என் மலர்
நீங்கள் தேடியது "மத்திய அமைச்சர்"
- கேரள அரசு முன்மொழிந்துள்ள கருத்துருவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது.
- மத்திய அமைச்சர் இதில் உடனடியாக தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும்.
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள கேரள அரசு முன்மொழிந்துள்ள கருத்துருவை பரிசீலனைக்கு மத்திய அரசு எடுத்துக் கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தி மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வினை மேற்கொள்வதற்கு கேரள அரசு விண்ணப்பித்துள்ள கருத்துருவினை மத்திய அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டமைக்கு தமிழ்நாடு அரசு கடும் ஆட்சேபனையைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் (MOEF) கீழ் உள்ள நிபுணர் மதிப்பீட்டுக் குழு (Expert Appraisal Committee), கேரள அரசின் பாசன வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி வாரியத்தின் மேற்படி கருத்துருவினை வரவிருக்கும் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துள்ளேன்.
தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக, புதிய அணையைக் கட்டுவதற்கான கேரள அரசின் மேற்படி முன்மொழிவு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு முற்றிலும் எதிரானது.
தற்போதுள்ள அணை அனைத்து அம்சங்களிலும் பாதுகாப்பானது என பல்வேறு நிபுணர் குழுக்களால் மீண்டும் மீண்டும் கண்டறியப்பட்டு, உச்ச நீதிமன்றம் 27.02.2006 மற்றும் 07.05.2014 தேதியிட்ட தனது தீர்ப்புகளில் அதனைத் தெளிவுபடுத்தியுள்ளது.
பின்னர், 2018 ஆம் ஆண்டில், புதிய அணை கட்டுவதற்கான ஆய்வினை மேற்கொள்ள கேரள அரசு முயற்சித்தபோது, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் இந்தப் பிரச்சினை கொண்டு செல்லப்பட்டதாகவும், புதிய அணை கட்டுவது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கை மேற்கொண்டாலும், அதற்கு உச்ச நீதிமன்றத்தின் அனுமதி தேவை என்று உச்சநீதிமன்றம் அப்போதே தெளிவாகத் தீர்ப்பு வழங்கியுள்ளது.
எனவே, கேரள பாசன வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி வாரியத்தின் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தயார் செய்யும் தற்போதைய செயல் மற்றும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு இதனை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ள நடவடிக்கை ஆகியவை நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை அவமதிக்கும் செயலாகும்.
இந்தப் பிரச்சினையில் தங்களது ஆட்சேபனைகளை ஏற்கெனவே தமிழ்நாடு அரசின் நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், மத்திய சுற்றுச்சூழல், வனத்துறைக்கும், நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள முந்தைய உத்தரவுகளை தொடர்புடைய துறைகள் கடைபிடிக்கவில்லை என்றால், நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் உட்பட வலுவான சட்ட நடவடிக்கையை தமிழ்நாடு அரசின் சார்பில் எடுக்கப்படும்.
எனவே, 28-5-2024 அன்று நடைபெறும் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுக் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலில், முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையைத் தயார் செய்வதற்கு அனுமதி அளிப்பது தொடர்பான விவாதப் பொருளினை நீக்கிவிட வேண்டும்.
எதிர்காலத்தில் கேரள அரசின் இதுபோன்ற எந்தவொரு கருத்துருவினையும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கும், சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் உறுப்பினர்-செயலருக்கும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் உத்தரவிட வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
சூழ்நிலையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் இதில் உடனடியாக தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழக கோயில்களில் மத்திய அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம்
- அமித்ஷாவுடன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் சாமி தரிசனம் செய்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உ.பி., மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் இன்று வழிபாடு செய்தார்.
அங்கிருந்து வாரணாசியில் இருந்து திருச்சி வந்த அமித்ஷா, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் வந்தடைந்தார்.
மத்திய அமைச்சர் அமித்ஷாவை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா உள்ளிட்ட பா.ஜ., நிர்வாகிகள் வரவேற்றனர்.
அங்கிருந்து சாலை மார்க்கமாக திருமயம் கோட்டை பைரவர் கோயிலில் அமித்ஷா சாமி தரிசனம் செய்தார்.
அமித்ஷாவுடன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் சாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக ராஜராஜேஸ்வரி சத்யகிரீஸ்வரர் கோயிலில் அமித்ஷா சாமி தரிசனம் செய்தார்.
இதைதொடர்ந்து, அமித்ஷா நாளை காலை ஏழுமலையானை வழிபடுவதற்காக திருப்பதி செல்கிறார்.
அமித்ஷா வருகையை முன்னிட்டு, அவர் செல்லும் வழித்தடங்கள் மற்றும் கோயில்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
- பா.ஜ.க. எம்.பி. சுரேஷ் கோபி மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலக முடிவு.
- அமைச்சர் ஆவதில் எனக்கு விருப்பம் இல்லை என கட்சி தலைமையிடம் தெரிவித்துள்ளேன்.
ஜனாதிபதி மாளிகையில் நேற்றிரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர். இதில் மத்திய அமைச்சராக நடிகரும், திருச்சூர் தொகுதி பா.ஜ.க. எம்.பியுமான சுரேஷ் கோபியும் பதவியேற்றுக்கொண்டார்.
அப்போது கேரளா மாநிலத்தின் திருச்சூர் தொகுதி பா.ஜ.க. எம்.பி. சுரேஷ் கோபி மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
அப்போது அவர் "பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றவே விரும்புகிறேன். அமைச்சரவையில் இடம்பிடிக்க வேண்டும் என்று நான் நினைக்கவே இல்லை. அமைச்சர் ஆவதில் எனக்கு விருப்பம் இல்லை என கட்சி தலைமையிடம் தெரிவித்துள்ளேன். விரைவில் என்னை விடுவிப்பார்கள் என்று நினைக்கிறேன்."
"திருச்சூர் தொகுதி மக்கள் என்னை நன்கு அறிவர். பாராளுமன்ற உறுப்பினராக நான் சிறப்பாக செயல்படுவேன். தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க விரும்புகிறேன். கட்சியே முடிவை எடுக்கட்டும்," என்று தெரிவித்தார்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகியதாக வெளியான தகவலுக்கு நடிகர் சுரேஷ் கோபி மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார்.
அப்போது அவர்," அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக தவறான செய்திகள் பரவி வருகின்றன. மத்திய இணை அமைச்சராக தொடருவேன்.
பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம்பெற்றதை பெருமையாக கருதுகிறேன். கேரள மாநிலத்தின் வளர்ச்சி, மேம்பாட்டிற்கு மோடி தலைமையில் பாடுபடுவேன்" என குறிப்பிட்டுள்ளார்.
A few media platforms are spreading the incorrect news that I am going to resign from the Council of Ministers of the Modi Government. This is grossly incorrect. Under the leadership of PM @narendramodi Ji we are committed to the development and prosperity of Kerala ❤️ pic.twitter.com/HTmyCYY50H
— Suressh Gopi (@TheSureshGopi) June 10, 2024
- வெளிப்படை தன்மையில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்.
- முறைகேடு தொடர்பாக விசாரிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்படும்.
நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
மாணவர்களன் நலன்களை பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளது என்பதை அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புகிறேன்.
வெளிப்படை தன்மையில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்.
பீகாரில் நீட் வினாத்தாள் கசிந்த ஒரு சம்பவம், அந்த தேர்வை எழுதிய லட்சக் கணக்கான மாணவர்களை பாதிக்கக் கூடாது.
முறைகேடு தொடர்பாக விசாரிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்படும்.
யூஜிசி- நெட் தேர்வைப்போல் நீட் தேர்வை ரத்து செய்யும் எண்ணம் இல்லை. நீட் விவகாரத்தை அரசியாக்க வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை.
- இந்திய மீனவர்களின் பாதுகாப்பு, நலனுக்காக அதீத முன்னுரிமை வழங்குவோம்.
ராமேஸ்வரத்தில் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அந்த கடிதத்தில், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருப்பதாவது:-
1974ம் ஆண்டில் இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் விளைவாக இந்த பிரச்சினை தொடங்கியது.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு, மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினைகளை களைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்திய மீனவர்களின் பாதுகாப்பு, நலனுக்காக அதீத முன்னுரிமை வழங்குவோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கஜேந்திர சிங் செகாவத் ஸ்கை டைவிங் செய்யும் வீடுயோ இணையத்தைக் கலக்கி வருகிறது.
- நடந்து முடிந்த பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்புரில் பாஜக வேட்பாளராக களமிறங்கி வெற்றிபெற்றவர் கஜேந்திர சிங் செகாவத்.
மத்திய சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ள பாஜக மூத்த தலைவர் கஜேந்திர சிங் செகாவத் ஸ்கை டைவிங் செய்யும் வீடுயோ இணையத்தைக் கலக்கி வருகிறது. இன்று [ஜூலை 13] உலக ஸ்கைடிவிங் தினம் [WORLD SKYDIVING DAY] கொண்டாடப்படுவதை முன்னிட்டு அதை ஊக்குவிக்கும் வகையில் 56 வயதான கஜேந்திர சிங் செகாவத் ஹரியானா மாநிலம் நார்நவுல் பகுதியில் நிபுணர் உதவியுடன் ஸ்கை டைவிங் செய்துள்ளார்.
#WATCH | Narnaul, Haryana: Union Tourism Minister Gajendra Singh Shekhawat does skydiving on World Skydiving Day.(Source: Sky High India) pic.twitter.com/KrLGeE5UdY
— ANI (@ANI) July 13, 2024
#WATCH | Narnaul, Haryana: Union Tourism Minister Gajendra Singh Shekhawat does skydiving on World Skydiving Day. pic.twitter.com/5EQagZ8Kh0
— ANI (@ANI) July 13, 2024
மிகவும் பயத்தை ஏற்படுத்தும் ஸ்கை டைவிங் ஸ்டன்டை மத்திய அமைச்சர் துணித்து செய்துள்ளதை நெட்டிஸின்கள் பாராட்டி வருகின்றனர். இந்த அனுபவம் மிகவும் அருமையாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
Truly exhilarating!On the occasion of World Skydiving Day, had the pleasure of flagging off the new skydiving aircraft and taking a tandem skydive this morning at Skyhigh—India's only civilian skydiving drop zone at Narnaul Airstrip, Haryana.For new and adventurous Bharat,… pic.twitter.com/0Clb8iykw4
— Gajendra Singh Shekhawat (@gssjodhpur) July 13, 2024
நடந்து முடிந்த பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்புரில் பாஜக வேட்பாளராக களமிறங்கி வெற்றிபெற்றவர் கஜேந்திர சிங் செகாவத். பாஜகவின் கடந்த ஆட்சியில் [2019 முதல் 2024 வரை] ஜல் சக்தி அமைச்சராக கஜேந்திர சிங் செகாவத் இருந்தது குறிப்பிடத்தக்கது.
- கடந்த 2009ம் ஆண்டு எக்ஸ் தளத்தில் கணக்கை தொடர்ந்தார்.
- சமூக வலைத்தளங்களில் அதிகம் பின்தொடரும் உலக தலைவர்களில் பிரதமர் மோடி ஒருவர்.
இந்தியாவின் மற்ற அரசியல் தலைவர்களின் ஃபாலோயர்ஸை ஒப்பிடும்போது பிரதமர் மோடியை பின் தொடர்வோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும்.
அந்த வகையில்பிரதமர் மோடியின் எக்ஸ் தள கணக்கை பின்தொடருவோர் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியுள்ளது. இது, மற்ற அரசியல் தலைவர்களை விடவும் பிரதமர் மோடி தனித்து நிற்பதை காட்டுகிறது.
இந்திய அரசியல் தலைவர்களில் ராகுல் காந்திக்கு 26.4 மில்லியன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 27.5 மில்லியன், சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் 19.9 மில்லியன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு 7.4 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர். ஆர்ஜேடியின் லாலு பிரசாத் யாதவ் 6.3 மில்லியன், தேஜஸ்வி யாதவ் 5.2 மில்லியன், NCP தலைவர் சரத் பவாருக்கு 2.9 மில்லியன் ஃபாலோயர்ஸை பெற்றுள்ளார்கள்.
பிரதமர் மோடி, கடந்த 2009ம் ஆண்டு எக்ஸ் தளத்தில் கணக்கை தொடர்ந்தார். 10 கோடி பாலோவர்களை எட்டியதற்கு பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
எக்ஸ் தளத்தில் அதிகம் பின்தொடரும் உலக தலைவர்களில் பிரதமர் மோடியும் இடம் பிடித்துள்ளார்.
- மைக்ரோசாப்ட் அதிகாரிகளுடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளது.
- குளறுபடிக்கான காரணம் கண்டறியப்பட்டு, சிக்கலை தீர்க்க நடவடிக்கை.
மைக்ரோசாப்ட் மென்பொருள் குளறுபடி தொடர்பாக மைக்ரோசாப்ட் அதிகாரிகளுடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
மைக்ரோசாப்ட் மென்பொருள் குளறுபடி தொடர்பாக மைக்ரோசாப்ட் அதிகாரிகளுடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளது.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய தகவல் மையத்தின் நெட்வொர்க் பாதிக்கப்படவில்லை.
குளறுபடிக்கான காரணம் கண்டறியப்பட்டு, சிக்கலை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேசிய பங்குச்சந்தை மற்றும் எஸ்பிஐ ஆகியவற்றில் மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடங்கியதால் எந்த பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அங்கன்வாடி பணியாளர்கள் வழிமறித்து தங்களது கோரிக்கைகளைக் கேட்கும்படி கோஷம் எழுப்பினர்.
- கிரிராஜ் சிங் பைக்கில் ஏறி அங்கிருந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மத்திய பாஜக அமைச்சரவையில் ஜவுளித் துறை அமைச்சராக இருப்பவர் கிரிராஜ் சிங். பீகாரில் அவரது சொந்தத் தொகுதியான பெகுசாராய் [Begusarai] தொகுதியில் மனு கொடுக்க வந்தவர்கள் சூழ்ந்ததால் காரில் இருந்து இறங்கி பைக்கில் அங்கிருந்து அவர் தப்பிச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் அருகே பூங்கா ஒன்றின் அடிக்கல் நாட்டு விழாவுக்காகத் தனது காரில் வந்துகொண்டிருந்த கிரிராஜ் சிங் பள்ளியை நெருங்கியதும் அங்கன்வாடி பணியாளர்கள் வழிமறித்து தங்களது கோரிக்கைகளைக் கேட்கும்படி கோஷம் எழுப்பினர்.
அவர்கள் தங்களின் மனுக்களை அமைச்சரிடம் கொடுக்க நெருக்கியடித்த நிலையில், காரில் இருந்து இறங்கி, பைக் ஒன்றின் பின்னால் அமர்ந்து அங்கிருந்து தப்பினார். இதனால் தங்களது கோரிக்கை மனுக்களைக் கொடுக்க வந்த அங்கன்வாடி பணியாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். கிரிராஜ் சிங் பைக்கில் ஏறி அங்கிருந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- ஜெனரல் மேனேஜர் (GM) பதவியில் உள்ள அரிந்தாம் முஸ்தாபி [Arindam Mustafi] அமைச்சரின் ஷூவை கழற்றினார்
- அமைச்சர் ஷோபாவில் ரிலாஸ்க்காக அமர்ந்திருக்க முஸ்தாபி இந்த பணிவிடைகளை அவருக்கு செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.
மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கதுரை இணை அமைச்சர் சதீஸ் சந்திர தூபேவின் ஷூவை கழற்றி அவரின் கால் சட்டையை மற்றொருவர் சரி செய்யும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்துக்கு வருகை தந்துள்ள அமைச்சர் சதீஸ் சந்திர தூபே தன்பாத் நகரில் உள்ள சுரங்கம் ஒன்றை பார்வையிட சிறப்பு உபகரணங்கள் அணிந்து தயாராகியுள்ளார்.
பாரத் கோக்கிங் கோல் லிமிடெட் (பிசிசிஎல்) என்ற அரசின் நிலக்கரி நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜர் (GM) பதவியில் உள்ள அரிந்தாம் முஸ்தாபி [Arindam Mustafi] அமைச்சரின் ஷூவை கழற்றி அவர் அணிந்திருந்த பைஜாமா கால் சட்டையின் கயிறை அட்ஜஸ்ட் செய்து பணிவிடை ஆற்றியுள்ளார்.
அமைச்சர் ஷோபாவில் ரிலாஸ்க்காக அமர்ந்திருக்க முஸ்தாபி இந்த பணிவிடைகளை அவருக்கு செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி கண்டங்களை குவித்து வருகிறது. பிசிசிஎல் அதிகாரிகள் தங்களின் ஊழலை மறைப்பதற்காக இது போன்ற தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடுவதாக தன்பாத் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
- எச்.டி. குமாரசாமி மண்டி மக்களவை தொகுதியில் வெற்றிபெற்று மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
- சன்னபட்னா இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளராக நிகில் குமாரசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
ரூ.50 கோடி பணம் கேட்டு மிரட்டியதாக தொழிலதிபர் விஜய் டாடா புகாரில் மத்திய அமைச்சர் எச்.டி.குமாரசாமி மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விஜய் டாடா அளித்த புகாரில், "மதசார்பற்ற ஜனதா தள தலைவர் ரமேஷ் கவுடா ஆகஸ்ட் 24ஆம் தேதி தனது வீட்டுக்கு வந்தார். அப்போது மத்திய அமைச்சர் எச்.டி. குமாரசாமிக்கு போன் போட்டு என்னிடம் கொடுத்தார். என்னிடம் போனில் பேசிய குமாரசாமி சன்னபட்னா இடைத்தேர்தலுக்காக ரூ.50 கோடி பணம் கேட்டு மிரட்டினார். பணம் ஏற்பாடு செய்யவில்லை என்றால், ரியல் எஸ்டேட் தொழிலை நடத்த முடியாது என்றும் பெங்களூரில் பிழைப்பு கூட நடத்த முடியாது என்று மிரட்டினார்.
சன்னபட்னா தொகுதி இடைத்தேர்தலில் நிகில் குமாரசாமி (எச்.டி. குமாரசாமியின் மகன்) போட்டியிட உள்ளதாகவும் அதற்கு ரூ.50 கோடி தேவை என்று ரமேஷ் கவுடா மிரட்டினார்" என்று தெரிவித்துள்ளார்.
சன்னபட்னா சட்டமன்ற உறுப்பினராக இருந்த எச்.டி. குமாரசாமி மண்டி மக்களவை தொகுதியில் வெற்றிபெற்று மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து சன்னபட்னா இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளராக நிகில் குமாரசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
- தேர்தல் சீட் கொடுக்காமல் பணத்தை திருப்பிக் கேட்டால் அவமானப்படுத்தியாகவும் புகார்.
- கோபால் ஜோஷி மீது மோசடி, எஸ்.சி., எஸ்.டி., சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் சகோதரர் கோபால் ஜோஷியை மகாராஷ்டிராவில் வைத்து பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர்.
மக்களவை தேர்தலின்போது, கோபால் ஜோஷி மற்றும் 2 பேர் தன்னிடம் ரூ.2 கோடி வாங்கியதாகவும், தனது கணவருக்கு வாய்ப்பு வழங்குவதாக கூறியதாகவும் ஜே.டி.எஸ். முன்னாள் எம்.எல்.ஏவின் மனைவி அளித்த புகார் அளித்திருந்தார்.
மேலும், தேர்தல் சீட் கொடுக்காமல் பணத்தை திருப்பிக் கேட்டால் தன்னை அவமானப்படுத்தியாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த புகாரை தொடர்ந்து, பெங்களூரு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கோபால் ஜோஷி மீது மோசடி, எஸ்.சி., எஸ்.டி., சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, தனக்கும், தனது சகோதரர் கோபால் ஜோஷிக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார்.