search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வந்தே பாரத்"

    • கிழக்கு இந்தியாவில் ரெயில் சேவைகள் விரிவாக்கம் செய்யப்படுவதன் மூலம் ஒட்டுமொத்த பிராந்தியமும் வளர்ச்சி அடையும்.
    • ரெயில்வே இணைப்பு நெட்வொர்க்கில் 100 சதவீதம் மின்மயமாக்கல் உள்ள மாநிலங்களில் ஜார்கண்ட் ஒன்றாகும்.

    ராஞ்சி:

    பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10 மணிக்கு ஜார்க்கண்ட் மாநிலம் சென்றார். ராஞ்சியில் அவர் 6 புதிய வந்தே பாரத் ரெயில்களை தொடங்கி வைத்தார்.

    டாடாநகர்-பாட்னா, பிரம்மபூர்-டாடாநகர், ரூர்கேலா-அவுரா, தியோகர்-வாரணாசி, பாகல்பூர்-அவுரா, கயா-அவுரா ஆகிய 6 புதிய வந்தே பாரத் ரெயில்கள் தொடங்கப்பட்டுள்ளன.

    அங்குள்ள டாடாநகரில் இருந்து பிரதமர் மோடி வந்தே பாரத் ரெயில்களை தொடங்கி வைக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் மோசமான வானிலை காரணமாக அவரது ஹெலிகாப்டர் அங்கு செல்ல முடியவில்லை. இதை தொடர்ந்து ராஞ்சியில் இருந்து காணொலி வாயிலாக 6 புதிய வந்தே பாரத் ரெயில்களையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    அதை தொடர்ந்து மோடி ரூ.660 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் திட்டத்தின் கீழ் 32 ஆயிரம் பயனாளிகளுக்கு அனுப்பி கடிதங்கள் வழங்கினார். மேலும் வீடுகள் கட்டுவதற்கு முதல் தவணையாக ரூ.32 கோடியை விடுவித்தார். இதையடுத்து பிரதமர் மோடி பேசியதாவது:-

    6 புதிய வந்தே பாரத் ரெயில்கள், திட்டங்கள் ரூ.650 கோடி, இணைப்பு மற்றும் பயண வசதிகள் விரிவாக்கம், மற்றும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வீடு ஆகிய திட்டங்களுக்காக ஜார்கண்ட் மக்களை நான் வாழ்த்துகிறேன்.

    ஜார்கண்ட் வளர்ச்சியில் பின்தங்கி இருந்தது. ஆனால் தற்போது பல திட்டங்களால் இங்கு முன்னேற்றம் காண முடிகிறது. பழங்குடியினர், ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், தலித்துகள் ஆகியோரின் மேம்பாட்டிற்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது.

    கிழக்கு இந்தியாவில் ரெயில் சேவைகள் விரிவாக்கம் செய்யப்படுவதன் மூலம் ஒட்டுமொத்த பிராந்தியமும் வளர்ச்சி அடையும். ஜார்கண்ட் மாநிலத்துக்கு ரெயில்வே மேம்பாட்டுக்கான பட்ஜெட் ரூ.7000 கோடி ஆகும். இதை 10 ஆண்டுகளுக்கு முந்தைய பட்ஜெட்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இது 16 மடங்கு அதிகம்.

    ரெயில்வே இணைப்பு நெட்வொர்க்கில் 100 சதவீதம் மின்மயமாக்கல் உள்ள மாநிலங்களில் ஜார்கண்ட் ஒன்றாகும். 50-க்கும் மேற்பட்ட ரெயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு மோடி பேசினார்.

    இதை தொடர்ந்து பிரதமர் மோடி ராஞ்சி விமான நிலையத்தில் இருந்து ஜாம்ஷெட்பூருக்கு சாலை மார்க்கமாக புறப்பட்டார். அங்கு நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.

    அவர் நாளை குஜராத் மாநிலத்திற்கும், நாளை மறுநாள் ஒடிசாவுக்கும் சென்று பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

    • மும்பை- கோலாப்பூர் இடையே மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
    • நாக்பூர்-செகந்திரபாத், புனே-ஹுப்ளி இடையேயும் 2 வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில் சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.

    மும்பை:

    மும்பையில் இருந்து புனே, ஷீரடி, சோலாப்பூர், குஜராத் மாநிலம் காந்திநகர், அகமதாபாத் மற்றும் கோவா இடையே வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதுவரையில் 6 வந்தே பாரத் ரெயில்கள் இயங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் 7-வதாக மும்பை-கோலாப்பூர் இடையே புதிய வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இதுபற்றி மத்திய ரெயில்வே மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தற்போது மும்பை- கோலாப்பூர் இடையே மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் சுமார் 518 கி.மீ. தூரத்தை 10 மணி நேரத்தில் கடந்து செல்கிறது. இந்த வழித்தடத்தில் விரைவில் வந்தே பாரத் ரெயில் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் காரணமாக பயண நேரம் கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது.

    இது தொடர்பான சரியான அட்டவணை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. புனே-மிராஜ் இடையே இரட்டை ரெயில் வழிப்பாதை அமைக்கும் பணி நிறைவு பெற்ற பின்னர் அந்த வழித்தடத்தில் புதிய வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்படும்.

    மேலும் நாக்பூர்-செகந்திரபாத், புனே-ஹுப்ளி இடையேயும் 2 வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில் சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • புதிதாக தொடங்கப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை யார் ஓட்டுவது என்று லோகோ பைலட்டுகளிடையே மோதல் ஏற்பட்டது
    • இந்த சண்டை தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    புதிதாக தொடங்கப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை யார் ஓட்டுவது என்று லோகோ பைலட்டுகளிடையே ஏற்பட்ட மோதல் கைகலப்பாக மாறி சண்டையில் முடிந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூருக்கு செல்லும் புதிய வந்தே பாரத் ரெயில் இந்த வார ஆரம்பத்தில் செப்டம்பர் 2[திங்கள் கிழமை] தொடங்கி வைக்கப்பட்டது.

    இந்த ரெயிலை மேற்கு மத்திய ரெயில்வே, வட மேற்கு ரெயில்வே மற்றும் வடக்கு ரயில்வே ஆகிய மூன்று டிவிஷன் லோகோ பைலட்களும் ரெயிலை இயக்க உத்தரவு வந்த நிலையில் தினமும் யார் ரெயிலை இயக்குவது என்பதில் இந்த மூன்று டிவிஷன் ரெயில் லோகோ பைலட்கள் இடையே தினமும் வாக்குவாதம் நடந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த வியாழன் அன்று ஆக்ரா மற்றும் கோட்டா ரெயில்வே டிவிஷன் லோகோ லோகோ பைலட்கள் மற்றும் ஊழியர்கள் இடையே கடுமையான சண்டை மூண்டுள்ளது.

    இதில் ஒரு லோகோ பைலட் மற்றும் அவரது உதவியாளர் தாக்கப்பட்டு அவர்களது சட்டைகள் கிழிக்கப்பட்டது. மேலும் கார்டு ரூமின் போட்டு உடைக்கப்பட்டு கண்ணாடிகள் சேதப்படுத்தப்பட்டன. இந்த சண்டை தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கிடையே இந்த கோஷ்டி மோதல் பிரச்சனைக்கு இன்னும் ரெயில்வே தீர்வு காணவில்லை என்று தெரிகிறது. 

    • பிரதமர் மோடி இன்று மீரட்- லக்னோ இடையிலான புதிய வந்தே பாரத் ரெயிலை தொடங்கி வைத்தார்.
    • எங்களிடம் வாக்குவாதம் செய்த அவர்கள் எங்களை பிடித்துத் தள்ளினர் என்று தெரிவித்தார்.

    பிரதமர் மோடியால் இன்று தொடங்கி வைக்கப்பட்ட மீரட்- லக்னோ இடையிலான புதிய வந்தே பாரத் ரெயிலில் பயணித்த பெண்கள், தங்களிடம் பாஜகவை சேர்ந்த நபர்கள் தகாத முறையில் நடந்துகொண்டதாக குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்கு நேர்ந்தது குறித்து பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாங்கள் ரெயிலில் உள்ளே மற்றொரு கேபினுக்கு சென்றுகொண்டிருந்தபோது, எங்களை வழிமறித்த சில பாஜகவினர், அந்த கேபின் பாஜகவினருக்காக ரிசர்வ் செய்யப்பட்டது என்றும் அதற்குள் வர முடியாது என்றும் கூறினர்.

    எனவே நாங்கள் திரும்பிச் செல்ல முயற்சித்தோம், ஆனால் எங்களை செல்லவிடாமல் மரித்த அவர்கள் ஏன் ரெயிலுக்குள் நடந்துகொண்டிருக்கிறீர்கள் எனக் கூறி எங்களிடம் வாக்குவாதம் செய்த அவர்கள் எங்களை பிடித்துத் தள்ளினர் என்று தெரிவித்தார். தாங்களும் பாஜகவுக்கு ஆதரவானவர்கள்தான் என்று தெரிவித்த அந்த பெண் ரெயிலை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியை விளம்பரப்படுத்த இன்ப்ளூயன்ஸார்களான எங்களுக்கு பாஜக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

    ஆனால் இதுபோன்ற செயல்களினால் மொத்த கட்சிக்கும் களங்கம் ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூா்-நாகா்கோவில், மதுரை-பெங்களூரு கண்டோன்மென்ட் மற்றும் மீரட்-லக்னோ ஆகிய 3 வழித் தடங்களில் 'வந்தே பாரத்' ரெயில்களை பிரதமா் மோடி டெல்லியில் இருந்து இன்று (சனிக்கிழமை) காணொலி மூலம் இன்று தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

    • பேண்ட்ரி காரில் ​​குப்பைத் தொட்டியின் அருகே உணவு தயாரிக்கப்படுவதாக புகார்.
    • இந்த விவகாரம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ரிக்கி ஜெஸ்வானி. இவர் கடந்த திங்கட்கிழமை இரவு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தனது குடும்பத்துடன் ஷீரடிக்கு சுற்றுலா சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

    அப்போது, வந்தே பாரத் ரெயிலில் பரிமாறப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி மிதந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரிக்கியின் சகோதரி முழுமையாக சாப்பிட்ட பிறகே பூச்சி இருப்பது தெரியவந்துள்ளது.

    இதுதொடர்பாக, ரெயிலில் உள்ள 'பேண்ட்ரி காரில் புகார் செய்யச் சென்றபோது, குப்பைத் தொட்டியின் அருகே உணவு தயாரிக்கப்பட்டு, கரப்பான் பூச்சிகள் ஊர்ந்து செல்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    இதுகுறித்து ரிக்கி ஜெஸ்வானி கூறுகையில், "எனது சகோதரி சைவ உணவு உண்பவர். அவர் சாப்பிட்ட பருப்பு குழம்பின் அடிப்பகுதியில் கரப்பான் பூச்சியைக் கண்டபோது அவள் கிட்டத்தட்ட உணவை முடித்துவிட்டாள்.

    அதற்குள் எனது 80 வயது தந்தை உட்பட எனது குடும்பத்தினர் அனைவரும் பருப்பு சாம்பாரை சாப்பிட்டுவிட்டனர். நாங்கள் புகார் செய்ய பேண்ட்ரி காருக்கு சென்றபோது, குப்பைத் தொட்டிக்கு அருகிலேயே உணவு தயாரிக்கப்பட்டு இருப்பதைக் கண்டோம். அங்கு கரப்பான் பூச்சிகள் ஊர்ந்து செல்கின்றன.

    ஏசி சேர் கார் சி5 கோச்சில் பரிமாறப்பட்ட தயிர் கூட கூடுதல் புளிப்புடன் கெட்டுப்போனதாக இருந்தது" என்றார்.

    இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


    • பெங்களூருவில் இருந்து மறுநாள் காலை 5.30 மணிக்கு புறப்பட்டு, மதியம் 2.20 மணிக்கு எர்ணாகுளத்திற்கு வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • வந்தே பாரத் ரெயில் எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோவை போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் பெங்களூரு ஆகிய ரெயில் நிலையங்களில் நிறுத்தப்படும்.

    திருவனந்தபுரம்:

    ரெயில் பயணிகளின் பயண நேரத்தை குறைக்கவும், சொகுசான பயணத்தை கொடுக்கும் வகையிலும் நாடு முழுவதும் வந்தே பாரத் ரெயில்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. கேரள மாநிலத்தில் 2 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படும் நிலையில் தற்போது 3-வது வந்தே பாரத் ரெயில் சேவை வருகிற 31-ந்தேதி தொடங்கப்பட இருக்கிறது.

    இந்த ரெயில் எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூருவுக்கு சிறப்பு ரெயிலாக வாரத்தில் புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் இயக்கப்பட உள்ளது. மதியம் 12.50 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் அந்த ரெயில், இரவு 10 மணிக்கு பெங்களூருவுக்கு சென்றடையும்.

    அதேபோல் மறுமார்க்கத்தில் பெங்களூருவில் இருந்து மறுநாள் காலை 5.30 மணிக்கு புறப்பட்டு, மதியம் 2.20 மணிக்கு எர்ணாகுளத்திற்கு வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வந்தே பாரத் ரெயில் எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோவை போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் பெங்களூரு ஆகிய ரெயில் நிலையங்களில் நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    • 3,515 ரெயில் பெட்டிகளை தயாரிக்க ஐ.சி.எப். திட்டமிட்டுள்ளது.
    • தற்போது வந்தே பாரத் ரெயில்களில் 8 அல்லது 16 பெட்டிகள் உள்ளன.

    சென்னை:

    அதி நவீன சொகுசு மற்றும் விரைவு எக்ஸ்பிரஸ் ரெயிலான வந்தே பாரத் சென்னை பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. தமிழகத்திலும் 3 வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    2018 முதல் வந்தே பாரத் ரெயில் பெட்டிகளை தயாரித்து வரும் ஐ.சி.எப். இதுவரையில் 70 ரெயில்களை தயாரித்து உள்ளது. 500-க்கும் மேற்பட்ட வடிவமைப்புகளில் சுமார் 75 ஆயிரம் பெட்டிகளை தயாரித்துள்ளது.

    இந்த நிதியாண்டில் 1,536 எல்.எச்.பி. பெட்டிகள் மற்றும் 650-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் உட்பட 3,515 ரெயில் பெட்டிகளை தயாரிக்க ஐ.சி.எப். திட்டமிட்டுள்ளது.

    தற்போது 5 வந்தே பாரத் ரெயில்கள் இயக்குவதற்கு பெட்டிகள் தயாராக உள்ளன. அவற்றை விரைவில் இயக்கவும் எந்த நகரங்களுக்கு அவை செல்கிறது என்பதும் ரெயில்வே வாரியம் தீர்மானிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    16 பெட்டிகளை கொண்ட இந்த ஆரஞ்சு நிற ரெயில்களின் இறுதி ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதுபற்றி ஐ.சி.எப். அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இந்த வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படும் வழித்தடங்களை ரெயில்வே வாரியம் முடிவு செய்யும்.

    தற்போது வந்தே பாரத் ரெயில்களில் 8 அல்லது 16 பெட்டிகள் உள்ளன. எதிர் காலத்தில் 20 மற்றும் 24 பெட்டிகளுடன் இயக்கப்படும். வந்தே பாரத் மெட்ரோவின் சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டுள்ளது என்றார்.

    • இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து இந்த பிரச்சனை குறித்து பல பயணிகள் புகார் அளித்தனர்.
    • இந்த புகார் தொடர்பாக வடக்கு ரெயில்வே தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது.

    டெல்லியில் இருந்து வாரணாசிக்கு சென்ற வந்தே பாரத் ரெயிலில் மேற்கூரையில் இருந்து தண்ணீர் ஒழுகும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து இந்த பிரச்சனை குறித்து பல பயணிகள் புகார் அளித்தனர்.

    இந்த புகார் தொடர்பாக வடக்கு ரெயில்வே தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. அதில், குழாய்களில் ஏற்பட்ட அடைப்புகளில் இந்த நீர்க்கசிவு ஏற்பட்டிருக்கலாம். பயணிகளின் சிரமத்திற்கு வருந்துகிறோம் என்று பதிவிட்டுள்ளது.

    இருப்பினும் ரெயிலில் நீர் ஒழுகும் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து நெட்டிசன்கள் ரெயில்வேத்துறையின் அலட்சியத்தை விமர்சித்து வருகின்றனர்.

    • ஜூன் 20ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருவதாக இருந்தார்.
    • பிரதமர் மோடியின் தமிழக பயண தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

    சென்னை விழாவில் 2 வந்தே பாரத் ரெயில்களின் சேவையை பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைக்க பிரதமர் மோடி வரும் 20ம் தேதி தமிழகம் வருகை தர இருந்தார்.

    சென்னை எழும்பூர்- நாகர்கோவில் இடையே ஒரு வந்தே பாரத் ரெயில் விடப்படுகிறது. அதுபோல மதுரையில் இருந்து பெங்களூருக்கு சென்னை வழியாக மற்றொரு வந்தே பாரத் ரெயில் விடப்படுகிறது.

    இந்த 2 ரெயில் சேவைகளையும் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அதே சமயத்தில் மதுரை ரெயில் நிலையத்திலும் வந்தே பாரத் ரெயிலுக்கான தொடக்க விழா நடைபெற திட்டமிடப்பட்டது.

    இந்நிலையில், பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

    வந்தே பாரத் ரெயில் சேவையை துவக்கி வைப்பதற்காக ஜூன் 20ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருவதாக இருந்தார்.

    இந்நிலையில், வரும் 20ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவதாக இருந்த பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடியின் தமிழக பயண தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கரு. நாகராஜன் தெரிவித்துள்ளார்.

    • 2 ரெயில்களும் 8 பெட்டிகளை கொண்டதாக இருக்கும்.
    • 2 ரெயிலை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுவது இதுவே முதல்முறை.

    சென்னை:

    சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப். ரெயில் பெட்டி தொழிற்சாலை ரெயில் பெட்டிகளை தயாரிப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது.

    1955-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் நேருவால் தொடங்கப்பட்ட இந்த ஐ.சி.எப். தொழிற்சாலையில் வந்தே பாரத் ரெயில் உள்பட பல்வேறு ரெயில் பெட்டிகள் தயாரிக் கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் 2024-2025-ம் ஆண்டுக்கான ரெயில் பெட்டிகள் தயா ரிப்பு பணியில் ஐ.சி.எப். ரெயில் பெட்டி தொழிற்சாலை முக்கிய பங்காற்ற உள்ளது. இதுவரை இல்லாத வகையில் மிகவும் அதிவே கத்தில் செல்லும் 2 ரெயில்கள் அங்கு தயாரிக்கப்பட உள்ளன.

    மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த ரெயில்களை தயாரிப்பது தொடர்பாக கடந்த 4-ந் தேதி மத்திய ரெயில்வே அமைச்சகம் சார்பில் ஐ.சி.எப். தொழிற்சாலைக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

    இதை தொடர்ந்து புதிய அதிவேக ரெயில்கள் இரண்டையும் தயாரிப்பதற் கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

    தற்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலின் வேகம் 180 கி.மீ. ஆகும் புதிதாக தயாரிக்கப்பட உள்ள 250 கி.மீ.வேகம் கொண்ட 2 அதிவேக ரெயில்களும் தயாரிக் கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் அதுவே அதிவேக ரெயிலாக இருக்கும்.

    இந்த 2 ரெயில்களும் 8 பெட்டிகளை கொண்டதாக இருக்கும்.

    மத்திய ரெயில்வே அமைச்சகம் இவ்வளவு அதிவேகத்தில் செல்லும் 2 ரெயிலை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுவது இதுவே முதல்முறை என்றும் பணிகள் முடிந்து ரெயில் இயக்கப்பட்டால் அது புதிய மைல் கல்லாக இருக்கும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    • சென்னை பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில் இந்த பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
    • படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரெயிலை மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    வந்தே பாரத் ரெயில் தற்போது 39 வழித் தடங்களில் பல்வேறு நகரங்களை இணைக்கும் வகை இயக்கப்படுகிறது. முற்றிலும் சேர்கார் பெட்டிகளாக அதாவது அமர்ந்து செல்லும் வகையில் மட்டுமே வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.

    தமிழகத்தில் சென்னை-கோவை, எழும்பூர்-நெல்லை, சென்னை-மைசூரு உள்ளிட்ட நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    வந்தே பாரத் ரெயில் படுக்கை வசதியுடன் தயாரிக்க ரெயில்வே துறை முடிவு செய்து அதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. சென்னை பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில் இந்த பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரெயிலை மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    முதலில் டெல்லி-மும்பை, டெல்லி-ஹவுரா, மற்றும் டெல்லி-பாட்னா போன்ற சில நகரங்களுக்கு இடையே இரவு நேர பயணங்களுக்காக இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    முதலில் 10 செட் வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்படும். மார்ச் மாதம் அறிமுகம் செய்வதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    ஆய்வுக்கு பிறகு ஏப்ரல் முதல் அல்லது 2-வது வாரத்தில் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறுகையில், "படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரெயில்கள் பாதுகாப்பு மற்றும் பல்வேறு வசதியுடன் தயாரிக்கப்படுகிறது. தரம் மற்றும் அதன் ஆயுட்காலம் சர்வதேச தரத்தில் இருக்கும்.

    அடுத்த சில ஆண்டுகளில் ஏற்றுமதி செய்யப்படும். படுக்கை வசதி பெட்டிகள் அனைத்தும் 'கவாச்' அமைப்புடன் பொறுத்தப்பட்டு இருக்கும்.

    மேலும் அதிகபட்சமாக மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும். ஒவ்வொரு ரெயிலும் 16 ஏ.சி. பெட்டிகளை கொண்டதாக இருக்கும். அதில் 850 படுக்கை வசதிகள் இடம் பெறும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ரெயிலில் பயணம் செய்த பயணிகள் செல்போனில் புகைப்படமும் எடுத்து கொண்டனர்.
    • கோவை-பெங்களூரு இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவை இன்று முதல் தொடங்கியது.

    கோவை:

    தமிழகத்தில் கோவை-சென்னை, நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    கோவை-சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலுக்கு கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்களிடம் வரவேற்பு காணப்பட்டது.

    கோவையில் இருந்து பெங்களூருவுக்கு தொழில் விஷயமாகவும், வேலைக்காகவும், படிப்பிற்காகவும் பலரும் சென்று வருகின்றனர்.

    எனவே கோவை-சென்னை வந்தே பாரத் ரெயில் போன்று கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதனை ஏற்று கோவை-பெங்களூருவுக்கு வந்தே பாரத் ரெயில் சேவை கடந்த 30-ந் தேதி தொடங்கப்பட்டது. இதனை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து இன்று முதல் கோவை-பெங்களூரு வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கியது.

    அதன்படி இன்று காலை 5 மணிக்கு கோவையில் இருந்து பெங்களூருவுக்கு வந்தே பாரத் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயிலில் பயணிக்க அதிகாலையிலேயே முன்பதிவு செய்திருந்த பயணிகள் ரெயில் நிலையத்திற்கு வந்து காத்திருந்தனர்.

    ரெயிலில் பிளாட்பாரத்திற்கு வந்ததும், பயணிகள் அனைவரும் டிக்கெட் பரிசோதிக்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து பயணிகள் அனைவரும் தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்தனர்.

    இந்த ரெயிலில் பயணம் செய்வது வித்தியாசமாக இருந்ததாக தெரிவித்த பயணிகள் உற்சாகத்துடன் பயணம் மேற்கொண்டனர். ரெயிலில் உள்ள அனைத்து பெட்டிகளும் நிரம்பி வழிந்தது. ரெயில் புறப்பட்டதும், பயணிகளுக்கு ரெயில் நிர்வாகம் சார்பில் காபி மற்றும் திண்பண்டங்கள் வழங்கப்பட்டன.

    ரெயிலில் பயணம் செய்த பயணிகள் செல்போனில் புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

    கோவையில் இருந்து 5 மணிக்கு புறப்பட்ட ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி வழியாக காலை 11.30 மணிக்கு பெங்களூருவை சென்றடைந்தது.

    மறுமார்க்கமாக அங்கிருந்து 1.40 மணிக்கு புறப்படும் ரெயில் இரவு 8 மணிக்கு கோவையை வந்தடைய உள்ளது. கோவை-பெங்களூரு இடையேயான 380 கி.மீ தொலைவை 6 அரை மணி நேரத்தில் இந்த ரெயில் சென்றடைகிறது. இன்று முதல் தினமும் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளதால் கோவை பொதுமக்கள் மற்றும் தொழில்துறையினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கோவை-பெங்களூரு இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவை இன்று முதல் தொடங்கியது. காலை 5 மணிக்கே கோவையில் இருந்து வந்தே பாரத் ரெயில் புறப்பட்டு சென்று விட்டது.

    முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த ரெயிலில் சொகுசு பெட்டிகள், சிறப்பு சொகுசு பெட்டிகள் என 2 வகையான பெட்டிகள் உள்ளன.

    சொகுசு பெட்டியில் பயணிக்க ஒரு பயணிக்கு ரூ.940-ம், சிறப்பு சொகுசு பெட்டியில் பயணிக்க ஒரு நபருக்கு ரூ.1,860-ம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர ரெயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு காபி, திண்பண்டங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த ரெயில் 6 அரை மணி நேரத்தில் பெங்களூருவை சென்றடையும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×