என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போட்டிகள்"

    • வள்ளலார் முப்பெரும் விழா போட்டிகள் நடந்தது
    • 6-ந் தேதி பரிசளிப்பு விழா

    அரியலூர்:

    வள்ளலார் முப்பெரும் விழாவை முன்னிட்டு அரியலூர் கோதண்டராமசாமி திருக்கோயிலில் இந்து அறநிலையத் துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களிடையே பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் 26 பள்ளிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இப்போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு வரும் 6 ஆம் தேதி ரிதன்யா திருமண மண்டபத்தில் நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அரியலூர் உதவி ஆணையர் என்.நாகராஜ், கோயில் செயல் அலுவலர் எஸ்.சரவணன் மற்றும் வடலூர் வள்ளலார் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • கலை பண்பாட்டு திருவிழா போட்டிகள் நடந்தன.
    • மாவட்ட அளவிலான நடந்தது

    பெரம்பலூர்

    பெரம்பலூரில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கலை பண்பாட்டு திருவிழா போட்டிகள் தந்தை ரோவர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. போட்டிகளை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அறிவழகன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்து பேசினார். இதில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கவும், நமது பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறையினரிடம் உயிர்ப்புடன் வைத்திருக்கும் நோக்கில், வாய்ப்பாட்டு இசை செவ்வியல், வாய்ப்பாட்டு இசை பாரம்பரிய நாட்டுப்புற வகை, கருவி இசை தாள வாத்தியம், கருவி இசை மெல்லிசை, நடனம் செவ்வியல், நடனம் பாரம்பரிய நாட்டுபுற வகை, காட்சிக்கலை இருபரிமாணம், காட்சிக்கலை முப்பரிமாணம், உள்ளூர் தொன்மை பொம்மைகள் விளையாட்டுகள் மற்றும் நாடகம், தனிநபர் நடிப்பு போன்ற கலைப் பண்பாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாவட்ட கல்வி அலுவலர்கள் குழந்தைராஜன், அண்ணாதுரை, சண்முகசுந்தரம், மாவட்ட உதவி திட்ட அலுவலர் சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெற உள்ளனர் என்று மாவட்ட திட்டக்கூறு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்."

    • பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளது
    • வரும் 14-ந் தேதி நடைபெறுகிறது

    புதுக்கோட்டை:

    தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் ஜவகர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் வரும் 14-ந் தேதி நடைபெறவுள்ளது என்று கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

    தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க 2022-23ஆம் ஆண்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்டத்தில் செயற்பட்டுவரும் அனைத்துப்பள்ளிகள், கல்லூரிகளில் படித்துவரும் மாணவர்களுக்க தனித்தனியே அரசு விதிமுறைகளின்படியும், சமூக இடைவெளியைப் பின்பற்றியும் வரும் 14-ந் தேதி (திங்கள் கிழமை) அன்று புதுக்கோட்டை, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெற உள்ளன.

    இப்போட்டிகளில் வெற்றிபெறும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே பரிசு தொகை மற்றும்; பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பெற உள்ளன.

    கூடுதல் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயற்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரை நேரிலோ, தொலைபேசி வாயிலாகவே (04322-228840, 99522 80798) தொடர்பு கொள்ளலாம். இப்பேச்சுப்போட்டிகளில் புதுக்கோட்டை மாவட்டத்தில் செயற்பட்டுவரும் அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர; கவிதா ராமு தெரிவித்துள்ளார;.

    • ராஜபாளையத்தில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் நடந்தன.
    • இந்த போட்டியில் 275 மாணவர்கள் பங்கேற்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் என்.ஏ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் விருதுநகர் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் நடந்தது. பள்ளி தாளாளர் என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராஜா போட்டிகளை தொடங்கி வைத்தார்.

    மாவட்ட அளவிலான இந்த போட்டியில் 275 மாணவர்கள் பங்கேற்றனர். நாளை (11-ந் தேதி) 230 மாணவிகள் பங்கேற்கும் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் முதல் பரிசு பெறும் மாணவ-மாணவிகள் பிப்ரவரி மாதம் 11-ந் தேதி மாநில அளவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ளலாம். போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வி.பி.ஜெயக்குமார் மற்றும் ஆசிரியர்கள் நடத்தினர்.

    • தொண்டியில் செ.மு.ஆண்கள் மேல்நிலைப்பள்ளிய விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு போட்டி நடந்தது.
    • முடிவில் முதுநிலை காசநோய் மேற்பார்வையாளர் ராகுல் நன்றி கூறினார்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அரசு மேம்படுத்தப்ப ஆரம்ப சுகாதார நிலையத்தின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறையின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் அதில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டிகள் தொண்டி செ.மு.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்தது.

    வட்டார மருத்துவ அலுவலர் வைதேகி தலைமை தாங்கினார். தொண்டி அரசு மருத்துவர் அருண் வரவேற்றார். நேசம் அறக்கட்டளையின் நிறுவனர் கோட்டைச்சாமி முன்னிலை வகித்தார். திருவெற்றியூர், பாண்டுகுடி, எஸ்.பி.பட்டிணம், வெள்ளையபுரம், மங்களக்குடி ஆகிய துணை சுகாதார நிலையங்களிலிருந்து மருத்துவர்கள் கௌதமன், டார்லிங்டன், அல்ஷிபா ஆகிய மருத்துவர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், இளம்பரிதி, சந்தானம் உட்பட சுகாதார ஆய்வாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், களப்பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், என ஏராளமானோர் போட்டியில் கலந்து கொண்டனர். விளையாட்டு போட்டி முடிவில் முதுநிலை காசநோய் மேற்பார்வையாளர் ராகுல் நன்றி கூறினார்.

    • தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது
    • தமிழக அணி சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது.

    அரியலூர்

    தேசிய அளவிலான மாற்றுத்திறனாளி கிரிக்கெட் போட்டி மும்பையில் உள்ள பீட் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் 9 மாநிலங்கள் பங்கு பெற்றன. அரியலூரை சேர்ந்த ராஜ்மகேஷ்வரன் தலைமையிலான தமிழக அணி இறுதிப்போட்டியில் பாண்டிச்சேரி அணியை வீழ்த்தி கோப்பை வென்று சாதனை படைத்தது. தமிழக மாற்றுத்திறனாளிகள் அணி 17 ஆண்டுகளாக விளையாடி வரும் நிலையில் முதன் முறையாக தேசிய அளவிலான போட்டியில் சாம்பியன்ஷிப் கோப்பை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இத்தொடரில் சிறந்த மட்டை வீரராக அரியலூரை சேர்ந்த சன் மேக்கர் 258 ரன்கள், சிறந்த பந்துவீச்சாளராக கோபிநாத் 6 விக்கெட், முத்து ராசா 6 விக்கெட் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இத்தொடருக்கான நாயகன் விருதை சன் மேக்கர் பெற்றார். இதையடுத்து, வெற்றி பெற்ற வீரர்கள் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    • இல்லம் தேடி கல்வி மையங்கள் சார்பில் குழந்தைகள் தினவிழா ஊரணிபட்டி நடுநிலைப்பள்ளியில் நடந்தது.
    • மாணவ-மாணவிகளுக்கு மாறுவேடப்போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப் போட்டிகளை நடத்தினர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்தில் செயல்பட்டு வரும் இல்லம் தேடி கல்வி மையங்கள் சார்பில் குழந்தைகள் தினவிழா ஊரணிபட்டி நடுநிலைப்பள்ளியில் நடந்தது. ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள 6 குறுவளமையங்களின் கீழ் உள்ள தன்னார்வலர்கள் தங்களது மையங்களுக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு மாறுவேடப்போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப் போட்டிகளை நடத்தினர். முதல் 3 இடங்களை பெற்றவர்களுக்கு ஓட்டு மொத்த அளவிலான போட்டிகள் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்ற ஊரணிபட்டி நடுநிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் தலைமையில் நடந்தது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவித் திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் முன்னிலை வகித்தார். தன்னார்வலர் முத்துலட்சுமி வரவேற்றார். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பதக்கம் மற்றும் கோப்பையும், போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு பங்கேற்பாளருக்கான சான்றிதழையும் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக்கோட்ட கண்காணிப்பாளர் சபரிநாதன் வழங்கி பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தன்னார்வர்கள் சூர்யா, சிவரஞ்சனி, மகாலட்சுமி, சிவகாமி, கஸ்தூரி ஆகியோர் செய்திருந்தனர். தன்னார்வலர் சாந்தினி நன்றி கூறினார்.

    • மானாமதுரை அருகே உள்ள தெ.புதுக்கோட்டை எம்.கே.என். நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா நடந்தது.
    • மாணவர்கள் பல்வேறு வேடங்களில் நடித்து தேசப்பற்றை வெளிப்படுத்தினர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள தெ.புதுக்கோட்டை எம்.கே.என். நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா நடந்தது. தலைமை ஆசிரியர் சிவகுருநாதன் தலைமை தாங்கினார். மாணவர்கள் பல்வேறு வேடங்களில் நடித்து தேசப்பற்றை வெளிப்படுத்தினர். இதில் ஆசிரியர்கள்- மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு வகுப்பிலும் போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைத்து மாணவர்களுக்கும் மதியம் சிறப்பு விருந்தாக சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.

    • இதுவரை 50,327 பேருக்கு ரூ.286.27 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது.
    • ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் பரிசு வழங்கினார்.

    திருவாரூர்:

    திருவாரூர்மாவட்டம், திருவாரூர் நகராட்சிக்கு ட்பட்ட தெற்கு வீதியில் நடைபெற்ற 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்து கொண்டு 1262 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 25 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கி னார்.

    இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தார். நாகை நாடாளு மன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து, மாவட்ட ஊராட்சித்தலைவர் கோ.பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் அமை ச்சர் தெரிவித்ததாவது, அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவானது ஆண்டு தோறும் நவம்பர்-14ஆம் தேதி முதல் ஆரம்பிக்க ப்பட்டு தொட ர்ந்து ஏழு நாட்கள் நடத்தப்ப ட்டு வருகிறது.இந்தியாவிலேயே முதன் முதலாக கூட்டுறவு வங்கி தொடங்கப்பட்டது தமிழகத்தில் தான். திருவாரூர் மாவட்டத்தில், மத்திய கூட்டுறவு வங்கி ஏதுவுமில்லை.

    டெல்டா மாவட்டங்களில் கும்பகோ ணம் மற்றும் தஞ்சாவூர் என இரண்டு மத்திய கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகிறது. மானியக்கோரியின் போது திருவாரூக்கு மத்திய கூட்டுறவுவங்கி வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இக்கோரி க்கையின் அடிப்படையில் விரைவில் திருவாரூர் மாவட்டத்திற்கு மத்திய கூட்டுறவு வங்கி திறப்ப தற்கு உண்டான உரிய நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்படும்.

    முதலமைச்சர் சில கட்டமைப்புகளுடன் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் முழு நேர நியாய விலைக்கடைகளும், ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் பகுதி நேர நியாய விலைக டைகளும், கழிப்பறை வசதியுடன் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்கள். 2022-2023ஆம் நிதியாண்டில் இதுவரை 50327 நபர்களுக்கு ரூ.286.27 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக பண்ணை சாராக் கடன்கள், சிறு வணிகக் கடன்கள், மாற்றுத்திறனாளி களுக்கான கடன்கள், டாம்கோ மற்றும் டாப்செ ட்கோ உள்ளிட்ட கடன்கள் பொதுமக்களுக்கு சிறந்த முறையில் வழங்கப்பட்டு வருகிறது என அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.

    அதனைதொடர்ந்து, சுய உதவிக்குழு கடன், பயிர்க்கடன் என மொத்தம் 1262 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 25 லட்சம் மதிப்பி லான கடனுதவிகளும், சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களும், பேச்சுப்போ ட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் அமைச்சர்அர.சக்கரபாணி வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில், திருவாரூர் கூட்டுறவு சங்க ங்களின் மண்டல இணை பதிவாளர் சித்ரா, தஞ்சாவூர் கூட்டுறவு இணையத்தின் மேலாண்மை இயக்குநர் ப.உமா மகேஸ்வரி, திருவாரூர் ஒன்றியக்குழு தலைவர் தேவா உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • கலைப்பண்பாட்டு துறை சார்பில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற்றது
    • மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு

    திருச்சி

    தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றங்கள் மூலம் ஆண்டு தோறும் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டிற்கான கலைப் போட்டிகள் ஸ்ரீரங்கம் மூலத்தோப்பில் உள்ள அரசு இசைப்பள்ளியில் நடந்தது.

    இதில் 5-8, 9-12, 13-16 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு பரதநாட்டியம், கிராமிய நடனம், குரலிசை, ஓவியம் ஆகிய கலைகளில் போட்டிகள் நடந்தது. பரதநாட்டியத்தில் 22 பேரும், கிராமிய நடனத்தில் 11 பேரும், குரலிசையில் 36 பேரும், ஒவியப் போட்டியில் 64 பேரும் என மொத்தம் 133 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இக்கலைப் போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம், இரண்டாமிடம் மற்றும் மூன்றாமிடத்தில் வெற்றிப்பெறும் மாணவர்களுக்கு பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். 9-12, 13-16 வயதிற்குட்பட்ட பிரிவில் முதலிடம் பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர் என தெரிவிக்கப்பட்டது.

    போட்டிக்கான ஏற்பாட்டினை திருச்சி மண்டல கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குனர் (பொ) நீலமேகன், கலை பண்பாட்டுத்துறை ஊழியர்கள், சிறுவர் மன்ற திட்ட அலுவலர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • 6 முதல் 12-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்பட உள்ளது.
    • முதன்மை பெறும் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவர்.

    நாகர்கோவில்:

    2022-23-ம்ஆண்டு சட்டமன்ற கூட்டத் தொடரில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற உள்ளது என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள பல்வேறு கலைவடிவங்களை அறிமுகப்படுத்தி மாணவர்க ளின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாகவும், பள்ளிக் கல்வி செயல்பாடுகளின் ஒருபகுதி யாக கலைப்பண்பாட்டு கொண்டாட்டங்களை ஒருங்கிணைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலைசார்ந்த பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    6 முதல் 12-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்க ளுக்கு கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கலைத்திருவிழா போட்டிகள் 6 முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் 9 மற்றும் 10-ம் வகுப்பு ஒரு பிரிவாகவும், 11 மற்றும் 12-ம் வகுப்பு ஒரு பிரிவு என மொத்தம் 3 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டிகள் தனிநபர் அல்லது குழுக்களாக கலந்து கொள்ளலாம். மேலும் 6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 1. கவின் கலை-நுண்கலை, 2. இசை (வாய்பாடு), 3. கருவி இசை, 4. நடனம், 5. நாடகம், 6. மொழித்திறன் என்னும் 6 தலைப்பின் கீழ் நடைபெற உள்ளது. 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 1. கவின் கலை-நுண்கலை, 2. இசை (வாய்பாடு), 3. கருவி இசை – தோற்கருவி, 4. கருவி இசை துளைக்காற்றுக்கருவிகள், 5. கருவி இசை தந்தி கருவிகள், 6. இசை சங்கமம், 7. நடனம், 8. நாடகம், 9 . மொழித்திறன், என்னும் 9 தலைப்புகளில் நடைபெறுகிறது.

    அதேபோல் 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு 1. காண் கலை-நுண்கலை, 2. இசை (வாய்பாடு), 3. கருவி இசை, தோற்கருவி, 4. கருவி இசை, துளைக்காற்றுக்கருவிகள், 5. கருவி இசை தந்தி கருவிகள், 6. இசை சங்கமம், 7. நடனம், 8. நாடகம், 9. மொழித்திறன் என்னும் 9 தலைப்பின் கீழும் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டிகள் தனிநபர் அல்லது குழுக்களாக கலந்து கொள்ளலாம். ஒருவர் ஏதேனும் 3 தனி போட்டி மற்றும் 2 குழு போட்டியில் மட்டுமே அதிக பட்சமாக பங்கு பெற முடியும்.

    பள்ளி அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் மாண வர்களை (முதலிடம்) வட்டார அளவிலும், வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் (முதலிடம் மற்றும் 2-ம் இடம்) மாவட்ட அளவிலும் மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் (முதலிடம்) மாநில அளவில் நடைபெறும் போட்டி களிலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

    மாநில அளவிலான கலைத்திருவிழா இறுதி போட்டிகள் ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் மற்றும் கலையரசன், கலையரசி என்ற விருதுகளும் மற்றும் மாநில அளவில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு மாணவர்களின் கலைத்திறன்கள் ஊக்கப்ப டுத்தப்படும்.

    மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களின் தரவரிசையில் முதன்மை பெறும் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவர்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கீழ்காணும் அட்டவணையின் படி கலைத்திருவிழா போட்டிகள் நடை பெற உள்ளது. பள்ளி அளவில் நாளை (23-ந் தேதி) முதல் 28-ந் தேதிக்குள்ளும், வட்டார அளவில் 29-ந் தேதி முதல் 05-ந் தேதிக்குள்ளும், மாவட்ட அளவில் 06-ந் தேதி முதல் 10-ந் தேதிக்குள்ளும் வட்டார மற்றும் மாவட்ட அளவில் பங்குபெறும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். அனைத்து அரசு பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்கள் இக்கலை திருவிழா போட்டிகளில் பெருமளவு பங்கேற்க பெற்றோர்கள் கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். பள்ளிக்கல்வித்துறை அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பள்ளி மாணவர்களுக்கு கலை திருவிழா போட்டிகள் நடைபெற உள்ளது
    • வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா செல்ல வாய்ப்பு

    திருச்சி:

    திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருச்சி மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் கலை திருவிழா போட்டிகள் 6 முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9 மற்றும் 10-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 11 மற்றும் 12-ம் வகுப்பு வரை ஒரு பிரிவு என மொத்தம் 3 பிரிவுகளில் போட்டி நடத்தப்படவுள்ளது. போட்டிகளில் தனிநபர் அல்லது குழுக்களாக கலந்து கொள்ளலாம்.

    மேலும் 6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 1.கவின்கலை-நுண்கலை, 2.இசை (வாய்ப்பாட்டு), 3.கருவி இசை 4.நடனம், 5.நாடகம், 6.மொழித்திறன் எனும் 6 தலைப்பின் கீழ் நடைபெறவுள்ளது.

    9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 1.கவின்கலை-நுண்கலை, 2.இசை (வாய்ப்பாட்டு), .கருவி இசை-தோற்கருவி, 4.கருவி இசை (துளைகாற்றுக்கருவிகள்), 5.கருவி இசை (தந்திக்கருவிகள்), 6.இசை சங்கமம், 7.நடனம், 8.நாடகம், 9.மொழித்திறன் எனும் 9 தலைப்பின் கீழ் நடைபெறவுள்ளது.

    அதேபோல் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர் களுக்கு 1.கவின்கலை-நுண்கலை, 2.இசை (வாய்ப்பாட்டு), 3.கருவி இசை, 4.நடனம், 5.நாடகம், 6.மொழித்திறன் உள்ளிட்ட 9 தலைப்புகளின் கீழ் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. ஒருவர் ஏதேனும் மூன்று தனிப்போட்டி மற்றும் இரண்டு குழுப்போட்டியில் மட்டுமே அதிக பட்சமாக பங்குபெற முடியும்.

    பள்ளி அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களை வட்டார (முதலிடம்) அளவிலும், வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட (முதலிடம் மற்றும் இரண்டாம் இடம்) அளவிலும், மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் (முதலிடம்) மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

    மாநில அளவிலான கலைத் திருவிழா இறுதி போட்டிகள் ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் மற்றும் கலையரசன், கலையரசி என்ற விருதுகளும், மாநில அளவில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு மாணவர்களின் கலைத்திறன்கள் ஊக்கப்படுத்தப்படும். மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களில் தரவரிசையில் முதன்மை பெறும் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.

    திருச்சி மாவட்டத்தில் கீழ்க்காணும் அட்டவணையின்படி கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட வேண்டும். பள்ளி அளவில் 23.11.2022 முதல் 28.11.2022-க்குள்ளும், வட்டார அளவில் 29.11.2022 முதல் 05.12.2022-க்குள்ளும், மாவட்ட அளவில் 06.12.2022 முதல் 10.12.202- க்குள்ளும், வட்டாரம் மற்றும் மாவட்ட அளவில் பங்குபெறும் மாணவர் களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

    அனைத்து வகை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இக்கலைத் திருவிழா போட்டிகளில் பங்கேற்க செய்ய பெற்றோர்கள் கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.

    இவ்வாறு கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

    ×