என் மலர்
நீங்கள் தேடியது "லஞ்ச ஒழிப்பு சோதனை"
- புதிய கட்டிடம் கட்ட அனுமதி கொடுப்பதற்கு ரூ.40 ஆயிரம் வேண்டும் என சுப்பிரமணியம் அவரிடம் பேசி உள்ளார்.
- லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுப்பிரமணியத்தை கைது செய்தனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நகராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நகரமைப்பு பிரிவில் உதவியாளராக சுப்பிரமணியம் என்பவர் (48) பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சிவில் என்ஜினீயர் வருண் என்பவர் புதிதாக கட்டிடம் கட்டுவது தொடர்பாக சுப்பிரமணியனை சந்தித்துள்ளார். அப்போது புதிய கட்டிடம் கட்ட அனுமதி கொடுப்பதற்கு ரூ.40 ஆயிரம் வேண்டும் என சுப்பிரமணியம் அவரிடம் பேசி உள்ளார்.
பின்னர் இறுதியாக ரூ.30 ஆயிரம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. எனினும் லஞ்ச பணம் கொடுக்க மனம் இல்லாத வருண் இது குறித்து ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தல்படி வருண் இன்று காலை கோபிசெட்டிபாளையத்தில் உள்ள நகராட்சி அலுவலகத்திற்கு சென்றார். வருண் ரசாயனம் தடவிய பணத்தை சுப்பிரமணியனிடம் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த ஈரோடு லஞ்ச ஒழிப்பு துறை ஏ.டி.எஸ்.பி. ராஜேஷ், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சுப்பிரமணியத்தை கையும் களவுமாக பிடித்தனர்.
பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுப்பிரமணியத்தை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ.30 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் கோபிசெட்டிபாளையம் நகராட்சி அலுவலகம் இன்று பரபரப்புடன் காணப்பட்டது.
- பவானி அருகில் உள்ள ஊராட்சி கோட்டை மலையின் அடிவார பகுதியில் பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
- இந்த அலுவலகத்தில் லஞ்சம் வாங்கப்படுவதாக பொதுமக்கள் பலரும் ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் தெரிவித்த வண்ணம் இருந்தனர்.
பவானி:
பவானி அருகில் உள்ள ஊராட்சி கோட்டை மலையின் அடிவார பகுதியில் பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்தில் பவானி மற்றும் அந்தியூர் வட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் தாங்கள் வாங்கும் புது வாகனம் பழைய வாகனம் எப்.சி. காண்பித்தல், எல்.எல்.ஆர். மற்றும் லைசென்ஸ் பெறுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் மேட்டுப்பாளையத்தில் பணியாற்றிய சுகந்தி என்பவர் ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த சில நாட்களாகவே இந்த அலுவலகத்தில் லஞ்சம் வாங்கப்படுவதாக பொதுமக்கள் பலரும் ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் தெரிவித்த வண்ணம் இருந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் ஈரோடு லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. ராஜேஷ், இன்ஸ்பெக்டர் ரேகா, சப்- இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் கோவை மண்டல ஆய்வு குழு ஆலோசகர் சாந்தாமணி ஆகியோர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அலுவலகத்தில் உள்ளே இருந்த 2 பெண் அலுவலர்கள் உட்பட 5 பேர் மற்றும் புரோக்கர்கள் என வந்து சென்ற 12 பேர் உள்ளேயே அமர வைத்தனர்.
பின்னர் நடத்திய தீவிர சோதனையில் கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் பறிமுதல் செய்யப் பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல் தெரிவித்தனர். மாலை 4 மணிக்கு தொடங்கிய சோதனை நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது. கிட்டத்தட்ட 8 மணி நேரம் சோதனை நடந்தது.
புரோக்கர்களாக கருதப்படும் ஒரு சிலர் குறைந்த அளவு பணம் வைத்திருந்த நிலையில் அவர்களிடம் முகவரி, செல்போன் நம்பர் போன்றவற்றை வாங்கிக் கொண்டு இரவு 9 மணிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ஒரு சிலரை அதிக அளவு பணம் வைத்திருந்த குற்றத்திற்காக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உள்ளதாகவும், அதேபோல் கணக்கில் காட்டப்படாத ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அலுவலர் மீது வழக்கு பதிவு செய்ய உள்ளதாக தகவல் தெரிவித்தனர்.
+2
- திருவண்ணாமலையில் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது
சென்னை:
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். லஞ்ச புகார் எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
திருவண்ணாமலையில் உள்ள இணை சார்பதிவாளர் அலுவலகம் 2-ல் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொன்னேரி சார்பதிவாளர் அலுவலகம், ஆவடி பத்திரப்பதிவு, வட்டாச்சியர் அலுவலகங்கள், நாகை வட்டாச்சியர் அலுவலகம், கடலூர் மாநகராட்சி அலுவலகம், புதுப்பாளையம் பகுதியில் இயங்கும் 2 கட்டுமான வரைபட அனுமதி பெற்று தரும் அலுவலகம், ஆத்துார் வட்டார போக்குவரத்து அலுவலகம்,
திருப்பூர், நெருப்பெரிச்சலில் உள்ள, மாவட்ட ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகம் மற்றும் சிறுபூலுவபட்டியிலுள்ள திருப்பூர் வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலகம், தேனி சார் பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது. சோதனையில் சிக்கிய பணம் மற்றும் பொருட்கள் குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை.
திருவள்ளூர், நசரத்பேட்டை போக்குவரத்து துறை சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டபோது, லஞ்ச ஒழிப்பு போலீசாரை கண்டதும் ஊழியர்கள் கையில் இருந்த பணத்தை தூக்கி எறிந்தனர். கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்து, ஆர்.டி.ஓ., இன்ஸ்பெக்டர் மற்றும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. வெளி ஆட்களை பணியில் அமர்த்தி சோதனைச் சாவடி ஆய்வாளர் பணம் வசூல் செய்வதாக எழுந்த புகாரில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
- பல இடங்களில் போலீசார் வருவதை பார்த்ததும், சிலர் வாங்கி வைத்திருந்த லஞ்சப்பணத்தை ஜன்னல் வழியாக வீசி எறிந்ததை பார்க்க முடிந்தது.
- ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 6 ஆயிரத்து 200 சிக்கியது.
சென்னை:
தமிழகத்தில் அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களிடம் ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதை தடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
மக்களுக்கு சேவை செய்யவும், அவர்களின் தேவையை பூர்த்தி செய்வதுமே அரசு அலுவலகங்களின் கடமை. ஆனால் சில ஊழியர்களின் இதுபோன்ற தவறான நடவடிக்கையால் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.
தவறு செய்பவர்களை கண்டறியவும், அவர்களை கையும், களவுமாக பிடிக்கவும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தி, லஞ்ச பேர்வழிகளை கைது செய்து வருகிறது. தொடர்ந்து புகார்கள் அதிக அளவில் வந்தன.
இதனால் நேற்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 60 இடங்களில் உள்ள அரசு அலுவலகங்களிலும், சோதனை சாவடிகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் பணப்புழக்கம் அதிகம் இருப்பதாக கருதப்படும் வருவாய்த்துறை, பத்திரப்பதிவு துறை, போக்குவரத்து துறை (ஆர்.டி.ஓ. அலுவலகம்), உள்ளாட்சித்துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட 12 துறைகளின் அலுவலகங்களை குறிவைத்து அதிரடி சோதனை நடந்தது.
பெரும்பாலும் மதிய உணவு இடைவேளைக்கு பிறகுதான் லஞ்சப்பணம் அதிகம் கைமாறுவதாக கருதப்படுகிறது. இதனால் நேற்று மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இந்த சோதனையில் நூற்றுக்கணக்கான லஞ்ச ஒழிப்பு துறையினர் களம் இறங்கினர்.
பல இடங்களில் போலீசார் வருவதை பார்த்ததும், சிலர் வாங்கி வைத்திருந்த லஞ்சப்பணத்தை ஜன்னல் வழியாக வீசி எறிந்ததை பார்க்க முடிந்தது.
அவற்றை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு துறையினர், உடனடியாக அலுவலகங்களின் கதவுகளை பூட்டி, யாரையும் வெளியே அனுமதிக்கவில்லை.
சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்து துறை சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் வர்ணிகாஸ்ரீ தலைமையில் போலீசார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அங்கிருந்த ஊழியர்கள் கணக்கில் வராத பணத்தை வெளியே தூக்கி வீசி எறிந்தனர். அங்கு பணியில் இருந்த சோதனை சாவடி இன்ஸ்பெக்டர் சரோஜா மற்றும் ஊழியர்களிடம் இருந்து ரூ.20 ஆயிரத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 6 ஆயிரத்து 200 சிக்கியது. திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடு கட்டும் திட்ட பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் தாலுகா அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் மலா்கொடி தலைமையில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கின. கூடுவாஞ்சேரி சார்பதிவாளர் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்தது.
காஞ்சிபுரம் மாநகராட்சி மற்றும் தாலுகா அலுவலகங்களில் துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை பல மணி நேரமாக நீடித்தது.
திருவண்ணாமலை சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் கத்தை கத்தையாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதனை கணக்கிட்டபோது ரூ.8 லட்சத்து 41 ஆயிரத்து 440 இருந்தது. தொடர்ந்து இந்த பணம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல செய்யாறு சார்பதிவாளர் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றது.
ஈரோடு சத்தியமங்கலம் அருகே பண்ணாரியில் உள்ள போக்குவரத்து சோதனைச்சாவடியில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.40 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.15 ஆயிரமும், தாரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.27 ஆயிரமும், தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.37 ஆயிரமும் சிக்கியது. நாமக்கல் மின்வாரிய அலுவலகத்திலும் இந்த சோதனை நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலகத்திலும் நேற்று மாலை சோதனை நடந்தது. இதில் அதிகாரிகளின் கார்களில் சோதனை செய்தபோது, தியாகராஜன் என்ற அதிகாரியின் காரில் இருந்து ரூ.1 லட்சமும், அலுவலகத்தில் ரூ.42 ஆயிரமும், ஒரு தங்க நாணயமும் சிக்கியது.
இதேபோல் நாகர்கோவில் வடசேரி மேற்கு கிராம நிர்வாக அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.17 ஆயிரத்து 853 பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பூர் நெருப்பொரிச்சலில் உள்ள ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் ரூ.50 ஆயிரமும், திருப்பூர் சிறுபூலுவப்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.2 லட்சமும் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைப்பற்றப்பட்டு விசாரணை நடக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். இதேபோல் தேனி சார்பதிவாளர் அலுவலகத்திலும் சோதனை நடந்தது.
நெல்லை டவுன் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.62 ஆயிரம் சிக்கியது. இதேபோல் பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சார்பதிவாளர் அலுவலகம், கரூர் மாவட்டம் தரகம்பட்டி பத்திரப்பதிவு அலுவலகம், கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆகிய இடங்களிலும் சோதனை நடந்தது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.6 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி தென்னூர் மின்வாரிய முதன்மை பொறியாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.13,700 சிக்கியது. திருச்சி புள்ளம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வேட்டை நடந்தது.
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் சோதனையில் ரூ.60 ஆயிரமும், கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.13,500-ம், நீலகிரி மாவட்டம் குன்னூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 500-ம் சிக்கியது.
இதேபோல் தஞ்சை பிள்ளையார்பட்டியில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கு, கும்பகோணம் வணிக வரித்துறைக்கு சொந்தமான நடமாடும் வாகனம், நாகை தாலுகா அலுவலகம், திருவாரூர் நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம், மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆகிய இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
கடலூரை பொறுத்தவரை மாநகராட்சி அலுவலகம் மற்றும் 4 கட்டுமான நிறுவனம் உள்பட 5 இடங்களில் இந்த சோதனை நடந்தது. மாலை 3 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு வரை நீடித்தது.
இதேபோல் கடலூர் மாநகராட்சியில் ரூ.5 லட்சம் சிக்கியது.
இவ்வாறு தமிழகம் முழுவதும் 60 இடங்களில் நேற்று அதிரடியாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் அரங்கேற்றிய இந்த அதிரடி சோதனையில் பல லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது.
- சென்னையில் 5 இடங்களிலும் வெளி மாவட்டங்களில் 5 இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
- ரசீது புத்தகங்களை அச்சிட்டதில் ஏற்பட்டுள்ள முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் 2 வழக்குகளை பதிவு செய்து உள்ளனர்.
சென்னை:
சென்னை அறிவியல் நகரத்தின் துணை தலைவராக இருப்பவர் மலர்விழி. ஐ.ஏ.எஸ். பெண் அதிகாரியான இவர் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இந்த குடியிருப்பில் 13-வது மாடியில் மலர்விழியின் வீடு உள்ளது. இவரது வீட்டுக்கு இன்று காலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சென்றனர். அவர்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழியிடம் தங்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பாக வீட்டில் சோதனை நடத்தி சில தகவல்களை திரட்ட வேண்டியுள்ளது என்று கூறினர்.
இதையடுத்து வீட்டுக்குள் சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்ட கலெக்டராக மலர்விழி கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ந்தேதி பணியில் சேர்ந்து 2020-ம் ஆண்டு அக்டோபர் 29-ந் தேதி வரை பணி புரிந்துள்ளார்.
தனது பணி காலத்தில் மலர்விழி ஐ.ஏ.எஸ். உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரி வசூல் செய்வதற்கு சொத்து வரி ரசீது புத்தகம், குடிநீர் கட்டண ரசீது புத்தகம், தொழில் வரி ரசீது புத்தகம் உள்ளிட்ட புத்தகங்களை அச்சிட்டு வாங்கி உள்ளார். இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் மலர்விழி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
2-வது குற்றவாளியாக சென்னை சுப்பாராவ் நகரை சேர்ந்த கிரசண்ட் நிறுவன உரிமையாளரான தாகீர் உசேன், பத்மாவதி நகரை சேர்ந்த நாகா டிரேடர்ஸ் உரிமையாளரான வீரய்யா பழனிவேலு ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். தனியார் நிறுவனங்களை நடத்தி வரும் இவர்கள் இருவரும் வரி வசூல் புத்தகங்களை அச்சிட்டு கொடுப்பதில் ஏற்பட்டுள்ள முறைகேட்டுக்கு துணை புரிந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் முழுவதும் 251 ஊராட்சிகளுக்கு ரசீது புத்தகங்களை அச்சிட்டு வினியோகம் செய்ததில்தான் ரூ.1½ கோடி வசூலித்ததில் முறைகேடு நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றம்சாட்டி உள்ளனர்.
இந்த ரசீது புத்தகங்களை அச்சிடுவதற்கு மலர்விழி ஐ.ஏ.எஸ் ரூ.1 கோடியே 31 லட்சத்து 77,500 கூடுதலாக கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதன் அடிப்படையிலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது.
வரி வசூல் ரசீது புத்தகங்களை அச்சிட்டு வாங்குவதில் அரசு வகுத்துள்ள விதிகளை மீறி அரசின் நிதியை மோசடி செய்யும் எண்ணத்துடன் குற்றவியல் சதியில் கலெக்டராக இருந்த மலர்விழி ஈடுபட்டிருப்பது தெரிய வந்திருப்பதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தங்களது முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்து உள்ளனர். ஒப்பந்த புள்ளி கோரப்படாமல் 2 தனியார் நிறுவனங்களில் இருந்தும் அதிக விலைக்கு புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன.
இப்படி நேர்மையற்ற முறையில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 500 வீட்டு வரி ரசீது புத்தகங்கள் வாங்கப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 2 மற்றும் 3-வது குற்றவாளிகளான தனி நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தொகை தர்மபுரி மாவட்ட அச்சு பொறிகளின் விலையுடன் ஒப்பிடும்போது முற்றிலும் அதிகமாக இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் மலர்விழி ஐ.ஏ.எஸ். உள்பட 3 பேர் மீதும் 120பி (கூட்டு சதி) மற்றும் ஊழல் தடுப்பு சட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழியின் வீடு உள்பட சென்னையில் 5 இடங்களிலும் வெளி மாவட்டங்களில் 5 இடங்களிலும் என மொத்தம் 10 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று சோதனையில் ஈடுபட்டனர். விழுப்புரம், தர்மபுரியில் தலா ஒரு இடத்திலும் புதுக்கோட்டையில் 3 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கருக்காக்குடி பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். தொழிலதிபரான இவர் அ.தி.மு.க.வில் உள்ளார். அரசு ஒப்பந்ததாரரான இவர் ஏராளமான பணிகளை எடுத்து நடத்தி வருகிறார்.
இவரது சகோதரர் முருகானந்தம். பா.ஜ.க.வில் இருக்கும் இவர் புதுக்கோட்டை மாவட்ட பொருளாளராக பணியாற்றி வருகிறார்.
சகோதரர்கள் இருவரும் சேர்ந்து நிதி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்தனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக தொழில் செய்து வருகின்றனர்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர்களாக செயல்பட்டு வந்த இவர்கள் மீது அதிக சொத்து குவித்ததாக புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில் பழனிவேலுக்கு சொந்தமான கருக்காக்குடியில் உள்ள இரண்டு வீடுகள், புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள அவரது அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தி வருகிறார்கள்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலராக கிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கருவூல காலனி பகுதியில் வசித்து வருகிறார்.
இவர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள மொரப்பூர், காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம், ஏரியூர், தருமபுரி, நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணி புரிந்து வந்தார். தற்போது அவர் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருகிறார்.
கிருஷ்ணன் கடந்த 2019-ம் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றியபோது அரசின் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக கொரோனா காலங்களில் பிளீச்சிங் பவுடர் வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.
இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர், இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர், தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கருவூல காலனியில், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணனின் வீட்டில் இன்று காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
அரசின் திட்டங்கள் செயல்படுத்துவதற்காக வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் டெண்டர் விடப்பட்ட விழுப்புரம் மாவட்டம் சாலமேடு அசனகுளம் பகுதியைச் சேர்ந்த பாப்பாத்தி என்பவருக்கு சொந்தமான ஸ்ரீநடியம்பாள் ஏஜென்சி நிறுவனத்திற்கும், சென்னை பத்மாவதி நகரைச் சேர்ந்த வீரய்யா பழனிவேலுக்கு சொந்தமான நாக டிரேடர்ஸ் நிறுவனத்திற்கும், சுப்பாராவ் நகரைச் சேர்ந்த தாகீர்உசேன் என்பவருக்கு சொந்தமான கிரசண்ட் டிரேடர்ஸ் நிறுவனத்திற்கும், காஞ்சிபுரம் மடிப்பாக்கம் பகுதியில் உள்ள வன ரோஜா என்பவருக்கும் சொந்தமான ஆர்.வி.என் என்ற நிறுவனத்திற்கும் இந்த முறைகேடுகளில் தொடர்பு உள்ளது என்று லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தெரியவந்தது.
அந்த 4 நிறுவனங்களிலும் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அந்தந்த நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
ரசீது புத்தகங்களை அச்சிட்டதில் ஏற்பட்டுள்ள முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் 2 வழக்குகளை பதிவு செய்து உள்ளனர். 2-வது எப்.ஐ. ஆரில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த வட்டார வளர்ச்சி அதிகாரி கிருஷ்ணன், விழுப்புரத்தை சேர்ந்த பாப்பாத்தி, சென்னையை சேர்ந்த வீரய்யா பழனிவேலு, தாகீர் உசேன், காஞ்சிபுரத்தை சேர்ந்த வனராஜா ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
முதல் தகவல் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்களுக்கு சொந்தமான இடங்களிலேயே லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று சோதனை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
அ.தி.மு.க. ஆட்சியின்போது மாவட்ட கலெக்டராக இருந்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது முறைகேடு புகார் கூறப்பட்டு இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசாார் வழக்குப்பதிவு செய்திருப்பதும் அவரது வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டிருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சகோதரர்கள் இருவரும் சேர்ந்து நிதி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்தனர்.
- சோதனை நடந்து வரும் பகுதிகளில் ஏராளமான உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கருக்காக்குடி பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். தொழிலதிபரான இவர் அ.தி.மு.க.வில் உள்ளார். அரசு ஒப்பந்ததாரரான இவர் ஏராளமான பணிகளை எடுத்து நடத்தி வருகிறார்.
இவரது சகோதரர் முருகானந்தம். பா.ஜ.க.வில் இருக்கும் இவர் புதுக்கோட்டை மாவட்ட பொருளாளராக பணியாற்றி வருகிறார்.
சகோதரர்கள் இருவரும் சேர்ந்து நிதி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்தனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக தொழில் செய்து வருகின்றனர்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர்களாக செயல்பட்டு வந்த இவர்கள் மீது அதிக சொத்து குவித்ததாக புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில் பழனிவேலுக்கு சொந்தமான கருக்காக்குடியில் உள்ள இரண்டு வீடுகள், புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள அவரது அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தி வருகிறார்கள்.
இதையொட்டி சோதனை நடந்து வரும் பகுதிகளில் ஏராளமான உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- சென்னை அறிவியல் நகரத்தின் துணைத்தலைவராக இருப்பவர் மலர்விழி.
- சென்னை மற்றும் விழுப்புரத்தில் இருந்து வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்:
சென்னை அறிவியல் நகரத்தின் துணைத்தலைவராக இருப்பவர் மலர்விழி. ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இவரது வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். மலர்விழியின் பெற்றோர் விழுப்புரம் 36-வது வார்டு சாலமேடு புகாரி நகரில் வசித்து வருகிறார்கள். அவர்களது வீட்டிலும் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள்.
சென்னை மற்றும் விழுப்புரத்தில் இருந்து வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். வீட்டை அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர். சோதனை முடிந்த பின்னரே ஆவணங்கள் ஏதும் சிக்கியதா? என்பது தெரியவரும்.
பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பெற்றோர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
- காஞ்சிபுரத்தில் பணியாற்றியபோது பொருட்கள் கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது.
- வீட்டில் இருந்த ஆவணங்கள், லேப்டாப் ஆகியவற்றை எடுத்து சோதனை நடத்தப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக மகேஸ்வரி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பதவியேற்றார். திருப்பூரைச் சேர்ந்த இவர் கடந்த 2012-ம் ஆண்டு குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்று மாநிலத்தில் 5-ம் இடத்தையும், பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும் பிடித்தார்.
அதன் பின்னர் அரசு பணியில் தனது முதல் பயணத்தை தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி ஆணையராக மகேஸ்வரி தொடங்கினார். பணியில் சேர்ந்த 2 ஆண்டுகளிலேயே அந்த நகராட்சியை சிறந்த நகராட்சியாக மாற்றியதற்காக கடந்த 2014ம் ஆண்டு விருது பெற்றார்.
அதன் பின் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், காஞ்சிபுரம், கடலூர், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணியாற்றினார். குமாரபாளையத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக 2018-ம் ஆண்டு இவருக்கு விருது வழங்கப்பட்டது.
2019-ம் ஆண்டில் தர்மபுரியை சிறந்த நகராட்சியாக மாற்றியதற்காகவும் விருது வழங்கப்பட்டது.
திண்டுக்கல்லில் மாநகராட்சி ஆணையராக பதவியேற்ற மகேஸ்வரி ஆர்.எம்.காலனி 1-வது கிராஸ் பகுதியில் உள்ள தனியார் அபார்ட்மெண்டில் குடியிருந்து வருகிறார். இவரது கணவர் மருந்துகள் விற்பனை பிரிவில் பணிபுரிந்து வருகிறார். மகள் வெளியூரில் படித்து வருகிறார்.
இந்நிலையில் திண்டுக்கல்லில் உள்ள மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி வீட்டுக்கு இன்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. நாகராஜ் தலைமையில் 10 பேர் கொண்ட போலீசார் வந்தனர். அவர்கள் மகேஸ்வரி வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
வீட்டில் இருந்த ஆவணங்கள், லேப்டாப் ஆகியவற்றை எடுத்து சோதனை நடத்தப்பட்டது. சோதனையின்போது வேறு யாரும் அந்த குடியிருப்புக்குள் அனுமதிக்கப்படவில்லை.
காஞ்சிபுரத்தில் பணியாற்றியபோது கொரோனா காலக்கட்டத்தில் கிருமிநாசினி கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். இவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் வெளியூரில் வசித்து வருகின்றனர். காஞ்சிபுரம் உள்பட மகேஸ்வரியின் உறவினர் 5 பேர் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது. இதனால் திண்டுக்கல் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தததாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
- தாசில்தாரின் வீட்டில் இருந்து சொத்துக்கள் தொடர்பான பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
விஜயபுரா:
கர்நாடக மாநிலம் விஜயபுரா மற்றும் பாகல்கோட் மாவட்டங்களில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள அரசு அதிகாரிகளின் வீடுகளில், லோக் ஆயுக்தாவின் லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 20 அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் கே.ஆர்.புரா தாசில்தார் அஜித் ராய் என்பவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.10 லட்சம் பணம் கட்டுக்கட்டாக வைத்திருந்தது தெரியவந்தது. அந்த பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும், சொத்துக்கள் தொடர்பான பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தததாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் அரசு ஊழியர்கள் ஊழல் செய்வதை தடுக்கும் நோக்கில் லோக் ஆயுக்தாவின் லஞ்ச ஒழிப்புத்துறை இயங்கி வருகிறது.
- லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமா தலைமையிலான போலீசார், லதா சந்திரனிடம் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்தனர்.
- வீட்டில் லதா சந்திரன் மற்றும் அவரது கணவர், மகன்கள் இருந்தனர். அவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே உள்ள சுங்கான் கடை பகுதியைச் சேர்ந்தவர் லதா சந்திரன். இவர் ஆளூர் பேரூராட்சி தலைவராக இருந்த து வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் வந்தது.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமா தலைமையிலான போலீசார், லதா சந்திரனிடம் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து கூடுதல் சூப்பிரண்டு ஹெக்டேர் தர்மராஜ், இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை 6 மணிக்கு சுங்கான்கடையில் உள்ள லதா சந்திரன் வீட்டிற்கு சென்றனர்.
வீட்டில் லதா சந்திரன் மற்றும் அவரது கணவர், மகன்கள் இருந்தனர். அவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். லதா சந்திரன் பேரூராட்சி தலைவராக இருந்தபோது எந்த வகையான சொத்துக்களை வாங்கினார் என்பது குறித்த விவரங்களை கேட்டறிந்தனர். இதை தொடர்ந்து சொத்து தொடர்பான ஆவணங்களை சரி பார்த்தனர்.
போலீசார் கேட்ட விவரங்களுக்கு அவர் பதில் அளித்தார். தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காலை தொடங்கிய சோதனை மதியத்திற்கு மேலும் நீடித்தது. முன்னாள் பேரூராட்சி தலைவி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லதா சந்திரன் ஏற்கனவே ஆளுர் பேரூர் அ.தி.மு.க. செயலாளராக இருந்துள்ளார். தற்போது வீராணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவராகவும் உள்ளார்.
- சோதனை நடைபெற்ற நேரத்தில் பத்திரப்பதிவுக்காக சுமார் 40-க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர்.
- சம்பந்தப்பட்ட துணை சார்பதிவாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரங்களை பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிக பணம் வசூலிப்பதாக புகார்கள் சென்றன.
இதையடுத்து கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர் பிரபு உள்ளிட்ட 7 போலீசார் நேற்று மாலை சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றனர்.
பின்னர் அவர்கள் அலுவலகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சார்பதிவாளர் ரகோத்தமன் விடுமுறையில் இருந்ததால், பொறுப்பில் இருந்த துணை சார்பதிவாளர் ஷகீலா பேகத்திடம் விசாரணை நடத்தினர்.
மேலும் மற்ற அலுவலர்கள், ஊழியர்களிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மாலை 5.30 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு 9 மணியை கடந்தும் நீடித்தது.
சோதனை நடைபெற்ற நேரத்தில் பத்திரப்பதிவுக்காக சுமார் 40-க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர்.
அவர்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.5 லட்சத்து 4 ஆயிரம் சிக்கியது. மேலும் சம்பந்தப்பட்ட துணை சார்பதிவாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
- லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரை வழங்கி டிரைவர்கள் திருப்பி அனுப்பினர்.
- ரூ.10 ஆயிரத்து 500 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவை,
தமிழக-கேரள எல்லையான வாளையார் பகுதியில் கேரள மாநில ஆர்.டி.ஓ. சோதனைச்சாவடியும், எட்டிமடை பகுதியில் தமிழக ஆர்.டி.ஓ. சோதனைச்சாவடியும் உள்ளன.
இதனை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளிடம் உரிய ஆவணங்கள் இருந்தாலும் சுமார் ரூ.300 முதல் ரூ.1000 வரை அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு மாநில எல்லையை கடக்க அனும திப்பதாக கூறப்படுகிறது.
அவ்வப்போது தமிழக மற்றும் கேரள சோதனைச்சாவடிகளில் அந்தந்த மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டு லஞ்சம் வாங்கும் அதிகா ரிகள் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இந்தநிலையில் வாளையார் ஆர்டி.ஓ. சோதனை ச்சாவடியில் கேரள லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொ ண்டனர்.
அப்போது அங்கிருந்த ரூ.10 ஆயிரத்து 500 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அங்கிருந்த ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை செய்தனர். அப்போது அங்கு வந்த சில லாரி டிரைவர்கள் சோதனைச்சாவடி ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றனர். இதனை பார்த்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். எதற்காக பணம் கொடுக்கிறீர்கள் என கேட்டபோது சோத னைச்சாவடி ஊழியர்கள் வழக்கமாக கேட்பார்கள் என தெரிவித்தனர்.
அதற்கு ஆவணங்கள் சரியாக இருந்தால் யாரும் லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை, லஞ்சம் கொடுப்பது தவறு என டிரைவர்களுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரை வழங்கி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இந்த வீடியோ காட்சிகள் தற்போது வேகமாக பரவி வருகிறது.