search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லவ் ஜிகாத்"

    • பா.ஜ.க. ஆட்சி செய்யும் உ.பி.யில் லவ் ஜிகாத்திற்கு எதிராக சட்டம் உள்ளது.
    • அசாம் மாநிலத்தில் லவ் ஜிகாத்திற்கு எதிராக சட்டம் கொண்டு வரப்படவுள்ளது.

    லவ் ஜிகாத் என்ற பெயரில் இந்து பெண்கள் திருமணத்தின் மூலம் மதம் மாற்றப்படுவதாக பாஜகவினர் பல ஆண்டுகளாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இதனையொட்டி பா.ஜ.க. ஆட்சி புரியும் உத்தரபிரதேசத்தில் லவ் ஜிகாத்திற்கு எதிராக யோகி அரசு சட்டம் இயற்றியுள்ளது. இந்நிலையில், பாஜக ஆட்சி செய்யும் அசாம் மாநிலத்தில் லவ் ஜிகாத் குற்றத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் சட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்துவோம் என்று அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், " பேஸ்புக்கில் இந்து பெயர்களை வைத்துக்கொண்டு இந்து பெண்களை கவர்ந்து சிலர் திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணத்திற்கு பிறகு தான் அந்த பையன் இந்து இல்லை என்பது அந்த பெண்ணிற்கு தெரியவருகிறது. இப்படி பாதிக்கப்படும் பெண்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    லவ் ஜிகாத் குறித்த பாஜக ஆளும் மாநில அரசுகளின் இந்த முடிவுகள், மக்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை பறிக்கிறது என்றும் ஜனநாயகத்துக்கு விரோதமானது என்றும் கண்டனக் குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. 

    • 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை 20 ஆண்டுகளாக உயர்த்தப்படும்.
    • லவ் ஜிகாத் குறித்து யார் புகார் அளித்தலும் நடவடிக்கை எடுக்க முடியும்

    லவ் ஜிகாத் 

    இனம் மதம் மொழி கடந்ததுதான் காதல் என்ற அடிப்படையில் உலகம் இயங்கி வருகிறது. இதில் இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட பல்வேறு மதத்தைப் பின்பற்றும் மக்கள் வாழும் ஒரு ஜனநாயக நாட்டில் காதலுக்கு தடையாக பெற்றோர், குடும்ப அமைப்புகள் இருந்து வந்த காலம் மாறி அரசாங்கமே தடை விதிக்கும் காலம் வந்துவிட்டது என்ற கருத்து நாளுக்குநாள் நடந்து வரும் மாற்றங்களால் உறுதிப்படத் தொடங்கியுள்ளது.

    குறிப்பாக இந்து- இஸ்லாம் மதங்களைச் சேர்ந்த காதல் ஜோடிகள் திருமணம் செய்து கொள்வதற்கான சுதந்திரம் கேள்விக்குறியாக மாறியுள்ளதாக ஜனநாயக விரும்பிகள் கருதுகின்றனர். இந்து மதப் பெண்களை இஸ்லாமிய மத ஆண்கள் காதலித்து மதமாற்றம் செய்து திருமணம் செய்துகொள்வதாகக் குற்றம் சாட்டி தீவிர வலதுசாரி இந்து அமைப்புகள் முன்வைக்கும் பதம் 'லவ் ஜிகாத்'.

     

    ஆயுள் தண்டனை 

    அரசியல் களத்திலும் சமீக காலங்களாக இந்த பதத்தின் உபயோகம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் யோகி அதித்தநாத் தலைமையிலான பாஜக அரசு, லவ் ஜிகாத்திற்கு எதிராக 2021 ஆம் ஆண்டு சட்டம் இயற்றியது.

    இந்த சட்டப்படி, ஒருவரை திட்டமிட்டு காதலித்து, பின் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்து திருமணம் செய்தால், அந்த திருமணம் செல்லாது என்றும் அவ்வாறு திருமணம் செய்தவரை ஜாமீனில் வரமுடியாத சட்டப்பிரிவின் கீழ் கைது செய்து 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் 50,000 ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.

     

    தற்போது அந்த சட்டத்தில் திருத்தும் கொண்டுவந்துள்ள உ.பி அரசு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை 20 ஆண்டுகளாக உயர்த்தப்படும். அபராத தொகை 50,000 ரூபாயிலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளது. முன்னர் பெண்ணின் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோர் அளிக்கும் புகாரின் அடிப்படையில் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்று இருந்த நிலையில் தற்போது அதுபேன்ற திருமணங்கள் குறித்து யார் புகார் அளித்தலும் நடவடிக்கை எடுக்க முடியும் சட்டத்தில் திருத்தும் செய்யப்பட்டுள்ளது

    அசாம் 

    அசாமில் ஆட்சியில்  உள்ள பாஜக அரசு உ.பியை போன்று லவ் ஜிகாத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்க உறுதி பூண்டுள்ளது.

    இதுதொடர்பாக பாஜக செயற்குழு கூட்டத்தில் பேசிய அசாம் முதல்வர் ஹிமந்தா சர்மா, தேர்தலின்போதே லவ் ஜிகாத் குறித்து நிறைய பேசினோம், லவ் ஜிகாத் குற்றத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் சட்டதை விரைவில் அறிமுகப்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளார். மேலும் அசாம் மாநில அரசு பணிகளில் அசாமில் பிறந்தவர்கள் மட்டுமே சேர முடியும் என்ற விதியையும் கொண்டுவருவோம் என்று தெரிவித்தார்.

    லவ் ஜிகாத் குறித்த பாஜக ஆளும் மாநில அரசுகளின் இந்த முடிவுகள், மக்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை பறிக்கிறது என்றும் ஜனநாயகத்துக்கு விரோதமானது என்றும் கண்டனக் குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. 

    • லவ் ஜிகாத் சட்டத்தில் திருத்தம் செய்ய உத்தரபிரதேச பாஜக முடிவு செய்துள்ளது.
    • லவ் ஜிகாத்' குற்றத்திற்கான அபராத தொகை 5 லட்சமாக உயர்த்தப்படும்.

    லவ் ஜிகாத் என்ற பெயரில் இந்து பெண்கள் திருமணத்தின் மூலம் மதம் மாற்றப்படுவதாக பாஜகவினர் பல ஆண்டுகளாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இதற்கிடையே, பா.ஜ.க. ஆட்சி புரியும் உத்தரபிரதேசத்தில் லவ் ஜிகாத்திற்கு எதிராக 2021 ஆம் ஆண்டு யோகி அரசு சட்டம் இயற்றியது.

    இந்த சட்டப்படி, ஒருவரை திட்டமிட்டு காதலித்து, பின் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்து திருமணம் செய்தால், அந்த திருமணம் செல்லாது என்றும் அவ்வாறு திருமணம் செய்தவரை ஜாமீனில் வரமுடியாத சட்டப்பிரிவின் கீழ் கைது செய்து 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் 50,000 ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.

    இந்நிலையில் லவ் ஜிகாத் சட்டத்தில் திருத்தம் செய்ய உத்தரபிரதேச பாஜக முடிவு செய்துள்ளது.

    உத்தரபிரதேசம் மதமாற்றதடைச்சட்டம் 2024 என்று முன்மொழியப்படவுள்ள இந்த சட்ட திருத்தத்தை சட்டமன்ற விவகாரத்துறை அமைச்சர் சுரேஷ் கன்னா உத்தரபிரதேச சட்டசபையில் இன்று அறிமுகம் வைத்தார்.

    இந்த புதிய சட்டத்திருத்தத்தின்படி 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை 20 ஆண்டுகளாக உயர்த்தப்படும். அபராத தொகை 50,000 ரூபாயில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்படும்.

    லவ் ஜிகாத் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோர் புகார் கொடுத்தால் தான் வழக்குப்பதிவு செய்யப்படும். தற்போது அந்த வரம்பை தளர்த்தி யார் புகார் கொடுத்தாலும் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று இந்த சட்ட திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஒவ்வாரு நகரத்திலும் இது போன்ற அப்தாப்கள் பிறப்பார்கள்.
    • சக்தி வாய்ந்த தலைவர் இல்லை என்றால், எங்கள் சமூகத்தை பாதுகாக்க முடியாது.

    கட்ச்:

    குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரவு அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தனசுரா மற்றும் கட்ச் பகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில்  அவர் பங்கேற்று பேசினார்.

    அப்போது டெல்லியில் லிவிங் டுகெதர் முறையில் குடும்பம் நடத்தி வந்த ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண், காதலன் அப்தாப்பால் 35 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தை அவர் எழுப்பினார்.

    அப்தாப் மும்பையில் இருந்து ஷ்ரத்தா என்ற சகோதரியை வரவழைத்து லவ் ஜிகாத் என்ற பெயரில் 35 துண்டுகளாக வெட்டினார். மேலும் அவர் அந்த உடலை குளிர் சாதன பெட்டியில் வைத்துள்ளார். உடல் பாகங்கள் குளிர் சாதன பெட்டியில் இருக்கும்போது, ​​​​வீட்டிற்கு மற்றொரு பெண்ணை அழைத்து வந்து டேட்டிங் செய்யத் தொடங்கினார். 

    ஏன் அவர் இந்து பெண்களை மட்டும் குறி வைத்து காதலில் வீழ்த்துகிறார் என போலீசார் விசாரித்தனர். ​​அவர்கள் உணர்ச்சி வசப்பட்டவர்கள் என்பதால் அப்படி செய்வதாக அப்தாப் கூறியுள்ளார். இதனால்தான் லவ் ஜிகாத்க்கு எதிராக நாட்டிற்கு கடுமையான சட்டம் தேவை. மீண்டும் இது போன்ற சம்பங்கள்  நிகழாமல் இருக்க, பிரதமர் நரேந்திர மோடி போன்ற வலிமையான தலைவர் ஆட்சியில் நீடிப்பது முக்கியம்.

    நாட்டின் ஒவ்வாரு நகரத்திலும் இது போன்ற அப்தாப்கள் பிறப்பார்கள். நாட்டிற்கு சக்தி வாய்ந்த தலைவர் இல்லை என்றால், எங்கள் சமூகத்தை எங்களால் பாதுகாக்க முடியாது. அதனால் 2024ம் ஆண்டு தேர்தலில் நரேந்திர மோடியை மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராக்குவது மிகவும் முக்கியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×