search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்டமன்ற தேர்தல்"

    • பாஜக 90 தொகுதிகளில் 44-க்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
    • சிறிது நேரத்தில் அதை திரும்பப் பெற்று 15 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 90 இடங்களுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. முதற்கட்ட தேர்தல் வருகிற 18-ந்தேதி நடைபெற இருக்கிறது. முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது.

    இதற்கிடையே நேற்று தேசிய மாநாடு கட்சி- காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் ஏற்பட்டது. தேசிய மாநாடு கட்சி 51 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 32 இடங்களில் போட்டியிடுகிறது. ஐந்து இடங்களில் தனித்தனியாக களம் இறங்குகின்றன.

    அதேவேளையில் பாஜக நேற்று காலை 44 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. உடனடியாக அந்த வேட்பாளர் பட்டியலை திரும்பப் பெற்றது. பின்னர் முதற்கட்ட தேர்தலுக்கான 15 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது.

    இது தொடர்பாக உமர் அப்துல்லா கூறியதாவது:-

    பாஜக அலுவலகத்தில் நேற்று பர்னிச்சர்கள் உடைக்கப்பட்டன. அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவியது. ஆனால், இதில் ஆச்சர்யம் படுவதற்கு ஏதுமில்லை. நீங்கள் திடீரென மூத்த வீரர்கள் அனைவரையும் நீக்கும்போது இது போன்ற பிரச்சனைகள் ஏற்படத்தான் செய்யும்.

    பாஜக கட்சி மற்ற கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கிறது. இதனால் சங்கடத்தை பாருங்கள். ஒரு கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு 10 நிமிடத்திற்குள் அதை திரும்பப்பெற்ற பின், மீண்டும் அதில் இருந்து குறைந்த அளவிலான எண்ணிக்கை கொண்ட பட்டியலை வெளியிட்டதை இதுவரை நான் பார்த்ததே இல்லை.

    இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

    ஜம்மு-காஷ்மீரில் 2-வது கட்ட தேர்தல் செப்டம்பர் 25-ந்தேதியும், 3-ம் கட்ட தேர்தல் அக்டோபர் 1-ந்தேதி நடைபெறுகிறது.

    • முதலில் 44 தொகுதிகளுக்கான பட்டியலை வெளியிட்டிருந்தது.
    • தற்போது 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.

    ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25, அக்டோபர் 1-ந்தேதி என மூன்று கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றன. இன்று காலை பாஜக 44 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

    அறிவித்த சுமார் ஒரு மணி நேரத்தில் அந்த வேட்பாளர் பட்டியலை திரும்பப் பெற்றது. அதற்குப்பதிலாக புதிய வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என பாஜக தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் தற்போது 15 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.

    ராஜ்போராவில் ஸ்ரீஅர்ஷித் பாத், ஷோபியானில் ஸ்ரீஜாவித் அகமது காத்ரி, அனந்த்நாக் தொகுதியில் சயத் வாசாஹாத், தோடாவில்வில் ஸ்ரீ கஜாய் சிங் ராணா உள்ளிட்டோர் போட்யிடுகிறார்கள் என அறிவித்துள்ளது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடைசியாக 2014-ல் தேர்தல் நடைபெற்றது. பாஜக 25 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    காங்கிரஸ் கட்சி பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. தனது கோட்டையாக விளங்கும் ஜம்முவில் அந்த கூட்டணியின் திட்டத்தை முறியடிக்க பாஜக அனைத்து வகையிலான முயற்சிகளையும் மேற்கொள்ளும்.

    • காங்கிரஸ்- தேசிய மாநாடு கட்சி இடையே கூட்டணி ஏற்பட்டுள்ளது.
    • நாளை வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் தொகுதி பங்கீடு இழுபறி முடிவுக்கு வர வேண்டிய கட்டாயம்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1-ந்தேதி என மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ்- பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாடு கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.

    90 தொகுதிகளிலும கூட்டணியாக போட்டியிடுவோம் என பரூக் அப்துல்லா ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆனால் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி பெறவில்லை.

    காங்கிரஸ் மேலிடம் ஏற்கனவே தாங்கள் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் அதற்கான வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளது. ஆனால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை உறுதி செய்யாததால் அறிவிப்பை தள்ளிப் போட்டுள்ளது.

    நாளையுடன் முதற்கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. இதனால் உடனடியாக தொகுதி பங்கீட்டை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் மேலிடம் கே.சி. வேணுகோபால், சல்மான் குர்ஷித் ஆகியோரை ஜம்மு-காஷ்மீருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    இருவரும் தேசிய மாநாடு கட்சி தலைவர்கள் பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள. பேச்சுவார்த்தையின் இறுதியில் இரு கட்சிகளும் போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும்.

    முன்னதாக, காங்கிரஸ் தேசிய தலைவரான மல்லிகார்ஜூன கார்கே மற்றும் தேசிய தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கூட்டணி உருவானது. ஆனால் தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நீடித்து வருகிறது.

    காஷ்மீர் பள்ளத்தாக்கில் காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து இடங்களை கொடுக்க தேசிய மாநாடு கட்சி தயாராக உள்ளது. ஜம்மு பகுதயிில் 28 முதல் 30 இடங்களை கொடுக்க தயாராக இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி தேசிய மாநாடு கட்சியின் கோட்டையாக விளங்கும் சில தொகுதிகளை கேட்பதாக தெரிகிறது.

    • ஜம்மு-காஷ்மீரில் 60 முதல் 70 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளது.
    • கோட்டையாக விளங்கும் ஜம்முவில் காங்கிரஸ் கூட்டணியை முறியடிக்க திட்டம்.

    ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25, அக்டோபர் 1-ந்தேதி என மூன்று கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றன. இன்று காலை பாஜக 44 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இந்த நிலையில் அறிவித்த வேகத்தில் அந்த வேட்பாளர் பட்டியலை திரும்பப் பெற்றுள்ளது. அதற்குப்பதிலாக புதிய வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என பாஜக தெரிவித்துள்ளது.

    முன்னதாக, 44 இடங்களுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று காலை வெளியிட்டுள்ளது. முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 15 இடங்களுக்கும், 2-ம் கட்ட தேர்தல் நடைபெறும் 10 இடங்களுக்கும் 3-ம் கட்ட தேர்தல் நடைபெறும் 19 இடங்களுக்கும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

    ஜம்முவில் உள்ள பாம்போர், ஷோபியான், அனந்த்நாக் மேற்கு, அனந்த்நாக் உள்ளிட்ட ஜம்மு பகுதி தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை வெளியிட்டது.

    அரவிந்த் குப்தா, யுத்வீர் சேதி முறையே ஜம்மு மேற்கு மற்றும் ஜம்மு கிழக்கு தொகுதி வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். தேவேந்திர சிங் ராணா நக்ரோட்டா தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். அர்ஷித் பாத் ராஜ்போரா தொகுதியிலும், ஜாவித் அகமது குவாத்ரி ஷோபியான் தொகுதியிலும், முகமது ரபீக் வாணி அனந்த்நாக் மேற்கு தொகுதியிலும், சயத் வசாஹாத் அனந்த்நாக் தொகுதியிலும், சுஷ்ரி ஷகுன் பரிஹார் கிஷ்த்வார் தொகுதியும், கஜய சிங் ராணா தோடா தொகுதியிலும் நிறுத்தப்படுவதாக தெரிவித்தது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடைசியாக 2014-ல் தேர்தல் நடைபெற்றது. பாஜக 25 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    காங்கிரஸ் கட்சி பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. தனது கோட்டையாக விளங்கும் ஜம்முவில் அந்த கூட்டணியின் திட்டத்தை முறியடிக்க பாஜக அனைத்து வகையிலான முயற்சிகளையும் மேற்கொள்ளும்.

    • காங்கிரஸ்- தேசிய மாநாடு கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டி.
    • காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாஜக சுயேட்சை வேட்பாளர்களை ஆதரிக்க திட்டம்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25, அக்டோபர் 1-ந்தேதி என மூன்று கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றன.

    காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு தேசிய கட்சிகளும் போட்டியிடுகின்றன. பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சியும், மெகபூபா முக்தியின் மக்கள் ஜனநாயக கட்சியும் முன்னணி மாநில கட்சிகளாக உள்ளன.

    90 தொகுதிகளிலும் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாடு கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துவிட்டன. மெகபூபா முக்தி இந்த கூட்டணியில் இணைவாரா? எனத் தெரியவில்லை. பரூக் அப்துல்லா, மெகபூபா முக்தி கட்சியிடன் தேர்தலுக்கு முந்தைய அல்லது தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி என்ற கருத்தை புறந்தள்ளிவிடவில்லை.

    இதற்கிடையே பாஜக 60 முதல் 70 இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் அமித் ஷா, ஜே.பி. நட்டா உளளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தின்போது மக்களுக்கு மிகவும் அறிமுகமான பிரபலமானவர்களை வேட்பாளர்களாக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    60 முதல் 70 தொகுதிகளில் போட்டியிடலாம் என்பதால் தனித்து களம் இறங்கிய பாஜக தீர்மானித்துள்ளது. இதனால் ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் மூன்று முனை போட்டி நிலவ வாய்ப்புள்ளது.

    மேலும், சொந்த கட்சி வேட்பாளர்களுக்குப் பதிலாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள வலுவான சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    2014-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்று முடிந்த பின் பாஜக ஆதரவுடன் மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி ஆட்சி அமைத்து. முஃப்தி முகமது சயீத் முதல்வரானார். அவர் 2016 ஜனவரி மாதம் காலமானார். அதனைத்தொடர்ந்து அவரது மகள் மெகபூபா முஃப்தி முதல்வரானார்.

    2018-ல் இருந்து மெகபூபா முப்திக்கு அளித்த ஆதரவை பாஜக திரும்பப் பெற்றது. பின்னர் நவம்பர் மாதம் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அதன்பின் தற்போதுதான் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.

    • வினேஷ் போகத் ஹரியானா மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியானது.
    • காங்கிரசில் வினேஷ் போகத் இணைந்தால் வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    ஒலிம்பிக் போட்டியில் 50 கிலோ மகளிர் மல்யுத்த போட்டியில் வினேஷ் போகத் அரையிறுதியில் வெற்றி பெற்றும், இறுதிக்கு போட்டிக்கு தகுதி பெற்ற பின்னர் அவர் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அவருக்கு பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலர் ஆதரவு தெரிவித்தனர்.

    இதனையடுத்து சமீபத்தில் இந்தியா திரும்பிய வினேஷ் போகத்துக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அரியானா மாநில அரசு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தது.

    வினேஷ் போகத் அரியானா மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அரியானாவில் முன்னாள் முதல்வரும் அம்மாநில எதிர்க்கட்சி தலைவருமான பூபிந்தர் சிங் ஹுடாவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து வினேஷ் போகத் மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தித்து பேசினர்.

    வினேஷ் போகத்திடம் பேசிய பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய பூபிந்தர் சிங் ஹுடா, "எங்கள் கட்சியில் இணைவது குறித்து வினேஷ் போகத் தான் முடிவு செய்யவேண்டும். ஆனால் காங்கிரஸ் கட்சியில் அவர் இணைந்தால் வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம். முடிவு அவர் கையில் தான் உள்ளது" என்று தெரிவித்தார்.

    அரியானா மாநிலத்தில் சட்டசபையின் பதவிக்காலம் வருகிற நவம்பரில் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, அம்மாநிலத்திற்கு அக்டோபர் 1-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 90 இடங்களிலும் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டி.
    • மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதுதான் முதல் வேலை- பரூக் அப்துல்லா

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வருகிற செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1-ந்தேதிகளில் மூன்று கட்டமாக சட்டமன்ற தேர்தல் 90 இடங்களுக்கு நடைபெற இருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாடு, மெகபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் முதன்மையான மாநில கட்சியாக உள்ளன.

    பா.ஜ.க.-வை வீழ்த்த இந்த மூன்று கட்சிகளும் இந்தியா கூட்டணி என்ற அடிப்படையில் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்குமா? எனத் தெரியவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து போட்டியிட வாய்ப்புள்ளது.

    கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் 90 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி என தேசியவாத காங்கிரஸ் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

    நேற்று பரூக் அப்துல்லா தனது மகன் உமல் அப்துல்லா உடன் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் அவர் கூறுகையில் "நாங்கள் ஒரு நல்ல சந்திப்பை, சுமூகமான சூழலில் நடத்தினோம். கூட்டணி தேர்தலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கடவுள் விரும்பினால் அது சீராக நடைபெறும். கூட்டணி இறுதியானது. விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும். 90 தொகுதிகளில் இந்த கூட்டணி போட்டியிடும்.

    இவ்வாறு பரூக் அப்துல்லா தெரிவித்தார்.

    மேலும் தேர்தலுக்கு முன் அல்லது தேர்தலுக்கு பின் மெகபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி என்பதை அவர் புறந்தள்ளிவிடவில்லை.

    மாநில அந்தஸ்து எங்களுக்கு முக்கியமானது. இது எங்களுக்கு வாக்குறுதியாக அளிக்கப்பட்டுள்ளது. மாநிலம் மோசமான நாட்களை பார்த்துள்ளது. முழு அதிகாரத்துடன் மீட்டெடுக்கப்படும் என நம்புகிறோம். நாட்டில் நிலவும் பிளவுபடுத்தும் சக்திகளை தோற்கடிப்பதற்காக தேர்தலில் போராடுவதே எமது பொதுவான குறிக்கோள் ஆகும்.

    இவ்வாறு பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

    • சில மாநிலங்கள் தலா ஐந்து இடங்கள் என மொத்தம் 25 இடங்கள் தந்திருந்தால்....
    • நாம் கடினமாக உழைக்க வேண்டும். வெற்றி முக்கியமானது. வெறும் வார்த்தைகளால் மட்டும் வெற்றி சாதனையை பெற முடியாது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 90 இடங்களுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கடும் நெருக்கடி கொடுத்தது. இதனால் பாஜக-வால் தனி மெஜாரிட்டி கிடைக்காமல் போனது.

    காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்றது. இந்தியா கூட்டணி 240 இடங்களில் வெற்றி பெற்றது. 32 இடங்களில் கூடுதலாக வெற்றி பெற்றிருந்தால் இந்தியா கூட்டணி ஆட்சியை பிடித்திருக்கும்.

    இந்த நிலையில்தான் ஜம்மு-காஷ்மீர், அரியானா மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலிலும் வெற்றியை பெற இந்தியா கூட்டணி கடுமையாக உழைக்க தீர்மானித்துள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்கார்ஜூன கார்கே, கட்சி தொண்டர்களிடையே பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மக்களவை தேர்தில் நாம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் இருந்திருக்கலாம். ஆனால், இந்தியா கூட்டணி பல இடங்களில் வெற்றி பெற்றது. ஜம்மு-காஷ்மீர், மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசம் மற்றும் மற்ற சில மாநிலங்கள் தலா ஐந்து இடங்கள் என மொத்தம் 25 இடங்கள் தந்திருந்தால் ராகுல் காந்தி பிரதமராகியிருப்பார்.

    இதற்காகத்தான் நாம் கடினமாக உழைக்க வேண்டும். வெற்றி முக்கியமானது. வெறும் வார்த்தைகளால் மட்டும் வெற்றி சாதனையை பெற முடியாது. களப்பணியை செய்வதை தவிர்த்து நாம் பேசிக் கொண்டிருந்தால் அது நிறைவேறாது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து மீட்டெடுப்பதற்கு வெற்றி முக்கியமானது. வெற்றி பெற்றால் மீண்டும் மாநில அந்தஸ்து கிடைக்கும். வெற்றி பெற்றால் சட்ட மன்றம் திரும்பும். வெற்றி பெற்றால் மாவட்டம், ஊராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படும்

    இவ்வாறு கார்கே தெரிவித்தார்.

    • தேர்தல் களம் ஒவ்வொருவருக்கும் சமமாக இருக்க வேண்டும்.
    • மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதால் மற்ற கட்சிகளை விட அதற்கு அனைத்து வகையான பாதுகாப்பும் உள்ளது.

    ஜம்மு-காஷ்மீரில் 90 சட்டமன்ற இடங்களுக்கு செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1-ந்தேதி என மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தெரிவித்தார்.

    இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரான பரூக் அப்துல்லா தேர்தல் ஆணையத்தின் முடிவை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பரூக் அப்துல்லா கூறுகையில் "இன்று, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு தேர்தல் நடத்தப்படும் என முடிவு எடுக்கப்பட்டதற்கு நான் கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முன்னதாக, ஆகஸ்ட் 20 முதல் 25-ந்தேதிக்குள் முடிவு எடுக்கப்படும் என பேசிக்கொண்டிருந்தார்கள். அதற்கு முன்னதாகவே முடிவு எடுக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

    நாட்டின் சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. ஜம்மு மற்றும் காஷ்மீரில் மத்திய அரசின் ஆட்சி அகற்றப்படும் என்று அவர்கள் நம்புகிறார்கள். நாங்கள் தேர்தலுக்கு தயாராக இருக்கிறோம். நாங்கள் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகும்போது ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற தேர்தலை சேர்த்து நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தோம். அவர்கள் சில மாநில தேர்தல்களை சேர்த்து நடத்தினார்கள். எனினும் இங்கே தேர்தல் நடத்தவில்லை. இந்த தேர்தலில் மக்கள் அதிக அளவில் திரண்டு வந்து வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன்.

    தேர்தல் களம் ஒவ்வொருவருக்கும் சமமாக இருக்க வேண்டும். மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதால் மற்ற கட்சிகளை விட அதற்கு அனைத்து வகையான பாதுகாப்பும் உள்ளது. இது நடக்கக் கூடாது, நாங்கள் விரும்பும் சமநிலையை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்" என பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

    • அமைச்சர் அறிவிப்பது, மீண்டும், மீண்டும் மக்களை ஏமாற்றும் செயலாகும்.
    • டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடும் அறிவிப்பினை வெளியிட வேண்டும்

    தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

    கடந்த சட்டமன்ற தேர்தல் தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து மதுவிலக்கு என்று கூறிவிட்டு இன்று சட்டமன்ற கூட்டத் தொடரில் மதுவிலக்கு சாத்தியம் இல்லை அந்த துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இது தமிழக மக்களுக்கு அளித்து மிகப் பெரிய துரோகம்.

    மதுவினாலும் மதுக்கடைகளினாலும் பிரச்சனை ஏற்படும்போதெல்லாம் மதுக்கடைகளை படிப்படியாக மூடுவோம் என்று பலமுறை அறிவித்துவிட்டு அவற்றை மூடாமல் இன்று தமிழக அரசு கள்ளக்குறிச்சி கள்ளச்சாரயத்தால் பல பலர் இறந்த பிறகு இன்று கள்ளச்சாராயத்தை ஒழிப்போம், மீண்டும் டாஸ்மாக் கடைகளை விரைவில் படிப்படியாக மூடுவோம் என்றும் அத்துறை

    அத்துறை அமைச்சர் அறிவிப்பது, மீண்டும், மீண்டும் மக்களை ஏமாற்றும் செயலாகும்.

    தேர்தல் அறிக்கையில் கொடுத்த பல வாக்குறிதிகளை நிறைவேற்றாத, நடைமுறைப்படுத்தாத தமிழக அரசு, இனிமேலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக பூர்ண மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். மக்கள் நலன் கருதி அதற்கு முதல்படியாக டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடும் அறிவிப்பினை வெளியிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

    • சட்டமன்ற தேர்தல் 2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடக்க உள்ளது.
    • அரசியல் பணிகளை தீவிரப்படுத்தினால் தான் தேர்தல் களத்தை வலிமையோடு சந்திக்க முடியும்.

    நடிகர் விஜய் சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி அடுத்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என்று அறிவித்தார்.

    68-வது படமான 'கோட்' படத்துக்கு பிறகு இன்னொரு படத்தில் நடித்து விட்டு முழு நேர அரசியலில் இறங்குவேன் என்றும் தெரிவித்தார்.

    எனவே விஜய்யின் கடைசி படமான 69-வது படத்தை இயக்குவது யார் அதில் யாரெல்லாம் நடிப்பார்கள். படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்றெல்லாம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது.

    69-வது படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர் கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் 69-வது படத்தை கைவிட விஜய் முடிவு செய்து இருப்பதாக வலைத்தளத்தில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அடுத்த சட்டமன்ற தேர்தல் 2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடக்க உள்ளது. விஜய் 69-வது படத்தில் நடிக்க தொடங்கினால் அது முடிய ஒரு வருடம் ஆகிவிடும். இதனால் அரசியல் மற்றும் தேர்தல் பணிகளை தொடங்குவதில் தாமதம் ஏற்படும்.

    இப்போதே சுற்றுப்பயணம், மாநாடு, மாவட்டம் தோறும் தொண்டர்கள் ஆலோசனை கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் என்று அரசியல் பணிகளை தீவிரப்படுத்தினால்தான் தேர்தல் களத்தை வலிமையோடு சந்திக்க முடியும் என்று நெருக்கமானவர்கள் வற்புறுத்துவதாக கூறப்படுகிறது.

    இதனாலேயே 69-வது படத்தில் விஜய் நடிக்க மாட்டார் என்று பேசப்படுகிறது. ஆனாலும் விஜய் தரப்பில் இதனை உறுதிப்படுத்தவில்லை.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றிருப்பது பெரும் மகிழ்வைத் தருகிறது.
    • நாம் தமிழர் கட்சி பெற்றிருக்கும் வாக்குகளென்பது பெரும் சனநாயக மறுமலர்ச்சியாகும்.

    மக்களவைத் தேர்தலில் பெற்ற மாநிலக்கட்சி அங்கீகாரத்தை ஊக்கமாக கொண்டு 2026ம் ஆண்டு தேர்தலில் ஆட்சியை பிடிக்க உறுதியேற்போம் என்றும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    நாம் தமிழர் கட்சிக்கு மாநிலக்கட்சி அங்கீகாரம்! தமிழின அரசியல் வரலாற்றில் ஒரு புத்தெழுச்சிப்பாய்ச்சல்!

    அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, 8.2 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருக்கிறது.

    இத்தேர்தலில் வெற்றி எனும் இலக்கை அடையாவிட்டாலும், கணிசமான வாக்குகளைப் பெற்று, மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றிருப்பது பெரும் மகிழ்வைத் தருகிறது.

    'தமிழ்த்தேசியம்' எனும் உயரிய தத்துவ முழக்கத்தை எம் முன்னோர்களும், மூத்தோர்களும் பன்னெடுங்காலத்திற்கு முன்பே தூக்கிச் சுமந்தபோதும், அக்கருத்தியல் முழக்கம் வெகுமக்கள் வடிவம் பெறாமலேயே இருந்தது.

    அந்தப் போதாமையையும், குறைபாட்டையும் முற்றிலும் போக்கி, தமிழ்த்தேசியத்தை வெகுமக்கள் அரசியலாக்கி, தேர்தலிலே களம் கண்டது நாம் தமிழர் கட்சி.

    2016ஆம் ஆண்டு முதன்முதலில் தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, எட்டே ஆண்டுகளில் மாநிலக் கட்சியாகப் பரிணமித்திருப்பது தமிழின அரசியல் வரலாற்றில் ஒரு புத்தெழுச்சிப்பாய்ச்சல்!

    சின்னம் பறிப்பு, அதிகார முறைகேடு, அரசியல் நெருக்கடி எனப் பல அடக்கு முறைகளைத் தாண்டியும், சாதி, மதம், மது, பணம் எனப் புரையோடிப்போன சமூகத்தீங்குகளைக் கடந்தும் நாம் தமிழர் கட்சி பெற்றிருக்கும் வாக்குகளென்பது பெரும் சனநாயக மறுமலர்ச்சியாகும்.

    இத்தேர்தலில் பெற்ற மாநிலக்கட்சி அங்கீகாரத்தை ஊக்கமாகக் கொண்டு, 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க உறுதியேற்கிறோம்.

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 35,60,485 மதிப்புமிக்க வாக்குகளைத் தந்து, நாம் தமிழர் கட்சியைப் பெரும் அரசியல் ஆற்றலாக உருவெடுக்கச் செய்த தாய்த்தமிழ்ச் சொந்தங்கள், போற்றுதற்குரிய பெருமக்கள், வேட்பாளர்களாகக் களத்தில் நின்ற எம் உடன்பிறந்தார்கள், எல்லாவுமாகத் துணைநின்ற அன்பிற்கினிய உறவுகள், உயிரைக் கொடுத்து உழைத்த உயிருக்கினிய தம்பி, தங்கைகள் என அனைவருக்கும் என்னுடைய புரட்சிகரமான வாழ்த்துகளையும், உளப்பூர்வமான அன்பினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இலக்கு ஒன்றுதான்! இனத்தின் விடுதலை! இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்! நாம் தமிழர் !

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×