என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறக்குமதி வரி"

    • அமெரிக்க மக்களை பாதுகாக்க இந்த வரி விதிப்பு முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
    • அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்வது என் கடமை.

    கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்க குடிமக்களை பாதுகாக்கவும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கில் சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டத்தின் கீழ் இறக்குமதி வரியை அதிகரிக்கும் நடவடிக்கையை அதிபர் டிரம்ப் மேற்கொண்டுள்ளார்.

    சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலால் ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து அமெரிக்க மக்களை பாதுகாக்க இந்த வரி விதிப்பு முறை செயல்படுத்தப்பட்டுள்ளதாக டிரம்ப் கூறினார்.

    "இன்று, நான் மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரியையும் (கனேடிய எரிசக்திக்கு 10%), சீனாவுக்கு 10% கூடுதல் வரியையும் அமல்படுத்தியுள்ளேன். சட்டவிரோத வெளிநாட்டினர் மற்றும் நமது மக்களைக் கொல்லும் கொடிய போதை பொருட்களின் முக்கிய அச்சுறுத்தல் காரணமாக இது சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம் (IEEPA) மூலம் செய்யப்பட்டது."

    "நாம் அமெரிக்கர்களைப் பாதுகாக்க வேண்டும், மேலும் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வது அதிபராக எனது கடமையாகும். சட்டவிரோத வெளிநாட்டினர் மற்றும் போதைப்பொருட்கள் நமது எல்லைகளில் கொட்டுவதைத் தடுப்பதாக எனது தேர்தல் பிரச்சாரத்தில் நான் உறுதியளித்து இருந்தேன். மேலும் அமெரிக்கர்கள் பெருமளவில் அதற்கு ஆதரவாக வாக்களித்தனர்," என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    • அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டு இருந்தார்.
    • அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும்.

    அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிரடியாக அறிவித்துள்ளார். முனனதாக கனடா, சீனா பொருட்களுக்கு வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டு இருந்தார்.

    இவரது அறிவிப்பை தொடர்ந்து ஜஸ்டின் ட்ரூடோ 155 பில்லியன் கனேடிய டாலர் மதிப்பிலான அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

    30 பில்லியன் கனேடிய டாலர்களில் உள்ளவை வருகிற செவ்வாய் கிழமை முதல் அமலுக்கு வருகிறது. இதே தினத்தன்று, டிரம்பின் வரிகள் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள 125 பில்லியன் கனேடிய டாலர்கள் மீதான வரிகள் 21 நாட்களில் அமலுக்கு வரும் என்று ட்ரூடோ கூறினார்.

    ட்ரூடோவின் அறிவிப்பு, கனடா மற்றும் மெக்சிகன் இறக்குமதிகளுக்கு 25% வரிகளும், சீனாவிலிருந்து வரும் பொருட்களுக்கு 10% வரிகளும் விதிக்க டிரம்ப் உத்தரவிட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு வந்துள்ளது. இது உலகளாவிய வளர்ச்சியின் வேகத்தை குறைக்கும். மேலும் பணவீக்கத்தை மீண்டும் தூண்டக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

    வரவிருக்கும் வாரங்கள் கனேடிய மக்களுக்கு கடினமாக இருக்கும் என்றும், ட்ரூடோவின் வரிகள் அமெரிக்கர்களையும் பாதிக்கும் என்றும் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரித்தார்.

    அமெரிக்க பீர், ஒயின் மற்றும் போர்பன், அத்துடன் டிரம்பின் சொந்த மாநிலமான புளோரிடாவில் இருந்து வரும் ஆரஞ்சு சாறு உள்ளிட்ட பழங்கள் மற்றும் பழச்சாறுகள் ஆகியவற்று வரி விதிக்கப்படும் என்று ஜஸ்டின் ட்ரூடோ கூறினார். ஆடை, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் மீதும் கனடா வரி விதிக்கும் என்று தெரிகிறது.

    கனடாவைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவில் இருப்பதை விட கனேடிய பொருட்களை வாங்கி வீட்டிலேயே ஓய்வெடுக்க ட்ரூடோ அறிவுறுத்தியுள்ளார்.

    • கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
    • விலை வாசி உயரும் அபாயம் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றபிறகு சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவது உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்

    அண்டை நாடான மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்தார். எண்ணை இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரம் உள்ளிட்ட கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரி சக்திகளுக்கு 10 சதவீத வரி விதித்தார். இதைத்தவிர சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.

    சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதை பொருட்களை அமெரிக்காவுக்குள் கடத்தப்படுவதை தடுக்க அந்நாடுகள் போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனக்கூறி அமெரிக்கா இந்த அதிரடி வரிவிதிப்பில் இறங்கியது.

    டிரம்பின் இந்த நடவடிக்கை கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா பொருட்களுக்கு 25 சதவீத இறக்குமதி விதிக்கப்படுவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார். இதே போல சீனா மற்றும் மெக்சிகோ நாடுகளும் அமெரிக்கா பொருட்களுக்கு இறக்குமதி வரி விதித்தது.

    இந்த வர்த்தக போரால் அமெரிக்காவின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும் குறுகிய காலத்தில் விலை வாசி உயரும் அபாயம் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். ஆனாலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது முடிவில் உறுதியாக இருக்கிறார்.

    அமெரிக்கா வரிகளுக்கு எதிராக பதிலடி நடவடிக்கை யாக கனடா, மெக்சிகோ நாடுகள் செயல்படுகிறது. இதனால் அமெரிக்க மக்கள் பொருளாதார வலியை உணரக்கூடும்.

    அமெரிக்க நலனை பாதுகாக்க இந்த வலிக்கு விலை மதிப்பு அதிகம். நாங்கள் அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்றுவோம். கனடாவில் உற்பத்தி யாகும் எந்த பொருளும் எங்களுக்கு தேவையில்லை. எங்களுக்கு ஆற்றல் இருக்கிறது.

    நாங்கள் சொந்தமாக அந்த பொருட்களை உருவாக்குவோம். எங்களுக்கு தேவையான அளவை விட அதிகமாக வைத்து இருப்போம்.

    கனடாவை அமெரிக்காவின் 51-வது மாகாணமாக உருவாக்குவோம். இதன் மூலம் கனடா மக்களுக்கு மிக குறைவான வரி, ராணுவ பாதுகாப்பு ஆகியவைகளை வழங்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிளாடியா ஷீன்பாம் உடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை.
    • பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

    கனடா மற்றும் மெக்சிகோ பொருட்களுக்கு வரி விதிக்கும் நடைமுறையை ஒருமாதத்திற்கு நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

    இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதும் மெக்சிகோ, கனடா மற்றும் சீன பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நடைமுறையை டொனால்டு டிரம்ப் அறிவித்தார். இவரது அறிவிப்பு உலகளவில் வர்த்தக போர் ஏற்படும் அச்சத்தை தூண்டியது. இந்த நிலையில், மெக்சிகோ பிரதிநிதி கிளாடியா ஷீன்பாம் உடன் அமெரிக்கா நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது.

    அதில் அமெரிக்க - மெக்சிகோ எல்லைக்கு 10 ஆயிரம் துருப்புகளை அனுப்புவதாக மெக்சிகோ ஒப்புக் கொண்டது. இதைத் தொடர்ந்து தான் வரி விதிக்கும் நடைமுறையை ஒருமாத காலத்திற்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். இதே போல் கனடாவும் வரி விதிப்பை ஒத்திவைக்கும் ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்தது.

    மிகவும் நட்புரீதியான உரையாடலுக்கு பிறகு எதிர்பார்க்கப்பட்ட வரிகளை ஒரு மாத காலத்திற்கு உடனடியாக இடைநிறுத்த ஒப்புக்கொண்டதாக அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் எனும் சமூக வலைதள பதிவில் தெரிவித்தார்.

    தற்போதைக்கு ஒரு மாத காலத்திற்கு வரி விதிப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் மெக்சிகோ இடையில் ஒப்பந்தம் எட்டுவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    "எங்கள் உறவு மற்றும் இறையாண்மைக்கு மிகுந்த மரியாதையுடன் அதிபர் டிரம்புடன் நல்ல உரையாடல்" என்று ஷீன்பாம் கூறினார்.

    • மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் உடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது.
    • கார்டெல் வன்முறையை தூண்டும் மெக்சிகோவிற்குள் அமெரிக்க துப்பாக்கிகளை கடத்துவதற்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்கா உறுதியளித்தது.

    இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதும் மெக்சிகோ, கனடா மற்றும் சீன பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நடைமுறையை டொனால்டு டிரம்ப் அறிவித்தார். இவரது அறிவிப்பு உலகளவில் வர்த்தக போர் ஏற்படும் அச்சத்தை தூண்டியது.

    மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் உடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் அமெரிக்க - மெக்சிகோ எல்லைக்கு 10 ஆயிரம் துருப்புகளை அனுப்புவதாக மெக்சிகோ ஒப்புக் கொண்டது. இதைத் தொடர்ந்து தான் வரி விதிக்கும் நடைமுறையை ஒருமாத காலத்திற்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். இதே போல் கனடாவும் வரி விதிப்பை ஒத்திவைக்கும் ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்தது.

    இந்நிலையில் மெக்சிகோ வடக்கு எல்லைக்கு 10,000 துருப்புக்களை அனுப்பத் தொடங்கியது. தேசிய காவல்படை மற்றும் ராணுவ லாரிகள் டெக்சாஸின் சியுடாட் ஜுவரஸ் மற்றும் எல் பாசோ இடையேயான பகுதியில் ரோந்து சென்றன.

    சியுடாட் ஜுவாரெஸ் அருகே எல்லையில் முகமூடி அணிந்து ஆயுதம் ஏந்திய தேசிய காவல்படை துருப்புக்கள், தற்காலிக ஏணிகள் மற்றும் கயிறுகளை அகழிகளில் இருந்து அகற்றி லாரிகளில் ஏற்றினர். டிஜுவானாவுக்கு அருகிலுள்ள பிற எல்லைப் பகுதிகளிலும் ரோந்துகள் காணப்பட்டன.

    அமெரிக்க அதிபர் மெக்சிகோ மீது கடுமையான வரி விதிப்பை குறைந்தபட்சம் ஒரு மாதமாவது தாமதப்படுத்த முடிவு செய்ததை அடுத்து, மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம், எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் ஃபெண்டானில் கடத்தலை எதிர்த்துப் போராடவும் தேசிய காவல் படையை பயன்படுத்துவதாக உறுதியளித்தார்.

    கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இடம்பெயர்வு மற்றும் ஃபெண்டானில் ஓவர்டோஸ் குறிப்பிடத்தக்க சரிவை கண்டபோதிலும் அதிபர் டிரம்ப் எல்லை பகுதியில் அவசரநிலையை அறிவித்தார். இதற்கு பதிலடியாக, கார்டெல் வன்முறையை தூண்டும் மெக்சிகோவிற்குள் அமெரிக்க துப்பாக்கிகளை கடத்துவதற்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்கா உறுதியளித்தது.

    • அமெரிக்க எக்கு ஆலை திறன் பயன்பாடு குறைந்துள்ளது.
    • பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுசெய்ய கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டுள்ளது.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றது முதல் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலால் ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து அமெரிக்க மக்களை பாதுகாக்க அண்டை நாடுகளான மெக்சிகோ, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு கூடுதல் வரிகளை விதித்து வருகிறார்.

    இந்த நிலையில் அமெரிக்காவில் இறக்குமதியாகும் எக்கு, அலுமினியம் போன்றவற்றுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.

    கனடா, பிரேசில், மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து அமெரிக்கா கடந்த ஆண்டு அதிகமான எக்கையும் அலுமினியத்தையும் இறக்குமதி செய்தது. இதனால் அந்த நாடுகள் இறக்குமதி செய்யும் எக்கு அலுமினியம் பொருட்களுக்கு இந்த கூடுதல் வரி விதிப்பால் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

    மெக்சிகோ, கனடாவில் இருந்து வரும் பொருள்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்போவதாகச் அறிவித்திருந்த டிரம்ப் சில நாட்களுக்கு முன்பு அந்த அறிவிப்பை நிறுத்தி வைத்தார். தற்போது இந்த புதிய வரிகளை அவர் அறிவித்திருக்கிறார்.

    கூடுதல் வரி விதிப்பு குறித்து டிரம்ப் கூறும் போது, அவர்கள் எங்களிடம் வரி வசூலித்ததால், நாங்கள் அவர்களிடம் வரி வசூலிக்கிறோம் என்று தெரிவித்தார்.

    கடந்த 2016 முதல் 2020 வரையிலான தனது முதல் பதவிக்காலத்தில், டிரம்ப் எக்கு மீது 25 சதவீத வரியையும், அலுமினியத்தின் மீது 10 சதவீதத்தையும் விதித்தார். ஆனால் பின்னர் கனடா, மெக்சிகோ மற்றும் பிரேசில் உள்ளிட்ட பல வர்த்தக நாடுகளுக்கு வரியில்லா ஒதுக்கீட்டை அறிவித்தார்.

    முன்னாள் அதிபர் ஜோபைடன் தனது ஆட்சிக்காலத்தில் இந்த ஒதுக்கீட்டை இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நீட்டித்தார்.

    இதனால் சமீப ஆண்டுகளில் அமெரிக்க எக்கு ஆலை திறன் பயன்பாடு குறைந்துள்ளது. அரசின் பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுசெய்ய கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிபர் டிரம்பை சந்தித்த பிரதமர் மோடி பல்வேறு முக்கிய அம்சங்களை குறித்து விவாதித்தார்.
    • போர்பன் என்பது சோளத்திலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை அமெரிக்க விஸ்கி ஆகும்.

    பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் அரசுமுறை பயணமாக பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    கடந்த 10-ம் தேதி பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி தலைநகர் பாரீசில் நடந்த சர்வதேச செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் பங்கேற்றார். இதையடுத்து, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானையும் பிரதமர் மோடி சந்தித்தார். இச்சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

    பிரான்ஸ் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு 2 நாள் பயணமாக சென்றடைந்தார். அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதிபர் டிரம்பை சந்தித்த பிரதமர் மோடி பல்வேறு முக்கிய அம்சங்களை குறித்து விவாதித்தார். அதனை தொடர்ந்து பரஸ்பர வரிவிதிப்பு முறை அறிமுகம் படுத்தப்பட்டது.



    இந்தியா மீது பரஸ்பர வரிகளை விதிக்கும் திட்டத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததன் எதிரொலியால், போர்பன் விஸ்கி மீதான வரியை 150%-லிருந்து 100%-ஆகக் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது

    அமெரிக்க 'போர்பன் விஸ்கி' தயாரிப்பு நிறுவனங்களான JIM BEAM, FOUR ROSES, MAKER'S MARK 2 இந்த வரி குறைப்புகள் பயனளிக்கும் என கூறப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் மற்ற அனைத்து மதுபானங்களும் தொடர்ந்து 100 சதவீத இறக்குமதி வரியை கொண்டு இருக்கும்.

    போர்பன் விஸ்மி மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதால் மதுபான பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    போர்பன் என்பது சோளத்திலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை அமெரிக்க விஸ்கி ஆகும். இது அதன் லேசான இனிப்பு சுவைக்கு பெயர் பெற்றது.

    • இதை காரணம் காட்டியே சீன பொருட்களுக்கு டிரம்ப் இந்த வரிவிதிப்பை அறிவித்துள்ளார்.
    • 125 பில்லியன் கனேடிய டாலர்கள் மதிப்புள்ள பிற அமெரிக்க பொருட்களுக்கும் இன்னும் 21 நாட்களில் வரிவிதிப்பைக் கனடா அறிவிக்கும்.

    அமெரிக்கா வரிவிதிப்பு

    டொனால்டு டிரம்ப் உடைய ஆளுகையின் கீழ் உள்ள அமெரிக்கா பிற நாடுகள் மீது கடுமையான வரிக் கொள்கைகளைக் கொண்டு இயங்கி வருகிறது. நேற்று (மார்ச் 03) கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகள் மீது அமெரிக்கா இரண்டாம் கட்ட வரிவிதிப்பை அறிவித்தது.

    முன்னதாக கடந்த மாதம் புதிய வரிகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டாம் கட்டமாக நேற்று டொனால்டு டிரம்ப் தனது அறிவிப்பில் பல்வேறு சீன பொருட்களுக்கான வரியை 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தி அறிவித்தார்.

    பென்டன்டைல் போதைப்பொருள் தயாரிப்புக்கான மூலப்பொருட்களை உற்பத்தி செய்யும் மிகப்பெரிய சந்தையாக சீனா வளர்ந்துள்ளது. இந்த மூலப்பொருட்கள் மெக்சிகோவுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து பென்டனைல் போதைப்பொருளாக அமெரிக்காவுக்குள் கடத்தப்படுகிறது.

    இதை காரணம் காட்டியே சீன பொருட்களுக்கு டிரம்ப் இந்த வரிவிதிப்பை அறிவித்துள்ளார். மேலும் அண்டை நாடுகளான கனடா, மெக்சிகோ பொருட்களுக்கான வரியை 25 சதவீதமாக உயர்த்தினார். இந்த புதிய வரிவிதிப்பு இன்று (மார்ச் 04) முதல் அமலுக்கு வரும் என்றும் அவர் அறிவித்தார். இதன்மூலம் சர்வதேச அளவில் வர்த்தக போர் மூலம் அபாயம் நிலவுகிறது.

    சீனா பதிலடி

    இந்நிலையில் இன்று (மார்ச் 04) அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் விவசாய மற்றும் உணவுப் பொருட்களுக்கு சீனா புதிதாக 10% முதல் 15% வரி விதிப்பை அறிவித்துள்ளது.

    சோயாபீன், சோர்கம் (sorghum), பன்றிக்கறி, மாட்டுக்கறி, கடல்சார் பொருட்கள், பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் உள்ளிட்டவற்றின் இறக்குமதிக்கு சீனா 10 சதவீத வரியை அறிவித்துள்ளது.

     

     

    மேலும் கோழிகள், கோதுமை, மக்காச்சோளம், பருத்தி ஆகியவற்றின் இறக்குமதிக்கு 15 சதவீத வரியை சீனா விதித்துள்ளது. இந்த புதிய வரி விதிப்பு வரும் மார்ச் 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என சீன நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    கனடா - மெக்சிகோ எதிர்வினை 

    இதற்கிடையே அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு எதிரான நடவடிக்கையில் கனடா, மெக்சிகோவும் இறங்கியுள்ளது. நேற்று இதுதொடர்பாக பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்கா தனது போக்கை தொடர்ந்தால் 20 பில்லியன் கனேடிய டாலர்கள் மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்களுக்கு (செவ்வாய்க்கிழமை முதல்) 25 சதவீத வரி விதிக்கப்படும்.

    மேலும் 125 பில்லியன் கனேடிய டாலர்கள் மதிப்புள்ள பிற அமெரிக்க பொருட்களுக்கும் இன்னும் 21 நாட்களில் வரிவிதிப்பைக் கனடா அறிவிக்கும் என்று தெரிவித்தார்.

     

    அமெரிக்காவின் மிதமிஞ்சிய வரிவிதிப்பு தொடர்பாக நேற்று பேசிய மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம், எங்களிடம் பிளான் B, C, D உள்ளது என்று தெரிவித்தார். இதற்கிடையே அமெரிக்காவின் வரிவிதிப்பு செயல்பாடுகளுக்கு எதிராக சர்வதேச வர்த்தக கழகத்தில்(WTO) சீனா புகார் கொடுத்துள்ளது. 

    ×