என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுலா தலம்"

    • ஸ்மோக் பிஸ்கெட் உள்ளிட்ட திரவ நைட்ரஜன் உணவுகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.
    • உணவு விடுதிகளில் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க தடை உள்ளது.

    புதுச்சேரி:

    கர்நாடகாவில் ஸ்மோக் பிஸ்கெட் சாப்பிட்டு சிறுவன் துடிதுடித்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    ஸ்மோக் பிஸ்கெட்டை குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம். அது, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என, தமிழக உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்து, அதனை தடுக்க, தனிப்படை களம் இறக்கியுள்ளது.

    புதுச்சேரியிலும் இந்த வகை ஸ்மோக் பிஸ்கெட்டுகள் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. திருமண விழாக்கள், பொருட்காட்சிகள் போன்ற இடங்களிலும் திரவ நைட்ரஜன் பயன்படுத்தி செய்யப்படும் ஸ்மோக் உணவு கிடைக்கிறது.

    திரவ நைட்ரஜன் தான் தற்போது வித்தியாசமான உணவு என்ற பெயரில் பல இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. காக்டெய்ல், மிட்டாய்கள், பிஸ்கெட்டுகள் அல்லது திரவ நைட்ரஜன் கலந்து செய்யப்படும் எந்த உணவாக இருந்தாலும் அது உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறியாமல் பெற்றோர்களும் தங்களது குழந்தைகளுக்கு அதனை வாங்கி கொடுக்கிறார்கள்.

    உணவு விடுதிகளில் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க தடை உள்ளது. இந்த டிரை ஐஸ்களை உணவுக்கு பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும்,10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க முடியும்.

    இதுதொடர்பாக, தமிழக அரசும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் ஸ்மோக் பிஸ்கெட் விஷயத்தில் புதுச்சேரி அரசும், உணவு பாதுகாப்பு துறையும் மவுனமாக உள்ளது.

    இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து, குழந்தைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள ஸ்மோக் பிஸ்கெட் உள்ளிட்ட திரவ நைட்ரஜன் உணவுகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    • ராட்சத அலைகள் 10 அடி முதல் 15 அடி வரை உயரத்திற்கு எழும்பியது. கடற்கரை ஒட்டி உள்ள தூண்டில் வளைவுகளில் ராட்சத அலைகள் வேகமாக மோதியது.
    • லெமூர் கடற்கரையின் நுழைவு வாயில் மூடப்பட்டு இருந்தது.

    ராஜாக்கமங்கலம்:

    குமரி மாவட்டம் முழுவதும் இன்றும் கடல் சீற்றமாக காணப்பட்டது. ஆரோக்கிய புரம் முதல் நீடோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    ராட்சத அலைகள் 10 அடி முதல் 15 அடி வரை உயரத்திற்கு எழும்பியது. கடற்கரை ஒட்டி உள்ள தூண்டில் வளைவுகளில் ராட்சத அலைகள் வேகமாக மோதியது. 3-வது நாளாக கடல் சீற்றமாக உள்ளதால் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இதனால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. ராஜாக்கமங்கலம் லெமூர் கடற்கரை பகுதியில் நேற்று பயிற்சி டாக்டர்கள் தடையை மீறி கடலில் கால் நனைத்தபோது ராட்சத அலையில் சிக்கி 5 பேர் பலியானார்கள்.


    இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கடற்கரை பகுதிக்கு நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. லெமூர் கடற்கரையின் நுழைவு வாயில் மூடப்பட்டு இருந்தது. நுழைவு வாயிலில் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டிருந்தது.

    நுழைவு வாயில் அருகே உள்ள பாதை வழியாக பொதுமக்கள் செல்லாத வகையில் சிவப்பு கலரில் கொடி கட்டப்பட்டு இருந்தது. லெமூர் கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகளை போலீசார் திருப்பி அனுப்பினார்கள். கடற்கரைக்குள் யாரையும் நுழைய அனுமதிக்கவில்லை.

    சொத்தவிளை கடற்கரை, முட்டம் கடற்கரை, கன்னியாகுமரி கடற்கரை பகுதிகளிலும் போலீசார் இன்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகள் யாரையும் நுழைய அனுமதிக்கவில்லை. கடலோர காவல் படை போலீசார் கடற்கரை பகுதிகளில் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • இ-பாஸ் பெறுவதற்கு என்று பிரத்யேகமாக https://epass.tnega.org என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது.
    • இ-பாஸ் நடைமுறை காரணமாக போக்குவரத்து நெரிசலும் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    ஆண்டுதோறும் 30 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். குறிப்பாக கோடை சீசன்களான ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் 10 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.

    ஒரே நேரத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவதால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பசுமையான சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இதையடுத்து தமிழக அரசு சார்பில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டது. இ-பாஸ் பெறுவதற்கு என்று பிரத்யேகமாக https://epass.tnega.org என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    மேலும் இந்த இ-பாஸானது 3 வகை அடையாளக் கோடுகளுடன் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி உள்ளூர் பொதுமக்களுக்கு பச்சை நிற இ-பாசும், வேளாண் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், அடிப்படை தேவை, சரக்கு வாகனங்களுக்கு நீல நிற இ-பாசும், வர்த்தகம் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு ஊதா நிறத்திலும் இ-பாஸ் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் அரசு பஸ்களில் வருபவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என்றும், அரசு பஸ்களில் வருபவர்களின் விவரங்கள் போக்குவரத்து துறை மூலம் பெறப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருந்தது.

    நேற்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த இணையதளத்தில் சென்று இ-பாசுக்கு விண்ணப்பித்தனர். அதில், சுற்றுலா பயணிகள் எங்கிருந்து வருகிறீர்கள். எத்தனை நாள் இங்கு தங்க உள்ளீர்கள் என பல்வேறு விவரங்கள் அதில் கேட்கப்பட்டிருந்தது. அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களை பூர்த்தி செய்து சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்றுக்கொண்டனர். விண்ணப்பித்த உடனே எளிதாக இ-பாஸ் கிடைத்ததால் சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    நேற்று ஒரே நாளில் நீலகிரி வருவதற்கு 21,446 வாகனங்கள் இ-பாஸ் பெற்றுள்ளன. இதில் 2 லட்சத்து 78 ஆயிரம் பேர் நீலகிரிக்கு வருகை தர உள்ளனர்.

    இன்று காலை முதல் நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது. நீலகிரிக்கு வந்த அனைத்து வாகனங்களுமே தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

    மாவட்ட எல்லைகளில் உள்ள கல்லார், நாடுகாணி, தொரப்பள்ளி, சோலாடி, பாட்டவயல் உள்பட 16-க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அவர்கள் சோதனை சாவடி வழியாக ஊட்டிக்கு வரும் தனியார் பஸ்கள், வேன்கள், கார்கள், சரக்கு வாகனங்கள், லாரிகள் உள்பட அனைத்து வாகனங்களையும் நிறுத்தி அவர்கள் இ-பாஸ் பெற்றுள்ளனரா? என்பதை கண்காணிக்கின்றனர்.

    அவர்களிடம் இ-பாஸ் இருக்கிறதா என்று கேட்டு விசாரிக்கும் போலீசார் இ-பாஸ் இருந்தால் மட்டுமே நீலகிரிக்குள் அனுமதித்து வருகிறார்கள். சுற்றுலா பயணிகள், வர்த்தக வாகனங்கள் தங்களுக்கான ஊதா நிறத்திலான இ-பாசையும், உள்ளூர் வாகனங்கள் தங்களுக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள பச்சை நிற இ-பாசை காண்பித்து சென்று வருகின்றனர்.

    அவர்கள் நீலகிரிக்குள் சென்றதும் அங்குள்ள ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம், படகு இல்லம் உள்ளிட்டவற்றை கண்டு ரசிக்கின்றனர். இதனால் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாகவே காணப்படுகிறது.

    நேற்று இரவு முதல் மழை பெய்ததால் தற்போது ஊட்டியில் குளு,குளு காலநிலை நிலவி வருகிறது. இதனை அங்கு வந்திருக்கும் சுற்றுலா பயணிகள் ரசித்து அனுபவித்து வருகிறார்கள்.

    இந்த இ-பாஸ் நடைமுறை காரணமாக போக்குவரத்து நெரிசலும் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. வாகனங்கள் உடனுக்குடன் சென்றதால் வாகன ஓட்டிகளும் நிம்மதி அடைந்தனர். இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்துள்ளதால் உள்ளூர் மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தமிழகத்திலும் சுற்றுலா தலங்கள் உள்ள நிலையில் கேரளாவை பின்பற்றி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • கதக்களி, மோகினி ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

    தமிழக-கேரள எல்லையான குமுளி அருகே தேக்கடி அமைந்துள்ளது. இப்பகுதியில் படகு சவாரி, பசுமைநடை, மலையேற்றம், வியூபாயிண்ட் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா பயணிகள் உள்ளன. கேரளாவின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் இங்கு அவ்வப்போது களரி, கதக்களி, மோகினி ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

    இதன் அருகிலேயே வாகம்மன், ராமக்கால்மெட்டு, செல்லாறு, கோவில் மெட்டு உள்ளிட்ட சுற்றுலா தலங்களும் உள்ளது. இங்கு வருடந்தோறும் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். மேலும் இடுக்கி மாவட்டத்தில் மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் பசுமை பள்ளத்தாக்குகள் பரந்து விரிந்து கிடக்கிறது. இங்குள்ள தேயிலை, ஏலக்காய் தோட்டங்கள், தவழந்து செல்லும் மேகங்கள், ஆண்டு முழுவதும் நிலவும் இதமான சீதோசனம் போன்றவை சுற்றுலா பயணிகளை சுண்டி இழுத்து வருகின்றன.

    கேரளாவை பொறுத்தவரை அரசின் முக்கிய வருவாயாக ஆன்மீக தலங்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் விளங்கி வருகின்றன. இதனால் சுற்றுலா வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை அந்த அரசு மேற்கொண்டு வருகிறது. சுற்றுலா பயணிகளுக்கு தேவையான பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவதுடன் அவர்களது பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி வருகிறது.

    இதன் ஒருபகுதியாக சுற்றுலா பயணிகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதால் இப்பகுதிகளில் யாசகம் எடுக்கத்தடை விதித்து இதற்காக போலீசார் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில்,

    மூணாறு, தேக்கடி உள்ளிட்ட பகுதிகளுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவு வருகின்றனர். இவர்களிடம் யாசகம் கேட்பதால் நம் நாட்டினர் மீது மாறுபட்ட கருத்தியல் சூழல் நிலவுகிறது. மேலும் யாசகர் போர்வையில் வழிப்பறி சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. எனவே யாசகம் எடுப்பவர்களை கண்டறிந்து அவர்களை முகாமிற்கு அனுப்பி வருகிறோம். எங்களுடன் இணைந்து வியாபாரிகள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகளும் பணியாற்றி வருகிறோம்.

    இதனால் கேரளாவில் உள்ள பெரும்பாலான சுற்றுலா தலங்களில் இதுபோன்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது என்றார். தமிழகத்திலும் பாரம்பரியமிக்க சுற்றுலா தலங்கள் உள்ள நிலையில் கேரளாவை பின்பற்றி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஊட்டி, குன்னூர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தலங்களில் பனியின் தாக்கம் அதிகரித்து உள்ளதை உணர முடிகிறது.
    • இரவு பணியில் இருக்கும் ஊழியர்கள் ஆங்காங்கே தீ மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர்.

    கோவை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்ததை தொடர்ந்து பனிக்காலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

    அந்த வகையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தற்போது பனி கொட்டி தீர்த்து வருகிறது. நாள்தோறும் மாலை 5 மணி முதல் பனி கொட்ட தொடங்கி விடுகிறது. பின்னர் இது நள்ளிரவு நேரங்களில் மழை போல கொட்டி தீர்க்கிறது. காலையில் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது.

    கோவை மாநகர போக்குவரத்து சாலைகளில் எதிரே வருபவர்கள் தெரியாத அளவுக்கு மூடுபனியின் தாக்கம் உள்ளது. இதன்காரணமாக ரோட்டில் செல்லும் வாகனங்கள் இரவு மட்டுமின்றி பகல் நேரங்களிலும் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்று வருகின்றன.

    நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்ததை தொடந்து அங்கு தற்போது உறைபனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதன்காரணமாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் பனி மூட்டம் கொட்டி தீர்த்து வருகிறது.

    அதிலும் குறிப்பாக ஊட்டி தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் காட்டேரி பூங்காக்களில் உறைபனி கொட்டி வருவதால், அங்கு பூந்தொட்டிகளில் வளர்க்கப்படும் மலர்கள் தற்போது கருக தொடங்கி உள்ளன.

    மேலும் பூங்காக்களின் புல்வெளி பகுதிகளில் வெள்ளை கம்பளம் விரித்தது போல உறைபனி படிந்து காணப்படுகிறது. இதனால் பூங்கா புல்வெளியில் படிந்து கிடக்கும் உறைபனியில் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் ஊட்டி, குன்னூர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தலங்களில் பனியின் தாக்கம் அதிகரித்து உள்ளதை உணர முடிகிறது.இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. இருப்பினும் ஒருசில பயணிகள் வெம்மை ஆடைகளுடன் பூங்காக்களுக்கு வந்திருந்து அங்குள்ள பகுதிகளை சுற்றிப்பார்த்து செல்கின்றனர்.

    நீலகிரியில் கொட்டி தீர்க்கும் உறைபனியால் அங்குள்ள பெரும்பாலான பகுதிகளில் அதிகாலை நேரத்தில் வேலைக்கு செல்வோர், பள்ளி-கல்லூரி மாணவிகள் ஆகியோர் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் பணி முடிந்து வீடு திரும்புவோரும் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடுகிறது.

    மேலும்இரவு பணியில் இருக்கும் ஊழியர்கள் ஆங்காங்கே தீ மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர்.கோவை, நீலகிரி மாவட்டங்களில் பனிக்காலம் தொடங்கி நடைபெற்று வருவதால் வியாபார கடைகளில் கம்பளி, போர்வைகள் உள்ளிட்ட குளிர்கால ஆடை கடைகளில் விற்பனை அதிகரித்து காணப்படுகிறது. இதேபோல சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது.

    • 1982 ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதியை தேசிய சுற்றுலா தினமாக அறிவித்தது.
    • இந்த ஆண்டு சுற்றுலா தினத்தின் கருப்பொருள் இதை வலியுறுத்துகிறது.

    தேசிய சுற்றுலா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 அன்று கொண்டாடப்படுகிறது. இந்திய சுற்றுலா அமைச்சகம், 1982 ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதியை தேசிய சுற்றுலா தினமாக அறிவித்தது.

    இந்த தினத்தின் நோக்கம், இந்தியாவின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதும், நாட்டின் பல சுற்றுலாத் தலங்களுக்கு உலகளாவிய அங்கீகாரத்தை வழங்குவதும் ஆகும்.

    வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்தியா வளமான கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, பார்க்க மிகவும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் மற்றும் சுவைக்க பலவித உணவுகள் உள்ளன. ஒவ்வொரு சுற்றுலாத் தளமும் தனித்துவமான வரலாற்றைக் கொண்டிருக்கின்றன.

    இந்த ஆண்டு சுற்றுலா தினத்தின் கருப்பொருள் 'உள்ளடக்கிய வளர்ச்சிகான சுற்றுலா'(Tourism for Inclusive Growth). சுற்றுலாவின் மூலம் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, சமூத்தின் அனைத்து பிரிவினருக்கும் நாட்டின் சுற்றுலா கட்டமைப்பை கிடைக்கச்செய்வது உள்ளிட்ட குறிக்கோள்களை இந்த ஆண்திற்கான கருப்பொருள் உள்ளடக்கியுள்ளது.

    • ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாச்சி தலையூற்று அருவி உள்ளது
    • இதனை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள விருப்பாச்சி ஊரா ட்சியில் நங்காஞ்சியாற்றின் மறுகரையில் ஆதிதிரா விடர்கள் அதிகமாக வசிக்கின்றனர். இவர்கள் மழைக்காலத்தில் நங்காஞ்சி யாற்றை கடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இதனால் ஆற்றில் உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்று அமைச்சர் அர.சக்கரபாணியிடம் அவர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனையடுத்து நபார்டு வங்கி உதவியுடன் நங்காஞ்சி ஆற்றின் குறுக்கே ரூ.2.23 கோடி செலவில் உயர்மட்ட பாலம் கட்ட பொதுப்பணி த்துறை அனுமதி வழங்கியது. அதன் பேரில் ஞாயிற்று க்கிழமை விருப்பாச்சி நங்காஞ்சியாற்றின் கரையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    இதில் அமைச்சர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி பேசியதாவது:

    விருப்பாச்சி பாரம்பரிய கிராமமாகும். இக்கிராமம் ஒட்டன்சத்திரத்துக்கு இணையாக வளர்ச்சி அடையப் போகிறது. இங்கு அரசு தொழிற்பயிற்சிக் கூடம் போக்குவரத்து பணி மனை ஆகியவை அமைக்க ப்படும். அதேபோல் தலையூற்று அருவி சுற்றுலா தலமாக்கப்படும்.

    பரப்பலாறு அணை தூர்வார அனுமதி கிடைத்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது. 10 தினங்களுக்குள் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று அணை தூர்வாரப்பட உள்ளது என்றார்.

    அதனைத் தொடர்ந்து பெருமாள் குளத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் மற்றும் நங்காஞ்சி ஆற்றில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியை அவர் தொடக்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் பொது ப்பணித்துறை செயற்பொறி யாளர் கோபி, உதவி பொறி யாளர் கோகுலகண்ணன், உதவி பொறியாளர் நீதிபதி, மாவட்டக் கவுன்சிலர் சங்கீதா பழனிச்சாமி, ஒன்றியக் கவுன்சிலர் சின்னத்தாய் தங்கவேல், தி.மு.க. ஒன்றியச் செய லாளர்கள் ஜோதிஸ்வரன், தர்மராஜன், விருப்பாச்சி ஊராட்சித் தலைவர் மாலதி சந்திரன், ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் அசோக் வேலுச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×