என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "முகமது சிராஜ்"
- தனது புதிய ரேஞ்ச் ரோவர் காரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிராஜ் பகிர்ந்துள்ளார்
- உங்களை நீங்கள் நம்பினால், விரும்பியதை அடைய முடியும் என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த கையோடு இந்திய அணி நாடு திரும்பியது. அதன் பிறகு முகமது சிராஜ் தனது குடும்பத்திற்காக ஒரு புதிய காரை வாங்கியுள்ளார்.
தனது புதிய ரேஞ்ச் ரோவர் காரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அந்த படத்தில் அவரது குடும்பத்தினரும் உடன் இருந்தனர்.
அந்த பதிவில், "உங்கள் கனவுகளுக்கு எல்லைகள் இல்லை, ஏனெனில் அவை உங்களை கடினமாக உழைக்கவும் பாடுபடவும் தூண்டுகின்றன. தொடர்ச்சியாக நீங்கள் எடுக்கும் முயற்சிகளே உங்களை முன்னோக்கி அழைத்துச் செல்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
புதிய கார் வாங்கிய சிராஜ்க்கு இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ஆர்சிபி அணி வீரர் கரண் ஷர்மா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
- 25 டெஸ்டில் 72 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சராசரி 28.54 ஆகும். 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியது சிறந்த பந்து வீச்சாகும்.
- 41 ஒருநாள் போட்டிகளில் 68 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சராசரி 22.79 ஆகும். 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியது சிறந்த பந்து வீச்சாகும்.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக முகமது சிராஜ் திகழ்கிறார். இவரது பந்து வீச்சு எடுபட்டால் அந்த குறிப்பிட்ட போட்டியில் அதிகப்படியான விக்கெட்டுகளை வீழ்த்திவிடுவார்.
அந்த வகையில்தான் இன்று இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் 84 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். இவருடைய முக்கியமான பந்து வீச்சு காரணமாக இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 319 ரன்னில் சுருண்டது. இந்தியா 126 ரன்கள் முன்னணி பெற முக்கிய காரணமாக அமைந்தது.
முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் சர்வதேச அரங்கில் 76 போட்டிகளில் 152 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
25 டெஸ்டில் 72 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சராசரி 28.54 ஆகும். 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியது சிறந்த பந்து வீச்சாகும்.
41 ஒருநாள் போட்டிகளில் 68 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சராசரி 22.79 ஆகும். 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியது சிறந்த பந்து வீச்சாகும்.
10 டி20 போட்டிகளில் 12 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சராசரி 27.83 ஆகும். 17 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றியது சிறந்த பந்து வீச்சாகும்.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா மற்றும் சொந்த மண்ணில் இந்தியாவுக்கு வெற்றித் தேடிக் கொடுக்கம் வகையில் அட்டகாசமான ஸ்பெல் வீசி அசத்தியுள்ளார் என்றால் மிகையாகாது.
- 147 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் குறைந்த ஓவர்களில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது.
- இந்தப் போட்டியில் இரு இன்னிங்சிலும் சேர்த்து மொத்தம் 107 ஓவர்களே வீசப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கேப் டவுன்:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கேப் டவுன் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 23.2 ஓவரில் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் சிராஜ் 6 விக்கெட், பும்ரா, முகேஷ் குமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 34.5 ஓவரில் 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா, பர்கர், நிகிடி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
98 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 36.5 ஓவரில் 176 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மார்கிரம் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்து சதமடித்து 106 ரன்னில் அவுட்டானார்.
இந்தியா சார்பில் பும்ரா 6 விக்கெட்டும், முகேஷ் குமார் 2 விக்கெட்டும், சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. 2வது இன்னிங்சில் 12 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் 1-1 என சமனிலையில் முடிந்தது.
ஆட்ட நாயகன் விருது முகமது சிராஜுக்கும், தொடர் நாயகன் விருது பும்ரா மற்றும் டீன் எல்கர் ஆகியோருக்கு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக குறைந்த ஓவர்களில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 2வது டெஸ்ட் முடிந்துள்ளது.
இந்தப் போட்டியில் இரு இன்னிங்சிலும் சேர்த்து மொத்தம் 107 ஓவர்களே வீசப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா வெற்றி பெற 79 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா.
- இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
கேப் டவுன்:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கேப் டவுன் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதல் இன்னிங்ஸ் ஆடிய தென் ஆப்பிரிக்கா சிராஜ் பந்துவீச்சில் சிக்கியது. முன்னணி வீரர்களை விரைவில் வெளியேற்றினார். இறுதியில் தென் ஆப்பிரிக்கா 23.2 ஓவரில் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் சிராஜ் 6 விக்கெட், பும்ரா, முகேஷ் குமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. விராட் கோலி 46 ரன்னும், ரோகித் சர்மா 39 ரன்னும், சுப்மன் கில் 36 ரன்னும் எடுத்தனர். 7 வீரர்கள் டக் அவுட்டாகினர். இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா, பர்கர், நிகிடி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
98 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி 2-வது இன்னிங்சை தொடர்ந்தது. முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 2வது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்திருந்தது. மார்கிரம் 36 ரன்னுடன் களத்தில் இருந்தார்.
இந்தியா சார்பில் முகேஷ் குமார் 2 விக்கெட்டும், பும்ரா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மார்கிரம் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்து சதமடித்து 106 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சில் 176 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் பும்ரா 6 விக்கெட்டும், முகேஷ் குமார் 2 விக்கெட்டும், சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடி 28 ரன்னில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் 10 ரன்னும், விராட் கோலி 12 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.
இறுதியில் இந்திய அணி 2வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டெஸ்ட் தொடரை 1-1 என சமனிலையில் முடித்தது.
- தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 176 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- இந்தியாவின் பும்ரா 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
கேப் டவுன்:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கேப் டவுன் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதல் இன்னிங்ஸ் ஆடிய தென் ஆப்பிரிக்கா சிராஜ் பந்துவீச்சில் சிக்கியது. முன்னணி வீரர்களை விரைவில் வெளியேற்றினார். இறுதியில் தென் ஆப்பிரிக்கா 23.2 ஓவரில் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் சிராஜ் 6 விக்கெட், பும்ரா, முகேஷ் குமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. விராட் கோலி 46 ரன்னும், ரோகித் சர்மா 39 ரன்னும், சுப்மன் கில் 36 ரன்னும் எடுத்தனர். 7 வீரர்கள் டக் அவுட்டாகினர். இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா, பர்கர், நிகிடி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
98 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி 2-வது இன்னிங்சை தொடர்ந்தது. முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 2வது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்திருந்தது. மார்கிரம் 36 ரன்னுடன் களத்தில் உள்ளார்.
இந்தியா சார்பில் முகேஷ் குமார் 2 விக்கெட்டும், பும்ரா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மார்கிரம் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்து சதமடித்து 106 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சில் 176 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் பும்ரா 6 விக்கெட்டும், முகேஷ் குமார் 2 விக்கெட்டும், சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.
- நான் ஒரு இடத்தை குறி வைத்து நிலையாக பந்து வீசினேன். இதற்கு நல்ல பலன் கிடைத்தது.
- பும்ராவும் சிறப்பாக பந்து வீசி தென்ஆப்பிரிக்க வீரர்களுக்கு அழுத்தம் கொடுத்தார்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் பந்து வீச்சில் அனல் பறந்தது. அவர் 9 ஓவர் வீசி 15 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். தென்ஆப்பிரிக்காவின் சரிவுக்கு முக்கிய காரணமாக இருந்து முகமது சிராஜிக்கு டெஸ்டில் சிறந்த பந்துவீச்சு இதுவாகும்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் 60 ரன் கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றியதே சிறந்ததாக இருந்தது.
29 வயதான சிராஜ் தனது சிறப்பான பந்து வீச்சு தொடர்பாக கூறியதாவது:-
நான் ஒரு இடத்தை குறி வைத்து நிலையாக பந்து வீசினேன். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. முதல் டெஸ்ட் நடைபெற்ற செஞ்சூரியன் ஆடுகளம் போலவே இந்த பிட்சும் இருந்தது. முதல் டெஸ்டில் நாங்கள் ரன்களை வாரி கொடுத்தோம். அதுமாதிரி அமைந்துவிடக் கூடாது என்பதில் கூடுதல் கவனம் செலுத்தி பந்து வீசினோம். எனது தவறை உணர்ந்து அதற்கு ஏற்ற வகையில் பந்து வீசினேன்.
பும்ராவும் சிறப்பாக பந்து வீசி தென்ஆப்பிரிக்க வீரர்களுக்கு அழுத்தம் கொடுத்தார். ஆனால் அவருக்கு துரதிருஷ்டவசமாக விக்கெட்டுகள் கிடைக்கவில்லை. எனக்கு 6 விக்கெட் கிடைத்தது. எனது கிரிக்கெட் வாழ்க்கையில் டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியமானதாகும்.
இவ்வாறு சிராஜ் கூறி உள்ளார்.
- இந்தியா முதல் இன்னிங்சில் 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 2-ம் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது.
கேப் டவுன்:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கேப் டவுன் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதல் இன்னிங்ஸ் ஆடிய தென் ஆப்பிரிக்கா சிராஜ் பந்துவீச்சில் சிக்கியது. முன்னணி வீரர்களை விரைவில் வெளியேற்றினார். இறுதியில் தென் ஆப்பிரிக்கா 23.2 ஓவரில் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் சிராஜ் 6 விக்கெட், பும்ரா, முகேஷ் குமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ரோகித் சர்மா 39 ரன்னும், சுப்மன் கில் 36 ரன்னும் எடுத்தனர்.
அடுத்து வந்த வீரர்கள் விரைவில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் விராட் கோலி பொறுப்புடன் ஆடி 46 ரன்னில் அவுட்டானார். இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா, பர்கர், நிகிடி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இந்நிலையில், 98 ரன்கள் பின் தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. டீன் எல்கர் 12 ரன்னும், டி சோர்ஜி ஒரு ரன்னும், ஸ்டப்ஸ் ஒரு ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில், முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 2வது இன்னிங்சில் 17 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது. மார்கிரம் 36 ரன்னுடன் களத்தில் உள்ளார்.
இந்தியா சார்பில் முகேஷ் குமார் 2 விக்கெட்டும், பும்ரா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 55 ரன்களில் சுருண்டது.
- இந்தியாவின் முகமது சிராஜ் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
கேப் டவுன்:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கேப் டவுன் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 23.2 ஓவரில் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முகமது சிராஜ் அசத்தலாக பந்துவீசி முன்னணி வீரர்களை வெளியேற்றினார்.
இந்தியா சார்பில் சிராஜ் 6 விக்கெட், பும்ரா, முகேஷ் குமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவின் யான்சென் விக்கெட்டை எடுக்க விராட் கோலி சிராஜுக்கு யோசனை தெரிவித்தார். இதை செயல்படுத்திய சிராஜ் அடுத்த பந்தில் யான்சென் விக்கெட் கைப்பற்றினார்.
இதையடுத்து, விராட் கோலியின் டெஸ்ட் போட்டிகளின் அனுபவமே யான்சென் விக்கெட் எடுக்க காரணமாக இருந்தது என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 55 ரன்களில் சுருண்டது.
- தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 153 ரன்னில் சுருண்டது.
கேப் டவுன்:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கேப் டவுன் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதல் இன்னிங்ஸ் ஆடிய தென் ஆப்பிரிக்கா சிராஜ் பந்துவீச்சில் சிக்கியது. முன்னணி வீரர்களை விரைவில் வெளியேற்றினார். இறுதியில் தென் ஆப்பிரிக்கா 23.2 ஓவரில் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் சிராஜ் 6 விக்கெட், பும்ரா, முகேஷ் குமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ரோகித் சர்மா 39 ரன்னும், சுப்மன் கில் 36ரன்னும் எடுத்தனர்.
அடுத்து வந்த வீரர்கள் விரைவில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் விராட் கோலி பொறுப்புடன் ஆடி 46 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா, பர்கர், நிகிடி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
- டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 55 ரன்களில் சுருண்டது.
கேப் டவுன்:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி கேப் டவுன் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
இந்திய அணியில் அஸ்வின், ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டு ஜடேஜா, முகேஷ் குமார் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதன்படி முதல் இன்னிங்ஸ் ஆடிய தென் ஆப்பிரிக்கா சிராஜ் பந்துவீச்சில் சிக்கியது. முன்னணி வீரர்களை விரைவில் வெளியேற்றினார்.
இறுதியில் தென் ஆப்பிரிக்கா 23.2 ஓவரில் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் சிராஜ் 6 விக்கெட், பும்ரா, முகேஷ் குமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- சிராஜின் தந்தை 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் காலமானார்.
- அந்த நேரத்தில் சிராஜ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. முதல் அரையிறுதியில் இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில் 2-வது அரையிறுதியில் இன்று தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது.
முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. இதன் மூலம் ஒருநாள் உலகக் கோப்பையில் 4-வது முறையாக இந்தியா இறுதி போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது.
இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறியுள்ள நிலையில் இந்திய அணியில் இடம் பிடித்த முகமது சிராஜின் இன்ஸ்டா ஸ்டோரி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் தனது தந்தையிடம் இருந்து கால் வருமா என எதிர்ப்பார்க்கிறேன் என பதிவிட்டிருந்தார். மிஸ் யூ எனவும் அதில் தெரிவித்தார். இந்த ஸ்டோரி கண்கலங்க வைப்பதாக இருந்தது.
சிராஜின் தந்தை 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் காலமானார். அந்த நேரத்தில் சிராஜ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐசிசி ஆடவர் ஒருநாள் போட்டி பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியல் வெளியானது.
- இதில் இந்திய வீரர் முகமது சிராஜ் முதல் இடம் பிடித்துள்ளார்.
துபாய்:
ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டது.
பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்தியாவின் இளம் வீரர் சுப்மன் கில் முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.
இந்நிலையில், பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்தியாவின் முகமது சிராஜ் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகாராஜ் 2வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பா 3வது இடத்திலும் உள்ளனர்.
இந்தியாவின் குல்தீப் யாதவ் 4வது இடத்திலும், பாகிஸ்தானின் ஷாகின் அப்ரிடி 5வது இடத்தில் உள்ளனர்.
இந்திய வீரர்கள் ஜஸ்பிரித் பும்ரா 8வது இடத்திலும், முகமது ஷமி 10வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்