search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுலா பயணி"

    • சுற்றுலா பயணி ஒருவரை அந்த பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய் விரட்டி விரட்டி கடித்து குதறியது.
    • நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை கடற்கரையில் சுற்றுலா பயணியை நாய் துரத்தி துரத்தி கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புதுவை கடற்கரையில் 50-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் உலா வருகிறது. இந்த நாய்கள் கடற்கரை சாலையில் நடைபயிற்சி செல்லும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளை துரத்திச்சென்று மிரட்டுவது வழக்கமாகி வருகிறது.

    கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணி ஒருவரை அந்த பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய் விரட்டி விரட்டி கடித்து குதறியது.

    அருகில் இருந்த பொதுமக்கள் நாயை விரட்டிவிட்டு காயம்பட்ட சுற்றுலா பயணியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடற்கரையில் திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • லண்டனின் வெஸ்ட் மின்ஸ்டர் பகுதியில் குதிரை படை காவலர்களின் அணிவகுப்பு நடந்துள்ளது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும், சில படங்களை மரியாதையுடன் எடுங்கள் என பதிவிட்டனர்.

    இங்கிலாந்தில் வரலாற்று சிறப்புமிக்க பக்கிங்ஹாம் அரண்மனை மற்றும் செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையை காண நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அரண்மனையை சுற்றி உள்ள பகுதிகள் முன்பு நின்று அவர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்கிறார்கள்.

    இதையொட்டி அரண்மனை முன்பு ஏராளமான போலீசார் காவல் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் லண்டனின் வெஸ்ட் மின்ஸ்டர் பகுதியில் குதிரை படை காவலர்களின் அணிவகுப்பு நடந்துள்ளது. அப்போது அங்கு சென்றிருந்த பெண் சுற்றுலா பயணி ஒருவர் குதிரை முன்பு நின்று புகைப்படம் எடுத்துள்ளார். அப்போது அந்த சுற்றுலா பயணி புகைப்படம் எடுப்பதற்காக குதிரையை தொட்டுள்ளார். இதனால் ஆவேசம் அடைந்த அந்த குதிரை கிளர்ந்தெழுந்து அந்த பெண்ணை தாக்கி உள்ளது.

    இதனால் அந்தப்பெண் தடுமாறி கீழே விழுந்தார். அவருக்கு அங்கிருந்த சிலர் உதவி செய்தனர். பின்னர் குதிரை படை வீரர் அந்த குதிரையை சாந்தப்படுத்தி உள்ளார். இதுதொடர்பான காட்சிகள் எக்ஸ் தளத்தில் வைரலாகி 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்தது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும், சில படங்களை மரியாதையுடன் எடுங்கள் என பதிவிட்டனர்.

    • துபாயில் வசித்துவரும் இந்திய சிறுவனை அவனது நன்னடத்தைக்காக துபாய் போலீசார் பாராட்டினர்.
    • இதுதொடர்பான புகைப்படங்களை துபாய் போலீஸ் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.

    துபாய்:

    துபாயில் வசித்து வரும் இந்திய சிறுவன் ஒருவன் அவனது நன்னடத்தை செயலுக்காக துபாய் போலீசாரால் பாராட்டப்பட்டார்.

    துபாய்க்கு சுற்றுலா வந்த பயணி ஒருவர் அவரது கைக்கடிகாரத்தை அங்கு தொலைத்துள்ளார். அந்த கடிகாரத்தை இந்தியாவை சேர்ந்த சிறுவன் யூனிஸ் பார்த்துள்ளார். அதை எடுத்துச்சென்று போலீசிடம் ஒப்படைத்தார்.

    அந்த பயணி அவரது சொந்த ஊர் திரும்பிய நிலையில், மீண்டும் அவரை தொடர்பு கொண்டு துபாய் போலீசார் கடிகாரத்தைக் கொடுத்துள்ளனர். இதற்கு அந்த பயணி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    இந்நிலையில், சுற்றுலா காவல்துறை இயக்குநர் பிரிகேடியர் கல்பான் ஒபைத் அல் ஜலாப், துணை லெப்டினன்ட் கர்னல் முகமது அப்துல் ரகுமான், சுற்றுலா துறை தலைவர் கேப்டன் ஷஹாப் அல் சாடி ஆகியோர் இந்திய சிறுவன் யூனிஸை பாராட்டி சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர்.

    இதுதொடர்பான புகைப்படங்களை துபாய் போலீஸ் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. அதில், சுற்றுலா பயணியின் தொலைந்த கடிகாரத்தை திருப்பி அளித்த சிறுவனின் நேர்மையை துபாய் போலீஸ் கவுரவிக்கிறது என குறிப்பிட்டுள்ளது.

    • யானைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத வண்ணம் வாகனங்களை சிறிது நேரம் நிறுத்தி வைத்தனர்.
    • சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளுக்கு தொந்தரவு கொடுக்காமல் செல்ல வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைபாதையில் பிறந்து சில நாட்களே ஆன குட்டியுடன் காட்டு யானைகள் சுற்றி திரிகின்றன.

    இந்த யானைகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீருக்காக சாலையை கடப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.

    நேற்று குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைபாதையில் கே.என்.ஆர் என்ற பகுதியில் 10 யானைகள் மலை சரிவிலிருந்து சாலையை கடக்க முயற்சித்தது.

    தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து யானைகளை கண்காணித்தனர். மேலும் யானைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத வண்ணம் வாகனங்களை சிறிது நேரம் நிறுத்தி வைத்தனர்.

    1 மணி நேரத்திற்கு பின்னர் யானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. அதன்பின்னர் போக்குவரத்து தொடங்கியது.

    இது தொடர்பாக குன்னூர் வனச்சரகர் ரவீந்திரன் கூறியதாவது:-

    மலைப்பாதையில் காட்டு யானைகள் தொடர்ந்து நடமாடி வருகிறது. இதனை கண்காணிக்க 5 குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஏற்கனவே மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதாகவும், அவற்றிற்கு தொல்லை கொடுக்க கூடாது, புகைப்படம் எடுக்க கூடாது என அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    அதனையும் மீறி சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. எனவே சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளுக்கு தொந்தரவு கொடுக்காமல் செல்ல வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதற்கிடையே ஏ. என். ஆர் பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் சாலையை கடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு நின்றிருந்த கோவையை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் யானை கூட்டத்தை தொந்தரவு செய்யும் வகையில் செல்போனில் செல்பி எடுக்க முயன்றார்.

    இதனை பார்த்த வனத்துறையினர் விரைந்து சென்று அந்த நபரை பிடித்து விசாரித்தனர். தொடர்ந்து அவருக்கு எச்சரிக்கை விடுத்து ரூ.1000 அபராதம் விதித்தனர்.

    • பேரூராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை
    • படித்துறையில் படிந்திருக்கும் பாசிகளையும் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

    கன்னியாகுமரி :

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கார்த்திகை மாதம் 1-ந் தேதி முதல் அய்யப்ப பக்த ர்கள் சீசன் காலம் தொடங்க உள்ளது. சீசன் காலத்தில் ஒரே நேரத்தில் ஆயிரக்க ணக்கான அய்யப்ப பக்த ர்கள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடு வார்கள். இதனால் பாதுகாப்பு காரணமாக முக்கடல் சங்க மத்தில் பக்தர்கள் குளிக்கும் பகுதியின் இரு புறமும் பாதுகாப்பு மிதவை கள் அமைத்து பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளும். ஆனால் இந்த ஆண்டு பாதுகாப்பு மிதவைகள் அமைக்கப்பட வில்லை. இதனால் பக்தர்க ளின் உயிருக்கு ஆபத்து ஏற்ப டும் சூழல் ஏற்பட்டுஉள்ளது. அதேபோல் தேவசம் போர்டு நிர்வாகம் சார்பில் முக்டல் சங்கமம் படித்து றையில் படிந்திருக்கும் பாசிகள் அகற்றப் படாத தால் புனித நீராட வரும் வயதான பக்தர்கள் மற்றும் குழந்தைகள் கருங்கற்களால் கட்டப்பட்ட படித்துறையில் கீழே விழுந்து கை, கால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு வருகிறது. நேற்று மட்டும் சுமார் 10-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கிழே விழுந்து காயத்துடன் சென்று உள்ள னர்.எனவே உயிர்சேதம் ஏற்படுவதற்கு முன் கன்னி யாகுமரி முக்கடல் சங்க மத்தில் பாதுகாப்பு மிதவை கள் அமைப்பதோடு படித்துறையில் படிந்திருக்கும் பாசிகளையும் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கடலில் மிதந்து கொண்டிருந்த உடலை மீட்டனர்.
    • பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறை அருகில் உள்ள வாவத்துறை கடலில் நேற்று மாலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் பிண மாக மிதந்து கொண்டி ருந்தார்.

    இதுகுறித்து கன்னியா குமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கடலில் மிதந்து கொண்டிருந்த உடலை மீட்டனர்.

    அதன்பிறகு உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவரது உடல் பிரேத பரி சோதனை செய்யப்பட்டது. அவர் யார்? எந்த ஊர்? என்பன போன்ற எந்த விவரமும் தெரியவில்லை. அவர் வட மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணியாக இருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

    சுமார் 5 அடி உயரம், புது நிறம். அவர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண் டரா? அல்லது கடலில் குளிக்கும்போது ராட்சத அலையில் சிக்கி தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது அவரை வேறு எங்காவது வைத்து கொலை செய்து விட்டு அவரது பிணத்தை கடலில் வீசி வீட்டு சென்றார்களா? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 40 வயது மதிக்கத்தக்க அவர் சிவப்பு நிற சட்டையும், சந்தனகலர் பேண்டும் அணிந்து இருந்தார்
    • வடநாட்டு சுற்றுலா பயணியாக இருக்கலாமா? என்றும் போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் உள்ள காந்தி மண்டபத்தின் பின் புறம் உள்ள கடலில் இன்று (புதன்கிழமை) காலை ஆண் உடல் மிதந்து வந்துள்ளது. இதைப் பார்த்த சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் கடலில் மிதந்த உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 40 வயது மதிக்கத்தக்க அவர் சிவப்பு நிற சட்டையும், சந்தனகலர் பேண்டும் அணிந்து இருந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. மேலும் அவர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கடலில் குளிக்கும் போது ராட்சத அலையில் சிக்கி மூழ்கி இறந்தாரா? என்பது தெரியவில்லை.

    இதற்கிடையில் அவரை வேறு எங்காவது வைத்து கொலை செய்து உடலை கடலில் வீசியிருக்கலாமா? என்ற சந்தேகமும் போலீ சா ருக்கு எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கன்னியா குமரிக்கு வந்த வடநாட்டு சுற்றுலா பயணியாக இருக்கலாமா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    • கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைந்து காணப்பட்டது
    • பிளாஸ்டிக் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்

    கோபி,

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்ப ணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொடிவேரி தடுப்பணையில் கொட்டி ஆர்ப்பரித்து செல்கிறது. இந்த கொட்டும் தண்ணீ ரில் குளிப்பதற்கும், ரசிப்ப தற்கும் தினமும் ஏராளமான சற்றுலா பயணி கள் வந்து செல்கிறார்கள். மேலும் விழா மற்றும் விடுமுறை நாட்களில் ஆயிரக்கண க்கான பொதுமக்கள் குடு ம்பத்துடன் வந்து தடுப்ப ணையில் குளித்து மகிழ்ந்து செல்கிறார்கள். இதே போல் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பள்ளி விடுமுறை விடப்பட்டதால் சனி, ஞாயிறு மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்து டன் வந்து சென்றனர்.

    இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் கொடி வேரி தடுப்பணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் கூடுவதும், குறைவ துமாக இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கொடிவேரிக்கு சுற்றுலா பயணிகள் குறைந்த அளவே வந்திருந்தனர். நேற்று முன்தினம் சனக்கிழ மை பொதுமக்களின் கூட்டம் குறைந்த அளவே இருந்தனர். இதே போல் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கொடிவேரிக்கு பொதுமக்கள் அதிகளவில் வருவார்கள் என எதிர்ப் பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைந்து காண ப்பட்டது.

    இதற்கிடையே கொடி வேரிக்கு வரும் பொதுமக்கள் கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். போலீசார் கொடிவேரி அணைக்கு செல்லும் பகுதியில் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் பொதுமக்கள் பிளாஸ்க் பொருட்கள் எடுத்து செல் கிறார்களா? என்றும் மது மற்றும் தடை செய்ய்ப்பட்ட பொருட்கள் எடுத்து செல்கிறார்களா? என சோதனைக்கு பிறகே அனுமதித்தனர். மேலும் போலீசார் சுற்றுலா பயணி கள் கொண்டு சென்ற பிளா ஸ்டிக் மற்றும் தடை செய்ய ப்பட்ட பொருட்களை பறி முதல் செய்த பிறகே அனு ப்பி வைத்தனர்.

    • எதிர்பாராத விதமாக கம்பி அறுந்து சிறுவன் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
    • அவனுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மெக்சிகோவில் உள்ள மாண்டேரி பகுதியில் சுற்றுலா பொழுதுபோக்கு பூங்கா ஒன்று உள்ளது. இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள ஜிப்லைனில் சாகச பயணம் செய்து மகிழ்வார்கள். இந்நிலையில் கடந்த 25-ந்தேதி அங்கு சுற்றுலா சென்றவர்களில் 6 வயது சிறுவன் ஒருவன் ஜிப்லைனில் சாகச பயணத்தை மேற்கொண்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கம்பி அறுந்து சிறுவன் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

    அதிர்ஷ்டவசமாக பூங்காவில் இருந்த செயற்கை குளத்தில் விழுந்துள்ளான். உடனே அங்கிருந்த சுற்றுலா பயணி ஒருவர் நீச்சல் குளத்துக்குள் குதித்து சிறுவனை காப்பாற்றி உள்ளார். இதில் சிறுவன் லேசான காயங்களுடன் உயிர் தப்பி உள்ளான். எனினும் அவனுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அந்த சிறுவன் 40 அடி உயரத்தில் இருந்து விழுந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பயனர்கள் பூங்கா ஊழியர்களை விமர்சனம் செய்து கருத்துக்களை பதிவிட்டனர். இதைத்தொடர்ந்து பூங்காவில் சாகச சவாரி நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 131 பயணிகள் சாதாரண இருக்கைகளுடன் பயணம் செய்வதற்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது
    • பாதுகாப்பு கவசத்துடன் பயணம் மேற்கொள்ள உரிய நடவடிக்கை என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்தார்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தில் சுமார் ரூ.8.24 கோடி மதிப்பில் திருவள்ளுவர், தாமிரபரணி என்ற பெயர் கொண்ட சுற்றுலா சொகுசு படகு வடிவமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    தாமிரபரணி நவீன சொகுசு படகில் குளிர்சாதன வசதியுடன் 75 சுற்றுலா பயணிகள் அமரும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளுவர் நவீன சொகுசு படகில் குளிர்சாதன வசதியுடன் 19 சுற்றுலா பயணிகள் அமரும் வகையிலும், 131 பயணிகள் சாதாரண இருக்கைகளுடன் பயணம் செய்வதற்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. குளிர்சாதன இருக்கையில் பயணம் மேற்கொள்ளும் ஒரு நபருக்கு ரூ.450-ம், சாதாரண இருக்கையில் அமர்ந்து பயணம் மேற்கொள்ளும் ஒரு நபருக்கு ரூ.350-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த 2 படகுகளும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தளத்தில் இருந்து புறப்பட்டு, சின்ன முட்டம் வழியாக வட்டக்கோட்டை கடல் பகுதியை சென்றடைந்து மீண்டும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தளத்திற்கு வந்து சேரும்.

    இந்நிலையில் திருவள்ளுவர், தாமிரபரணி நவீன சொகுசு படகில் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகள் தகுந்த பாதுகாப்பு கவசங்களுடன் பயணம் மேற்கொள்ள பூம்புகார் மேலாளர் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தியதற்கிணங்க, சொகுசு படகில் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகளுக்கு தகுந்த பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்பட்டு, பாதுகாப்பு கவசத்துடன் பயணம் மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்தார்.

    • நீண்ட நேரம் தங்க நகையை கோவில் வளாகம் முழுவதும் தேடினார்
    • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நடந்தது

    கன்னியாகுமரி :

    திருச்சி மாவட்டம் செங்கதிர் சோலை பகுதியை சேர்ந்தவர் அமுதா.இவர் 35 பேர் அடங்கிய குழுவி னருடன் நேற்று முன்தினம் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்துள்ளார்.

    இவர்கள் காலையில் சூரிய உதய காட்சியை பார்த்துவிட்டு பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். அப்போது கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் அமுதாவின் பர்ஸ் மற்றும் அதில் இருந்த 10 பவுன் தங்க நகையும் தொலைந்தது.பின்னர் நீண்ட நேரம் தங்க நகையை கோவில் வளாகம் முழுவதும் தேடினார்.

    இதனையடுத்து அவர் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் அவர் தவறவிட்ட பர்ஸ் மற்றும் அதில்இருந்த தங்க நகையையும் பகவதி அம்மன் கோவில் வளாகத்தில் பிரசாத ஸ்டால் நடத்திவரும் ராமச்சந்திரன் என்பவர் மீட்டு கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    இதைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி முன்னிலையில் ராமச்சந்தி ரன் சுற்றுலா பயணி அமுதா விடம் 10 பவுன் தங்க நகையை ஒப்படைத்தார்.

    நகையை மீட்டு பெண் சுற்றுலா பயணியிடம் ஒப்படைத்த ராமச்சந்திரனுக்கு போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டுகள் தெரிவித்தனர்.

    • மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது.
    • அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை ஆதாரமாகக் கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது

    உடுமலை :

    உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது.இந்த அணையின் மூலமாக பாசனத்திற்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதுடன் அமராவதிஆறு மற்றும் பிரதான கால்வாயை ஆதாரமாகக் கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அணைப்பகுதியில் உள்ள இயற்கை சூழலை ரசிக்கவும் புகைப்படம் எடுத்து மகிழவும் முதலைப் பண்ணையை பார்வையிடவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அமராவதிக்கு வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளை மேலும் மகிழ்விக்கும் விதமாக மகளிர் சுய உதவி குழுவினர் சார்பில் அணைப்பகுதியில் படகு சவாரியும் நடைபெற்று வருகிறது. இதற்காக பத்து நிமிட பயணத்திற்கு நபர் ஒன்றுக்கு 50 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    அணையிலும் போதுமான அளவு நீர்இருப்பு உள்ளதால் படகு சவாரி மனதிற்கு புத்துணர்வை அளிப்பதுடன் இனிமையான நிகழ்வாக உள்ளது.கடல் போன்று காட்சி அளிக்கும் அணையில் படகில் திகிலுடன் சென்று திரும்பும் சில வினாடிகள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும். அந்த அனுபவத்தை மீண்டும் மீண்டும் பெறுவதற்காக அணைப்பகுதிக்கு வருகின்ற சுற்றுலா பயணிகள் படகில் ஏறி சவாரி செய்து வருகின்றனர். குறிப்பாக வார,கோடை,பொது விடுமுறை நாட்களில் படகு சவாரி பரபரப்பாக நடைபெற்று வருகிறது.அந்த வகையில் அமராவதி அணைக்கு வருகை தந்த வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் அணைப்பகுதி, பூங்கா, முதலைப் பண்ணை உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர்.பின்பு படகு சவாரிக்கு சென்றனர். இதையடுத்து படகில் ஏறி குடும்பத்துடன் சென்று உற்சாகமாக சவாரி செய்து மகிழ்ந்தனர். அதற்கு முன்பாக சுற்றுலாப் பயணிகளுக்கு படகோட்டியின் சார்பில் விழிப்புணர்வும் உயிர் கவசமும் வழங்கப்பட்டது. மேலும் திருமூர்த்தி அணையில் நீண்ட நாட்களாக இயக்கப்படாமல் உள்ள படகு சவாரியை துவக்க வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    ×