search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சப் இன்ஸ்பெக்டர்"

    • அனுராதா ராணி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.
    • சப்-இன்ஸ்பெக்ட்டர் கிரிராஜ் என்னிடம், உன்னை பார்த்துக்கொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு கொடு, ஒரு ராத்திரிக்கு எவ்வளவு என்று கேட்டார்.

    ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் மத்திய தொழிற்பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் கன்னத்தில் விமான நிறுவன பெண் ஊழியர் ஒருவர் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் பணியாற்றுபவர் அனுராதா ராணி. இவர் கடந்த ஜூலை 11 வியாழக்கிழமை அதிகாலை சக ஊழியர்களுடன் விமான நிலையத்திற்குள் நுழைந்துள்ளார். அப்போது பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் கிரிராஜ் பிரசாத் அவரை நிறுத்தி, விமான நிலைய நுழைவுவாயிலில் விமான குழுவினரிடம் ஸ்கிரீனிங் செய்யுமாறு கூறியுள்ளார். அப்போது அனுராதாவிடம் தகாத முறையில் ஆபாசமாக கிரிராஜ் பேசியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம்ஏற்பட்டு அனுராதா ராணி கிரிராஜின் கன்னத்தில் அறைந்தார்.

    இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியது. இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் கிரிராஜ் பிரசாத் கொடுத்த புகாரின் பேரில் அனுராதா ராணி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    இதற்கிடையே சம்பவம் தொடர்பாக ஸ்பைஸ்ஜெட் செய்தி தொடர்பாளர் கூறுகையில், அனுராதா ராணியிடம் சரியான விமான நிலைய நுழைவு அனுமதி இருந்தது. ஆனால் அவர் மத்திய தொழிற்பாதுகாப்பு படை அதிகாரிகளால் தகாத வார்த்தைகளுக்கு உட்படுத்தப்பட்டார். அவருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையை அணுகி உள்ளோம். இந்த விஷயத்தில் எங்கள் ஊழியருக்கு முழு ஆதரவையும் வழங்குகிறோம் என்றார்.

    இந்நிலையில் கைது செய்யப்பட்ட அனுராதா ராணி தற்போது கிரிராஜ் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முனவித்துள்ளார். செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், 'ஜூலை 11 காலை 4.30 மணிக்கு நான் எனது வேலையை செய்ய வந்தேன். அப்போது சப்-இன்ஸ்பெக்ட்டர் கிரிராஜ் என்னிடம், உன்னை பார்த்துக்கொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு கொடு, ஒரு ராத்திரிக்கு எவ்வளவு ரேட் என்று கேட்டார்.

     உங்கள் மீது போலீசில் புகார் அளிப்பேன் என்று நான் கூறியதற்கு, நான் சொல்வதைக் கேள், நீ நன்றாக உணர்வாய், வேலை வேகமாக முடிந்துவிடும் என்று தெரிவித்தார். இதனால் அவரை அறைந்தேன். நான் போலீஸ் புகார் அளிப்பதற்கு முன் அவர் என்மீது புகார் அளித்துவிட்டார்' என்று தெரிவித்தார். விமான நிலையத்தில் இரவு நேரத்தில் பெண் போலீஸ் அதிகாரிகள் இல்லாததால் மற்ற பெண் பணியாளர்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

    • சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை.
    • பீகார் முதல் திருநங்கை சப்-இன்ஸ்பெக்டர் ஆவார்

    மான்வி மது காஷ்யப் என்ற திருநங்கை பீகார் மாநிலத்தின் முதல் திருநங்கை சப்-இன்ஸ்பெக்டர் ஆகியுள்ளார். சப்-இன்ஸ்பெக்டருக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றதன் மூலம் கனவு நனவாகியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

    பீகாரின் பங்கா மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த இவரை பல பயிற்சி மையங்கள் நிராகரித்த போதிலும், தனது விடாமுயற்சி காரணமாக தற்போது சப்-இன்ஸ்பெக்டராகியுள்ளார்.

    இது தொடர்பாக மான்வி மது காஷ்யப் கூறுகையில் "எனக்கு இது கனவு நனவானது போல் உள்ளது. எனக்கு உதவியாக என்னுடைய இருந்த அனைவருக்கும் மிகவும் நன்றியுள்ளவனராக இருக்கிறேன்.

    ஆனால் என்னுடைய பயணம் இங்கேயுடன் நின்று விடாது. கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் பணி செய்தால் எதையும் அடைய முடியும் என்ற தகவலை எனது கிராம மக்களுக்கு தெரிவிக்க, போலீஸ் உடையுடன் சொந்த கிராமத்திற்கு செல்ல விரும்புகிறேன்.

    எனது வெற்றிக்கான பாதை சவால்களால் நிறைந்தது என்று நான் சொல்ல வேண்டும். குறிப்பாக நான் ஒரு திருநங்கை என்ற அடையாளத்தின் காரணமாக. நான் பல தடைகளையும் பாகுபாடுகளையும் சந்தித்தேன். திருநங்கைகளின் முன்னேற்றத்திற்கு நிறைய செய்ய வேண்டும்.

    சப்-இன்ஸ்பெக்டர் தேர்விற்கு தயாராகுவதற்காக பாட்னாவில் பல பயிற்சி மையங்களுக்கு சென்றேன். ஆனால் நான் அங்கே இருப்பது சூழ்நிலையை சீர்குலைக்கும் எனச் சொன்னார்கள். இது என்னை மிகவும் பின்னடைவாக இருந்தது. ஆர்வலர் ரேஷ்மா பிரசாத், ஆசிரியர் ரஹ்மான் ஆகியோர்தான் நான் இந்த நிலைக்கு உயர முக்கிய காரணம்" என்றார்.

    2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பீகாரில் 40,827 திருநங்கைகள் உள்ளனர்.

    • போலீஸ் நிலையம் முன்பு ஏராளமான வக்கீல்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.
    • சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.

    பெங்களுரு:

    கர்நாடக மாநிலம் சிக்மகளூர் பகுதியை சேர்ந்தவர் வக்கீல் பிரீதம். சம்பவத்தன்று இவர் ஹெல்மெட் அணியாமல் வாகனத்தில் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிக்மகளூர் நகர போலீசார் அவரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது வக்கீல் பிரீதமை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுபற்றி தெரியவந்ததும் போலீஸ் நிலையம் முன்பு ஏராளமான வக்கீல்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.

    இதையடுத்து அங்கு பதட்டமான சூழ்நிலை உருவானது. பின்னர் சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு விக்ரம் ஆம்தே விரைந்து வந்து விசாரணை நடத்தினார். பின்னர் வக்கீல் மீது தாக்குதல் நடத்தியதாக சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.

    மேலும் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேரையும் சஸ்பெண்டும் செய்தார். தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் இருந்து போலீஸ் சூப்பிரெண்டு விக்ரம் ஆம்தே வெளியே செல்லாமல் வக்கீல்கள் போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். அவர்களிடம் போலீஸ் சூப்பிரெண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.

    மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர் என்று தெரிவித்தார். இதையடுத்து வக்கீல்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் போலீசாரை கண்டித்து சிக்மகளூர் பார்கவுன்சில் உறுப்பினர்கள் இன்று ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

    • உடல்நிலை சரியில்லாத நிலையில் செல்வம் மருத்துவ விடுப்பில் இருந்தார்.
    • சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சீலநாயக்கம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் மங்களபுரத்தை சேர்ந்தவர் செல்வம் (58). இவர் சேலம் வடக்கு போக்குவரத்து பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். சேலம் கமிஷனர் அலுவலகம் அருகில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.

    இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத நிலையில் செல்வம் மருத்துவ விடுப்பில் இருந்தார். மேலும் சீல நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சீலநாயக்கம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்து போன சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இதில் ஒரு மகளுக்கு மட்டும் திருமணம் ஆகியுள்ளது. 

    • வழக்குப் பதிவு செய்யப்பட்டு குட்கா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • பல்வேறு போலீஸ் நிலையங்களில் குட்கா விற்பனைக்கு போலீசார் உடந்தையாக இருப்பதாக புகார்கள் எழுந்தன.

    சென்னை:

    சென்னையில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகள் மேற்பார்வையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு குட்கா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சென்னையில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் குட்கா விற்பனைக்கு போலீசார் உடந்தையாக இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக நடத்தப்பட்ட ரகசிய விசாரணையில் அது உறுதியானது. இதை தொடர்ந்து சென்னையில் 6 சப்-இன்ஸ்பெக்டர்கள், 2 ஏட்டுகள், 14 போலீசார் என 22 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.

    கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் இதற்கான உத்த ரவை பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக உயர் அதிகாரிகள் கூறும்போது, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனைக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீதும், காவல் துறையினர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    • வேப்பேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜூ விசாரணை நடத்தி வருகிறார்.
    • போதையில் கலாட்டா செய்த ரவுடி கிஷோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை வேப்பேரி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் கவுரி. இவர் சூளை குறவன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்.

    அப்போது அப்பகுதியை சேர்ந்த ரவுடி கிஷோர் சப்-இன்ஸ்பெக்டர் கவுரியிடம் சென்று ரகளையில் ஈடுபட்டார். மதுபோதையில் சப்-இன்ஸ்பெக்டர் எதிரில் நின்றபடியே அவதூறான வார்த்தைகளை பேசிய அவர் "நான் ஆம்பள... எனக்கு பயமே இல்ல... எத்தன பேர் வந்தாலும் சண்டை செய்வேன்" என்று பேசியபடியே அங்குமிங்கும் செல்கிறார்.

    இதனை மாடியில் இருந்து பொதுமக்களில் ஒருவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுதொடர்பாக வேப்பேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜூ விசாரணை நடத்தி வருகிறார். பி.வகை ரவுடியான கிஷோர் கால்வாய் கிஷோர் என்றும் அழைக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். போதையில் கலாட்டா செய்த ரவுடி கிஷோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரை கைது செய்து சிறையில் அடைக்க உள்ளனர்.

    • தேர்வு எழுதும் நபர்களை காலை 8.30 மணிக்கு தேர்வு மையத்துக்குள் அனுமதித்தனர்.
    • தேர்வு மையங்களுக்கு காலை 10 மணிக்கு பிறகு வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.

    திருவள்ளூர்:

    தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம், காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு பல்வேறு பிரிவுகளில் உள்ள 621 காலியிடங்களை நிரப்புவதற்கு தேர்வு நடைபெறுகிறது.

    இதற்கான எழுத்து தேர்வு திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 3 மையங்களில் நடைபெற்றது.

    இதில் காக்களூர் சி, சி, சி இந்து மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் 1300 பேரும், திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் பள்ளியில் 1075 ஆகிய இரண்டு மையங்களில் ஆண்களும், திருவள்ளூர் டி.ஆர்.பி.சி.சி.சி மேல்நிலை பள்ளியில் 558 பெண்களும் மொத்தம் 3 மையங்களிலும் இந்த தேர்வில் 2 ஆயிரத்து 933 பேர் தேர்வு எழுதினர்.

    தேர்வு எழுதும் நபர்களை காலை 8.30 மணிக்கு தேர்வு மையத்துக்குள் அனுமதித்தனர். மேலும் ஆதார் அட்டையை சரிபார்த்து அனுமதித்தனர்.

    மேலும் தேர்வாளர்கள் கொண்டு வந்த கை பை, புத்தகங்கள், செல்போன் மற்றும் செல்போன், கால்குலேட்டர், புளுடூத் போன்ற மின்சாதன பொருட்கள் தேர்வு மையத்துக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. தேர்வு மையங்களுக்கு காலை 10 மணிக்கு பிறகு வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.

    இந்த தேர்வு பணிக்காக 3 தேர்வு மையத்திற்கு அமலாக்கத்துறை காவல்துறை தலைவர் ராதிகா மேற்பார்வையில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கந்தன், கிரியாசக்தி உள்பட 600க்கும் மேற்பட்ட போலீசார் தேர்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • மருத்துவ விடுப்பில் இருந்த சங்கீதா இன்று அதிக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
    • மருத்துவ விடுப்பில் இருந்த பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் மர்ம நபர்கள் போனில் ஆபாசமாக பேசியதால் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை சவரியார் பட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவருக்கும் அவரது மனைவிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் மனைவிக்கு ஆதரவாக வக்கீல் கலீல் ரகுமான் செயல்பட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த ஆரோக்கியராஜ், வக்கீல் கலீல் ரகுமானை ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்டது,

    இது தொடர்பாக திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதற்கிடையே ஆரோக்கிய ராஜை கைது செய்ய வலியுறுத்தி இரு தினங்களுக்க முன்தினம் வக்கீல்கள் திடிரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கைது செய்வதாக கூறியதன் பேரில் போரட்டம் கைவிடப்பட்டது.

    இந்நிலையில் ஆரோக்கிய ராஜை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என மீண்டும் வக்கீல்கள் போலீஸ் சூப்பிரெண்டு அலுவலகத்திற்கு முன்பாக வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

    மேலும் அலட்சிய போக்கில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதாவை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே திருக்கோகர்ணம் சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதாவை ஆதனக்கோட்டை காவல் நிலையத்திற்கு இட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

    இதையடுத்து மருத்துவ விடுப்பில் இருந்த சங்கீதா இன்று அதிக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    உறவினர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து ள்ளனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ விடுப்பில் இருந்த பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் மர்ம நபர்கள் போனில் ஆபாசமாக பேசியதால் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

    வக்கீல்கள் போராட்டத்தால் பணியிடமாற்றம் செய்யப்பட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் புதுக்கோட்டையில் காவல் துறையினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்யபிரியா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    • மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார்.

    திருச்சி:

    திருச்சி மாநகரத்தில் செயல்படும் ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் நடப்பதாக புகார்கள் வருகின்றன. அவ்வப்போது விபச்சார தடுப்பு பிரிவு போலீசாரும் மேற்கண்ட மையங்களில் அதிரடி சோதனை நடத்தி அப்பாவி பெண்களை மீட்டு வருகின்றனர். இந்நிலையில் பாலியல் தொழிலை தடுக்க தவறியதாக, திருச்சி மாநகர விபச்சார தடுப்பு பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜ்மோகன், பால சரஸ்வதி, ஏட்டு அசாலி ஆகிய மூவரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து, திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்யபிரியா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    கடந்த இரு தினங்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலக சாலையில் மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் வெளி மாநில அழகி உட்பட 3 பேர் மீட்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

    • கோபமடைந்த சுதாகர், அந்த பெண்ணின் கணவரிடம் உன்னை கைது செய்து விடுவேன் என மிரட்டி உள்ளார்.
    • சுதாகரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த சுதாகர் என்பவர், புகார் அளிப்பதற்காக போலீஸ் நிலையத்திற்கு வந்த திருமணமான பெண் ஒருவரின் செல்போன் எண்ணை அவரது புகார் மனுவில் இருந்து எடுத்து அந்த பெண்ணுக்கு போன் செய்து, ஆபாசமாக பேசி அடிக்கடி தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

    ஒரு கட்டத்தில் அவரது தொல்லை தாங்க முடியாமல் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் தனக்கு அடிக்கடி போன் செய்து ஆபாசமாக பேசுவது குறித்து அந்த பெண் தனது கணவரிடம் கூறியுள்ளார்.

    உடனே பெண்ணின் கணவர் இது குறித்து சுதாகரிடம் சென்று தட்டிக் கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த சுதாகர், அந்த பெண்ணின் கணவரிடம் உன்னை கைது செய்து விடுவேன் என மிரட்டி உள்ளார்.

    இதனையடுத்து அந்த பெண்ணும், அவரது கணவரும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் நேரில் சென்று இதுகுறித்து புகார் அளித்தனர்.

    இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களிடம் எஸ்.பி. பாலாஜி சரவணன் உறுதி அளித்தார். அதனைத்தொடர்ந்து, உடனடியாக விளாத்திகுளம் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி உள்ளார். இந்நிலையில், தற்போது ஒழுங்கு நடவடிக்கை காரணமாக அவர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    • கடந்த சில நாட்களுக்கு முன் திருவள்ளூர் நகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடை அடைப்பை சீர் செய்யும் பணி நடைபெற்றது.
    • சிவகுமார் உடனடியாக கற்களையும், மண்ணையும் கொண்டு வந்து கொட்டி சாலையை சீர் செய்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் உழவர் சந்தை பகுதியில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

    இங்கு கடந்த சில நாட்களுக்கு முன் திருவள்ளூர் நகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடை அடைப்பை சீர் செய்யும் பணி நடைபெற்றது. இதனால் பல இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக மாறி உள்ளன.

    குறிப்பாக சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூர் உழவர் சந்தை அருகே பெரிய பள்ளத்தால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

    நேற்று அப்பகுதியில் நடந்து சென்ற முதியவர் பள்ளத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து எழுந்து சென்றார். இதனை கண்டதும் அங்கு பணியில் இருந்த போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் சிவகுமார் உடனடியாக கற்களையும், மண்ணையும் கொண்டு வந்து கொட்டி சாலையை சீர் செய்தார்.

    அவரே பள்ளத்தில் கற்களை கொட்டினார். இதனை கண்ட பொதுமக்கள் அவரை பாராட்டினர். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    திருவள்ளூர் போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமாரின் செயலை போலீஸ் உயர் அதிகாரிகளும் பாராட்டினார்.

    திருவள்ளூர் நகரில் பாதாள சாக்கடை பணிக்காக பல இடங்களில் தோண்டப்பட்டு ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ள பள்ளங்களை பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன்னர் உடனடியாக சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் போராட்டக்காரர்களை தாக்குவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
    • நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேலை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் அருகே வாஞ்சூர் ரவுண்டானாவில் இருசக்கர வாகனத்தில் சாராயம் கடத்தலை தடுக்கும் வகையில் சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அங்குள்ள 4 சாலைகளில் 2 சாலைகள் ஒருவழி பாதையாக தடுப்புகள் அமைக்கப்பட்டு மாற்றப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக அவ்வழியாக செல்லும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் சாலை வளைவில் திரும்ப முடியாமல் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர்.

    இந்நிலையில், கும்பகோணத்தில் இருந்து நாகை வந்த 2 அரசு பஸ்கள் சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்ததால் அவ்வழியாக செல்ல முடியாமல் நீண்ட நேரம் பயணிகளுடன் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலை தடுப்புகளை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் போராட்டக்காரர்களை தாக்குவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    அதனை தொடர்ந்து, நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேலை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

    ×