search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போட்டிகள்"

    • மாணவிகளுக்கு 19 வகையான போட்டிகள் நடைபெற உள்ளன.
    • விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கான கடைசி நாள் 23-ந்தேதியாகும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரூஸ்ரீ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிப்பதாவது:-

    விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலத் துறையின் கீழ் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டு பள்ளிகள் மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இதற்கான மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் 24.05.2023 அன்று காலை 8.00 மணிக்கு திருவாரூர் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.

    மாணவர்களுக்கான தேர்வுப்போட்டிகள் கீழ்க ண்ட விளையாட்டுக்களில் நடைபெறும் தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட 20 வகையான போட்டிகளும், மாணவியர்களுக்கு 19 வகையான போட்டிகளும் நடைபெற உள்ளது.

    மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டி களில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் கொண்டுள்ள மாணவ, மாணவியர்கள் விளையாட்டு விடுதி மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்படிவத்தினை 16.05.2023 முதல் விண்ணப்பிக்கலாம்.

    ஆன்லைன் விண்ணப்ப த்தினை பூர்த்தி செய்திடு வதற்கான கடைசி நாள் 23.04.2023 மாலை 5.00 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

    ஆன்லைன் விண்ணப்ப ங்கள் மட்டுமே ஏற்றுக்கொ ள்ளப்படும்.

    மேலும் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மைய அலைப்பேசி 9514000777 என்ற எண்ணிலும்,

    மாவட்ட விளையாட்டு அலுவலக தொலைபேசி எண் 04366-290620-லும் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முன்னாள் ராணுவ வீரர்கள் 25 பேருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • பள்ளி மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி டெல்டா ரோட்டரி சங்கம் சார்பாக சுதந்திர தினத்தையொட்டி வி.ஐ.ஏ ஷிப் கேட்டரிங் கல்லூரி ரோட்ராக்ட் சங்கத்துடன் இணைந்து கல்லூரி வளாகத்திலும் அதனைத் தொடர்ந்து மணி பல்நோக்கு மருத்துவமனை வளாகத்திலும் டெல்டா ரோட்டரி சங்க தலைவர் ரமேஷ் இனிப்பு வழங்கினார்.

    தொடர்ந்து முன்னாள் ராணுவ வீரர்கள் 25 பேருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சி மற்றும் போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி டெல்டா ரோட்டரி சங்கத்தின் தொடர் சேவை திட்டமான ரத்ததான முகாம் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் காந்தி கருணை மருத்துவ சேவை மையத்துடன் இணைந்து மணி மருத்துவமனையில் நடைபெற்றது.

    இதில் தன்னார்வலர்கள் 35 நபர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் கொடுத்தனர். இந்நிகழ்ச்சிக்கு டெல்டா ரோட்டரி சங்க தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார் செயலாளர்ராஜதுரை பொருளாளர் அகிலன், மாவட்ட மருத்துவ சேர்மன் மணி பல்நோக்கு மருத்துவமனை இயக்குனர் மருத்துவர் பாபு, மண்டலம் 25ன் உதவி ஆளுநர் சிவக்குமார் கலந்து கொண்டனர்.

    ×