என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளி விழா"

    • புதுச்சேரி மாநில முதல்-மந்திரி ரங்கசாமி- தொல்.திருமாவளவன் எம்.பி. பங்கேற்பு
    • விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தலைமையில் சமூக நல்லிணக்க மாநாடு நடைபெறும்

    நாகர்கோவில்:

    அருமனை கிறிஸ்தவ இயக்கம் நடத்தும் கிறிஸ்துமஸ் விழாவின் 25-ம் ஆண்டையொட்டி வெள்ளிவிழா இன்று (புதன்கிழமை) தொடங்கி, 23-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இன்றும், நாளையும் (வியாழக்கிழமை) கிறிஸ்துமஸ் பேரின்ப பெரு விழாவாக நடைபெறு கிறது.

    இதில் தேவ ஊழியர்கள் அனிசன், சாமுவேல், எலி யாஸ் ஜேக்கப் (துபாய்) ரவி மணி(பெங்களூரு)ஆகியோர் பங்கு பெற்று சிறப்பு செய்தி அளிக்கி றார்கள். மேலும், ஜெர்சன் எடின்புரோ மற்றும் ஆல்பன் தாமஸ் ஆகியோர் பாடல் ஆராதனை நடத்துகிறார்கள். அதனைதொடர்ந்து சிறப்பு செய்தியாளர் பால்தி னகரன் செய்தி அளிக்கிறார்.

    23-ந்தேதி மாலை சரியாக 5.30 மணிக்கு அருமனை நெடிய சாலை சந்திப்பில் இருந்து 52 கலைகுழுக்களைச் சேர்ந்த சுமார் 1000 கலைஞர்கள் நடத்தும் மாபெரும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 8 மணி அளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவள வன் எம்.பி. தலைமையில் சமூக நல்லிணக்க மாநாடு நடைபெறும். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில தலைவர் முத்தரசன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் விஜய்வசந்த், செல்லகுமார், தி.மு.க.வைச் சேர்ந்த மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன்.

    ம.தி.மு.க அமைப்பு செயலா ளர் துரை வைகோ. எஸ். டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைதலைவர் தெஹ்லான் பாஹவி, மாநில தலைவர் நெல்லை முபாரக் பெங்க ளூரு ராபாட் கிறிஸ்டோபர், எஸ்.ஆர்.எம். கல்வி குழும தலைவர் மற்றும் ஐ.ஜே.கே கட்சியினுடைய மாநில தலைவர் ரவி பச்சைமுத்து திரைப்பட இயக்குனர் தியாகராஜன், நடிகர் பிரசாந்த். இந்திய குடியரசு கட்சி தமிழக தலைவர் சூசை முன்னாள் மற்றும் இன்னாள் பேராயர்கள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    சிறப்பு விருந்தினராக புதுச்சேரி மாநில முதல்-மந்திரி ரங்கசாமி கலந்து கொண்டு கேக் வெட்டி சிறப்புரையாற்றுகிறார். தெலுங்கானா முதல்-மந்திரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவரும் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது தொடர்ந்து பாடகர் கானா பாலா, ரேஷ்மா ராகவேந்திரன் ஆகியோரின் பின்னணி பாடல்களுடன் அமைந்த பாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்கிறார்கள்.

    இத்தகவலை அருமனை கிறிஸ்தவ இயக்கசெயலாளர் அருமனை ஸ்டீபன் தெரிவித்துள்ளார்.

    • 52 கலைகுழுக்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்று நடத்திய கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு நிகழ்ச்சி
    • இந்து மதம் வெறுப்பை உமிழ்வது இல்லை. என் மதம் உயர்ந்தது உன் மதம் தாழ்ந்தது பற்றி பேசுவது இல்லை

    நாகர்கோவில் :

    அருமனை கிறிஸ்தவ இயக்கம் சார்பில் நடத் தப்படுகின்ற கிறிஸ்துமஸ் விழாவின் 25-ம் ஆண்டை யொட்டி வெள்ளிவிழா கொண்டாட்டம் கடந்த புதன்கிழமை தொடங்கி யது.

    முதல் இரண்டு நாட்கள் கிறிஸ்துமஸ் பேரின்ப பெருவிழாவாக நடைபெற்றது. இதில் தேவ ஊழியர் கள் அனிசன், சாமுவேல், எலியாஸ் ஜேக்கப் (துபாய்) ரவி மணி (பெங்களூரு) ஆகியோர் பங்கு பெற்று சிறப்பு செய்தி அளித்தனர்.ஜெர்சன் எடின்புரோ மற்றும் ஆல்பன் தாமஸ் ஆகியோர் பாடல் ஆராதனை நடத்தினர். தொடர்ந்து சிறப்பு செய்தியாளர் பால் தினகரன் செய்தி அளித்தார்.

    நேற்று மாலையில் மூன்றாம் நாள் விழா நடந்தது. இதனையொட்டி அரு மனை நெடிய சாலை சந்திப்பில் இருந்து 52 கலைகு ழுக்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்று நடத்திய கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் இயேசு நாத ரின் உருவம் தாங்கிய ரதம், வண்ண உடைகளுடன் கண்ணை கவரும் வகை யில் கலைஞர்கள் வலம் வந்தனர். பேண்ட் வாத்தியம் உட்பட இசை கருவிகள் இசைக்கப்பட்டன.அதனை தனி மேடையில் அமர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், விஜய்வசந்த் எம்பி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசியதுணைதலைவர் தெஹ்லான் பாஹவி, மாநில தலைவர் நெல்லை முபாரக் பெங்களூரு ராபர்ட் கிறிஸ்டோபர், ஐ.ஜே.கே. கட்சி மாநில தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்டோர் பார்வையிட்டனர். அருமனை கிறிஸ்தவ இயக்கச் செயலாளர் ஸ்டீபன், அருமனை கிறிஸ்தவ இயக்க தலைவர் டென்னிஸ், பொருளாளர் கிளாரிஸ் பிரபு, செய்தி தொடர்பாளர் பாவலன், வழக்கறிஞர் அணி துணை செயலாளர் திலிப் சிங், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணைச் செயலாளர் அல்காலித், குமரி மேற்கு மாவட்ட செயலாளர்ஜெயன், கிழக்கு மாவட்ட செயலாளர் திருமாவேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து சமூக நல்லிணக்க மாநாடு நடந்தது.

    மாநாட்டில் திருமாவளவன் பேசியதாவது:-

    நாம் எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கும், மதத்துக்கும் எதிரானவர்கள் அல்ல. மதத்தில் 3 வகை உண்டு. இந்து மதம் வெறுப்பை உமிழ்வது இல்லை. என் மதம் உயர்ந்தது உன் மதம் தாழ்ந்தது பற்றி பேசுவது இல்லை. கடவுளின் மீது மட்டும் நம்பிக்கை வைத்து வாழ்க்கை நடத்துகிறார்கள். அவர்களால் எந்த மோதலும், வன்முறையும் நடப்பது இல்லை.

    ஆனால் இந்து மதத்தில் ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் வெறுப்பை உமிழ்கிறார்கள். சாதாரண இந்து மக்களுக்கு அதில் எந்த பொறுப்பும் இல்லை. மடாதிபதிகளுக்கும் பொறுப்பு இல்லை. பாரதிய ஜனதா போன்றவை தாங்கள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக மதங்களுக்கு இடையே வெறுப்பை புகுத்துகிறார்கள்.

    சாதாரண இந்து மக்களின் உணர்வுகளை காயப்படுத்தவில்லை. சமூகத்தில் இந்துக்கள் தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். ஆதலால் எல்லா கட்சிகளிலும் இந்துக்கள் தான் இருக்கி றார்கள். அவர்களை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆர்.எஸ்.எஸ்.சின் சங் பரிவார அமைப்புகளை தான் எதிர்க்கிறோம். ஆர்.எஸ்.எஸ். அமைப்பானது சகோதரத்தை, சமத்து வத்தை, சமூக நீதியை பேசினால் வரவேற்கலாம். ஆனால் இதற்கும், ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அரசியல் அமைப்பு சட்டத்தையே தூக்கி எறிய ஆர்.எஸ்.எஸ். நினைக்கிறது. சங் பரிவார அமைப்புகளை பற்றி பேசும்போது இந்து களை விமர்சிப்பதாக சொல்கிறார்கள். ஆனால் அப்படி இல்லை. தற்போது நடந்த மாநாட்டில் அனைத்து மதத்தினரையும் மேடையில் ஏற்றி இருக்கிறோம்.அனை வருக்கும் நேர்மறை சிந்தனை இருக்க வேண்டும். நம்பிக்கை இருந்தால் நேர்மறை சிந்தனை வரும். ஏசு 3 ஆண்டு போதித்த போதனைகள் தான் உலகை ஆழ்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, "தமிழக அரசு பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கவில்லை என்று கூறுகிறீர்கள். ஆனால் கரும்பை பொங்கல் பண்டிகை அன்று வழங்கி னால் தான் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். 10 நாட்களுக்கு முன்பு வழங்கினால் நன்றாக இருக்காது. தமிழகத்தில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன. அப்படி இருக்க மாநிலத் தலைவர் அண்ணாமலை அணிந்துள்ள ரபேல் வாட்ச் தொடர்பாக பேச வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பாரதிய ஜனதாவினர் விளம்பரத்துக்காக அதுபற்றி பேசி வருகிறார்கள். பா.ஜனதாவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கூட்டணி அமைக்குமா? என்று கேட்கிறீர்கள். பாரதிய ஜனதாவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி எந்த காலத்திலும் கூட்டணி அமைக்காது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு இல்லை. நல்லவர்களால் பாராட்டக்கூடிய நல்லாட்சி நடந்து வருகிறது" என்றார்.

    • உலக மீனவர் தினத்தை 1998-ம் ஆண்டு ஐ.நா. சபை அங்கீகரித்தது. அந்த வகையில் இந்த ஆண்டு 25-வது வெள்ளி விழாவாக கொண்டாடப்படுகிறது.
    • கவர்னர் ஆர்.என்.ரவியை மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி புத்தகம் வழங்கி வரவேற்றார்.

    தூத்துக்குடி:

    மீனவர்களின் உழைப்பையும், தியாகத்தையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21-ந்தேதி உலக மீனவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

    உலக மீனவர் தினத்தை 1998-ம் ஆண்டு ஐ.நா. சபை அங்கீகரித்தது. அந்த வகையில் இந்த ஆண்டு 25-வது வெள்ளி விழாவாக கொண்டாடப்படுகிறது.

    இதனை முன்னிட்டு தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு, கடல்சார் மக்கள் நல சங்கமம் சார்பில் தூத்துக்குடி ஸ்நோ ஹாலில் மீனவர் தின விழா நடபெற்றது.

    இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு வந்தார்.

    அவரை மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி புத்தகம் வழங்கி வரவேற்றார். தொடர்ந்து அவர் அங்கிருந்து மீனவர் தின விழா நடைபெறும் இடத்திற்கு புறப்பட்டு சென்றார்.

    விழாவில் கலந்து கொண்ட கவர்னர் ஆர்.என்.ரவி மீனவ சமுதாய சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களையும், மீனவ சமுதாய தலைவர்களின் சேவைகளையும் பாராட்டி விருது வழங்கினார்.

    தொடர்ந்து நாட்டுப்படகு மீனவர்களுடன் கலந்துரையாடினார். இதனை முடித்து கொண்டு பிற்பகல் பீச் ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் விசைப்படகு மீனவர்களுடன் கலந்துரையாடினார். இன்று மாலை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு தூத்துக்குடியில் இருந்து மீண்டும் சென்னை புறப்பட்டு செல்கிறார். 

    • வெள்ளி விழா கொண்டாட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு.
    • திருவள்ளுவர் சிலை இரவு பகலாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு அருகில் உள்ள மற்றொரு பாறையில் திருவள்ளுவருக்கு 133 அடி உயர சிலை எழுப்பப்பட்டுள்ளது. இந்த சிலை கடந்த 2000-ம் ஆண்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

    இந்த சிலையின் முதலாம் ஆண்டு விழா அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. அதன்பிறகு இந்த சிலை நிறுவி 25 ஆண்டுகள் ஆவதையொட்டி வெள்ளி விழா கொண்டாட்டம் அரசு சார்பில் கன்னியாகுமரியில் வருகிற டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய 2 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

    இந்த வெள்ளி விழாவையொட்டி கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு பாறைக்கும் திருவள்ளூவர் சிலைக்கு இடையே ரூ.37 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் கண்ணாடி இழையிலான கூண்டு பாலமும் திறக்கப்படுகிறது.

    மேலும் திருவள்ளுவர் சிலையில் ரூ.3 கோடி செலவில் லேசர் மின் விளக்கு வசதியும் செய்யப்பட்டு வருகிறது. இந்த வெள்ளி விழா கொண்டாட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

    இந்த விழாவில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளையும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி கன்னியாகுமரியில் பல்வேறு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அந்த அடிப்படையில் முதல் கட்டமாக ரூ.10 கோடி செலவில் கன்னியாகுமரி நகரை அழகுபடுத்தும்படி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையில் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளுவர் சிலை இரவு பகலாக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    • திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிறது.
    • ரூ.37 கோடி செலவில் கண்ணாடி இழை கூண்டு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவே 133 அடி உயர திருவள்ளுவர் சிலை கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.

    தற்போது கடல் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும் வகையில் ரூ.37 கோடி செலவில் கண்ணாடி இழை கூண்டு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

    திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிறது. இதனால் வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது.திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் வருகிற 30, 31, ஜனவரி 1-ந்தேதிகளில் கன்னியாகுமரியில் நடக்கிறது.

    இதில் 30, 31-ந்தேதிகளில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

    30-ந்தேதி மாலை 6 மணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்ணாடி இழை கூண்டு பாலத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து இரவு 7 மணிக்கு முதலமைச்சர் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெறுகிறது.

    "திருக்குறளின் பயன்கள் தனி மனிதருக்கா, சமுதாயத்திற்கா?" என்ற தலைப்பில் நடைபெறும் பட்டிமன்றத்திற்கு பிரபல பேச்சாளர் சுகிசிவம் நடுவராக இருப்பார். "தனி மனிதருக்கு" என்ற தலைப்பில் ராஜாராம், மோகன சுந்தரம், மதுக்கூர் ராமலிங்கம் பேசுகின்றனர். "சமுதாயத்திற்கு" என்ற தலைப்பில் ராஜா, புலவர் சண்முகவடிவேல், பேராசிரியர் பர்வீன் சுல்தானா உரையாற்றுகின்றனர்.

    2-ம் நாள் நிகழ்ச்சி காலை 9 மணிக்கு தொடங்குகிறது. அய்யன் திருவள்ளுவர் வெள்ளி விழா மலரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிடுகிறார். தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட பணிகளை அவர் தொடங்கி வைப்பதுடன் ஏற்கனவே நிறைவு பெற்றுள்ள திட்டப் பணிகளை திறந்து வைக்கிறார். பிற்பகல் 11.30 மணிக்கு கருத்தரங்கம் நடைபெறுகிறது.

    இந்த கருத்தரங்கத்திற்கு தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை தாங்குகிறார். "சமகாலத்தில் வள்ளுவர்" என்ற தலைப்பில் பேராசிரியர் கருணானந்தம் பேசுகிறார். "திருக்குறளும் சங்க இலக்கியமும்" என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பால கிருஷ்ணன் பேசுகிறார்.

    இதேபோல் "வள்ளுவம் போற்றும் சமய நல்லிணக்கம்" என்ற தலைப்பில் புலவர் கவுதமன் பேசுகிறார். "வள்ளுவம் போற்றும் சமத்துவம்" என்ற தலைப்பில் வக்கீல் அருள் மொழியும், "வள்ளுவம் காட்டும் அறம்" என்ற தலைப்பில் திரைப்பட இயக்குனர் பழனியப்பனும், "திருக்குறளில் இசை நுணுக்கம்" என்ற தலைப்பில் பேராசிரியர் விஜயசுந்தரியும் உரையாற்றுகின்றனர். மாலை 4 மணி முதல் 7 மணி வரை தமிழ்நாடு கலை பண்பாட்டு துறையின் சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    ஜனவரி 1-ந்தேதி புதன் கிழமை காலை 9 மணிக்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால், திறந்து வைக்கப்பட்ட அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் வகையில் உலக அளவில் வெற்றி பெற்றவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இந்த நிகழ்ச்சிக்கு தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி தலைமை தாங்குகிறார். தொடர்ந்து கலை பண்பாட்டுத் துறை, பள்ளிக் கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    • திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் 2 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில், 15 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய முடிவு.

    கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள பாறை ஒன்றில், உலகுக்கு பொதுமறையான திருக்குறளை தந்த திருவள்ளுவர் சிலையை நிறுவி 25 ஆண்டுகள் ஆவதையொட்டி நாளை (திங்கட்கிழமை) முதல் 3 நாட்கள் தமிழக அரசு சார்பில் வெள்ளி விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

    கன்னியாகுமரியில் 3 நாட்கள் நடைபெற இருந்த திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் 2 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

    டிசம்பர் 31ம் தேதி நடைபெற இருந்த கலை நிகழ்ச்சிகள் அனைத்தும், மன்மோகன் சிங் மறைவையொட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதனால், ஜனவரி 1ம் தேதி நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் டிசம்பர் 31ம் தேதி நடைபெறும். டிசம்பர் 30, 31 என 2 நாட்கள் நிகழ்வுகள் நடைபெறும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையில் வெள்ளிவிழா நிகழ்ச்சிகளைச் சென்னையில் பொதுமக்கள் நிகழ்ச்சிகளைச் சென்னையில் பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில், 15 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

    அதன்படி, டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்கும் நிகழ்ச்சி மற்றும் டிசம்பர் 31ம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

    • சுற்றுலாப் பயணிகள் படகில் சென்று பார்வையிட்டு வருகிறார்கள்.
    • சுகி சிவம் தலைமையிலான பட்டிமன்றத்தில் கலந்து கொள்கிறார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள பாறைகளில் விவேகா னந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படகில் சென்று பார்வையிட்டு வருகிறார்கள்.

    இதில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த 2000-வது ஆண்டு ஜனவரி 1-ந்தேதி அப்போ தைய முதல்-அமைச்சர் கருணாநிதி 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார்.

    வருகிற 1-ந் தேதி இந்த சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுபெறுவதையொட்டி வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது.


    திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்காக அவர் இன்று மாலை கன்னியாகுமரி வருகிறார்.

    அவர் மாலை 4.30 மணிக்கு பூம்புகார் படகு குழாமுக்கு சென்று அங்கு அமைக்கப் பட்டுள்ள திருவள்ளுவரின் மணல் சிற்பத்தினை பார்வையிடுகிறார். அதன் பிறகு படகு மூலமாக சென்று திருவள்ளுவர் சிலையை பார்க்கிறார்.

    தொடர்ந்து திருவள்ளுவர் சிலை-விவேகானந்தர் பாறையை இணைத்து ரூ.37 கோடியில் கட்டப்பட்டுள்ள கண்ணாடி இழை கூண்டு பாலத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.


    அதன் பிறகு தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கும் அவர், திருவள்ளுவர் பாதமலருக்கு மலர் அஞ்சலியும் செலுத்துகிறார். தொடர்ந்து திருவள்ளுவர் சிலைக்கு அமைக்கப்பட்டுள்ள லேசர் ஒளி விளக்கு மற்றும் வீடியோ படக்காட்சியினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார். ஏறத்தாழ 20 நிமிடங்கள் அக்காட்சி நடைபெற இருக்கிறது.

    தொடர்ந்து மேடைக்கு வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், விழாவில் நடைபெறும் சுகி சிவம் தலைமையிலான பட்டிமன்றத்தில் கலந்து கொள்கிறார். திருக்குறளால் அதிகம் நன்மை பயப்பது தனி மனி தருக்கா? சமுதாயத்திற்கா? என்ற தலைப்பில் இந்த பட்டிமன்றம் நடக்கிறது.

    தனி மனிதருக்கே என்ற தலைப்பில் ராஜாராம், மோகனசுந்தரம், மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோர் பேசு கின்றனர். சமுதாயத்திற்கே என்ற தலைப்பில் புலவர் சண்முக வேல், பேராசிரியர் பர்வீன் சுல்தானா, ராஜா ஆகியோர் பேசுகின்றனர்.

    மறுநாள் (31-ந்தேதி) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளி விழா பந்தலுக்கு வருகிறார். விழாவில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா மலரை வெளியிட்டு அவர் பேசுகிறார். இந்த விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கவிஞர் வைர முத்து உள்ளிட்டோர் பேசு கின்றனர்.

    அதனைத்தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்ன ரசு தலைமையில் கருத்த ரங்கம் நடைபெறுகிறது. சமகாலத்தில் வள்ளுவர் என்ற தலைப்பில் பேரா சிரியர் கருணானந்தன் பேசுகிறார். திருக்குறளும், சங்க இலக்கியமும் என்ற தலைப்பில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலகிருஷ்ணன் பேசுகிறார்.

    வள்ளுவம் போற்றும் சமய நல்லிணக்கம் என்ற தலைப்பில் புலவர் செந்தலை நாம் கவுதமன், திருக்குறள் போற்றும் மகளிர் மாண்பு என்ற தலைப்பில் வக்கீல் அருள்மொழி, வள்ளுவம் காட்டும் அறம் என்ற தலைப்பில் கரு. பழனி யப்பன், திருக்குறளில் இசை நுணுக்கம் என்ற தலைப்பில் பேராசிரியர் விஜயசுந்தரி ஆகியோர் பேசுகின்ற னர்.

    மாலையில் அமைச்சர் பெரியசாமி திருக்குறள் ஓவிய கண்காட்சியை திறந்து வைத்து நினைவு பரிசுகளை வழங்குகிறார். முடிவில் மாவட்ட கலெக்டர் அழகு மீனா நன்றி கூறுகிறார்.

    திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா, 30-ந் தேதி முதல் 1-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் என்று முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவை தொடர்ந்து, விழா 2 நாட்களாக மாற்றப்பட்டு 31-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

    திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி நகர் முழுவதும் கொடி, தோரணங்கள் மற்றும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அரசு கட்டிடங்கள் மற்றும் பூங்காக்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    இதனால் கன்னியாகுமரி நகர் முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 2500 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுபெறுவதையொட்டி வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது.
    • கன்னியாகுமரி நகர் முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது.

    கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள பாறைகளில் விவேகா னந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படகில் சென்று பார்வையிட்டு வருகிறார்கள்.

    இதில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த 2000-வது ஆண்டு ஜனவரி 1-ந்தேதி அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார்.

    வருகிற 1-ந் தேதி இந்த சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுபெறுவதையொட்டி வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது.

    திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா, 30-ந் தேதி முதல் 1-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் என்று முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவை தொடர்ந்து, விழா 2 நாட்களாக மாற்றப்பட்டு 31-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

    திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி நகர் முழுவதும் கொடி, தோரணங்கள் மற்றும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அரசு கட்டிடங்கள் மற்றும் பூங்காக்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    இதனால் கன்னியாகுமரி நகர் முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 2500 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    திருவள்ளுவர் சில வெள்ளி விழாவை முன்னிட்டு இன்று கன்னியாகுமரியில் கண்ணாடி இழை பாலம் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    அதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குமரி கடலில் படகு மூலம் திருவள்ளுவர் சிலையை அடைந்தார். அங்கு, திருவள்ளுவரின் உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    பிறகு, திருவள்ளுவர் சிலை அருகே Statue of wisdom தூணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இதைதொடர்ந்து, திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி இழை பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    முதலமைச்சருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, சேகர் பாபு, எம்பி டி.ஆர்.பாலு, எம்.பி கனிமொழி உள்ளிட்டோரும் இருந்தனர்.

    பின்னர் அனைவரும், கண்ணாடி இழை பாலத்தின் மீது நடந்து சென்றனர்.

    திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு ரூ.37 கோடி செலவில் 77 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலத்தில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சட்டத்துறை அமைச்சரும் இணை வேந்தருமான அமைச்சர் ரகுபதி, பல்கலைக்கழக துணை வேந்தர் சந்தோஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
    • கிரீன்வேஸ் சாலையில் தாம் குடியேற இருந்த இல்லத்தை சட்டப் பல்கலைக்கழகத்திற்காக கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி.

    சென்னை பெருங்குடியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வெள்ளிவிழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது, பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழா கல்வெட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் அவர் வெள்ளி விழா மலரையும் வெளியிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சரும் இணை வேந்தருமான அமைச்சர் ரகுபதி, பல்கலைக்கழக துணை வேந்தர் சந்தோஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

    இதையடுத்து, நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தியாவில் சட்ட பல்கலைக்கழகத்தை நிறுவிய முதல் மாநிலம் தமிழகம் தான். அரசு சட்டக்கல்லூரி மூலம் கிராமப்புற மாணவர்கள் எளிதாக சட்டம் பயின்று வருகின்றனர்.

    கிரீன்வேஸ் சாலையில் தாம் குடியேற இருந்த இல்லத்தை சட்டப் பல்கலைக்கழகத்திற்காக கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி.

    சீர்மிகு சட்டப்பள்ளியில் பயில்வோரில் 70 சதவீதம் பேர் மாணவிகள். 40 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட சட்டப் பல்கலைக்கழகத்தில் தற்போது 4,500க்கும் அதிகமானோர் படித்து வருகின்றனர்.

    சட்ட விதி மட்டுமின்றி அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகளையும், சமூக நீதியையும் காபாற்றும் வகையில் சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் செயல்பட வேண்டும். ஏழை, எளிய மக்களின் அடிப்படை உரிமைகளை காக்கும் வழக்கறிஞர்களாக சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் செயல்பட வேண்டும். அவர்களின் நலனுக்காக தங்கள் வாதத் திறமையை வழக்கறிஞர்கள் பயன்படுத்த வேண்டும்.

    சட்டம் தாண்டி சமூகத்தையும் சட்ட மாணவர்கள் படிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நேரு கலை அறிவியல் கல்லூரியில் வெள்ளி விழா பி.கே.தாஸ் நினைவு கலை அரங்கில் நடைபெற்றது.
    • கல்வி நிறுவனத்தில் சேர்ந்து பயின்று சாதனை புரிந்த மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

    கோவை 

    கோவை பாலக்காடு சாலையில் அமைந்துள்ள நேரு கலை அறிவியல் கல்லூரியில் வெள்ளி விழா பி.கே.தாஸ் நினைவு கலை அரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு நேரு கல்வி குழுமத்தின் தலைமை நிர்வாக அறங்காவலர் வக்கீல் முனைவர் பி.கிருஷ்ணதாஸ் தலைமைப் பொறுப்பாளராக தலைமை தாங்கினார். விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் நேரு கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் பி.அனிருதன் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக இந்தியாவிற்கான கோஸ்டாரிகா தூதர் கிளாடியோ அன்சோரெனா கலந்து கொண்டார். நேரு கல்விக் குழுமத்தின் செயலர் மற்றும் முதன்மை கல்வி அதிகாரி டாக்டர் பி. கிருஷ்ணகுமார் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் நேரு கலை அறிவியல் கல்லூரியின் வெள்ளி விழாவின் சிறப்பாக மதிப்புமிக்க விருதாளர்கள் என்ற தலைப்பில் நலம் விரும்பிகள் வகை, முன்னாள் நிர்வாகிகள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்களில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்கள், குறிப்பிட்ட முதலாளிகளுக்கும், ஒரு கல்வி நிறுவனத்தில் சேர்ந்து பயின்று சாதனை புரிந்த மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. முடிவில் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்றின் இயக்குனர் செல்வி ஷானி நன்றி கூறினார்.

    ×