search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகன விபத்து"

    • அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.
    • வாகன ஓட்டிகள் திணறி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் நகரம் வேக மாக வளர்ந்து வருகிறது. இங்குள்ள வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது.

    தினந்தோறும் ஏராளமானோர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கிறார்கள். ஆடி, தை அமாவாசை நாட்கள் மற்றும் மற்ற நாட்களில் வரும் அமாவாசை நாட்களிலும் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    இந்த நிலையில் திருவள்ளூர் நகர் பகுதியில் மாடுகள் அதிக அளவில் கூட்டம், கூட்டமாக சாலையில் ஹாயாக சுற்றி வருகின்றன. சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை உட்பட முக்கிய சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக மாடுகள் நிற்பதால் வாகன ஓட்டிகள் திணறி வருகிறார்கள்.

    கடந்த சில மாதங்களுக்கு முன் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பறிமுதல் செய்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இதன் பின்னர் சில நாட்கள் சாலையில் சுற்றிய மாடுகள் பிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    தற்போது அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் திருவள்ளூர் நகர் பகுதியில் மாடுகள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. எந்த சாலையில் திரும்பினாலும் மாடுகள் ஹாயாக சுற்றி வருகின்றன.

    குறிப்பாக திருவள்ளூரின் முக்கிய பகுதியான ரெயில் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை செல்லும் சாலையில் பஸ், லாரி, ஆட்டோ, ஆம்னி வேன், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவைகளை வழிமறித்து மாடுகள் கூட்டமாக செல்வதால் அந்த சாலையில் போக்கு வரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. போக்குவரத்து போலீசாரும், வாகன ஓட்டிகளும் சாலையில் நிற்கும் மாடுகளை விரட்ட கடும்பாடுபட்டு வருகிறார்கள்.

    கலெக்டர் அலுவலகத்தில் இருந்து காமராஜர் சிலை வரை தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட மாடுகள் வாகனங்க ளுக்கு இடையே புகுந்து சாலையில் படுத்து கொள்கின்றன. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் உயிரை கையில் பிடித்தபடி பயணம்செய்து வருகிறார்கள்.

    மேலும் முக்கிய சாலையின் சிக்னல் கம்பம் அருகேயும் மாடுகள் படுத்து கொள்வதால் போக்குவரத்து போலீசார் அதனை விரட்ட தினந்தோறும் தவித்து வருகிறார்கள்.

    எனவே திருவள்ளூர் நகர் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக விபத்து ஏற்படும் வகையில் சுற்றும் மாடுகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து ஈக்காடு பகுதியைச் சேர்ந்த சுனில் என்பவர் கூறும்போது, `நான் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். தினமும் திருவள்ளூரில் உள்ள ரெயில் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் செல்வேன்.

    காலையில் வீட்டில் இருந்து செல்லும்போதும், இரவு நேரத்தில் திரும்பி வரும் போதும் தேரடி முதல் ரெயிலடி வரை ஜெ.என் சாலையில் மாடுகள் படுத்து கிடந்து போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்துகின்றன. மேலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.

    எனவே சாலையில் சுற்றும் மாடுகளை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

    பெரியகுப்பத்தை சேர்ந்த சம்பத் கூறும்போது, திருவள்ளூரில் உள்ள பள்ளியில் படித்து வரும் எனது மகனை தினமும் மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்வேன். சாலையில் சுற்றும் மாடுகளால் விபத்து அபாயத்தில்தான் தினந்தோறும் செல்ல வேண்டி உள்ளது.

    பலர் மாடுகள் மீது மோதி விழுந்து செல்கிறார்கள். அசம்பாவிதம் ஏற்படும் முன்பு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.

    • சாலையை கடக்க முயன்றபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    ஆந்திர மாநிலம், குப்பம் ஆர்.கே.ரோடு பகுதியை சேர்ந்தவர் மதுசூதனன். இவரது மகன் நிதின் (வயது 30). இவர் நேற்று வீட்டில் இருந்து கோவிலுக்கு செல்வதாக பெற்றோர்களிடம் கூறிவிட்டு இவருக்கு சொந்தமான காரில் வேலூர் நோக்கி சென்றார்.

    பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிகொண்டா ஓட்டல் எதிரே வந்த போது கார் பழுதடைந்துள்ளது. இதனால் அவர் காரை ஓட்டல் அருகில் நிறுத்திவிட்டு மெக்கானிக்கை அழைப்பதற்காக எதிரே உள்ள சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் நிதின் மீது மோதியது.

    இதில் தலையில் பலத்த காயமடைந்த நிதின் சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிற்காமல் சென்று விட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிதின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

    • 3 மகன்கள் உள்ள நிலையில் பரிதாபம்
    • 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அடுத்த மோட்டூரை சேர்ந்தவர் சந்திரன் (வயது 46). தொழிலாளி. இவரது மனைவி மலர் இவர்களுக்கு கார்த்திக், சாரதி, கலைமுத்து என 3 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சந்திரன் பொன்னப்பன்தாங்கல் கன்னி கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் நடந்து சென்று கொண்டிருந்த சந்திரன் மீது மோதியது.

    இதில் அவர் பலத்த காயமடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் பாணாவரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக சந்திரன் உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் மின்னல் வேகத்தில் சென்றனர்.
    • முதற்கட்ட விசாரணையில் அந்த வாலிபர்கள் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்பது தெரியவந்தது.

    சூலூர்:

    கோவை அருகே உள்ள சூலூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் மாதையன். இவர் இன்று அதிகாலை 2.45 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்.

    ெதன்னம்பாளையம் பிரிவு அருகே சென்றபோது அந்த வழியாக நம்பர் பிளேட் இல்லாத மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படியாக 2 வாலிபர்கள் சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக சென்றனர்.

    இதனையடுத்து இன்ஸ்பெக்டர் மாதையன் மற்றும் டிரைவர் சிவக்குமார் ஆகியோர் அந்த வாலிபர்களை ரோந்து வாகனத்தில் விரட்டி சென்றனர். 5 கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்றனர். ஆனால் அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் மின்னல் வேகத்தில் சென்றனர்.

    இதனையடுத்து டிரைவர் சிவக்குமார் வாலிபர்களை பிடிப்பதற்காக அவர்களின் மோட்டார் சைக்கிளை முந்திச் சென்று பின் பக்கத்தில் இடித்தார். அப்போது ரோந்து வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் வலது பக்கத்தில் இருந்த தடுப்பு கம்பியில் மோதியது.

    மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த வாலிபர்கள் இருட்டில் ஓடி தப்பித்தனர். ரோந்து வாகனம் விபத்தில் சிக்கியதில் இன்ஸ்பெக்டர் மாதையனின் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் அவரை நீலாம்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    போலீசார் வாலிபர்கள் விட்டுச் சென்ற கைப்பையை சோதனை செய்தனர். அதில் பட்டாகத்தி, வீடுகளை உடைக்க பயன்படுத்தும் இரும்பி கம்பி 2, ஸ்குரு டிரைவர், கையுறை, 2 டார்ச் லைட், சிறிய கத்தி ஆகியவை இருந்தது. வாலிபர்கள் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள் மற்றும் ஆயுதங்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முதற்கட்ட விசாரணையில் அந்த வாலிபர்கள் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்பது தெரியவந்தது. இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு கணியூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பாப்பம்மாள் (72) என்ற மூதாட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையை செய்தவர்கள் யார், எதற்காக செய்தனர் என்று இதுவரை கண்டுபி டிக்கப்படவில்லை. போலீசார் கொலையாளிகளை தேடி வரும் நிலையில் சந்தேகத்துக்கு இடமான வகையில் 2 பேர் தப்பிச் சென்றுள்ளனர்.

    இதனால் அவர்களுக்கு கொலை வழக்கில் எதுவும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • செய்யாறு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த தனசேகரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 23). தொழிலாளி. இவரது மனைவி கவிதா. நேற்று முன்தினம் சுதாகர் தனது நண்பருடன் பைக்கில் வேலை சம்பந்தமாக பெருங்கட்டூருக்கு சென்றார்.

    அங்குள்ள கடையில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு சுதாகர் காஞ்சிபுரம் - கலவை சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த வாகனம் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சுதாகர் பலத்த காயம் அடைந்தார்.

    இதனைக் கண்ட சுதாகரின் நண்பரும் அந்த வழியாக சென்றவர்களும் படுகாயம் அடைந்த அவரை மீட்டு பெருங்கட்டூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சுதாகர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்து குறித்து மோரணம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுதாகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கனரக வாகனங்கள் மிகவும் ஆபத்தான முறையில் நெடுஞ்சாலையில் நுழைகின்றன.
    • விபத்துக்கள் நேராமல் தடுக்குமாறு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பெருமாநல்லூர்:

    ஊத்துக்குளி சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையின் செங்கப்பள்ளி புறவழிச்சாலை தொடங்கும் பிரிவில் சாலையோர உணவகங்களில் இருந்து வெளியே வரும் கனரக வாகனங்கள் மிகவும் ஆபத்தான முறையில் நெடுஞ்சாலையில் நுழைகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

    தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமிப்பு செய்து உணவகங்கள் செயல்படுகின்றன. அங்கு வரிசையாக கனரக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் இங்கு விபத்து நடப்பது வாடிக்கையாகிவிட்டது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து விபத்துக்கள் நேராமல் தடுக்குமாறு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திண்டிவனம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி சென்னையை சேர்ந்த கல்லூரி, பள்ளி மாணவர்கள் பலியானர்கள்.
    • நண்பரின் அக்காள் திருமணத்திற்கு சென்ற கல்லூரி, பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திண்டிவனம்:

    சென்னை எம்ஜிஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரி (வயது 19), சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த கிருபாகரனும் (17) நண்பர்களாவர். கிருபாகரன் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    இந்நிலையில் இவர்களும், இவர்களது நண்பர்கள் 4 பேரும் 3 மோட்டார் சைக்கிளில் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு நண்பரின் அக்காள் திருமணத்திற்கு சென்றனர். இவர்கள் அனைவரும் விலை உயர்ந்த அதிக வேகத்தில் செல்லும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். ஹரியும் கிருபாகரனும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை ஹரி ஓட்டிச்சென்றார்.

    திண்டிவனம் அடுத்த பாதிரி கிராமம் அருகே வந்த போது ஹரி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் தூக்கி வீசப்பட்டதில் ஹரி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி துடிதுடித்து இறந்தார். இவரது பின்னால் அமர்ந்து வந்த பிளஸ்-2 மாணவன் கிருபாகரன் படுகாயங்களுடன் 108 ஆம்புலன்சில் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாணவன் கிருபாகரன் இறந்து விட்டதாக கூறினர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒலக்கூர் போலீசார் 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மோட்டார் சைக்கிள் மீது மோதிய அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.

    நண்பரின் அக்காள் திருமணத்திற்கு சென்ற கல்லூரி, பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை
    • சாலையை கடந்தபோது விபரீதம்

    நாட்டறம்பள்ளி:

    நாட்டறம்பள்ளி அடுத்த ஆத்தூர்குப்பத்தை சேர்ந்தவர் முனுசாமி.

    இவரது மனைவி வள்ளியம்மாள் (வயது 78) இவர் நேற்று வாணியம்பாடி கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மூதாட்டி மீது மோதியது. சம்பவம் இடத்திலேயே தலை நசுங்கி வள்ளியம்மாள் பரிதாபமாக இறந்தார்.

    தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மூதாட்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரோட்டோரம் ஒதுக்கி நிறுத்தப்பட்டிருந்த டெம்போ மீது மோதி விபத்தில் சிக்கினார்.
    • இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி :

    இரணியல் அருகே உள்ள பன்னிக்கோடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 40). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவர் தற்போது ஊருக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் கார்த்திக் திங்கள்சந்தை சென்று விட்டு பைக்கில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். காஞ்சிரவிளை அருகே வரும்போது எதிர்பாராதவிதமாக ரோட்டோரம் ஒதுக்கி நிறுத்தப்பட்டிருந்த டெம்போ மீது மோதி விபத்தில் சிக்கினார்.

    இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சுங்கான்கடையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற அவரை பரிசோதித்த டாக்டர்கள் கார்த்திக் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது மனைவி வனிதா இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த திருவலம் சுகர் மில் பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன்.இவரது மகன் கோவிந்தன் (வயது 36). இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு திருநங்கையாக மாறினார்.

    கோவிந்தன் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டு ரத்தினகிரி அடுத்த அரப்பாக்கம் பாப்சு நகரில் தனியாக தங்கி இருந்தார்.

    நேற்று இரவு அரப்பாக்கத்தில் உள்ள முனீஸ்வரன் கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடந்தார். அப்போது சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் கோவிந்தன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

    இதில் கோவிந்தன் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து ரத்தினகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலாஜி, விஜயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோவிந்தன் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவிந்தனின் தாயார் பத்மாவதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த வேப்பல்நத்தம் வாலூர் பகு தியை சேர்ந்தவர் பெரியதம்பி. இவரது மகன் சின்னபையன் (வயது 55), விவசாயி. இவர் நேற்று இரவு மோட்டார் சைக் கிளில் நாட்டறம்பள்ளி அருகே பங்களா மேடு ரெயில்வே மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சின்னப் பையன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். பின்னர் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஆட்டோ ஒன்று சென்று கொண் டிருந்தது.
    • அவினாசிபாளையம் போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    பல்லடம் :

    பொங்கலூரில் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடத்தில் இருந்து கிழக்கு நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதன் பின்னால் மற்றொரு கார் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது.

    அது எதிர்பாராத விதமாக முன்னால் வந்த கார் மீது மோதியதில் அந்த காருக்கு பின்னால் வந்த மற்றொரு கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 3 வாகனங்கள் ஒரே நேரத்தில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டதால் சிறிது நேரம் அந்த சாலையில் போக்குவரத்து தடைபட்டது.

    மேலும் இதில் காயம் அடைந்த அனைவரும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து அவினாசிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×