என் மலர்
நீங்கள் தேடியது "ஆமைகள்"
- மாணவ- மாணவிகள் ஆசியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- கடல் ஆமைகள், பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த உறுதிமொழி ஏற்பு.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வனச்சரகத்தின் மூலம் ஆற்காட்டுதுறை மீனவர் கிராமத்தில், வனச்சரக அலுவலர் அயூப் கான் தலைமையில், கடல் ஆமை விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில்முனைவர் சிவகணேசன் கடலாமை முக்கியத்துவம் குறித்து மீனவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
நிகழ்ச்சியில் மீன்வளத்துறை ஆய்வாளர், நடேசன் ராஜா கடலோர காவல்துறை குழும போலீசார், ஆற்காட்டுதுறை கிராம பஞ்சாயத்தார்கள், முனைவர் அறிவு கிராம மீனவர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் ஆசியர்கள் மற்றும் வனத்துறையினர்கள் கலந்து கொண்டனர்.
கடல் ஆமைகள், பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்று கொண்டார்.
முடிவில் வனவர் ராமதாஸ் நன்றி கூறினர்.
- கோட்டக்குப்பம் அருகே அரிய வகை ஆமைகளை கடத்திய கடலூர் வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- பையில் விலை உயர்ந்த 46 அரிய வகை ஆமைகள் இருந்தது தெரியவந்தது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் மதுவிலக்கு சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொது சந்தேகத்துக்கிடமான வகையில் 2 மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிப ர்களை நிறுத்தி அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் பையில் விலை உயர்ந்த 46 அரிய வகை ஆமைகள் இருந்தது தெரியவந்தது. இது குறித்து திண்டிவனம் வன சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வன சரக அலுவலர் அஸ்வினி, வனவர் பாலசுந்தரம் மற்றும் அதிகாரிகளிடம் 2 வாலிபர்களையும் கோட்டகுப்பம் போலீசார் ஒப்படைத்தனர்.
அவர்களை திண்டிவனம் வனசாரக அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை செய்ததில், அவர்கள் கடலூர், அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த நாகேந்திரன் (வயது 29), கார்த்திக் (24) என்பது தெரிய வந்தது. அவர்களிடமிருந்த 46 அரிய வகை ஆமைகள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆமைகளை கடத்தில் 2 வாலிபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படு த்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
- ஏவுகணை சோதனை நிறுத்தி வைப்பதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு அறிவித்துள்ளது.
- ஆமைகள் அதிக அளவில் கூடு கட்டும் பருவம் ஜனவரி முதல் மார்ச் வரையாகும்.
ஒடிஷா கடற்கரையில் உள்ள வீலர் தீவில் ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் அதிக அளவில் கூடு கட்டும் பருவம் ஜனவரி முதல் மார்ச் வரையாகும்.
இந்த கடல் ஆமை உயிரினங்களை காப்பாற்றும் விதமாக ஏவுகணை சோதனை நிறுத்தி வைப்பதாக இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு அறிவித்துள்ளது.
ஏவுகணை சோதனைகளின் பிரகாசமான ஒளி, அதிகமான ஒலிகள் ஆமைகளை பாதிப்பதால் தற்காலிகமாக இது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
- மீனவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற உள்ளது.
- 200க்கும் மேற்பட்ட ஆமைகள் கரை ஒதுங்கியதாக கூறப்படுகிறது.
மாமல்லபுரம்:
சென்னை சுற்றுவட்டார கடற்கரை பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி வருகிறது. இது வன ஆர்வலர்கள் மற்றும் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அழுகிய நிலையில் கரை ஒதுங்கும் ஆமைகளால், சுற்றுச்சூழல் சீர்கேடும் அடைந்து வருகிறது. இதுவரை 200க்கும் மேற்பட்ட ஆமைகள் கரை ஒதுங்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்றும், இன்றும் மாமல்லபுரம் சுற்றுவட்டார கடலோர மீனவர் கிராமங்களான நெம்மேலி, தேவநேரி, பட்டிபுலம், வெண்புருஷம், கொக்கிலமேடு உள்ளிட்ட கடலோரத்தில் 20க்கும் மேற்பட்ட ஆமைகள் ஆங்காங்கே செத்து கரை ஒதுங்கி கிடக்கிறது. இதை அப்பகுதி மீனவர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கிழக்கு கடற்கரை சாலை கடலோர பகுதியில், அதிகளவில் ஆமைகள் இறந்து கரை ஒதுங்குவதாக தகவல்கள் வந்துள்ளது. இது குறித்து அரசுக்கு தெரிவித்துள்ளோம். கடற்கரை பகுதிகளுக்கு முட்டையிட வரும் ஆமைகளுக்கு இயற்கை சூழலில் நெருக்கடி ஏற்படுவதால், அது தன் போக்கை மாற்றி மாற்று இடங்களுக்கு செல்லும் போது, கனவா வலைகள் (டிரால் நெட்) வலைகளில் அடிபட்டு மூச்சுவிட முடியாமல் இறந்தும் கரை ஒதுங்குவதாக தெரிய வந்துள்ளது.
மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம். வரும் 22-ந் தேதி மீன்வளத்துறை சார்பில், இது தொடர்பாக மீனவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற உள்ளது.
இறந்து கரை ஒதுங்கிய ஆமைகளை, வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் கடற்கரை பகுதிகளில் புதைத்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- விழிப்புணர்வு பேரணியில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
- கடலுக்குள் சென்று மீனவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி கடற்கரையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் மீன்வளத்துறை சார்பில் மீனவர்களிடம் அழிந்து வரும் கடல்வாழ் ஆமைகளின் இனத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி பொன்னேரி வருவாய் கோட்ட சார் ஆட்சியர் வாகே சங்கேத் பல்வந்த் தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். இனப்பெருக்கத்திற்காக கடற்கரையில் ஆமைகள் இடும் முட்டைகளை பாதுகாக்கவும், கடலில் ஆமைகள் செல்லும் வழித்தடத்தில் மோட்டார் படகுகளை இயக்கி அவைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
நெகிழி கழிவுகள், ரசாயன கழிவுகள் கடலில் கலப்பதை தடுத்து சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படா வண்ணம் கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்க வலியுறுத்தியும் இந்த விழிப்புணர்வு பேரணியில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் மீன் வளத்துறை உதவி இயக்குனர் அஜய் ஆனந்த் தலைமையில் பழவேற்காடு பறவைகள் சரனாலய வணவர் நரசிம்மன் கடலோர பாதுகாப்பு அதிகாரி சபாபதி ஆகியோர் மாணவர்களுடன் பாதுகாப்பு உடை அணிந்து கடலுக்குள் சென்று மீனவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி கடற்கரையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
- இகாபோ ஆசு ஆற்றங்கரையோரம் சுமார் 5 ஆயிரம் டிராஜாகாஸ் ஆமை குஞ்சுகள் சுற்றித்திரிந்தன.
- வனத்துறை போலீசாரின் இந்த செயலுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
பிரேசிலியா:
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் உள்ள டிராஜாகாஸ் என அழைக்கப்படும் மஞ்சள் புள்ளி ஆமைகள் அருகி வரும் உயிரினமாக உள்ளது. குறிப்பாக கடற்கரையில் அவையிடும் முட்டையை மற்ற விலங்குகள், பறவை உள்ளிட்ட உயிரினங்கள் நாசப்படுத்தி விடுகின்றன. எனவே அதனை பாதுகாக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்தவகையில் அங்குள்ள இகாபோ ஆசு ஆற்றங்கரையோரம் சுமார் 5 ஆயிரம் டிராஜாகாஸ் ஆமை குஞ்சுகள் சுற்றித்திரிந்தன. அவற்றை வனத்துறை போலீசார் பத்திரமாக மீட்டு ஆற்றில் கொண்டு விட்டனர். வனத்துறை போலீசாரின் இந்த செயலுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
- ஆமைகள் நவம்பர் முதல் மார்ச் இறுதி வரை முட்டையிடும்.
- ஒவ்வொரு ஆமையும் 50 முதல் 100 முட்டைகள் இடும்.
ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள கஹிர்மத் கடற்கரைக்கு 12 நாட்களில் சுமார் 7 லட்சம் ஆலிவ் ரிட்லி ஆமைகள் வந்துள்ளன. வரிசையாக ஆமைகள் குவிந்து கிடக்கின்றன.
இது அங்குள்ள பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து இந்திய மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி ஜி.வி ஏ பிரசாத் கூறுகையில்:-
இந்த ஆமைகள் நிலவொளி இரவுகளில் முட்டையிட விரும்புகின்றன. அட்லாண்டிக் பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணித்து இங்கு வந்துள்ளன.
ஒவ்வொரு ஆமையும் 50 முதல் 100 முட்டைகள் இடும். அவற்றைப் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆமைகள் நவம்பர் முதல் மார்ச் இறுதி வரை முட்டையிடும் அதனால் கடற்கரையில் மீன்பிடிக்க அரசாங்கம் தடை விதித்துள்ளது. இன்னும் லட்சம் ஆமைகள் வரக்கூடும் என்றார்.