என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விலகல்"

    • ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் தலைமையில் நவீன் பட்நாயக் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.
    • பிஜு ஜனதா தளம் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாகவும் அரிந்தம் ராய் கூறியுள்ளார்.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் பிஜு ஜனதா தளம் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரி நவீன் பட்நாயக் பதவி வகித்து வருகிறார்.

    இந்நிலையில், பிஜு ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகுவதாகவும், அக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் விலகுவதாகவும் அரிந்தம் ராய் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அரிந்தம் ராய் அக்கட்சியின் நிறூவனரான நவீன் பட்நாயக்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    ஆளும் கட்சியின் பொதுச் செயலாளர் திடீரென அக்கட்சியில் இருந்து விலகியிருப்பது ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • டெல்லியில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
    • தலைவர் கைது, முக்கிய அமைச்சரின் ராஜினாமா என ஆம் ஆத்மி ஆட்சி சிக்கலில் உள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பான வழக்கில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அவர் தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

    ஜாமினில் வெளியே வந்த கெஜ்ரிவால், தனக்கு பதில் இளம் தலைவர் அதிஷியை முதல் மந்திரி ஆக்கினார்.

    டெல்லியில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. நான் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று குற்றமற்றவர் என நிரூபித்த பிறகு முதல் மந்திரி பதவியேற்பேன் என கெஜ்ரிவால் தெரிவித்தார்.

    இதற்கிடையே, டெல்லி போக்குவரத்து அமைச்சராக இருந்த கைலாஷ் கெலாட் தனது பதவியை ராஜினாமா செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    தலைவர் கைது, சிறைவாசம், கட்சியில் சலசலப்பு, முக்கிய அமைச்சரின் ராஜினாமா என அடுத்தடுத்து ஆம் ஆத்மி கட்சி ஆட்டம் கண்டு வருகிறது.

    இந்நிலையில், சீலாம்புர் எம்.எல்.ஏ.வான அப்துல் ரகுமான் இன்று கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

    இஸ்லாமியர்களின் உரிமைகள் மறுக்கப்படுகிறது என குற்றம் சாட்டிய அப்துல் ரகுமான், இஸ்லாமிய மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என தெரிவித்துள்ளார்.

    • நாம் தமிழர் கட்சியில் இருந்து சில பொறுப்பாளர்கள் விலகி வருகின்றனர்.
    • கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 500 பேர் கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.

    நாம் தமிழர் கட்சியில் இருந்து சில பொறுப்பாளர்கள் விலகி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகினர். மேலும் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்து சுகுமார் விலகுவதாக தெரிவித்தார். அவர்கள் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சாட்டினர்.

    நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் அக்கட்சியில் இருந்து விலகினார்.

    நாம் தமிழரில் இருக்கும் நீங்கள் யாரும் கேள்வி கேட்கக்கூடாது. என்னுடைய இஷ்டப்படித்தான் நான் செயல்படுவேன். நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் என சீமான் என்னிடம் பேசியது வருத்தத்தை ஏற்படுத்தியதாக பூபாலன் கூறியிருந்தார்

    இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 500 பேர் கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.

    இதுதொடர்பாக, கிருஷ்ணகிரியில் நாதக நிர்வாகிகள் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    கொடி நட்டு, மேடை அமைப்பதில் இருந்து கட்சிக்காக அனைத்து வேலைகளையும் செய்கிற எங்களை எச்சில் என்கிறார் அண்ணன் சீமான். புதிதாக வருபவர்களை தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார். அதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 500 உறுப்பினர்கள், ஒன்றிய, மாவட்டப் பொறுப்பாளர்கள் 20 பேர் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எடப்பாடி ஆதரவாளர் திடீர் விலகினார்
    • ஓ.பி.எஸ். அணியில் ஐக்கியம்

    திருச்சி:

    அ.தி.மு.க.வில் எழுந்த ஒற்றை தலைமை விவகாரத்தால் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கும், ஓ பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்த நிலையில் இரு தரப்பினரும் தங்கள் பலத்தை நிரூபிக்க ஆதரவாளர்களை இழுத்து வருகின்றனர்.

    திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. துணைச் செயலாளராக, மாவட்ட பேரவை செயலாளராக எடப்பாடி அணியில் அங்கம் வகித்து வந்த பத்மநாபன் நேற்று திடீரென கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கத்தை சந்தித்து ஓ.பி.எஸ்.அணியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

    இவர் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மேற்கு சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் கே.என். நேருவை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். பொதுக்குழு உறுப்பினர் அந்தஸ்தில் இருக்கும் பத்மநாபன் திடீரென அணி மாறியது எடப்பாடி அணியினருக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.

    இவர் ஆரம்பத்தில் கட்சி பிளவு பட்ட போது வைத்திலிங்கம் ஆதரவாளராக இருந்தார். பின்னர் திடீரென எடப்பாடி அணிக்கு தாவினார். இப்போது மீண்டும் பழைய இடத்திற்கு இடம்பெயர்ந்துள்ளார். முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட நிர்வாகிகளை நேற்று பத்மநாபன் சந்தித்து பேசினார். இந்த தாவல் திருச்சி அ.தி.மு.க.வில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மீண்டும் அவரை எடப்பாடி அணிக்கு இழுத்து வருவதற்கான முயற்சிகளும் நடப்பதாக கூறப்படுகிறது.

    ×