என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லக்‌ஷயா சென்"

    • காலிறுதியில் இந்தியாவின் லக்‌ஷயாவும் சீன வீரர் லி ஷி ஃபெங்கும் மோதினர்.
    • இதில் 21-10, 21-16 என்ற செட் கணக்கில் சீன வீரர் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    பர்மிங்காம்:

    பழம்பெருமை வாய்ந்த ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி சார்பாக எச்.எஸ்.பிரனாய், லக்ஷயா சென், பிவி சிந்து ஆகியோரும் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ்-சிராக் ஷெட்டி ஜோடியும், பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் காயத்ரி கோபிசந்த்-திரிஷா ஜாலி, அஸ்வினி பொன்னப்பா-தனிஷா கிரஸ்டோ இணையும், கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் கபூர்-ருத்விகா ஷிவானி, துருவ் கபிலா-தனிஷா, சதீஷ் கருணாகரன்-ஆத்யா வரியாத் ஜோடியும் கலந்து கொண்டனர்.

    இதில் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் எச்.எஸ்.பிரனாய், பிவி சிந்து முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறினர். லக்ஷயா சென் மட்டும் காலிறுதிக்கு முன்னேறினார்.

    காலிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்தியாவின் லக்ஷயாவும் சீன வீரர் லி ஷி ஃபெங்கும் மோதினர். இதில் 21-10, 21-16 என்ற செட் கணக்கில் சீன வீரர் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடர் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறுகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் வெற்றி பெற்றார்.

    பர்மிங்காம்:

    ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது. இந்தப் போட்டி வரும் 16-ம் தேதி வரை நடக்கிறது.

    இந்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்திய வீரர் லக்ஷயா சென், இந்தோனேசியாவின் ஜோனாதன் கிறிஸ்டி உடன் மோதினார்.

    பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் லக்ஷயா சென் 21-13, 21-10 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • தமிழகத்தை சேர்ந்த சங்கர் முத்துசாமி 21-18, 21-23, 21-13 என்ற செட் கணக்கில் இஸ்ரேலின் ஜில்பர்மேனை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
    • சங்கர் முத்துசாமி, தகுதி சுற்று மூலம் பிரதான சுற்றுக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்க ஓபன் சர்வதேச பேட்மின்டன் போட்டி கவுன்சில் பிளப்ஸ்சிஸ் நகரில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து கால் இறுதிக்கு முன்னேறினர்.

    இந்திய நேரப்படி இன்று நடந்த 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் பி.வி.சிந்து 21-14, 21-12 என்ற நேர் செட் கணக்கில் சுங் சுரோ யூனை (தைவான்) தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார்.

    பி.வி.சிந்து கால் இறுதியில் சீனாவின் காவோ பாங்ஜியுடன் மோதுகிறார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் லக்ஷயா சென் 21-8, 23-21 என்ற செட் கணக்கில் (செக் குடியரசு) தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த சங்கர் முத்துசாமி 21-18, 21-23, 21-13 என்ற செட் கணக்கில் இஸ்ரேலின் ஜில்பர்மேனை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

    நாளை நடக்கும் கால் இறுதியில் லக்ஷயா சென்-சங்கர் முத்துசாமி ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள். சங்கர் முத்துசாமி, தகுதி சுற்று மூலம் பிரதான சுற்றுக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவின் லக்ஷயா சென்-இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டி மோதினார்.
    • லக்ஷயா சென் 15-21, 21-13, 16-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

    ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று அரைஇறுதியில் இந்தியாவின் லக்ஷயா சென்-இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டி மோதினார்.

    இதில் லக்ஷயா சென் 15-21, 21-13, 16-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதன்மூலம் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. மற்றொரு அரைஇறுதியில் ஆக்சல்சென் (டென்மார்க்)-நரோகா (ஜப்பான்) பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

    • சீனாவில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறும் ஆசிய விளையாட்டு பிகப்பெரிய போட்டியாகும்.
    • 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த போட்டி சிறப்பான ஒன்றாகும்.

    கவுகாத்தி:

    28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 21-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகனில் நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கிறது. கடந்த பல போட்டிகளில் நான் விளையாடிய விதம் உலக போட்டியில் சிறப்பாக செயல்பட உதவிகரமாக இருக்கும் என்று நினைக்கிறேன். உலக போட்டிக்காக நன்றாக தயாராகி இருக்கிறேன். கடந்த பல்வேறு போட்டிகளில் எனது ஆட்ட 'பார்ம்' நன்றாக இருந்தது. ஆனாலும் இன்னும் சில விஷயங்களை கற்றுக்கொள்வதுடன் முன்னேற்றமும் காண வேண்டியது அவசியமானதாகும். இந்த போட்டிக்கு தயாராக விளையாடிய பல போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறேன். அது எனக்கு நிறையை தன்னம்பிக்கையை கொடுக்கும். வரும் வாரத்திலும் நல்ல பயிற்சியை எதிர்நோக்குகிறேன். அத்துடன் உலக போட்டியில் சிறப்பாக செயல்பட்டு பதக்கம் வெல்ல முடியும் என்று நம்புகிறேன்.

    சீனாவில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறும் ஆசிய விளையாட்டு பிகப்பெரிய போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த போட்டி சிறப்பான ஒன்றாகும். ஆசிய விளையாட்டு போட்டியில் சிறப்பாக செயல்படுவதை எதிர்நோக்கி காத்து இருக்கிறேன். ஆனால் தற்போது எனது முதல் முன்னுரிமை உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தான். அது முடிந்த பிறகு தான் ஆசிய விளையாட்டு போட்டி குறித்து கவனம் செலுத்துவேன். நான் விரைவில் உலக தரவரிசையில் முதல் 8 இடங்களுக்குள் வர வேண்டும் என்று விரும்புகிறேன். பின்னர் ஒலிம்பிக் தகுதி சுற்று முடிவைடையும் போது 'டாப்-5' இடங்களுக்குள் வருவதே எனது நோக்கமாகும். அதேநேரத்தில் நிறைய போட்டிகள் வர இருக்கின்றன. எனவே வரும் பெரிய போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுவேன். வெற்றி பெற்றால் தானாகவே தரவரிசையில் ஏற்றம் ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். உத்தரகாண்டை சேர்ந்த 21 வயதான லக்ஷயா சென் தற்போது உலக தரவரிசையில் 11-வது இடத்தில் இருக்கிறார். அவர் 2021-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஒற்றையர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்று இருந்தார்.

    • ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடர் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறுகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் தோல்வி அடைந்தார்.

    பர்மிங்காம்:

    ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காம் நகரில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டி வரும் 16-ம் தேதி வரை நடக்கிறது.

    இந்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்ஷயா சென், தைவானின் சு லீ யாங் உடன் மோதினார்.

    பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் முதல் செட்டை லக்ஷயா சென் 13-21 என இழந்தார். இதில் சுதாரித்துக் கொண்ட லக்ஷயா சென் அடுத்த இரு செட்களை 21-17, 21-15 என்ற செட் கணக்கில் போராடி வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் முதல் சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து விலகினார்.

    • ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் மலேசியாவில் நடைபெற்று வருகிறது.
    • இந்திய ஆண்கள் அணி 4-1 என்ற கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

    சிலாங்கூர்:

    ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் மலேசியாவில் உள்ள சிலாங்கூரில் நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதின. முதலில் நடந்த ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய், ஹாங்காங்கின் யங் கா லாங் அங்குஸ் உடன் மோதினார். இதில் பிரனாய் 18-21, 14-21 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். இதன் மூலம் ஹாங்காங் முதலில் 1-0 என முன்னிலை பெற்றது.

    அடுத்து நடந்த இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி ஜோடி தங்களது போட்டியில் வெற்றி பெற்றனர்.

    தொடர்ந்து நடந்த ஒற்றையர் பிரிவில் லக்ஷயா சென் மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்று இந்தியா முன்னிலை பெற உதவினர்.

    இறுதியில், இந்திய அணி 4-1 என்ற கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்தியா காலிறுதியில் சீனாவுடன் மோதுகிறது.

    • ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது.
    • இத்தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    பர்மிங்காம்:

    ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்கியது. மார்ச் 17-ம் தேதி வரை நடைபெறும் 1,000 தரவரிசை புள்ளி கொண்ட இந்தப் போட்டியில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், டென்மார்க் வீரர் ஆண்டர்ஸ் அன்டோன்சென்னுடன் மோதினார்.

    இதில் லக்ஷயா சென் 24-22 என முதல் செட்டைக் கைப்பற்றினார். 2வது செட்டை 21-11 என சென் இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது சுற்றில் பின்தங்கி இருந்த லக்ஷயா சென் கடுமையாக போராடினார்.

    இறுதியில், லக்ஷயா சென் 24-22, 11-21, 21-14 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.

    • ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது.
    • இத்தொடரில் இந்தியாவின் லக்‌ஷயா சென் காலிறுதியில் வெற்றி பெற்றார்.

    பர்மிங்காம்:

    ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை வரை நடைபெறும் 1,000 தரவரிசை புள்ளி கொண்ட இந்தப் போட்டியில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், மலேசிய வீரர் லீயுடன் மோதினார்.

    இதில் லக்ஷயா சென் 20-22 என முதல் செட்டை இழந்தார். இதனால் சுதாரித்துக் கொண்ட சென் அடுத்த இரு செட்களை 21-16, 21-19 என கைப்பற்றினார்.

    இறுதியில், லக்ஷயா சென் 20-22, 21-16, 21-19 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.

    • ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது.
    • இத்தொடரில் இந்தியாவின் லக்‌ஷயா சென் அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.

    பர்மிங்காம்:

    ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், இந்தோனேசிய வீரர் கிறிஸ்டியுடன்

    மோதினார்.

    இதில் லக்ஷயா சென் 12-21 என முதல் செட்டை இழந்தார். அடுத்த செட்டை 21-10 என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்றில் கிறிஸ்டி 21-15 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இறுதியில், லக்ஷயா சென் 12-21, 21-10, 15-21 என்ற செட் கணக்கில் தோற்று தொடரில் இருந்து வெளியேறினார்.

    • சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
    • இந்தியாவின் லக்‌ஷயா சென் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், டென்மார்க்கின் விக்டர் அக்செல்சென்னுடன் மோதினார்.

    இதில் லக்ஷயா சென் 13-21, 21-16, 13-21 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    மற்றொரு வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த், ஜப்பான் வீரர் நரோகாவுடன் மோதினார். இதில் கிடாம்பி 4-21 என முதல் செட்டை இழந்தார்.

    2வது செட்டில் 3-11 என பின்தங்கியிருந்த நிலையில், காயம் காரணமாக விலகினார். இதன்மூலம் தொடரில் இருந்தும் வெளியேறினார்.

    சிங்கப்பூர் ஓபன் தொடரின் முதல் சுற்றிலேயே இந்திய வீரர்கள் 2 பேர் வெளியானது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    • இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது.
    • இதில் இந்தியாவின் லக்‌ஷயா சென் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், ஜப்பானின் கெண்டா நிஷிமோடோவுடன் மோதினார்.

    இதில் லக்ஷயா சென் 21-9, 21-15 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் காலிறுதியில் லக்ஷயா சென், டென்மார்க் வீரர் ஆண்டர்ஸ் அண்டோன்சென்னுடன் மோதுகிறார்.

    ×