search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இமானுவேல் சேகரன்"

    • தீண்டாமையை ஒழிக்கவும் சமூக விடுதலைக்காகவும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு நாள் இன்று.
    • நாட்டுக்காகவும் ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்துக்காகவும் உழைத்த அவரது வாழ்வைப் போற்றுவோம்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

    தீண்டாமையை ஒழிக்கவும் சமூக விடுதலைக்காகவும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு நாள் இன்று.

    நாட்டுக்காகவும் ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்துக்காகவும் உழைத்த அவரது வாழ்வைப் போற்றுவோம். சமத்துவமும் சமூக நல்லிணக்கமும் மிளிர்ந்த சமூகத்தை நோக்கிய நமது பயணத்துக்கு அவரது தொண்டு உரமாகட்டும்!

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பீகாரிலும், குஜராத்திலும் மதுவிலக்கு அமலில் இருக்கும்போது ஏன் தமிழகத்தில் இருக்கக்கூடாது.
    • திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

    விழுப்புரம்:

    தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அவரது குடும்பத்தினர், செல்லூர் கிராம மக்கள், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    இந்நிலையில் விழுப்புரத்தில் தியாகி இமானுவேல் சேகரனாருக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சிகளும் மது விலக்கை ஆதரிக்கின்றன.

    * பீகாரிலும், குஜராத்திலும் மதுவிலக்கு அமலில் இருக்கும்போது ஏன் தமிழகத்தில் இருக்கக்கூடாது.

    * மதுவிலக்கில் தமிழகம் ஏன் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கக்கூடாது.

    * மதுவிலக்கு என்ற குரலுக்கு எல்லா கட்சியினரும் ஆதரவு தர வேண்டும்.

    * மதுவிலக்கு கோரிக்கையை தமிழகத்தை ஆளும் திமுக அரசு கனிவோடு பரிசீலிக்க வேண்டும்.

    * திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

    * அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்கும்போது மதுக்கடைகளை மூடுவதில் என்ன தயக்கம்?

    * மதுவிலக்கு என்பது திமுகவிற்கும் உடன்பாடான கருத்துதான்.

    * மதுவிலக்கு விவகாரத்தில் உடனடியாக முடிவு எடுக்க முடியாது என்பதை நாங்கள் அறிவோம்.

    * திமுகவுக்கு முரணான கருத்தை நாங்கள் சொல்லவில்லை. மக்களின் கோரிக்கையை தான் முன்வைக்கிறோம் என்று கூறினார்.

    • சுதந்திரப் போராட்டத்திலும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான சமூகப் போராட்டத்திலும் பெரும்பங்கு வகித்தவர் ஐயா இமானுவேல் சேகரன்.
    • ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகத்தை உருவாக்குவதை, அவரது நினைவு தின உறுதிமொழியாக ஏற்றுச் செயல்படுவோம்.

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ தள பதிவில் கூறியிருப்பதாவது:

    சுதந்திரப் போராட்டத்திலும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான சமூகப் போராட்டத்திலும் பெரும்பங்கு வகித்த ஐயா இமானுவேல் சேகரன் அவர்கள் நினைவு தினம் இன்று.

    ஒடுக்கப்பட்ட மக்கள், அரசியல் அதிகாரம் பெறவும், சமத்துவ சமூகம் உருவாகவும் போராடிய ஐயா இமானுவேல் சேகரன் அவர்களது நினைவைப் போற்றி வணங்குகிறோம்.

    அனைவரும் சமம் என்ற உயரிய லட்சியத்தைக் கொண்டு, ஏற்றத் தாழ்வு இல்லாத சமூகத்தை உருவாக்குவதை, அவரது நினைவு தின உறுதிமொழியாக ஏற்றுச் செயல்படுவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தேவேந்திரர்களின் உரிமைகளுக்காக போராடியவர். தீண்டாமையை எதிர்த்தவர்.
    • நீண்ட பயணத்திற்குப் பிறகு இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்திற்கு சென்று பார்த்தபோது எனக்கு பெரும் அதிர்ச்சி.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எக்ஸ் தளத்தில்,

    நாளை செப்டம்பர் 11...

    தியாகி இமானுவேல் சேகரனாரின் 67-ஆம் நினைவு நாள்!

    அதை நினைக்கும்போது எனது மனதில் பழைய நினைவுகள் நிழலாடுகின்றன.

    தியாகி இமானுவேல் சேகரனார் போற்றுதலுக்கு உரியவர்.

    ஆங்கிலம், இந்தி, ரஷிய மொழி உள்ளிட்ட 7 மொழிகளை கற்றறிந்தவர்.

    தேவேந்திரர்களின் உரிமைகளுக்காக போராடியவர். தீண்டாமையை எதிர்த்தவர். இவ்வளவு சிறப்பு மிக்க இவரது நினைவு நாளில் அவரது நினைவிடத்திற்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் சென்று மரியாதை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    ஆனால், 30 ஆண்டுகளுக்கு முன் இத்தகைய நிகழ்வுகள் எதுவும் இல்லை என்பது தான் வருத்தமளிக்கும் உண்மை.

    அந்த நிலையை மாற்றி தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தை சீரமைத்து அங்கு முதன்முறையாக மரியாதை செலுத்தியது இந்த இராமதாசு தான். அதன்பிறகு தான் அங்கு மற்ற கட்சிகளின் தலைவர்கள் செல்லத் தொடங்கினார்கள்.

    பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கிய சில மாதங்களில் கட்சியின் வளர்ச்சி குறித்து விவாதிப்பதற்காக மதுரை அனுப்பானடியில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற என்னிடம் சிலர் இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்திற்கு சென்று வரலாம் என்று கூறினார்கள். ஆனால், அங்கு செல்வது சரியானதல்ல என்று வேறு சிலர் கூறினார்கள். ஆனால், இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்திற்கு சென்று வருவது என்று தீர்மானித்து விட்டேன். கூட்டம் முடிந்ததும் கட்சி நிர்வாகிகளுடன் இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்திற்கு பயணித்தேன்.

    நானும், பா.ம.க. நிர்வாகிகளும் பரமக்குடி சென்றடைவதற்கு முன்பாகவே அங்குள்ள 5 முனை சாலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு விட்டனர். மதுரையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிலருக்கு இது குறித்து தகவல் தெரியும் என்பதால் அவர்கள் தங்களின் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து ஆட்களைக் கூட்டி விட்டனர். பரமக்குடியில் கூடி நின்றவர்களில் ஒரு பிரிவினர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள். அங்கிருந்தவர்களில் பலர் என் மகிழுந்தின் கார் மீது ஏறிக் கொண்டனர். எங்கள் மகிழுந்துகளைத் தொடர்ந்து ஏராளமான தானிகளிலும் பலர் அணிவகுத்து வந்தனர். அதனால் எங்களின் பயணம் அறிவிக்கப்படாத ஊர்வலமாகவே மாறி விட்டது.

    நீண்ட பயணத்திற்குப் பிறகு இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்திற்கு சென்று பார்த்தபோது எனக்கு பெரும் அதிர்ச்சி. ஓர் இனத்தின் விடுதலைக்காக போராடிய அந்த மாவீரனின் நினைவிடம் பராமரிப்பின்றி கிடந்தது. அந்த இடத்தை நெருங்க முடியாதவாறு ஒரே துர்நாற்றம் வீசியது. கழிவு நீர் தேங்கிக் கிடந்தது. அந்த இடத்தில் பன்றிகளின் கழிவுகள் தான் நிரம்பிக் கிடந்தன. இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த எனது கண்களில் நினைவிடத்தின் அவலநிலையைக் கண்டு கண்ணீர் கசிந்தது.

    அந்த இடத்திலேயே இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தை சீரமைக்க வேண்டும் என்று நினைத்தேன். உடனடியாக எனது சொந்தப் பணம் ரூ. 15 லட்சத்தை மதுரையைச் சேர்ந்த பா.ம.க. நிர்வாகி ஒருவரிடம் கொடுத்து நினைவிடத்தை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொண்டேன். அந்த நிர்வாகியை பின்னாளில் வட தமிழகத்தில் உள்ள வந்தவாசி சட்டப்பேரவைத் தேர்தலில் நிறுத்தி, தேர்தலுக்கான செலவை முழுவதும் கட்சி சார்பில் செய்து அவரை சட்டப்பேரவை உறுப்பினராக்கி அழகு பார்த்தேன்.

    எனது சொந்தப் பணத்தில் இமானுவேல் சேகரனாரின் நினைவிடம் தூய்மைப்படுத்தப்பட்டு, கிரானைட் கற்கள் பொருத்தப்பட்டு அழகூட்டப்பட்டது. அதன்பின்னர் அடுத்து வந்த அவரது நினைவிடத்திற்கு சென்று நான் சேகரனாருக்கு அஞ்சலி செலுத்தினேன். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவிடத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட வேண்டும் என்று ஆணையிட்டேன். அதன்பிறகு தான் அவரது நினைவிடத்தில் மற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தத் தொடங்கினார்கள். இமானுவேல் சேகரனார் 1957-ஆம் ஆண்டில் கொல்லப்பட்டார். அதன்பின் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் எவரும் அஞ்சலி செலுத்தியதில்லை. அவரது நினைவிடத்தை நான் சீரமைத்து, மரியாதை செலுத்திய பிறகு தான் அங்கு மற்ற தலைவர்கள் அஞ்சலி செலுத்தத் தொடங்கினார்கள்.

    இதற்கெல்லாம் முன்பாகவே 29.02.1988-ஆம் நாள் புதுச்சேரியில் நடைபெற்ற வன்னியர் சங்கத்தின் மத்தியக் குழுக் கூட்டத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தை இமானுவேல் தேவேந்திரர் மாவட்டம் என்று பெயர் சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி 17&ஆவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதலில் வன்னியர் சங்கம் சார்பிலும், பின்னர் பாட்டாளி மக்கள் கட்சி சார்பிலும் நடத்தப்பட்ட அனைத்துக் கடிதத் தொடர்புகளிலும் இராமநாதபுரம் மாவட்டம் இமானுவேல் தேவேந்திரர் மாவட்டம் மாவட்டம் என்றே குறிப்பிடப்பட்டு வந்தது நினைவுகூரத் தக்கதாகும்.

    இந்த நினைவுகளுடன் தியாகி இமானுவேல் சேகரனாரின் 67-ஆம் நினைவு நாளில் அவருக்கு நான் வீரவணக்கம் செலுத்துகிறேன். அவர் கண்ட கனவுப்படியே தேவேந்திரகுல வேளாளர்களின் முழுமையான விடுதலைக்காக போராட அனைவரும் உறுதியேற்போம் என்று தெரிவித்துள்ளார்.

    • தியாகி இமானுவேல் சேகரன் நினைவுநாளை முன்னிட்டு வரும் 11-ந்தேதி 4 வட்ட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • 11-ந்தேதி விடுமுறைக்கு மாற்றாக 21-ந்தேதி கல்வி நிலையங்கள் செயல்படும்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

    தியாகி இமானுவேல் சேகரன் நினைவுநாளை முன்னிட்டு வரும் 11-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 வட்ட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி வட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு 11-ந்தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை உள்ளிட்ட 4 வட்டங்களில் 11-ந்தேதி விடுமுறைக்கு மாற்றாக 21-ந்தேதி கல்வி நிலையங்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தியாகி இமானுவேல் சேகரனாரின் 100-வது பிறந்த நாளையொட்டி 100 இளைஞர்கள் குருதி கொடை வழங்கினர்.
    • முன்னாள் மாவட்ட பதிவாளர் டாக்டர். சுப.பாலு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

    ராமநாதபுரம்

    சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனாரின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு 100 இளைஞர்கள் குருதி கொடை வழங்கும் விழா நிகழ்ச்சி சத்திரக்குடியில் உள்ள தேவேந்திர குல வேளாளர் சமுதாயக்கூ டத்தில் போகலூர் வட்டார மருத்துவ அலுவலர் பிரதீப் தலைமையில் நடந்தது.

    தேவேந்திரர் பண்பாட்டு கழகத் தலைவர் பரம்பை பாலா அவர்கள் முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட பதிவாளர் டாக்டர். சுப.பாலு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பா டுகளை ஒருங்கிணைப்பாளர் தேவேந்திரர் மற்றும் சேம னூர் ராஜகோபால் ஆகி யோர் சிறப்பாக செய்திருந்த னர்.

    • இமானுவேல் சேகரனாருக்கு மணிமண்டபம் தமிழக அரசுக்கு எஸ்.ஆர்.பாண்டியன் நன்றி தெரிவித்தார்.
    • 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தொண்டர்களுடன் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 66-வது குருபூஜை விழா நேற்று அனுசரிக்கப்பட்டது.

    தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவையின் சார்பில் அதன் தலைவர் எஸ்.ஆர்.பாண்டியனுடன் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம். ஷெரீப் மற்றும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தொண்டர்களுடன் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    அப்போது எஸ்.ஆர். பாண்டியன் மாலைமலர் நிருபரிடம் கூறுகையில்:-

    தேவேந்திரகுல வேளா ளர் மக்களின் நீண்ட கோரிக் கையான தியாகி இமானு வேல் சேகரனார் அவர் களுக்கு தமிழக அரசு சார் பில் 3 கோடி செலவில் முழுஉருவசிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக் கப்படும் என அறிவித்த முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தேவேந்திரகுல வேளாளர் மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றார். இந்த நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி தலை வர் அருண்குமார், மாநில பொருளாளர் முருகேச பாண்டியன் தெற்கு மண்டல செயலாளர் மங்கள ராஜ், மாநில இளைஞரணி செய லாளர் வழிவிட்டதுரை பழனி, ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் மருத குமார், சிவகங்கை மாவட்ட செயலாளர் பழனிவேல் பாண்டியன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வாழ மணி பாண்டியன், தென் காசி மாவட்ட செயலாளர் யோகராஜ் பாண்டியன் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பிரவின் ராஜ், நெல்லை மாவட்ட செயலா ளர் ராஜேஸ் பாண்டியன், விருதுநகர் மாவட்ட செயலா ளர் கருப்பசாமி பாண்டியன், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் முருகன் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி னர்.

    • இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
    • எம்.எல்.ஏ. வெங்கடேசன் தலை மையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தானில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை ஒட்டி அவரது படத்திற்கு தி.மு.க. சார்பில் சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன் தலை மையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

    ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், நகர செயலாளர்-வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், பொதுக் குழு உறுப்பினர் ஸ்ரீதர், பேரூராட்சி துணைத் தலைவர் லதா கண்ணன், பேரூர் துணைச் செய லாளர்கள் ஸ்டாலின், கொத்தாளம் செந்தில், செல்வராணி ஜெயராமச் சந்திரன், வார்டு கவுன்சி லர்கள் குருசாமி, நிஷா கவுதம ராஜா, முத்து செல்வி சதீஷ், ஒன்றிய கவுன்சிலர் வசந்த கோகிலா சரவணன்,

    முள்ளிபள்ளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா, ரிஷபம் ஊராட்சி மன்ற தலைவர் சிறுமணி, திருவாலவாய நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் சகுபர் சாதிக் திருவேடகம் ஊராட்சி மன்ற தலைவர் பழனி யம்மாள், மாவட்ட பிரதி நிதிகள் பேட்டை பெரிய சாமி, சுரேஷ், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் அண்ணாத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அதேபோல் சோழ வந்தான் அருகே கண்ணு டையாள்பு ரத்தில் தியாகி இமானுவேல் சேகரின்

    66-ம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவி யருக்கு நோட்டு புத்தகம் வழங்குவிழா நடந் தது. தொடர்ந்து அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்ட து. டாக்டர். பாலமுருகன், தமிழர் தேசிய கழக தலைவர் வழக்கறிஞர் வையவன் தலைமை தாங்கி னார். இதில் நிர்வாகிகள் குமார், முத்துப்பா ண்டி, சரவணன், மணிகண்டன், கார்த்திக், பாலமுருகன், அஜித் மற்றும் தமிழர் தேசிய கழக மதுரை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் சோழவந்தான் தொகுதி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.

    • பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனார் நினைவிடத்தில் அ.தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர்.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட் டக் கழகச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி செய்தி ருந்தார்.

    ராமநாதபுரம்

    இந்திய ராணுவத்தில் பணியாற்றியவரும், வெள் ளையனே வெளியேறு" இயக்கத்தில் கலந்துகொண்டு சிறை சென்றவரும், தமிழ் நாட்டின் தென் மாவட்டங்க ளில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கா கப் போராடி, ஓர் அரசியல் சக்தியாக, அவர்கள் அணி திரள்வதற்கு முக்கிய கார ணமாக இருந்தவருமான அரசியல் தலைவர், சுதந்தி ரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 66-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

    இதையொட்டி அ.தி.மு.க. சார்பில் சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவரும், அ.தி. மு.க. பொதுச்செயலாள ரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட் டம், பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று அ.தி.மு.க. சார்பில் நினைவு அஞ்சலி செலுத்தப் பட்டது.

    முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ., கழக மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த் திகா முனியசாமி, கழக அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, தலை மைச் செயற்குழு உறுப்பினர் ராஜலெட்சுமி, முன்னாள் அமைச்சர்கள் அ.அன்வர் ராஜா, கழக மருத்துவ அணி துணைச் செயலாளர் டாக்டர் எம்.மணிகண்டன்

    முன்னாள் கழக அமைப் புச் செயலாளர் நிறைகுளத் தான், முன்னாள் எம்.எல்.ஏக்கள் சதன் பிரபாகர், டாக்டர் எஸ்.முத்தையா, முதுகுளத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. துணைச் செயலா ளரும், வெங்கலக்கு றிச்சி ஊராட்சி மன்றத் தலைவ ருமான எஸ்.டி.செந்தில்கு மார் மற்றும் அ.தி.மு.க. சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள் உள் ளிட்டோர் அவரது நினைவு இடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி னர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை ராமநாதபுரம் மாவட் டக் கழகச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி செய்தி ருந்தார்.

    • இமானுவேல் சேகரன் நினைவு தின பாதுகாப்பு ஏற்பாடுகளை கலெக்டர், எஸ்.பி ஆய்வு செய்தார்.
    • தேவேந்திரர் பண்பாட்டு கழக தலைவர் பரம்பை பாலா உள்ளிட்ட நிர்வாகி கள் உடனிருந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வருகிற 11-ந்தேதி இமானுவேல் சேகரன் 66-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. தமிழக அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளனர்.

    இந்த நிலையில் இமானு வேல் சேகரன் நினைவி டத்தில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, முருகேசன் எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் அப்தாப் ரசூல் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகள், கண்காணிப்பு காமிராக்கள், வி.ஐ.பி.க்கள் வந்து செல்லும் வழித்தடங்கள், வாகனங்கள் நிறுத்துமிடம், புற காவல் நிலையங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது தேவேந்திரர் பண்பாட்டு கழக தலைவர் பரம்பை பாலா உள்ளிட்ட நிர்வாகி கள் உடனிருந்தனர்.

    • திருச்சுழியில் கட்சி நிர்வாகிகள், முக்கியஸ்தர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
    • கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    திருச்சுழி

    தியாகி இமானுவேல் சேகரனாரின் 66-வது குரு பூஜை விழா வருகிற 11-ந் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதற்காக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்பை சேர்ந்த நிர்வா கிகள், முக்கிய பிரமுகர்கள், சமுதாய தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் நேரில் சென்று மாலையணி வித்து நினைவஞ்சலி செலுத்த உள்ளனர்.

    இந்த நிலையில் விருதுந கர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தியாகி இமா னுவேல் சேகரன் நினைவி–டத்திற்கு அஞ்சலி செலுத்த வருவோர் கடைபிடிக்க வேண்டிய வழிமு றைகள் மற்றும் அனுமதிக் கப்பட்ட வழித்தடங்களில் வருவது குறித்த ஆலோசனைக் கூட் டம் திருச்சுழி டி.எஸ்.பி. ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள பல் வேறு கிராமங்களில் இருந்து கட்சி நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண் டனர். கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் டி.எஸ்.பி. ஜெகநாதன் பேசும்போது, வருகிற செப் டம்பர் 11-ந்தேதி தியாகி இமானுவேல் சேகரானாரின் குருபூஜை விழா நடைபெறு கிறது. இதனையொட்டி திருச் சுழி மற்றும் நரிக்குடி வழி யாக மாவட்ட எல்லையான மானாசாலை சோதனைச்சா வடியை கடந்து சென்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற வுள்ள தியாகி இமானுவேல் சேகரனாரின் குருபூஜை விழாவிற்கு அஞ்சலி செலுத்த வாகனங்களில் வருவோர் முறையான அனு மதி பெற்று அரசு வகுத் துள்ள வழித்தடங்களில் வருவது உள்ளிட்ட அனைத்து வழிகாட்டு நெறி முறை களையும் தவறாது கடை பிடித்து அமைதியான முறையில் சென்று அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பி வர அனைவரும் தங்களது ஒத்து ழைப்பை வழங்க வேண்டு மெனவும் திருச்சுழி கேட்டுக் கொண்டார்.

    மேலும் தியாகி இமானு வேல் சேகரனாரின் குரு பூஜையை முன்னிட்டு நடை பெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் திருச்சுழி சரக இன்ஸ்பெக்டர் மணிகண் டன், நரிக்குடி சரக இன்ஸ் பெக்டர் ஜெகநாதன் ஆகி யோர் பங்கேற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் திருச் சுழி மற்றும் அதனை சுற்றி யுள்ள பல்வேறு கிராமங்க ளில் இருந்து சமுதாய தலை வர்கள், கட்சியின் நிர்வாகி கள் மற்றும் பொதுமக்கள் உட்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல் திருச்சுழி மற்றும் நரிக்குடி சரக காவல் நிலையத்திற்கு உட்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக் டர்கள், அனைத்து பிரிவுக ளின் காவலர்கள் உட்பட ஏராளமானோர் இந்த கூட் டத்தில் கலந்து கொண்டனர்.

    • இமானுவேல் சேகரனார் குறித்து அவதூறு பேசிய பாரதிய பார்வர்டு பிளாக் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
    • மாநகராட்சியில் போலீஸ் கமிஷனர் ஆகி–யோரை நேரில் சந்தித்து அந்தந்த மாவட்டங்களில் புகார் மனு கொடுத்து வரு–கின்றனர்.

    கீழக்கரை

    தேவேந்திரகுல இன மக்கள் தெய்வமாக வணங் கும் தியாகி இமானுவேல் சேகரனாரை தரக்குறைவாக இழிவுபடுத்தி பேசிய பாரதிய பார்வர்டு பிளாக் தலைவர் முருகன்ஜி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேவேந் திரகுல மக்கள் முன்னேற்ற பேரவை சார்பில் தமிழகத் தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அமைப்பின் சார்பில் அந் தந்த மாவட்ட நிர்வாகி–கள் புகார் கொடுத்துள்ளனர்.

    ராமநாதபுரம் மாவட்டத் தில் தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவை நிறு–வனர் மற்றும் தலைவர் எஸ்.ஆர்.பாண்டியன் தனது கட்சி ஆதரவாளர்களுடன் போலீஸ் சூப்பிரண்டு தங்க–துரையை நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்தார்.பின்னர் அவர் நிருபர்க–ளிடம் கூறியதாவது:-

    கடந்த இரண்டு நாட்க–ளாக சமூக வலைத்தளங்க–ளில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த பாரதிய பார்வர்ட் பிளாக் தலைவர் முருகன்ஜி என்ப–வர் உசிலம்பட்டியில் நடை–பெற்ற ஒரு கூட்டத்தில் சுதந்திரப் போராட்டத் தியாகியும், தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்கள் தெய்வமாக வணங்கி வரும் தியாகி இமானுவேல் சேகர–னாரை இழிவுபடுத்தும் விதமாக பேசியுள்ளார்.

    இவர் பேசிய பேச்சால் தென் மாவட்டங்களில் இணக்கமாக இருந்து வரும் சமூகங்களுக்கு மத்தியில் கலவரங்கள் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே முருகன்ஜி மீது வழக்குப்பதிவு செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து மக்கள் மத்தி–யில் அமைதி சூழ்நிலை ஏற்படுத்த காவல்துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமநாத–புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளேன்.

    இங்கு மட்டுமின்றி எங் கள் அமைப்பைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள், தொண் டர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களி–லும் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாநகராட்சியில் போலீஸ் கமிஷனர் ஆகி–யோரை நேரில் சந்தித்து அந்தந்த மாவட்டங்களில் புகார் மனு கொடுத்து வரு–கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறி–னார்.

    ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் மருதகுமார், மேற்கு மாவட்டத் தலைவர் செல்லத்துரை, கிழக்கு மாவட்ட தலைவர் சபா, மாவட்ட இளைஞரணி தலைவர் சுதாகரன் உட்பட பலர் உடன் இருந்தனர். 

    ×