search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுதந்திர தினவிழா"

    • இந்திய வரலாற்றில் எந்த பிரதமரின் சுதந்திர தின உரையை ஒப்பிட்டாலும், இதுதான் மிக நீண்ட உரை.
    • கடந்த 1947-ம் ஆண்டு நேரு 72 நிமிடங்களும், 1997-ம் ஆண்டு குஜ்ரால் 71 நிமிடங்களும் உரையாற்றியது நீண்ட நேர உரையாக இருந்தன.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி நேற்று டெல்லி செங்கோட்டையில் ஆற்றிய சுதந்திர தின உரைதான், அவரது சுதந்திர தின உரைகளிலேயே மிக நீளமானது. 98 நிமிட நேரம் அவரது உரை நீடித்தது. இந்திய வரலாற்றில் எந்த பிரதமரின் சுதந்திர தின உரையை ஒப்பிட்டாலும், இதுதான் மிக நீண்ட உரை ஆகும். இது ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது.

    பிரதமர் மோடி, கடந்த 2014-ம் ஆண்டு முதல்முறையாக டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றியபோது, 65 நிமிடம் உரையாற்றினார்.

    2015-ம் ஆண்டு 88 நிமிடங்களும், 2016-ம் ஆண்டு 96 நிமிடங்களும், 2017-ம் ஆண்டு 56 நிமிடங்களும், 2018-ம் ஆண்டு 83 நிமிடங்களும், 2019-ம் ஆண்டு 92 நிமிடங்களும், 2020-ம் ஆண்டு 90 நிமிடங்களும், 2021-ம் ஆண்டு 88 நிமிடங்களும், 2022-ம் ஆண்டு 74 நிமிடங்களும், 2023-ம் ஆண்டு 90 நிமிடங்களும் அவரது சுதந்திர தின உரை நீடித்தது.

    இதற்கு முன்பு, அவரது நீண்ட உரை 2016-ம் ஆண்டு ஆற்றிய உரையாகவும், மிக குறைந்த நேர உரை 2017-ம் ஆண்டு ஆற்றிய உரையாகவும் இருந்தது.

    பிரதமர் மோடிக்கு முன்பு, கடந்த 1947-ம் ஆண்டு நேரு 72 நிமிடங்களும், 1997-ம் ஆண்டு குஜ்ரால் 71 நிமிடங்களும் உரையாற்றியது நீண்ட நேர உரையாக இருந்தன.

    கடந்த 1954-ம் ஆண்டு நேரு 14 நிமிடங்களும், 1966-ம் ஆண்டு இந்திரா காந்தி 14 நிமிடங்களும் பேசியது, குறைந்த நேர சுதந்திர தின உரைகளாக உள்ளன.

    கடந்த 2012-ம் ஆண்டு மன்மோகன்சிங்கின் சுதந்திர தின உரை 32 நிமிடங்களிலும், 2002-ம் ஆண்டு வாஜ்பாயின் சுதந்திர தின உரை 25 நிமிடங்களிலும் முடிவடைந்தன.

    • வங்கதேசத்தின் முன்னேற்றத்திற்கு இந்தியா எப்போதும் நலம் விரும்பியாக இருக்கும்.
    • வங்கதேசத்தில் நிலைமை விரைவில் சீராகும் என நம்புகிறோம் என்றார் பிரதமர் மோடி.

    புதுடெல்லி:

    நாட்டின் 78-வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் 11-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது அவர் நாட்டு மக்களிடம் பேசியதாவது:

    வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து 140 கோடி இந்தியர்கள் கவலைப்படுகிறார்கள்.

    வங்கதேசத்தின் முன்னேற்றத்திற்கு இந்தியா எப்போதும் நலம் விரும்பியாக இருக்கும். வங்கதேசத்தில் நிலைமை விரைவில் சீராகும் என நம்புகிறோம்.

    வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என இந்தியர்கள் விரும்புகின்றனர் என தெரிவித்தார்.

    • பெண்களுக்கு எதிரான குற்றங்கள் விரைவில் விசாரிக்கப்பட வேண்டும்.
    • இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு விரைவில் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றார்.

    புதுடெல்லி:

    நாட்டின் 78-வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் 11-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது அவர் நாட்டு மக்களிடம் பேசியதாவது:

    விமானப்படை, ராணுவம், கடற்படை மற்றும் விண்வெளித்துறை உள்பட பல துறைகளில் பெண்களின் தலைமைத்துவத்தை நாடு காண்கிறது. ஆனால், சில கவலையான சம்பவங்களும் நடைபெறுகின்றன.

    இன்று செங்கோட்டையில் இருந்து எனது வலியை வெளிப்படுத்த விரும்புகிறேன். ஒரு சமூகமாக, நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டும்.

    எங்கள் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு எதிரான அட்டூழியங்கள் குறித்து பொதுமக்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். இந்தக் கோபத்தை நான் உணர்கிறேன். நாடு, சமூகம், நமது மாநில அரசுகள் இதை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பெண்களுக்கு எதிரான குற்றங்கள் விரைவில் விசாரிக்கப்பட வேண்டும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு விரைவில் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும். சமூகத்தில் நம்பிக்கையை உருவாக்க இது அவசியம்.

    பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடக்கும்போது ஊடகங்களில் அதிகம் பேசப்படுகிறது. ஆனால், இப்படிப்பட்ட வக்கிரமானவர்களுக்கு தண்டனை கிடைத்தால் அது செய்திகளில் பெரிதாகக் காணப்படுவதில்லை.

    குற்றவாளிகள் பயப்படும் வகையில் தண்டனைகள் குறித்தும் பரவலாக விவாதிக்கப்பட வேண்டும் என காலம் கோருகிறது. இந்த பயத்தை உருவாக்குவது முக்கியம் என தெரிவித்துள்ளார்.

    • சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
    • நாமக்கல் கலெக்டர் உமா தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

    இந்தியாவின் 78-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி இன்று காலை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

    சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    இதைத்தொடர்ந்து சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் மேயர் பிரியா தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

     

    அண்ணா விளையாட்டு அரங்கில் கடலூர் கலெக்டர் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

     

    அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட கலெக்டர் கொடியேற்றினார்.

     

    கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேலு தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

     

    கள்ளக்குறிச்சி கலெக்டர் பள்ளி மைதானத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

     

    நாமக்கல் கலெக்டர் உமா தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

     

    கோவை கலெக்டர் கிராந்திகுமார் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

     

    புதுக்கோட்டை கலெக்டர் அருணா ஆயுதப்படை மைதானத்தில் தேசியக்கொடி ஏற்றினார்.

     

    திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

     

    ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

    ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தேசியக்கொடி ஏற்றி வைத்து கலெக்டர் சந்திரகலா மரியாதை செலுத்தினார்.

    தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் பிரியா பங்கஜம் ஏற்றுக்கொண்டார்.

     

    நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் தேசியக்கொடி ஏற்றி வைத்த கலெக்டர் ஆகாஷ் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

    திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்த கலெக்டர் பிரதீப் குமார் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

     

    • பெருநகர சென்னை மாநகராட்சியில் சிறந்த மண்டலம்-14-வது மண்ட லம் ரூ.30 லட்சம்.
    • முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதிற்கான ரொக்கப்பணம் ரூ. 50 ஆயிரத்து 800-ல் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

    சென்னை:

    உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கிலும் மற்றும் அவைகளின் செயல்பாடுகளின் அடிப்படையில் அவற்றிற்கிடையே போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கும் நோக்கிலும் பெருநகர சென்னை மாநகராட்சியில் சிறப்பாக செயல்படும் ஒரு மண்டலம், சிறப்பாக செயல்படும் ஒரு மாநகராட்சி, ஒரு நகராட்சி மற்றும் ஒரு பேரூராட்சி ஆகியவற்றுக்கு முதலமைச்சர் விருது சுதந்திர தின விழாவின்போது வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு கீழ்க்கண்ட உள்ளாட்சிகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

    சிறந்த மாநகராட்சி-கோவை-ரூ.50 லட்சம், சிறந்த நகராட்சி-திருவாரூர் ரூ.30 லட்சம், சிறந்த பேரூராட்சி-சூலூர் (கோவை மாவட்டம்) ரூ.20 லட்சம்.

    பெருநகர சென்னை மாநகராட்சியில் சிறந்த மண்டலம்-14-வது மண்ட லம் ரூ.30 லட்சம்.

    முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதிற்கான ரொக்கப்பணம் ரூ. 50 ஆயிரத்து 800-ல் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

    2024-ம் ஆண்டிற்கான முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதிற்காக 3 ஆண்கள் மற்றும் சிறப்பு நிகழ்வாக 4 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். ஆண்கள் பிரிவில் நெ. கதிரவன் (ஈரோடு மாவட் டம்), ஜோஷன் ரெகோ பெர்ட் (கன்னியாகுமரி மாவட்டம்), சி.ஜெயராஜ் (கடலூர் மாவட்டம்) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

    பெண்கள் பிரிவில் செ.நிதிதா (கடலூர் மாவட் டம்), கவின்பாரதி (புதுக்கோட்டை மாவட்டம்), ச.உமாதேவி (விருதுநகர் மாவட்டம்), கா.ஆயிஷா பர்வீன் (ராமநாதபுரம் மாவட்டம்) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

    • பீச் பாய்ஸ் வாக்கர்ஸ் குழு சார்பில் கொடியேற்றப்பட்டது.
    • கொடியேற்ற நிகழ்ச்சியில் பீச் பாய்ஸ் வாக்கர்ஸ் குழுவுடன் பலர் கலந்து கொண்டனர்.

    78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் பீச் பாய்ஸ் வாக்கர்ஸ் (Beach boys walkers) சார்பாக இன்று தேசிய கொடி ஏற்றபட்டது. இந்த நிகழ்ச்சியில் பால சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றினார்.

    இந்த ஆண்டு கொடியேற்ற விழாவில் அடையார் ஆனந்த பவன் நிர்வாக இயக்குநர் திரு. கே.டி. வெங்கடேசன், பீச் பாய்ஸ் அட்மின் மோகன் ராகவன், முன்னாள் அட்மின் ஏழுமலை, மீடியா95 சிஇஓ பழனி ராஜா மற்றும் பீச் பாய்ஸ் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     


    கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பீச் பாய்ஸ் வாக்கர்ஸ் குழு சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் தேசிய கொடி ஏற்றி வருவது குறிப்பிடதக்கது.

    • மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சுதந்திர தினத்தை முன்னிட்டு கொல்கத்தாவில் தேசியக்கொடி ஏற்றினார்.
    • ஒடிசாவில் பிரபல மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் மணல் கலையை உருவாக்கினார்.

    இந்தியாவின் 78-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி இன்று காலை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

    அதைத்தொடர்ந்து குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், கெடாவில் உள்ள நாடியாத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.

    மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சுதந்திர தினத்தை முன்னிட்டு கொல்கத்தாவில் தேசியக்கொடி ஏற்றினார்.

    டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக தலைவர் ஜேபி நட்டா தேசியக்கொடி ஏற்றினார்.

    டெல்லியில் உள்ள AICC தலைமையகத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தேசியக் கொடியேற்றினார்.

    சுதந்திர தினத்தை முன்னிட்டு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பாட்னாவில் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.

    ஒடிசாவில் பிரபல மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் மணல் கலையை உருவாக்கினார்.

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

    • சுதந்திர தினத்தை ஒட்டி விசேஷ டூடுல் வெளியிட்ட கூகுள்.
    • பல்வேறு விசேஷ நாட்களில் டூடுல் வெளியிடுவதை கூகுள் வழக்கமாக கொண்டுள்ளது.

    உலகின் முன்னணி தேடுப்பொறி சேவையை வழங்கும் நிறுவனம் கூகுள். உலக அளவில் விசேஷ நாட்களில் சிறப்பு டூடுலை தனது வலைதளத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது.

    அந்த வகையில், இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது. டூடுலில் இந்திய பாரம்பரிய முறைப்படி உருவாக்கப்பட்ட வண்ணங்கள் நிறைந்த கதவுகளில் கூகுள் என்ற வார்த்தை இடம்பெற்று இருக்கிறது.

    வழக்கம் போல விசேஷ டூடுலை க்ளிக் செய்ததும் இந்திய சுதந்திர தின சிறப்புகள், அதுபற்றிய வலைத்தள பதிவுகள் அடங்கிய சிறப்பு வலைப்பக்கம் திறக்கிறது.

    • நான் முதல்வா் திட்டத்துக்காக திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நிா்வாக இயக்குநா் ஜெ.இன்ன சென்ட் திவ்யா தோ்வு செய்யப்பட்டார்.
    • வணிக வரியைப் பெருக்கியதற்காக துறை ஆணையா் டி.ஜகந்நாதனுக்கு நல்லாளுமை விருதுக்கு வழங்கப்பட்டது.

    சென்னை:

    அரசுத் துறைகளில் புதுமைகளை புகுத்தி திட்டங்களைச் செயல்படுத்திய 9 பேருக்கு நல்லாளுமை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருதுகளை சென்னை கோட்டை கொத்தளத்தில் இன்று நடந்த சுதந்திர தினவிழாவின்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூயிருப்பதாவது:-

    கலைஞா் மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்தைச் செயல்படுத்த தரவுகளை சரியான முறையில் பிரித்து பயனாளிகளைத் தோ்வு செய்ததற்காக, முதல்வரின் முகவரித் துறை தலைமைத் தொழில்நுட்ப அலுவலா் த.வனிதா, உயா்கல்வியில் மாணவா்கள் சோ்க்கை விகிதத்தை உயா்த்தியதற்கு விருதுநகா் மாவட்ட கலெக்டர் வீ.ப.ஜெயசீலன், உலகின் சிறந்த நூல்களைத் தமிழில் மொழிபெயா்க்க வழிவகை செய்த பொது நூலகங்கள் துறை இயக்குநா் க.இளம்பகவத், உறுப்பு மாற்று சிகிச்சை திட்டத்தை சிறப்பாக நடத்தி வருவதற்காக உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினா் செயலா் ந.கோபால கிருஷ்ணன், காலை உணவுத் திட்டத்துக்காக மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ச.திவ்ய தா்ஷினி, நான் முதல்வா் திட்டத்துக்காக திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நிா்வாக இயக்குநா் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆகியோா் நல்லாளுமை விருதுக்காக தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

    மேலும், அரசுப் பள்ளி மாணவா்களைத் தலை சிறந்த உயா்கல்வி நிறுவனங்களில் இடம்பெறச் செய்ததற்காக, தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் அமைப்பின் உறுப்பினா் செயலா் இரா.சுதன், இணைய வழியில் பட்டா மாறுதல் செய்யும் வசதியை உருவாக்கிய நிலஅளவை திட்ட இயக்குநா் ப.மதுசூதன்ரெட்டி, வரி ஆய்வுப் பிரிவு மூலம் வணிகவரியைப் பெருக்கியதற்காக துறை ஆணையா் டி.ஜகந்நாதன் ஆகியோரும் நல்லாளுமை விருதுக்கு தோ்வாகியுள்ளனா்.

    விருதாளா்களுக்கு ரொக்கப் பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்களை கோட்டை கொத்தளத்தில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இஸ்ரோவின் சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீர முத்துவேலுக்கு அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது.
    • உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினர் செயலர் கோபாலகிருஷ்ணனுக்கு நல்லாளுமை விருது வழங்கப்பட்டது.

    சென்னை:

    இந்தியாவின் 78-வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அதன் பின்னர் தகைசால் தமிழர் விருது, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரிலான விருது, துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    * சுதந்திர தினத்தை ஒட்டி மூத்த தமிழறிஞர் குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது. இத்துடன் ரூ. 10 லட்சத்திற்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    * இஸ்ரோவின் சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீர முத்துவேலுக்கு அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது.

    * துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது நீலகிரி கூடலூரை சேர்ந்த செவிலியர் சபீனாவுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.

    * அரசுத்துறைகளில் புதுமைகளை புகுத்தி திட்டங்களை செயல்படுத்திய 9 பேருக்கு நல்லாளுமை விருதுகள் வழங்கப்படுகிறது.

    * முதல்வரின் முகவரி துறையின் தலைமை தொழில்நுட்ப அலுவலரான வனிதாவுக்கு நல்லாளுமை விருது வழங்கப்பட்டது.

    * உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினர் செயலர் கோபாலகிருஷ்ணனுக்கு நல்லாளுமை விருது வழங்கப்பட்டது.

    * காலை உணவுத்திட்டத்துக்காக மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திவ்யதர்ஷினிக்கு நல்லாளுமை விருது வழங்கப்பட்டது.

    * நான் முதல்வன் திட்டத்துக்காக திறன் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநர் இன்னசென்ட் திவ்யாவுக்கு நல்லாளுமை விருது வழங்கப்பட்டது.

    * மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக உதவியதற்காக 5 பேருக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2026 ஜனவரி மாதத்துக்குள் சுமார் 75,000-க்கும் மேற்பட்ட அரசுப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
    • தியாகிகள் குடும்பத்திற்கு வழங்கப்படும் ரூ. 11 ஆயிரம் ஓய்வூதியம் ரூ. 11,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

    சென்னை:

    இந்தியாவின் 78-வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * தியாகிகளின் கனவான அனைவருக்குமான இந்தியாவை உருவாக்கி நாம் வளர்த்து வருகிறோம்.

    * ஆக.15 ஆனந்த சுதந்திரம் அடைந்த நாள் மட்டுமல்ல ஆனந்த இந்தியாவை உருவாக்கும் திட்டம் வகுக்கும் நாளாகும்.

    * சமூக வளர்ச்சி திட்டங்களுக்கு முக்கியத்துவம் தந்து திராவிட மாடல் அரசு செயலாற்றி வருகிறது.

    * வளர்ச்சி என்பது பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல, சமூகத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

    * 2026 ஜனவரி மாதத்துக்குள் சுமார் 75,000-க்கும் மேற்பட்ட அரசுப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

    * கடந்த மூன்று ஆண்டுகளில் பல துறைகளில் 77 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    * வருகிற பொங்கல் திருநாள் முதல் முதல்வர் மருந்தகம் திட்டம் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. முதற்கட்டமாக 1000 மருந்தகங்கள் உருவாக்கப்பட இருக்கிறது.

    * ஓய்வுபெற்ற விடுதலை போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 20 ஆயிரத்தில் இருந்து ரூ. 21 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

    * தியாகிகள் குடும்பத்திற்கு வழங்கப்படும் ரூ. 11 ஆயிரம் ஓய்வூதியம் ரூ. 11,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

    * கட்டபொம்மன், வ.உ.சி., மருது சகோதரர்களின் வழித்தோன்றல்களுக்கான ஓய்வூதியம் ரூ. 10 ஆயிரத்து 500 ஆக உயர்த்தப்படுகிறது.

    * நீலகிரி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் இயற்கை பேரிடர்களை தடுக்க ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது குறித்து பல்துறை வல்லுநர்கள் குழு ஆய்வு செய்யும் என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 300 ஆண்டு கால போராட்டத்திற்கு பின்னர் கிடைத்த சுதந்திரம் இது.
    • விடுதலை நாளில் மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை பெற்று தந்தவர் கலைஞர் கருணாநிதி.

    சென்னை:

    இந்தியாவின் 78-வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி இன்று காலை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

    இந்நிலையில் சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது விடுதலை நாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    * விடுதலையை பெற்று கொடுத்த தியாகிகளை போற்றுவோம்.

    * 300 ஆண்டு கால போராட்டத்திற்கு பின்னர் கிடைத்த சுதந்திரம் இது.

    * தியாகிகள் போராடிய நோக்கத்திற்காக உழைப்போம் என சுதந்திர நாளில் உறுதியேற்போம்.

    * நேதாஜி படை நடத்தியபோது கரம் கோர்த்தவர்கள் தமிழர்கள்.

    * அறவழியில் போராடிய காந்தியின் பின்னால் கரம் கோர்த்து நின்றது தமிழ்நாடு.

    * நாட்டின் பன்முக தன்மையின் அடையாளம் தேசிய கொடி.

    * விடுதலை நாளில் மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை பெற்று தந்தவர் கலைஞர் கருணாநிதி என்று கூறினார்.

    ×