search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்யாணம்"

    • நண்பர்கள் ஒன்று சேர்ந்து 100 ரூபாய் பத்திரத்தில் ஒப்பந்தம் ஒன்றை போட்டனர்.
    • என்ஜினீயரிங் முடித்து விட்டு, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    கல்யாணம் முடிந்து விட்டால் புது மாப்பிள்ளைக்கு கால் கட்டு போட்டாச்சு என்பார்கள். அது நூற்றுக் நூறு சதவீதம் உண்மையான வார்த்தைதான். திருமணத்துக்கு முன்பு வரையில் எந்தவித கட்டுப்பாடுமின்றி சுற்றித் திரிந்த பலர் திருமணமான பிறகு வேலை... வீடு... குடும்பம் என நான்கு சுவற்றுக்குள் முடங்கிப் போய் விடுகிறார்கள்.

    திருமணத்துக்கு முன்பு ஊர் சுற்றியது போல நண்பர்களுடன் வெளியில் எங்கேயாவது செல்ல வேண்டும் என்றால் மனைவிமார்களிடம் அனுமதி பெறுவதற்குள் பலருக்கு போதும் போதும் என்றாகி விடுகிறது என புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் பல கணவர்மார்கள். 'என்ன... வெளியூர் டூர் வேண்டி கிடக்கு? பேசாம வீட்ல இருங்க.." என்று மனைவிமார்கள் போடும் சத்தத்தில் சப்தநாடி அடங்கி வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் கணவன்மார்கள் பலர் ஒரு நாளைக்காவது நண்பர்களோடு தனியாக வெளியில் செல்ல முடியுமா?" என்கிற ஏக்கத்துடனேயே காலம் கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இது போன்ற சிக்கல் எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக புதிதாக திருமணமான மாப்பிள்ளைக்கு தடை போடக் கூடாது என மணப்பெண்ணிடம் அவரது நண்பர்கள் பத்திரத்தில் எழுதி வாங்கி இருக்கும் ருசிகர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே தென்பாதி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் என்ஜினீயரிங் முடித்து விட்டு, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இவருக்கும் குறிஞ்சிப்பாடி கிராமத்தை சேர்ந்த பவித்ராவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, தென்பாதி கிராமத்தில் திருமணம் நடைபெற்றது.

    விழாவில் பங்கேற்ற நண்பர்கள் முத்துக்குமாருக்கு திருமணம் ஆகிவிட்டது. இனி நாம் அனைவரும் முன்பு போல் சுதந்திரமாக வெளியில் சுற்ற முடியாதே, என நினைத்து அதற்காக அவர்கள் புதுவித யுக்தியை கையாண்டனர்.

    அதன்படி, நண்பர்கள் ஒன்று சேர்ந்து 100 ரூபாய் பத்திரத்தில் ஒப்பந்தம் ஒன்றை போட்டனர்.

    அதில் "திருமணத்திற்கு பிறகு எப்போதும் போல் நண்பர்களுடன் சேர்ந்து வெளியே செல்வதற்கும், வெளியூர் சுற்றுலா செல்வதற்கும் தடை விதிக்காமல் நண்பர்களுடன் சந்தோஷமாக வெளியில் சுற்றுவதற்கு தடையாக இருக்க மாட்டேன்" என குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதனை படித்து பார்த்த மணப்பெண் பவித்ராவும் அதற்கு ஆட்சேபனை தெரிவிக்காமல் புன்சிரிப்புடன் பத்திரத்தில் கையெழுத்திட்டார்.

    மேலும், இதுகுறித்து நண்பர்கள் கூறுகையில்:-

    பிரபல தமிழ் சினிமாவில் (மைனா) வரும் காட்சிகளை போல் வெளியில் செல்லும் கணவனிடம் எப்ப வருவீங்க... எப்ப வருவீங்க... என கேள்வி எழுப்பக்கூடாது என்பதற்காக தான் மணப் பெண்ணிடம் கையெழுத்து வாங்கியுள்ளோம் என்றனர்.

    திருமணம் முடிந்த கையோடு பத்திரத்தில் கையெழுத்தும் வாங்கியதால், இனி நம் நட்பிற்குள் எந்த பிரிவும் ஏற்படாது என நண்பர்கள் உற்சாகம் அடைய, திருமணத்திற்கு வந்திருந்த பழைய கணவன்மார்கள் சிலர் தங்கள் திருமணத்தின் போதும் தனது நண்பர்கள் இது போல் பத்திரத்தில் கையெழுத்து வாங்காமல் விட்டு விட்டார்களே.. என ஏக்கம் அடைந்தனர்.

    • சில மாதங்களுக்கு முன் இருவரும் நெருங்கிய உறவினர்கள் இடையே நிச்சயம் செய்துக்கொண்டனர்.
    • கடைசியாக சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளிவந்த ஹீராமந்தி வெப் சீரிசில் அதிதி ராவ் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துருந்தார்.

     நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவும் காதலத்தி வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் இருவரும் நெருங்கிய உறவினர்கள் இடையே நிச்சயம் செய்துக்கொண்டனர்.

    கடைசியாக சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளிவந்த ஹீராமந்தி வெப் சீரிசில் அதிதி ராவ் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துருந்தார். இந்நிலையில் சமீபத்தில் அதிதி ராவ் சமீபத்தில் அளித்த நேர்காணலில் நடிகர் சித்தார்த் எப்படி அதிதி-க்கு காதல் ப்ரோப்போஸ் செய்தார் என கூறினார்.

    அதில் அவர் கூறியதாவது " நான் என் பாட்டியுடம் மிகவும் நெருக்கமாக இருந்தேன். அவரை எனக்கு சிறுவயதில் இருந்து மிகவும் பிடிக்கும். என்னுடைய பாட்டி ஐதரபாத்தில் ஒரு பள்ளிக்கூடம் நடத்தி வந்தார். ஒரு நாள் சித்தார்த் என்னிடம் வந்து அந்த பள்ளிக்கூடத்தை பார்க்க வேண்டும் என்றார். நானும் அழைத்துச் சென்றேன். அங்கு சென்றவுடன் இந்த பள்ளிக்கூடத்தில் எங்கு அதிகமாக நீ உன் சிறுவயதை செலவிட்டார் என கேட்டார். நான் அந்த இடத்தை காண்பித்தேன். திடீர் என்று கீழே முட்டிப் போட்டு எதையோ எடுத்தார். நான் அவர் ஷூலேஸ் கட்டுகிறாரோ என நினைத்தேன். ஆனால் அவர் முட்டிப்போட்டு எனக்கு ப்ரோப்போஸ் செய்தார். என்னுடைய பிடித்தமான இடத்திற்கு என்னை அழைத்து வந்து பாட்டியின் ஆசிர்வாதத்துடன் ப்ரோபோஸ் செய்வது அவருடைய பிளான்" என்று கூறினார்.

    மேலும் அவரது திருமணம் வனப்பார்த்தியில் உள்ள 400 வருடங்கள் பழமையான கோவிலில் திருமணம் நடக்கப்போவதாக கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் இந்து முறைப்படி தவளைகளுக்கு விமர்சையாக ஆட்டம்பாட்டம் கொண்டாட்டத்துடன் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
    • புரோகிதர் தேவ மொழியான சமஸ்கிருத மந்திரங்களை உச்சரிக்க தவளைகளுக்கு திருமணம் நடந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அனைத்து மதங்களிலும் வித்தியாசமான வகையில் பல்வேறு சடங்குகளும் கொண்டாட்டங்களும் நிகழ்வது வழக்கும். அந்த வகையில் இந்து மதத்தைப் பின் பற்றும் மக்கள் முக்கியமாக கிராமங்களில் உள்ள மக்கள் தவளைக்கும் தவளைக்கும் கல்யாணம் செய்து வைத்தால் மழை வரும் என்று நம்புகின்றனர்.

    இது சுத்த மூடநம்பிக்கை என்ற விவாதம் ஒரு புறம் இருந்தாலும் இன்றளவும் சில இடங்களில் இந்த சடங்கு நடந்துகொண்டுதான் இருக்கிறது. தமிழகத்தில் இந்த சடங்கு வழக்கொழிந்தாலும், வட மாநில கிராமங்கள் இந்த சடங்கை கைவிடுவதாக இல்லை.

    அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் இந்து முறைப்படி தவளைகளுக்கு விமர்சையாக ஆட்டம்பாட்டம் கொண்டாட்டத்துடன் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

    மணமகன் மணமகளை அலங்கரிப்பது போல் சிவப்புப் பட்டாடை உடுத்தி அலங்கரிக்கப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க ஊரார் சூழ புரோகிதர் தேவ மொழியான சமஸ்கிருத மந்திரங்களை உச்சரிக்க தவளைகளுக்கு திருமணம் நடந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • ஊடகத்துறையில் புகழ்பெற்றவர் ரூபர்ட் முர்டாக். கடந்த ஆண்டு இவர் ஃபாக்ஸ் அண்ட் நியூஸ் கார்பரேஷன் நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இருந்து வெளியேறினார்.
    • இந்த முறை எலினா சுகோவா- வை ரூபெர்ட் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

    ஊடகத்துறையில் புகழ்பெற்றவர் ரூபர்ட் முர்டாக். கடந்த ஆண்டு இவர் ஃபாக்ஸ் அண்ட் நியூஸ் கார்பரேஷன் நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இருந்து வெளியேறினார். ஊடகத்துறையில் இருந்து ஓய்வு பெற்றுள்ள ரூபெர்ட் கடந்த சனிக்கிழமை 5- வது முறையாக திருமணம் செய்துக்கொண்டார்.

    இந்த முறை எலினா சுகோவா- வை ரூபெர்ட் திருமணம் செய்து கொண்டுள்ளார். ரூபெர்ட் மற்றும் எலினாவின் திருமணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள மொராகா வைன் யார்ட் எஸ்டேட்டில் நடைபெற்றது. ஐந்தாவது முறையாக திருமணம் செய்து கொண்ட ரூபெர்ட் முர்டாக்கிற்கு வயது 93 ஆகும்.

    இவர் தற்போது திருமணம் செய்து கொண்ட சுகோவாவிற்கு 67 வயது ஆகிறது. சுகோவா அழகிய ஆங்கில் லெந்த் கவுனை அணிந்து இருந்தார், மணமகன் முர்டாக் கருப்பு நிறகோட் சூட் அணிந்திருந்தார்.

    இவர்கள் திருமண விழாவில் நியூ இங்கிலாந்து பாட்ரியாட்டின் உரிமையாளரான ராபர்ட் கே கிராஃப்ட் மற்றும் நியூஸ் கார்ப்பரேஷனின் சி.இ.ஓ.-வான ராபர்ட் தாமஸ் கலந்துக் கொண்டனர். சுகோவா ஒரு ஓய்வு பெற்ற மாலிக்யுலர் பயாலஜிஸ்ட் ஆவார்.

     

    இதற்கு முன் சுகோவா பில்லியனர் எனர்ஜி இன்வஸ்டரான சுகோவை திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காதலிப்பதும், கல்யாணம் செய்துக் கொள்வதற்கும் வயது வரம்பே இல்லை என்பதை இந்த ஜோடி நிருப்பித்துள்ளனது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜெயிலர் படத்தை தயாரித்த 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளது.
    • வேட்டையன்' படத்துக்கு பிறகு ரஜினி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தலைவர் 171' படத்தில் நடிக்க உள்ளார்.

    கடந்த ஆண்டு நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்தார். இப்படம் ரூ.600 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.

    அதைத் தொடர்ந்து ரஜினி தற்போது இயக்குனர் டி.ஜே.ஞானவேலின் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டின் இறுதியில் தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வேட்டையன்' படத்துக்கு பிறகு ரஜினி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தலைவர் 171' படத்தில் நடிக்க உள்ளார்.

    ரஜினிகாந்த். படத்துக்கு தற்காலிகமாக தலைவர்-171 என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. ஜெயிலர் படத்தை தயாரித்த 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளது. சில வாரங்களுக்கும் முன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது.

    அதில் ரஜினிகாந்தின் கை, தங்க கைக்கடிகாரங்களால் வடிவமைக்கப்பட்ட விலங்கில் மாட்டி இருக்கும். அவருக்கும் பின்னால் ஒரு பெரிய கடிகார வடிவமைக்கிபட்டிருக்கும்.

    அந்தப் போஸ்டரை பார்த்த ரசிகர்களுக்கு பல்வேறு யூகங்கள் தோன்றின. இப்படம் லோகேஷ் கனகராஜின் எல்.சி.யூ  கதைக்களத்தில் ஒரு அங்கமாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகியுள்ளது.

    மேலும் அந்த படத்தில் ரஜினிகாந்த் 'தாதா' வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் பரவியது. ரஜினியின் தலைவர் 171 படத்துக்கு 'கழுகு' என்று டைட்டில் பெயர் சூட்டப்பட்டு இருக்க்கிறது என தகவல் வெளியாகியது.

     

    இந்நிலையில் அடுத்த சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஸ்ருதிஹாசன் ரஜினிக்கு மகளாக நடிக்கவிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் மோகன் இப்படத்தில் நடிக்கவுள்ளனர்.

     

    படத்தின் ப்ரொமொ வீடியோ படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது. அடுத்த வாரத்தில் படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பீகாரில் பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த மாதம் 15-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி முடிந்தது.
    • விடைத்தாள் திருத்தும் பணி தற்போது மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் கடந்த மாதம் 15-ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி 23-ம் தேதி முடிவடைந்தது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தற்போது மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது. விடைத்தாள் திருத்தும் பணி முடிந்தபின் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.

    இந்நிலையில், பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரது விடைத்தாள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இதுதொடர்பாக, அந்த மாணவி தனது விடைத்தாளில், விவசாயியான எனது அப்பாவுக்கு வருமானம் குறைவு. எனவே நிதி நெருக்கடியால் படிப்பை கைவிடும்படி கூறிவருகிறார். தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் திருமணம் செய்துவைப்பதாக கூறியுள்ளார். தயவுசெய்து எனக்கு நல்ல மதிப்பெண் தந்து எதிர்காலத்தை காப்பாற்ற உதவுங்கள் என தெரிவித்துள்ளார்.

    மாணவியின் இந்த கோரிக்கை சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    • முருகன் சுயரூபம் காட்டிடவுடன், நம்பிராஜன், வள்ளியை முருகனுக்கு மணம் முடித்து வைக்கிறார்.
    • முருகப்பெருமான் சுய ரூபத்தில் காட்சி அளித்தலும் நிகழ்த்தி காட்டப்பட்டது.

    சுவாமிமலை:

    தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி பெருவிழாவில் வள்ளி கல்யாணம் நடைபெறும்.

    அதாவது வேடர்குல அரசின் நம்பிராஜன் வளர்ப்பு மகளான வள்ளி, தினைபுனம் காவல் புரியும் போது, அவள் அழகை கண்ட நாரத முனிவர் அதனை முருகப்பெருமானிடம் கூற, வள்ளியின் அழகில் மயங்கி அவரை மணம் புரிந்திட கிழவர் வேடம் போடுவார் முருகர். பின்னர் களைப்பாக இருப்பதாக கூறி, வள்ளியிடம் தேனும் தினைமாவும் பருகிய பின், தாகம் என கூறி அருகில் இருந்த சுனைக்கு வள்ளியை அழைத்து செல்வதும், அங்கு வள்ளியை மணம் புரிவதாக முருகப்பெருமான் கூற, கிழவரின் குறும்பில் வள்ளி கோபிப்பதும், முருகன், விநாயகரை நினைக்க, அவர் யானையாக வந்து வள்ளியை விரட்ட, மிரண்ட வள்ளி, முருகனை பயத்தில் அணைக்க, பின் முருகன் சுயரூபம் காட்டிடவுடன், நம்பிராஜன், வள்ளியை முருகனுக்கு மணம் முடித்து வைக்கிறார்.

    இதனை நினைவு கூறும் வகையில் அரசலாற்றங்கரையில் யானை விரட்டல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு சுவாமிமலை அரசலாற்றில், தினைபுனம் காத்த வள்ளியை விநாயகப்பெருமான் யானை உருவத்தில் வந்து விரட்டும் காட்சியும், பின் முருகப்பெருமான் சுய ரூபத்தில் காட்சி அளித்தலும் நிகழ்த்தி காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×