையிலை பொருட்கள் விற்றதாக 423 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 423 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு முழுவதும் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களை ஒழிக்கும் வகையில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின்படி போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். திருப்பூர் மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை ஒழிக்கும் வகையில் போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின் பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில் கஞ்சா விற்றதாக 65 வழக்குகள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்றதாக 423 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 423 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 424 பேரின் வங்கி கணக்குகளில் இருந்த ரூ.9 லட்சத்து 12 ஆயிரத்து 480 முடக்கப்பட்டுள்ளது. 

    • சோதனையில் காரின் டிக்கியில் மூட்டை மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 188 கிலோ போதைப்பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
    • இதன் மொத்த மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    காடையாம்பட்டி:

    கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து தர்மபுரி தொப்பூர் வழியாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருவ–தாக தீவட்டிபட்டி போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதனையடுத்து தீவட்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனிசாமி, செல்வம் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த காரை மடக்கி பிடித்து தணிக்கை செய்தனர். சோதனையில் காரின் டிக்கியில் மூட்டை மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 188 கிலோ போதைப்பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காரில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த சரண்ராஜ்(35), நூர்முகமது (36) என்பது தெரிய வந்தது. அவர்கள் பெங்களூருவில் குறைந்து விலைக்கு போதை–பொருட்களை வாங்கி தமிழகத்தில் அதிகவிலைக்கு விற்பதற்காக கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதனை அடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். காருடன் ஹான்ஸ் மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    ×