search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரோடு ஷோ"

    • 13, 14-ந்தேதிகளில் பிரதமர் மோடியை வாரணாசியில் எந்தெந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்வது என்று கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
    • வாரணாசியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை உத்தரபிரதேச மாநில அரசு செய்து வருகிறது.

    வாரணாசி:

    பாராளுமன்றத்துக்கு நடத்தப்பட்டு வரும் 7 கட்ட தேர்தல்களில் இதுவரை 3 கட்ட தேர்தல் முடிந்துள்ளது. 4-வது கட்ட தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

    5-வது, 6-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் தற்போது வட மாநிலங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஜூன் 1-ந்தேதி இறுதி 7-வது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

    7-வது கட்ட தேர்தலுக்கான மனுதாக்கல் கடந்த 7-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. வருகிற 14-ந்தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும். பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் 7-வது கட்ட தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.

    வாரணாசி தொகுதியில் கடந்த 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் 2-வது தடவை வெற்றி பெற்றுள்ள பிரதமர் மோடி தற்போது 3-வது முறையாக களம் இறங்கி உள்ளார். முந்தைய தேர்தல்களை விட இந்த தடவை வாரணாசி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.

    இதற்காக பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் தேர்தல் பணிக்குழுக்களை ஏற்படுத்தி இருக்கிறார். அவர்கள் வீடு வீடாக சென்று பிரதமர் மோடிக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். இந்த நிலையில் பிரதமர் மோடி வருகிற 13, 14-ந்தேதிகளில் வாரணாசியில் தங்கி வேட்புமனு தாக்கல் செய்யவும், பிரசாரம் செய்யவும் திட்டமிட்டு இருக்கிறார்.

    பிரதமரின் இந்த 2 நாள் பயணம் தொடர்பாக பா.ஜ.க. தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினார்கள். 13, 14-ந்தேதிகளில் பிரதமர் மோடியை வாரணாசியில் எந்தெந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்வது என்று கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

    இன்று பிரதமரின் வாரணாசி பயண திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படுகிறது.

    நாளை மறுநாள் (13-ந்தேதி) மதியம் வாரணாசி செல்லும் பிரதமர் மோடி முதலில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்துக்கு செல்கிறார். அங்கு பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள மதன்மோகன் மாள்வியா சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.

    அதன் பிறகு அங்கிருந்து அவர் ரோடு ஷோ நடத்துகிறார். அந்த ரோடு ஷோ வாரணாசியின் முக்கிய சாலைகள் வழியாக நடைபெற உள்ளது. சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தி தனக்கு ஆதரவு திரட்டுவார் என்று தெரியவந்துள்ளது.

    அந்த ரோடு ஷோவில் பிரதமருடன் அமித்ஷா, நட்டா, ராஜ்நாத்சிங் உள்பட பா.ஜ.க. மூத்த தலைவர்கள், மத்திய மந்திரிகள் பங்கேற்க உள்ளனர். ரோடு ஷோவின் போது வழிநெடுக பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    6 கிலோ மீட்டர் தூர ரோடு ஷோவில் பிரதமர் மோடி 12-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனத்தை நிறுத்தி மக்களின் வாழ்த்துகளை பெற்றுக்கொள்வார். அப்போது மக்களுடன் மோடி கலந்துரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதை கருத்தில் கொண்டு மோடியின் வாகன பேரணி நடக்கும் 6 கிலோ மீட்டர் தொலைவிலும் சாலையின் இருபுறமும் லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி வாரணாசியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை உத்தரபிரதேச மாநில அரசு செய்து வருகிறது. மோடியின் ரோடு ஷோ வாரணாசியில் கங்கை கரையில் உள்ள தசப்வம்தே காட் என்ற இடத்தில் நிறைவு பெறுகிறது.

    அங்கு கங்கை கரையில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு கங்கைக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு செய்ய உள்ளார். அவருடன் ஏராளமான பா.ஜ.க. நிர்வாகிகள் ஆரத்தியில் ஈடுபட உள்ளனர்.

    அதன் பிறகு அன்று இரவு பிரதமர் மோடி வாரணாசியில் தங்குகிறார். அன்று இரவு வாரணாசி தொகுதி பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகள் பிரதமர் மோடியை சந்தித்து பேசவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    மறுநாள் (14-ந்தேதி) செவ்வாய்க்கிழமை காலை பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கு செல்கிறார். அங்கு அவர் சிறப்பு வழிபாடுகள் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆலய தரிசனம் முடிந்ததும் வாரணாசியில் நடக்கும் பா.ஜ.க. ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்.

    அந்த ஆலோசனை கூட்டத்தில் வாரணாசி தொகுதி பா.ஜ.க. பூத் கமிட்டி உறுப்பினர்கள், நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்கிறார்கள். அவர்கள் மத்தியில் தேர்தல் பணி தொடர்பாக பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார். பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டுவது தொடர்பாக அப்போது பிரதமர் மோடி அறிவுரை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு பிரதமர் மோடி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய புறப்படுகிறார். மதியம் குறிப்பிட்ட நேரத்தில் அவர் மனுதாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    வேட்புமனு தாக்கல் செய்த பிறகு மீண்டும் வாரணாசியில் ஆதரவு திரட்ட உள்ளார். அன்று டெல்லி திரும்பும் அவர் மீண்டும் வாரணாசி தொகுதிக்கு சென்று பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் மோடி மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.
    • `ரோடு ஷோ' வாரணாசியில் நடைபெற உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, மே 14-ந் தேதி கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

    இதையொட்டி பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பிரம்மாண்ட ஊர்வலம் நடைபெற உள்ளது. பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் கிழக்கு உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசி உள்ளிட்ட 13 தொகுதிகளுக்கு கடைசி கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    வாரணாசி எம்.பி.யாக இரண்டாவது முறையாக தொடரும் பிரதமர் நரேந்திர மோடி, இங்கு மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.

    வாரணாசியில் நேற்று தொடங்கிய வேட்புமனு தாக்கல் மே 14-ந் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் இங்கு கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்ய பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார்.

    இதையொட்டி இதற்கு முதல் நாளில் இருந்தே வாரணாசியில் பிரம்மாண்ட ஊர்வலங்கள் நடைபெற உள்ளன.

    உத்தரபிரதேசத்தில் புனித நகரமான வாரணாசி யின் மால்தஹியாவில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

    வரும் 14-ந் தேதியிலும் அதேபோல் படேல் சிலைக்கு பிரதமர் மோடி மாலை அணிவிக்க உள்ளார். இதற்கு ஒருநாள் முன்னதாக மே 13-ல் பிரதமர் மோடி வாரணாசி செல்ல உள்ளார். அதே நாளில் அவரது `ரோடு ஷோ' வாரணாசியில் நடைபெற உள்ளது.

    பிரதமர் தனது வேட்புமனுவை வாரணாசி தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க உள்ளார். இப்பதவியில் மாவட்ட ஆட்சியரான தமிழ்நாட்டை சேர்ந்த எஸ்.ராஜலிங்கம் உள்ளார். வாரணாசியுடன் சேர்த்து உத்தரபிரதேசத்தின் 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஜூன் 1-ல் நடைபெற உள்ளது. இதன் மூன்றாவது நாளான ஜூன் 4-ல் நாடு முழுவதிலுமான தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.

    • தரிசனத்தை முடித்த பிறகு மோடி அயோத்தியில் பிரமாண்ட ரோடுஷோவில் ஈடுபட்டு பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
    • பிரதமர் மோடி ஒடிசாவில் நாளை பெர்காம்பூர், நபராங்பூர் ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.

    லக்னோ:

    பாராளுமன்றத்துக்கு 2 கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. 3-வது கட்டமாக 93 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு நாளை மறுநாள் நடக்கிறது. இதற்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி தலைவர்கள் இந்த தொகுதிகளில் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 8 தொகுதிக்கும், 2-வது கட்டமாக 8 இடங்களிலும் வாக்குப்பதிவு முடிந்துவிட்டது.

    3-வது கட்டத்தில் 10 தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேசத்தில் இன்று 3 இடங்களில் பிரசாரதில் ஈடுபடுகிறார்.

    சமாஜ்வாடி ஆதிக்கம் நிறைந்த இட்டவா மாவட்டம் புந்தேல்கண்ட் எக்ஸ்பிரஸ்வே அருகே காக்ராய் பக்கா தால் பகுதியில் இருந்து இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார்.

    அதன்பிறகு பிற்பகலில் சீதாப்பூர் மாவட்டம் வார்கானில் உள்ள அவாத்சுகர் மில் அருகே உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    தேர்தல் பிரசாரத்தை முடித்த பிறகு பிரதமர் மோடி இன்று மாலை அயோத்தி செல்கிறார். இரவு 7 மணிக்கு அவர் ராமர் கோவிலில் வழிபாடு செய்கிறார்.

    தரிசனத்தை முடித்த பிறகு மோடி அயோத்தியில் பிரமாண்ட ரோடுஷோவில் ஈடுபட்டு பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    அயோத்தியில் இருந்து ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் புறப்பட்டு செல்கிறார். அங்குள்ள கவர்னர் மாளிகையில் இரவில் அவர் தங்குகிறார்.

    பிரதமர் மோடி ஒடிசாவில் நாளை பெர்காம்பூர், நபராங்பூர் ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். இந்த 2 தொகுதிகளிலும் 4-வது கட்டமாக மே 13-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களாகும்.

    • தெலுங்கானாவில் 13-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
    • ரோடு ஷோவில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசுகிறார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் வருகிற 13-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

    தேர்தலுக்கு இன்னும் ஒரு வார காலமே இருப்பதால் அரசியல் கட்சித் தலைவர்கள் தெலுங்கானாவில் நிலவும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் தெலுங்கானாவில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று முதல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

    இன்று நாகர்கர்னூல் தொகுதிக்கு உட்பட்ட கட்வாலியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகின்றனர். அதை தொடர்ந்து அடிலாபாத் தொகுதியின் நிர்மலில் ரோடு ஷோவில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    வருகிற 9-ந் தேதி மீண்டும் தெலுங்கானாவிற்கு வரும் ராகுல் காந்தி கரீம் நகர் மற்றும் மல்காஜ்கிரி ஆகிய தொகுதிகளில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.

    அதே நாளில் பிரியங்கா காந்தி ஜாஹிராபாத் நாடாளுமன்ற தொகுதியின் காமி ரெடியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அதன் பின்னர் செவல்லா நாடாளுமன்ற தொகுதியின் தந்தூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் பேச உள்ளார்.

    இந்த தொகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சந்திரசேகர ராவின் பாரத ராஷ்டிரிய கட்சி வேட்பாளர் ரஞ்சித் ரெட்டி வெற்றி பெற்றார். ரஞ்சித் ரெட்டி பாரத ராஷ்ட்ரிய கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தற்போது காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    10-ந் தேதி மாலை 6 மணிக்கு மேல் பிரியங்கா காந்தி மகபூப் நகர் நாடாளுமன்ற தொகுதியின் ஷாத் நகரில் ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார்.

    • முதல்வர் மம்தா பேனர்ஜி குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கிறார்.
    • வங்கதேசத்தில் இருந்து வரும் இந்து மற்றும் புத்த அகதிகள் இந்தியாவில் குடியுரிமை பெற்றால் மம்தாவிற்கு என்ன பிரச்சனை?

    மேற்கு வங்காள மாநிலம் மால்டா தெற்கு தொகுதியில் நடைபெற்ற ரோடு ஷோவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.

    அப்போது பேசிய அமித் ஷா, "திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் எல்லை வழியே ஊடுருவல் தடையின்றி தொடர்கிறது. முதல்வர் மம்தா பேனர்ஜி குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கிறார். அதன் மூலம் இங்கு குடியேறிய அகதிகளுக்கு குடியுரிமை பெறுவதை அவர் தடுக்கிறார்.

    வங்கதேசத்தில் இருந்து வரும் இந்து மற்றும் புத்த அகதிகள் இந்தியாவில் குடியுரிமை பெற்றால் மம்தாவிற்கு என்ன பிரச்சனை? நீங்கள் ஊடுருவலையும் ஊழலையும் நிறுத்த விரும்பினால், நீங்கள் மீண்டும் நரேந்திர மோடியை பிரதமராக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

    அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் இயங்கும் எல்லைப் பாதுகாப்பு படை (BSF), வங்கதேச - இந்திய எல்லையை கண்காணிக்கும் நிலையில் அவர் மேற்கு வங்காள மாநில அரசு மீது குற்றம் சாட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

    • 2-வது ரோடு ஷோ காந்திநகர் மாவட்டம் கலோல் நகரில் உள்ள ஜே.பி.கேட் முதல் கலோலில் உள்ள டவர் சவுக் வரை நடந்தது.
    • வெஜல்பூரில் குஜராத் மாநில பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசுகிறார்.

    காந்திநகர்:

    மத்திய மந்திரி அமித்ஷா, பாராளுமன்ற தேர்தலில் குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

    அவர் நாளை தனது வேட்புமனுவை காந்திநகர் கலெக்டர் அலுவலகத்தில் தாக்கல் செய்கிறார். இதற்காக குஜராத்துக்கு சென்றுள்ள அமித்ஷா இன்று அகமதாபாத்தில் 3 இடங்களில் பிரமாண்ட ரோடு ஷோ நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று காலை சனந்த் பகுதியில் தனது ரோடு ஷோவை தொடங்கினார். இந்த ஊர்வலம் நல்சரோவர் சவுக் பகுதி வரை நடந்தது.

    இதில் பா.ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது அமித்ஷா மீது மலர்கள் வீசப்பட்டன. அவர் பொதுமக்களை பார்த்து கையசைத்தபடி சென்றார்.

    பின்னர் 2-வது ரோடு ஷோ காந்திநகர் மாவட்டம் கலோல் நகரில் உள்ள ஜே.பி.கேட் முதல் கலோலில் உள்ள டவர் சவுக் வரை நடந்தது. அமித்ஷாவின் 3-வது ரோடு ஷோ இன்று மாலை 4 மணிக்கு ரனிப்பில் உள்ள சர்தார் படேல் சவுக்கில் தொடங்கி வெஜல்பூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஜிவ்ராஜ் பார்க் சார் ரஸ்தாவில் முடிகிறது.

    பின்னர் வெஜல்பூரில் குஜராத் மாநில பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசுகிறார்.

    • தேர்தல் பிரசாரத்தின் போது ஆந்திர முதல் மந்திரி மீது கல் வீசப்பட்டதில் அவர் காயமடைந்தார்.
    • இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி, சந்திரபாபு நாயுடு, மு.க.ஸ்டாலின் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர்.

    அமராவதி:

    ஆந்திர மாநிலத்தின் விஜயவாடாவில் முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தேர்தல் பிரசாரத்துக்காக ரோடு ஷோ நடத்தினார். சிங் நகர் தாபா கோட்லா மையத்தில் நடந்த ரோடு ஷோவில் பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபரின் கல்வீச்சு தாக்குதலில் ஜெகன்மோகன் காயமடைந்தார்.

    இதில் ஜெகன்மோகன் ரெட்டியின் இடது புருவத்தில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு அருகிலிருந்த டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இந்த தாக்குதலில் முதல் மந்திரி அருகிலிருந்த எம்.எல்.ஏ. வெள்ளம்பள்ளியின் இடது கண்ணிலும் காயம் ஏற்பட்டது. முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு ஜெகன் மோகன் ரெட்டி தனது பேருந்து யாத்திரையைத் தொடர்ந்தார்.

    இந்த தாக்குதலின் பின்னணியில் தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் இருப்பதாக விஜயவாடா ஒய்.எஸ்.ஆர்.சி.பி. தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கல்வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திர முதல் மந்திரி மீதான தாக்குதலுக்கு பிரதமர் மோடி, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    முதல் மந்திரி மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மதுரை நேதாஜி சாலையில் உள்துறை மந்திரி அமித் ஷா ரோடு ஷோ தொடங்கினார்.
    • சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    மதுரை:

    மதுரை பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை அடுத்த நேதாஜி சாலையில் தொடங்கி தெற்கு ஆவணி மூல வீதி வழியாக விளக்குத்தூண் பகுதி வரை ரோடு-ஷோ மூலமாக பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார் என தெரிவிக்கப்பட்டது.

    உள்துறை மந்திரியின் வருகையை முன்னிட்டு மதுரை மாநகர் பகுதி முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். குறிப்பாக மதுரை நேதாஜி சாலை, தெற்கு ஆவணி மூல வீதி, விளக்குத்தூண் பகுதிகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    ரோடு ஷோவை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள உயரமான கட்டிடங்களில் நின்றபடி காவல்துறையினர் முழுவதுமாக கண்காணித்தனர்.

    இந்நிலையில், மதுரை நேதாஜி சாலையில் உள்துறை மந்திரி அமித் ஷா ரோடு ஷோ தொடங்கினார். பா.ஜ.க. வேட்பாளர் ராம சீனிவாசனை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொண்டார். வழியெங்கும் நின்றிருந்த தொண்டர்களைப் பார்த்து மந்திரி அமித் ஷா உற்சாகமாக கையசைத்தார்.

    • பா.ஜ.க. வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    • காரைக்குடியில் நாளை நடைபெற இருந்த ரோடு ஷோ திடீரென ரத்து செய்யப்பட்டது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் 8 நாட்களே உள்ளன. தமிழ்நாட்டில் பிரதமர் மோடி தொடர் பிரசாரம் செய்து வருகிறார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாளை நெல்லை, கோவை மாவட்டங்களில் பிரசாரம் செய்கிறார்.

    இதற்கிடையே, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை தமிழ்நாட்டில் பிரசாரம் செய்ய உள்ளார்.

    மதுரைக்கு நாளை பிற்பகல் 3.05 மணிக்கு வருகை தரும் அமித்ஷா, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கை சென்று காரைக்குடியில் ரோடு ஷோ மூலம் பிரசாரம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

    சிவகங்கை பா.ஜ.க. வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து இந்த ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    இந்நிலையில், அமித்ஷாவின் ரோடு ஷோ நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

    சிவகங்கை பா.ஜ.க. வேட்பாளர் தேவநாதன் ரூ.525 கோடி நிதி மோசடி செய்ததாக காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளதால் அமித்ஷாவின் ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதேபோல், மதுரையில் 12-ம் தேதி பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்தபிறகு மீனாட்சியம்மன் கோயிலுக்கு செல்லும் நிகழ்வையும் ரத்து செய்துள்ளார் அமித்ஷா.

    • 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் மாலை சென்னை வந்தார்.
    • மாம்பலம், பாண்டி பஜார் காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் மாலை சென்னை வந்தார்.

    சென்னை பாண்டி பஜாரில் நடந்த பிரமாண்ட ரோடு- ஷோவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது தென் சென்னை, மத்திய சென்னை, வடசென்னை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

    இதனை தொடர்ந்து நேற்று காலை பிரதமர் மோடி வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்திலும் அதனை தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    இந்நிலையில், சென்னை தியாகராயர் நகரில் நடந்த பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் விதிமீறல் நடந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    போலீஸ் விதித்த நிபந்தனைகளை மீறி விளம்பர பதாகைகளை வைத்ததாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி கொடுத்த புகாரின்பேரில், மாம்பலம், பாண்டி பஜார் காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட வாகன பேரணியில் பங்கேற்றார்.
    • ஊழலையும், குடும்ப ஆட்சியையும் ஊக்குவிப்பதில் திமுக மும்முரமாக உள்ளது.

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கு நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்துக்காக தமிழ்நாட்டுக்கு இதுவரை 6 முறை வருகை தந்துள்ளார். நேற்று 7-வது முறையாக அவர் தமிழகம் வந்தார்.

    இந்நிலையில், தனி விமானம் மூலம் சென்னை வந்த பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு தி.நகர் பனகல் பார்க் பகுதியில் ரோடுஷோ நடைபெறும் இடத்தை வந்தார்.

    அங்கு, பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட வாகன பேரணியில் பங்கேற்றார்.

    ரோடு ஷோவில் பங்கேற்றது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பல ஆண்டுகளாக சென்னை மக்களிடம் வாக்குகளை பெற்று நகருக்கு திமுக பெரிதாக எதுவும் செய்யவில்லை. ஊழலையும், குடும்ப ஆட்சியையும் ஊக்குவிப்பதில் திமுக மும்முரமாக உள்ளது. அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களை அணுகுவதில்லை, குறிப்பாக சவால்கள் நிறைந்த கடினமான நேரங்களில்.

    கச்சத்தீவை தாரை வார்த்தது குறித்த சமீபகால தகவல்கள், நமது நாட்டின் வியூக நலன்களுக்கும், நமது மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்களின் நலனுக்கும் தீங்கு விளைவிப்பதில் காங்கிரஸும் திமுகவும் எவ்வாறு உடந்தையாக இருந்தன என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. இம்முறை திமுகவையும், காங்கிரஸையும் நிராகரிக்க சென்னை தயாராகி இருப்பதில் வியப்பதற்கு எதுவுமில்லை.

    சாலைகள், துறைமுகங்கள், நகர்ப்புற போக்குவரத்து, கலாச்சாரம், வர்த்தகம், இணைப்பு, எரிசக்தி மற்றும் பல துறைகளில் என்டிஏ அரசு தொடர்ந்து பணியாற்றும். அதே நேரத்தில், பேரிடர் மேலாண்மை அமைப்பை வலுப்படுத்துவது, வெள்ளம் போன்ற பேரிடர்களின் போது நம்மை சிறப்பாக தயார்படுத்திக் கொள்வது போன்ற முக்கிய பிரச்சனைகளில் சென்னை எதிர்கொள்ளும் இடர்பாடுகளை களைய நாங்கள் முன்னுரிமை அளிப்போம். பொருளாதார வளர்ச்சியின் முக்கிய தூணாக விளங்கும் குறு, சிறு, நடுத்தர தொழில் துறையையும் தொடர்ந்து ஆதரிப்போம்.

    சென்னை என் மனதை வென்றது!

    இந்த ஆற்றல் மிக்க நகரத்தில் இன்றைய ரோட்ஷோ என் நினைவில் என்றும் நிலைத்திருக்கும். மக்கள் சேவையில் தொடர்ந்து கடினமாக உழைக்கவும், நமது தேசத்தை மேலும் வளர்ச்சியடையச் செய்யவும் மக்களின் ஆசிகள் எனக்கு வலுவைத் தருகின்றன.

    சென்னையில் காணப்படும் இந்த உற்சாகம், தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரிய அளவில் ஆதரவளிக்கத் தயாராக உள்ளது என்பதைக் காட்டுவதாக உள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்
    • நாமக்கல் தொகுதியில் பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கத்தை ஆதரித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் ரோடு ஷோவில் பங்கேற்றார்

    மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி இன்று மதியம் 12 மணி அளவில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்தார். இதையடுத்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் பரமத்தியில் உள்ள பி.ஜி.பி.கல்லூரிக்கு சென்றார். அவருக்கு பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதையடுத்து மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் நாமக்கல்லுக்கு சென்று நாமக்கல் பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் வகையில் "ரோடு ஷோ"வில் பங்கேற்றார். இந்த ரோடு ஷோ நாமக்கல்-சேலம் ரோட்டில் உள்ள எம்.ஜி.எம். தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே தொடங்கியது. திறந்த வாகனத்தில் வேட்பாளருடன் சென்று ஆதரவு திரட்டினார்.

    அப்போது பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கம் என்று சொல்வதற்கு பதிலாக ரங்கராஜன் என்று ராஜ்நாத் சிங் கூறிவிட்டார். உடனே அருகில் இருந்த கே.பி.ராமலிங்கம் தனது பெயர் ரங்கராஜன் கிடையாது ராமலிங்கம் என கூறினார். பின்பு கே.பி.ராமலிங்கதிற்கு வாக்களியுங்கள் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

    ×