search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chief Minister’s Cup"

    • 6 மாவட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்கும் முதல்வர் கோப்பைக்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நாளை தொடங்குகிறது.
    • இந்த தகவல் மதுரை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    மதுரை

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்வர் கேப்பைக்கான மதுரை மண்டல அளவிலான பூப்பந்து, பளுதூக்குதல் போட்டிகள் மதுரை டாக்டர் எம்.ஜி.ஆர் விளையா ட்டரங்கத்தில் நாளை(27-ந்தேதி) தொடங்குகிறது. மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி விளை யாட்டு வீரர்-வீராங்க னைகள் பங்கேற்கும் வகையில் இந்த போட்டிகள் நடைபெறும்.

    பள்ளிகளுக்கான பூப்பந்தாட்ட போட்டிகள் நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய 2 நாட்களும், கல்லூரி களுக்கான போட்டிகள் மார்ச் 1,2 ஆகிய தேதிகளிலும் நடைபெறும். பள்ளிகளுக்கான பளு தூக்குதல் போட்டிகள் மார்ச் 11-ந்தேதியும், கல்லூரிகளுக்கான போட்டிகள் மார்ச் 12-ந்தேதியும் நடைபெறும்.பள்ளிகளுக்கான கடற்கரை கையுந்துபந்து போட்டி நாளை மறுநாள்(28-ந்தேதி) மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளிலும், கல்லூரி களுக்கான போட்டி மார்ச் 2, 3 ஆகிய தேதிகளிலும் ராமநாதபுரம் மாவட்டம் அரியமான் கடற்கரையில் நடைபெறும்.

    போட்டியில் பங்கேற் பவர்களுக்கு பயணப்படி, தினப்படி வழங்கப்படும். முதலிடம் பெறுவோருக்கு தலா ரூ.3ஆயிரமும், 2-ம், 3-ம் இடம் பெறுவோருக்கு முறையே ரூ. 2 ஆயிரம், ரூ. 1,000 வழங்கப்படும். மாணவ-மாணவிகள் பள்ளிகளிலிருந்து பெற்ற சான்று, ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.

    இந்த தகவல் மதுரை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலக செய்திக்கு றிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • விருதுநகர் மாவட்ட அளவில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • 362 விளையாட்டு வீரர்கள் இணையதளம் மூலம் பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானம் மற்றும் சத்திரிய பெண்கள் மேல்நி லைப்பள்ளியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.

    விருதுநகர் மாவட்டத்தில் இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக கடந்த ஜனவரி 6-ந் தேதி தொடங்கி, ஜனவரி 29-ந் தேதி வரை 17 ஆயிரத்து 362 விளையாட்டு வீரர்கள் இணையதளம் மூலம் பதிவு செய்துள்ளனர். இதில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கபடி போட்டிகளை விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்திலும், அதைதொடர்ந்து சத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பள்ளி மாணவி களுக்கான கையுந்து பந்து போட்டியையும் கலெக்டர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    விளையாட்டின் முக்கியத்துவம், விளையாடுவதனால் என்ன பயன்? என்பது குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்து, விளையாட்டின் மூலம் நல்லொழுக்கத்தை கற்றுக்கொள்ள முடியும். இதில் வெற்றி, தோல்வி என்பது முக்கியமில்லை.

    இதில் பங்கேற்பதே முதல் வெற்றி என்றும், இந்த விளையாட்டில் நல்ல முறையில் பங்கேற்று மாநில அளவில் தேர்வாக வாழ்த்துக்களை கலெக்டர் தெரிவித்தார்.

    கபடி போட்டிகளில் 42 பள்ளி மாணவர் அணிகளும், பள்ளி மாணவிகளுக்கான வாலிபால் போட்டிகளில் 12 அணிகளும் பங்கேற்றன. பள்ளி மாணவ-மாணவிகள், கல்லூரி மாணவ-மாணவி கள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள், மாற்றுத்தி றனாளிகள் பங்கேற்கும் கபடி, சிலம்பம், தடகளம், இறகுபந்து, கையுந்து பந்து, கூடைபந்து, கால்பந்து, வளைகோல்பந்து, மேஜைப்பந்து, நீச்சல், கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது.இந்த போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.3 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.2ஆயிரம், 3-ம் பரிசு ரூ.1000 வழங்கப்பட உள்ளது. இதில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதிபெறுவார்கள்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சிவக்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் குமார மணிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கையில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் 7-ந் தேதி முதல் தொடங்குகிறது.
    • கையுந்து பந்து, மேசைப்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலானவிளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

    வருகிற 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை தடகள விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கபடி, ஆக்கி, கூடைப்பந்து, கையுந்து பந்து, மேசைப்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மாணவிகளுக்கு மட்டும் மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும், பள்ளி மாணவ மாணவிகளுக்கு இறகுப்பந்து விளையாட்டுப் போட்டிகள் சிவகங்கை போஸ் நகரில் உள்ள பேட்மிட்டன் அகாடமியிலும் நடைபெறும்.

    8-ந் தேதி காலை கபடி, ஆக்கி, கூடைப்பந்து. கையுந்து பந்து, மேசைப்பந்து ஆகியவிளையாட்டுப் போட்டிகள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும். 9-ந் தேதி கால்பந்து விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மாணவிகளுக்கு மட்டும் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும். 10-ந் தேதி காலை நீச்சல் விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும், தடகள விளையாட்டுப் போட்டிகள் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும், கபடி, ஆக்கி,கூடைப்பந்து, கையுந்து பந்து, மேசைப்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் கல்லூரி மாணவர்களுக்கும் மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும், பள்ளி, கல்லூரி மற்றும் பொதுப்பிரிவினர் ஆண்களுக்கு மட்டும் சிலம்ப விளையாட்டுப் போட்டிகள் காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியிலும், இறகுப்பந்து விளையாட்டுப் போட்டிகள் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சிவகங்கை பேட்மிட்டன் அகாடமியிலும் நடைபெற உள்ளன.

    11-ந் தேதி காலை நீச்சல் விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கும், கபடி, ஆக்கி, கூடைப்பந்து, கையுந்து பந்து, மேசைப்பந்து, கால்பந்து விளையாட்டுப்போட்டிகள் கல்லூரி மாணவிகளுக்கு மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும், சிலம்ப விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லூரி மற்றும் பொதுப்பிரிவினர் பெண்களுக்கு மட்டும் காரைக்குடி செட்டிநாடு பப்ளிக்பள்ளியிலும் நடைபெற உள்ளது.

    13-ந் தேதி காலை கால்பந்து விளையாட்டுப் போட்டிகள் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும், கிரிக்கெட் போட்டிகள் பொதுப்பிரிவினர் ஆண்களுக்கு மட்டும் காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரியிலும் நடைபெற உள்ளது. 14-ந் தேதி காலை கிரிக்கெட் போட்டிகள் பொதுப்பிரிவினர் பெண்களுக்கு மட்டும் காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரியிலும் நடைபெற உள்ளது. 15-ந் தேதி காலை கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் காரைக்குடிஅழகப்பா உடற்கல்வியியல் கல்லூரியிலும், இறகுப்பந்து போட்டிகள் பொதுப்பிரிவினர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சிவகங்கை பேட்மிட்டன் அகாடமியிலும், பொதுப்பிரிவினர்ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கபடி, கையுந்து பந்து, தடகளம் விளையாட்டுப் போட்டிகள் சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும் நடைபெற உள்ளது.

    16-ந் தேதி காலை அரசு ஊழியர்கள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இறகுப்பந்து, தடகளம்,கையுந்து பந்து, கபடி, செஸ் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும்,17-ந் தேதி காலை மாற்றுத்திறனாளிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இறகுப்பந்து, தடகளம்,எறிபந்து, கபடி, adopted volley ball ஆகிய போட்டிகள் சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும் நடைபெற உள்ளது. 20-ந் தேதி காலை பள்ளி மாணவர்களுக்கு மட்டும் கிரிக்கெட் போட்டிகள் காரைக்குடிஅழகப்பா உடற்கல்வியியல் கல்லூரியிலும், 21-ந் தேதி காலை பள்ளி மாணவிகளுக்கு மட்டும் கிரிக்கெட் போட்டிகள் காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரியிலும் நடைபெற உள்ளது.

    டென்னிஸ் போட்டிகள் 23-ந் தேதி காலை மாணவர்களுக்கும், 24-ந் தேதி காலை மாணவிகளுக்கும், காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. பளு தூக்கும் போட்டிகள் 23-ந் தேதி காலை மாணவர்களுக்கும், 24-ந் தேதி காலை மாணவிகளுக்கும், காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரியில் நடைபெறும்.

    கடற்கரை கையுந்து பந்து போட்டிகள் 13-ந் தேதி ராமநாதபுரம் அரியமான் கடற்கரையில் நடைபெறும். இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்-வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொள்ள வரும்போது, ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், Bonafied சான்றிதழ், அடையாள அட்டை மற்றும் வங்கிக்கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் இன்று மதுரையில் தொடங்கியது.
    • ஆதார் கார்டு, ஆன்லைன் பதிவு சான்றிதழ் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்துடன் ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு வந்திருந்தனர்.

    மதுரை

    தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டிகள், மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதனை கலெக்டர் அனீஷ் சேகர் தொடங்கி வைத்தார். இதில் மேயர் இந்திராணி, மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜீத் சிங், துணை மேயர் நாகராஜன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். போட்டிகளில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் வாழ்த்து தெரிவித்தார்.

    முதல்நாளான இன்று காலை 12 வயது முதல் 19 வயதுக்கு உட்பட்ட இரு பாலருக்கான கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், கைப்பந்து, கால்பந்து ஆகிய போட்டிகள் நடந்தன.

    திருப்பாலை பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள், பிப்ரவரி 1,2-ம் தேதி நடைபெறுகிறது. கல்லூரி மாணவ- மாணவி களுக்கான கிரிக்கெட் போட்டி, நாகமலை புதுக்கோட்டையில் உள்ள பல்கலைக்கழக மைதானத்தில் 2,3-ம் தேதிகளில் நடக்க உள்ளது.

    கபடி, சிலம்பம், கூடைப் பந்து, வளைகோல்பந்து, நீச்சல், கைப்பந்து ஆகிய போட்டிகள் 4,5-ந் தேதி களிலும், கால்பந்து 5,6-ந் தேதிகளிலும், தடகளம் 7-ந் தேதியும் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடக்க உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ - மாணவி களுக்கான இறகு பந்து, மேசைப்பந்து ஆகியவை 6,7-ந் தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

    மாற்றுத்திறனாளி களுக்கான தடகளப்போட்டி 6-ம் தேதியும், இறகுப்பந்து, கபடி எறிபந்து, கைப்பந்து ஆகியவை 7-ம் தேதியும் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடக்க உள்ளது.அரசு ஊழியர் களுக்கான கைப்பந்து, இறகுப்பந்து, கபடி, செஸ் போட்டிகள் 8,9-ந் தேதிகளிலும், தடகளம் 11-ந் தேதியும் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடத்தப்பட உள்ளது. 15 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட பொது பிரிவினருக்கான கபடி, சிலம்பம், தடகளம், இறகுப்பந்து, கைப்பந்து ஆகிய போட்டிகள் 11,12-ந் தேதிகளில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடக்க உள்ளது. அதே தேதிகளில் திருப்பாலை பள்ளிக்கூட மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடத்தப்படும்.

    தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டி களில் ஆன்லைன் பதிவு பெற்றவர்கள் மட்டுமே பங்கேற்க இயலும் என தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன்படி விளை யாட்டு வீரர் வீராங்கனை கள் இன்று காலை முதலே ஆதார் கார்டு, ஆன்லைன் பதிவு சான்றிதழ் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்துடன் ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு வந்திருந்தனர்.

    மதுரை மாவட்ட விளையாட்டு போட்டிகளில் முதலிடம் பெற்றவருக்கு 3 ஆயிரம் ரூபாயும், 2-ம் இடம் பெற்றவருக்கு, ரூ. 2 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் இடம் பெற்றவருக்கு ஆயிரம் ரூபாயும் பரிசாக வழங்கப்படுகிறது. இந்த தொகை அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

    மதுரை மாவட்ட விளை யாட்டு போட்டிகளில் முதலிடம் பெற்றவர்கள் மாநில விளையாட்டு போட்டிகளில் அரசு சார்பில் பங்கேற்பார்கள்.

    • முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது.
    • இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளை யாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. பொதுப் பிரிவு, பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என மொத்தம் 50 வகையான போட்டிகள் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடத்தப்பட உள்ளது.

    போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் விளை யாட்டு வீரர், வீராங்கனைகள் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள www.sdat.tn.gov.in முகவரியில் குழு மற்றும் தனி நபர் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பொதுப்பிரிவு 15-35 வயது ஆண்கள், பெண்களுக்கு கபடி, சிலம்பம், தடகளம், இறகுப்பந்து, கையுந்து பந்து போட்டிகள் நடைபெறும்.

    பள்ளி மாணவ, மாணவிகள் 12-19 வயது கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல் பந்து, நீச்சல், கையுந்து பந்து, மேசைப்பந்து போட்டிகள் நடைபெறும். மண்டல அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 12-19 வயது டென்னிஸ், பளு தூக்குதல், கடற்கரை கையுந்துபந்து போட்டிகள் நடைபெறும்.

    கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 17-25 வயது கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல் பந்து, நீச்சல், கையுந்து பந்து, மேசைப்பந்து போட்டிகள் நடைபெறும். மண்டல அளவிலான கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 17-25 வயது டென்னிஸ், பளு தூக்குதல், கடற்கரை கையுந்துபந்து போட்டிகள் நடைபெறும்.

    மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை. ஆண், பெண் மாற்றுத்திறனாளிகளுக்கு 50 மீட்டர் ஓட்டம், பேட் மின்டன், பார்வைத்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டர் ஓட்டம், கைப்பந்து போட்டி நடைபெறும். மனவளர்ச்சி குன்றி யோருக்கு 100 மீட்டர் ஓட்டம், எறிபந்து, செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டர் ஓட்டம், கபடி போட்டி நடைபெறும்.

    அரசு ஊழியர்களுக்கு வயது வரம்பு இல்லை. ஆண், பெண்களுக்கு கபடி, தடகளம், இறகுப்பந்து, கையுந்து பந்து, செஸ், பளுதூக்குதல், கடற்கரை கையுந்து பந்து மற்றும் டென்னிஸ் விளையாட்டுகள் நடைபெறும். மாவட்ட, மண்டல அளவில் வெற்றி பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள். போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.2 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.1000 வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×