என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயங்கரவாதம்"

    • அமெரிக்க-இந்திய கூட்டறிக்கையில் தவறான குறிப்புகள் இருப்பதாக அதிருப்தி குறித்து தெரிவிக்கப்பட்டது.
    • இந்தியா எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடாக மாற்றியுள்ளது” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சென்ற வாரம் அமெரிக்காவில் சுற்று பயணம் மேற்கொண்டார். அப்பொது அவரும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இணைந்து பாகிஸ்தான் நாட்டின் பயங்கரவாத ஆதரவிற்கு எதிராக ஒரு கூட்டறிக்கை வெளியிட்டனர். இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

    நேற்று மாலை அமெரிக்க துணைத் தூதர், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டு, ஜூன் 22ம் தேதி அமெரிக்க-இந்திய கூட்டறிக்கையில், தேவையற்ற, ஒருதலைப்பட்சமான மற்றும் தவறான குறிப்புகள் இருப்பதாகவும், அதுகுறித்து பாகிஸ்தானின் கவலைகள் மற்றும் அதிருப்தி குறித்து தெரிவிக்கப்பட்டது என பாகிஸ்தான் தெரிவித்தது.

    பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான, பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு நன்றாக முன்னேறி வருவதாகவும், பாகிஸ்தான்-அமெரிக்க உறவுகளை மேலும் வலுப்படுத்த, பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிதலை மையமாகக் கொண்ட சூழலை உருவாக்குவது அவசியம் என்றும் பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையானது, பாகிஸ்தானை எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடாக சித்தரித்துள்ளது என்று பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறியது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக பயங்கரவாதச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
    • பயங்கரவாத அமைப்புகள் பாதுகாப்புப் படையினருக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன.

    வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பழங்குடிப் பகுதிகளில் இன்று 4 பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றது. இதில், இரண்டு ராணுவ வீரர்கள் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

    வடமேற்கு பாகிஸ்தானில் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள வடக்கு வஜிரிஸ்தான், தெற்கு வஜிரிஸ்தான் மற்றும் பஜவுர் பழங்குடியின மாவட்டங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தது.

    இதில், வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள ரஸ்மாக் பகுதியில் பாதுகாப்புப் படையினரின் வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து, தெற்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள வானா என்கிற பகுதியில், பழங்குடியின முதியவர் அஸ்லாம் நூர் மற்றும் அவரது இரண்டு மகன்கள் மற்றும் உள்ளூர் கடைக்காரர் ஒருடர் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர்.

    பஜவுர் பழங்குடியினர் மாவட்டத்தில், இரண்டு வெவ்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் உள்ளூர் ஜமியத் உலமா-இ-இஸ்லாம் அமைப்பின் தலைவரின் தந்தை உள்பட மேலும் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

    பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக பயங்கரவாதச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகள் பாதுகாப்புப் படையினருக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன. இதில், பெரும்பாலும் பொதுமக்களும் அவர்களின் இலக்குகளாக மாறியுள்ளனர்.

    • பக்தர்கள் பயணம் செய்த பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
    • இந்த தாக்குதலில் 9 பேர் பரிதாபமாக இறந்தனர். 40க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம்மீது பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த தாக்குதலில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். தப்பிய பயங்கரவாதிகளை தேடும் பணிகள் டிரோன்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டன. கடந்த மூன்று நாட்களில் 3-வது முறையாக இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

    ஏற்கனவே, கதுவாவில் பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மற்றொரு சம்பவத்தில் பக்தர்கள் பயணம் செய்த பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    இந்நிலையில், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தாதவரை ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் முடிவுக்கு வராது என தெரிவித்தார்.

    • அதற்கேற்றவாறு கனடாவின் கொள்கைகளைச் சீரமைத்து வருகிறோம்
    • நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசுக்குத் தொடர்பு உள்ளது என ட்ரூடோ குற்றம்சாட்டினார்

    இந்தியாவுக்கு எப்போதும் முழுமையான ஆதரவை வழங்குவோம் என்று கனடா தெரிவித்துள்ளது. கனடா தலைநகர் ஒடாவா [Ottawa] நகரில் பேசிய அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் டேவிட் மாரிசான், இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்குக் கனடா முற்றுமுதலான ஆதரவை அளிக்கிறது. இருப்பது ஒரே ஒரு இந்தியாதான், இதை தெளிவுபடுத்தியாக வேண்டும்.

    இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டை நாங்கள் மதிக்கிறோம். சர்வதேச விவகாரங்களில் இந்தியா முக்கிய சக்தியாக வளர்ந்துள்ளது. அதற்கேற்றவாறு கனடாவின் கொள்கைகளைச் சீரமைத்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார். இந்தியா எல்லையில் சீன ஆக்கிரமிப்பு சர்ச்சை, காஷ்மீரில் நடந்துவரும் பயங்கரவாத சம்பவங்கள், சீக்கியர்களுக்கு தனி நாடு கோரும் காலிஸ்தான் பிரிவினைவாதம்  உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து கனடா இந்த கருத்தைத் தெரிவித்துள்ளது.

     

    முன்னதாக மூன்று மாதங்களுக்கு முன்பு கனடாவில் வைத்து காலிஸ்தான் பிரிவினைவாதியான நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்திய அரசுக்குத் தொடர்பு உள்ளது என அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பாராளுமன்றத்தில் குற்றம் சாட்டியிருந்தார். இதனால் கானடா- இந்தியா இடையே உரசல் போக்கு நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது.

    • தாழ்த்தப்பட்ட சாதியினரை அடிப்பது, அவர்களது வாயில் சிறுநீர் கழிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்
    • பழங்குடியின பெண்களைப் பலாத்காரம் செய்வது, குற்றவாளிகளை ஆதரிப்பது உள்ளிட்வற்றை செய்து வருகிறார்கள்.

    பாஜக  பயங்கரவாதிகளின் கட்சி என காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். காங்கிரஸ் நகர்ப்புற நக்ஸலைட்டுகளால் நடத்தப்படும் கட்சி என பிரதமர் மோடி தொடர்ந்து கூறி வரும் நிலையில் மல்லிகார்ஜுன கார்கே அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கார்கே பேசியதாவது, முற்போக்கு சிந்தனை உள்ளவர்களை நகர்ப்புற நக்சல்கள் என்று அழைப்பது மோடியின் வழக்கமாக உள்ளது. ஆனால் பாஜகவே ஒரு பயங்கரவாத கட்சிதான்.

    தாழ்த்தப்பட்ட சாதியினரை அடிப்பது, அவர்களது வாயில் சிறுநீர் கழிப்பது, பழங்குடியின பெண்களைப் பலாத்காரம் செய்வது, இந்த குற்றவாளிகளைஆதரிப்பது என செயல்படும் அவர்கள் மற்றவர்களைக் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். குற்றம் சொல்ல மோடிக்கு எந்த வகையான உரிமையும் கிடையாது.

    பாஜகவின் அரசு உள்ள இடங்களில் பட்டியலினத்தவர்களுக்கு குறிப்பாக பழங்குடியினருக்கு எதிரான அட்டூழியங்கள் நடந்து வருகிறது. ஆனால் வன்முறைக்கு எதிராக உபதேசம் மட்டும் செய்கிறார்களே ஒழிய கட்சியில் உள்ள அத்தகையோர்களை கட்டுப்படுத்துவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

    • கான் யூனிஸ் நகரில் ஹமாஸ் அமைப்பினரின் சுரங்கப்பாதையில் இருந்து இஸ்ரேல் ராணுவத்தால் கணினி ஒன்று கைப்படறப்பட்டுள்ளது.
    • ஈரான் தரப்பிலிருந்து ஹமாஸ் ஆயுதப்படைக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டுள்ளது.

    அக்டோபர் 7 தாக்குதல்

    பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்ததாக இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபட்டுவரும் ஹமாஸ் அமைப்பு கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி முன்னெப்போதும் இல்லாத மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இஸ்ரேலை நோக்கி ஆயிரக்கணக்காக ராக்கெட்டுகள் சரமாரியாக பாய்ந்தன. தரைவழியாக ஊடுருவியும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்களில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

     

    மேலும் சுமார் 250 பேர் பணய கைதிகளாக பிடிப்பித்துச்செல்லப்பட்டனர். இதனைத்தொடர்ந்து பாலஸ்தீன நகரங்களின் மீது இஸ்ரேல் கடந்த ஒரு வருடமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பெண்கள் குழந்தைகள் உட்பட 41 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

    ரகசிய ஆவணங்கள்

    காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும்வரை ஓயமாட்டோம் என்று இஸ்ரேல் சூளுரைத்துள்ள நிலையில் ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதல் குறித்த முக்கிய ரகசியங்களை இஸ்ரேல் ராணுவம் கண்டுபிடித்துள்ளதாக நியூ யார்க் டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

    கடந்த ஜனவரியில் தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் நகரில் ஹமாஸ் அமைப்பினரின் சுரங்கப்பாதையில் இருந்து இஸ்ரேல் ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட கணினியில் இருந்து 36 பக்க ரகசிய ஆவணங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

     அமைதி 

    அந்த ஆவணத்தின்படி, கடந்த 2023 அக்டோபர் 7 தாக்குதலை ஹமாஸ் ஒரு வருடத்துக்கு முன்பாகவே 2022 ஆம் ஆண்டிலேயே நடத்தத் திட்டமிட்டிருக்கின்றனர். மிகப்பெரிய அளவில் திட்டமிடப்பட்ட இந்த திடீர் தாக்குதலுக்காகக் கடந்த 2021 முதல் ஹமாஸ் அமைப்பு எந்த பிரச்சனையிலும் ஈடுபடாமல் இஸ்ரேலை நம்ப வைக்க அமைதி காத்து வந்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டபோதும் ஈரான், ஹிஸ்புல்லா உதவியைப் பெறும்வகையில் திட்டத்தைத் தள்ளிப் போட்டுள்ளனர்.

     ஆக்கிரமிப்பு 

    கடந்த 2022 ஆம் ஆண்டு மீண்டும் பெஞ்சமின் நேதன்யாகு பிரதமர் ஆன பின்னர் காசா தெற்கு முனையிலும், அல்அக்சாவிலும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு விரிவுபடுத்தப்பட்டுவந்ததால் ஹமாஸ் ஒரு மிகப்பெரிய தாக்குதலை நடத்துவதில் உறுதியாக இருந்துள்ளது. ஜூலை 2023 இல் லெபனானில் ஈரான் படைத்தலைவரைச் சந்திக்க ஹமாஸ் தரப்பில் இருந்து உயர் மட்ட அதிகாரி ஒருவர் அனுப்பப்பட்டுள்ளார்.

    உதவி

    அப்போது இஸ்ரேல் மீதான தாக்குதல் திட்டம் குறித்து இரான் படைத்தலைவருக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அப்போது இந்த தாக்குதல் குறித்து இன்னும் அதிக நேரம் செலவிட்டு கச்சிதமாகத் திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த அந்த கணினியில் கிடைத்த ஆவணத்தின்படி ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவுடனும் ஹமாஸ் திட்டம் குறித்து விவாதித்துள்ளது. 

     

    இந்த சந்திப்புகளின் பின் ஈரான், ஹிஸ்புல்லா பின்னணியில் ஆதரவு அளிக்கும் என்ற தைரியம் ஹிஸ்புல்லவை அக்டோபர் 7 தாக்குதலை நோக்கி நகர்த்தியுள்ளது. மேலும் ஈரான் தரப்பிலிருந்து ஹமாஸ் ஆயுதப்படைக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டதாகவும், ஹமாஸ் தலைவர் யாஹோவா சின்ஹார் ஈரானிடம் இருந்து மேலும் 500 மில்லியன் டாலர்கள் எதிர்பார்த்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

     

     

    திட்டம் 

    அக்டோபர் 7 தாக்குதலில் இஸ்ரேல் நகரங்களில் உள்ள ஷாப்பிங் மால்கள், ராமானுவ கமாண்ட் சென்டர்களும் முதலில் குறிவைக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவின் கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று டுவின் டவர்ஸில் அல் கொய்தா நடத்திய 9/11 தாக்குதலைப் போல் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் இல் உள்ள அஸ்ரேலி [Azrieli] டவர்ஸ் மீது தாக்குதல் நடத்த ஹமாஸ் திட்டமிட்டிருந்ததாகவும் அந்த ரகசிய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இதற்கிடையே இந்த ஹமாஸ் தாக்குதலுடன் தொடர்பு உள்ளது என்று கூறப்படுவதை ஈரான் மறுத்துள்ளது.

     

    • டெரரிசம் - டிமானிக் ஸ்டிராம் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
    • இந்தியாவுக்கு ஸ்லீப்பர் செல் அச்சுறுத்தல் உள்ளிட்ட இமெயில்களை அனுப்பியுள்ளார்.

    பிரதமர் அலுவலகத்துக்கு போலி  மிரட்டல் விடுத்து 100 ஈமெயில் வரை அனுப்பிய இளைஞர் போலீசில் பிடிப்பட்டுளார். சமீப காலமாக விமானங்கள், ஹோட்டல்கள் என நாடு முழுவதும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன.

    இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த 35 வயதான ஜெகதீஸ் என்ற நபர் பிரதமர் அலுவலகம், ரெயில்கள், விமானங்கள் என தொடர்ச்சியாக போலி ஈமெயில் மிரட்டல் விடுத்திருக்கிறார். பயங்கரவாதத்தை குறித்து எழுதிய டெரரிசம் - டிமானிக் ஸ்டிராம் (Terrorism: A Demonic Storm) என்ற பெயரில் புத்தகம் ஒன்றை ஜெகதீஸ் எழுதியுள்ளார்.

    இதை வெளியிடுவதற்கான முயற்சியில் மிரட்டல் விடுக்கும் ஈமெயில்களை அவர் அனுப்பத்தொடங்கியுள்ளார். முதலில் தனது புத்தகத்தை வெளியிட உதவுமாறு பிரதமர் அலுவகத்துக்கு மெயில் அனுப்பிய அவர் அதற்கு பதில் வராததால் இந்தியாவுக்கு ஸ்லீப்பர் செல் அச்சுறுத்தல் என்பது உள்ளிட்ட போலி மிரட்டல் மெயில்களை அனுப்பத் தொடங்கியுள்ளதாக நாக்பூர் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவரை கஸ்டடியில் எடுத்து போலீஸ் விசாரித்து வருகிறது.

    • நாளை மறுநாள் [திங்கள்கிழமை] இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
    • ஒரு குறிப்பிட்ட சமூகத்தைக் குறிவைக்கப் பயன்படுத்தப்பட்டது

    மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்களின் 4,120 சட்டப்பேரவைத் தொகுதிகள், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த சாத்தியக்கூறுகள் உள்ளனவா? என ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழு அமைத்தது.

    இந்த குழு ஒரு நாடு ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து நாளை மறுநாள் [திங்கள்கிழமை] இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

    இந்நிலையில் இந்த மசோதா குறித்து பீகாரை சேர்ந்த பிரபல அரசியல் வியூக வகுப்பாளரும் ஜன் சுராஜ் கட்சி தலைவருமான பிரசாத் கிஷோர் கருத்து தெரிவித்துள்ளார்.

     

     செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் பல தேர்தல்களில் ஈடுபட்டுள்ளேன். ஒவ்வொரு ஆண்டும் தேசத்தின் கணிசமான பகுதியினர் தேசிய அல்லது மாநில அளவில் ஏதாவது தேர்தல்களில் ஈடுபடுவதை நான் கவனித்திருக்கிறேன்.

    ஒரே நாடு ஒரே தேர்தல் நல்ல நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டால், நாட்டிற்கு நன்மை பயக்கும் என்று தெரிவித்தார்.

    ஆனால் பயங்கரவாதத்தை ஒடுக்கும் முகாந்திரத்தில் கொண்டு வரப்பட்ட சட்டங்கள், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைக் குறிவைக்கப் பயன்படுத்தப்பட்டது என்ற உதாரணத்தை கூறி பிரசாத் கிஷோர், ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டுவரப்படும் நோக்கம் குறித்தும் எச்சரித்தார். 

    • தற்கொலைப்படை தாக்குதலில் பலியானவர்களில் பெரும்பாலானோர் மாணவிகள் என காபூலில் இருந்து தகவல் வெளியாகியுள்ளன.
    • இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    காபூலில் உள்ள தாஷ்ட்-இ-பார்ச்சி பகுதியில் கல்வி நிறுவனம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    காஜ் கல்வி மையத்தில் நேற்று நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் பலியானவர்களில் பெரும்பாலானோர் மாணவிகள் என காபூலில் இருந்து தகவல் வெளியாகியுள்ளன.

    இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    காபூலின் தாஷ்ட்-இ-பார்ச்சியில் உள்ள காஜ் கல்வி மையத்தில் நேற்றைய பயங்கரவாதத் தாக்குதலால் நாங்கள் வருத்தமடைகிறோம். மேலும் பலியானவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் இரங்கலைத் தெரிவிக்கிறோம்.

    கல்வி இடங்களில் அப்பாவி மாணவர்கள் தொடர்ந்து குறிவைக்கப்படுவதை இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×