search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில் சேவை மாற்றம்"

    • லாலாபேட்டை, குளித்தலை ரெயில் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்றும், நாளையும் சில ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • திருச்சியில் இருந்து மாலை 4.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 1 மணி நேரம் தாமதமாக மாலை 5.10 மணிக்கு புறப்படும்.

    தஞ்சாவூர்:

    தெற்கு ரெயில்வே திருச்சி கோட்டம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வினோத் வௌயிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    லாலாபேட்டை, குளித்தலை ரெயில் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்றும், நாளையும் சில ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி சேலம்- மயிலாடுதுறை மெமு விரைவு ரெயில் (வண்டி எண்.16812) இன்றும், நாளையும் பிற்பகல் மதியம் 2.05 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு கரூரை வந்தடையும். கரூர்- மயிலாடுதுறை இடையே சேவை இருக்காது. அதே நேரத்தில் கரூரில் இருந்து மயிலாடுதுறைக்கு இன்றும், நாளையும் முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரெயில் இயக்கப்படும். இந்த ரெயில் கரூரில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்படும். வண்டி எண் 16812 என்ற ரெயில் நின்று செல்லும் அதே நிறுத்தங்களில் இந்த சிறப்பு ரெயில் நின்று செல்லும்.

    இதேப்போல் திருச்சி- ஈரோடு முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் (வண்டி எண். 06809) வழக்கமாக திருச்சியில் இருந்து மாலை 4.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 1 மணி நேரம் தாமதமாக மாலை 5.10 மணிக்கு புறப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
    • ரெயில் கூடூரில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்படும்.

    சென்னை:

    சென்னை ரெயில்வே கோட்டத்தில் பல்வேறு இடங்களில் ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து விஜயவாடாவுக்கு வருகிற 17, 24, 31 ஆகிய தேதிகளில் மதியம் 2.05 மணிக்கு புறப்பட வேண்டிய பினாகினி விரைவு ரெயில் (12712) சென்னை சென்ட்ரல்- கூடூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த ரெயில் கூடூரில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்படும்.

    விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வருகிற 17, 24, 31 ஆகிய தேதிகளில் காலை 6.10 மணிக்கு புறப்படும் பினாகினி விரைவு ரெயில் (12711), கூடூர்- சென்னை சென்ட்ரல் இடையே பகுதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதே போல் சென்னை சென்ட்ரல்- சாய் நகர் ஷீரடி, சென்ட்ரல்-விஜயவாடா, சென்ட்ரல்-அவுரா ரெயில் புறப்படும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    • விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தல்
    • பண்டிகையை கொண்டாட முன்கூட்டியே சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு இந்த ரெயில் சேவை மாற்றம் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும்.

    நாகர்கோவில்:

    தெற்கு ரெயில்வேக்கு விஜய்வசந்த் எம்.பி. அனுப்பி யுள்ள கோரிக்கையில் கூறி யிருப்பதாவது:-

    தென் தமிழகத்தில் இரட்டை ரெயில்பாதை அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. இந்த பணி களுக்காக அவ்வப்போது தென்மாவட்ட ரெயில் சேவையில் ரெயில்வே நிர்வாகம் சில மாற்றங்களை செய்து வருகிறது.

    இந்த நிலையில் தமிழர் களின் முக்கிய பண்டிகை யான பொங்கல் திருவிழா நெருங்கி வரும் நிலையில் இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிக்காக மதுரை-கன்னியாகுமரி வழித்தடத்தில் இயக்கப்படும் ஒரு சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள தோடு பல ரெயில்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொங்கல் பண்டிகையை கொண்டாட முன்கூட்டியே சொந்த ஊர்களுக்கு செல் லும் பயணிகளுக்கு இந்த ரெயில் சேவை மாற்றம் மிகுந்த சிரமத்தை ஏற்ப டுத்தும் எனவே, இரட்டை வழிப்பாதை அமைக்க மேற்கொள்ளப்படும் ரெயில் சேவை மாற்றத்தை தள்ளி வைக்க வேண்டும்.

    இதன் மூலம் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்வோரின் பயணம் இலகுவாகும். மேலும் வர்த்தக ரீதியாக செல்லும் வணிகர்களின் நலனையும் கருத்தில் கொண்டு ரெயில் சேவை மாற்றத்தை பொங்கல் விடுமுறைக்கு பிறகு நடை முறை படுத்தவேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×