search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லக்‌ஷயா சென்"

    • முதல் செட்டை லக்ஷயா சென் கைப்பற்றினார்.
    • இரண்டாவது செட்டை மலேசிய வீரர் கைப்பற்றினார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.

    இந்நிலையில், பேட்மிண்டன் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய வீரர் லக்ஷயா சென், மலேசியாவின் லீ சி ஜியா உடன் மோதினார்.

    இதில் லக்ஷயா சென் 21-13 என முதல் செட்டை கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக மலேசியா வீரர் 2வது செட்டை 21-16 என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை 21-11 என்ற கணக்கில் மலேசிய வீரர் வென்று வெண்கலப் பதக்கம் பெற்றார். இதன்மூலம் லக்ஷயா சென் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • இந்திய வீரர் லக்‌ஷயா சென் அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.
    • லக்‌ஷயா சென் மிகவும் அபார திறமை வாய்ந்தவர் என்றார் அக்சல்சென்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.

    இன்று நடந்த பேட்மிண்டன் அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் லக்ஷயா சென், டென்மார்க் வீரர் விக்டர் அக்சல்சென்னுடன் மோதினார்.

    இதில் லக்ஷயா சென் 20-22, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதன்மூலம் டென்மார்க் வீரர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இந்நிலையில், வெற்றிக்கு பிறகு டென்மார்க் வீரர் விக்டர் அக்சல்சென் கூறுகையில், லக்ஷயா சென் மிகவும் அபார திறமை வாய்ந்தவர். இன்றைய போட்டி எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. அவருக்கு மிக சிறந்த எதிர்காலம் உள்ளது. அடுத்த 4 ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டியில் லக்ஷயா சென் நிச்சயம் தங்கம் வெல்வார். அவர் வெற்றிபெற வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.

    • இந்திய வீரர் லக்‌ஷயா சென் அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.
    • குத்துச்சண்டையில் லவ்லினா போர்ஹோகெய்ன் தோல்வி அடைந்தார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.

    இந்நிலையில், பேட்மிண்டன் அரையிறுதியில் இந்திய வீரர் லக்ஷயா சென், டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்சென்னுடன் மோதினார்.

    இதில் லக்ஷயா சென் 20-22, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதன்மூலம் டென்மார்க் வீரர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    பேட்மிண்டன் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்திய ஜோடி சாத்விக்-சிராக் ஜோடி தோல்வி அடைந்து வெளியேறியது.

    • துப்பாக்கிச் சுடுதலில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்றனர்.
    • மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.

    இந்நிலையில், பேட்மிண்டன் தொடரின் காலிறுதியில் இந்திய வீரர் லக்ஷயா சென், சீன தைபே வீரர் சோ டைனுடன் மோதினார்.

    போட்டியின் துவக்கத்தில் நன்றாக விளையாடி சீன வீரர் 21-19 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார். இதன் பிறகு சிறப்பாக விளையாடிய லக்ஷயா சென் 21-15 மற்றும் 21-12 என்ற கணக்கில் அடுத்தடுத்து 2 செட்களை கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில், மேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை லக்ஷ்யா சென் பெற்றுள்ளார்.

    • இந்திய வீரர் லக்‌ஷயா சென் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
    • இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்திய ஜோடி தோல்வி அடைந்தது.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.

    இந்நிலையில், பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் லக்ஷயா சென், சக நாட்டு வீரர் எச்.எஸ்.பிரனாயுடன் மோதினார்.

    தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் முதல் செட்டை 21-12 என கைப்பற்றினார். 2வது செட்டிலும் லக்ஷயா சென் தொடர்ந்து முன்னிலை பெற்றார்.

    இறுதியில், லக்ஷயா சென் 21-12, 21-6 என வென்று காலிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.

    பேட்மிண்டன் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்திய ஜோடி சாத்விக்-சிராக் ஜோடி தோல்வி அடைந்து வெளியேறியது.

    • பேட்மிண்டன் Round of 16 சுற்றில் லஷ்யா சென் மற்றும் பிரனாய் நேருக்கு நேர் மோதுகின்றனர்.
    • இந்த ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர் வெண்கலம் வென்றார். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர்,சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.

    இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவின் Round of 16 சுற்றில் இந்திய வீரர்கள் லஷ்யா சென் மற்றும் பிரனாய் நேருக்கு நேர் மோதுகின்றனர். இப்போட்டி இன்று மாலை 5.40 மணிக்கு நடைபெற உள்ளது.

    பாரிஸ் ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டனில் இந்திய வீரர்கள் நேருக்கு நேர் மோதுவதால் வெற்றி பெறும் ஒருவர் மட்டுமே காலிறுதிக்கு முன்னேற முடியும். இதனால் இந்த ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

    • இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் லக்ஷயா சென் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
    • இந்திய வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர் வெண்கலம் வென்றார். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர்,சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.

    இந்நிலையில், பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் லக்ஷயா சென், இந்தோனேசியாவின் ஜோனாதன் கிறிஸ்டியுடன் மோதினார்.

    தொடக்கத்தில் 2-8 என பின்தங்கிய லக்ஷயா சென், அதிரடியாக ஆடி முதல் செட்டை கைப்பற்றினார். 2வது செட்டிலும் லக்ஷயா சென் தொடர்ந்து முன்னிலை பெற்றார்.

    இறுதியில், லக்ஷயா சென் 21-18, 21-12 என வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

    • இன்று நடந்த துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் மானு பாகெர் இறுதிக்கு முன்னேறினார்.
    • முதல் சுற்றில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்திய நேரப்படி நேற்று இரவு 11 மணி அளவில் ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக தொடங்கியது.

    இந்த அணிவகுப்பில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இன்று நடந்த துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் மானு பாகெர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இந்நிலையில், பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் லக்ஷயா சென், கவுதமாலாவின் கெவின் கோர்டானுடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை லக்ஷயா சென் 21-8 என எளிதில் வென்றார். 2வது செட்டில் கெவின் கடும் போராட்டம் அளித்தார். இதனால் முதலில் பின்தங்கிய லக்ஷயா சென், அடுத்து அதிரடியாக ஆடி 22-20 என்ற புள்ளிக் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது.
    • இதில் இந்தியாவின் லக்‌ஷயா சென் காலிறுதியில் தோல்வி அடைந்தார்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், டென்மார்க் வீரர் ஆண்டர்ஸ் அண்டோன்சென்னுடன் மோதினார்.

    இதில் லக்ஷயா சென் 22-24, 18-21 என்ற செட் கணக்கில் தோற்று தொடரில் இருந்து வெளியேறினார்.

    • இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது.
    • இதில் இந்தியாவின் லக்‌ஷயா சென் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், ஜப்பானின் கெண்டா நிஷிமோடோவுடன் மோதினார்.

    இதில் லக்ஷயா சென் 21-9, 21-15 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் காலிறுதியில் லக்ஷயா சென், டென்மார்க் வீரர் ஆண்டர்ஸ் அண்டோன்சென்னுடன் மோதுகிறார்.

    • சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
    • இந்தியாவின் லக்‌ஷயா சென் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், டென்மார்க்கின் விக்டர் அக்செல்சென்னுடன் மோதினார்.

    இதில் லக்ஷயா சென் 13-21, 21-16, 13-21 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    மற்றொரு வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த், ஜப்பான் வீரர் நரோகாவுடன் மோதினார். இதில் கிடாம்பி 4-21 என முதல் செட்டை இழந்தார்.

    2வது செட்டில் 3-11 என பின்தங்கியிருந்த நிலையில், காயம் காரணமாக விலகினார். இதன்மூலம் தொடரில் இருந்தும் வெளியேறினார்.

    சிங்கப்பூர் ஓபன் தொடரின் முதல் சுற்றிலேயே இந்திய வீரர்கள் 2 பேர் வெளியானது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    • ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது.
    • இத்தொடரில் இந்தியாவின் லக்‌ஷயா சென் அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.

    பர்மிங்காம்:

    ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், இந்தோனேசிய வீரர் கிறிஸ்டியுடன்

    மோதினார்.

    இதில் லக்ஷயா சென் 12-21 என முதல் செட்டை இழந்தார். அடுத்த செட்டை 21-10 என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்றில் கிறிஸ்டி 21-15 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இறுதியில், லக்ஷயா சென் 12-21, 21-10, 15-21 என்ற செட் கணக்கில் தோற்று தொடரில் இருந்து வெளியேறினார்.

    ×