என் மலர்
நீங்கள் தேடியது "மண் கடத்தல்"
- நாகர்கோவில் புவியியல் மற்றும் சுங்கத்துறை தனிப்படையினர் வாகன தணிக்கை
- இரணியல் போலீஸ் விசாரணை
கன்னியாகுமரி:
நாகர்கோவில் புவியியல் மற்றும் சுங்கத்துறை உதவி இயக்குனர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படையினர் நேற்று காலை தோட்டியோடு சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த னர். அப்போது அந்த வழியாக வந்த டெம்போவை நிறுத்தியபோது டெம்போ டிரைவர் டெம்போவை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
டெம்போவை தனிப்படை போலீசார் சோதனை செய்தபோது, அதில் அரசு அனுமதி இன்றி எம்சாண்ட் மணல் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. டெம்போவுடன் அவற்றை பறிமுதல் செய்து இரணியல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
- ரோந்து பணியில் சிக்கியது
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி பகுதியில் இருந்து புதுப்பேட்டை பகுதிக்கு செல்லும் சாலையில் நேற்று திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக சென்ற 2 டிப்பர் லாரி மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் அரசு அனுமதி இன்றியும் மற்றும் உரிய உரிமம் இல்லாமல் மண் எடுத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் 2 டிப்பர் லாரிகளையும் பறிமுதல் செய்தனர்்.
- வருவாய்த் துறையினர் சோதனையில் சிக்கியது
- போலீசார் விசாரணை
ஆரணி:
ஆரணி அடுத்த முள்ளண்டிரம் கிராமத்தின் ஏரியில் லாரி மற்றும் டிராக்டர் மூலம் மொரம்பு மண் கடத்துவதாக சப்-கலெக்டர் தனலட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
மேலும் சப் கலெக்டர் மற்றும் வருவாய்த் துறையினர் முள்ளிண்டிரம் கிராமத்தில் உள்ள ஏரிக்கு சென்ற போது லாரியில் மொரம்பு மண் அள்ளியவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இதனையொடுத்து சப் கலெக்டர் தனலட்சுமி மொரம்பு மண் கடத்திய லாரியை பறிமுதல் செய்து ஆரணி தாலுகா போலீசில் ஒப்படைத்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எடுக்கப்ப ட்ட மண்ணுக்கு ஊராட்சி கணக்கு எண் ஒன்றிற்கு ரூ.3 லட்சம் செலுத்துமாறு ஒப்பந்ததாரருக்கு அதிகாரி உத்தரவு.
- தொடர் மண் திருட்டை அதிகாரிகள் தடுக்க வேண்டும்
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒசஅள்ளி ஊராட்சியில் ஏழு சிறிய கிராமங்களை உள்ளது. ஊராட்சியில் பெருமாள் கோவில் முதல் பாசாரப்பட்டி வரையில் 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு தார் சாலை அமைக்கும் பணிக்கு கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்து தற்பொழுது பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர் ஊராட்சியின் அனுமதியின்றி பல லட்சம் டன் செம்மண் சாலை பணிக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இதை தடுப்பதற்காக ஊராட்சி மன்றத் தலைவர் ஆறுமுகம் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்ட செம்மண் கடத்தல் செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர். மாவட்ட துணை கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த தகவலின் பேரில் விசாரணை செய்யப்பட்டு எடுக்கப்ப ட்ட மண்ணுக்கு ஊராட்சி கணக்கு எண் ஒன்றிற்கு ரூ.3 லட்சம் செலுத்துமாறு ஒப்பந்ததாரருக்கு மாவட்ட கூடுதல் கலெக்டர் தீபனா விக்னேஸ்வரி அறிவுறுத்தி சென்றதாக கூறப்படுகிறது. பின்பு எதையும் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து மண் திருட்டு நடத்தி வருகிறார்.
இந்த தொடர் மண் திருட்டை அதிகாரிகள் தடுக்க வேண்டும் என்பது ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
தொடரும் மண் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மேற்கொண்டு மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர்.
- அதிகாரிகளை கண்டதும் தப்பி ஓடிவிட்டனர்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த மின்னல் நரசிங்கபுரம் பகுதி யில் மண் கடத்தப்படுவதாக அரக்கோணம் தாசில்தார் சண்முகசுந்தரத்திற்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அவரது தலைமையிலான வருவாய்த்துறை அலுவலர் கள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அப்போது அந்த வழியாக டிராக்டரில் மண் ஏற்றி வந்த வர்கள், அதிகாரிகளை கண்ட தும் தப்பி ஓடிவிட்டனர்.
இதனையடுத்து தாசில்தார் சண் முகசுந்தரம் டிராக்டரை பறி முதல் செய்து அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத் தில் ஒப்படைத்தார்.
இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டிரைவர் கைது
- போலீசார் விசாரணை
நெமிலி:
பாணாவரம் அடுத்த மகேந்திரவாடி மற்றும் வேடந்தாங்கல் பகுதிகளில் நேற்று சப்கலெக்டர் பாத்திமா ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது மகேந்திரவாடியில் இருந்து வேடந்தாங்கல் செல்லும் சாலையில் டிப்பர் லாரி ஒன்று எதிரே வந்தது.
அந்த டிப்பர் லாரியின் டிரைவர் சப் கலெக்டர் வருவதை பார்த்து லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
பின்னர் லாரியை சோதனை செய்து பார்த்த போது அதில் முறையாக அனுமதியின்றி கிராவல் மண்ணை கடத்திவந்தது தெரியவந்தது.
உடனே சப் கலெக்டர் பாத்திமா நெமிலி தாசில்தார் பாலசந்தரை அழைத்து பறிமுதல் செய்யப்பட்ட லாரியை பாணாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
இதனையடுத்து நெமிலி தாசில்தார் பாலசந்தர், நெமிலி வருவாய் ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் பறிமுதல் செய்யப்பட்ட லாரியை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக லாரி டிரைவர் தயாளன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கடந்த சனிக்கிழமை சட்ட விரோதமாக மண் கடத்தி வந்த லாரியை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் அதிரடியாக மடக்கிப்பிடித்தார்.
- பேட்டரி வெங்கடேசன் மற்றும் ராமர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள மறவா நத்தம் ஏரியில் கடந்த சனிக்கிழமை சட்ட விரோதமாக மண் கடத்தி வந்த லாரியை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் அதிரடியாக மடக்கிப்பிடித்து சின்னசேலம் தாசில்தார் இந்திரா மற்றும் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் ஆகியோரிடம் மண் கடத்தி வந்த லாரியையும் சம்பந்தப்பட்டவர்களையும் ஒப்படைத்தார். இது குறித்து மறவா நத்தம் கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் லாரி உரிமையாளர் பேட்டரி வெங்கடேசன் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் சூரிய பிரகாஷ், சதீஷ்குமார், வரதராஜ் ஆகிய 3 பேரையும் சின்னசேலம் போலீசார் அதிரடியாக கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர். மீதமுள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக வலை வீசி தேடி வந்தனர். இந்த நிலையில் லாரி உரிமையாளர் மற்றும் பா.ம.க.பிரமுகர் பேட்டரி வெங்கடேசன் மற்றும் ராமர் ஆகியோரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அைடத்தனர்.
- கே.மோட்டூர் வவ்வால்தோப்பு பகுதியில் ரோந்து சென்றனர்.
- டிராக்டரை சோதனை செய்த போது அதில் ஒரு யூனிட் மண் இருந்தது , தெரிய வந்தது.
காவேரிப்பட்டணம்,
காவேரிப்பட்டணம் போலீசார் கே.மோட்டூர் வவ்வால்தோப்பு பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு கேட்பாரற்று நின்ற ஒரு டிராக்டரை சோதனை செய்த போது அதில் ஒரு யூனிட் மண் இருந்ததும், அதை கடத்த முயன்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- குளத்து மண் ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர்.
- டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், டிராக்டரை ஓட்டி வந்த சிறுவனையும் கைது செய்தனர்.
களக்காடு:
களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் ஜெ.ஜெ. நகர் பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த குளத்து மண் ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டனர்.
இதில் அரசு அனுமதி இன்றி குளத்து மண்ணை திருடி விற்பனை செய்ய கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், டிராக்டரை ஓட்டி வந்த 16 வயது சிறுவனை கைது செய்தனர். மேலும் டிராக்டர் உரிமையாளரான கடம்போடுவாழ்வு தெற்கு தெருவை சேர்ந்த பெருமாள் மகன் செண்டு என்பவரை தேடி வருகின்றனர்.
- அதிகாரியை கண்டவுடன் டிரைவர்கள் தப்பி ஓடி விட்டனர்
- போலீசார் விசாரணை
ஆரணி:
ஆரணி அருகே 12 புத்தூர் கிராமத்தில் உள்ள ஓமந்தாங்கல் ஏரியில் மொரம்பு மண் கடத்துவதாக பொதுமக்கள் புகார் அளித்தனர் .
அதபேரில் ஆரணி கோட்டாட்சியர் தனலட்சுமி தலைமையில் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது பொக்லைன் எந்திரம் மூலம் லாரியில் மண் நிரப்பிக் கொண்டிருந்தனர்.
வருவாய்த்துறை அதிகாரிகள் ஒருவரை கண்டவுடன் டிரைவர்கள் தப்பி ஓடி விட்டனர்.
பின்னர் மண் அள்ளிய பொக்லைன் எந்திரம் மற்றும் லாரியை பறிமுதல் செய்து தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். இதனையடுத்து கோட்டாட்சியர் தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.
இதே போல ஆரணி அடுத்த சங்கீதவாடி கிராமத்தில் ஏரியில் 2 டிராக்டர்களில் மண் கடத்துவதாக வந்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 டிராக்டர்களை பறிமுதல் செய்தனர் .
இந்த 2 சம்பவங்களில் தப்பி ஓடிவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- தப்பியோடிய பஞ்சாயத்து தலைவியின் கணவர் முருகேசனை வலைவீசி தேடி வருகின்றனர்.
- மண் கடத்தலில் பயன்படுத்தப்பட்ட டிராக்டர், ஜே.சி.பி எந்திரங்களை பறிமுதல் செய்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள இருக்கன்துறையை சேர்ந்தவர் முருகன் என்ற முருகேசன் (வயது 45). இவரது மனைவி இந்திரா. இவர் இருக்கன்துறை பஞ்சாயத்து தலைவராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் முருகேசன் அந்த பகுதியில் உள்ள குளத்தில் இருந்து விவசாய நிலங்களுக்கு மண் அள்ளுவதற்கு அனுமதி பெற்று அள்ளி வந்தார். ஆனால் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கிய குளத்தில் மட்டு மல்லாது, அரசு விதிகளை மீறி அந்த குளத்தின் அருகே இருந்த சங்கனேரி குளத்திலும் திருட்டுத்தனமாக அவர் மண் எடுப்பதாக புகார்கள் எழுந்தது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட குளத்திற்கு சென்று மண்டல துணை தாசில்தார் பாலகிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த குளத்திற்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் டிராக்டர் மற்றும் ஜே.சி.பி. எந்திரங்கள் மூலமாக மண் அள்ளப்பட்டது உறுதியானது.
இதனைத்தொடர்ந்து மண்டல துணை தாசில்தார் பாலகிருஷ்ணன் கூடங்குளம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்றார்.
தொடர்ந்து அங்கு மண் திருட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வள்ளியூர் அருகே உள்ள திருமலாபுரத்தை சேர்ந்த தனராஜ், ஆனந்தகுமார் என்ற 2 டிரைவர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். போலீசார் வருவதை கண்டதும் முருகேசன் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து முருகேசன் உள்பட 3 பேர் மீதும் போலீசார் மண் திருட்டு வழக்குப்பதிவு செய்து தனராஜ், ஆனந்த குமார் ஆகியோரை கைது செய்தனர். தப்பியோடிய பஞ்சாயத்து தலைவியின் கணவர் முருகேசனை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் மண் கடத்தலில் பயன்படுத்தப்பட்ட டிராக்டர், ஜே.சி.பி எந்திரங்களை பறிமுதல் செய்தனர்.
- அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என புகார்
- நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
செங்கம்:
செங்கம் அருகே உள்ள கரியமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள காரியமங்கலம் பெரிய ஏரியில் தொடர்ந்து ஏரி மண்ணை அனுமதியின்றி எடுத்துச் செல்வதாக அப்பகுதி விவசாயிகள் தரப்பில் புகார் எழுந்துள்ளது.
செங்கம் -திருவண்ணா மலை தேசிய நெடுஞ்சாலை பணி தேவைக்காக கரியமங்கலம் பெரிய ஏரியிலிருந்து மண் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டு ஏரி மண் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
ஆனால் அதன் தொடர்ச்சியாக சுமார் 5-க்கும் மேற்பட்ட லாரிகள் பகல் நேரத்திலேயே ஏரி மண்ணை சுரண்டி எடுத்துச் செல்வதாக அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் தரப்பில் தரப்பில் கூறப்படுகிறது.
கரியமங்கலம் ஏரி தண்ணீரை நம்பி கரியமங்கலம் சுற்றுவட்ட பகுதிகளில் பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது. ஏற்கனவே கரியமங்கலம் ஏரிக்கு செங்கம் அருகே உள்ள காயம்பட்டு ஏரியிலிருந்து வர வேண்டிய உபரி நீர் கால்வாய் பிரச்சனை காரணமாக தண்ணீர் வரத்து சரிவர வராத சூழல் உள்ளது.
தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக ஏரியில் தண்ணீர் இருப்பு உள்ளது.
மண் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த ஏரி தண்ணீரை நம்பி உள்ள விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளா வதாகவும் தெரிவித்துள்ளனர்.
உரிய அனுமதியின்றி ஏரி மண் எடுத்துச் செல்லும் நபர்கள் குறித்து செங்கத்தில் உள்ள அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர்.
இச்செயலில் ஈடுபட்டு வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.