என் மலர்
நீங்கள் தேடியது "அம்பேத்கர்"
- பாஜக 400 இடங்களில் வெற்றி பெற்றால் தான் அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற முடியும் என்று பாஜக எம்.பி.க்கள் தொடர்ச்சியாக பேசி வருகிறார்கள்
- அரசியல் சாசனத்தை இயற்றியது பாபாசாகேப் அம்பேத்கர் என்பதுதான் அவர்களின் பிரச்சினை - லாலு பிரசாத் யாதவ்
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறவேண்டும் எனப் பிரதமர் மோடி கூறினார். இதனையடுத்து பாஜகவினர் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்பதை தேர்தல் முழக்கமாக கொண்டுள்ளனர்.
இதனையடுத்து, பாஜக 400 இடங்களில் வெற்றி பெற்றால் தான் அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற முடியும் என்று பாஜக எம்.பி.க்கள் தொடர்ச்சியாக பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக எம்.பிக்களின் இத்தகைய கருத்திற்கு ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "நமது அரசியல் சாசனம் சாதாரண பாபாவால் எழுதப்பட்டது அல்ல, பாபா சாகேப் அம்பேத்கரால் எழுதப்பட்டது. அரசியலமைப்பை மாற்ற நீங்கள் யார்? ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைத்து சமூக மக்களும் இதனை உங்களுக்கு புரிய வைப்பார்கள்.
அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பாஜக மூத்த தலைவர்கள் பலரும் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு எதிராக மோடியும், பாஜக உயர்மட்டத் தலைவர்களும் நடவடிக்கை எடுக்காமல், அவர்களுக்கு வெகுமதியாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குகின்றனர். அரசியலமைப்புச் சட்டம், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், ஏழைகள் உள்ளிட்டவர்களுடன் பாஜகவுக்கு என்ன பிரச்னை?
அரசியல் சாசனம் பக்கம் அவர்களின் பார்வை போனாலும் கூட, பிற்படுத்தப்பட்ட சமூக மக்களும் தலித்களும் ஏழைகளும் அவர்களின் கண்களை பிடுங்கியெறிந்து விடுவார்கள். அரசியல் சாசனத்தை மாற்ற இவர்கள் யார்?
அரசியலமைப்பை மாற்றுவதன் மூலம், சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம், சமூக நீதி, இடஒதுக்கீடு ஆகியவற்றை இந்த நாட்டிலிருந்து ஒழிக்க நினைக்கிறது பாஜக. மக்களை ஆர்.எஸ்.எஸ் மற்றும் முதலாளித்துவ அடிமைகளாக்க நினைக்கிறார்கள்.
பிரதமர் உண்மையில் பயப்படுகிறார். அவர் நாட்டு மக்களின் முன்பு அம்பலப்படுத்தப்பட்டதால் தேர்தல் தோல்விக்கு பயப்படுகிறார். அவரது தோல்வி பயத்தை மறைக்கவே அவர் பாஜக 370 க்கும் மேற்பட்ட இடங்கள் என்று பெருமை பேசுகிறார்.
நாட்டில் சர்வாதிகாரத்தை கொண்டு வர பாஜக விரும்புகிறது, அதனால்தான் அவர்கள் அரசியலமைப்பை மாற்ற துடிக்கிறார்கள்" என்று லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தார்.
- மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார்.
- ஜான்வி கபூர், கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் மாகி (Mr & Mrs Mahi) என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
ஜான்வி கபூர் நடித்துள்ள Mr & Mrs மஹி படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார். அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வரும் ஜான்வி கபூர், கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் மாகி (Mr & Mrs Mahi) என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ராஜ்குமார் ராவ் நடித்துள்ள இந்தப் படம் வரும் மே 31 ஆம் தேதி வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.
இந்நிலையில், தி லாலன்டோப் சினிமா யூட்யூப் சேனலில் படம் தொடர்பாக ஜான்வி கபூர் பேட்டியளித்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

அந்தப் பேட்டியில் பேசிய ஜான்வி கபூர் தனக்கு வரலாற்றில் அதிக ஆர்வம் இருப்பதாக கூற, உடனே நெறியாளர், 'வரலாற்றின் எந்த காலக்கட்டத்துக்கு செல்ல விரும்புகிறீர்கள்' என்று கேட்கிறார். அதற்கு அவர், "மகாத்மா காந்திக்கும், அம்பேத்கருக்கும் இடையில் 'சாதி' குறித்து அவர்களின் பார்வையையும், கருத்துகளையும், விவாதங்களையும் அறிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.
அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையே நடக்கும் விவாதத்தைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். அவர்களின் சித்தாந்தங்களுக்கு இடையிலான உரையாடலையும், பல்வேறு விஷயங்களில் அவர்கள் கொண்டிருந்த பார்வையையும் அறிந்துகொள்ளலாம்.
சாதி குறித்த தன்னுடைய நிலைப்பாட்டில் தொடக்கத்திலிருந்தே அம்பேத்கர், தெளிவாகவும், கடுமையாகவும் இருந்தார் என நினைக்கிறேன். ஆனால் காந்தியின் பார்வை தொடர்ந்து வளர்ந்து வந்தது என்று நான் நினைக்கிறேன்.

நம் சமூகத்தில் இருக்கும் இந்த சாதிய பிரச்சினை பொறுத்தவரை, மூன்றாவது நபரின் கண்ணோட்டத்திலிருந்து அதை பார்ப்பதற்கும், அந்த வாழ்க்கையை வாழ்வதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது" என்றார்.
அவரிடம், "உங்கள் பள்ளியில் சாதி குறித்து விவாதம் நடக்குமா?" என நெறியாளர் கேட்க, "பள்ளி மட்டுமல்ல, எனது வீட்டிலும் கூட அது தொடர்பான விவாதம் நடந்தது கிடையாது" என்றார்.
ஜான்வி ஒரு நடிகை என்பதை தாண்டி சமூகத்தைப் பற்றிய அவரது பரந்த புரிதல் பெரும்பாலான மக்களை கவர்ந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மனுதர்ம சாஸ்திரத்தை மஹாராஷ்டிரா அரசு ஆதரிக்கவில்லை
- மனுஸ்மிருதியை பாடத்தில் சேர்க்கும் எண்ணமே இல்லை
மகாராஷ்டிரா பள்ளி பாடபுத்தங்களில் மனுதர்ம சாஸ்திரங்கள் சேர்க்கப்படும் என்று தகவலை அம்மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "மனுதர்ம சாஸ்திரத்தை மஹாராஷ்டிரா அரசு ஆதரிக்கவில்லை. மனுதர்ம சாஸ்திரத்திற்கு மகாராஷ்டிராவில் இடமில்லை. மனுஸ்மிருதியை பாடத்தில் சேர்க்கும் எண்ணமே இல்லை. இது அம்பேத்கர், பூலே போன்றோர் பிறந்த பூமி. இவர்களின் முற்போக்கு சிந்தனைகளை செயல்படுத்துவதில் பெயர் பெற்ற மாநிலம் மகாராஷ்டிரா" என்று தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், துணை முதலமைச்சருமான அஜித் பவார் இவ்வாறு பேசியிருப்பது பாஜக கூட்டணியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- இந்த சம்பவத்தில் 121 பேர் உயிரிழந்தது மிகவும் கவலை அளிக்கிறது.
- இவரை போன்ற மற்ற பாபாக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் போலெ பாபா ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 121 பேர் மரணமடைந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "நாட்டில் உள்ள ஏழைகள், தலித்துகள், ஒடுக்கப்பட்டோர் போன்றோர் தங்கள் வறுமையையும் மற்ற அனைத்துத் துன்பங்களையும் போக்குவதற்கு, ஹத்ராஸின் போலே பாபா போன்ற பல பாபாக்களின் மூடநம்பிக்கையால் தவறாக வழிநடத்தப்பட்டு, தங்கள் துயரத்தையும் துன்பத்தையும் அதிகரிக்கக் கூடாது.
மாறாக, பாபா சாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் காட்டிய பாதையில் ஆட்சியைப் பிடித்து தங்கள் தலைவிதியை மாற்றிக் கொள்ள வேண்டும்.
இந்த சம்பவத்தில் 121 பேர் உயிரிழந்தது மிகவும் கவலை அளிக்கிறது. ஹத்ராஸ் சம்பவத்தில், குற்றவாளியான போலே பாபா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவரை போன்ற மற்ற பாபாக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்" என்று பதிவிட்டுள்ளார்.
- நாங்கள் அம்பேத்கரின் பிள்ளைகள். எங்களுக்கு ஜாதி, மதம், இனம் எதுவுமே கிடையாது.
- எல்லா தரப்பு மக்களையும் அரவணைத்த மனிதரை நாங்கள் இழந்துள்ளோம்.
படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு நடிகர் சாய் தீனா இன்று அஞ்சலி செலுத்தினார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எங்கள் பூர்வகுடி மக்களின் எழுச்சி நாயகன் எங்கள் அண்ணன் ஆம்ஸ்ட்ராங். இது எங்களுக்கு ஈடுசெய்யமுடியாத மிகப்பெரிய இழப்பு. எங்கள் அண்ணன் இருந்தபோது எங்களுக்கு எல்லாமே இருந்தது. இப்போது எங்களின் மொத்த அதிகாரமும் போய்விட்டது. எங்கள் அண்ணனை இழந்த பிறகு மீண்டும் 100 வருடம் பின்னாடி போனது போல எங்களுக்கு பயம் வந்துள்ளது.
நாங்கள் அம்பேத்கரின் பிள்ளைகள். எங்களுக்கு ஜாதி, மதம், இனம் எதுவுமே கிடையாது. எங்களுக்கு மனிதநேயம் மட்டும்தான் உள்ளது. எங்கள் முன்னாடி யார் இருந்தாலும் அவர்களை மனிதர்களாக மட்டும் தான் பார்ப்போம். எந்த அடையாளமும் இல்லாத மனிதர்களாக வாழ ஆசைப்படும் மக்கள் நாங்கள். இது அம்பேத்கர் சொன்ன வார்த்தை.
எங்களுக்கு சாதி, மத, இனம், பேதம் எதுவுமே கிடையாது. எல்லா மனிதர்களையும் நேசிப்பவர்கள் நாங்கள். எங்களுக்கு சாதியில்லை. எங்களை பார்ப்பவர்கள் தான் சாதியாக அடையாளப்படுகிறார்கள். இங்கிருந்த எல்லா தரப்பு மக்களையும் அரவணைத்த மனிதரை நாங்கள் இழந்துள்ளோம்" என்று உருக்கமாக தெரிவித்தார்.
- அம்பேத்கர் சாலையில் வாழ்ந்தாலும் சாதிப் பாகுபாடுகள் பற்றி எனக்கு போதிய அளவிற்கு தெரியாது.
- அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையே நடக்கும் விவாதத்தைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.
மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார். அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி ஜான்வி கபூர் பிஸியாக நடித்து வருகிறார்.
அண்மையில் ஜான்வி கபூர் நடிப்பில் வெளியான Mr & Mrs மஹி படம் மக்களிடையே வரவேற்பை பெற்றது.
தி லாலன்டோப் சினிமா யூட்யூப் சேனலில் Mr & Mrs மஹி படம் தொடர்பாக ஜான்வி கபூர் பேட்டி அளித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அப்போது வைரலானது.

அந்தப் பேட்டியில் பேசிய ஜான்வி கபூர் தனக்கு வரலாற்றில் அதிக ஆர்வம் இருப்பதாக கூற, உடனே நெறியாளர், 'வரலாற்றின் எந்த காலக்கட்டத்துக்கு செல்ல விரும்புகிறீர்கள்' என்று கேட்கிறார். அதற்கு அவர், "மகாத்மா காந்திக்கும், அம்பேத்கருக்கும் இடையில் 'சாதி' குறித்து அவர்களின் பார்வையையும், கருத்துகளையும், விவாதங்களையும் அறிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.
அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையே நடக்கும் விவாதத்தைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். அவர்களின் சித்தாந்தங்களுக்கு இடையிலான உரையாடலையும், பல்வேறு விஷயங்களில் அவர்கள் கொண்டிருந்த பார்வையையும் அறிந்துகொள்ளலாம்.
சாதி குறித்த தன்னுடைய நிலைப்பாட்டில் தொடக்கத்திலிருந்தே அம்பேத்கர், தெளிவாகவும், கடுமையாகவும் இருந்தார் என நினைக்கிறேன். ஆனால் காந்தியின் பார்வை தொடர்ந்து வளர்ந்து வந்தது என்று நான் நினைக்கிறேன்.
நம் சமூகத்தில் இருக்கும் இந்த சாதிய பிரச்சினை பொறுத்தவரை, மூன்றாவது நபரின் கண்ணோட்டத்திலிருந்து அதை பார்ப்பதற்கும், அந்த வாழ்க்கையை வாழ்வதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது" என்றார்.
ஜான்வி ஒரு நடிகை என்பதை தாண்டி சமூகத்தைப் பற்றிய அவரது பரந்த புரிதல் பெரும்பாலான மக்களை கவர்ந்தது.
அதே சமயம் பட ப்ரோமோஷனுக்காக ஜான்வி கபூர் செய்த PR ஸ்டண்ட் இதுவென சமூக வலைத்தளங்களில் சிலர் குற்றம் சாட்டினர்.
தற்போது அம்பேத்கர் - காந்தி தொடர்பாக பேசியது பற்றி ஜான்வி கபூர் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், "அம்பேத்கர் - காந்தி தொடர்பாக பேட்டி கொடுத்ததற்கு அடுத்து என்னுடைய PR டீமிடம் ஏதாவது தவறாக பேசி விட்டேனா என்று கேட்டேன். அவர்கள் அம்பேத்கர் - காந்தி பற்றி பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். என்ன நடக்கிறதென்று பொறுத்திருந்து பார்ப்போம் என்று தெரிவித்தனர். பின்னர் நானும் அதை நினைத்து பதற்றமடைந்தேன். பட வெளியீட்டிற்கு முன்பு எந்த சர்ச்சையும் வேண்டாம் என்று நினைத்து பேட்டியின் அந்த குறிப்பிட்ட பகுதியை நீக்க வேண்டும் என்று யூட்யூப் சேனல் நிர்வாகியிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் அதனை மறுத்து விட்டார்.
அம்பேத்கர் சாலையில் வாழ்ந்தாலும் சாதிப் பாகுபாடுகள் பற்றி எனக்கு போதிய அளவிற்கு தெரியாது. அம்பேத்கர் எழுதிய சாதியை அழித்தொழித்தல் புத்தகத்தை படித்தது எனது சிந்தனைகளை மாற்றியமைத்தது.
அம்பேத்கரின் இந்த புத்தகம் தான் நம் சமூகத்தில் வர்க்க பாகுபாடும் சாதிப் பாகுபாடும் எவ்வாறு வேரூன்றியுள்ளது என்பதை எனக்கு உணர்த்தியது. நாம் அதை பற்றி பேசுவது இல்லை. அதற்காக நாம் வெட்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அம்பேத்கர் புத்தகத்தை தவெக தலைவர் விஜய் வெளியிட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக்கொள்கிறார்.
- வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனர் ஆதவ் அர்ஜுனா அம்பேத்கர் நூல் உருவாக்கவுரை ஆற்றுகிறார்.
டிசம்பர் 6-ம் தேதி சென்னையில் நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில் "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" என்ற புத்தகத்தை தவெக தலைவர் விஜய் வெளியிட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக்கொள்கிறார்.
சென்னையில் நடைபெறும் இந்த விழாவில் அம்பேத்கரின் பேரனும், தீவிர இடதுசாரி சிந்தனைகொண்ட சமூக செயற்பாட்டாளருமான ஆனந்த் டெல்டும்டேவும் புத்தக்கத்தை பெற்றுக்கொள்கிறார்.
இந்த விழாவில் விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் அவர்கள் வரவேற்புரை வழங்குகிறார். வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனர் ஆதவ் அர்ஜுனா நூல் உருவாக்கவுரை ஆற்றுகிறார். இறுதியாக ஆனந்த விகடன் ஆசிரியர் முருகன் நன்றியுரை ஆற்றுகிறார்.
விசிகவின் ஆதவ் அர்ஜுனா நிறுவனம் வெளியிடும் இந்த புத்தக வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் முதலில் கலந்து கொள்வதாக இருந்தது. பின்னர் அரசியல் காரணங்களால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளமாட்டேன் என்று திருமாவளவன் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- மாறுப்பட்ட கொள்கைகளும் முரண்பட்ட நிலைப்பாடுகளும் கொண்டவர்கள் பொது நிகழ்வுகளில் ஒரே மேடையில் பங்கேற்பது வாடிக்கையானது தானே!
- எதிரும் புதிருமாக அரசியல் களத்தில் கடுமையாக மோதிக்கொள்ளும் தலைவர்கள் கூட ஒரே மேடையில் நிற்பதும் தவிர்க்கமுடியாதது தானே!
சென்னை:
சென்னையில் இன்று நடைபெறும் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயுடன் பங்கேற்க திருமாவளவன் மறுப்பு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் மறுப்பு தெரிவித்தது குறித்து திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
" எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் " - இது புரட்சியாளர் அம்பேத்கர் குறித்து விகடன் பதிப்பகம் வெளியிடும் நூல்.
ஆதவ் அர்ஜூன் அவர்களின் 'வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்' என்னும் தேர்தல் உத்திகளை வகுக்கும் தன்னார்வ அமைப்பும் இதன் இணை வெளியீட்டு நிறுவனமாகும்.
இது புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளான இன்று சென்னையில் வெளியிடப்படுகிறது. முப்பத்தாறு பேரின் கட்டுரைகள் தொகுக்கப் பெற்று இந்நூல் வெளிவருகிறது. இதில் என்னுடைய நேர்காணலும் இடம் பெற்றுள்ளது.
இந்நூலின் வெளியீட்டுவிழா கடந்த ஏப்ரல்14- புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் நடைபெறுவதாக முதலில் திட்டமிடப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிடுவதாகவும் நான் பெற்றுக்கொள்வதாகவும் சொல்லப்பட்டது.
அந்நிகழ்வில் ஆங்கில 'இந்து இதழின்' ஆசிரியர் இராம் அவர்களும், மும்பையிலிருந்து ஆனந்த்டெல்டும்டே அவர்களும் பங்கேற்கவிருப்பதாகத் திட்டம் இருந்தது. ஆனால், அந்நிகழ்வு திட்டமிட்டவாறு நடைபெறாமல் தள்ளிப்போனது. சில மாதங்களுக்குப் பின்னர் முதலமைச்சர் பங்கேற்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்றும்; ராகுல்காந்தி அவர்களை அழைப்பதற்கு மேற்கொண்ட முயற்சியும்கூட நிறைவேறவில்லை என்றும் தகவல்கள் கிடைத்தன.
அதன்பின்னர், நடிகர் விஜய் அவர்கள் பங்கேற்க இசைவளித்துள்ளார் என சொல்லப்பட்டது. அவரது கட்சியின் விக்கிரவாண்டி மாநாடு நடைபெறுவதற்கு முன்பு அவ்வாறு சொல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன்,
இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமலும் அழைப்பிதழ் அச்சிடப்படாமலும் இருந்த சூழலாகும்.
நடிகர் விஜய் இந்நிகழ்வில் பங்கேற்கவிருக்கிறார் என்பது ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்ட எங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால், திடுமென ஒரு தமிழ் நாளேடு இதனை பெரிய செய்தியாக- தலைப்புச் செய்தியாக வெளியிட்டது.
விஜய் அவர்களின் கட்சி மாநாட்டுக்குப் பிறகு அவ்வாறு வெளியிட்டது. அதாவது, "டிசம்பர்-06, விஜய் - திருமா ஒரே மேடையில்" என தலைப்புச் செய்தி வெளியிட்டு, ஒரு நூல் வெளியீட்டு விழாவைப் பூதாகரப்படுத்தி அந்நாளேடு அதனை அரசியலாக்கியது.
இது தான் அவ்விழாவைப் பற்றிய 'எதிரும் புதிருமான' உரையாடல்களுக்கு வழிவகுத்தது. பல்வேறு யூகங்களுக்கும் இடமளித்தது. குறிப்பாக, மரபு ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் அவை கூட்டணி தொடர்பான உரையாடல்களாக அரங்கேறின.
ஒரு நூல்வெளியீட்டு விழாவாக, அமைதியாகவும் வெற்றிகரமாகவும் நடந்தேறியிருக்க வேண்டிய நிகழ்வுக்கு அரசியல் சாயம் பூசியது அந்த நாளேடு தான். அது ஏன்? அந்த நாளேட்டுக்கு அந்தத் தகவல் எப்படி கிடைத்தது?
அதாவது, விகடன் பதிப்பகத்தில் ஒரு சிலருக்கும், 'விஓசி' நிறுவனத்தில் ஓரிருவருக்கும், அடுத்து எனக்கும் மட்டுமே அப்போதைக்குத் தெரிந்திருந்த அச்செய்தி, எப்படி அந்த நாளேட்டின் கவனத்துக்குப் போனது?
அதிகாரப்பூர்வமாக விகடன் பதிப்பகமோ, விஓசி நிறுவனமோ உறுதிப்படுத்தாத ஒரு செய்தியை அந்த நாளேடு ஏன் பூதாகரப்படுத்தியது? அதற்கு ஏன் திட்டமிட்டு அரசியல் சாயம் பூசியது?
மாறுப்பட்ட கொள்கைகளும் முரண்பட்ட நிலைப்பாடுகளும் கொண்டவர்கள் பொது நிகழ்வுகளில் ஒரே மேடையில் பங்கேற்பது வாடிக்கையானது தானே! எதிரும் புதிருமாக அரசியல் களத்தில் கடுமையாக மோதிக்கொள்ளும் தலைவர்கள் கூட ஒரே மேடையில் நிற்பதும் தவிர்க்கமுடியாதது தானே!
என்னை ஒரு கருவியாகக் கொண்டு தமிழக அரசியல் களத்தில் அரசியல் எதிரிகள் காய் நகர்த்தப் பார்க்கிறார்கள் என்பதை அறிந்த பின்னர், எங்ஙனம் நான் அதற்கு இடம் கொடுக்க இயலும்? நமக்கென்ன ஆதாயம் என்று கணக்குப் பார்க்காமல், நமது கொள்கை பகைவர்களின் சூது- சூழ்ச்சிக்குப் பலியாகி, அவர்களின் நோக்கம் நிறைவேற இடமளித்துவிடக் கூடாதென்கிற எச்சரிக்கை உணர்வோடு தானே நாம் முடிவெடுக்க இயலும்!
எனவே, விஜயைக் கொண்டே விழா நடத்தட்டும் என்று மிகமிக தொடக்க நிலையிலேயே அவர்களிடம் எனது நிலைப்பாட்டைக் கூறிவிட்டேன். ஒருவேளை நான் அப்படி கூறாவிட்டாலும் கூட அவர்களால் இந்த முடிவைத் தான் எடுத்திருக்க இயலும். இது தான் இன்றைய சமூக - அரசியலின் இயல்நிலை போக்காகும்.
'விஜய் அவர்களைத் தவிர்த்திட முயற்சி செய்யுங்கள்' என்று நான் கூறியிருந்தாலும், அதனை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலுமா என்றால், அதற்கு வாய்ப்பில்லை என்பதுதான் மிகவும் இயல்பான உண்மை நிலையாகும்.
அதன்படி, பொதுமக்கள் நம்மீது கொண்டுள்ள நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொள்வதே தற்போதைய நமது முதன்மையான கடமை! எனவே, யாதுமுணர்ந்தே தவிர்த்தோம்! -- பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம்! என்று கூறியுள்ளார்.
- அனைத்து மக்களின் நலனுக்குமாகப் பயன்படுத்திய மாமனிதர் அண்ணல் பாபா சாகேப் அம்பேத்கரின் நினைவு தினம் இன்று.
- ஆதிக்க சக்திகளிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்வதற்காக அவர் வழங்கிய அரசியல் சாசனத்தை உயர்த்திப் பிடிப்போம்.
சென்னை:
சட்டமேதை அம்பேத்கர் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சட்டம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் தனக்கிருந்த பேரறிவை, சமூகச் சீர்திருத்தத்துக்கும் அனைத்து மக்களின் நலனுக்குமாகப் பயன்படுத்திய மாமனிதர் அண்ணல் பாபா சாகேப் அம்பேத்கரின் நினைவு தினம் இன்று.
ஆதிக்க சக்திகளிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்வதற்காக அவர் வழங்கிய அரசியல் சாசனத்தை உயர்த்திப் பிடிப்போம். அண்ணலின் நினைவை நெஞ்சில் சுமப்போம் என்று கூறியுள்ளார்.
- அம்பேத்கரின் நினைவு நாளில் அவருக்கு பணிவான அஞ்சலி.
- பாபாசாகேப்பின் அரசியலமைப்பு, நாட்டு மக்களுக்கு மிகவும் சக்திவாய்ந்த கருவியாகும்.
புதுடெல்லி:
சட்டமேதை அம்பேத்கர் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி எக்ஸ் தள பதிவில்,
பாபாசாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் நினைவு நாளில் அவருக்கு பணிவான அஞ்சலி.
சமூக சமத்துவம், நீதி மற்றும் உரிமைகள் ஆகியவற்றின் அடிப்படையிலான பாபாசாகேப்பின் அரசியலமைப்பு, நாட்டு மக்களுக்கு மிகவும் சக்திவாய்ந்த கருவியாகும் - அதை பாதுகாப்பதில் நான் எப்போதும் உறுதியுடன் இருக்கிறேன்.
அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவருக்கு எனது வணக்கம்.
ஜெய் பீம், ஜெய் அரசியலமைப்பு!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, பாராளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.
- இந்தியாவிலேயே முதன்முதலாக அம்பேத்கர் பெயரில் அரசு கல்லூரியை கொண்டு வந்தது திமுக.
- சென்னை பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் பெயரை சூட்டியவர் கலைஞர்.
சென்னை எழும்பூரில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்கீழ் 128 பயனாளிகளுக்கு கடனுதவிக்கான ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அண்ணல் அம்பேத்கரை வணங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையை தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:
* அண்ணல் அம்பேத்கருக்கு சமமாக இந்தியாவில் யாரையும் சொல்ல முடியாது என்று சொன்னார் தந்தை பெரியார்.
* இந்தியாவிலேயே முதன்முதலாக அம்பேத்கர் பெயரில் அரசு கல்லூரியை கொண்டு வந்தது திமுக.
* சென்னை சட்ட பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் பெயரை சூட்டியவர் கலைஞர்.
* சமத்துவ சமூகத்தை உருவாக்குவதற்கு பாடுபடும் அரசு திமுக அரசு.
* சென்னை பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் பெயரை சூட்டியவர் கலைஞர்.
* அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக கொண்டாட உத்தரவிட்டது திமுக அரசு.
* நாட்டிலேயே முதன்முதலாக அண்ணல் அம்பேத்கர் பெயரில் அரசு கல்லூரியை கொண்டு வந்தது திமுக.
* கடந்த 3 ஆண்டில் பட்டியலின மக்களுக்கு அதிக திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம்.
* ஒடுக்கப்பட்ட மக்கள் பொருளாதார உயர் நிலையை அடைய அம்பேத்கர் தொழில்முனைவோர் திட்டம் கொண்டுவரப்பட்டது.
* பழங்குடியின கிராமங்களில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.250 கோடியில் திட்டம்.
* பழங்குடியினர் மகளிர் மேம்பாட்டிற்காக அனைத்து கிராமங்களிலும் மகளிர் சுய உதவி குழுக்கள்.
* திருமாவளவனின் கோரிக்கையை ஏற்று அம்பேத்கரின் முழு உருவச்சிலை திறக்கப்பட்டது.
* அம்பேத்கரின் புத்தகங்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவரும் என்று கூறினார்.
- தூய்மை பணியாளர்கள் என்பதை விட தூய்மை உள்ளம் கொண்ட பணியாளர்கள் என கூற வேண்டும்.
- மத பிரிவினை, சாதி பிரிவினை எண்ணங்கள் பெரியார் மண்ணில் ஒரு போதும் ஈடேறாது.
சென்னை:
சென்னை எழும்பூரில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்கீழ் 128 பயனாளிகளுக்கு கடனுதவிக்கான ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* தூய்மை பணியாளர்கள் என்பதை விட தூய்மை உள்ளம் கொண்ட பணியாளர்கள் என கூற வேண்டும்.
* களப்பணியில் அரசுக்கு நல்ல பெயர் கிடைக்க முழு முதல் காரணம் தூய்மை பணியாளர்கள் தான்.
* தூய்மை பணியாளர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.
* மத பிரிவினை, சாதி பிரிவினை எண்ணங்கள் பெரியார் மண்ணில் ஒரு போதும் ஈடேறாது.
* இதுதான் பெரியார் மண்ணா? இதுதான் அம்பேத்கர் மண்ணா என்று கேள்வி எழுப்புகின்றனர்.
* சாதி, மதமற்ற சமத்துவ சமூகத்தை படைப்பதுதான் திமுகவின் இலக்கு என்று அவர் கூறினார்.