என் மலர்
நீங்கள் தேடியது "விடுதலை சிறுத்தைகள்"
- விடுதலை சிறுத்தைகள் கட்சியை எதுவும் செய்துவிட முடியாது.
- கோட்டையில் ஒருநாள் கொடியேற்றுவோம் என்பது நம் கனவு.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேர்தல் வெற்றி விழா பொதுக்கூட்டம் விழுப்புரம் மாவடத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் நிறுவன தலைவர் திருமாவளவன், ஒரு தேர்தலிலும் போட்டியிடாத நடிகர் தான் அடுத்த முதல்வர் என்கிறார்கள் என்று பேசினார்.
கூட்டத்தில் பேசிய திருமாவளவன், "தமிழ்நாட்டில் நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்கும் போதெல்லாம் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று கூறி வந்தனர். விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்கும் போதும் அப்படித் தான் சொன்னார்கள். ஆனால், அதனை கடந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி களத்தில் நீடித்து வருகிறது. யார் கட்சி தொடங்கினாலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை எதுவும் செய்துவிட முடியாது.
கவர்ச்சியின் மூலம் இந்த இயக்கத்தை சேர்ந்த யாரையும் திசை திருப்ப முடியாது. 25 ஆண்டுகளாக ஒரு பட்டாளத்தை விடுதலை சிறுத்தைகள் அதே வேகத்தில் வைத்துக் கொண்டுள்ளது. எந்த சரிவும் ஏற்படவில்லை, வீழ்ச்சியும் இல்லை. ஒரு அரசியல் கட்சியை 25 ஆண்டுகள் கடந்து தாக்குப் பிடிப்பதே சாதனை, வெற்றி.
தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளுடன் இணைந்து இருப்பதால் தான் வெற்றி கிடைப்பதாக சிலர் ஏளனம் பேசி வருகின்றனர். பா.ம.க., ம.தி.மு.க., தே.மு.தி.க. போன்ற கட்சிகளும் தங்கள் செல்வாக்கை நிரூபித்து தான் கூட்டணியில் இணைந்துள்ளன. ஆண்ட கட்சிகள் தான் விடுதலை சிறுத்தைகள் கூட்டணிக்கு வேண்டும் என விரும்பும் நிலைக்கு நாம் உறுதியாக இருக்கிறோம்.
தற்போது ஒரு நடிகர், எந்த தேர்தலிலும் நிற்கவில்லை, போட்டியிடவில்லை. ஆனால் அடுத்த முதல்வர் அவர் தான் என்று பேசுகின்றனர். நான் தொடக்கத்தில் அதிக வாக்குகள் பெற்றபோது என்னை பற்றி யாரும் பேசவில்லை. நாம் வாக்கு வங்கியை தனியாக நிரூபிக்காததால், பெரிய அரசியல் கட்சியினர் நம் செல்வாக்கை வைத்து 10 தொகுதிகளுக்குள் ஒதுக்குகின்றனர்.
கடந்த 2006-ம் ஆண்டு தான் விடுதலை சிறுத்தைகள் தேர்தல் கட்சியாக பதிவு செய்யப்பட்டது. எங்களுக்கு கொள்கை தான் பெரியது என்பதால் குறைந்த தொகுதிகளை வாங்குகிறோம். தமிழ்நாடு மக்கள் நலனுக்காக, வகுப்புவாத சக்திகள் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்பதற்காகவே தொடர்கிறோம். கோட்டையில் ஒருநாள் கொடியேற்றுவோம் என்பது நம் கனவு. ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது நம் இலக்கு,"
என்று கூறினார்.
+2
- தடையை மீறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பாளை பஸ் நிலையம் அருகே பெரியார் சிலை முன்பு மனுஸ்மிருதி புத்தகங்களை வினியோகிக்க தொடங்கினர்.
- தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக ராஜபாண்டியன் உள்ளிட்ட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
பாளை பஸ் நிலையம் பகுதியில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனுஸ்மிருதி புத்தகம் வினியோகிக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணியினர் சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பற்றிய துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப் போவதாகவும் அறிவித்தனர். இவற்றிற்கு போலீசார் தடை விதித்தனர்.
மேலும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் பாளை பஸ் நிலைய பகுதியில் மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் தடையை மீறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பாளை பஸ் நிலையம் அருகே பெரியார் சிலை முன்பு மனுஸ்மிருதி புத்தகங்களை வினியோகிக்க தொடங்கினர். நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ், செய்தி தொடர்பாளர் முத்துவளவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
உடனே அங்கு துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், உதவி கமிஷனர் பிரதீப், இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் புத்தகங்களை வினியோகிக்க கூடாது என்றனர். எனினும் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட கரிசல் சுரேஷ் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே பாளை வ.உ.சி மைதானம் இந்து மக்கள் கட்சி தென்மண்டல செயலாளர் ராஜபாண்டியன், மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமையில் கட்சியினரும், இந்து முன்னணி நிர்வாகிகள் விமல், பிரம்ம நாயகம் தலைமையில் அமைப்பினரும் திருமாவளவன் குறித்து துண்டு பிரசுரங்களுடன் திரண்டனர்.
அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக ராஜபாண்டியன் உள்ளிட்ட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
- வருவாய் அலுவலர் பிரியா, கிராம நிர்வாக அலுவலர் நர்மதா, நில அளவையர் பிச்சைமணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உசிலம்பட்டி
உசிலம்பட்டி நகராட்சி பகுதிக்கு உட்பட்ட கருக்கட்டான்பட்டி ஆதி திராவிடர் குடியிருப்பு பொதுமக்கள் இந்த பகுதிக்கு கழிவறை வேண்டி பலமுறை நகராட்சியிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் இன்குலாப், நகர செயலாளர் விடுதலை மாரி, ஒன்றிய செயலாளர் பழனிசாமி, தொகுதி அமைப்பாளர் கோ.சின்னான், விவசாய அணி மாநில துணைச் செயலாளர் தென்னரசு, நிர்வாகிகள் பெரியசாமி, ராமன், பண்ணை பாண்டியன், மகளிரணி பாண்டீஸ்வரி மற்றும் பலர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் போலீஸ் டி.எஸ்.பி. நல்லு, நகராட்சி மேலாளர் சாந்தி, வருவாய் அலுவலர் பிரியா, கிராம நிர்வாக அலுவலர் நர்மதா, நில அளவையர் பிச்சைமணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பஸ் நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய, நகரம் சார்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் தமிழ்மாறன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வக்கீல் அணி மாநில செயலாளர் பார்வேந்தன், மாநில துணை பொது செயலாளர் திருமார்பன், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
மூங்கில்துறைப்பட்டு பகுதியில் அத்துமீறி நுழைந்து பொருட்களை சூறையாடி வன்முறையில் ஈடுபட்ட கும்பலை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும், சேதப்படுத்திய சொத்துக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், ஆதிதிராவிடர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நிர்வாகிகள் ராமமூர்த்தி, பாலு, பொன்னிவளவன், அறிவுக்கரசு, திராவிட சந்திரன், தொல்காப்பியன், கிள்ளிவளவன், குமார், வெங்கடேசன், கண்ணன், சக்திவேல், ராதிகா, பழனியம்மாள், காந்தி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கை
- அந்த வழியாக காலை, மாலை செல்லும் மாணவ-மாணவிகள் பாதிக்கப்படும் சூழல்
நாகர்கோவில் :
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் திருமாவேந்தன் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பு கேபி ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. கல்வி நிறுவனங்கள் பஸ்நிறுத்தம் பகுதியில் இந்த டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இதனால் அந்த வழியாக காலை, மாலை செல்லும் மாணவ-மாணவிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மாணவிகள், பெண்கள் இதனால் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே செட்டிகுளம் சந்திப்பில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.
குமரி மாவட்ட ராணுவ வீரர்களின் அமைப்பான ஜவான்ஸ் சார்பில் 2 மனுக்கள் தனித்தனியாக அளிக்கப்பட்டன. அவற்றில் கூறப்பட்டு இருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் இருந்து ராணுவத்திலும், துணை ராணுவத்திலும் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் நாட்டுக்காக சேவையாற்றி வருகிறோம். குமரி மாவட்டத்தை சேர்ந்த பல ராணுவ வீரர்கள் நாட்டுக்காக வீர மரணம் அடைந்துள்ளனர். அவ்வாறு வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கும், வருங்காலத்தில் உயிர் தியாகம் செய்யும் ராணுவ வீரர்களையும் நினைவு கூறும் வகையில் அருங்காட்சியகம் அமைக்க ஜவான்ஸ் அமைப்பிற்கு நிலம் கொடுக்க வேண்டும். மேலும் ராணுவ வீரர்களுக்கு வீட்டு வரி, தண்ணீர் வரி உள்ளிட்டவற்றில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா இன்று மாலை நடக்கிறது.
- தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என கிழக்கு தொகுதி செயலாளர் கார்வண்ணன் அறிக்கை விடுத்துள்ளார்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அணிவகுப்பு நடந்தது.
- 15 வாகனங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர்.
மதுரை
அம்பேத்கர் 132-வது பிறந்தநாளையொட்டி மதுரையில் உள்ள அவரது சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாலை அணிவித்தனர்.
கள்ளந்திரி, குறிஞ்சி நகர், ஏ.என்.புரம் முகாம் அமைப்பாளர்கள் மணிபாரதி, நொண்டிசாமி, அஜித் ஆகியோரது தலைமையில் 30 பேர், பொய்கைக்கரைப்பட்டி நந்தகோபால் தலைமையில் 10பேர், வெள்ளியங்குன்றம் நொண்டிசாமி தலைமையில் 10பேர், பில்லுச்சேரி தினேஷ் தலைமையில் 10பேர், மாத்தூர், மாத்தூர் காலனி காசி, சின்னையா ஆகியோரது தலைமையில் 20பேர், குருத்தூர் மாரி காளி தலைமையில் 25பேர், மாங்குளம் மீனாட்சி புரம் சபரிநாதன், கண்ணன், செல்வம் ஆகியோரது தலைமையில் 25பேர் அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவில் மலர் தூவி இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
ராவணன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அணிவகுத்து வந்தனர். மேற்கு ஒன்றியம் சார்பில் 22 வாகனங்களில் அணிவகுப்பில் கலந்து கொண்டனர். கிழக்கு ஒன்றியம் சார்பில் 15 வாகனங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அணிவகுப்பில் பங்கேற்றனர்.
- பொது இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அனுமதி பெறாமல் கொடிக்கம்பத்தை நட்டனர்.
- 10-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வாசுதேவனூர் பஸ் நிலையம் அருகே சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக உள்ள பொது இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அனுமதி பெறாமல் கொடிக்கம்பத்தை நட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த தாசில்தார் இந்திரா, கிராம நிர்வாக அலுவலர்கள், 10-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விடுதலை சிறுத்தைகள் க ட்சியினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தனபாலுக்கும் தாசில்தார் இந்திராவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சின்ன சேலம் போலீஸ் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் தனபால் மீது தாசில்தார் இந்திரா புகார் அளித்தார். அதன் பிறகு நேற்று சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள தியாகனூர் பகுதியில் பவுத்த மாநாட்டிற்காக அவ்வழியே வந்த திருமாவளவன் கொடிக்கம்பத்தில் கொடி ஏற்றிவிட்டு சென்றார்.
அப்பொழுது ஆயிரத்திற்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு நேற்று இரவோடு இரவாக 10-க்கும் மேற்பட்ட போலீசா ருடன் தாசில்தார் இந்திரா விடுதலை சிறுத்தை கள் தலைவர் திருமா வளவன் ஏற்றிசென்ற கொடிக் கம்பத்தை அகற்றினார். இச்சம்ப வத்தால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவிவருகிறது.
- கலவரத்தைக் கட்டுப்படுத்த தவறிய மத்திய மற்றும் மணிப்பூர் மாநில அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- மணிப்பூர் மாநில அரசுகளைக் கண்டித்து, கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.
கடலூர்:
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வரும் இனக் கலவரத்தில், 2 பழங்குடியின சமுதாயப் பெண்களை நிர்வாண மாக்கி, கற்பழித்ததை கண்டித்தும், கலவரத்தைக் கட்டுப்படுத்த தவறிய மத்திய மற்றும் மணிப்பூர் மாநில அரசுகளைக் கண்டித்தும், மணிப்பூர் மாநில அரசை உடனடியாக கலைத்திட வேண்டுமென வலியுறுத்தியும், மங்கலம்பேட்டை நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைப்பில், அனைத்துக் கட்சிகள் சார்பில், மங்கலம்பேட்டை தேரடி வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கடசி நகர செயலாளர் அம்பேத் தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தில், இந்திய குடியரசு கட்சியின் மாநில முன்னாள் இணைப் பொதுச்செயலாளர் மங்காபிள்ளை,விடுதலை சிறுத்தைகள் சமூக ஊடக மாநில துணைச் செயலாளர் ராஜ்குமார், தி.மு.க.நகர அவைத் தலைவர் முஹம்மது யூசுப், மாவட்ட தி.மு.க.பிரதிநிதி குழந்தை சுதந்திரன், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான், தமிழக வாழ்வுரிமை கட்சி ஒன்றிய செயலாளர் வெங்கடாச்சலம், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் இக்பால், விடுதலை சிறுத்தைகள் கட்சி ந கர துணைச் செயலாளர் தனக்குமார், ம.தி.மு.க.பிரமுகர் விக்னேஷ், விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் அறிவழகன், மக்கள் அதிகாரம் அமைப்பு பிரமுகர் மணிவாசகன், காங்கிரஸ் கட்சி பிரமுகர் மணிகண்டன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் சிவக்குமார், வக்கீல் கிருஷ்ண மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டு, மத்திய மற்றும் மணிப்பூர் மாநில அரசுகளைக் கண்டித்து, கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.
- மண்டல செயலாளர் வீ.கிட்டுவின் தாயார் படத்தை வி.சி. கட்சி தலைவர் திருமாவளவன் திறந்து வைத்தார்.
- கட்சியின் மாவட்ட செயலாளர் பதவியில் 10 சதவீதம் பெண்களுக்கு என ஒதுக்கியுள்ளோம் என்றார்.
மாமல்லபுரம்:
காஞ்சிபுரம்-செங்கல்பட்டு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் வீ.கிட்டுவின் தாயார் நாகம்மாளின் 16ம் நாள் படத்திறப்பு நிகழ்ச்சி மாமல்லபுரத்தில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு படத்தை திறந்து வைத்து, மலர்தூவி, மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் பேசியதாவது:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பதவியில், 10 சதவீதம் பெண்களுக்கு என ஒதுக்கியுள்ளோம். இந்திய நாட்டிலேயே எந்தக் கட்சியும் வழங்காத ஒரு வாய்ப்பை பெண்களுக்கு வழங்கியுள்ளோம்.
பெண்கள் அரசியலுக்கு வெட்கம் இல்லாமல், தைரியமாக வரவேண்டும். இதுதவிர மாற்று சமுதாயம் சார்ந்தவர்களுக்கும் 10 சதவீதம் கொடுத்துள்ளோம் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் விடுதலை செழியன், இ.சி.ஆர்.அன்பு, சாலமன், ஐயப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
- அமைச்சர் உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி பரிசு
- உதயநிதி ஸ்டாலினின் படத்தை வாளால் கிழிப்பது போன்றும் சமூக வலைதளங்களில் படம் வெளியானது
நாகர்கோவில் :
உத்தர பிரதேசத்தை சேர்ந்த சாமியார் பரமஹான்ஸ் ஆச்சார்யா சனாதனம் பற்றி பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை எடுத்தால் ரூ.10 கோடி தருவதாக கூறியுள்ளார்.
மேலும் அவர் உதயநிதி ஸ்டாலினின் படத்தை வாளால் கிழிப்பது போன்றும் சமூக வலைதளங்களில் படம் வெளியானது. இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நாகர்கோவில் மாநகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் அல்காலித் தலைமையில் நிர்வாகிகள் இன்று வடசேரி போலீசில் புகார் மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை இரும்பு வாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்தது மட்டுமல்லாமல் அவருடைய தலையை வெட்டி கொண்டு வருவதற்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என்று உத்தரபிரதேசத்தை சேர்ந்த பரமஹான்ஸ் ஆச்சார்யா பொதுமக்களுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் மிரட்டல் விடுத்துள்ளார்.
தமிழக அமைச்சரின் மீது பொதுவெளியில் பகிரங்க கொலை மிரட்டல் விடுத்த பரமஹான்ஸ் ஆச்சார்யா மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.
- திருமாவளவன் எம்.பி. திறந்து வைத்தார்
- 38 வருவாய் மாவட்டங்களை ஒன்றியங்கள் மற்றும் மாநகராட்சி அடிப்படையில் 144 மாவட்டங்களாக பிரித்துள்ளோம்
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநகர மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அலுவலக திறப்பு விழா கலெக்டர் அலுவலகம் எதிரே சண்முகா தெருவில் நடந்தது. விழாவிற்கு மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிய அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாக வசதிக்காக 38 வருவாய் மாவட்டங்களை ஒன்றியங்கள் மற்றும் மாநகராட்சி அடிப்படையில் 144 மாவட்டங்களாக பிரித்துள்ளோம். இதன்படி குமரியில் 4 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
முதல்-அமைச்சரின் இந்த திட்டம் முன்மாதிரி திட்டமாகும். ஒட்டுமொத்த இந்தியா இந்த திட்டத்தை உற்று திரும்பி பார்க்க வைத்துள்ளது.
அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை மிரட்டி இருந்தால் அதனை விடுதலை சிறுத்தைகள் சார்பில் நான் வன்மையாக கண்டிக்கிறேன். தமிழக அரசு பெண்கள் முன்னேற்றத்தில் தனி கவனம் செலுத்தி வருகிறது. பஸ் பயணம், மகளிர் உரிமைத்தொகை, காலை உணவு திட்டம் எண்ணற்ற வளர்ச்சி திட்டங்களை அரசு நிறைவேற்றி உள்ளது. பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் வரி சையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகி யோர் சனாதனத்தை தவி ர்த்து வருகின்றனர்.
சனாதனம் குறித்து அமை ச்சர் உதயநிதி பேச்சுக்கு பிரதமர் மோடி பதில் அளித்து இருப்பது இந்தியா கூட்டணியை உடைக்க மேற்கொள்ளும் சதி ஆகும். அவரது சதி முயற்சி பலிக்காது. சனாதனம் என்பது தீட்டு கொள்கையாகும். இந்தியா கூட்டணியை கண்டு பிரதமர் நரேந்திர மோடி நடுங்குகிறார். இறுதியாக இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றி வருகின்றனர். அடுத்து பாரத் என்ற பெயரும் நிரந்தரம் இல்லை.
இனிமேல் இதனை இந்து ராஷ்ட்ரா என மாற்றுவார்கள். இதுதான் கோ ல்வால்கர் மற்றும் வீரசவாதரின் கனவு. இதனை தற்போது ஆர்.எஸ்.எஸ். நடைமுறை படுத்த முயல்கி றது. தமிழகத்தில் சனாதனத்திற்கு என்றும் இட மில்லை. அண்ணாமலையின் நடைபயணம் தமிழகத்தில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பகலவன், திருமாவேந்தன், கோபி, தேவகி, சவுத்திரி, பாபு, நாஞ்சில் சுரேஷ், முஜிப் ரகுமான், ரியாஸ், சிராஜுதீன், உமேஷ், யூசுப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.