என் மலர்
நீங்கள் தேடியது "Prosecution"
- 5 செட் இடம் வாங்கி அதில் பிரத்தியங்கராதேவி கோவில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.
- படுகாயம் அடைந்த திருநங்கை வாசுகி புவனகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் புவன கிரி அருகே பு.மணவெளி கிராமத்தை சேர்ந்தவர் வாசுகி, திருநங்கையான இவர் அந்த பகுதியில் 5 செட் இடம் வாங்கி அதில் பிரத்தியங்கராதேவி கோவில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்கு பூஜை நடத்தி னார். இதனை அறிந்த அந்த கிராமத்தை சேர்ந்த கருணாகரன், சிவகுரு நாதன், கங்கா, சீராலன், முரளி, குமார் உள்ளிட்ட 7 பேர் அங்கு வந்தனர். அப்போது அவர்கள் திரு நங்கையிடம் இந்த பகுதி யில் கோவில் கட்டக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்த னர். இதனால் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் திருநங்கை வாசுகி தாக்கப்பட்டார். படுகாயம் அடைந்த திருநங்கை வாசுகி புவனகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனை அறிந்த ஏராளமான திருநங்கைகள் திரண்டனர். அவர்கள் புவனகிரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். திருநங்கை வாசுகியை தாக்கியவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவேசம் அடைந்த னர். இது தொடர்பாக போலீ சார் திருநங்கைகளிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதுதொடர்பாக கருணா கரன், சிவகுருநாதன், கங்கா உள்பட 7 பேர் மீது போலீ சார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை எற்படுத்தியது.
- சிறிது நேரம் கழித்து சேகர் முழித்து பார்த்த போது கோமதியை காணவில்லை.
- சந்திரநதியில் ஆற்றின் கரையில் கோமதி பிணமாக கிடந்தார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அங்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சேகர்.
இவரது மனைவி கோமதி (வயது 45).
இந்த நிலையில் தீபாவளியன்று கணவன், மனைவி இருவரும் சேர்ந்து மது குடித்து விட்டு குண்டையூர் செல்லும் பாலம் அருகே தூங்கியதாக கூறப்படுகிறது.
சிறிது நேரம் கழித்து சேகர் முழித்து பார்த்த போது கோமதியை காணவி ல்லை. பல இடங்களில் தேடி பார்த்து ம் கண்டுபிடிக்க முடியவி ல்லை.
இந்த நிலையில் சந்திரநதியில் ஆற்றின் கரையில் கோமதி பிணமாக கிடந்தார்.
தகவல் அறிந்த திருக்குவளை போலீசார் சம்பவ இடத்து க்கு சென்று கோமதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுக் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுவாமிமலையில் இருந்து பாபநாசம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
- பிரேக் பிடிக்காததால் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டர் சைக்கிள் மோதியது.
நீடாமங்கலம்:
தஞ்சை மாவட்டம், பாபநாசம் திருப்பாலைத்துறையை சேர்ந்தவர் சாகிர் உசேன்.
இவரது மகன் அப்துல் ரஜும் (வயது 20). இவர் சம்பவத்தன்று இரவு சுவாமிமலையில் இருந்து பாபநாசம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, உத்தாணி அருகே சென்ற போது சாலையில் லாரி ஒன்று நின்றுகொண்டிருந்தது. லாரி நிற்பதை கண்டு அப்துல் ரஜும் பிரேக் அடிக்க முயற்சி செய்துள்ளார்.
பிரேக் பிடிக்காததால் லாரி மீது மோட்டர் சைக்கிள் மோதியது.
இதில் அவர் சாலையில் தூக்கி வீசப்பட்டார். தலையில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான கரூரை சேர்ந்த மணிவண்ணன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடிநீர் வினியோகம் செய்வதற்காக அங்குள்ள மோட்டார் அறைக்கு சென்றார்.
- போலீசார் ரங்கநாதன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
கள்ளகுறிச்சி:
கள்ளகுறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த வெங்க லம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (41). டேங்க் ஆபரேட்டரான இவர் பொதுமக்களுக்கு குடிநீர் வினி யோகம் செய்வதற்காக அங்குள்ள மோட்டார் அறைக்கு சென்றார். அப்போது அங்கு வந்த வெங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் (வயது 45) என்பவர் குடிநீர் வினி யோகம் செய்வது தொடர்பாக சரவணனை திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சரவணன் ரிஷிவந்தியம் போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் ரங்கநாதன் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் ரிஷிவந்தியம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், டேங்க் ஆபரேட்டர் சரவணன் பொது மக்களுக்கு சரிவர குடிநீர் விநியோகம் செய்ய வில்லை. இதை கேட்ட என்னை ஆபாசமாக திட்டியதாக கூறியிருந்தார். அதன்அடிப்படையில் டேங்க் ஆபரேட்டர் சரவணன் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- 26 ஆம் தேதி வீட்டைபூட்டிக்கொண்டு தனது தாய் வீடான கருவாட்சிக்கு சென்றனர்.
- ரூ68,000 ரொக்க பணம் யாரோ திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே உள்ள அன்னியூர் என்ற ஊர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. அவரது மனைவி கவிதா. இவர்கள் கடந்த 26 ஆம் தேதி வீட்டை பூட்டிக் கொண்டு தனது தாய் வீடான கருவாட்சிக்கு சென்றனர். மறுநாள் காலை வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததாம் .உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 2 கிராம் தங்க நகை மற்றும் ரூ62,000 ரொக்கம் ஆகியவைகள் திருடு போய் இருந்தது. இதேபோல் அதே ஊர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன்.
அவரது மனைவி ஜோதி லட்சுமி. இவர்களும் கடந்த 26-ந் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு தனது தம்பியை பார்க்க திருச்சிக்கு சென்று விட்டனர் . மறுநாள் காலை அவருக்கு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக வந்த தகவலின் பேரில் வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே பீரோவை உடைத்து அதிலிருந்து 5 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ68,000 ரொக்க பணம் ஆகியவற்றை யாரோ திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. இந்த 2 சம்பவங்கள் குறித்தும் அவர்கள் தனித்தனியே கஞ்சனூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குகள் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறா ர்கள்.
- போதையில் இருந்த ராமலிங்கம் நிலை தடுமாறி வீட்டு வாசலில் கீழே விழுந்தார்.
- ராமலிங்கம் மனைவி முத்தாண்டி குப்பம் போலீசில் புகார் தெரி வித்தார்.
கடலூர்:
பண்ருட்டி அருகே கீழ கொல்லை பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 62) விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளார். மேலும் ராமலிங்கத்திற்கு நீண்ட நாட்களாக குடிப்பழக்கம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் குடித்து விட்டு தன் வீட்டிற்கு வந்தார். அப்போது போதையில் இருந்த ராமலிங்கம் நிலை தடுமாறி வீட்டு வாசலில் கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த அடி ஏற்பட்டது. இதைப் பார்த்த வீட்டிலிருந்தவர்கள் ராம லிங்கத்தை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சை க்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமலிங்கம் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து ராமலிங்கம் மனைவி முத்தாண்டிகுப்பம் போலீசில் புகார் தெரி வித்தார். புகாரின் பேரில் முத்தாண்டிகுப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் திருப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டார்.
- கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை.
நீடாமங்கலம்:
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் உட்கோ ட்டம் திருவிடைமருதூர் காவல் நிலைய சரகம் புளியம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சேகர் இவரது மகன் வைரப்பன் (33) அவரின் மனைவி குடும்பபிரச்சனை காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கோபித்த க்கொண்டு திருப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி தனது வீட்டில் தவறி விழுந்ததாக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக வைர ப்பன் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
பின்னர் கும்பகோணத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம்இரவு இறந்துள்ளார்
ஜெயலட்சுமி தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியதால், இறந்தவரின் பிரேதம் கும்பகோணம் அரசு மருத்து வமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்களர்.
இறந்த வைரப்பனுக்கு மகன் ஹரிஹரன் (6) மகள் சிவானி (3)இருவரும் அவரது அம்மாவுடன் திருப்பூரில் இருந்துள்ளார்கள்
இவ்வழக்கில் திடீர் திருப்பமாக அவரது சொந்த அண்ணன் வேலப்பன்(39) என்பவர் வைரப்பனை கட்டையால் தாக்கியது போலீஸ் விசாரணைகள் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- அலெக்ஸ் தலைமையில் சின்னசேலம் பகுதியில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
- கடையில் இருந்த 7 ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் போலீஸ் நிலையத்திற்கு அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் ரகசியமாக விற்று வருவதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் தலைமையில் சின்னசேலம் பகுதியில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்பொழுது அமைய கரம் அருகே உள்ள தென் பொன் பரப்பி பகுதியில் உள்ள மளிகை கடையில் போலீ சார் சோதனை மேற் கொண்டனர். அப்போது ஹான்ஸ் பாக்கெட்டு கள் இருப்பது தெரிய வந்தது.
பின்னர் கடையில் இருந்த 7 ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். அதே போல் வாசுதேவனூர் கிரா மத்தில் உள்ள ஈஸ்வரன் மளிகை கடையில் சோதனை செய்தபோது 7ஹான்ஸ் பாக்கெட் இருப்பது தெரிய வந்தது. பின்னர் கோவிந்த ராஜ், ஈஸ்வரன் ஆகி யோர் மீது சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உம்பளச்சேரி செல்லும் சாலையில் ரோந்து பணி.
- வழக்குப்பதிவு செய்து தலா ரூ. 20,000 இருவருக்கும் அபராதம்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த பிராந்தியங்கரையில் திருச்சி வன மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ், நாகை வன உயிரிக்காப்பாளர் யோஹேஸ்குமார் மீனா உத்தரவின்படி வேதாரண்யம் வனச்சரக அலுவலர் அயூப்கான் தலைமையில் பறவைகள் வேட்டை தடுப்பு சிறப்பு குழுவினர்கள் ராமதாஸ், வனவர், செல்வி, மகாலெட்சுமி, வனக்காப்பாளர்கள் ரணீஷ்குமார், செல்வி, இலக்கியா, வேட்டை தடுப்பு காவலர்கள் நிர்மல்ராஜ், பாண்டியன் ஆகியோர் பிராந்தியங்கரையில் உம்பளச்சேரி செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கட்டிமேடு பகுதியை சேர்ந்த அலி அக்பர், ஹாஜா அலாவுதீன் ஆகியோர் மூன்று மடையான், இரண்டு வக்கா பறவைகள் சமைக்க விலைக்கி வாங்கி வந்தனர்.
இருவரையும் பிடித்து கோடியக்கரை வனச்சரகர் அலுவலகம் கொண்டுவந்து விசாரணை செய்து இந்திய வன உயிரினப்பாதுகாப்பு சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்து தலா ரூ. 20,000 இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
- தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறி பேரூராட்சி தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- இவர் டி.கல்லுப்பட்டி 3-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார்
திருமங்கலம்
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் மகுடாதிபதி (வயது54). இவர் டி.கல்லுப்பட்டி 3-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார். நேற்று மாலை 5.30 மணி அளவில் பேரூராட்சி அலுவலகத்தில் ஏழு ஊர் அம்மன் திருவிழாவிற்கு தனது வார்டில் சாலையை சுத்தம் செய்வதற்காக துப்புரவு பணியாளர்களை அனுப்ப வேண்டும் என மகுடாதிபதி டி.கல்லுப்பட்டி செயல் அலுவலர் மற்றும் என்ஜினியரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பேரூராட்சி தலைவரும், தி.மு.க. நகர செயலாளருமான முத்துகணேஷ் மற்றும் மேஸ்திரி கனகராஜ் இருவரும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக டி.கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் மகுடாதிபதி புகார் கொடுத்தார். அதன்பேரில் பேரூராட்சித் தலைவர் முத்து கணேசன் மற்றும் உடந்தையாக இருந்த பேரூராட்சி மேஸ்திரி கனகராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- நிலத்தை கேட்கும் போது, ராஜேந்திரன் நிலத்தை தரமறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
- நாராயணமூர்த்தி இது குறித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
புதுச்சேரி:
காரைக்கால் அருகே திருநள்ளாறு சேத்தங்குடி கிராமத்தைச்சேர்ந்தவர் நா ராய ணமூர்த்தி(வயது57). இவர், தனக்கு சொந்தமான வயல் ஒன்றை கடந்த 17 ஆண்டுகளுக்கு முன், அதே ஊரைச்சேர்ந்த ராஜே ந்திரன்(48) என்பவருக்கு ரூ.5 ஆயிரத்திற்கு அடகு வைத்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், பணத்தை திருப்பி கொடுத்து, நிலத்தை கேட்கும் போது, ராஜேந்திரன் நிலத்தை தரமறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நாராயணமூர்த்தி இது குறித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ரா ஜேந்திரன் சம்பந்தப்பட்ட நிலத்தில் நாற்று நட்டதாக கூறப்படுகிறது.
விபரம் அறிந்த நாராயணமூர்த்தி, வயலுக்கு சென்று தட்டி கேட்டபோது, வயலில் கிடந்த குச்சி ஒன்றால் ராஜேந்திரன் நாராய ணமூர்த்தியை தாக்கி யுள்ளார். தொடர்ந்து, ராஜேந்திரனின் அண்ணன் சந்திரசேகரர்(50), அவரது மகன் தினேஷ்(26) ஆகிய 2 பேரும் சேர்ந்து நாராயணமூர்தியை தாக்கி யதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த நாராயணமூர்த்தி, திருநள்ளாறு தேனூர் ஆஸ்ப த்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக காரைக்கால் ஆஸ்ப த்திரியில் சேர்கப்ப ட்டார். அங்கு அவர் கொடுத்த புகாரின் பேரில், திருநள்ளாறு போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மழைநீர் சூழ்ந்த பகுதியில் பார்வதிபுரம் கிராம நிர்வாக அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.
- போலீசாரை கண்டதும் திருடர்கள் பயந்து தலைத்தெறித்து ஓடினர்.
கடலூர்:
வடலூர் அருகே பார்வதிபுரம் கிராமத்தில் உள்ள வயல்வெளிகளில் 2 நாட்களாக பெய்த கன மழையினால் ஓடைகள் மற்றும் வயல்களில் மழை நீரால் நெற்பயிர்கள் மூழ்கியது. பார்வதி புரம், மழைநீர் சூழ்ந்த பகுதியில் பார்வதிபுரம் கிராம நிர்வாக அலுவலர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது பார்வதிபுரம் வயல்களின் அருகே சுடுகாடு அருகில் என்.எல்.சியில் இருந்து எடுத்து வந்த காப்பர் கம்பியை திருடி வந்த திருடர்கள் கம்பியை தீயிட்டு, கொளுத்தி பிரித்தெடுத்து கொண்டி ருந்தனர். இதனை கண்ட கிராம நிர்வாக அலுவலர் பார்த்தசாரதி, வடலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார் தகவலின் பேரில் வடலூர் இன்ஸ்பெக்டர் வீரமணி எஸ்.ஐ சங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
போலீசாரை கண்டதும் திருடர்கள் பயந்து தலைத்தெ றித்து ஓடினர். பின்னர் அங்கி ருந்த 80 ஆயிரம் மதிப்புள்ள 150 கிலோ இரும்பு காப்பர் கம்பியை போலீசார் பறி முதல் செய்தனர் இதை யடுத்து கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் பார்வதிபுரம் கிராமம் இந்திரா நகரை சேர்ந்த அந்தோணிராஜ், அந்தோணிராஜ் மகன் ஸ்டீபன் மற்றும் அடையாளம் தெரியாத பலர் மீது வழக்கு பதிந்து குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்ற னர். இச்சம்பவம் அப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.