என் மலர்
நீங்கள் தேடியது "இப்தார் நிகழ்ச்சி"
- இந்திய இஸ்லாமிய கலாச்சார மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ரேகா குப்தா கலந்து கொண்டார்.
- அவரின் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
டெல்லியில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக அரசு வெற்றி பெற்றது. டெல்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார்.
இந்நிலையில் கடந்த மார்ச் 16 ஆம் தேதி பாஜக சார்பில் டெல்லியில் ரம்ஜான் மாத இப்தார் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. டெல்லியில் உள்ள இந்திய இஸ்லாமிய கலாச்சார மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ரேகா குப்தா கலந்து கொண்டார்.
மத்திய சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு மற்றும் பல பாஜக தலைவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களுக்கு ரேகா குப்தா பேட்டி அளித்தார். அப்போது, இஸ்லாமியர் பண்டிகையான ரம்ஜான் (RAMZAN) என்பதில் ராம் (RAM) என்ற இந்து பெயரும், இந்துக்கள் பண்டிகையான தீபாவளி(DIWALI) என்பதில் அலி (ALI இஸ்லாமிய பெயரும் இருப்பதாக ரேகா குப்தா பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அவரின் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். இதற்கிடையே இப்தார் நிகழ்ச்சி குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரேகா குப்தா, "இப்தார் நிகழ்வில் அனைத்து சகோதர சகோதரிகளுடனும் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
நமது கலாச்சாரம், பரஸ்பர மரியாதை, அன்பு மற்றும் நல்லிணக்கத்தின் சின்னமாகும். இது போன்ற நிகழ்வுகள் சமூகத்தில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்துகின்றன" என்று பதிவிட்டுள்ளார்.
- தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடந்தது.
- மாவட்ட துணைத்தலைவர் லூர்து முன்னிலை வகித்தார்.
மதுரை
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மதுரை மாநகர் மாவட்டத்தின் சார்பில் மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி கோரிப்பாளையம்-கான்சாபுரம் மெயின்ரோடு ரம்ஜான் மினி மகாலில் நடந்தது. மாவட்ட குழு உறுப்பினர் முகமது அலி தலைமை தாங்கினார்.
மாவட்ட துணைத்தலைவர் லூர்து முன்னிலை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் ஸ்டாலின் லாரன்ஸ் வரவேற்றார். சி.எஸ்.ஐ. பேராயர் ஜெய்சிங் பிரின்ஸ் பிரபாகரன், எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, பூமிநாதன், மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில குழு உறுப்பினர் விஜயராஜன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட தலைவர் அலாவுதீன், அருட்தந்தை பெனடிக் பர்ணபாஸ், மதுரை மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைவர் லியாகத் அலி, வடக்கு மண்டல தலைவர் சரவணா புவனே சுவரி, முகேஷ்.
கவுன்சிலர் உமா ரவி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலாளர் கணேச மூர்த்தி, பொருளாளர் ஜான்சன், துணை செயலாளர் போனி பேஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மண்டல பொறுப்பாளர் அவ்தா காதர், தி.மு.க. வட்டச்செயலாளர் மணிகண்டன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு சட்டமன்றத் தொகுதி செயலாளர் இனிய அரசன் ஆகியோர் பேசினர்.
மாவட்டக்குழு உறுப்பினர் சாகுல் அமீது நன்றி கூறினார்.
- ராமநாதபுரத்தில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடந்தது.
- முடிவில் த.மு.மு.க நகர தலைவர் முகமது அமீன் நன்றி கூறினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் த.மு.மு.க, ம.ம.க. சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடந்தது. த.மு.மு.க மாநில துணை பொதுச்செயலாளர் சலிமுல்லாஹ்கான் தலைமை தாங்கினார். இதில் ஹூசைன் ஆலிம் சிறப்புரையாற்றினார். அவைத்தலைவர் சைபுதீன், ராமநாதபுரம் நகரசபைத்தலைவர் ஆர்.கே.கார்மேகம், துணைத்தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம், நகர்மன்ற உறுப்பினர் காதர் பிச்சை, ஆற்றாங்கரை ஊராட்சி மன்ற தலைவர் முகமது அலி ஜின்னா, த.மு.மு.க மாவட்ட தலைவர் பிரிமியர் இப்ராகீம், செயலாளர் அப்துல் ரஹீம், நகர செயலாளர் முகமது தமீம், நகர் தலைவர் முகமது அமீன், மாவட்ட செயலாளர் முகமது ஆசிக் சுல்தான் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் த.மு.மு.க நகர தலைவர் முகமது அமீன் நன்றி கூறினார்.
- சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடந்தது.
- மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் தலைமை தாங்கினார்.
ராமநாதபுரம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் ஆனந்தூரில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் தலைமை தாங்கினார். ம.ம.க. மாவட்ட செயலாளர் ஜிப்ரி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக த.மு.மு.க. மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்சா பங்கேற்று பேசினார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் விஷ்ணுவர்த்தன், முத்துப்பட்டினம் பங்குத்தந்தை அற்புத அரசு, வடக்கு பள்ளி தலைவர் சாகுல்அமீது,தெற்கு பள்ளி தலைவர் அப்துல் சலாம், யூனியன் தலைவர்-மாவட்ட தகவல் தொழில்நுட்ப துணை ஒருங்கிணைப்பாளர் ராதிகா பிரபு, மாநில விவசாய அணி செயலாளர் நல்ல சேதுபதி, ஒன்றிய பொறுப்பாளர் காந்தி, கூட்டுறவு சங்க தலைவர் நாகராஜன், ஒன்றிய சேர்மன் சேகர்,ஒன்றிய பிரதிநிதி சந்திரசேகரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர்-கவுன்சிலர் புரோஸ் கான், 3-வது வார்டு கவுன்சிலர் பாண்டி, ராம்கோ மேலாளர் மரியக்கண்ணு, ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் வெற்றிவேல், ஒன்றிய சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் நாசிர் உசேன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
த.மு.மு.க. மாவட்ட செயலாளர் ஜாவித் அசாம், மாவட்டத் துணைத் தலைவர் அகமது இப்ராகிம், மாவட்டத் துணைச் செயலாளர்கள் உபயத்துல்லா, நிசார், சாகுல் ஹமீது மலேசிய மண்டல செயலர் இர்ஷாத் , ஒன்றிய தலைவர் உமர் அலி, ம.ம.க. ஒன்றிய செயலாளர் முகமது இக்சானுல்லா, த.மு.மு.க. ஒன்றிய செயலாளர் ரைசுல் இஸ்லாம், திருவாடனை ஒன்றிய ம.ம.க. செயலர் காமராஜ், தொண்டி பேரூர் காதர், ம.ம.க. செயலர் பரக்கத், பொருளாளர் மைதீன் முன்னிலை வகித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை த.மு.மு.க. கிளை தலைவர் ஜம்ரி, ம.ம.க. செயலாளர் இப்ராகிம், த.மு.மு.க. செயலாளர் மஹாதீர் ரகுமான், ம.ம.க. செயலாளர் சுலைமான், துணைச் செயலாளர் மஹாதீர், சபீக் ஆகியோர் செய்திருந்தனர்.
- மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடந்தது.
- இதில் மாவட்டத் தலைவர் வாவா ராவுத்தர் தலைமையில் நடந்தது.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் தெற்கு மாவட்டம் முதுகுளத்தூர் நகர முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி மாவட்டத் தலைவர் வாவா ராவுத்தர் தலைமையில் நடந்தது. நகர தலைவர் சேட் ஜாகிர் உசேன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். த.மு.மு.க. மாவட்ட செயலாளர் சம்சுகனி, பொருளாளர் சாகுல் ஹமீது ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட துணை செயலாளர் சல்மான் ரபீக் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக இஸ்லாமிய பிரசார பேரவையின் மாவட்ட பொறுப்பாளர் தாஹிர் சைபுதீன், துரைப்பாண்டியன், ஆசிரியர் முருகன், காங்கிரஸ் பூவலிங்கம், இமாம் அப்துல் மஜீத், ஓம் சக்தி வழிபாட்டு மன்ற குழு தலைவர் பழனிச்சாமி மற்றும் முஸ்தபாபுரம் ஜமாத்தார்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஜமீல் அகமது நன்றி கூறினார்.
- பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல கலாசாரங்களை கொண்ட விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- நோன்பு திறக்கும் நேரம் வந்ததும் அனைவரும் பிரார்த்தனை செய்து நோன்பை திறந்தனர்.
துபாய்:
ரமலான் நோன்பையொட்டி இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. பள்ளிவாசல்கள், கூடாரங்களில் நடைபெறும் இப்தார் நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று நோன்பு திறந்து வருகின்றனர். இந்த நிலையில் உலகில் முதல் முறையாக துபாய் சர்வதேச விமான நிலைய ஓடு பாதையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. விமானங்கள் தரையிறக்கப்படும் ஓடுபாதையில் நடந்த இப்தார் நிகழ்ச்சியில் அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல கலாசாரங்களை கொண்ட விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பேரீச்சம் பழம், தண்ணீர், ஜூஸ், பிரியாணி உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
இந்த நோன்பு திறக்கும் நேரம் வந்ததும் அனைவரும் பிரார்த்தனை செய்து நோன்பை திறந்தனர். அவர்கள் நோன்பை திறந்த போது விமானங்கள் தரையிறங்குவது, புறப்படுவது நடந்து கொண்டிருந்தது.

இது குறித்து துபாய் விமான நிலைய அதிகாரி கூறும்போது, துபாய் சர்வதேச விமான நிலைய ஊழியர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில் விமான நிலைய ஓடுபாதையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மிகவும் பரபரப்பான சூழலில் வேலை செய்து வந்தவர்கள் அதனை மறந்து பலரும் விளையாட்டாக பேசிக் கொண்டு மன இறுக்கத்தை மறந்து செயல்பட்டனர்.
விமான நிலையத்தின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் ஊழியர்களின் பங்களிப்பு முக்கியமானது அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தொடர்ந்து இதுபோன்ற வித்தியாசமான நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றார்.
துபாயில் கின்னஸ் உலக சாதனைகள் பல வித்தியாசமான முறையில் படைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக விமான ஓடு பாதையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
- ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
- உதயநிதி ஸ்டாலின் நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் ஒருங்கிணைப்பில் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கும் விழா மற்றும் இஃப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். விழாவில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேலும், ஏழை, எளிய மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினார்.
இந்த விழாவில் மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, தயாநிதி மாறன், கலந்து கொண்டனர்.
- ரம்ஜானுக்கு நாம் வாழ்த்து சொல்வதை பார்த்தால் பல பேருக்கு கோபம் வரும்.
- சிறுபான்மை மக்களுடைய மனதில், பெரும்பான்மை இடத்தை பிடித்த ஒரு அரசு என்றால், அது திராவிட மாடல் அரசுதான்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இஃப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் ஏற்பாட்டில் நடக்கின்ற இந்த சிறப்புக்குரிய நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் புனித ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதில் உங்களை எல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
முதலில் உங்கள் அனைவருக்கும் என்னுடைய புனித ரம்ஜான் வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன். ரம்ஜானுக்கு நாம் வாழ்த்து சொல்வதை பார்த்தால் பல பேருக்கு கோபம் வரும். அதை பற்றியெல்லாம் நமக்கு கவலை இல்லை. ரம்ஜானுக்கு வாழ்த்து சொல்வதால் பலபேருக்கு கோபம் வருகிறது என்றால், இன்னும் நூறு முறை கூட மீண்டும், மீண்டும் நாங்கள் ரம்ஜான் வாழ்த்துகளை சொல்லிக் கொண்டே இருப்போம்.
இந்தியாவிலேயே இன்றைக்கு சிறுபான்மை மக்கள் உங்களுக்கு சொந்த வீடு போல இருக்கின்ற ஒரு மாநிலம் அப்படியென்றால், அது நம்முடைய தமிழ்நாடு என்று நாம் தைரியமாக சொல்லலாம். சிறுபான்மை மக்களுடைய மனதில், பெரும்பான்மை இடத்தை பிடித்த ஒரு அரசு என்றால், அது நம்முடைய திராவிட மாடல் அரசுதான். அதற்கு உங்களிடம் இருக்கின்ற அந்த மகிழ்ச்சியும், உணர்வும், பாசமுமே சாட்சி.
திராவிட இயக்கத்துக்கும்– இஸ்லாமிய மக்களுக்குமான உறவு இன்று நேற்று தொடங்கிய உறவு கிடையாது.பெரியவர் மறைந்த கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களுடைய காலத்தில் இருந்தே திராவிட இயக்கம் இஸ்லாமிய மக்களுடைய அன்பை பெற்று செயல்பட்டு வருகின்றது.
இன்றைக்கு கலைஞர் வழியில் தான் நம்முடைய முதலமைச்சர் அவர்களும், இஸ்லாமிய பெருமக்களுக்கு அனைத்து வகையிலும் துணை நின்று வருகிறார். நம்முடைய கழக அரசு ஆட்சிக்கு வந்ததுமே, குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒன்றிய அரசு திரும்ப பெறவேண்டும் என்று சட்டப்பேரவையில் முதன்முதலில் தீர்மானம் நிறைவேற்றியவர் தான் நம்முடைய முதலமைச்சர்.
முத்தலாக் சட்டம், என்.ஆர்.சி, இப்படி வருஷா வருஷம் ஏதாவது ஒரு சிக்கலை ஏற்படுத்தி, சிறுபான்மை மக்களை நெருக்கடிக்கு ஆளாக்குகின்ற வேலையை ஒன்றிய அரசு தொடர்ந்து செய்து கொண்டு வருகிறது. ஆனால், அதை எல்லாம் இந்தியாவிலேயே கடுமையாக எதிர்க்கின்ற ஒரு இயக்கம், ஒரு மாநிலம் ஒரு அரசு என்றால், அது திராவிட முன்னேற்றக் கழகம்தான், நம்முடைய முதலமைச்சர்தான்.
குறிப்பாக, இன்றைக்கு ஒரு புது பிரச்சினையை புதிதாக கையில் எடுத்து இருக்கிறார்கள். அதுதான் வக்ஃப் வாரிய திருத்த மசோதா என்று ஒரு விஷயத்தை நடைமுறைப்படுத்த துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த திருத்தம் மட்டும் அமலுக்கு வந்தால், வக்ஃப் வாரிய சொத்துக்கள் வக்ஃப் வாரியங்களிடம் இருந்து அபகரிக்கப்படுகின்ற அபாயத்திற்கு தள்ள முயற்சிக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, வக்ஃப் வாரியங்களுக்கு ஒன்றிய அரசு சொல்கின்ற ஆட்களைதான் நியமனம் செய்ய வேண்டும் என்று இந்த மசோதா குறிப்பிடுகின்றது. குறிப்பாக, முஸ்லிம் அல்லாத நபர்களையும், வக்ஃப் வாரிய உறுப்பினர்களாக சேர்க்கக் கூடிய சூழல் உருவாக இருக்கிறது. அதனால்தான் நம்முடைய தலைவர், இந்த சட்டத்தை துவக்கத்திலிருந்து கடுமையாக எதிர்த்துக் கொண்டு வருகிறார்கள்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
- 5 இஸ்லாமிய நிர்வாகிகள் உட்பட மொத்தம் 1,500 பேர் பங்கேற்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- சுமார் 2000 பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, வெஜ் சமோசா, நோன்பு கஞ்சி தயாரிப்பு.
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற உள்ளது.
இன்று மாலை 6.20 மணிக்கு நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில் தவெக தலைவர் விஜய் ஒய்எம்சிஏ மைதானத்திற்கு வருகை தந்தார்.
வெள்ளை வேட்டி, சட்டை, இஸ்லிமியர் அணியும் தொப்பியை அணிந்து இஃப்தார் நிகழ்ச்சிக்கு விஜய் வருகை தந்தார்.
நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் மாவட்டத்திற்கு 5 இஸ்லாமிய நிர்வாகிகள் உட்பட மொத்தம் 1,500 பேர் பங்கேற்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாலை நோன்பு திறந்த பிறகு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 2000 பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, வெஜ் சமோசா, நோன்பு கஞ்சி தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனன் ஆகியோர் பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 5 இஸ்லாமிய நிர்வாகிகள் உட்பட மொத்தம் 1,500 பேர் பங்கேற்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- சுமார் 2000 பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, வெஜ் சமோசா, நோன்பு கஞ்சி தயாரிப்பு.
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சுமார் 5 மணியளவில் தவெக தலைவர் விஜய் ஒய்எம்சிஏ மைதானத்திற்கு வருகை தந்தார்.
வெள்ளை வேட்டி, சட்டை, இஸ்லிமியர் அணியும் தொப்பியை அணிந்து இஃப்தார் நிகழ்ச்சிக்கு விஜய் வருகை தந்தார்.
இஸ்லாமிய தலைவர்கள் விஜய்யை வரவேற்றனர். பிறகு, நோன்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் விஜய் மற்றும் இமாம்கள் அமர்ந்தனர்.
பிறகு, தொழுகை செய்துவிட்டு நோன்புக் கஞ்சி, பேரீட்சை, சமோசா சாப்பிட்டு தவெக தலைவர் விஜய் நோன்பு திறந்தார்.
நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் மாவட்டத்திற்கு 5 இஸ்லாமிய நிர்வாகிகள் உட்பட மொத்தம் 1,500 பேர் பங்கேற்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாலை நோன்பு திறந்த பிறகு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 2000 பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, வெஜ் சமோசா, நோன்பு கஞ்சி விருந்து அளிக்கப்பட்டது.