என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சண்டை"

    • ஆவூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் விவசாயி பலியானார்
    • மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    புதுக்கோட்டை,

    விராலிமலை ஒன்றியம், பாக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா (வயது 54). விவசாயி. கருப்பையாவும், அதே ஊரை சேர்ந்த விவசாயி செல்வம் என்பவரும் மலம்பட்டிக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆவூர் அருகே இலுப்பூர் மாத்தூர் சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்த போது எதிரே விராலிமலை தாலுகா வேலப்படையான்பட்டி கிராமத்தை சேர்ந்த தேவராஜ் என்பவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள், கருப்பையா ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

    இதில் படுகாயமடைந்த கருப்பையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த செல்வத்தை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கருப்பையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பாகிஸ்தானில் தரையிறங்க அனுமதி கோரப்பட்ட நிலையில் அனுமதி மறுக்கப்பட்டது.
    • பாதுகாப்பு அதிகாரிகள் ஜெர்மன் தூதரகத்துடன் தொடர்பு கொண்டுள்ளனர்.

    ஜெர்மனியில் இருந்து பாங்காக்கை நோக்கி எல்எச்772 லுஃப்தான்சா விமானம் பறந்துக் கொண்டிருந்தது. அப்போது, விமானத்தில் பயணித்த ஜெர்மன்- தாய்லாந்தை சேர்ந்த கணவர்- மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

    ஆரம்பத்தில் தம்பதி இடையே வாக்குவாதமாக தொடங்கிய பிரச்சனை அதுவே பெரிய தகராறாகவும் மாறியுள்ளது. இதனால், கணவரின் நடத்தையால் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி மனைவி விமானியின் உதவியை நாடினார்.

    இதை அடுத்து விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

    பின்னர் விமானத்தை தரையிறக்க முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கோரப்பட்டது. முன்னதாக, பாகிஸ்தானில் தரையிறங்க அனுமதி கோரப்பட்ட நிலையில் அனுமதி மறுக்கப்பட்டது.

    இந்நிலையில், லுஃப்தான்சா விமானம் டெல்லி விமான நிலையத்தில் இன்று காலை தரையிறக்கப்பட்டது. பின்னர், கணவரை விமானத்திலிருந்து இறக்கப்பட்டு விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக சிவில் விமான போக்குவரத்து இயக்கநரகத்தின் வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்த சம்பவம் குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் ஜெர்மன் தூதரகத்துடன் தொடர்பு கொண்டுள்ள நிலையில் அந்த நபர் விமான நிலைய அதிகாரிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அந்த நபர் இந்திய பாதுகாப்பு அமைப்புகளிடம் ஒப்படைக்கப்படுவாரா அல்லது ஜெர்மனிக்கு திருப்பி அனுப்பப்படுவாரா என்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டு வருகிறது.

    லுஃப்தான்சா விமானம் அதன் டயர்கள் குளிர்ந்தவுடன் தாய்லாந்திற்கு புறப்படும் என்று வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

    • சுற்றுலா பயணிகள் ராப்டிங் எனப்படும் நீர் சாகச விளையாட்டுகளிலும் ஈடுபடுவார்கள்.
    • ஒரு பயனர், சுற்றுலா பயணிகளை இவ்வாறு நடத்தக்கூடாது எனபதிவிட்டிருந்தார்.

    இந்தியாவில், ஜூன் மாதம் சுற்றுலாப் பயணிகளின் பரபரப்பான மாதம். நீதிமன்றங்கள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி வசதிகள் மூடப்பட்டுள்ளதால், பலர் நாடு முழுவதும் நன்கு அறியப்பட்ட இடங்களுக்குச் செல்வார்கள். குறிப்பாக ரிஷிகேஷ் ஆன்மீக சுற்றுலா செல்வது மிகவும் விரும்பும் சுற்றுலா தலமாகும். இங்கே, பார்வையாளர்கள் வெள்ளை நீர் ராஃப்டிங் போன்ற உற்சாகமான உல்லாசப் பயணங்களை மேற்கொள்கின்றனர். கோயில்களைக் கண்டறியலாம் மற்றும் கண்கவர் கங்கா ஆரத்தி போன்றவற்றில் பங்கேற்பார்கள்.

    இந்நிலையில் உத்தரகாண்டில் உள்ள ரிஷிகேஷில் ஏராளமான பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளன. மேலும் அங்குள்ள ஆற்றில் படகு சவாரி செல்லவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும் சுற்றுலா பயணிகள் ராப்டிங் எனப்படும் நீர் சாகச விளையாட்டுகளிலும் ஈடுபடுவார்கள். இந்நிலையில் ரிஷிகேஷில் சுற்றுலா பயணிகளுக்கும் ராப்டிங் வழிகாட்டிகளுக்கும் இடையிலான மோதல் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

    அதில் சுற்றுலா பயணிகளும், ராப்டிங் வழிகாட்டிகளும் படகை நகர்த்தி செல்ல பயன்படுத்தப்படும் துடுப்புகளால் ஒருவரை ஒருவர் தாக்கும் காட்சிகள் உள்ளன. வைரலான இந்த வீடியோ 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஒரு பயனர், சுற்றுலா பயணிகளை இவ்வாறு நடத்தக்கூடாது எனபதிவிட்டிருந்தார். அதே நேரம் சில பயனர்கள், வழிகாட்டிகளுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

    • அந்தப் பெண்ணும் மணப்பெண்ணாக திருமண நிகழ்ச்சிக்காக காத்திருந்தாள்.
    • திருமணத்துக்கு வந்திருந்தவர்களிடையே திடீரென சலசலப்பு ஏற்பட்டது.

    உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் உள்ள ஹிமாயுபூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும், ராம்நகரைச் சேர்ந்த விகாஸ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஜூலை 10 அன்று திருமண நிகழ்விற்காக விகாஸ் ஊர்வலமாக ஹிமாயூபூரில் உள்ளபெண் விட்டிற்கு அழைந்து வந்தனர்.

    அங்கு இருந்தவர்கள் மணமகனை வரவேற்றனர். 

    இந்நிலையில் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, திருமணத்துக்கு வந்திருந்தவர்களிடையே திடீரென சலசலப்பு ஏற்பட்டது.

    திருமண விருந்தின் போது உணவு குறைந்ததாக கூறி, திருமண வீட்டினரை மக்கள் கட்டையால் தாக்கினர். திருமண விருந்தினர்கள் மற்றும் இல்லத்தரசிகள் ஒருவருக்கொருவர் நாற்காலிகளை வீசினர். இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, திருமணம் முறியும் அளவுக்கு மாறியது. இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் 6 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    இருதரப்பினரிடையேயும் ஏற்பட்ட மோதல் வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

    • இப்போதே சண்டையென்றால் மாமியார் வீட்டில் என்னவெல்லாம் நடக்கும்.
    • இந்த விவகாரத்தில், மணமகன் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

    உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியாவில் ஏர் கூலர் அருகில் யார் உட்காருவது என மணமகன் - மணமகள் வீட்டார் சண்டையிட்டுக் கொண்டதால் கோபத்தில் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது.

    இப்போதே சண்டையென்றால் மாமியார் வீட்டில் என்னவெல்லாம் நடக்கும் எனக்கூறி மணப்பெண் இந்த திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

    இந்த விவகாரத்தில், மணமகன் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

    • பல்வேறு வீடியோக்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
    • சண்டையை நிறுத்துவதற்காக விலக்கிவிட்ட போது அவரை ஒருவர் அறைந்தார்.

    டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் பயணிகள் இருக்கைக்காக சண்டையில் ஈடுபட்ட காட்சிகள், இளம்ஜோடிகளின் அத்துமீறல், ஆபாசமாக உடை அணிந்து வந்த பயணிகள் என பல்வேறு வீடியோக்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    இந்நிலையில், தற்போது இணையத்தில் பரவி வரும் ஒரு வீடியோவில், டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் டோக்கன் கவுண்டரில் 2 பயணிகளுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் காட்சிகள் வைரலாகி வருகிறது.

    அப்போது சக பயணி ஒருவர், அவர்களின் சண்டையை நிறுத்துவதற்காக விலக்கிவிட்ட போது அவரை ஒருவர் அறைந்தார்.

    இதுதொடர்பான வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. இதைப்பார்த்த பயனர்கள் கேலியான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • கட்சிகாரங்கள் தொடர்பாக வழக்கறிஞர் விஜய் சிங் மற்றும் மோஹித் ஆகிய இருவரிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது
    • மற்ற வழக்கறிஞர்களும் இரு தரப்பாக பிரிந்து ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டு சண்டையிட்டுக்கொண்ட வீடியோ இணையத்தில் பரவியது.

    தலைநகர் டெல்லியின் சகார்பூர் [Shakarpur] பகுதியில் உள்ள சிறப்பு நிர்வாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்  வழக்கறிஞர்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தங்களது கட்சிக்காரர்கள் தொடர்பாக வழக்கறிஞர் விஜய் சிங் மற்றும் மோஹித் ஆகிய இரண்டு வழக்கறிஞர்களுக்கிடையில் நீதிமன்ற வளாகத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை மூண்டுள்ளது.

    இது கைகலப்பாக மாறவே அங்கிருந்த மற்ற வழக்கறிஞர்களும் இரு தரப்பாக பிரிந்து ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டு சண்டையிட்டுக்கொண்ட வீடியோ இணையத்தில் பரவியது.

    இதுகுறித்து துணை பாதுகாப்பு ஆணையர் பேசுகையில், இந்த விவகாரம் வழக்கறிஞர்களின் பார் அசோசியேசன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட்டு நீதிமன்ற வளாகத்துக்குள் அமைதியை குலைக்கும் வகையில் நடந்துகொண்ட குற்றத்துக்காக சட்டப்பிரிவு 126/169 பாரதீய நகரிக் சுரக்ஷ சன்ஹிதா சட்டம் [ முன்னதாக சிஆர்பிசி 107/150] கீழ் நடவடிக்கை எடுக்கப்டும் என்று உறுதியளித்துள்ளார்.

    • மாகாண அதிகாரிகள் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
    • பல நாட்களாக நீடித்த சண்டை முடிவுக்கு வந்தது.

    பெஷாவர்:

    பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த இரு பிரிவினர் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. கடந்த மாதம் 21-ந் தேதி குர்ரம் மாவட்டத்தில் ஒரு பிரிவினர் சென்ற வாகனங்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 57 பேர் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இரு பிரிவினருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதில் 130 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

    மாகாண அதிகாரிகள் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 7 நாள் சண்டை நிறுத்தம், 10 நாள் சண்டை நிறுத்தம், சமாதான பேச்சுவார்த்தை என அவர்கள் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனால் மீண்டும் மீண்டும் வன்முறை சம்பங்கள் அரங்கேறின. எனினும் தொடர்ந்து சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

    அதிகாரிகளின் தொடர் முயற்சிகளுக்கு பிறகு இரண்டு பழங்குடியின சமூகத்தினரிடையே நேற்று சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. பல நாட்களாக நீடித்த சண்டை முடிவுக்கு வந்தது. குர்ரம் மாவட்டத்தில் மோதல் ஏற்பட்ட பகுதிகள் முழுவதும் அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக காவல்துறை துணை ஆணையர் ஜாவேதுல்லா மெஹ்சூத் தெரிவித்தார்.

    மோதல் நடைபெற்ற பகுதிகளில் சாலைகளை மீண்டும் திறப்பது மற்றும் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது தொடர்பாக பழங்குடியின தலைவர்களின் கவுன்சிலான ஜிர்கா பேச்சுவார்த்தை நடத்தும். ஆயுதமேந்திய பழங்குடியினர் துப்பாக்கிச் சூடு நடத்திய பகுதிகளில் இருந்து அகற்றப்பட்டு, காவல்துறை மற்றும் பாதுகாப்பு படைகள் நிறுத்தப்பட்டுள்ளன என்றும் துணை ஆணையர் மெஹ்சூத் தெரிவித்தார்.

    • ஆத்திரமடைந்த இருவரும் நள்ளிரவில் திடீரென மோதலில் ஈடுபட்டனர்.
    • அவர்கள் நடுரோட்டில் கட்டிப்புரண்டு ஒருவரையொருவர் தாக்கி சண்டை போட்டனர்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் பிரம்மநாயகம் (வயது28). ஊர்க்காவல் படை வீரர். இவர் கடந்த 3-ந் தேதி இரவு பாதுகாப்பு பணியை முடித்து கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

    அவர் வண்ணார்பேட்டை-சந்திப்பு சாலையில் சென்ற போது ஜவுளிக்கடையில் வேலை பார்க்கும் ஒருவர் அங்கு வந்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஆத்திரமடைந்த இருவரும் நள்ளிரவில் திடீரென மோதலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் நடுரோட்டில் கட்டிப்புரண்டு ஒருவரையொருவர் தாக்கி சண்டை போட்டனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. இது தொடர்பாக விசாரணை நடத்த மாநகர போலீஸ் துணைகமிஷனர் சீனிவாசன் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பிரம்மநாயகத்துடன் மோதலில் ஈடுபட்டது வீரவநல்லூர் அருகே உள்ள கரிசூழ்ந்தமங்கலத்தை சேர்ந்த முத்துச்சரவணன் (32) என்பதும், தாக்குதல் சம்பவத்தில் பிரம்மநாயகம், முத்துச்சரவணன் ஆகியோர் காயமடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது.

    தொடர் விசாரணையில் பிரம்மநாயகம் முன்பு ஜவுளிக்கடையில் வேலை பார்த்த போது அவருக்கும் முத்துச்சரவணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது.

    இந்நிலையில் தற்போது ஊர்க்காவல் படையில் சேர்ந்து பணியாற்றி வரும் பிரம்மநாயகம் சம்பவத்தன்று சாலையில் வந்த போது அவர்களுக்கடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனை ஜவுளிக்கடை காவலாளி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பணம் கட்டி சேவல் சண்டை நடப்பதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • சேவல் சண்டையில் ஈடுபட்டதாக 33 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். சேவல்களை கொண்டுவர பயன்படுத்தப்பட்ட 2 கார்கள், 6 மோட்டார் சைக்கிள்கள், சூதாட்டப் பணம் ரூ.36, 190 ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியில் சிவகாமி என்பவரது வீட்டின் பின்புறம் உள்ள கால் நடை வளர்ப்புப் பகுதியில் பணம் கட்டி சேவல் சண்டை நடப்பதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் பெருந்துறை சப்- இன்ஸ்பெக்டர் செந்தி ல்குமார் தலைமையான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்த போது அதேப் பகுதியைச் சேர்ந்த சிவகாமியின் மகன் தினேஷ்குமார் (30) மற்றும் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தியது தெரிய வந்தது.

    இதையடுத்து சுற்றி வளைத்துப் பிடித்த போலீசார் சேவல் சண்டையில் ஈடுபட்டதாக 33 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    மேலும், சண்டைக்கு பயன்படுத்தப்பட்ட 8 சேவல்கள், சேவல்களின் கால்களில் கட்டப்படும் கத்திகள் 21 மற்றும் சேவல்களை கொண்டுவர பயன்படுத்தப்பட்ட 2 கார்கள், 6 மோட்டார் சைக்கிள்கள், சூதாட்டப் பணம் ரூ.36, 190 ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

    • கணவர் அடிக்கடி குடித்து விட்டு வந்ததால் அவர்களுக்கிடையே சண்டை ஏற்பட்டது.
    • வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு மாட்டி தற்கொலை செய்து ெகாண்டார்.

    நீடாமங்கலம்:

    ஆடுதுறை தெற்கு அக்ரஹாரத்தை சேர்ந்தவர் ராஜகுரு. இவரது மனைவி இந்துமதி (வயது 24). இத்தம்பதிகளுக்கு திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் ஆகிறது. 9 மாத ஆண் குழந்தை உள்ளது.

    கடந்த இரண்டு வருடங்களாக தனியாக வசித்து வந்த நிலையில் ராஜகுரு அடிக்கடி குடித்து விட்டு வந்ததால் அவர்களுக்கிடையே சண்டை ஏற்பட்டு இந்துமதி அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அவரை சமாதானம் செய்து வீட்டிற்கு ராஜகுரு அழைத்து வந்துள்ளார். இதனிடையே இந்துமதி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு மாட்டி தற்கொலை செய்தார். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×