search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சைபர் கிரைம் குற்றங்கள்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சைலேந்திரபாபு புகைப்படத்தை பயன்படுத்தி பணம் பறிக்க முயற்சி
    • விழிப்புடன் இருக்க சைலேந்திரபாபு அறிவுரை.

    சைபர் கிரைம் மோசடி கும்பல் பல்வேறு விதமாக பொதுமக்களிடம் பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சுங்கத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், சி.பி.ஐ. அதிகாரிகள் என தொடர்பு கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் பெற்றோர்களை குறிவைத்து சைபர் கிரைம் மோசடி கும்பல் நூதன முறையில் மிரட்டி பணம் பறிக்கின்றனர்.

    வாட்ஸ் அப் கால் மூலமாக தொடர்பு கொண்டு உங்களது மகன் அல்லது மகள் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும். குறிப்பாக மகள் என்றால் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், வங்கி மோசடியில் தொடர்பு இருப்பதாகவும் கூறி மிரட்டுகின்றனர்.

    வாட்ஸ் அப் காலில் சுங்கத்துறை அதிகாரிகள் போல் பேசி பெற்றோர்களை பயப்பட வைக்கின்றனர். அதுமட்டுமல்லாது அழுகுரல் ஒன்றையும் ஒளிபரப்பி மகன் அழுவது போன்ற ஒன்றையும் ஒலிபரப்பி அவர்களை நம்ப வைக்கின்றனர்.

    உண்மையை அறியாத சில பெற்றோர்கள் அவர்களது மகன் வழக்குகளில் கைது செய்யப்பட்டிருப்பதாக நினைத்து வாட்ஸ் அப் காலில் பேசும் நபர் கூறியபடி செய்து மகனை காப்பாற்றலாம் என நினைக்கின்றனர்.

    பணத்தை கொடுத்தால் வழக்கில் இருந்து தப்பிக்கலாம் என கேட்டு நினைக்கும் போது, பணத்தை கொடுத்து பெற்றோர்கள் சிலர் ஏமாறுகின்றனர்.

    இந்த நிலையில் முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதோடு ஏமாற்றி பணம் பறித்த வீடியோ ஆதாரத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

    அதில் பாகிஸ்தான் சைபர் குற்றவாளிகள் தனது புகைப்படத்தை பயன்படுத்தி இந்தியர்களிடம் பணம்பறிக்க முயற்சி செய்கிறார்கள். எனவே விழிப்புடன் இருக்க வேண்டும். இதுபோன்ற வீடியோ அழைப்பு வந்தால் கவனமாக இருக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

    • இன்றைய இணைய உலகில் மொபைல் போன்கள் அவசியமாகிவிட்டன.
    • அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது ஸ்மார்ட்போன்.

    இன்றைய இணைய உலகில் மொபைல் போன்கள் அவசியமாகிவிட்டன. மொபைல்போன் இல்லாத வாழ்க்கை பலருக்கு சங்கடமாக இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் எல்லா நேரங்களிலும் தம்முடன் எடுத்துச்செல்லும் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது.

    நம்மில் பலர் தூங்கும்போது கூட மொபைல் போன்களை பக்கத்திலேயே வைத்திருப்போம். இந்த ஸ்மார்ட்போன் மோகம் குழந்தைகளையும் விட்டுவைக்க வில்லை. சிறு வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை மொபைல் போன்களில் சிக்கிக்கொள்ளும் அவலநிலையே இன்றளவும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.

    வாட்ஸ் அப்பில் தங்கள் நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, இன்ஸ்டாகிராமில் படங்களை பகிர்வது, பேஸ்புக்கில் இடுகைகளை இடுவது, யூடியூப்பில் வீடியோக்கள் பார்ப்பது, ரீல்ஸ் எடுப்பது மற்றும் கேம்கள் விளையாடுவது போன்று குழந்தைகள் மணிக்கணக்கில் செல்போனில் தான் அவர்களைது நேரத்தை செலவிடுகின்றனர்.

    ஸ்மார்ட் போன் தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க நன்மைகள் இருந்தாலும் அது அதிகம் தீங்கு விளைவிக்கும் விளைவுகளையே கொண்டுள்ளது.

    மொபைல் போன்கள் குழந்தைகளின் மூளையை பாதிக்கிறது. மற்றும் பிற உடல் செயல்பாடுகளுக்கும் தீங்கு விளைவிக்கிறது. செல்போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு அவர்களது மூளையை பெரிதும் பாதிப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். மொபைல் போன்களை அதிகநேரம் பயன்படுத்துவது, தூங்கும் போது அருகில் வைத்திருப்பது ஆகியவற்றால் அவர்களின் மூளை பாதிக்கப்படும்.

    மேலும் குழந்தைகள் மொபைல் போன்களை பயன்படுத்துவதால் அவர்களின் கண்களும் பாதிக்கப்படுகின்றன. மொபைல் போன் திரைகளை நீண்டநேரம் வெளிப்படுத்துவது நம் கண்களில் குறிப்பிடத்தக்க அழுத்தத்தை கொடுப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக கடுமையான கண்பார்வை தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும். வீடியோ கேம்களை நீண்டநேரம் விளையாடும் போது விழித்திரை பாதிக்கப்பட்டு தூக்கமின்மைக்கு வழிவகுக்கிறது மற்றும் கண்களில் விரும்பத்தகாத தாக்கங்களை உண்டுபண்ணுகிறது.

    உட்கார்ந்த நிலையிலேயே இருந்து செல்போன் கேம் விளையாடுவதால் அவர்களின் முதுகெலும்புகள் பாதிக்கப்படுகின்றன. மேலும் உடல் பருமன், சோம்பல், மனச்சோர்வு போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

    குழந்தைகள் அதிக நேரம் மொபைல் போன்களுக்கு அடிமையாகி விடுவதால், படிப்பிற்கு நேரம் ஒதுக்குவது குறைவு. இது அவர்களின் கல்வி முன்னேற்றம் மற்றும் செயல்திறனில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

    மொபைல் ஃபோன்களைப் பயன்படுத்தும் குழந்தைகள் டிஜிட்டல் அடையாள மோசடி, சைபர்புல்லிங், ஃபிஷிங், மால்வேர் போன்ற பல்வேறு சைபர் கிரைம்களுக்கு ஆளாகின்றனர். இந்த சைபர் குற்றங்கள் குழந்தைகளின் நுட்பமான மனதில் ஆழ்ந்த மன, உடல் மற்றும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும்.

    இணைய உலகம் பெரும்பாலும் கட்டுப்பாடற்றது. உலகளவில் பொருளாதாரங்கள் கட்டுப்பாடுகளுடன் வரும் அதே வேளையில், இணையத்தில் உள்ள உள்ளடக்கம் இன்னும் பெரும்பாலும் கட்டுப்பாடற்றதாகவே உள்ளது. இது குழந்தைகளுக்குப் பொருத்தமில்லாத உள்ளடக்கத்தை அணுகுவதற்கான வாய்ப்பை குழந்தைகளுக்கு ஏற்படுத்துகிறது.

    அதிகப்படியான வன்முறை, போலிச் செய்திகள், ஆபாசப் படங்கள் மற்றும் பிற பொருத்தமற்ற காட்சிகள் அல்லது செய்தி அனுப்புதல் ஆகியவற்றைக் கொண்ட உள்ளடக்கம் குழந்தைகளின் நுட்பமான ஆன்மாவில் ஆழமான மற்றும் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த பதிவுகள் அவர்களின் சிந்தனை மற்றும் மனநிலையில் அழியாத வடுக்களை ஏற்படுத்தலாம். பெற்றோர்கள் யோசித்து செயல்படுங்கள்.

    • போலீசார் அறிவுரை
    • வாட்ஸ்-அப், பேஸ் புக்கில் ஏமாற்றுகிறார்கள்

    வேலூர்:

    சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க பொது மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் இதுவரை 1,174 புகார்கள் இணைய வழியாகவும், நேரடியாகவும் பெறப்பட்டுள்ளது.

    பணமோசடி புகார்களில் ரூ.6 கோடியே 68 லட்சத்து 96 ஆயிரத்து 489ஐ பொதுமக்கள் இழந்துள்ளனர்.

    இப்புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றவாளிகளின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து ரூ.4 கோடியே 27 லட்சத்து 79 ஆயிரத்து 810 முடக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ரூ.90 லட்சத்து 35 ஆயிரத்து 726 மீட்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    சைபர் குற்றவாளிகள் போலியான அடையாள அட்டைகள் மூலம் சிம் கார்டுகளையும், வங்கிக் கணக்குகளையும் தொடங்கி அதன் மூலம் இணையவழி பணமோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலும் வடமாநிலங்களை சேர்ந்த நபர்களே சைபர் குற்றங்களில் ஈடுபட்டு வருவதால் குற்றவாளிகளை அடையாளம் கண்டு இழந்த பணத்தை மீட்பது மிகவும் கடினமாக உள்ளது.

    எனவே பொதுமக்கள் முன்எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். முகம் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள், சமூக வலைதளங்களில் அறிமுகமாகும் நபர்கள் கேட்கும் விவரங்களையோ, வங்கி விவரங்களையோ அவர்களிடம் பகிர வேண்டாம். பெரும்பாலும் மோசடி நபர்கள் தான் போலியான அடையாளங்களுடன் இணைதளம் வாயிலாக பொதுமக்களை ஏமாற்றி பணத்தை பறித்து வருகின்றனர்.

    பல்வேறு வகைகளில் பொதுமக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். பகுதிநேர வேலை வழங்குவதாக கூறி மொபைல் ஆப்கள் மூலம் செல்போனில் உள்ள உங்களது புகைப்படங்கள், வங்கி விவரங்களை பதிவிறக்கம் செய்து மோசடி செய்து பணத்தை திருடி விடுவார்கள்.

    தேவையற்ற கடன் லோன் ஆப்களை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். பரிசு கூப்பன் தருவதாக கூறியும் ஏமாற்றுவார்கள். ஏதேனும் சைபர் கிரைம் தொடர்பான குற்றங்களில் பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் இழந்தை பணத்தை மீட்க முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • படிக்கும் காலத்தில் படிப்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். மேலும் இணைய விளையாட்டுகளில் பணம் இழக்க ‌வேண்டாம் .
    • குற்றங்கள் (பண பரிவர்த்தனை மற்றும் பிற) ஏற்பட்டால் 1930 என்ற எண்ணிற்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்

    திருச்சி :

    நூற்றாண்டு பெருமை பெற்ற திருச்சி தேதிய கல்லூரி தேசிய மாணவர் படையின் விமான படை பிரிவும், திருச்சி சைபர் கிரைம் காவல் பிரிவும் இணைந்து விழிப்புணர்வு முகாமை கல்லூரி கிருஷ்ணமூர்த்தி அரங்கில் நடத்தியது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வரும், படைத்தலைவருமான முனைவர் ஆர்.சுந்தரராமன் தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கினார்.

    கல்லூரியின் விமானபடை அதிகாரி டாக்டர். சுரேஷ் குமார் சிறப்புரையாற்றினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக காவல் துறையின் தொழில்நுட்ப பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் சங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    அப்போது உதவி ஆய்வார் முரளி பேசுகையில், சைபர் கிரைம் (பணம் மற்றும் பணமில்லா) குற்றங்களை பற்றி விளக்கினார். சைபர்‌ கிரைம் ஏற்படுத்துவதற்கு முக்கிய காரணம் அறியாமை, ஆசை, அன்பு என்று கூறினார். படிக்கும் காலத்தில் படிப்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். மேலும் இணைய விளையாட்டுகளில் பணம் இழக்க ‌வேண்டாம் என்றும் அறிவுரை கூறினார்.

    கடவுச்சொல்லை (பாஸ்வேர்டு) பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று மாணவர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து சங்கர் பேசுகையில், இணையம் இன்றியமையாது உலகு என்று தொடங்கி தகவல்களை எப்படி இணையத்தில் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்று விளக்கினார். குற்றங்கள் (பண பரிவர்த்தனை மற்றும் பிற) ஏற்பட்டால் 1930 என்ற எண்ணிற்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.

    சைபர் கிரைம் தொடர்பான புகார்களை www.cybercrime.gov.in. என்ற இணையதளத்தில் தெரிவிக்கலாம் என்று அவர் தெரிவித்தார். என்.சி.சி. விமான படையை சேர்ந்த சாக்‌ஷி, ரித்திகா ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.

    ×