என் மலர்
நீங்கள் தேடியது "சமூக ஊடகம்"
- சமூக ஊடகங்களில் மூழ்கி கிடப்பது, போதை பொருள் பயன்ப டுத்துவதற்கு சமம்.
- போதை பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு பிரிவில் புகார் அளிக்கலாம்.
திருப்பூர் :
மாநில, மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு, குழந்தைகள் மற்றும் பெண்கள் நல கல்வி அறக்கட்டளை சார்பில் திருப்பூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர், சார்பு நீதிபதி மேகலா மைதிலி தலைமை வகித்து பேசுகையில், சமூக ஊடகங்களில் மூழ்கி கிடப்பது, போதை பொருள் பயன்படுத்துவதற்கு சமம். எனவே, முதலில் நீங்கள் சமூக ஊடகங்களில் இருந்து வெளியே வர வேண்டும்.
உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாக இருக்கும் பட்சத்தில், நீங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கக்கூடிய போதை பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு பிரிவில் புகார் அளிக்கலாம். புகார்தாரர் தகவல்கள் பாதுகாக்கப்படும் என்றார்.
- அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் "ப்ளூ டிக்" மூலம் அடையாளம் காணப்படுவார்கள்
- டிஜிட்டல் பிசினஸிற்குள் கொண்டுவருவதுடன் மின்மினி செயலியிலும் லிஸ்ட் செய்யப்படுகிறது.
சென்னை:
உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களிடையே நெருக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன், தமிழர்கள் தங்களின் தோழமை மற்றும் ஒற்றுமை உணர்வை உணரக்கூடிய ஒரே தளமாக, 'மின்மினி' என்ற செயலி உருவாக்கப்பட்டு இன்று (ஜனவரி 22) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பயனர்கள் ஒருவருக்கொருவர் அரட்டையடிக்கலாம் (சாட் செய்யலாம்), தனிப்பட்ட மற்றும் பொதுவான குழுக்களை உருவாக்கலாம். மேலும் மற்ற செயலி பயனர்களுடனும் தடையின்றி தகவல்களை பரிமாறிக்கொள்ளலாம்.
மின்மினி குழுவால் மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு மல்டி-சேனல் நெட்வொர்க்குகளை கொண்ட மின்மினி செயலியானது கன்டென்ட் கிரியேட்டர்களுக்கும், அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களுக்கும், சிட்டிசன் ஜர்னலிஸ்ட்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் சிறந்த சமூக ஊடக தளமாக விளங்கும்.
சமூக ஊடகங்களை இதுவரை பயன்படுத்தாதவர்கள் கூட இந்த மின்மினி செயலியை மிகவும் சுலபமாக பயன்படுத்தக்கூடிய எளிய அம்சங்களுடன், டிஜிட்டல் உலகிற்கு கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை
மின்மினியில், "அங்கீகாரம்" (Verified) என்ற நிலை பணம் கொடுத்து பெறப்படுவதில்லை. மாறாக கன்டென்ட்டின் தரம் மற்றும் மக்களின் வரவேற்பு ஆகியவற்றின் அடிப்படையில் அங்கீகாரமானது நிறுவனத்தால் வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் "ப்ளூ டிக்" மூலம் அடையாளம் காணப்படுவார்கள், எனவே பயனர்கள் நம்பகமான கன்டென்ட்டுகளை படிக்கிறார்கள் அல்லது பார்க்கிறார்கள் என்பதை உணரலாம்.

காலப்போக்கில், இந்த தளத்தில் மற்ற பயனர்களுடன் தகுதியான உள்ளடக்கத்தை (கன்டென்ட்டுகளை) பகிர்ந்து, அர்த்தமுள்ள தாக்கத்தை உருவாக்கும் தனிப்பட்ட பயனர்கள் "அங்கீகரிக்கப்பட்ட பார்ட்னர்கள்" என மேம்படுத்தப்படுவார்கள்".
இன்று நடைபெற்ற மின்மினியின் அறிமுக விழாவில் அதன் நிர்வாக துணைத்தலைவர் எஸ்.ஸ்ரீராம், தனது உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், "உலகளாவிய தமிழ்ச் சகோதரத்துவத்தை மட்டுமே மையமாக வைத்து மின்மினியை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். எங்கள் பயனர்கள் செயலியின் தனித்துவமான பயன்பாட்டு அனுபவம் மற்றும் படைப்பாளர்களுக்கான பிற வருவாய் வாய்ப்புகளின் மூலம் நாங்கள் வழங்கும் பல்வேறு சுவாரஸ்யமான அம்சங்களை பயனர்கள் பெறுவார்கள் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்".
"ஹைப்பர்லோக்கல் கன்டென்ட் மற்றும் எங்கள் செயலியின் மூலம் நாங்கள் உருவாக்கும் இணைப்பைக் கருத்தில் கொண்டு மின்மினி மூலம் விளம்பரதாரர்கள் இந்தியாவின் கடைசி கிராமங்கள் வரை சென்றடைய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்", என்று அவர் மேலும் கூறினார்..
தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான சிறிய கடைகள், எங்கள் ஏஜெண்டுகள் மற்றும் ஊழியர்கள் மூலம் அடையாளம் காணப்பட்டு, 'மின்மினி கடைகள்', என்ற அங்கீகாரம் அக்கடைகளுக்கு வழங்கப்படும். அக்கடைகள், டிஜிட்டல் பிசினஸிற்குள் கொண்டுவருவதுடன் மின்மினி செயலியிலும் லிஸ்ட் செய்யப்படுகிறது. அந்த கடைக்கு வழங்கப்பட்ட பிரத்யேக கியூ ஆர் கோடுகள் (QR Code) மூலம் செயலியை பதிவிறக்கம் செய்து வாடிக்கையாளர்களை மின்மினி பயனர்களாக மாற்றும் பொழுது கடை உரிமையாளர்கள் வருமானம் பெறுவர். மின்மினி கடைகள் மூலம் பயனர்களும் எளிதாக விளம்பரங்களை புக் செய்யலாம் (தாங்கள் செய்யும் தொழில் வாடிக்கையாளர்களை சென்றடைய, விளம்பரம் பெற விரும்பும் சேவை, பிறந்தநாள் வாழ்த்து, திருமண நாள் வாழ்த்து, இரங்கல் செய்தி என பல்வேறு விளம்பரங்களை புக் செய்யலாம்) ஹைப்பர் லோக்கல் விளம்பரங்கள் மூலம் அந்தந்த பகுதிகளுக்கே எளிதாக சென்றடையலாம்.
இந்த செயலியானது தமிழகத்தின் ஒவ்வொரு வட்டாரத்திலும் எலக்ட்ரீஷியன்கள், பிளம்பர்கள், கார்பெண்டர்கள் போன்ற ஆயிரக்கணக்கான சேவை வழங்குபவர்களைக் காலப்போக்கில் கொண்டிருக்கும். எனவே பயனர்கள் அத்தகைய பணியாளர்களை உடனடியாக தேடலாம். சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான அதன் தனித்துவமான விளம்பரத் தொகுப்புகளுடன், மின்மினி பயனர்களை சென்றடையும் வழியையும் வழங்கும்.
"தமிழகம் முழுவதும் 40 லட்சத்துக்கும் அதிகமான கடைக்காரர்கள், சேவை வழங்குபவர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் வணிகர்கள் இருப்பதாக நாங்கள் மதிப்பிட்டுள்ளோம். அவர்களில் பலரை, மின்மினி செயலி மூலம் லிஸ்ட் செய்து அவர்களையும் டிஜிட்டல் பிசினஸிற்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்", என்றார்.
"விளம்பரதாரர்கள் மற்றும் பிராண்டுகளுக்கு, எங்களின் தனித்துவமான பின்-கோடு மூலம், தமிழ்நாட்டின் கடைசி தாலுகா வரை கடைசி மைல் தூரத்தை சென்றடையும் வழியை மின்மினி வழங்கும்", என்று ஸ்ரீராம் கூறினார்.
மின்மினி செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..
- அடுத்தவர் வீட்டு விஷயங்களைத் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டும் நபர்கள் இதுபோன்ற போன்ற சமூக ஊடகப் பதிவுகளை ஊக்குவித்து ஆதரவளித்து வருகின்றனர்.
- அடிப்படை உரிமையை இது போன்ற சமூக ஊடகங்கள் தங்கள் லாபத்திற்காக பறித்துக்கொள்வதை அனுமதிக்கக் கூடாது.
பாஜக உறுப்பினரும், நடிகருமான சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சமூக ஊடகங்கள் என்பவை சமூக அவலங்களைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைப்பதாக இருக்க வேண்டும். பல முக்கியத் தகவல்களை பகிர்வதாகவோ அல்லது மக்களை மகிழ்விக்கும் விதமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைத் தயார் செய்வதாகவோ அவர்களது பணி அமையலாம். ஆனால் தற்போது பலவகையிலும் சமூக ஊடகங்கள் எல்லை மீறுவதாகவே இருக்கிறது.
பிரபலங்களின் கருத்துக்களை விமர்சிப்பதற்குப் பதிலாக அவர்களைத் தனிநபர் தாக்குதலுக்கு உள்ளாக்குவது, உருவக்கேலி செய்வது, அவர்களது சொந்த தனிப்பட்ட வாழ்வைக் கிளறி அருவெறுக்கத் தக்க வகையிலான தவறான விமர்சனங்களைப் பதிவு செய்வது என்று சமூக ஊடகப் போர்வையில் சிலர் செய்யும் செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது.
பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இவர்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்களில் பெரும்பாலும் உண்மை இருப்பதில்லை என்பதோடு, யாரது தனிப்பட்ட வாழ்விலும் தலையிட ஊடகங்களுக்கு உரிமை இல்லை என்பதே அடிப்படை சமூக நீதி.
அடுத்தவர் வீட்டு விஷயங்களைத் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டும் நபர்கள் இதுபோன்ற போன்ற சமூக ஊடகப் பதிவுகளை ஊக்குவித்து ஆதரவளித்து வருகின்றனர்.
இப்படிப்பட்டவர்களின் மனநிலை முதலில் பரிசோதிக்கப்பட வேண்டும் என்பது ஒருபுறம் இருந்தாலும். கையில் ஒரு ஊடகம் இருக்கிறது என்பதற்காக யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்வோம் என்று களமிறங்கி இருக்கும் நபர்கள் குற்றவாளிகளாகவே அடையாளம் காணப்பட வேண்டும்.
உயிர் உடமைகளுக்கு சேதம் விளைவித்தால் தண்டனை உண்டு என்பது போல, தனிப்பட்ட சட்டவிதிகளில் காலத்திற்கும் தேவைக்கும் ஏற்ப மாற்றங்கள் வரவேண்டும். அரசியல் தலைவர்களும்,சமூகத்தில் பொறுப்பான இடத்தில் இருப்பவர்களும் இதுபோன்ற போலியான சமூக ஊடகவாதிகளுக்கு எதிராகக் கண்டனக்குரல் எழுப்ப வேண்டும்.
இது ஒட்டுமொத்த சமுதாயத்திற்கான பிரச்சனையாகப் பார்க்கப்பட வேண்டும். அனைவருக்கும் அவரவர் வேலைகளைப் பார்த்துக்கொண்டு நிம்மதியாக வாழ உரிமையுண்டு எனும் போது,அந்த அடிப்படை உரிமையை இது போன்ற சமூக ஊடகங்கள் தங்கள் லாபத்திற்காக பறித்துக்கொள்வதை அனுமதிக்கக் கூடாது.
இனிமேலும் பொய்களைக் கூறி, கீழ்தரமாக விமர்சித்து தங்கள் எல்லையைக் கடக்கும் நபர்கள் சுய பரிசோதனைசெய்து தங்களைத் திருத்திக்கொள்ளவில்லை என்றால் சட்டப் படியாக உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, எனது கோரிக்கைகளைக் குறிப்பிட்டு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் எல் முருகன் அவர்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். கடிதத்தின் நகலை மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர், திரு.அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கும் அனுப்பி வைக்க இருக்கிறேன். அனாவசியமாக தனிநபர் தாக்குதலில் ஈடுபடும் சமூக ஊடகங்கள் மீதும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும் தேவையான நடவடிக்கைகள் எடுக்க அரசு ஆவன செய்யும் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.
- மாணவர்கள் மனரீதியாக துன்புறுத்தப்படுவதற்கும், உணர்ச்சிவசப்படுவதற்கும் இதுவே காரணம்.
- போலி விவரங்களை வைத்து இன்று சமூக வலைத்தளங்களில் இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தற்போதைய காலக்கட்டத்தில் குழந்தைகள் சமூக வலைதளங்களில் மிகவும் ஆர்வமாக உள்ளனர். இதன் காரணமாக அவர்கள் சந்திக்கும் எதிர்மறையான விளைவுகளானது அவர்களின் படிப்பை மோசமாக பாதிக்கிறது.
இன்றைய நவீன உலகில் இளம் வயதினர் மற்றும் குழந்தைகள் உட்பட எல்லா வயதினரும் சமூக ஊடகங்களை பயன்படுத்தாதவர்களே இல்லை என்ற அளவுக்கு அது முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக கோவிட்-19 இன் தொடக்கத்தில் இருந்து, மக்களிடையே இன்டர்நெட் அக்சஸ் பயன்பாடு வேகமாக அதிகரித்தது, ஏனெனில் அந்த காலகட்டத்தில் நாம் ஒரு நபரிடம் தொடர்பு கொள்ளவோ அல்லது சமூக ரீதியாக தொடர்பு கொள்ளவோ ஒரே வழி இதுதான். அதேசமயம் இதனை பயன்படுத்துவதால் பல்வேறு தீமைகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக குழந்தைகளின் உடல் ஆரோக்கியம், மன வளர்ச்சிக்கு சமூக ஊடகங்கள் பெரும் தீங்கு விளைவிக்கிறது. அத்துடன் சமூக ஊடகங்களிலேயே அவர்கள் நேரத்தை வீணடிக்கின்றனர்.

சமூக ஊடகங்கள் குழந்தைகளுக்கு பல நன்மைகளை வழங்குகின்றன. குறிப்பாக மாணவர்கள் பல விஷயங்களைக் கண்டறியவும், அவர்களின் அறிவை மேம்படுத்தவும், தொலைதூரத்திலிருக்கும் நண்பர்களுடன் தொடர்பு கொள்ளவும் மற்றும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுடன் தொடர்பு கொள்ளவும் உதவும் மிகப்பெரிய தளங்களாகும். நாம் அனைவரும் அறிந்தபடி, சமூக ஊடகங்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றன, ஏனெனில் இது மனிதர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருக்க உதவுகிறது. இப்போதெல்லாம் குழந்தைகள் சமூக தளங்களில் மிகவும் ஈடுபாடு கொண்டுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் சந்திக்கும் எதிர்மறையான விளைவுகளானது அவர்களின் படிப்பை மோசமாக பாதிக்கிறது.
சைபர்புல்லிங் என்பது உலகளவில் உள்ள முக்கிய கவலைகளில் ஒன்றாகும். இது சமூக ஊடகங்களில் இணையத்தில் மற்றொரு நபரைக் கையாளவும், அவமானப்படுத்தவும் மற்றும் தீங்கு விளைவிக்கவும் நிறைய நடக்கிறது. மாணவர்கள் மனரீதியாக துன்புறுத்தப்படுவதற்கும், உணர்ச்சிவசப்படுவதற்கும் இதுவே காரணம். மேலும் குழந்தைகளின் மன ஆரோக்கியத்திற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும், மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வை ஏற்படுத்தும். சமூக ஊடகங்களில் அதிகப்படியான ஈடுபாடு மாணவர்களை அவர்களின் கல்வியிலிருந்து திசை திருப்புகிறது.
சாதாரணமாக 13 வயது நிறைவடைந்தவுடன் மட்டுமே சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்க முடியும். ஆனால் போலி விவரங்களை வைத்து இன்று சமூக வலைத்தளங்களில் இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருப்பினும் 13 வயது நிறைவடைந்தாலும், பெரும்பாலான வெப்சைட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் குறித்து குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கற்பிக்க வேண்டும்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் சமூக ஊடக செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். அவர்கள் பயன்படுத்தும் ஆப்ஸின் நன்மை தீமை குறித்து குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கற்பிக்க வேண்டும்.
13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் அல்லது அதற்கும் குறைவான நேரம் மட்டுமே இன்டர்நெட் பயன்படுத்த வேண்டும் என்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது அவசியமாகும்.
பாதுகாப்பான இன்டர்நெட் அக்சஸை பெற்றோர்கள் பயன்படுத்துவதும், அதன் நன்மைகளை குழந்தைகளுக்கு கற்பிப்பதும் அவசியம் ஆகும். ஏனெனில், குழந்தைகள் அதன் நன்மைகளை புரிந்துகொண்டு அவற்றை பின்பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
சமூக ஊடகங்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் குழந்தைகளின் தூக்க முறை பாதிக்கப்படுகிறது.சமூக ஊடகங்களின் முக்கிய எதிர்மறை விளைவுகளில் ஒன்று, மாணவர்களுக்குத் தேவையான தூக்கத்தின் அளவு குறைவதாகும். தூக்கமின்மை மன மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கிறது. குறிப்பாக மாணவர்கள் நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க ஆரோக்கியமான தூக்கம் கட்டாயமாகும்.
- நியாயமற்ற வணிக நடைமுறைகளில் மெட்டா ஈடுபட்டதாக இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) குற்றம் சாட்டியுள்ளது.
- வாட்ஸ்அப் 50 கோடி பயனாளர்களுடனும் பேஸ்புக் 37.8 கோடி பயனாளர்களுடன் முன்னணியில் உள்ளது
பிரபல சமூக ஊடகங்களான வாட்ஸ்அப். பேஸ்புக் , இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை நிர்வகிக்கும் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா நிறுவனத்துக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு மாற்றப்பட்ட வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கைகள் மூலம் வாட்ஸ்அப் பயனாளர்களின் தகவல்களை, பேஸ்புக்கிடம் கொடுத்து சமூக வலைதள சந்தையின் நியாயமற்ற வணிக நடைமுறைகளில் மெட்டா ஈடுபட்டதாக இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) குற்றம் சாட்டியுள்ளது.
இதனால் மற்ற சமூக வலைத்தளங்களுக்கு வணிக ரீதியிலான இழப்பு ஏற்படுத்தப்பட்டதாகக் கூறி மெட்டா நிறுவனத்துக்கு 213.14 கோடி ரூபாய் அபராதம் விதித்து இந்திய போட்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த நியாயமற்ற நடைமுறையை உடனடியாக மெட்டா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது. குறிப்பிட்ட அவகாசத்திற்குள் நடத்தை விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே இந்த உத்தரவை எதிர்த்து மெட்டா நிறுவனம் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அதன் இந்தியாவுக்கான செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்திய சமூக வலைதள சந்தையில் மெட்டாவின் வாட்ஸ்அப் சுமார் 50 கோடி பயனாளர்களுடனும் பேஸ்புக் சுமார் 37.8 கோடி பயனாளர்களுடன் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே இணையவழி காட்சி விளம்பர சந்தையிலும் இந்தியாவில் மெட்டா முன்னணியில் உள்ளது.
- கிரிப்டோகரன்சி பிட்காயின் துறையில் பிரதானமாக விளங்குவது ஜப்பானில் இயங்கும் பைனான்ஸ் [Binance] நிறுவனம்
- பிளாக்செயின் துறையில் இயங்கும் 5ireChain என்ற நிறுவனத்தின் நிறுவனர் பிரதிக் கௌரி
கிரிப்டோகரன்சி பிட்காயின் துறையில் பிரதானமாக விளங்குவது ஜப்பானில் இயங்கும் பைனான்ஸ் [Binance] நிறுவனம். இந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் சீனாவை சேர்ந்த சாங்பெங் சாவோ [Changpeng Zhao].
பிளாக்செயின் துறையில் இயங்கும் 5ireChain என்ற நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி [CEO] ஆக இருப்பவர் இந்தியாவை சேர்ந்த . இவர்கள் இருவரும் சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சியின்போது செல்பி எடுத்துள்ளனர்.
அதை பிரதிக் கௌரியின் 5ireChain நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளது. இதை பார்த்த சாங்பெங் சாவோ, அனுமதி இல்லாமல் தனது புகைடபத்தை பகிர்ந்துகொண்டதற்காகப் பிரதிக் கௌரியை கடிந்துகொண்டார்.
என்னுடன் எடுத்த செல்பியை எப்படி உபயோகப்படுத்தக்கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணம், நாங்கள் பேசிக்கொள்ளக் கூட இல்லை, நிகழ்ச்சியில் வெறும் செல்பி மட்டும்தான் எடுத்துக்கொண்டோம் என்று அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறினார்.
இதனையடுத்து அந்த இடுக்கையை 5ireChain நிறுவனம் நீக்கி, எங்கள் நிறுவனர் & CEO பிரதிக் கௌரி மற்றும் Changpeng Zhao ஆகியோருக்கு இடையே எந்த ஒத்துழைப்பு அல்லது வணிக கூட்டணியையும் குறிக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.
- ஏன் வேறு ரூட்டில் செல்கிறீர்கள் என பலமுறை கேள்வி கேட்டும், டிரைவர் பதிலளிக்கவில்லை
- வாகனம் நாகவாராவை அடைந்தபோது, ஓட்டுனர் திடீரென எதிர்பாராத விதமாக ஒரு மேம்பாலம் நோக்கி திரும்பினார்.
பெங்களூரில் டிரைவர் தப்பான வழியில் சென்றதால் ஓடும் ஆட்டோவில் இருந்து 30 வயது பெண் ஒருவர் குதித்துள்ளார்.
நேற்று [வியாழக்கிழமை] இரவு ஹோரமாவில் இருந்து தனிசந்திராவில் உள்ள தனது வீட்டிற்குச் செல்வதற்காக நம்ம யாத்ரி செயலி மூலம் ஆட்டோவை முன்பதிவு செய்திருந்தார்.
இருப்பினும், ஓட்டுநர் வழக்கமான வழியைப் பின்பற்றாமல், ஹெப்பல் பகுதியை நோக்கிச் செல்லத் தொடங்கினார். ஏன் வேறு ரூட்டில் செல்கிறீர்கள் என பலமுறை கேள்வி கேட்டும், டிரைவர் பதிலளிக்கவில்லை. டிரைவரின் சிவந்த கண்களையும் அவர் போதையில் இருந்ததையும் அந்தப் பெண் கவனித்தார். வாகனம் நாகவாராவை அடைந்தபோது, ஓட்டுனர் திடீரென எதிர்பாராத விதமாக ஒரு மேம்பாலம் நோக்கி திரும்பினார்.

வண்டியை நிறுத்துமாறு பெண் கெஞ்சியும் ஓட்டுநர் கேட்கவில்லை. எனவே அச்சமைடைந்த அந்த பெண் உயிரையும் பொருட்படுத்தாமல் ஆபத்தான முடிவை எடுத்தார்.
தாழ்வான பாதையில் ஆட்டோ மெதுவாகச் சென்றபோது, அப்பெண் ஓடும் வாகனத்திலிருந்து குதித்தார். அதிஷ்டவசமாக பெரிய காயங்கள் எதுவுமின்றி அவர் உயிர்பிழைத்துள்ளார். பெண் வெளியே குதித்த பிறகு, டிரைவர் அவளை அணுகி ஆட்டோவுக்கு திரும்பும்படி சமாதானப்படுத்த முயன்றார்.
ஆனால் அதை புறக்கணித்த பெண் வேறு ஆட்டோவில் ஏறி பயணித்துள்ளார். இந்த அச்சமூட்டும் அனுபவத்தை பெண்ணின் கணவன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
இரவு 9 மணிக்கு என் மனைவிக்கு இது நடந்துள்ளது, இன்னும் எத்தனை பெண்கள் இதேபோன்ற சூழ்நிலையை எதிர்கொள்கிறார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள் என்று பெங்களூரு போலீசை டேக் செய்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார். உதவிக்கு எங்களை DM செய்யுங்கள் என்று நம்ம யாத்ரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
- இன்ஸ்டாகிராமில் முதல் 5 உலகளாவிய விளையாட்டு அணிகளில் ஆர்சிபி அணி இடம்பிடித்துள்ளது.
- ரியல் மாட்ரிட் மற்றும் எஃப்சி பார்சிலோனாவுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் ஆர்சிபி உள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மீண்டும் ஒருமுறை சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமான ஐபிஎல் அணி என்ற நிலையை தக்கவைத்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக முதல் இடம் பிடித்த ஐபிஎல் அணி என்ற சாதனையை ஆர்சிபி படைத்துள்ளது.
சமூக ஊடக பகுப்பாய்வு சோஷியல் இன்சைடர் மற்றும் எஸ்இஎம் ரஷ் படி ஆர்சிபி அணியின் இன்ஸ்டாகிராம், எக்ஸ்தளம், யூடியூப் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றில் மொத்த ஈடுபாடு 2024-ம் ஆண்டில் 2 பில்லியனை எட்டியுள்ளது. இது 2-வது இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியை விட 25% அதிகமாகும்.
ஆர்சிபியின் டிஜிட்டல் இருப்பு குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 5 மில்லியன் அதிகரித்து, ஆன்லைனில் வேகமாக வளர்ந்து வரும் ஐபிஎல் அணியாக மாறியுள்ளது.
மேலும் இன்ஸ்டாகிராமில் முதல் 5 உலகளாவிய விளையாட்டு அணிகளில் ஆர்சிபி அணி இடம்பிடித்துள்ளது. ரியல் மாட்ரிட் மற்றும் எஃப்சி பார்சிலோனாவுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் ஆர்சிபி உள்ளது.
ஆர்சிபி தனது வாட்ஸ்அப் ஒளிபரப்பு சேனலில் 7.5 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் தனது வரம்பை மேலும் விரிவுபடுத்தியுள்ளது, இது வாட்ஸ்அப்பில் அதிகம் பின்தொடரும் ஐபிஎல் அணியாக மாறியுள்ளது.
- தெற்கு சூடானில் கடந்த 17-ம் தேதி ஊரடங்கு உத்தரவை அதிகாரிகள் விதித்தனர்.
- சமூக ஊடகங்களுக்கு தற்காலிக தடை விதித்து தெற்கு சூடான் உத்தரவிட்டுள்ளது.
ஜூபா:
சூடான் நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அதனை எதிர்த்து துணை ராணுவத்தினர் போராடி வருகிறார்கள். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு உள்நாட்டு கலவரமாக வெடித்துள்ளது. இதில் அப்பாவி பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர்.
இதற்கிடையே, கெசிரா மாநிலத்தில் தெற்கு சூடானின் போராளி குழுக்களால் கொலைகள் நடப்பதாக கூறும் சூடானின் காட்சிகளால் அப்பகுதி மக்கள் கோபமடைந்துள்ளனர். இதனால் தெற்கு சூடானில் உள்ள சூடானிய வர்த்தகர்களுக்கு சொந்தமான கடைகள் சூறையாடப்பட்டன. தெற்கு சூடானில் கடந்த 17ம் தேதி ஊரடங்கு உத்தரவை அதிகாரிகள் விதித்தனர்.
இந்நிலையில், அண்டை நாடான சூடானில் வன்முறை தொடர்பாக சமூக ஊடகங்களுக்கு தற்காலிக தடை விதித்து தெற்கு சூடான் உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்களைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை அவசியம் என வலியுறுத்திய தேசிய தொடர்பு ஆணையம், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அனுப்பிய உத்தரவின்படி 90 நாள் வரை நீட்டிக்கக் கூடிய தற்காலிக தடை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும், நிலைமை கட்டுக்குள் வந்தவுடன் இந்த உத்தரவு நீக்கப்படலாம் எனவும் தெரிவித்துள்ளது.
- எக்ஸ் தளத்துக்கு 36 மணிநேரம் கெடு விதிக்கப்பட்டது
- பல முன்னணி செய்தி நிறுவனங்களின் இணைப்பும் இதில் அடங்கும்.
உத்தரப் பிரதேசத்தில் நடக்கும் மகா கும்பமேளாவுக்குச் செல்ல டெல்லி ரெயில் நிலையத்தில் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி இரவு அதிக பயணிகள் கூடினர். அப்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர்.
சிறப்பு ரெயில் வரும் பிளாட்பார்மை கடைசி நேரத்தில் மாற்றி அறிவித்ததும், வரம்புக்கு அதிகமாக பொது டிக்கெட்டுகளை விற்றதுமே கூட்டநெரிசலுக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில் எக்ஸ் சமூக ஊடகத்தில் டெல்லி ரெயில் நிலைய கூட்டநெரிசல் தொடர்பான வீடியோக்களை அகற்ற இந்திய ரெயில்வே நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கூட்ட நெரிசலின் வீடியோக்களைக் கொண்ட 285 சமூக ஊடக இணைப்புகளை குறிப்பிட்டு அதை நீக்குமாறு அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.
பல முன்னணி செய்தி நிறுவனங்களின் இணைப்பும் இதில் அடங்கும். கண்டதை பிப்ரவரி 17 ஆம் தேதி அனுப்பட்ட இந்த நோட்டீசில் எக்ஸ் தளத்துக்கு 36 மணிநேரம் கெடு விதிக்கப்பட்டது தற்போது பொது வெளியில் தெரியவந்துள்ளது.
இதுபோன்ற வீடியோக்களைப் பகிர்வது பொதுமக்களிடையே அமைதியின்மைக்கு வழிவகுக்கும் என்றும் ரெயில்வே செயல்பாடுகளை சீர்குலைக்கும் என்று அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது. இறந்த நபர்களை இவ்வாறு சித்தரிப்பது தொந்தரவை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்றும் ரெயில்வே தெரிவித்துள்ளது.
- X இன் வலைத்தளம் மற்றும் செயலி இரண்டிலும் உள்நுழைவதில் சிக்கல் ஏற்பட்டதாக பலர் பலர் புகாரளித்தனர்.
- சேவை இடையூறுகளைக் கண்காணிக்கும் வலைத்தளம் Downdetector
முன்னணி சமூக ஊடகமான எக்ஸ் X தளம் உலகம் முழுவதும் முடங்கியது. இன்று (மார்ச் 10) திங்கட்கிழமை, பிற்பகல் 3:15 மணியளவில், எக்ஸ் தளத்தை அணுகுவதில் பயனர்கள் சிரமங்களைச் சந்தித்தனர்.
X இன் வலைத்தளம் மற்றும் செயலி இரண்டிலும் உள்நுழைவதில் சிக்கல் ஏற்பட்டதாக பலர் புகாரளித்தனர். சேவை இடையூறுகளைக் கண்காணிக்கும் வலைத்தளமான Downdetector இன் கூற்றுப்படி, பிற்பகல் 3:30 மணியளவில் சுமார் 2,500 பயனர்கள் X இல் சிக்கல்களைப் புகாரளித்துள்ளனர்.
இருப்பினும், செயலிழப்பு குறித்து X நிறுவனத்திடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. பின்னர் பிற்பகல் 3:45 மணியளவில் எக்ஸ் சேவைகள் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது.
அதன்பின் செயலி மற்றும் வலைத்தளத்தில் மீண்டும் உள்நுழைய முடிந்தது. X இதுபோன்ற செயலிழப்புகளை சந்திப்பது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு, இந்த தளம் பல முறை முடங்கி மீண்டுள்ளது. கடந்த 2022 இல் இந்த ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கி அதற்கு உலக பணக்காரர் எலான் மஸ்க் எக்ஸ் என பெயர் மாற்றியது குறிப்பிடத்தக்கது.