search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இ-சேவை"

    • கல்லூரி வளாகத்திலேயே முதல் பட்டதாரி, வருமானம், இருப்பிட சான்று, பான்கார்டு சேவைகளை பெற விண்ணப்பிக்கலாம்
    • கலெக்டர் அலுவலக கண்காணிப்பு அலுவலகம் மூலம் கல்விக்கடன் வழங்கும் பணியை மேற்பார்வை செய்ய நடவடிக்கை

    கோவை,

    கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாணவ- மாணவிகள் உயர்கல்வி பயில்வதற்கு கல்வி கடன் வழங்கும் முகாம்கள் கோவை மாவட்டத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த மாதம் 16-ந் தேதி பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்திலும், 18-ந் தேதி ஈச்சனாரியில் உள்ள கற்பகம் பல்கலைக் கழகத்திலும் கல்வி கடன் முகாம்கள் நடந்து ஆவணங்கள் முறையாக சரிபார்க்கப்பட்டு பல மாணவர்களுக்கு கல்வி கடன்கள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த முகாமில் கலந்து பயன்பெறாத மாணவர்களுக்கும் மற்றும் பொறியியல் கல்லூரியின் கலந்தாய்வு செப்டம்பர் மாத முதல் வாரத்தில் நிறைவடைந்து மாணவர்கள் கல்லூரியில் சேர உள்ளதால் பொறியியல் கல்வி பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு செப்டம்பர் மாதம் மூன்றாம் மற்றும் நான்காம் வாரத்தில் கல்வி கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

    மேலும் வருகிற 22-ந் தேதி அன்று குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி, 26-ந் தேதி அன்று பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, 29-ந் தேதி ஈச்சனாரியில் உள்ள கற்பகம் உயர்கல்வி அகாடமி ஆகிய இடங்களில் கலை மற்றும் அறிவியல் துறை மாணவ- மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கு கல்வி கடன் வழங்கும் முகாம்கள் நடைபெற உள்ளன.

    இந்த முகாமில் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கும் பொருட்டு மாணவர்கள் பயிலும் கல்லூரி வளாகத்திலேயே முதல் பட்டதாரி, வருமானம், இருப்பிட சான்றுகள் மற்றும் பான்கார்டு ஆகிய சேவைகளை பெற நாளை (4-ந் தேதி) முதல் 20-ந் தேதி வரை இ-சேவை மையங்கள் கல்லூரி வளாகத்திலேயே அமைக்கப்பட்டு விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    கல்விக்கடன் பெற தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கடன் வழங்கும் பொருட்டு மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் உறுப்பினர் செயலராக கொண்டு 10 அலுவலர்கள் கொண்ட முதன்மை குழுவினை அமைத்து இப்பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலக தரைத்தளம் அறை எண்-16-ல் தனியாக கண்காணிப்பு அலுவலகம் அமைக்கப்பட்டு கல்விக்கடன் வழங்கும் பணியை மேற்பார்வை செய்யப்பட்டு வருகிறது.

    எனவே உயர்கல்வி பயிலும் மாணவ-மாணவிகள் அனைவரும் நாளை முதல் 20-ந் தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் கல்நது கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் போலி இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன.
    • மேலும் கட்டண தொகை விண்ணப்ப எண் விவரங் கள் அடங்கிய ஒப்புகை சீட் டும் வழங்குவதில்லை.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டத் தில் உள்ள தாலுகாக்கள், யூனியன் அலுவலகம், நகராட்சி, பேருராட்சி உள்பட பல்வேறு பகுதிகளில் பொது இ-சேவை மையம், தமிழ்நாடு அரசு கேபில் டி.வி. கார்ப்பரேசன், கூட்டுறவு கடன் சங்கம், மகளிர் திட்டம் உள்பட சுமார் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மையங்கள் செயல்படுகிறது.

    இந்த மையங்கள் மூலமாக வருமானச் சான்று, இருப்பிட சான்று, சாதி, முதல் பட்டாதாரி, விதவை சான்று உள்பட அனைத்து சான்றுகளுக்காக விண்ணப்பிக்க பொதுமக்கள் தங்கள் அருகாமையில் உள்ள இ-சேவை மையங்களுக்கு செல்கின்றனர்.

    இம்மையங்களில் அரசு நிர்ணயித்துள்ள. பெரும் பாலன சேவைகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டண மாக ரூ.60 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    ஆனால் அபிராமம், கமுதி, கடலாடி சாயல்குடி பகுதியில் உள்ள பெரும் பாலான இடங்களில் கம்யூட் டர் சென்டர், ஜெராக்ஸ் கடை வைத்துள்ள பலர் உரிய அங்கிகாரம் பெறாமலேயே இ-சேவை மையம் செயல்படுத்த தொடங்கி விட்டனர். இதனால் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    அரசு துறை சான்று களுக்கு விண்ணப்பிக்க ஆதார் விவரங்களுடன் பொதுமக்கள் கணக்கு எண் உருவாக்க வேண்டியது அவசியமாகிறது. எவ்வித பயிற்ச்சிகளும் இல்லாததல் அங்கீகாரம் பெறாத இ-சேவை மையத்தினர். கணக்கு எண் உருவாக்க தகவல் களை தவறாக பயன் படுத்துகின்றனர். அதன்பின் குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் ஒருவரின் ஆதார் எண்ணை பெற்று மீண்டும் கணக்கு எண் உருவாக்குகின்றனர்.

    ஒருவருக்கு உருவாக்கப் பட்ட இந்த எண்ணை பயன்படுத்தி தங்கள் மையத்தை நாடிவரும் வெவ்வேறு நபர் களுக்கு சான்றுபெற விண்ணப்பிக்கின்றனர். மேலும் கட்டண தொகை விண்ணப்ப எண் விவரங் கள் அடங்கிய ஒப்புகை சீட் டும் வழங்குவதில்லை. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சமுக ஆர்வலரிடம் கேட்டபோது:-

    இந்த பகுதி கிராமங்கள் நிறைந்த பகுதி ஆதலால் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இ-சேவை மையம் எது என்று தெரியாமல் கம்யூட்டர் கடை வைத் திருக்கும் கடைக்கு செல்வதால் அதை சாதகமாக பயன்படுத்தி கடை உரிமை யாளர்கள் சான்றிதழுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதுடன் சான்றிதழும் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். மேலும் காலதாமதமும் ஏற்படுகிறது. இந்த நிலையை போக்க சமந்தப்பட்ட துறையினர் காண்காணிக்கவேண்டும் என்றார்.

    • ஆசிரியர் தகுதி தேர்வுதாள் மற்றும் 2-ம் சான்றிதழ்களின் மறு பிரதி தேர்வு வாரியம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
    • ரூ.160-யை இ-சேவை மையத்தில் செலுத்தி மனுபிரதி சான்றிழ் பெற்றுக் கொள்ள வேண்டும்.

    சென்னை:

    ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழை இ-சேவை மையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆசிரியர் தகுதித் தேர்வு 2012, 2013, 2017 மற்றும் 2019 ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வுதாள் மற்றும் 2-ம் சான்றிதழ்களின் மறு பிரதி தேர்வு வாரியம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

    மேற்படி சான்றிதழ்கள் சார்ந்த தேர்வர்களுக்கு இணையதளத்தின் அரசின் இ-சேவை மையம் வழியாக வழங்க இருப்பதால் முதன்மை கல்வி அலுவலரின் வழியாக ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பப்படும் மறுபிரதி கோரும் விண்ணப்பங்களை இனி வரும் காலங்களில் நேற்று (15-ந் தேதி) முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்ப வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

    மேற்கண்ட மறுபிரதி சான்றிதழ்கள் பெறுவதற்கு இ-சேவை மையத்தை அணுக வேண்டும். விண்ணப்பதாரர்களிடம் மனுபிரதி கட்டணத் தொகை ரூ.100 (ஆசிரியர் தேர்வு வாரிய வங்கி கணக்கு) மற்றும் இ-சேவை நிறுவனத்திற்கான சேவை கட்டணத் தொகை ரூ.60 சேர்த்து மொத்த தொகை ரூ.160-யை இ-சேவை மையத்தில் செலுத்தி மனுபிரதி சான்றிழ் பெற்றுக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரையில் இ-சேவை மையத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்
    • அனைத்து சேவைகளும் இலவசமாக வழங்கப்பட உள்ளன.

    மதுரை

    மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ அலுவலகத்தில் இ-சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், கிராமப்புற வறுமை ஒழிப்பு குழுக்கள், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், மீன்வளத் துறை, கிராமப்புற தொழில் முனைவோர் மற்றும் கண்டோன்மெண்ட் போர்டு ஆகியவை மூலம் பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே இ-சேவை மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

    தமிழகத்தின் அனைத்து எம்.எல்.ஏ. அலுவலகங்களிலும் இ-சேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஏற்பாட்டில் ஏற்கனவே இ-சேவை மையம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த மையத்துக்கு மேஜை, கணினி, பயனர் எண், கடவுச்சொல் ஆகியவை அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ளன. இதில் அனைத்து சேவைகளும் தொகுதி மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளன.

    • இ-சேவை மையம் திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • இத்திட்டத்தை பற்றிய கூடுதல் தகவல் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். tnesevai.tn.gov.in, tnega.tn.gov.இந்த

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் அனைவருக்கும் இ-சேவை மையம் திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இணைய முறையில் மட்டுமே விண்ணப்பங்களை பதிவு செய்ய இயலும். இத்திட்டத்தை பற்றிய கூடுதல் தகவல் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். tnesevai.tn.gov.in, tnega.tn.gov.in இணையதள முகவரிகளை பயன்படுத்தலாம்.

    ஏப்ரல் 14-ந் தேதி இரவு 8 மணி வரை மட்டுமே விண்ணப்பங்களை பதிவு செய்ய இயலும். கிராமப்புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்பம் கட்டணம் ரூ.3 ஆயிரம் மற்றும் நகர புறத்துக்கான கட்டணம் ரூ.6 ஆயிரம் ஆகும்.

    விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும். மேலும் விண்ணப்பதாரருக்கு உரிய பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் ஆகியவை விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் வழங்கப்படும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • கூடுதல் கட்டணம் பெறும் தனியார் இ-சேவை மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
    • மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மின் ஆளுமை முகமையின் மூலம் 413 அரசு இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது.

    இதில் மதுரை கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், கூட்டுறவு சங்கங்கள், மகளிர் திட்டம், கிராம தொழில் முனைவோர் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற இ-சேவை மையங்களுக்கு மட்டுமே அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் சான்றுகள் விண்ணப்பிக்க அரசு நிர்ணயித்த கட்டணத்தினை தவிர கூடுதல் கட்டணம் பெறும் இ-சேவை மையங்கள் பற்றிய புகார்களுக்கு tnesevaihelpdesk@tb.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண் 1100 மற்றும் 1800 425 1333 மூலமாகவோ புகார்களை தெரிவிக்கலாம்.

    பொதுமக்கள் சான்றிதழ்கள் பெற அரசுக்கு விண்ணப்பிக்க உருவாக்கப்பட்டுள்ள பயனாளர் நுழைவு வசதியினை தனியார் கணினி மையங்கள் மற்றும் ஜெராக்ஸ் மையங்கள் வியாபார நோக்கில் பயன்படுத்துவதாக தெரிய வருகிறது.

    மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசு அனுமதி பெறாமல் இ-சேவை பெயரில் தனியார் கணினி மையங்கள் மற்றும் ஜெராக்ஸ் மையங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மட்டும் உருவாக்கிய பயனாளர் நுழைவினை பயன்படுத்தி வருவாய் துறை சான்றுகள், முதியோர் உதவி தொகை போன்ற சான்றுகளை விண்ணப்பம் செய்து சான்றுகளில் எழுத்து பிழை, தவறான ஆவணங்களை இணைத்தல் மற்றும் இடைதரகர்கள் மூலம் கூடுதலாக கட்டணம் பெறுதல் போன்ற பல முறைகேடுகள் நடைபெறுவது என பல்வேறு தரப்பில் புகார்கள் வருகின்றன.

    தனியார் கணினி மையங்கள் பயனாளர் நுழைவினை பயன்படுத்தி பொதுமக்களிடம் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பித்தாலோ, இ-சேவை என்ற பெயர் பலகை மற்றும் சான்றுகள் சம்பந்தமான விளம்பர பலகைகள் வைத்தாலோ வருவாய் மற்றும் காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    ×