search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நோட்டா"

    • நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
    • பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்களின் முடிவுகளில் நோட்டா எந்த பாதிப்பையும் பெரிதாக ஏற்படுத்தவில்லை.

    சென்னை:

    தன்னுடைய தொகுதியில் போட்டியிடும் எந்த வேட்பாளரையும் வாக்காளர் ஒருவருக்கு பிடிக்கவில்லை. அதேசமயம் தான் வாக்களிப்பதில் இருந்து தவறவும் விரும்பவில்லை. தனது வாக்கை இன்னொருவர் தவறாக பயன்படுத்துவதை அனுமதிக்கவும் விருப்பமில்லை என்று சிந்திக்கும் வாக்காளர்களுக்கும் ஜனநாயக முறைப்படி வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கு என உருவாக்கப்பட்ட முறைதான் 'நோட்டா'. அதாவது 'மேலே உள்ள எவரும் அல்ல' என்பது பொருளாகும்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 4 லட்சத்து 67 ஆயிரத்து 68 ஓட்டுகளை 'நோட்டா' பெற்றுள்ளது. இது 1.07 சதவீதமாகும். இதில் அதிகபட்சமாக ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதியில் 26 ஆயிரத்து 450 வாக்குகளை 'நோட்டா' பெற்றுள்ளது. அதேபோல் குறைந்த பட்சமாக, கன்னியாகுமரி தொகுதியில் 3 ஆயிரத்து 756 வாக்குகளை 'நோட்டா' பெற்றுள்ளது.

    இதுகுறித்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கூறும் போது, 'நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலிலும் அனைத்து தொகுதிகளிலும் 'நோட்டா' ஆதிக்கம் செலுத்தி உள்ளது. இதுவரை, பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்களின் முடிவுகளில் நோட்டா எந்த பாதிப்பையும் பெரிதாக ஏற்படுத்தவில்லை' என்று தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கூறினர்.

    • தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி 5 லட்சத்து 66 ஆயிரத்து 85 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.
    • நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனோஜ்குமார் 76 ஆயிரத்து 207 வாக்குகளும் பெற்றனர்.

    சேலம்:

    சேலம் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. , அ.தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 27 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 13 லட்சத்து 6 ஆயிரத்து 457 பேர் வாக்களித்தனர்.

    கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டது.

    இதில் தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி 5 லட்சத்து 66 ஆயிரத்து 85 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

    அ.தி.மு.க. வேட்பாளர் விக்னேஷ் 4 லட்சத்து 95 ஆயிரத்து 728 வாக்குகளும், பா.ம.க. வேட்பாளர் அண்ணாதுரை 1 லட்சத்து 14 ஆயிரத்து 894 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனோஜ்குமார் 76 ஆயிரத்து 207 வாக்குகளும் பெற்றனர்.

    இதில் நோட்டவுக்கு 14 ஆயிரத்து 894 பேர் வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் மும்முரமாக நடந்து வருகிறது.
    • 12 மணி நிலவரப்படி குறைத்து 1 லட்சம் வாக்கு வித்தியாசம் இருந்தால் மட்டுமே தற்போதே வெற்றியை உறுதி செய்ய முடியும்.

    இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் மும்முரமாக நடந்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு தொகுதிகளில் பா.ஜ.க.வின் என்.டி.ஏ. கூட்டணி முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கடந்த தேர்தலில் பெற்றதை விட கூடுதல் தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

    இந்த நிலை எந்த நேரமும் மாறும் என்ற சூழலில், மதியம் 12 மணி நிலவரப்படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளுள் 165 தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் 10,000 என்ற அளவிலேயே உள்ளது. எனவே தற்போதுள்ள நிலவரத்தை வைத்துக்கொண்டு வெற்றியை நிச்சயிக்க முடியாது. 12 மணி நிலவரப்படி குறைத்து 1 லட்சம் வாக்கு வித்தியாசம் இருந்தால் மட்டுமே தற்போதே வெற்றியை உறுதி செய்ய முடியும்.

    இந்நிலையில் இந்தூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடந்துக் கொண்டு இருக்கும் நிலையில். 1.35 லட்சத்திற்கு மேற்பட்டோர் நோட்டாவிற்கு வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தூர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளருக்கு 60 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

    தற்போதைய நிலவரப்படி இந்தூரில் பா.ஜ.க. வேட்பாளர் சுமார் 7 லட்சம் வாக்குகளை பெற்று முன்னணியில் உள்ளார். கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் பா.ஜ.க. கோட்டையாக கருதப்படும் இந்தூர் தொகுதியில் இந்த முறை சுமார் 1 லட்சத்து 35 ஆயிரம் பேர் நோட்டாவுக்கு வாக்களித்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நோட்டாவுக்கு என்று பொதுவான குறிப்பிட்ட சின்னம் எதுவும் கிடையாது.
    • தமிழகம் இந்த வரிசையில் பீகார், உத்தரபிரதேசத்தை தொடர்ந்து 3-வது இடத்தை பிடித்தது.

    வாக்காளர்கள் தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லாவிட்டால் செல்லாத ஓட்டு போடுவதற்கு பதில் "விருப்பம் இல்லை" என்று வாக்களிக்கும் முறை உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த நடைமுறைக்கு "நோட்டா" என்ற பெயர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. 2013-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மின்னணு எந்திரங்களில் நோட்டாவுக்கு வாக்காளிப்பதற்கு என்று வசதிகள் செய்யப்பட்டன.

    நோட்டாவுக்கு என்று பொதுவான குறிப்பிட்ட சின்னம் எதுவும் கிடையாது. சிலர் தேர்தல்களில் நோட்டாவுக்கு என்று தனி சின்னத்தை தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் கடந்த தேர்தலில் நோட்டா எனும் ஆங்கில வார்த்தை பயன்படுத்தப்பட்டது.

    மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர்களுக்கு பிறகு கடைசியில் நோட்டா பிரிவு சேர்க்கப்பட்டு இருக்கும்.

    2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் நோட்டா அறிமுகம் ஆன போது நாடு முழுவதும் சுமார் 60 லட்சம் பேர் நோட்டாவுக்கு வாக்களித்து இருந்தனர். அதாவது வாக்களித்தவர்களில் சுமார் 2 சதவீதம் பேர் எந்த வேட்பாளரையும் விரும்பவில்லை என்பது தெரிய வந்தது.

    2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 65 லட்சத்து 22 ஆயிரமாக அதிகரித்தது. அதிகபட்சமாக பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் சுமார் 8 லட்சத்து 17 ஆயிரம் பேர் நோட்டாவுக்கு வாக்களித்து இருந்தனர்.

    பீகாரை தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் 7 லட்சத்து 25 ஆயிரம் பேர் நோட்டாவுக்கு வாக்களித்து இருந்தனர். தமிழகம் இந்த வரிசையில் பீகார், உத்தரபிரதேசத்தை தொடர்ந்து 3-வது இடத்தை பிடித்தது.

    தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 5 லட்சத்து 50 ஆயிரத்து 570 பேர் நோட்டாவுக்கு வாக்களித்தனர். மேற்கு வங்காளம், குஜராத், ராஜஸ்தான், மராட்டியம், மத்திய பிரதேசம், ஆந்திரா மாநிலங்களிலும் கணிசமானவர்கள் நோட்டாவுக்கு வாக்களித்து இருந்தனர்.

    இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் சுமார் 1 கோடி பேர் நோட்டாவுக்கு வாக்களிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதுதான் இதற்கு காரணமாக கருதப்படுகிறது. தமிழகத்திலும் நோட்டாவுக்கு வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்துக்கு மேல் செல்லக்கூடும் என்று ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

    சில தொகுதிகளில் நோட்டாவுக்கு விழும் வாக்குகள் கட்சி வேட்பாளர்களின் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக கூடமாறலாம் என்கிறார்கள். இதன் காரணமாக அரசியல் கட்சி வேட்பாளர்கள் கடும் பீதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    இளைய தலைமுறை மற்றும் முதல் முதலாக வாக்களிக்கப் போகும் இளைஞர்களை பிரசாரத்தின் மூலம் கவர்ந்தால் மட்டுமே அவர்களை நோட்டாவில் இருந்து தங்கள் பக்கம் திருப்ப முடியும் என்று அரசியல் கட்சி வேட்பாளர்கள் இளம் வாக்காளர்களுக்காக சமூக வலைதள பிரசாரத்தை அதிகப்படுத்தி உள்ளனர்.

    • மனிதர்களையும் தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.
    • அரசியல் கட்சிகளை புறக்கணிக்கும் வகையில் நோட்டாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறோம்.

    மேட்டுப்பாளையம்:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அரசியல்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு சமூக அமைப்புகள் பிரசாரம் செய்து வருகின்றன. ஆனால் நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் நோட்டாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து அந்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

    மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் காட்டு யானைகள், மான், சிறுத்தை, மயில், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விளைநிலங்களில் நுழைந்து பயிர்களை தின்று சேதப்படுத்துவதுடன், மனிதர்களையும் தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் வன அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் அரசியல் கட்சிகளை புறக்கணிக்கும் வகையில் நோட்டாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • குஜராத்தில் பா.ஜ.க. தொடர்ந்து 7-வது முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது.
    • இந்த தேர்தலில் நோட்டா வாக்குகள் 9 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.

    புதுடெல்லி :

    குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. சாதனை வெற்றி பெற்று தொடர்ந்து 7-வது முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது. இந்த மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் பலத்த பின்னடைவை சந்தித்துள்ளன. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி நோட்டா ஓட்டுகளிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நோட்டா, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் இடம் பெற்றுள்ள மேற்கண்ட எந்தவொரு வேட்பாளருக்கும் ஓட்டு போட விருப்பம் இல்லை என்று கூறி அவர்களை நிராகரிக்கும் வகையில் கடைசியில் இடம்பெறுகிற சின்னத்தில் பதிவு செய்கிற வாக்கு ஆகும்.

    இந்த சட்டசபை தேர்தலில் நோட்டாவுக்கு 5 லட்சத்து ஆயிரத்து 202 ஓட்டுகள் விழுந்துள்ளன. மொத்த வாக்குகளில் இது 1.5 சதவீதம் ஆகும். கடந்த 2017 தேர்தலில் நோட்டாவுக்கு விழுந்த வாக்குகள் 5 லட்சத்து 51 ஆயிரத்து 594 ஆகும். இத்துடன் ஒப்பிடுகையில் இந்த தேர்தலில் நோட்டா வாக்குகள் 9 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.

    இந்த தேர்தலில் அதிகபட்சமாக கேத்பிரம்மா தொகுதியில் நோட்டாவுக்கு 7 ஆயிரத்து 331 ஓட்டுகள் விழுந்தன. தண்டா தொகுதியில் 5 ஆயிரத்து 213 வாக்குகளும், சோட்டா உதய்பூரில் 5 ஆயிரத்து 93 வாக்குகளும் நோட்டாவுக்கு கிடைத்துள்ளன.

    • நோட்டா என்ற முறை 2013-ல் அறிமுகம் செய்யப்பட்டது.
    • கடந்த 5 ஆண்டுகளில் நோட்டாவுக்கு 1 கோடியே 29 லட்சம் ஓட்டுகள் கிடைத்துள்ளன.

    புதுடெல்லி:

    தேர்தல்களின்போது போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஓட்டளிக்க விரும்பாதவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்யும் வகையில், நோட்டா என்ற முறை 2013-ல் அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்நிலையில், 2018 முதல் 2022 வரை நடந்துள்ள பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்கள் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் நோட்டாவுக்கு பதிவான ஓட்டுகள் குறித்து ஏ.டி.ஆர். எனப்படும் ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் ஆய்வு மேற்கொண்டது.

    அதில், கடந்த 5 ஆண்டுகளில் நோட்டாவுக்கு மொத்தம் 1 கோடியே 29 லட்சம் ஓட்டுகள் போடப்பட்டுள்ளது தெரிய வந்தது.

    சட்டசபை தேர்தல்களில் நோட்டாவுக்கு விழுந்த ஓட்டுகள் மட்டும் 65 லட்சத்து 23 ஆயிரத்து 975. இதன் சதவீதம் 1.06 ஆகும்.

    சட்டசபை தேர்தல்களில் மகாராஷ்டிர மாநிலத்தில் 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் கிடைத்த 7 லட்சத்து 42 ஆயிரத்து 134 ஓட்டுகள்தான், நோட்டாவுக்கு கிடைத்த அதிகபட்ச ஓட்டுகள் ஆகும்.

    மிசோரமில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் கிடைத்த 2 ஆயிரத்து 917 ஓட்டுகள்தான் குறைந்தபட்ச ஓட்டுகள்.

    பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை பீகாரின் கோபால்கஞ்ச் தொகுதியில் கிடைத்த 51 ஆயிரத்து 660 ஓட்டுகள்தான் அதிகபட்ச ஓட்டுகள்.

    லட்சத்தீவு தொகுதியில் கிடைத்த 100 ஓட்டுகள்தான் குறைந்தபட்ச ஓட்டுகள் ஆகும் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

    ×