search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீமைகள்"

    • சித்த மருத்துவ மருந்துகளில் வால் மிளகு முக்கிய பொருளாக சேர்க்கப்படுகிறது.
    • வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்த கூடும்.

    வால் மிளகு என்பது இருவித்திலை தாவரம் ஆகும். மிளகின் அடிப்பகுதியில் வால் போன்ற நீட்சியை கொண்டிருப்பதால் வால் மிளகு என்று அழைக்கப்படுகிறது. சித்த மருத்துவத்தில் வால் மிளகு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. நம் உடலில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. நமக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளித்தாலும், அதிகமாக பயன்படுத்தும்போது பல தீமைகளையும் ஏற்படுத்தத்தான் செய்கிறது. எனவே, வால் மிளகின் தீமைகள் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளும் வகையில் இப்பதிவில் அதன் தீமைகள் பற்றி விவரித்துள்ளோம்.

    வால்மிளகு என்றால் என்ன.?

    வால்மிளகு என்பது மரத்தில் படர்ந்து வளரும் பலபருவக் கொடித் தாவரம் ஆகும். இதனை ஜாவா, தாய்லாந்து, இலங்கை, மேற்கிந்தியத் தீவு போன்ற பகுதிகளில் பயிர் செய்கின்றனர். இது காரமும், சற்று கசப்பு சுவை கொண்டதாகவும் இருக்கிறது.

    மூலக் கடுப்பு, வயிற்றுக் கடுப்பு முதலான நோய்களுக்கு பயன்படுத்தப்படும் சித்த மருத்துவ மருந்துகளில் வால் மிளகு முக்கிய பொருளாக சேர்க்கப்படுகிறது.

    வால் மிளகு அதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்:

    • வால் மிளகு காரத்துடன் கூடிய வலுவான சுவையுடையது. எனவே, இதனை அதிக அளவில் உட்கொள்ள கூடாது. அப்படி அதிகமாக உட்கொண்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.


    • வால் மிளகு கடுமையான எரிச்சலை ஏற்படுத்தக்கூடியது. வயிற்று புண் மற்றும் வயிற்று எரிச்சல் உள்ளவர்கள் வால் மிளகை அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது மேலும், வயிற்று எரிச்சலை அதிகப்படுத்தும்.

    • வால் மிளகு ஆண்மை குறைவு பிரச்சனையை சரிசெய்யக்கூடியது. இதனால், பல ஆண்கள் வால் மிளகை அதிக அளவிலும் அடிக்கடியும் உட்கொண்டு வருவார்கள். ஆனால், வால் மிளகை அதிகமாக எடுத்து கொள்ள கூடாது. அப்படி அதிகமாக எடுத்து கொண்டால் ஆண்களுக்கு பல ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும்.

    • வயதானவர்கள், வால் மிளகினை அதிகமாக எடுத்துக்கொண்டால் வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்த கூடும்.

    எனவே, வால் மிளகினை குறைந்த அளவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அளவுக்கு மீறி பயன்படுத்தினால் மேற்கூரிய பக்கவிளைவுகள் ஏற்படும்.

    • உடலுக்கு தேவையான புரதத்துக்கும் தயிர் அவசியமானது.
    • உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்பது பற்றி பார்ப்போம்.

    உண்ணும் உணவில் தயிர் தவிர்க்கமுடியாத அங்கமாக இருக்கிறது. தயிரை ருசிக்க ஆர்வம் காண்பிக்காதவர்கள் கூட ரைத்தா, லஸ்சி, பச்சடி வடிவில் உட்கொள்கிறார்கள். தயிரில் புரோபயாடிக்குகள் நிறைவாக உள்ளன. அதில் இருக்கும் நன்மை தரும் பாக்டீரியாக்கள் குடல் ஆரோக்கியத்தையும், செரிமானத்தையும் மேம்படுத்தும். எலும்புகளின் ஆரோக்கியத்துக்கும், உடலுக்கு தேவையான புரதத்துக்கும் தயிர் அவசியமானது.

    தயிரை எப்போது சாப்பிடுவது சரியானது என்ற குழப்பம் பலரிடம் இருக்கிறது. அதனை எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் அவரவர் உடல் நலனை பொறுத்து உண்ணும் நேரத்தை தீர்மானிப்பது நல்லது.

    குறிப்பாக சளி, இருமல், சுவாச கோளாறுகள் சார்ந்த பிரச்சினை இருப்பவர்கள் தயிர் உண்ணும் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். எந்தெந்த நேரத்தில் தயிர் சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்பது பற்றி பார்ப்போம்.

    காலை: சுகாதார வல்லுனர்கள், ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்துப்படி, காலையில் தயிர் சாப்பிட்டுவிட்டு அன்றைய நாளை தொடங்குவது வளர்சிதை மாற்றத்தை தூண்டும். தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் செரிமானத்தை சீராக்கவும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.

    பழங்கள் அல்லது முழு தானியங்களுடன் தயிர் கலந்து காலை உணவாக உட்கொள்வது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தையும் அளிக்கும். அன்றைய நாள் முழுவதையும் திருப்தியுடன் உணரவைக்கும்.

    மதியம்: மதிய உணவில் அவசியமாக தயிரை சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் மதியம் தயிர் சாப்பிடுவது அன்றைய நாளில் இழந்த அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை நிரப்ப உதவும்.

    பொதுவாக மதிய வேளை நெருங்கும்போது நமது உடலில் ஆற்றலின் அளவு குறைய தொடங்கும். சாப்பாட்டுடன் தயிர் சாப்பிடும்போது ஊட்டச்சத்து இழப்பை ஈடு செய்துவிடும்.

    அத்துடன் திடீர் பசியை போக்க உதவும். அதனால் மாலை வேளையில் நொறுக்குத்தீனிகளை அதிகம் சாப்பிட தோன்றாது. ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பேணுவதற்கும் தயிர் வித்திடும்.

    இரவு: ஆயுர்வேத வல்லுனர்களின் கூற்றுப்படி இரவு உணவுடனோ அல்லது இரவு உணவை சாப்பிட்டு முடித்த பிறகோ தயிர் சாப்பிடுவது ஊட்டச்சத்துக்களை சீராக பராமரிக்க உதவும். குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் செய்யும்.

    அதேவேளையில் சளி, சுவாசம் சார்ந்த பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் இரவில் தயிரை தவிர்ப்பது நல்லது. மற்றவர்கள் தயிருடன் அன்றைய நாளை நிறைவு செய்வது செரிமானத்திற்கு நன்மை சேர்க்கும்.

    கால்சியம், புரத தேவைகளை ஈடு செய்யும். ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படச் செய்யும்.

    • போதை பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை குறித்து எடுத்துரைத்தார்.
    • உதவி திட்ட அலுவலர் கில்பர்ட் மற்றும் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தூய அந்தோணி யார் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்காக முன்னையம்பட்டி ஊராட்சி புனித அந்தோணியார் தொடக்கப்பள்ளியில் சிறப்பு முகாம் நடைபெற்றது.

    சிறப்பு விருந்தினராக பாரத சிற்பி டாக்டர் இரா.பிரனேஷ் இன்பென்ட் ராஜ் கலந்து கொண்டு , இன்றைய மாணவர்களின் தேவைகளும், சமூகப் பணிகளில் மாணவர்கள் தங்களை எவ்வாறு ஈடுபடுத்திக் கொள்வது, தன்னம்பிக்கை வளர்ப்பதை பற்றியும், போதைப் பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளைப் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். மேலும் பள்ளி நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்து கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் ஏகம் பவுண்டேஷன் இன்பதுரை, ரமேஷ் பிரகாஷ், தூய அந்தோனணியார் மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட திட்ட அலுவலர் பிரிட்டோ , உதவி திட்ட அலுவலர் கில்பர்ட் மற்றும் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி மீளமுடியாமல் வாழ்க்கை வீணாகிறது.
    • தீமைகளிலிருந்து மாணவர்கள் தங்களை காப்பாற்றி கொள்ள வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச போதை ஒழிப்பு தின கருத்தரங்கம் திருத்துறைப்பூண்டி அரசு கலை கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மலர்மதி தலைமை தாங்கினார். பாரதமாதா சேவை நிறுவனங்களின் நிறுவனர் எடையூர் மணிமாறன் முன்னிலை வகித்தார். மத்திய பல்கலைக்கழக உதவி பேராசிரியர் சித்ரா அனைவரையும் வரவேற்றார். சமூக பணித்துறை தலைவர் பேராசிரியர் சிகாமணி உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் கலந்து கொண்டு பேசுகையில்:- போதை பொருட்களுக்கு மாணவர்கள் அதிகளவில் அடிமையாகி வருகின்றனர். இதனால் அதிலிருந்து மீளமுடியாமல் அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடுகிறது. இதன் தீமைகளை அறிந்து கொண்டு மாணவர்கள் தங்களை காப்பாற்றி கொள்ள வேண்டும். இது போன்ற செயல்களில் யார் ஈடுபட்டாலும் காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும், மேலும் மாணவர்கள் தங்களை நல்வழிபடுத்தி கொள்ள காவல்துறை எல்லா நேரங்களிலும் துணை நிற்கும் என்றார்.

    போதை பழக்கத்ததால் ஏற்படும் தீமைகள் குறித்து டாக்டர். திலீபன் ராஜா விளக்கினார். ஒருங்கிணைந்த சேவை மைய உளவியலாளர் ராஜேஸ்வரி போதை பழக்கத்தில் இருந்து மீள்வது குறித்து கூறினார். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் இளங்கிள்ளிவளவன் கலந்துகொண்டு பேசினார்.

    முடிவில் மத்திய பல்கலைக்கழக விரிவுரையாளர் சரண்யா சுந்தர்ராஜ் நன்றி கூறினார்.

    • பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் முகமதுபாரூக் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    • ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகிகள் மற்றும் அலுவலக பணியாளர்கள், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    மெலட்டூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஊராட்சி ஒன்றியம், பண்டாரவாடை கிரசெண்ட் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் மது, போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

    பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வர் கோமதி வரவேற்று பேசினார்.

    பள்ளி நிர்வாகக்குழு தலைவர் முகமது ஜபுருல்லா தலைமை வகித்தார்.

    தாளாளர் முகமதுபாட்சா, முன்னாள் உறுப்பினர் அப்துல்ஜப்பார் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

    பள்ளி தமிழாசிரியை கலையரசி உறுதிமொழி வாசித்தார்.

    பள்ளியின் நிர்வாக அலுவலர் சி.கரிகாலன், துவக்கவுரை நிகழ்த்தினார்.

    இதில் பாபநாசம் காவல் கண்காணிப்பாளர் பூரணி, மனநல மருத்துவர் இக்பால் சரிப் ஆகியோர் கலந்து கொண்டு மது போதை பொருட்களினால் உண்டாகும் பாதிப்புகள், தீமைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.

    இந்த கருத்தரங்கில் பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் முகமதுபாரூக் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இறுதியில் ஆசிரியர் கென்னடி நன்றி கூறினார்.

    ஏற்பாடுகளை கிரசென்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகிகள் மற்றும் அலுவலக பணியாளர்கள், ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.

    • போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துக் கூறினார்.
    • இறுதியில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வலங்கைமான் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் நடைபெற்றது.

    இதில் போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதிலிருந்து தங்களை எவ்வாறு காப்பாற்றி கொள்வது என்பது குறித்தும், போதை பொருளுக்கு அடிமையான ஒருவரை எவ்வாறு மீட்க வேண்டும் என்பது குறித்தும் இன்ஸ்பெக்டர் ராஜா பேசினார்.

    பின்னர், மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இறுதியில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் போதைப் பொருள்தடுப்பு மற்றும் போதைப் பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • மாணவ, மாணவிகளுக்கு உடல் நலம் மற்றும் மன நலம் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

    ஈரோடு, ஆக. 13-

    ஈரோடு மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு வாரத்தை யொட்டி போதைப் பொருள் தடுப்பு, போதைப் பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தீமைகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இதையொட்டி ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் போதைப் பொருள்தடுப்பு மற்றும் போதைப் பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் அமைச்சர் சு.முத்து சாமி கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மாணவர்க ளின் மனநலம் மற்றும் கற்றல் குறைபாடுகள் குறித்த கருத்தரங்கம் நடை பெற்றது.

    இப்பயிற்சியில் 240 ஆசிரியர்கள் நேரடியாக வும், 380-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் காணொலி காட்சி வழியாகவும் பங்கேற்றனர்.

    மேலும் மாவட்ட கலெக்டரின் அறிவுரையின்படி, ஈரோடு மற்றும் திகிணாரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் போதை பொருள் விழிப்புணர்வு பற்றிய அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    பனக ஹள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்பு ணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    தொடர்ந்து தாளவாடி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி யில் போதைப்பு பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியும், கோபி செட்டி பாளையம் அடுத்த கரட்டடி பாளையம் அரசு மேல்நிலை ப்பள்ளியில் மாணவர்களுக்கான உடல்நலம் மற்றும் மனநலம் சார்ந்த விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.

    மேலும் போதை பொருள் தடுப்பு குறித்து டாக்டர்கள், செவிலியர்கள் பேசினர்.

    அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலும் மாணவ, மாணவிகளுக்கு உடல் நலம் மற்றும் மன நலம் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

    • மாணவ- மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து இன்ஸ்பெக்டர் கழனியப்பன் விளக்கமளித்தார்.
    • போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், விழிப்புணர்வு, ஒழுக்கம் குறித்தும் அறிவுரைகளை வழங்கினார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு ஆதிதிராவிட மேல்நிலைப்பள்ளி அபிஷேக கட்டளை மாணவ, மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து இன்ஸ்பெக்டர் கழனியப்பன் விளக்கம் அளித்தார். போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், விழிப்புணர்வு, ஒழுக்கம் குறித்தும் அறிவுரைகளை வழங்கினார். இதில் தலைமை ஆசிரியர் ஈஸ்வரி மற்றும் ஆசிரியர்கள், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கில்லி வளவன் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.

    • பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 2 கி.மீ. தூரம் சங்கிலி போல் ஒருவருக்கொருவர் கைகளை கோர்த்து அணிவகுத்து நின்றனர்.
    • போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று மதுவிலக்கு ஆய தீர்வைத் துறை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு சார்பில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 2 கி.மீ. தூரம் சங்கிலி போல் ஒருவருக்கொருவர் கைகளை கோர்த்து அணிவகுத்து நின்றனர். அவர்களுடன் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரும் கைகளை கோர்த்து நின்றார். மேலும் போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    இதேபோல் மாணவர்க ளும் போதைப் பொரு ளுக்கு எதிரான வாசக ங்கள் அடங்கிய பதாகை களை ஏந்தியவாறுநின்று விழிப்புணர்வு ஏற்படு த்தினர்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×