என் மலர்
நீங்கள் தேடியது "அணுமின் நிலையம்"
- திடீரென லிப்ட் கதவு மூடப்பட்டு மேலே சென்றது. அங்கிருந்து பலத்த சத்தம் எழுப்பியபடி வேகமாக கீழே விழுந்தது.
- அங்கிருந்த தொழிலாளர்கள் லிப்டை உடைத்து 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், என்.டி.ஆர். மாவட்டம், கொண்டப்பள்ளியில் உள்ள நர்லா தட்டாராவில் அனல் மின் நிலையம் உள்ளது.
இங்கு 5-ம் கட்ட என்டிபிஎஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக 800 மெகாவாட் திறன் கொண்ட புதிய அனுமின் நிலைய கட்டுமானப் பணி நடந்து வருகிறது. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சில நாட்களாக வேலை செய்து வருகின்றனர்.
70 மீட்டர் உயரத்தில் வேலை செய்ய தொழிலாளர்கள் 310 டிகிரி கொண்ட லிஃப்டில் ஏறினர். ஜிதேந்திரசிங், சோட்டூசிங் உள்ளிட்ட 20 தொழிலாளர்கள் லிப்டில் மேலே சென்று கட்டுமான பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் மீண்டும் லிப்டில் கீழே வந்தனர். லிப்ட் கதவு திறக்காததால், தொழிலாளர்கள் உள்ளேயே சிக்கினர். சாவியை போட்டு லிப்டை திறந்தனர்.
அப்போது 20 தொழிலாளர்களில் 18 பேர் வெளியே வந்தனர். மேலும் 2 பேர் வர முற்பட்ட போது, திடீரென லிப்ட் கதவு மூடப்பட்டு மேலே சென்றது. அங்கிருந்து பலத்த சத்தம் எழுப்பியபடி வேகமாக கீழே விழுந்தது. இந்த விபத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஜித்தேந்திரா சிங், சோட்டு சிங் ஆகியோர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தனர்.
அங்கிருந்த தொழிலாளர்கள் லிப்டை உடைத்து 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் வரும்வழியிலேயே அவர்கள் 2 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த ஜூலை ஒன்றாம் தேதி பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டது.
- முதல் கட்ட உற்பத்தியாக தற்போது 125 மெகாவாட் மின் உற்பத்தி செய்து வருகிறது.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அனுமின் நிலையத்தில் உள்ள இரண்டாம் அணு கடந்த ஜூலை ஒன்றாம் தேதி பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டது. பணிகள் முடிந்தது சோதனை ஓட்டத்திற்கு பிறகு இன்று அதிகாலை மீண்டும் மின்உற்பத்தியை துவங்கியது.
இதன் முதல் கட்ட உற்பத்தியாக தற்போது 125 மெகாவாட் மின் உற்பத்தி செய்து வருகிறது. இது படிப்படியாக உயர்ந்து ஓரிரு வாரங்களுக்குள் மீண்டும் சராசரியான 220 மெகாவாட் மின் உற்பத்தியை செய்யும் என அனுமின் நிலைய மின்சார உற்பத்தி தொழில்நுட்ப பிரிவு வட்டாரம் தெரிவிக்கிறது.
- இழுவை கப்பல் மூலமாக கூடங்குளத்துக்கு கொண்டு செல்லப்பட்டபோது தரை தட்டியது.
- மிதவைப் கப்பலை மீட்க முடியும் என்பதால் அதிகாரிகள் அதுவரை மீட்பு பணிகளை நிறுத்தி வைத்துள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. மேலும் அங்கு 4 அணு உலைகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதில் 5, 6-வது அணு உலைகளுக்கான 4 நீராவி ஜெனரேட்டர்கள் ரஷியாவில் இருந்து கடந்த மாதம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து 2 ஜெனரேட்டர்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு கடல் வழியாக ஏற்கனவே கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து மற்ற 2 நீராவி ஜெனரேட்டர்களும் கடந்த 7-ந்தேதி மிதவை கப்பலில் ஏற்றி, இழுவை கப்பல் மூலமாக கூடங்குளத்துக்கு கொண்டு செல்லப்பட்டபோது தரை தட்டியது.
இதில் மிதவை கப்பல் கடலில் சிக்கிக் கொண்டது. அதனை மீட்பதற்காக இலங்கை கொழும்புவில் இருந்து ஓரியன் என்ற மீட்பு கப்பல் கொண்டுவரப்பட்டது. அதன் மூலம் மிதவை கப்பலை மீட்பதற்கு பணிகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் தற்போது அதன் மூலம் மீட்பதில் சிக்கல் உருவாகியுள்ளது.
இதற்கிடையே மேலும் ஒரு இழுவை கப்பலை கொழும்புவில் இருந்து கொண்டு வர ஏற்பாடுகள் நடந்த நிலையில் தற்போது அந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தரை தட்டிய மிதவை கப்பல் பாறைப்பகுதியில் சிக்கியுள்ளதால் அதில் பல இடங்களில் சேதம் அடைந்துள்ளது. அந்த சேதத்தை சரி செய்த பின்பு தான் மிதவைப் கப்பலை மீட்க முடியும் என்பதால் அதிகாரிகள் அதுவரை மீட்பு பணிகளை நிறுத்தி வைத்துள்ளனர்.
அதே நேரத்தில் ராட்சத கிரேன்கள் மூலமாக மிதவை கப்பலில் உள்ள நீராவி உற்பத்தி கலனை மீட்க முடியுமா எனவும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
- கடலில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் மிதவை கப்பலில் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளது.
- அணு உலை வளாகத்தில் இருந்து சுமார் 150 மீட்டர் தூரத்தில் மிதவை கப்பல் தரை தட்டி நிற்கிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. மேலும் அங்கு 4 அணு உலைகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதில் 5, 6-வது அணு உலைகளுக்கான 4 நீராவி ஜெனரேட்டர்கள் ரஷியாவில் இருந்து கடந்த மாதம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து 2 ஜெனரேட்டர்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு கடல் வழியாக ஏற்கனவே கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து மற்ற 2 நீராவி ஜெனரேட்டர்களும் கடந்த 7-ந்தேதி மிதவை கப்பலில் ஏற்றி, இழுவை கப்பல் மூலமாக கூடங்குளத்துக்கு கொண்டு செல்லப்பட்ட போது தரை தட்டியது.
இதில் மிதவை கப்பல் கடலில் சிக்கிக் கொண்டது. அதனை மீட்க கொழும்புவில் இருந்து மற்றொரு கப்பல் வரவழைக்கப்பட்ட நிலையில், நீராவி கொள்கலன்கள் எடை அதிகமாக இருப்பதால், மிதவை கப்பலை இழுக்க முடியாது என கப்பல் அதிகாரிகள் கை விரித்துவிட்டனர். இதனால் வேறு வழிகள் குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடலில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் மிதவை கப்பலில் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளது. இதனால் அந்த கப்பல் மெல்ல மெல்ல கடலில் மூழ்க தொடங்கி உள்ளதால், நீராவி கொள்கலன்களும் கடலில் சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அணு உலை வளாகத்தில் இருந்து சுமார் 150 மீட்டர் தூரத்தில் மிதவை கப்பல் தரை தட்டி நிற்கிறது. இதனால் சாலை அமைத்து ராட்சத கிரேன் மூலமாக கொள்கலனை மீட்க முடிவு செய்யப்பட்டது.
இதனால் ரூ.2 கோடி செலவில் அங்கு சாலை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. கொள்கலன் கடலில் சரிந்து விழுவதற்குள் அதனை மீட்க துரிதமான நடவடிக்கைகளை அணு உலை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
- கூடங்குளம் கடலில் மிதவை கப்பல் பாறையில் தரை தட்டியது.
- தரைதட்டி நிற்கும் மிதவை கப்பலை மீட்க நிபுணர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து அங்கு மேலும் 4 அணு உலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 5, 6-வது அணு உலைகளுக்கான ரூ.600 கோடி மதிப்பிலான 4 நீராவி ஜெனரேட்டர்கள் ரஷியாவில் இருந்து தூத்துக்குடிக்கு கப்பலில் கொண்டு வரப்பட்டது. அவற்றில் 2 நீராவி ஜெனரேட்டர்களை மிதவை கப்பலில் கூடங்குளத்துக்கு கொண்டு சென்றனர்.
மற்ற 2 நீராவி ஜெனரேட்டர்களையும் கடந்த 8-ந்தேதி மிதவை கப்பலில் ஏற்றி கூடங்குளத்துக்கு வந்தபோது, அணுமின் நிலையத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் இழுவை கப்பலுக்கும், மிதவை கப்பலுக்கும் இடையிலான இணைப்பு துண்டிக்கப்பட்டதால், கூடங்குளம் கடலில் மிதவை கப்பல் பாறையில் தரை தட்டியது.
தரைதட்டி நிற்கும் மிதவை கப்பலை மீட்க நிபுணர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடல் சீற்றத்தால் மிதவை கப்பல் பாறையில் மோதி சேதமடைந்ததால், நீராவி ஜெனரேட்டர்களுடன் மூழ்கும் நிலை உள்ளது. அந்த ஜெனரோட்டர்களுக்கு ரூ.426 கோடி காப்பீடு செய்யப்பட்டுள்ளதால், காப்பீடு நிறுவனத்தினர் அதனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து அவர்கள் கடலுக்குள் ரூ.2 கோடி மதிப்பில் சாலை அமைத்து, அதன்மூலம் கிரேனை பயன்படுத்தி ஜெனரேட்டர்களை மீட்க முயற்சி செய்து வருகின்றனர். அதே நேரத்தில் மிதவை கப்பலில் சேதம் அடைந்த பகுதிகளை வெல்டிங் செய்து சரிசெய்யும் பணியும் மற்றொரு புறம் நடைபெற்று வருகிறது. அதன்பின்னர் அந்த மிதவையை இழுவை கப்பலை கொண்ட இழுத்து செல்லலாம் என்ற முயற்சி நடக்கிறது.
மேலும் தரையில் இருந்தபடியே அதிநவீன கிரேனை நிறுத்தி கடலுக்குள் இருக்கும் ஜெனரேட்டரை மீட்க முடியுமா எனவும் ஆய்வு நடத்தப்படுகிறது. இந்த பணிகள் 20 நாட்கள் வரை தொடரும் என நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கேரளாவிற்கு வெளியில் தோரியம் அடிப்படையிலான மின்சார உற்பத்தி நிலையம் அமைக்க கேரள கோரிக்கை
- சீமேனி அணுமின் நிலையம் அமைப்பதற்காக கண்டறியப்பட்டுள்ளது. இது மின்சார தட்டுப்பாட்டை தீர்க்கும்- மத்திய மந்திரி
கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், மின்சாரத்துறை மந்திரி கே. கிருஷ்ணன் குட்டி ஆகியோருடன் மத்திய மந்திரி மனோகர் லால் கட்டார் சந்தித்து பேசினார். அப்போது கேரள மாநிலத்தில் நிலவும் மின்சார தட்டுப்பாட்டை போக்கும் வகையில் அணுமின் நிலையம் அமைப்பது தொடர்பான பரிந்துரையை முன்வைத்தார்.
அணுமின் நிலையத்திற்கு 150 ஏக்கர் நிலையம் ஏற்பாடு செய்து தந்தால் இந்த திட்டம் முன்னோக்கி எடுத்து செல்லப்படும். சீமேனி மற்றும் அதிரபள்ளி ஆகிய இரண்டு இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அப்போது ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற மத்திய மந்திரயும், திருச்சூர் எம்.பி.யுமான சுரேஷ் குாபி, அதிரபள்ளி முக்கியமான சுற்றுலா தளமாக விளங்குகிறது எனத் தெரிவித்தார். இதனால் சீமேனி அணுமின் நிலையம் தொடங்குவதற்கு விருப்பமான இடமாக தேர்வு செய்யப்பட இருக்கிறது.
தோரியம் அடிப்படையிலான மின்உற்பத்தி நிலையத்தை கேரளாவிற்கு வெளியில் நிறுவி, கேரளாவிற்கு குறிப்பிடத்தகுந்த மின்சாரம் வழங்க மத்திய அரசு உதவிட வேண்டும் என மத்திய மத்திரியிடம் கேரள மாநில மின்சாரத்துறை கோரிக்கை விடுத்திருந்தது.
NTPC Talcher plant-ல் இருந்து அடுத்த ஆண்டு மார்ச் முதல் ஜூன் வரை 400 மெகாவாட் மின்சார வழங்க வேண்டும். தற்போதுள்ள விலையில் அடுத்த ஐந்தாண்டுக்கு இந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட வேண்டும்.
NTPC Barh வழங்கும் 177 மெகாவாட் மின்சாரம் ஜூன் 2025 வரை நீட்டிக்கப்பட வேண்டும். ஏப்ரல், மே மாதங்களில் 400 மெகாவாட்டாக அதிகரிக்க வேண்டும். Rajasthan Atomic Power Station-ல் இருந்து முன்னுரிமை அடிப்படையில் 350 மெகாவாட் மின்சாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்பது கேரள அரசின் முக்கிய கோரிக்கை ஆகும்.
நான்கு நீண்டகால மின் ஒப்பந்தங்களை மீண்டும் நடைமுறைப்படுத்துவதில் தலையிடுமாறும், மாநிலத்திற்கு 465 மெகாவாட் மின்சாரத்தை கூட்டாக உறுதி செய்வதற்கும் மத்திய மந்திரியிடம் கேரளா அரசு உறுதி வலியுறுத்தியுள்ளது. அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதாக மனோகர் கட்டார் உறுதி அளித்துள்ளார்.
- 7 வருடங்கள் கடந்தும் அந்த அலகில் மின் உற்பத்தி தொடங்கப்படவில்லை.
- 2-வது அலகில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு உள்ளது.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் தலா 220 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் 2 அலகுகள் உள்ளன. கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம், முதல் அலகில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக மின் உற்ப்பத்தி நிறுத்தப்பட்டது.
7 வருடங்கள் கடந்தும் அந்த அலகில் மின் உற்பத்தி தொடங்கப்படவில்லை. 2-வது அலகில் மட்டும் மின்உற்பத்தி நடந்து வந்தது. இந்த நிலையில் 2-வது அலகில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த அலகில் 220 மெகாவாட் மின் உற்ப்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மார்ச் 1-ந்தேதி 2-வது அலகில் மின் உற்பத்தி தொடங்கும்" என்றனர்.