என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நெய்"
- கொதிக்கும் நெய்யில் அப்பம் சுடுவதை பக்தர்கள் ஆச்சரியம் கலந்த வியப்புடன் பார்த்தனர்.
- உருண்டை இடிப்பதற்கு பெண்கள் நேர்த்தி கடன் மேற்கொண்டு பயபக்தியுடன் தயார் செய்து கொடுப்பர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி தெருவில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு மாசி மாதம் நடைபெறும் சிவராத்திரி திருவிழா அன்று நள்ளிரவில் வெறும் கையினால் கொதிக்கும் நெய்யில் அப்பம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வு கடந்த 101 வருடங்களுக்கு மேலாக நடப்பதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு சிவராத்தியை முன்னிட்டு அதே பகுதியை சேர்ந்த முத்தம்மாள் என்ற 92 வயது மூதாட்டி மற்றும் கோவில் பூசாரிகள் நேற்று இரவு கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பத்தை சுட்டனர். இதை காண்பதற்காக சுற்று வட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கோவிலில் திரண்டனர்.
கொதிக்கும் நெய்யில் அப்பம் சுடுவதை பக்தர்கள் ஆச்சரியம் கலந்த வியப்புடன் பார்த்தனர். 7 ஊர்களுக்கு பாத்தியப்பட்ட இக்கோவிலில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் 7 கூடைகளில் அப்பம் சுட்டு பின்பு பக்தர்களுக்கு வழங்குவார்கள். முன்னதாக பாசிப் பயிறு, தட்டாம் பயிறு, கருப்பட்டி ஆகியவைகளை உரலில் போட்டு இடித்து அப்பத்திற்கு தேவையான இனிப்பு உருண்டை செய்யப்படும். இந்த உருண்டை இடிப்பதற்கு பெண்கள் நேர்த்தி கடன் மேற்கொண்டு பயபக்தியுடன் தயார் செய்து கொடுப்பர்.
மகா சிவராத்தரி அன்று நடைபெறும் இந்த பூஜையில் விரதம் இருந்து கலந்து கொண்டு அப்பத்தை வாங்கி உண்டால் உடலில் இருக்கின்ற எல்லா நோய்களும் சரியாகிவிடும் என்றும், எவ்வித நோயும் வராது என்பதும், குழந்தை இல்லாத தம்பதியினர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மூதாட்டியிடம் ஆசி பெற்று அப்பம் வாங்கி உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
இதற்கான நேற்று இரவு நடந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் அப்பத்தை பிரசாதமாக வாங்கி சென்றனர்.
கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுடும் மூதாட்டி முத்தம்மாள் கடந்த 61 வருடங்களாக சிவராத்தியன்று விரதம் இருந்து இதனை செய்து வருகிறார்.
- நெய், கூந்தல் பராமரிப்புக்கு பல வழிகளில் பயன்படுகிறது.
- பொடுகு, அரிப்பு போன்ற பிரச்சினைகளை குணப்படுத்த உதவுகிறது.
சமையலுக்கு உபயோகிக்கும் நெய், கூந்தல் பராமரிப்புக்கு பல வழிகளில் பயன்படுகிறது. நெய்யில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் தலையில் ஏற்படும் பொடுகு, அரிப்பு போன்ற பிரச்சினைகளை குணப்படுத்த உதவுகிறது. முடி உதிர்வை தடுத்து, வளர்ச்சியை தூண்டக்கூடிய வைட்டமின் ஏ, டி மற்றும் ஈ ஆகியவை நெய்யில் நிறைந்திருக்கின்றன. நெய்யுடன் தேங்காய் எண்ணெய், எலுமிச்சம் பழச்சாறு, தேன் மற்றும் வேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வீட்டிலேயே ஹேர் மாஸ்க் தயாரித்து உபயோகிக்கலாம்.
நெய் ஹேர் மாஸ்க்
போதுமான அளவு நெய்யை எடுத்து தலையிலும். கூந்தலிலும் நன்றாக பூசவும். 20 நிமிடங்கள் கழித்து மென்மையான ஷாம்பு கொண்டு தலைக்கு குளிக்கவும். நுனி முடி பிளவுப்படும் பிரச்சினைக்கு இது சிறந்த தீர்வாகும். நெய், வறண்ட தலைமுடிக்கு ஈரப்பதத்தை வழங்கும், முடி உதிர்வை கட்டுப்படுத்தும்.
நெய், வேப்பம்பூ ஹேர் மாஸ்க்:
ஒரு கிண்ணத்தில் 3 டீஸ்பூன் நெய், 1 டீஸ்பூன் தேன், 10 முதல் 15 வேப்பிலைகள் கலந்து இரவு முழுவதும் அப்படியே வைக்கவும். காலையில் அதை சிறு தீயில் வைத்து 3 முதல் 4 நிமிடங்கள் வரை சூடுபடுத்தவும். பின்பு அதில் இருந்து வேப்பிலைகளை வெளியே எடுக்கவும், பின்பு அந்த நெய் கலவையை மிதமான சூட்டில் எடுத்து தலை முழுவதும் பூசவும். 30 நிமி டங்கள் கழித்து மென்மையான ஷாம்பு பயன்படுத்தி தலைக்கு குளிக்கவும். வேப்பிலையில் இருக்கும் மருத்துவ குணங்கள் பொடுகு பிரச்சினையை நீக்கும், உடல் சூட்டை குறைக்கும், இளநரை உண்டாகாமல் தடுக்கும்.
நெய், தேங்காய் எண்ணெய் ஹேர் மாஸ்க்:
2 டீஸ்பூன் நெய்யுடன், 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து சிறு தீயில் 10 நிமிடங்கள் வரை சூடுபடுத்தவும். பின்பு அதில் உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு எசன்ஷியல் எண்ணெய்யை சில துளிகள் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை தலை பகுதியிலும், கூந்தலிலும் பூசி மென்மையாக மசாஜ் செய்யவும். 30 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்கவும். இந்த ஹேர் மாஸ்க் பொடுகை நீக்கி, முடியை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றும்.
நெய், எலுமிச்சம் பழச்சாறு ஹேர் மாஸ்க்:
2 டீஸ்பூள் நெய்யை உருக்கி, அதனுடன் அரை மூடி எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து கலக்கவும். இதை மித மான சூட்டில் எடுத்து தலையில் பூசி நன்றாக மசாஜ் செய்யவும். 30 நிமிடங்கள் கழித்து மென்மையான ஷாம்பு கொண்டு தலைக்கு குளிக்கவும். இந்த ஹேர்மாஸ்க் முடிக்கு ஊட்டமளித்து, ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.
நெய், தேன் ஹேர் மாஸ்க்:
போதுமான அளவு நெய்யுடன் சில துளிகள் தேன் கலந்து தலையில் பூசவும். சிறிது நேரம் கழித்து தலைக்கு குளிக்கவும். இந்த ஹேர்மாஸ்க் முடியின் வேர்க்கால்களுக்கு புத்துயிர் அளிக்கும். தலைமுடியை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.
- தேன் - இனிய குரல்வளம் தரும் நெய் - வீடுபேறு அடைய உதவும்
- பன்னீர் - புகழ் சேர்க்கும் சந்தனம் - செல்வம் உண்டாகும்
சந்தனாதித் தைலம் - சுகம் தரும்
நல்எண்ணை - விஷசுரம் நிவர்த்தி
பால் - தீர்க்காயுள் தரும்
தயிர் - நன்மக்கட்பேறு
தேன் - இனிய குரல்வளம் தரும்
நெய் - வீடுபேறு அடைய உதவும்
சர்க்கரை - எதிரிகள் தொல்லை நீங்குதல்
பஞ்சாமிர்தம் - உடல் வலிமை தரும்
மாம்பழம் - வெற்றியைத் தரும்
கரும்புசாறு - நல்ல உடல் நலம்
இளநீர் - போகம் அளிக்கும்
எலுமிச்சம் பழம் - சகல பகையை அழிக்கும்
அன்னம் - சகல பாக்கியங்களும் தரும்
பன்னீர் - புகழ் சேர்க்கும்
சந்தனம் - செல்வம் உண்டாகும்
நறுமணப்பொடி - கடன், நோய் தீரம்
ஆண் தெய்வமூர்த்திக்கு நறுமணப் பொடியும், பெண் தெய்வமூர்த்திக்கு நறுமணப் பொடியும், மஞ்சள்தூளும் அபிஷேகம் செய்ய வேண்டும்.
மஞ்சள் தூள் - மங்களம் அளித்திடும்
விபூதி - கர்மவினைகளை நீக்கி மோட்சம் அளிக்கும்
சொர்ணாபிஷேகம் - ஐஸ்வர்யம் வரும்
ஒவ்வொரு அபிஷேகத்தின் இடையிலும் சுத்தநீர் - சாந்தி தரும்.
தில்லை தீர்த்தங்கள் பத்து
1. சிவகங்கை
2. பரமானந்த கூபம் (சித்சபைக்கு கிழக்குப் பக்கத்தில் கிணறு வடிவில் சக்தி வடிவம் பொருந்தியது)
3. வியாக்கிரபாத தீர்த்தம் (இளமையாக்கினர் கோவில்)
4. அனந்த தீர்த்தம் (திருஅனந்தேஸ்சுரத்துக்கு முன்பு உள்ளது)
5. நாகச்சேரி (திருஅனந்தேஸ்சுரத்துக்கு மேற்பாங்கான உள்ள திருக்குளம்)
6. பிரமதீர்த்தம்
7. சிவப்பிரியை
8. புலிமடு
9. குய்ய தீர்த்தம்
10. திருப்பாற்கடல்
பிரபஞ்சத்தின் மையம்
பதஞ்சலி முனிவர், வியாக்கிரபாதர், திருமூலர் ஆகியோரால் பூஜிக்கப் பெற்ற சுயம்புலிங்கம்தான் ஆதிமூலநாதர். இதுதான் பிரபஞ்சங்களின் மையமாகும்.
ஆதியந்த மற்றது. ஆகாயத்தின் மையம் இதுவேயாகும். ஒரு காலத்தில் பெரும் வனமான தில்லை மரங்கள் அடர்ந்த காட்டில் ஊடே வியாக்ரபாதரால் பூஜிக்கப்பட்ட சுயம்புலிங்கம் தில்லை மரங்கள் நிறைந்த வனம்தான் இன்றைய சிதம்பரம்.
எனவே சிதம்பரத்திற்கு தில்லை என்ற பெயரே பிரசித்தி பெற்று விளங்குகிறது.
ஆதிமூலநாதர் சன்னதி இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடைபெறும் நடராஜர் சன்னதி இரவு 10 மணிக்கே அர்த்தஜாம பூஜை நடைபெறும் முதலாவது அர்த்தஜாம பூஜையும், கடைசியாக அர்த்தஜாம பூஜையும் நடக்கும் இடம் தில்லையில் மட்டுமே.
தில்லையம்பலவாணன் தினசரி பூஜைகள்
தில்லை திருத்தலத்தில் திருநடனம் புரிந்தருளும் நடராஜ மூர்த்திக்கு நாள்தோறும் ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. காலை மூன்று, மாலையில் மூன்று பூஜைகள் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு பள்ளியறையில் பால், பொரி, பழம் முதலியன நைவேத்தியம் செய்து, தீபாராதனை செய்து சுவாமியின் பாதுகையை வெள்ளி, தங்க பல்லக்கில் எழுந்தருளச் செய்து கொண்டு வந்து நடராஜரின் அருகில் வைத்து, நடராஜருக்கும் சிவகாமசுந்தரியம்பாளுக்கும் பால், பொரி, பழம் முதலியன நைவேத்தியம் செய்து தீபாராதனை செய்தும் வருகின்றனர். இது `திருவனந்தல்' என்றும், பால் நைவேத்தியம் என்றும் அழைக்கப்படும் இது ஆறு கால பூஜைகளில் சேர்ந்தல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
- அம்மனுக்கு உகந்த தினங்களான செவ்வாய், ஞாயிறு ஆகிய கிழமைகளில் மட்டும் நீலநிறச் சேலைகளை அணியக் கூடாது.
- சிவப்புச் சேலையை சனிக்கிழமை தவிர மற்ற அனைத்துக் கிழமைகளிலும் அணியலாம்.
தீபம் ஏற்றும் பெண்கள் உடுத்தும் சேலைகளைப் பற்றியும் பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மஞ்சள் நிறச் சேலை அணிந்து தீபமிடுவோர் அம்மன் அருளைப் பரிபூரணமாகப் பெற்றிடுவர்.
நீல நிறச் சேலை அணிந்தும் தீபமிடலாம்.
அம்மனுக்கு உகந்த தினங்களான செவ்வாய், ஞாயிறு ஆகிய கிழமைகளில் மட்டும் நீலநிறச் சேலைகளை அணியக் கூடாது. மற்ற நாட்களில் நீலநிறச் சேலை அணிந்தால் நோய்கள் குணமாகும். பேய், பிசாசுத் தொல்லைகள் நீங்கும்.
சிவப்புச் சேலையை சனிக்கிழமை தவிர மற்ற அனைத்துக் கிழமைகளிலும் அணியலாம். சிவப்புச் சேலை அணிவதால் திருமணத் தடை நீங்கி இல்லறச் சுகம் கிட்டும். மலட்டுத் தன்மை அடியோடு ஒழியும். போய், பிசாசு தொல்லைகள் விலகும். செய்வினை அழியும்.
வெள்ளைச் சேலையைச் சுமங்கலிப் பெண்கள் தவிர மற்றவர்கள் அணியலாம். வெள்ளைச் சேலை புதியதாகவும், சுத்தமானதாகவும் இருத்தல் வேண்டும். வெள்ளைச் சேலை அணிந்தால் உத்தமமான பலன்கள் வாழ்வில் உண்டாகும்.
திருவிளக்கும், தீபமும் அன்னையின் அம்சங்கள் என்றாலும் அனைத்தும் தெய்வங்களையும் திருவிளக்கிட்டு தீபமேற்றியே நாம் காலம் காலமாய் வழிபட்டு வருகின்றோம். அவ்வாறு வழிபடுகையில் இன்னின்ன தெய்வங்களுக்கு இன்னின்ன தீபங்கள் ஏற்ற வேண்டும் என்று நமது பெரியோர்கள் கூறியுள்ளனர்.
தேவி கருமாரியை நெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய் என ஐந்து எண்ணெய் கலந்து தீபமேற்றி வழிபட வேண்டும்.
- நெய்யில், சற்று கூடுதலாக விட்டமின் ஏ இருப்பதால், தோலுக்கும், கண்ணுக்கும் நல்லது.
- பிற மாமிச கொழுப்புகளை விட, நெய் செல்களினூடே எளிதில் ஊடுருவும் என்பதால் மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது.
நெய் என்பது கொழுப்பு மற்றும் எண்ணெய் வகையில் வருவதால், உடலுக்கு ஆற்றல் தந்து, கூடுதலாக இருப்பின் திசுக்களில் சேமித்து வைக்கப்படுகிறது.
20 கிராம் கொழுப்பு ஒரு நாளைக்கு உண்ணவேண்டும் என்ற நிலையில் அது, நெய், வெண்ணெய், இறைச்சி, மீன், எண்ணெய் வித்துக்கள் என்று எதிலிருந்து வேண்டுமானாலும் பெறப்படலாம்.
நிர்ணயித்த அளவில் எடுத்துக் கொள்ளப்படும்போது, உடல் எடை சரியாகவே இருக்கும். அதிக அளவில் எடுத்துக் கொண்டு, உடல் உழைப்பும் இல்லாத நிலையில் சேமிக்கப்பட்டு, எடை கூடும். இதில் உடலில் உள்ள நோய்களின் தன்மையும் கவனிக்கத் தகுந்தது.
கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் ஏ, ஈ, டி, கே போன்றவை கரைவதற்கு, கொழுப்புத் தேவை என்பதால், இதய நோய் உள்ளவர்களுக்கு கூட குறைந்த பட்சம் 15 கிராமாவது பரிந்துரைக்கப்படுகிறது. அது தாவர கொழுப்பாக/எண்ணெயாக இருப்பதும் நல்லது.
நெய்யில், சற்று கூடுதலாக விட்டமின் ஏ இருப்பதால், தோலுக்கும், கண்ணுக்கும் நல்லது. பிற மாமிச கொழுப்புகளை விட, செல்களினூடே எளிதில் ஊடுருவும் என்பதால் மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. இது சுத்தமான பசு நெய்க்கு மட்டுமே பொருந்தும்.
பசும் பாலில் இருந்து எடுக்கும் வெண்ணெயில் தயாரித்த நெய்யை தினமும் ஒரு தேககரண்டியளவு பருப்புடனோ, தோசையுடனோ, குழம்புட னோ எடுத்துக் கொள்வதில் தவறில்லை. அதனுடன் கூடுதலான அசைவம் அல்லது தாவர எண்ணெய்/ வித்துக்கள் உடலுக்குப் போகிறதா, உடலுழைப்பே இல்லாமல் இருக்கிறீர்களா என்பதிலேயே, உடலில் கொழுப்பு சேர்வதை கணக்கிட முடியும்.
ஆக, நெய் சாப்பிடுவதால் உடல் எடை கூடும் குறையும் என்பதை குறிப்பிட்டுக் கூற முடியாது. சரியான அளவில் எடுத்துக் கொள்ளும்போது, அதன் ஆற்றலுடன் சத்துக்களை மட்டுமே உடலுக்கு கொடுக்கிறது. சுத்தமான பசுநெய் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதே.
-முனைவர். ப. வண்டார் குழலி
- நெய்யில், சற்று கூடுதலாக விட்டமின் ஏ இருப்பதால், தோலுக்கும் , கண்ணுக்கும் நல்லது.
- பிற மாமிச கொழுப்புகளை விட, செல்களினூடே எளிதில் ஊடுருவும் என்பதால் மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது.
நெய் என்பது கொழுப்பு மற்றும் எண்ணெய் வகையில் வருவதால், உடலுக்கு ஆற்றல் தந்து, கூடுதலாக இருப்பின் திசுக்களில் சேமித்து வைக்கப்படுகிறது.
20 கிராம் கொழுப்பு ஒரு நாளைக்கு உண்ணவேண்டும் என்ற நிலையில் அது, நெய், வெண்ணெய், இறைச்சி, மீன், எண்ணெய் வித்துக்கள் என்று எதிலிருந்து வேண்டுமானாலும் பெறப்படலாம்.
நிர்ணயித்த அளவில் எடுத்துக் கொள்ளப்படும்போது, உடல் எடை சரியாகவே இருக்கும். அதிக அளவில் எடுத்துக் கொண்டு, உடல் உழைப்பும் இல்லாத நிலையில் சேமிக்கப்பட்டு, எடை கூடும். இதில் உடலில் உள்ள நோய்களின் தன்மையும் கவனிக்கத்தகுந்தது.
கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் ஏ, ஈ, டி, கே போன்றவை கரைவதற்கு, கொழுப்புத் தேவை என்பதால், இதய நோய் உள்ளவர்களுக்கு கூட குறைந்த பட்சம் 15 கிராமாவது பரிந்துரைக்கப்படுகிறது. அது தாவர கொழுப்பாக/எண்ணெயாக இருப்பதும் நல்லது.
நெய்யில், சற்று கூடுதலாக விட்டமின் ஏ இருப்பதால், தோலுக்கும் , கண்ணுக்கும் நல்லது. பிற மாமிச கொழுப்புகளை விட, செல்களினூடே எளிதில் ஊடுருவும் என்பதால் மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. இது சுத்தமான பசு நெய்க்கு மட்டுமே பொருந்தும்.
பசும்பாலில் இருந்து எடுக்கும் வெண்ணெயில் தயாரித்த நெய்யை தினமும் ஒரு தேக்கரண்டியளவு பருப்புடனோ, தோசையுடனோ, குழம்புட னோ எடுத்துக்கொள்வதில் தவறில்லை. அதனுடன் கூடுதலான அசைவம் அல்லது தாவர எண்ணெய்/ வித்துக்கள் உடலுக்குப் போகிறதா, உடலுழைப்பே இல்லாமல் இருக்கிறீர்களா என்பதிலேயே, உடலில் கொழுப்பு சேர்வதை கணக்கிட முடியும்.
ஆக, நெய் சாப்பிடுவதால் உடல் எடை கூடும் குறையும் என்பதை குறிப்பிட்டுக் கூற முடியாது. சரியான அளவில் எடுத்துக் கொள்ளும்போது, அதன் ஆற்றலுடன் சத்துகளை மட்டுமே உடலுக்கு கொடுக்கிறது. சுத்தமான பசுநெய் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதே.
-முனைவர். ப. வண்டார் குழலி
- தயிர், நெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலையை குறைக்க வேண்டும் என்று த.மா.கா. விவசாய அணி சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது
- மின் கட்டண வைப்பு தொகை 4 மடங்கு உயர்வு போன்றவை தமிழக ஏழை, நடுத்தர மற்றும் விவசாயிகள் வெகுவாக பாதித்து மேலும் வறுமையிலும், துன்பத்திற்கும் ஆளாகியுள்ளனர்
திருச்சி:
த.மா.கா. விவசாய அணி சார்பாக மின் கட்டணம், தயிர், நெய் விலை போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து திருச்சி மாவட்ட விவசாய அணி தலைவர் புங்கனூர் செல்வம் திருச்சி மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு பதவியேற்று ஓர் ஆண்டு நிறைவடையும் சூழ்நிலையில் தமிழக மக்கள் ஏற்கனவே பால் விலை, மளிகை பொருட்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக தமிழகத்தில் 70 சதவீத பாமர ஏழை மற்றும் நடுதர மக்கள் அல்லல்படுகின்றனர்.
கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக வேலை வாய்ப்பு இழந்து வருவாய் இழந்து பெரும் நிறுவனங்கள் ஆட்குறைப்பு போன்ற காரணங்களால் வருவாய் இன்றியும் உள்ளனர்.
தற்போது மாநில அரசு மின் கட்டண உயர்வு, பால் பொருட்கள் விலை உயர்வு போன்றவை மக்களை மேலும் கஷ்டத்திலும், வறுமையிலும் தள்ளும் ஓர் நிகழ்வாக மாறும் சூழல் உள்ளது.
பழைய மின் கட்டணம் 200 யூனிட்டுக்கு ரூ.170, புதிய மின் கட்டணம் ரூ.225, 300 யூனிட்டுக்கு ரூ.530, புதிய கட்டணம் ரூ.675, 400 யூனிட்டுக்கு ரூ.830, புதிய கட்டணம் ரூ.1,125.
இப்படி விலையேற்றம் ஒரு பக்கம் என்றால் விவசாயிகளுக்கான உரங்கள் விலையேற்றம் விவசாயப் பயன்பாடு அரசு வாடகை எந்திரங்கள் வாடகை உயர்வு, மின் கட்டண வைப்பு தொகை 4 மடங்கு உயர்வு போன்றவை தமிழக ஏழை, நடுத்தர மற்றும் விவசாயிகள் வெகுவாக பாதித்து மேலும் வறுமையிலும், துன்பத்திற்கும் ஆளாகியுள்ளனர்.
ஆகையால் மாவட்ட கலெக்டர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கடைபிடிக்கப்பட்ட ஆட்சியியல் முறையை மீண்டும் அமுல்படுத்த தமிழக அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்