என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேலை"

    • இந்தியாவின் ஒடியா வம்சாவளியை சேர்ந்த மதுஸ்மிதா ஜெனா என்ற ஆசிரியை பணியாற்றி வருகிறார்.
    • சேலை அணிந்து கொண்டு அவர் மாரத்தான் ஓடியது அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.

    இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு உயர்நிலை பள்ளியில் இந்தியாவின் ஒடியா வம்சாவளியை சேர்ந்த மதுஸ்மிதா ஜெனா என்ற ஆசிரியை பணியாற்றி வருகிறார். இவர் கைத்தறியிலான சம்புல்வரி வகை சேலை அணிந்து இங்கிலாந்தின் இரண்டாவது பெரிய மான்செஸ்டர் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு சுமார் 42 கிலோ மீட்டர் தூரம் ஓடி உள்ளார். சேலை அணிந்து கொண்டு அவர் மாரத்தான் ஓடியது அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.

    இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். தனது மாரத்தான் அனுபவம் குறித்து மதுஸ்மிதா ஜெனா கூறுகையில், சேலை அணிந்து மாரத்தான் ஓடிய ஒரே நபர் நான் தான். இவ்வளவு நீண்ட தூரம் ஓடுவது ஒரு தொடர் வேலை.. ஆனால் சேலையில் இவ்வாறு செய்வது இன்னும் கடினமானது. முழு தூரத்தையும் 4.50 மணி நேரத்தில் முடிக்க முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    எனது பாட்டி, தாயார் எப்போதும் சேலை அணிந்திருந்ததால் அவர்களை பார்த்து இந்த ஆடையை தேர்ந்தெடுத்தேன். பெண்கள் சேலை அணிந்து கொண்டு ஓட முடியாது என்று பலர் கூறுகிறார்கள். ஆனால் அவர்களின் முடிவு தவறானது என நிரூபித்துள்ளேன் என்றார். 

    • புடவையை சரியாக அணிந்தால், பருமனான பெண்களை கூட, ஒல்லியாக காட்டமுடியும்.
    • பெண்களின் அழகிற்கு, கூடுதல் அழகு சேர்க்கும் கலைக்குதான், ‘புடவை’ என்று பெயர்.

    பெண்களின் அழகிற்கு, கூடுதல் அழகு சேர்க்கும் கலைக்குதான், 'புடவை' என்று பெயர். இதன் ஸ்பெஷல் என்ன தெரியுமா...? புடவையை முறையாக தேர்ந்தெடுத்து, சரியாக அணிந்தால், பருமனான பெண்களை கூட, ஒல்லியாக காட்டமுடியும். அதேபோல, ஒல்லியான பெண்களையும் கொஞ்சம் பருமனாக காட்டமுடியும். இந்த மாயாஜாலம், புடவைகளில் மட்டுமே சாத்தியம்.

    * நம் ஊரில், என்னென்ன புடவை வகைகள் இருக்கிறது?

    பட்டு, கைத்தறி, பனாரஸ், காட்டன், டிசைனர் எம்ப்ராய்டரி, டிசைனர் பார்டிவேர், டிசைனர் திருமண புடவைகள், டிசைனர் லெஹங்கா, ஹாப் டிஷ்யு, ப்ரேசோ, நெட்டட், ஜெக்கார்ட் வேலைப்பாடு, ஷிபான், ஜார்ஜ்ஜெட்… இப்படி பல வகை துணிகளில் புடவைகள் கிடைக்கின்றன. பிரி ஸ்டைல், டிரெடிஷ்னல், தென் இந்திய முறை, வட இந்திய முறை, மடிசார், கேன் கேன், குஜராத்தி பல்லு, சிங்கிள் பிலீட்ஸ்.. இப்படி புடவைகளுக்கு ஏற்ப உடுத்தும் முறைகள் வேறுபடும்.

    * கட்டுவதற்கு சுலபமானது எது? கடினமானது எது?

    இதில் ஜார்ஜ்ஜெட், ஷிபான் மற்றும் சாப்ட் சில்க் ஆகியவை கட்டுவதற்கு சுலபமானவை. அயன் செய்யவேண்டிய தேவை இருக்காது. அதேபோல மடித்து, மோல்ட் செய்வதும் எளிதானது. ஆனால் கனமான பட்டு புடவைகள் குறிப்பாக காஞ்சி பட்டு, கனமான கல் வேலைப்பாடுகள் கொண்ட புடவைகளை கட்டுவது கொஞ்சம் சிரமமானது. ஏனெனில் இதை நினைத்தபடி மடிப்பதும், 'பின்' குத்துவதும், கையாள்வதும் கடினமாக இருக்கும்.

    * எவ்வளவு நேரத்தில் புடவை கட்டலாம்?

    ஒருசில கொண்டாட்டங்களில் மட்டும் புடவை கட்டுபவர்கள், அதிகபட்சம் அரை மணி நேரம் எடுத்து கொள்வார்கள். மாதத்திற்கு ஓரிரு முறை உடுத்துபவர்கள், 15 முதல் 20 நிமிடங்களில் புடவையை கட்டிவிடுவார்கள். தினந்தோறும் புடவை கட்டுபவர்களுக்கு, 10 நிமிடமே போதுமானதாக இருக்கும். ஆனால் புடவை எக்ஸ்பெர்ட்ஸ், 2 நிமிடத்திலேயே கட்டிமுடித்துவிடுவார்கள்.

    * பெண்கள் புடவை விஷயத்தில், செய்யும் தவறுகள் என்ன?

    புடவைக்கு ஓரம் அடிக்காமல் அணிவது, உள் பாவாடையை கொலுசு இருக்கும் கணுக்காலில் நிற்கும்படியாக அணியாமல் ஒழுங்கற்று மேல்-கீழாக இருக்கும்படி அணிவது, உடலுக்கு சம்பந்தமில்லாத முறையில் மடிப்பு (பிலீட்ஸ்) எடுப்பது, புடவையை அயன் செய்யாமல் அணிவது, பிலீட்ஸ்-ஐ இடுப்பில் சொருகி அதை சரிசெய்யாமல் விடுவது, புடவை உடலில் நிற்பதற்காக நிறைய இடங்களில் பின் குத்துவது... இப்படி நிறைய தவறுகளை செய்கிறார்கள்.

    * புடவையை சிறப்பான முறையில் அணிவது எப்படி?

    'பிலீட்ஸ்' எனப்படும் முந்தானை மடிப்புகளை முன்கூட்டியே தயாரித்துவிட வேண்டும். புடவையின் ரகத்திற்கு ஏற்ப உள்பாவாடை வகைகளை தேர்வு செய்வது சிறப்பு. குறிப்பாக, பட்டு புடவைகளுக்கு லேசான ஷேப்வேர் உள்ளாடைகள் சிறப்பாக இருக்கும். அதேபோல லேசான புடவைகளுக்கு காட்டன் பாவாடைகள் கச்சிதமாக இருக்கும். அதிக விலை கொடுத்து வாங்கி அணியும் புடவைக்கு ஏற்ப உள்ளாடையும் தரமானதாக இருக்க வேண்டும்.

    புடவைக்கு கட்டாயம் பால்ஸ் தைக்கவேண்டும். அப்போதுதான் பார்டர் மடங்கும் பிரச்சினை இருக்காது. எப்போதும் புடவையின் நிறம் மற்றும் மெட்டீரியலுக்குப் பொருத்தமான உள்பாவாடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். புடவையை கணுக்கால் வரை கட்டாமல், இரண்டு பாதங்களின் சுண்டு விரல்களும் மறையும்படியாகக் கட்ட வேண்டும். ஹீல்ஸ் அணியும் பெண்கள், புடவை கட்டிவிட்டு ஹீல்ஸ் அணியும்போது உயரம் போதாமல் போய்விடும் என்பதால், ஹீல்ஸ் அணிந்தபடியே புடவை கட்டி உயரத்தைச் சரிசெய்துகொள்ளலாம்.

    பிலீட்ஸை பிளவுஸுடன் 'பின்' செய்யும்போது, கழுத்தில் நெருடலாக இருப்பதுபோல தோன்றினால், பிலீட்ஸை அடுக்கிய பின், முதல் மடிப்பை மட்டும் சற்றே தளர்த்தி, சற்று கீழே இறக்கி 'பின்' செய்யலாம். டிரான்ஸ்பரன்ட் மற்றும் நெட்டட் புடவை கட்டும்போது, பிலீட்ஸை இடுப்புப் பகுதியில் பிளவுஸோடு 'பின்' செய்ய வேண்டும். பிலீட்ஸ் ஒன்றை ஒன்று ஓவர்லாப் செய்யாமல் இருக்க, 2, 3-வது பிலீட்ஸை பிளவுஸோடு உள்பக்கமாக பின் செய்ய வேண்டும். இதனால், அடிக்கடி பிலீட்ஸை அட்ஜஸ்ட் செய்யத் தேவை இருக்காது.

    * புடவை கலாசாரம் தமிழ்நாட்டில் எப்படி நவீனமாகி இருக்கிறது?

    உறவினர்களை கொண்டு புடவை கட்டிய காலம் மலையேறி, இன்று புடவை கட்டிவிட 'சாரி டிரேப்பிங்' எக்ஸ்பெர்ட்களை அழைக்கும் அளவிற்கு முன்னேறிவிட்டது. மேலும் சமூக வலைத்தளங்களும், பெண்களின் புடவை மோகத்தை சூடேற்றிவிட்டுள்ளன. மேக்கப், புடவை அலங்காரம் சம்பந்தமான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் குவிந்துகிடப்பதால், அழகு கலையில் புதுமைகளை எதிர்பார்க்கிறார்கள்.

    * சிறப்பாக புடவை கட்ட தெரிந்தவர்கள், 'சாரி டிரேப்பிங்' எக்ஸ்பெர்ட்டாக ஆகமுடியுமா?

    நிச்சயமாக. இதற்கு எந்தவிதமான தியரி படிப்புகளும் அவசியம் இல்லை. அனுபவமும், பயிற்சியும்தான் அவசியம். அது பெண்களுக்கு இயற்கையாக இருந்தால், சிறப்பாக இருக்கும். கொஞ்சம் தடுமாறுபவர்கள், 'சாரி டிரேப்பிங்' பயிற்சி பெற்று, புடவை கட்டிவிடும் வேலை செய்யலாம். சொன்னால் நம்பமாட்டீர்கள்...! இன்று நிறைய கல்லூரி பெண்களும், குடும்ப தலைவிகளும் பகுதி நேரமாக சாரி டிரேப்பிங் வேலை செய்கிறார்கள். ஏன்..? ஆண்களும், சாரி டிரேப்பிங் பயிற்சி களை முடித்துவிட்டு, நிறைய பெண்களுக்கு புடவை கட்டிவிடுகிறார்கள்.

    2 நிமிடத்திலேயே பட்டுப்புடவை கட்டிவிடலாமா?

    ஆம்...! இப்போது எல்லாமே நவீனம்தான். 'பாக்ஸ் போல்டிங்' முறையில் ரெடிமேட் உடைகளை போல புடவை தயாராகிவிடும். முந்தானை எடுப்பதில் தொடங்கி எல்லா வேலைகளும் முன்கூட்டியே முடிக்கப்பட்டு, அயன் செய்து தயாராக வைத்துவிடுவார்கள். அதை ரெடிமேட் உடைபோல அப்படியே எடுத்து உடுத்தவேண்டியதுதான்.

    • கல்யாண சீசன் முழு வீச்சில் தொடங்கி விட்டது.
    • பாரம்பரிய தொழில்நுட்பங்களுடன் மறுமலர்ச்சி எனும் பெயரில் பட்டுப்புடவைகள் தயாரிக்கப்படுகிறது.

    கல்யாண சீசன் முழு வீச்சில் தொடங்கி விட்டது. தற்போது ஆரெம்கேவி இயற்கை வண்ண சாயங்களை கொண்டு, கைவினை நெசவாளர்களால், கோர்வை மற்றும் பெட்னி போன்ற பாரம்பரிய தொழில்நுட்பங்களுடன் மறுமலர்ச்சி எனும் பெயரில் பட்டுப்புடவைகளை தயாரித்து வழங்குகின்றனர். நம்முடைய பாரம்பரியத்தை எடுத்துக் கூறும் வண்ணம் நம்முடைய கட்டிடக்கலை அதிசயங்கள் கோவில் சுவர்கள் இயற்கை மற்றும் அக்கால அரச தோற்றங்கள் போன்றவை இந்த மறுமலர்ச்சி புடவையில் காண முடியும். இத்தகைய அற்புத புடவைகளின் தொகுப்பை வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என ஆரெம்கேவி இயக்குனர் சங்கர் குமாரசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

    நம் கலை வடிவங்கள் இயற்கை அழகு போன்றவற்றை இயற்கை வண்ணத்தில் கைவினைகளின் புத்துருவாக்க சிந்தனையுடன் இந்த மறுமலர்ச்சி புடவைகள் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அவைகள் முறையே:-

    கோடாலி கருப்பூர் புடவை

    18-ம் நூற்றாண்டில் தஞ்சை அரச பரம்பைர மட்டுமே பயன்படுத்திய டிசைன்கள், மல்பரி இலைகளிலிருந்து எடுக்கப்பட்ட பச்சை வண்ணம் ஏற்றப்பட்ட அற்புதமான புடவை இயற்கையின் "மறுமலர்ச்சி" படைப்பு.

    பைத்தானி முந்தானையுடன் டிஷ்யூ மீனாக்காரி புடவை

    18ம் நூற்றாண்டில் மராத்திய அரச பரம்பரை பெண்கள் விழாக்காலத்தில் அணிந்த, பைத்தானி முறையில் நெய்யப்பட்ட முந்தானையும், மீனாக்காரி வேலைப்பாடமைந்த டிஷ்யூ புடவை.

    உப்படா கிளி சித்திர புடவை

    மரப்பிசினிலிருந்து எடுக்கப்பட்ட கருஞ்சிவப்பு இயற்கை வண்ணத்தில் பாரம்பரியமிக்க கிளி வடிவங்களோடு உப்படா நெசவு றையில் நெய்யப்பட்டது.

    இயற்கை வண்ண 2000 புட்டா புடவை

    தஞ்சாவூர் சரஸ்வதி மஹாலின் வரலாற்று அடையாளங்களிலிருந்து மீட்டுருவாக்கம் செய்து 2000 பூக்கள் மிளிரும் காட்சியை இண்டிகோ இயற்கை வண்ணமேற்றி நெய்யப்பட்ட காஞ்சிபுரம் பட்டுப்புடவை.

    உடல்பேட்டு பேல்தார் புடவை

    செவ்வல்லி கொடியும் மரப்பிசினும் கலந்த செங்காவி வண்ணத்தில் தூய ஜரிகையும் பச்சை வண்ணமும் கொண்ட கிரிம்சன் கோடுகளோடு அழகில் மிளிரும் அற்புத புடவை.

    பவுன் புட்டா புடவை

    பைத்தானி முறையில் நெய்யப்பட்ட முந்தானையில் மீனாக்காரி வேலைப்பாடமைந்த மெல்லிய கருஞ்சிவப்பு இயற்கை வண்ணம் உடலெங்கும் தூய ஜரிகை புட்டாக்கள் கொண்ட புடவை. 18ம் நூற்றாண்டில் மராத்திய அரச பெண்கள் மட்டுமே பயன்படுத்திய இந்தப் புடவை மறுஉருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

    கந்தபெருண்டா புடவை

    மைசூர் அரண்மனையால் ஈர்க்கப்பட்ட கருஞ்சிவப்பு கந்தபெருண்டா புடவை, சிக்கலான தங்க ஜரி வேலைப்பாடுகளுடன் கர்நாடகாவின் மாநில அடையாளத்தை பிரதிபலிக்கிறது மற்றும் இயற்கையாகவே லாக்சாயம் பூசப்பட்டது.

    கமலம் புடவை

    கமலம் பட்டுப் புடவை இயற்கையாகவே சப்பான் மரத்தால் சாயமிடப்பட்டு, தாஜ்மஹாலில் இருந்து உத்வேகம் பெறுகிறது, பீச் மற்றும் கோல்டன் ஜாரி வடிவங்கள் மற்றும் நேர்த்தியான பார்டர் வடிவமைப்பு ஆகியவற்றுடன் தலைசிறந்த நெசவாளர்களால் நெய்யப்பட்டது.

    • படுகாயமடைந்தவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த மாரியம்மன்கோயில் அன்னை முத்தம்மாள் நகரை சேர்ந்தவர் செண்பகராஜா. இவரது மனைவி மகேஸ்வரி (வயது 30). சம்பவத்தன்று இவர் வீட்டில் மண்எண்ணெய் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது சேலையில் எதிர்பாராதவிதமாக தீப்பற்றியது.

    இதில் பலத்த தீக்காயமடைந்த மகேஸ்வரியை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மகேஸ்வரி இறந்தார்.

    இது குறித்து தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி நடந்தது
    • மாவட்ட செயலாளர் அமுதன் வழங்கினார்

    நாகர்கோவில் :

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி ராஜாக்கமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் தங்க கிருஷ்ணன் தலைமையில் அன்னதானமும், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் மைக்கேல் ரத்தினம் தலைமையில் அழகப்பபுரம் மெயின் பஸ் நிறுத்தத்தில் வைத்து ஏழை, எளியவர்களுக்கு சேலை மற்றும் வேஷ்டிகளை மாவட்ட செயலாளர் அமுதன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் முத்துக்குமார், மாவட்ட துணை செயலாளர் செல்வகுமார் மற்றும் தலைமை பொதுக்குழு உறுப்பினர் பாபு, வின்சென்ட் கிங், ஒன்றிய செயலாளர் பரமராஜா, மாவட்ட அணி நிர்வாகி மகேஷ் மற்றும் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் லாசர், பேரூர் செயலாளர்கள் லிங்கம் மற்றும் பரமாத்மா ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • தீபம் ஏற்றும் பெண்கள் உடுத்தும் சேலைகளைப் பற்றியும் பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
    • மஞ்சள் நிற சேலை அணிந்து தீபமிடுவோர் அம்மன் அருளைப் பரிபூரணமாகப் பெற்றிடுவர்.

    தீபம் ஏற்றும் பெண்கள் உடுத்தும் சேலைகளைப் பற்றியும் பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    மஞ்சள் நிற சேலை அணிந்து தீபமிடுவோர் அம்மன் அருளைப் பரிபூரணமாகப் பெற்றிடுவர்.

    நீல நிற சேலை அணிந்தும் தீபமிடலாம்.

    அம்மனுக்கு உகந்த தினங்களான செவ்வாய், ஞாயிறு ஆகிய கிழமைகளில் மட்டும் நீலநிறச் சேலைகளை அணியக் கூடாது.

    மற்ற நாட்களில் நீலநிற சேலை அணிந்தால் நோய்கள் குணமாகும்.

    பேய், பிசாசுத் தொல்லைகள் நீங்கும்.

    சிவப்புச் சேலையை சனிக்கிழமை தவிர மற்ற அனைத்துக் கிழமைகளிலும் அணியலாம்.

    சிவப்பு சேலை அணிவதால் திருமணத் தடை நீங்கி இல்லறச் சுகம் கிட்டும். மலட்டுத் தன்மை அடியோடு ஒழியும்.

    பிசாசு தொல்லைகள் விலகும். செய்வினை அழியும்.

    வெள்ளை சேலையை சுமங்கலிப் பெண்கள் தவிர மற்றவர்கள் அணியலாம்.

    வெள்ளை சேலை புதியதாகவும், சுத்தமானதாகவும் இருத்தல் வேண்டும்.

    வெள்ளை சேலை அணிந்தால் உத்தமமான பலன்கள் வாழ்வில் உண்டாகும்.

    திருவிளக்கும், தீபமும் அன்னையின் அம்சங்கள் என்றாலும் அனைத்தும் தெய்வங்களையும்

    திருவிளக்கிட்டு தீபமேற்றியே நாம் காலம் காலமாய் வழிபட்டு வருகின்றோம்.

    அவ்வாறு வழிபடுகையில் இன்னென்ன தெய்வங்களுக்கு இன்னென்ன தீபங்கள்

    ஏற்ற வேண்டும் என்று நமது பெரியோர்கள் கூறியுள்ளனர்.

    தேவி கருமாரியை நெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணை, வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய் என ஐந்து எண்ணெய் கலந்து தீபமேற்றி வழிபட வேண்டும்.

    • நியாயமான முறையில் தரமான சேலை நெய்யும் பல லட்சம் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
    • ஆன்லைன் மூலம் நடக்கும் விற்பனைகளுக்கு வரைமுறை ஏற்படுத்திடவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சேலம் மாவட்டம், இடங்கண சாலை, தாரமங்கலம், மகுடஞ்சாவடி, நகரம். ஒன்றியம் சுற்றுவட்டார பகுதிகளில் விசைத்தறி தொழிலாளர்கள் பல லட்சம் பேர் வேலை செய்து வாழ்ந்து வருகின்றனர். தரமற்ற சூரத் சேலைகள் விற்பனையினாலும், வெளி மாநிலங்களில் இருந்து கள்ளச் சந்தை மூலம் சேலைகள் விற்பனைக்கு வந்ததாலும், எந்த ஒழுங்குமுறையும் இல்லாமல் ஆன்லைனில் சேலை விற்பனை செய்வதாலும், நியாயமான முறையில் தரமான சேலை நெய்யும் பல லட்சம் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. தமிழக அரசு இதனை கவனத்தில் கொண்டு தரமற்ற சூரத் சேலைகள் விற்பனையாவதை தடுத்து, கள்ள சந்தைகள் மூலம் விற்பனை செய்வதை தடுத்திடவும், ஆன்லைன் மூலம் நடக்கும் விற்பனைகளுக்கு வரைமுறை ஏற்படுத்திடவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் இப்பகுதியில் சேலை நெசவு விசைத்தறி தொழிலாளர்களுக்கு விரைவாக சங்கம் அமைத்துக் கொடுத்து. சங்கங்கள் மூலம் சேலைகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்து, தரமான சேலைகளை வாங்குவதற்கு பொது மக்களிடையே விழிப்புணர்வு செய்து, லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட விசைத்தறி தொழிலாளர்களுக்கு தே.மு.தி.க.வின் சார்பாக ஆதரவு குரல் என்றைக்கும் இருக்கும். அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வண்ணம் உடனடியாக அரசு கவனம் செலுத்தி அவர்களுடைய உழைப்பில் உருவாகும் அந்த சேலை, வேட்டி போன்ற துணிகளுக்கு உரிய விலை கிடைக்க தமிழக அரசு துணை நிற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • புதிதாக சேலை வாங்கி தரச்சொல்லி கணவனிடம் மனைவி கேட்டுள்ளார்.
    • கணவன் மற்றும் மனைவிக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது.

    உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு சேலை வாங்கி தராத கணவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    2022 ஆம் ஆண்டு முதல் திருமணமான இந்த ஜோடி, சிறு சிறு விஷயங்களுக்கு அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். புதிதாக சேலை வாங்கி தரச்சொல்லி கணவனிடம் மனைவி வற்புறுத்தியுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து, கணவர் தனக்கு சேலை வாங்கிதரவில்லை என்றும், என்னை உடல் ரீதியாகவும் தாக்கியதாகவும் காவல் நிலையத்தில் அவரது மனைவி புகார் அளித்துள்ளார்.

    இதனையடுத்து, கணவன் மற்றும் மனைவிக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது. அதில் மனைவிக்கு புடவை வாங்கி கொடுக்க வேண்டும் என்று கணவனுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.

    பின்னர் கணவன் புடவை வாங்கி கொடுத்த பின்னர் மனைவி சமாதானம் ஆனதால் பிரச்சனை முடிவுக்கு வந்தது.

    • மின்மினி செயலியும், போத்தீஸ் நிறுவனமும் இணைந்து சேலைகள் தின கொண்டாட்டத்தை நடத்தியது.
    • 'சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு...' என்று எல்லோரது கண்களும் அவர்களை நோக்கித்தான் திரும்பும்.

    சென்னை:

    மின்மினி செயலியும், போத்தீஸ் நிறுவனமும் இணைந்து சேலைகள் தின கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன.

    மேகம் சூடி இருள் கவிழ்ந்த நேரத்தில் ஒன்றிரண்டு மின்மினி பூச்சிகள் வட்டமிட்டு கண் சிமிட்டினாலே பார்க்க பரவசமாக இருக்கும்.

    நூற்றுக்கணக்கான மின் மினி பூச்சிகள் ஒரே நேரத்தில் பரவசப்படுத்தினால் எப்படி இருக்கும்?

    அப்படி ஒரு ரம்மியமான சூழலில் நூற்றுக்கணக்கான இளம் பெண்கள் சேலை கட்டி மின்மினி பூச்சிகள் போல் ஒரே இடத்தில் வட்டமிட்டால் மனதுக்கு எப்படி இருக்கும்? பார்த்தவர்கள் இதயமெல்லாம் பட்டாம் பூச்சிகள், மின்மினி பூச்சிகள் தான் நினைவுக்கு வந்திருக்கும்.

    மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரி வழக்கமாக மேற்கத்திய உடைகளிலும், சுடிதார், ஜீன்ஸ் போன்ற நாகரீக உடைகளில் மட்டுமே மாணவிகளை பார்த்து ரசித்த கல்லூரி, இன்று காலை சேலைகளில் கண்டு மகிழ்ந்து ஆச்சரியப்பட்டது.

    மின்மினி செயலியும், போத்தீஸ் நிறுவனமும் இணைந்து சேலைகள் தின கொண்டாட்டத்தை நடத்தியது. இதையொட்டி கல்லூரி மாணவிகள் மட்டும் பங்கு பெற்ற பல்வேறு விதமான போட்டிகள் சென்னையில் உள்ள 20 கல்லூரிகளில் நடத்தப்பட்டது. இதில் ஒவ்வொரு கல்லூரியில் இருந்தும் தலா 50 பேர் வீதம் 1000 பேர் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டார்கள். அந்த இறுதிப் போட்டிதான் இன்று ஏ.எம். ஜெயின் கல்லூரியில் நடைபெற்றது.

    சேலை கட்டி கல்லூரி வளாகத்துக்குள் வந்து குவிந்த மாணவிகள் கூட்டத்தை பார்த்து கல்லூரிக்கு வந்திருந்த மாணவிகளும், நாமும் சேலை கட்டி வந்திருக்கலாமோ, அவர்களெல்லாம் எவ்வளவு அழகாக இருக்கிறார்கள் என்று பார்த்து பொறாமைப்பட்டார்கள்.

    இதுவரை மேற்கத்திய உடைகள் மட்டுமே அணிந்து பழக்கப்பட்டவர்கள், சேலை கட்டினால் நடப்பது கூட சிரமம் என்று நினைத்தவர்கள் இன்று சேலையிலும் அசத்தினார்கள்.

    8 முழம் சேலையை எடுத்து முன்பக்கமாக ஒரு முகப்பை சொருகிவிட்டு உடலை ஒரு சுற்று சுற்றுவார்கள். அதன் பிறகு 5 முதல் 6 மடிப்புகள் வரை ஒரே அளவில் மடித்து சொருகிய பிறகு, முந்தானையை தோள் மீது போட்டு ஒரு முந்தியை வலப்பக்கமாக எடுத்து கொசுவத்தை இடுப்பில் சொருகுவார்கள். பின்னர் மடிப்பை ஒழுங்காக எடுத்து நேர்த்தியாக்கி சேலை கட்டி வரும் அழகே தனி அழகாக இருக்கும்.

    விதவிதமான உடைகளில் எத்தனை பெண்கள் சென்றாலும், அவர்களுக்கு இடையே இவ்வாறு சேலை கட்டி, தலையில் பூச்சூடி வலம் வரும் பெண்களை பார்த்தால் 'சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு...' என்று எல்லோரது கண்களும் அவர்களை நோக்கித்தான் திரும்பும்.

    அதே போலத்தான் இன்றைய ஏ.எம்.ஜெயின் கல்லூரி காட்சியும் அமைந்திருந்தது. மேகம் சூழ்ந்து இருண்ட மாலைப் பொழுதைப் போல் காலை நேரம் காட்சியளித்தது. அப்போது போட்டியில் கலந்து கொண்ட அத்தனை மாணவிகளும் முதல் நிகழ்ச்சியாக நடந்து வரும் 'வாக்கத்தான்' நிகழ்ச்சியை நடத்திக் காட்டினார்கள்.

    நடிகை சனம் ஷெட்டி மற்றும் கல்லூரி டீன் ரம்யா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். கொடியிடை அசைய மாணவிகள் தழைய தழைய சேலை கட்டி நடந்த காட்சி பார்வையாளர்களை கண் சிமிட்டாமல் பார்க்க வைத்தது. அந்த நிகழ்ச்சி நிறைவடைந்ததும் மொத்த மாணவியர் கூட்டமும் போட்ட துள்ளல் நடனம் கல்லூரி வளாகத்தையே களை கட்ட வைத்தது.

    அதன் பிறகு கலையரங்கத்துக்குள் போட்டிகள் தொடங்கியது. முதல் போட்டியாக நடனப் போட்டி நடந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட குழுக்கள் கலந்து கொண்டனர். முதலில் ஆடிய மாணவிகள் "ஜெமினி ஜெமினி ஜெமினி... கவனி கவனி கவனி... ஓ போடு" என்ற பாடலுக்கு போட்ட ஆட்டம் கூட்டத்தில் இருக்கும் அனைவரையும் கவனிக்க வைத்தது.

    நடுவராக இருந்த நடிகை சுஜா வருணியே வியந்து போனார். சேலை கட்டிக் கொண்டு இவ்வளவு அழகாக ஆடுவது சாதாரண மானதல்ல என்று பாராட்டினார். ஆர்.ஜே.ஆனந்தியும் இந்த போட்டிக்கு நடுவராக இருந்தார்.

    அதைத் தொடர்ந்து "பஞ்சு மிட்டாய் சேல கட்டி... பட்டு வண்ண ரவிக்கை போட்டு... கஞ்சி கொண்டு போறவளே" என்ற பாடலுக்கும் அவர்கள் போட்ட ஆட்டம் நிஜத்திலும் சேலை கட்டி ரவிக்கை அணிந்து ஆடியது ஆச்சரிய மூட்டியது.

    நடனத்தை தொடர்ந்து ஆடை - அலங்கார போட்டி நடந்தது. சேலையில் கைவண்ணம் காட்டியது நெசவாளர்கள். அந்த சேலையிலேயே தங்கள் கை வண்ணத்தை காட்டினார்கள் மாணவிகள்.

    அதாவது சாதாரணமாக சேலை கட்டுவதில் இருந்து வித்தியாசமான முறையில் சேலைகளை கட்டி இப்படியும் அசத்த முடியும் என்று அசத்தி காட்டினார்கள். அதைத் தொடர்ந்து குழு விவாதப் போட்டி அட்டகாசமாக அரங்கேறியது.

    'சேலை கட்டியதும் செம அழகாக மகாலட்சுமியாட்டம் தெரிவது எந்த தலைமுறை பெண்கள்? 2000-க்கு பிறகு பிறந்தவர்களா, 1980-90களில் பிறந்தவர்களா? என்ற தலைப்பில் சுமார் 30 மாணவிகள் பங்கேற்று விவாதம் செய்தார்கள். இதற்கு நடுவராக சுமையாநாஸ் இருந்தார்.

    இந்த நிகழ்ச்சிகளில் மின்மினி விற்பனைப் பிரிவு தலைமை அதிகாரி வெங்கட் சுந்தர்நாத், டி.ஜே.தீபிகா ஆகியோர் பங்கேற்றனர். ராஸ்மட்டாஸ் நிறுவனர் ஜோமைக்கேல் பிரவீன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

    நேரம் போவதே தெரியாமல் தொடர்ந்து போட்டிகள் களை கட்டிக் கொண்டிருந்தது. அரங்கத்தில் திரண்டிருந்த மாணவிகளும் உற்சாக குரலில் அரங்கத்தையே அதிர வைத்துக் கொண்டிருந்தார்கள். அவ்வப்போது தங்கள் செல்போன்களை ஒளிர விட்டு ஆரவாரம் செய்தார்கள்.

    'நீ கட்டும் சேல மடிப்புல நா கசங்கி போனேன்டி... என் எலுமிச்சம் பழ நிற இடுப்புல கிறங்கி போனேன்டி' என்ற புதிய மன்னர்கள் பாடலுக்கு ஏற்ப சேலையில் புதிய மாணவிகளாக தெரிந்தவர்களை பார்த்து கிறங்கித்தான் போனார்கள்.

    • பட்ஜெட்டில் பீகாருக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.
    • நிர்மலா சீதாராமன் பீகாரை சேர்ந்த மதுபானி வகை சேலையை அணிந்து வந்திருந்தார்.

    2025-26-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 8வது முறையாக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

    பீகாரில் இந்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநிலத்திற்கு பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து, இது மத்திய அரசின் பட்ஜெட்டா? இல்லை பீகார் பட்ஜெட்டா? என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

    இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பீகாரை சேர்ந்த மதுபானி வகை சேலையை அணிந்து வந்திருந்தார்.

    இதனையடுத்து, பீகார் மாநில பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக தான் பீகார் மாநில சேலையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அணிந்து வந்துள்ளாரோ என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

    • சேலை நெசவு செய்து தர தமிழக அரசின் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மூலம் ஆர்டர் வழங்கப்படுவது வழக்கம்.
    • தீபாவளி சேலை ஆர்டர் ரூ.1 கோடிக்கு கடந்த மாதம் ஆர்டர் வழங்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு வருடம் தோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலை நெசவு செய்து தர தமிழக அரசின் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மூலம் ஆர்டர் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தாமதமாக தீபாவளி சேலை ஆர்டர் வழங்கப்பட்டதால் அதனை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க முடியாமல் கைத்தறி நெசவாளர்கள் திணறி வருகின்றனர்.

    இது குறித்து அந்த சங்கத்தின் தலைவர் சொக்கப்பன் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருடம் தோறும் கணபதிபாளையம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்திற்கு சேலை நெசவு செய்து தர கோ -ஆப்டெக்ஸ் நிறுவனம் தீபாவளி பண்டிகைக்கு 3 மாதங்களுக்கு முன்பே ரூ. 4 கோடி வரை ஆர்டர் கொடுக்கும். இதனால் நாங்களும் தீபாவளிக்கு முன்பே சேலை நெசவு செய்து வழங்கிவிடுவோம். ஆனால் இந்த வருடம் தீபாவளி சேலை ஆர்டர் ரூ.1 கோடிக்கு கடந்த மாதம் ஆர்டர் வழங்கப்பட்டது. ஆர்டர் குறைவால் இந்த சங்கத்தை சேர்ந்த 450 கைத்தறி நெசவாளர்களுக்கு வருமான இழப்பு ஒரு புறம் இருந்தாலும் காலதாமதமாக கொடுத்த ஆர்டரை தீபாவளிக்குள் முடித்து தரமுடியாமல் கைத்தறி நெசவாளர்கள் திணறி வருகின்றனர்.

    ஒரு கைத்தறியில் ஒரு சேலை நெசவு செய்திட 3 முதல் 4 நாட்கள் ஆகும். இனி வரும் காலங்களில் பண்டிகை கால ஆர்டர்களை முன்கூட்டியை வழங்க வேண்டும். மேலும் கணபதிபாளையம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் அதிகபடியான கைத்தறி நெசவாளர்கள் உறுப்பினர்களாக இருப்பதால் இந்த சங்கத்திற்கு அரசு அதிக சேலை ஆர்டர் வழங்க வேண்டும் .இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இந்தப் புடவைகளில் இருக்கும் டிசைன்களும் வகைகளும் ஏராளம் என்று சொல்லலாம்.
    • மகாராஷ்டிர மணப்பெண்களின் பாரம்பரிய புடவை என்று இந்த நவாரி புடவைகளைக் கூறலாம்.

    தமிழ்நாட்டில் இருக்கும் ஒன்பது கெஜப் புடவைகளை ஒத்து இருக்கும் புடவைகளை மகாராஷ்டிர மாநிலத்தில் நவாரி புடவைகள் என்று அழைக்கிறார்கள். இந்த ஒன்பது கெஜ புடவைகளை ஒவ்வொரு மராட்டியப் பெண்களும் விழாக்காலங்களில் தவறாமல் அணிந்து விழாக்களை கொண்டாடுகிறார்கள். அதிலும் குறிப்பாக விநாயகர் சதுர்த்தி, மராட்டிய புதுவருடப்பிறப்பு போன்ற விழாக்களில் மராட்டியப் பெண்கள் இந்த நவாரி புடவைகளை அணிந்து தங்க நகைகளால் தங்களை அலங்காரம் செய்து கொண்டு அவர்களது பாரம்பரிய நடனத்தை ஆடுவதைப் பார்க்க முடியும்.

    நவாரி புடவைகளின் தோற்றம்

    ஒன்பது கெஜப் புடவைகளான இந்த நவாரி புடவைகள் ஒரு வரலாற்றுச் சூழலைக் கொண்டவையாகும். மராட்டி ஆட்சிக்காலத்தின் போது, சக ஆண் வீரர்களுக்கு உதவி செய்வதற்காக பெண்களை பணியமர்த்தியதாகக் கூறப்படுகிறது.அவர்களுக்கு உதவும் பொழுது வசதியாக இருப்பதற்காக ஆண் கால்சட்டையை ஒத்த நவாரிபுடவைகளை மகாராஷ்டிரப் பெண்கள் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அப்பொழுதிலிருந்தே இந்தப் புடவைகள் மகாராஷ்டிரப் பெண்களின் பாரம்பரிய உடையாக மாறிவிட்டது. இந்தப் புடவைகளை அணியும்போது மராட்டியப் பெண்கள் ஆண்களுக்கு சமமான அந்தஸ்தைப் பெறுவதாக நினைக்கிறார்கள்.

    கலாச்சார முக்கியத்துவம்

    மகாராஷ்டிர மணப்பெண்கள் தங்கள் திருமண விழாக்களில் தவறாமல் அணியும் ஒரு பாரம்பரிய புடவை என்று இந்த நவாரி புடவைகளைக் கூறலாம்.பொதுவாக ஒரு பாரம்பரிய பாணியை கொண்டிருக்கும் இந்தப் புடவைகளை மணப்பெண்கள் அணியும் பொழுது மிகவும் அழகாகவும், மென்மையாகவும் காட்சியளிக்கிறார்கள். குறிப்பாக மகாராஷ்டிராவின் பல மாநிலங்களிலும் விநாயகர் சதுர்த்தி மற்றும் "குடி பாட்வா" போன்ற முக்கிய பண்டிகை நாட்களில் நவாரி புடவைகளை அணியாத பெண்களை நாம் காண்பது அரிது.

    நவாரி புடவையை உடுத்தும் முறை

    நாம் சாதாரணமாக புடவைகளை அணிந்து கொள்வதற்கு உள்பாவாடையை பயன்படுத்துவோம்.. ஆனால், இந்த நவாரி புடவைகளை அணிந்து கொள்வதற்கு உள்பாவாடையோ அல்லது ஷிம்மியோ அவசியமில்லை.இந்தப் புடவைகள் பெரும்பாலும் பருத்தியில் தயாரிக்கப்படுவதால் இந்தப் புடவைகளை முதல் முறையாக அணிந்தாலும் அவற்றை அணிந்து கொண்டு செல்வது சிரமமாக இருக்காது.

    # ஒரு ஜோடி இறுக்கமான ஸ்லாக்குகளை அணிந்து,மடிப்புகளைப் பாதுகாக்க, தொப்புளுக்குக் கீழே ஒரு மைய முடிச்சைக் கட்டி, உங்கள் இடதுபுறத்தில் ஒரு மீட்டர் நீளத்திற்கு புடவையை விட்டுவிட வேண்டும்.

    * இடது தோளில் உள்ள சேலையின் பல்லுவை எடுத்து, அதை போர்த்தி, உங்கள் தோள்பட்டையின் வலது முனைக்கு கொண்டு வரவேண்டும்.

    * இப்போது, சேலையின் மீதமுள்ள பகுதியுடன், 4-5 அங்குல மடிப்புகளை உருவாக்கத் தொடங்கவும்.

    * மடிப்புகளை மீண்டும் மடித்து, அவற்றை நேர்த்தியாக இழுத்து, நடுப்பகுதியை உள்ளிழுக்கவும்.

    * மீதமுள்ள மடித்த புடவையைக் கொண்டு வந்து, அதை உங்கள் இடுப்பின் வலது பக்கம் சுற்றிக்கொண்டு உங்கள் முன் பக்கம் கொண்டு வர வேண்டும்.கால்களுக்கு அருகில் இருக்கும் புடவையின் பகுதியை ஒரு அடுக்கில் மடித்து, முன்பக்கத்தில் இருந்து ஒரு டோத்தி பேண்ட் போல் தோன்றும் வகையில் உங்கள் இடுப்பில் செருக வேண்டும்.

    பல்வேறு வடிவமைப்புகள்

    இந்தப் புடவைகளில் இருக்கும் டிசைன்களும் வகைகளும் ஏராளம் என்று சொல்லலாம்.ஆரம்ப காலங்களில் பருத்தியில் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்த இவ்வகை புடவைகள் இப்பொழுது பட்டு மற்றும் சாட்டின் உட்பட மற்ற துணி வகைகளிலும் தயாரிக்கப்படுகின்றன.இந்தப் பாரம்பரிய புடவைகளில் கவர்ச்சிகரமான மலர்கள், உருவங்கள் மற்றும் வடிவங்களை பிரிண்ட் செய்து மிகவும் அழகாக வடிவமைக்கிறார்கள்.அரைக்கை பிளவுஸ் உடன் இந்த புடவைகளை அணிவதைக் காட்டிலும், முக்கால் கை மற்றும் ஸ்லீவ்லெஸ் போன்ற பிளவுஸ் டிசைன்களுடனும் இந்தப் புடவைகளை அணியும்போது அவை மிகவும் பிரமாதமான தோற்றத்தை உருவாக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

    பட்டு நவாரி புடவைகளின் பிரபலத்திற்கு அதன் அடர்த்தியான வடிவ பார்டர்களும் ஒரு காரணமாகும்.இந்த பார்டர்கள் பெரும்பாலும் வெள்ளி அல்லது தங்க நூலினால் எம்பிராய்டரி செய்யப்படுகின்றது.அப்படியே தைய்க்கப்பட்டு ஆயத்தமாக வரும் நவாரி புடவைகளை வாங்கி அணிந்து கொள்வதை இப்பொழுது பெண்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.இந்த புடவைகளை அணிந்து கொள்வதும் எளிது.

    சுவையான தகவல்கள்

    * மராட்டியப் பெண்களின் மிகவும் பிரபலமான ஆடைகளில் ஒன்றாக நவாரி புடவை கருதப்படுகிறது.

    * பண்டிகைகளின் போது பெண்கள் இந்தப் புடவைகளை அணிந்து வருவதைப் பார்க்கும் பொழுது அது மாநிலத்தின் பழமையான பாரம்பரியத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது.

    * சிவப்பு, நீலம் , பச்சை, மஞ்சள், ஆரஞ்சு போன்ற அடர்த்தியான வண்ணங்களில் பார்டர்கள் வைத்து வரும் இந்தப் புடவைகள் மிகவும் கவர்ச்சிகரமான தோற்றத்தைத் தருவதாக இருக்கும் . இந்தப் புடவைகளை உடுத்தும் பொழுது மூக்கு புள்ளக்கு,ஒட்டியாணம்,காதணிகள், கருகமணி மாலை, சோக்கர்,நெற்றிச்சுட்டி, ஹாரம் மற்றும் கைகளில் கண்ணாடி வளையல் களுடன் கூடிய பிற வளையல்கள் போன்ற நகைகளை தவறாமல் அணிகிறார்கள்.

    * மராட்டிய மணப்பெண்கள் தங்களது திருமணத்திற்கு பைத்தானி பட்டினால் தயாரிக்கப்பட்ட நவாரி புடவைகளை தேர்ந்தெடுக்கிறார்கள்.மிகவும் மென்மையாக தங்க நிறத்தில் கிடைக்கும் இந்தப் புடவைகள் மராட்டிய மணமகளின் சரியான தேர்வாக இருக்கும்.

    ×