என் மலர்
நீங்கள் தேடியது "அண்ணா நினைவு தினம்"
- அண்ணா நினைவிடத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்த உள்ளார்.
- அஞ்சலி செலுத்த மாவட்டக் கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை:
ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு நாளான பிப்ரவரி (3-ந் தேதி) காலை 10 மணிக்கு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில், அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்த உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழக சார்பு அணிகளின் மாநில நிர்வாகிகளும், மாவட்டக் கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தமிழ்நாடு மற்றும் கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், பிப்ரவரி 3-ந் தேதி அன்று ஆங்காங்கே அண்ணாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் அஞ்சலி செலுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அ.தி.மு.க. சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் தலைமையில் அண்ணா நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்தினர்.
- அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள திருவுருவசிலைக்கு தமிழக அரசு சார்பில் மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் மற்றும் அரசு அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காஞ்சிபுரம்:
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 54-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தி.மு.க. சார்பில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ. தலைமையில் மாணவரணி செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ. மாநகர செயலாளர் சி.கே.வி. தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட கட்சியினர் ஏராளமானோர் காஞ்சிபுரம் பெரியார் தூணில் இருந்து அமைதி பேரணியாக சென்றனர். அவர்கள், காந்தி ரோடு, மூங்கில் மண்டபம், காமராஜர் வீதி, இரட்டை மண்டபம் வழியாக காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் சென்று அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அண்ணா நினைவு இல்லத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார்கள்.
இதில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார், மாவட்ட பொருளாளர் சன் பிராண்ட் ஆறுமுகம், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.எஸ்.சுகுமார், எஸ்.கே.பி. சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், படுநேல்லிபாபு பகுதி செயலாளர்கள் சந்துரு, தசரதன், திலகர், வெங்கடேசன், தொ.மு.ச. பேரவை நிர்வாகிகள் சுந்தரவதனம், கே.ஏ.இளங்கோவன், மாநகர நிர்வாகிகள் செங்குட்டுவன், முத்து செல்வம்,ஜெகநாதன், சுப்புராயன் , நிர்வாகிகள் அப்துல் மாலிக், யுவராஜ் சிகாமணி மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அ.தி.மு.க. சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் தலைமையில் அண்ணா நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்தினர். இதில் அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, ஒன்றிய செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம், மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், , பகுதிச் செயலாளர்கள் எம்.பி. ஸ்டாலின், பாலாஜி, ஜெயராஜ்,உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மேற்கு மாவட்ட ம.தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு இல்லத்தில் மாவட்ட செயலாளர் வளையாபதி, நகர செயலாளர் மகேஷ், நெசவாளர் அணி ஏகாம்பரம் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மற்றும் ஊழல் ஒழிப்பு சங்கத்தின் மாவட்ட செயலாளரும், வக்கீலுமான பெர்ரி தலைமையில் மாவட்டத் தலைவர் தண்டபாணி, நகர தலைவர் துரைராஜ், ஒன்றிய தலைவர் முரளி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள திருவுருவசிலைக்கு தமிழக அரசு சார்பில் மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி, மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சிவருத்ரையா மற்றும் அரசு அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- சிவன்மலை ஊராட்சித்தலைவர் கே.கே.துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு உணவு பரிமாறினர்.
- அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் சிவன்மலை கோவில் ஊழியர்கள், பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
காங்கயம்:
முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி சிவன்மலை முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடும், சமபந்தி விருந்தும் அன்னதான மண்டபத்தில் நடைபெற்றது. இதில் காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார், சிவன்மலை ஊராட்சித்தலைவர் கே.கே.துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு உணவு பரிமாறினர்.
இதில் சிவன்மலை ஊராட்சி துணைத்தலைவர் டி.சண்முகம், ஆதித்தமிழர் பேரவையின் அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் சிவன்மலை கோவில் ஊழியர்கள், பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- வாழைத்தோட்டத்து அய்யன் கோவிலில் அண்ணா நினைவுதினத்தை முன்னிட்டு பொதுவழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நடைபெற்றது.
- அய்யம்பாளையம் குருசாமி, கோவில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மங்கலம்:
திருப்பூர் மாவட்டம்,பல்லடம் வட்டம் வி.அய்யம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள வாழைத்தோட்டத்து அய்யன் கோவிலில் அண்ணா நினைவுதினத்தை முன்னிட்டு பொதுவழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் வாழைத்தோட்டத்து அய்யன்கோவில் உதவி ஆணையர் செந்தில்குமார் ,சாமளாபுரம் பேரூராட்சிமன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி, துணைத்தலைவர் குட்டிவரதராஜன், 13-வது வார்டு கவுன்சிலர் பெரியசாமி , வாழைத்தோட்டத்து அய்யன்கோவில் முன்னாள் அறங்காவலர் அய்யம்பாளையம் குருசாமி, கோவில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
- மதியழகன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாவின் சிலைக்கு கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன், முன்னாள் எம்.பி., வெற்றிச்செல்வன், மாவட்ட அவைத் தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசுமூர்த்தி, நகர செயலாளர் நவாப், நகராட்சி தலைவர் பரிதாநவாப், தலைமை செயற்குழு உறுப்பினர் தம்பிதுரை, பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், தனசேகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தி.மு.க. கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 5 ரோடு ரவுண்டானா பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கும் மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்துகிறார்.
அண்ணாவின் 56-வது நினைவு தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினரின் அமைதிப்பேரணி தொடங்கியது.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அமைதி பேரணி வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடையும். இதைத் தொடர்ந்து பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்துகிறார்.
அண்ணா நினைவு தினத்தையொட்டி தி.மு.க.வினர் அமைதிப் பேரணியால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
போர் நினைவு சின்னத்தில் இருந்து நேப்பியார் பாலம் நோக்கி வரும் வாகனங்கள் காமராஜர் சாலையில் செல்ல அனுமதியில்லை. கொடி மரச்சாலை வழியாக திருப்பி விடப்படும்.
கலங்கரை விளக்கத்தில் இருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள், காந்தி சிலை வரை அனுமதிக்கப்பட்டு, ராதா கிருஷ்ணன் சாலை வழியாக திருப்பி விடப்படும்.
பெல்ஸ் சாலை மற்றும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாகனங்கள், உழைப்பாளர் சிலை செல்ல அனுமதிக்கப்படாது.
வாலாஜா சாலை - பெல்ஸ் சாலை மற்றும் வாலாஜா சாலை - திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சந்திப்பில் திரும்பி அண்ணா சிலை வழியாக செல்லலாம்.
- அமைதி பேரணி வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடைந்தது.
- பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அண்ணாவின் 56-வது நினைவு தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினரின் அமைதிப்பேரணி நடைபெற்றது.
அமைதிப்பேரணியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அமைதி பேரணி வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடைந்தது.
பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவரைத்தொடர்ந்து துணை முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.பி.க்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
- நம்முடைய நோக்கம் பெரிது! அதற்கான பயணமும் பெரிது!
- வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்.
தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
அண்ணா வழியில் அயராது உழைப்போம்!
தந்தை பெரியார் குறித்து பேரறிஞர் அண்ணா கூறியது:
"எது நேரிடினும் மனத்திற்பட்டதை எடுத்துச் சொல்வேன் என்ற உரிமைப் போர் பெரியாருடைய வாழ்வு முழுவதும். அதிலே அவர் கண்ட வெற்றி மிகப்பெரியது. அந்த வெற்றியின் விளைவு அவருக்கு மட்டும் கிடைத்திடவில்லை; இன்று அனைவரும் பெற்றுள்ளனர்."
தந்தை பெரியாரின் புகழொளியையும் - அறிவொளியையும் தந்து நம்மை ஆளாக்கிய தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ்வணக்கம்!
நம்முடைய நோக்கம் பெரிது! அதற்கான பயணமும் பெரிது!
வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்; நாம் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று இலட்சியப் பயணத்தில் வெல்லப் பாடுபடுவோம்! என்று தெரிவித்துள்ளார்.
- எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்தும் மலர் தூவியும் மரியாதை
- தமிழ்நாட்டை தலைநிமிர வைத்த தமிழ்த் தாயின் தவப்புதல்வர்Anna's memorial day
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேரறிஞர் அண்ணாவின் 56-வது நினைவு நாளை யொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
அவருடன் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள். இதில் முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன், டி.ஜெயக்குமார், நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, கே.பி.அன்பழகன், முன்னாள் எம்.பி. ஜெயவர்தன், வழக்கறிஞர், ஆ.பழனி, நிர்மலா பெரியசாமி, டி.கே.எம்.சின்னையா, மாதவரம் மூர்த்தி, கமலக் கண்ணன், கே.பி.கந்தன், தி.நகர், சத்யா, ராஜேஷ், பாலகங்கா உள்பட ஏராளமான கழக நிர்வாகிகள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்கள்.
இதுகுறித்து சமூக வலை தளபக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை அரசியல் உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த சுயமரியாதை சுடரொளி, தமிழ்நாட்டை தலைநிமிர வைத்த தமிழ்த் தாயின் தவப்புதல்வர்; திராவிட இயக்கத்தின் பிதாமகன், மேடைதோறும் தமிழ் பொழிந்த காவிய மேகம்! இருள்சூழ் தமிழ்வானுக்கு
காஞ்சி வழங்கிய ஒளி வெள்ளி! அரசியல் பகை வரும் அண்ணாந்து வியக்கும்படி அறிவாற்றல் சிகரமென அதிசயமாய் உயர்ந்த, 'நம் இயக்கத்தின் கொள்கைச் சுடர்' பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் நினைவு நாளில், அவர்தம் உயரியக் கொள்கைகளைப் பின்பற்றி அவர் காட்டிய அறவழியில் பயணிக்க உறுதியேற்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தென்னாட்டு பெர்னாட்ஷா பேரறிஞர் அண்ணா.
- தாம் வகுத்த இலக்கணங்களுக்கு தாமே இலக்கியமாக வாழ்ந்து காட்டியவர்.
சென்னை:
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-
தமிழ் உயரவும், தமிழர்கள் தமது உரிமையை பெற்றிடவும் தமிழக அரசியல் வரலாற்றை புரட்டிப் போட்ட அரசியல் ஞானி, தாய்நாட்டிற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டி தமிழக மக்களின் உள்ளங்களிலும் எண்ணங்களிலும் எந்நாளும் நிலைத்து நிற்கும் தென்னாட்டு பெர்னாட்ஷா பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம் இன்று.
தெளிவான சிந்தனை, ஆற்றல் மிக்க பேச்சு மற்றும் உணர்ச்சிப் பூர்வமான எழுத்துகளால் தமிழ்ச் சமுதாயத்தை தட்டி எழுப்பியதோடு, தாம் வகுத்த இலக்கணங்களுக்கு தாமே இலக்கியமாக வாழ்ந்து காட்டிய மாபெரும் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் புகழும் அவர் ஆற்றிய அரும்பெரும் பணிகளும் தமிழ் இனம் இருக்கும் வரை நிலைத்து நிற்கும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- உலக அரசியல் வரலாறு தொடங்கி உள்ளூர் நடப்புகள் வரை தமது தம்பிகளுக்கு நாள்தோறும் பாடம் நடத்திய அண்ணன்!
- எப்பேர்ப்பட்ட பகைவர்களையும் வாதத் திறமையால் தன் பக்கம் ஈர்க்கும் ஆற்றல்மிக்க சொற்பொழிவாளர்!
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழ்நாட்டை எதிரிகளால் நெருங்க முடியாத திராவிட அரசியல் கோட்டையாகக் கட்டியெழுப்பிய பெருந்தகை!
உலக அரசியல் வரலாறு தொடங்கி உள்ளூர் நடப்புகள் வரை தமது தம்பிகளுக்கு நாள்தோறும் பாடம் நடத்திய அண்ணன்!
எப்பேர்ப்பட்ட பகைவர்களையும் வாதத் திறமையால் தன் பக்கம் ஈர்க்கும் ஆற்றல்மிக்க சொற்பொழிவாளர்!
ஜனநாயக வழியில் இவ்வளவு சாதிக்க முடியுமா என்று உலக அரசியல் ஆராய்ச்சியாளர்களின் புருவம் உயர்த்தியப் பேரறிஞர்!
தி.மு.கழகம் என்னும் அசைக்க முடியாத ஆலமரத்தின் ஆணிவேர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 56ஆவது நினைவு நாள் இன்று!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் இருந்து பேரணியாகச் சென்று அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினோம். அவர் தம்பி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நினைவிடத்திலும் மலர்தூவி மரியாதை செலுத்தினோம்.
அண்ணாவின் புகழ் ஓங்கட்டும்! என்று கூறி உள்ளார்.