search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குப்பைகள் அகற்றம்"

    • மழைநீர் வடிவேல் கால்வாய்களில் இருந்த சுமார் 400 டன் மண்கள் இதுவரை அகற்றப்பட்டுள்ளது.
    • வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை சேகரிக்கும் பணி ஒப்பந்தம் தனியாரிடம் வழங்கப்பட்டு உள்ளது.

    தாம்பரம்:

    தாம்பரம் மாநகராட்சியில் மொத்தம் 70 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை சேகரிக்கும் பணி ஒப்பந்தம் தனியாரிடம் வழங்கப்பட்டு உள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின் போது தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் வெள்ளபெருக்கால் பாதிக்கப்படுவது தொடர்ந்து நீடித்து வருகிறது. தற்போது பல இடங்களில் கால்வாய்களில் குப்பை மண் கழிவுகள் இருந்தன. இதையடுத்து வருகிற பருவமழையின் போது வெள்ளப்பெருக்கை தடுக்கும் வகையில் மழை நீர்வடிகால்வாய்களை சுத்தப்படுத்தி தூர்வாரும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. மாநகராட்சி முழுவதும் உள்ள மழைநீர் வடிவேல் கால்வாய்களில் இருந்த சுமார் 400 டன் மண்கள் இதுவரை அகற்றப்பட்டுள்ளது. மேலும் கடந்த சனிக்கிழமை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு தேங்கி இருந்து சுமார் 15 ஆயிரம் கிலோ குப்பைகழிவுகளை ஒரே நாளில் அகற்றப்பட்டது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, கடந்த ஆண்டு திடக்கழிவு மேலாண்மை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்ட போது பெரும்பாலான குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டன. இதனால் பொதுமக்கள் குப்பை கழிவுகளை திறந்த வெளியிலும் மழைநீர் வடிகால் வாய்களிலும் வீசிவருகின்றனர். இது தற்போது அதிகரித்து உள்ளது. குடியிருப்பு பகுதிகள், சந்தைகள், ஓட்டல்கள், ரெயில், பஸ்நிலையம் மற்றும் ஆஸ்பத்திரி அருகே குப்பை கூடுதலாக குப்பை தொட்டிகளை வைக்கலாம். இதனால் கால்வாய்களில் குப்பைகழிவுகள் வீசப்படுவது குறையும். கால்வாய்களை மூடவேண்டும் என்றார்.

    மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, மழைநீர் தேங்குவதற்கும், வெள்ளப்பெருக்கிற்கும் முக்கியமாக வடிகால்வாய்களில் மண் தேங்கி அடைபடுவதே காரணம். மாநகராட்சி பகுதியில் உள்ள வடிகால்வாய் முழுவதையும் மழைக்கு முன்பே சுத்தப்படுத்த திட்டமிட்டு உள்ளோம். முந்தைய ஆண்டுகளைப் போல் இல்லாமல் இந்த ஆண்டு முன்னதாகவே கால்வாய்களில் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்படும் பம்மல், பல்லாவரம், செம்பாக்கம் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம் என்றார்.

    • குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • பாஸ்கர், விஜயச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    கூடுவாஞ்சேரி:

    காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள சுடுகாடு அருகே குப்பை, கழிவுகள் கொட்டப்பட்டு மலைபோல் குவிந்தது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வந்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் குப்பைகளை அகற்கும் பணி பணி நடைபெற்றது. இதுவரை சுமார் 80 டன் குப்பைகள் லாரிகளில் எடுத்து செல்லப்பட்டு உள்ளது. இதனை ஊராட்சி மன்ற தலைவர் பவானிகார்த்தி தலைமையிலும், ஒன்றிய கவுன்சிலர்கள் மோகனாகண்ணன், ஜே.கே.தினேஷ், வார்டு கவுன்சிலர்கள் சாந்திகார்த்திக், தேவிநேரு, காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயாகருணாகரன், மாவட்ட உதவி திட்ட அலுவலர் கெனடிபூபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கட்ராகவன், சிவகுமார், ஒன்றிய பொறியாளர்கள் கருணாகரன், பாஸ்கர், விஜயச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    • தருமபுரி நகரில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு குப்பைகள் மற்றும் பொது மக்களால் கொட்டப்பட்ட 40 டன் குப்பைகள் அகற்றப்பட்டது. இவை அனைத்தும் நக ரில் உள்ள 4 நுண் உர மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.
    • சேகரிக்கப்பட்ட குப்பைகள் அனைத்தும் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்க அனுப்பி வைக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி நகரில் தீபாவளி பண்டிகை வழக்க மான உற்சாகத்துடன் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். பொதுமக்கள் புத்தாடை அணிந்தும், பட்டாசுகள் வெடித்தும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    இந்த தீபாவளி பண்டிகையையொட்டி தருமபுரி நகரில் உள்ள 33 வார்டுகளிலும் உள்ள அனைத்து தெருக்களிலும் பொது மக்கள் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை பட்டாசுகள் வெடித்தும் மத்தாப்புக்கள் கொளுத்தியும் கொண்டாடினர். இந்த பட்டாசு குப்பைகள், வீடுகளில் இருந்து கொட்டப்படும் இனிப்பு பெட்டிகள், ஜவுளி குப்பைகள் என சுமார் 40 டன் தீபாவளி குப்பைகள் தெருக்களில் கொட்டப்பட்டது.

    இந்த தீபாவளி குப்பைகள் அனைத்தும் நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, ஆணையாளர் புவனேஸ்வரன் ஆகியோர் ஆலோசனைப்படி நகராட்சி சுகாதார அலுவலர் ராஜ ரத்தினம், துப்புரவு ஆய்வாளர்கள் கோவிந்தராஜன் சுசீந்திரன், ரமணசரண், நாகராஜன் மற்றும் துப்புரப் பணியாளர்கள் இன்று காலை முதல் அகற்றும் பணியில் தீவிரமாக ஏற்பட்ட னர். இந்த குப்பைகள் அனைத்தும் தருமபுரி நகரில் உள்ள பச்சியம்மன் கோவில் மயானம், குமாரசாமிப்பேட்டை அரிச்சந்திரன் கோவில் மயானம், சந்தைப் பேட்டை, மதிகோன்பாளையம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நுண் உரமையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த குப்பைகள் அனைத்தும் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்க அனுப்பி வைக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி பகுதியில் 27 வார்டுகள் உள்ளன.
    • தீபாவளி பண்டிகையொட்டி இளைஞர்கள் முதல் பெரியவர்கள், சிறுமிகள் என பலரும் பட்டாசுகள் வெடித்தும், மத்தாப்புகள் கொளுத்தியும் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி பகுதியில் 27 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சி பகுதியில் தீபாவளி பண்டிகையொட்டி இளைஞர்கள் முதல் பெரியவர்கள், சிறுமிகள் என பலரும் பட்டாசுகள் வெடித்தும், மத்தாப்புகள் கொளுத்தியும் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடினர். நகராட்சி பகுதியில் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட குப்பைகள் சுமார் 20 டன் அளவுக்கு நகராட்சி தூய்மை பணி யா ளர்கள் அகற்றினர். மேலும் மாரி யம்மன் கோவில் பண்டிகையை யொட்டி ஏற்பட்ட குப்பைக ளை யும் அகற்றினர்.

    • நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளது. 1,40,000 மக்கள் தொகை உள்ளன. ஆயுத பூஜையை முன்னிட்டு இன்று 72 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.
    • கொசவம்பட்டி குப்பை கிடங்கு 2 உள்ளிட்ட 6 நுண்ணுரம் செயலாக்கம் மையத்தில் கொண்டு செல்லப்பட்டன.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளது. 1,40,000 மக்கள் தொகை உள்ளன. ஆயுத பூஜையை முன்னிட்டு இன்று 72 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. அகற்றப்பட்ட குப்பைகள் தினசிரி மார்க்கெட், தினசரி சந்தை, சேந்தமங்கலம் சாலை, முதலைப்பட்டி, கொசவம்பட்டி ரோஜாநகர் , கொசவம்பட்டி குப்பை கிடங்கு 2 உள்ளிட்ட 6 நுண்ணுரம் செயலாக்கம் மையத்தில் கொண்டு செல்லப்பட்டன. அகற்றப்பட்ட குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகளை உரமாக்கி விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்யப்பட்டு கடைகளுக்கு வழங்கப்பட்டுவருகின்றன. மக்காத குப்பைகளை இது குறித்து சிமெண்ட் தொழிற்சாலைக்கு அனுப்பப்படுகன்றன.

    நகராட்சி கமிஷனர் சென்னகேசவன் கூறியதாவது:-

    ஆயுத பூஜையை முன்னிட்டு நகராட்சி பகுதியில் 72 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. சாலை களில் விபத்து ஏற்படுத்தும் வகையில் சாலையில் குப்பைகளை போடுவதை தவிர்க்க வேண்டும் என்றார். 

    • சுதந்திர தின விழாவினை முன்னிட்டு நீலகிரியில் ஒட்டுமொத்த சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது
    • உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிபவர்கள் உள்பட மொத்தம் 4716 நபர்கள் கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள் மற்றும் 4 ஊராட்சி ஒன்றிய பகுதிகள் உள்ளன.

    இந்த பகுதிகளில் 75-வது சுதந்திர தின நிறைவு விழாவினை முன்னிட்டு எனது தாய்மண் எனது தேசம் என்ற நிகழ்வின் ஒருபகுதியாக ஒட்டுமொத்த சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    இச்சுகாதார பணியானது நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட முக்கிய சாலைகளிலும், நீர்நிலை பகுதிகளிலும், வனப்பகுதிகளிலும், சோதனை சாவடிக்கு ஒட்டிய பகுதிகளிலும் மற்றும் இதர முக்கியமான பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டது.

    தூய்மை பணியில் நீலகிரி மாவட்டத்தில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் 1178 தூய்மை பணியாளர்கள் , 1607 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், 98 அரசு சாரா தொண்டு நிறுவனத்தினர், 252 மாணவர்களும், 1581 அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் என மொத்தம் 4716 நபர்கள் கலந்து கொண்டனர்.

    தூய்மை பணியின் போது 1152 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் 7 ஆயிரத்து 898 கிலோ இதர குப்பைகள் என மொத்தம் 9 ஆயிரத்து 50 கிலோ குப்பைகள் சேகரிக்கப்பட்டு தூய்மை ப்படுத்தப்பட்டன.

    தூய்மை பணியின் போது நீலகிரி மாவட்ட த்திற்கு வருகை தந்த சுற்று லா பயணிகள் மற்றும் உள்ளுர் பொது மக்களிடையே பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பான விழி ப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு நீலகிரியை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு அனைத்து தரப்பினரும் முழு ஒத்து ைழப்பு அளிக்க வேண்டும் என கேட்டு கொள்ள ப்பட்டது."

    • குப்பைகளை அகற்ற வேண்டும் என்று நகராட்சி கவுன்சிலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

    கன்னியாகுமரி :

    குழித்துறை நகராட்சிக்குட்பட்ட குப்பைகள் மார்த்தாண்டம் மார்க்கெட்டில் நீண்ட நாட்களாக குவிக்கப்பட்டு வந்தன.

    இதனால் மலைபோல் குவிந்து காணப்பட்ட குப்பைகளிலிருந்து துர்நாற்றம் வீசியது. இந்த குப்பைகளை அகற்ற வேண்டும் என்று நகராட்சி கவுன்சிலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

    இதனை தொடர்ந்து குழித்துறை நகராட்சி சேர்மன் பொன்.ஆசைத்தம்பி, ஆணையாளர் ராமதிலகம் முயற்சியால் தற்போது குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது.

    இந்த குப்பைகள் வெளி மாவட்டங்களுக்கு வாக னங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக ரூ.4 லட்சம் வழங்கப் பட்டுள்ளது. குழித்துறை நகராட்சி சார்பில் தற்போது மக்கும் குப்பை. மக்காத குப்பை என பிரித்து எடுக்கப்படு கிறது. இதனால் மார்க்கெட் பகுதியில் உள்ள நீண்ட நாள் பிரச்சினை முடிவுக்கு வந்தது.

    • கிராமப்பகுதியை சுத்தமாக வைத்துக்கொள்ள நம்ம ஊரு சூப்பரு திட்டம் செயல்பட்டு வருகிறது.
    • மாணிக்கம்நத்தம் பகுதிகளில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டன.

    பரமத்தி வேலூர்:

    தமிழக அரசு சார்பாக கிராமப்பகுதிகளை சுத்தமாக வைத்துக்கொள்ள நம்ம ஊரு சூப்பரு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஊராட்சி பகுதிகளில் தூய்மை பணிகள் நடந்து வருகின்றன.

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாணிக்கம்நத்தம் பகுதிகளில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் தூய்மை பணி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்கள் மூலம் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் அனைத்து வார்டு பகுதிகளிலும் கிடந்துள்ள குப்பைகளை அகற்றியும், தெருக்களை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    • திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக சாலையோர கடைகள் அமைக்கப்பட்டு வாழை மரக்கன்றுகள், பூக்கள் , பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது .
    • விற்காததை ஆங்காங்கே வியாபாரிகள் விட்டுச்சென்றனர் இதனால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கி நின்றது .

    திருப்பூர் :

    தமிழகத்தில் ஆயுத பூஜை , விஜயதசமி ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகிறது. தொழில் நிறுவனங்கள் அதிகம் நிறைந்த திருப்பூர் மாவட்டத்தில் ஆயுத பூஜை விழா மிக விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதற்காக பின்னலாடை நிறுவனங்கள் முதல் வீடுகள் வரை சுத்தம் செய்து வாழை மரக்கன்றுகள் வாங்கி வீடுகளின் வாயில் மற்றும் நிறுவனங்களின் நுழைவாயில் கட்டி பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம் . இதற்காக திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக சாலையோர கடைகள் அமைக்கப்பட்டு வாழை மரக்கன்றுகள், பூக்கள் , பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது . விற்பனை நிறைவடைந்ததை அடுத்த கொண்டு வந்திருந்த வாழை மரங்கள் விற்காததை ஆங்காங்கே வியாபாரிகள் விட்டுச் சென்றனர் . இதனால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கி நின்றது .

    இதனை இரவோடு இரவாக அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சியை சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர் . இந்த துப்புரவு பணியினை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் , மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையில் குப்பைகளை அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

    ×